Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திருமதி மங்கையற்கரசி அமிர்தலிங்கம் காலமானார்

Featured Replies

மங்கையற்கரசி அமிர்தலிங்கம் லண்டனில் காலமானார்.

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

திருமதி மங்கையர்க்கரசி அமிர்தலிங்கம் காலமானார்

09 மார்ச் 2016
Bookmark and Share
 

 

திருமதி மங்கையர்க்கரசி அமிர்தலிங்கம் காலமானார்



முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் மனைவி திருமதி மங்கையர்க்கரசி அமிர்தலிங்கம் அவர்கள் இன்று லண்டனில் காலமானார.; திடீரென நோய் வாய்ப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இரவு 7மணியளவில் அவரது உயிர் பிரிந்ததாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

Globeltamilnews.net

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணீர் அஞ்சலிகள் 

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்....!

  • தொடங்கியவர்

கண்ணீர் அஞ்சலிகள்...

கண்ணீர் அஞ்சலிகள்.

 

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்..!

ஆழ்ந்த இரங்கல்கள்..!

ஆழ்ந்த இரங்கல்கள் !

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்

 

  • தொடங்கியவர்

மங்கையர்க்கரசி அமிர்தலிங்கம் காலமானார்

 

இலங்கைத் தமிழ் அரசியலில் பெரும்பங்காற்றிய தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் அப்பாபிள்ளை அமிர்தலிங்கத்தின் மனைவி மங்கையர்க்கரசி அமிர்தலிங்கம் இன்று லண்டனில் காலமானார். அவருக்கு வயது 82.

160309220443_mangayarkarasiamirthalingam

 மங்கையர்க்கரசி அமிர்தலிங்கம் காலமானார்

அமிர்தலிங்கம் கொழும்பில் படுகொலை செய்யப்பட்டதிலிருந்து லண்டனில் வசித்து வந்த அவரது மனைவி, மங்கையர்க்கரசி நேற்று கணையச் சுரப்பி வீக்கம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இன்று , புதன்கிழமை மாலை அவர் காலமானார் என்று அவரது மகன்களில் ஒருவரான, டாக்டர் ஏ.ஆர்.பகீரதன் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

மங்கையர்க்கரசி 1933ம் ஆண்டு ஜூலை மாதம் மூன்றாம் தேதி, இலங்கை யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை அருகிலிலுள்ள மூளாய் என்ற இடத்தில் பிறந்தார். ராமனாதன் கல்லூரியில் இசை பயின்ற அவர், பின்னர் 1954ல் தமிழரசுக் கட்சித் தலைவர்களில் ஒருவரான, அமிர்தலிங்கத்தை மணந்தார்.

அவருடன் அரசியல் நடவடிக்கைகளில் பங்கு பெற்ற மங்கையர்க்கரசி, 1960 ஆண்டு நடந்த அரசுக்கெதிரான சத்யாகிரக நடவடிக்கையில் கைதாகி 6 மாதங்கள் சிறை வாசம் அனுபவித்தார்.

இலங்கைத் தமிழர் அரசியலில் அவரது கணவரின் செயல்பாடுகளுக்கு பெரிதும் துணை நின்ற மங்கையர்க்கரசி, தமிழ் அரசியல் மேடைகளில் பாடல்களைப் பாடியும், உரை நிகழ்த்தியும் தமிழர்களை அணி திரட்ட உதவியாக இருந்தார்.

இந்திய அரசியல் தலைவர்கள் இந்திரா காந்தி மற்றும் ராஜிவ் காந்தி ஆகியோர் மற்றும் தமிழக அரசியல் தலைவர்கள் கருணாநிதி மற்றும் எம்.ஜி.ஆர் போன்றோருடன் மங்கையர்க்கரசி உறவுகளைப் பேணி வந்தார்.

காலஞ்சென்ற மங்கையர்க்கரசியின் இறுதிச் சடங்குகள் லண்டனில் எதிர்வரும் 20ம் தேதி நடைபெறும் என்று டாக்டர் பகீரதன் தெரிவித்தார்.

பகீரதன் தவிர, மங்கையர்க்கரசி-அமிர்தலிங்கம் தம்பதியருக்கு காண்டீபன் என்ற ஒரு மகனும், மூன்று பேரக்குழந்தைகளும் உள்ளனர்.

அப்பாபிள்ளை அமிர்தலிங்கம் 1989 ஜூலையில் விடுதலைப்புலிகள் இயக்கத்தினரால் கொழும்பில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

http://www.bbc.com/tamil/sri_lanka/2016/03/160309_mangayarkarasi

 

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறவுகள்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.

 

Edited by Paanch

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்.

கண்ணீர் அஞ்சலிகள் 

  • தொடங்கியவர்

மங்கையற்கரசி மறைவுக்கு கருணாநிதி இரங்கல்

மங்கையற்கரசி மறைவுக்கு கருணாநிதி இரங்கல்

 

இலங்கைத் தமிழ் அரசியலில் பெரும்பங்காற்றிய தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் அப்பாபிள்ளை அமிர்தலிங்கத்தின் மனைவி மங்கையர்க்கரசி அமிர்தலிங்கம் காலமானதையிட்டு திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி இரங்கல் வௌியிட்டுள்ளார்.

அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில்,

"தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளரும், இலங்கையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான நாவலர் அமிர்தலிங்கம் அவர்களின் அன்பு துணைவியார் மங்கையற்கரசி, நேற்றிரவு இலண்டன் மாநகரில் மறைந்து விட்டார் என்ற செய்தியினை இன்று காலையில் திராவிடர் கழகத் தலைவர் இளவல் கி. வீரமணி தொலைபேசி வாயிலாகத் தெரிவித்த போது அதிர்ச்சியடைந்தேன்.

கணவரும் மனைவியுமாக அந்தக் காலத்தில் என்னைச் சந்தித்து பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டதெல்லாம் நினைவுக்கு வந்தது.

நாவலர் அமிர்தலிங்கம் இலங்கையில் கொல்லப்பட்ட பிறகு, அம்மையார் அந்த நாட்டிலிருந்தே வெளியேறி தமிழகத்திலும், லண்டனிலும் வாழ்ந்து வந்தார்.

தமிழகத்திற்கு வரும்போதெல்லாம் என்னைச் சந்தித்து உடல் நலம் விசாரித்துச் செல்வார். அம்மையாரின் மறைவுக்காக அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், இலங்கைத் தமிழர்களுக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.’’
 
  • கருத்துக்கள உறவுகள்

கண்ணீர் அஞ்சலிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்

  • கருத்துக்கள உறவுகள்

அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Nathamuni said:

ஆழ்ந்த இரங்கல்கள்..!

ஈழத்தமிழர் அரசியல் வரலாற்றில் அழிக்க முடியாத ஒரு ஆளுமை.

12 hours ago, Nathamuni said:

ஈழத்தமிழர் அரசியல் வரலாற்றில் அழிக்க முடியாத ஒரு ஆளுமை.

இளைஞர்களை உசுப்பேத்தி இரத்தத்தில் தோய விட்டு தானும் தன் பிள்ளைகளும் எந்த  பாதிப்பும் இல்லாமல் இலண்டனில் வாழ்ந்தது தான் ஒரு ஆளுமை.

 

  • கருத்துக்கள உறவுகள்

அனுதாபங்கள்.

இதற்கு மேல் சொல்லவேண்டாம் என்றுதான் நினைத்தேன். ஏனென்றால் சாவு வீட்டில் செத்தவரை பற்றிப் புறணி பாடுவது அழகல்ல.

ஆனால் வராலாறு என்பது உண்மை - வெறும் நீத்தார் புகலில்லை. ஆகவே சில புரட்டுக்களை மறுத்தே ஆகவேண்டியிருக்கிறது.

இவரை எம் வரலாற்றில் அழிக்க முடியாத ஆழுமை என்பது சரியானதே.

அமிர் மீதான இவரின் ஆளுமை இல்லாமல் இருந்திருந்தால், சிலவேளை அமிர் ஒரு சுயநல அரசியல்வாதியாய் மாறாமல் போயிருக்கலாம். ராசதுரையும் கட்சி மாறாமல் இருந்திருக்கலாம்.  இப்படி இன்னும் பல நடந்திருக்கலாம்.

நான் புலி மேல் கடும் விமர்சனம் வைப்பவன். ஆனால் 2009 வரை எல்லாவற்றையும் மூடிக் கொண்டிருந்தேன். காரணம் நாம் செய்யும் எதுவும் எம் மக்களின் எதிர்காலத்தை பாதிக்கக் கூடாது என்று.

புலி மீதான தன் நியாயமான கோவத்தால் மதியிழந்து, தமிழ் மக்களையே பழிவாங்கியவர்கள் இவரும் இவரின் பிள்ளைகளும்.

முள்ளிவாய்காலில் எம் அழுகுரல் உலகின் காதுகளை எட்டாமல் போக இது போன்றவர்களின் பிரச்சாரமும் ஒரு காரணமே.

இவரின் மறைவுக்கு திருமாவும் வைகோவும் அறிக்கை விடுவதுதான் காலக் கொடுமை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.