Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழக முதல்வர் ஜெயலலிதா காலமானார்! சோகத்தில் தமிழகம்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணீர் அஞ்சலிகள்

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணீர் அஞ்சலிகள்!

காயமே இது பொய்யடா...வெறும் காற்றடைத்த பையடா...என்பது நிரூபணமாகி உள்ளது!

அன்னாரின் ஆத்மா அமைதியில் உறங்கட்டும்!

கதறி அழுத தொண்டர்கள்.. கண்ணீர் வெள்ளத்திற்கு மத்தியில் போயஸ் கார்டன் வந்த ஜெயலலிதாவின் உடல்

முதல்வர் ஜெயலலிதாவின் உடல் அப்போலோ மருத்துவமனையில் இருந்து அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது.

 
 

சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உடல் அப்போலோ மருத்துவமனையில் இருந்து அவரது வீடான போயஸ் கார்டனுக்கு கொண்டு செல்லப்பட்டது. அமைச்சர்கள், அதிமுக தொண்டர்களின் கண்ணீர் வெள்ளத்திற்கு நடுவில் ஊர்ந்து சென்றது அவரது உடல் வைக்கப்பட்டுள்ள வாகனம்.

 

 

தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த 75 நாட்களாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் இருந்து சிகிச்சை பெற்றார். நேற்று முன் தினம் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து நேற்று இரவு 11.30 மணிக்கு அவரது உயிர் பிரிந்திருக்கிறது.

 

 

 

 

 

 
View image on TwitterView image on Twitter

Chennai: #Jayalalithaa's mortal remains being taken from Apollo hospital to her residence Poes Garden

 
 

 

 

 

இதனையடுத்து, அவரது உடல் அப்போலோ மருத்துவமனையில் இருந்து அவர் வாழ்ந்த வீடான போயஸ் கார்டனுக்கு வாகனத்தில் கொண்டு செல்லப்பட்டது. அவரது உடல் எடுத்துச் செல்லப்பட்ட வாகனத்துடன் 8 வாகனங்கள் சென்றன. அவர் உயிருடன் இருக்கும் போது பயன்படுத்தப்பட்ட கான்வாய்கள் இப்போது அவரது உடல் சென்ற வாகனத்திற்கு முன்னால் சென்றன. ஆயுதம் தாங்கிய போலீஸ் பாதுகாப்புடன் போயஸ் கார்டன் சென்றடைந்தது ஜெயலலிதாவின் உடல்.

 

 

சாலையின் இருபுறமும் கண்ணீர் விட்டு கதறி அழுது கொண்டிருக்கும் அதிமுக தொண்டர்களுக்கு நடுவில் ஜெயலலிதாவின் உடல் வைக்கப்பட்ட வாகனம் சென்று போயஸ் கார்டனை அடைந்தது. அங்கு ஜெயலலிதாவின் குலவழக்கப்படி இறுதி சடங்குகள் நடைபெற உள்ளன. அதன் பின்னர் பொதுமக்கள் அஞ்சலிக்காக ராஜாஜி ஹாலுக்கு ஜெயலலிதாவின் உடல் கொண்டு செல்லப்படும். மக்களின் அஞ்சலியைத் தொடர்ந்து மாலை 4.30 மணிக்கு அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படூம்.

http://tamil.oneindia.com/news/tamilnadu/jayalalithaa-s-body-being-taken-from-apollo-hospital-her-residence-269066.html

இன்று மாலை 4.30 மணிக்கு மெரினா பீச்சிலுள்ள எம்.ஜி.ஆர் சமாதி அருகே ஜெயலலிதா உடல் நல்லடக்கம்

மெரீனா பீச்சிலுள்ள எம்.ஜி.ஆர் சமாதி அருகே ஜெயலலிதா உடல் அடக்கம் செய்யப்படுகிறது.

 
 

 முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உடல் மெரினா கடற்கரையிலுள்ள முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் சமாதி அமைந்துள்ள வளாகத்தில் அடக்கம் செய்யப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

 

 

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் 75 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு ஜெயலலிதா டிசம்பர் 5ம் தேதியான நேற்று இரவு 11.30 மணிக்கு மரணமடைந்தார். அவரது உடல் இன்று அதிகாலை 3 மணியளவில் போயஸ் இல்லம் சென்று சேர்ந்தது. அங்கு அவரது குடும்ப வழக்கப்படி இறுதி சடங்குகள் நடைபெறும்.

 

 

 

 

 

 
Jayalalitha cremation today evening 4.30 pm at Marina Beach
 

 

 

 

ஜெயலலிதாவின் இறுதி சடங்குகளை தொடர்ந்து, அதிகாலை 4.30 மணிக்கு ராஜாஜி ஹாலில் அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும். அதன்பிறகு மாலை 4.30 மணியளவில், மெரினா கடற்கரையிலுள்ள எம்.ஜி.ஆர் நினைவிட வளாகத்தில், ஜெயலலிதா உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது.

 

 

மெரினா கடற்கரை பகுதியில், புதிய கட்டிடங்கள் கட்ட விதிமுறை கிடையாது என்பதால், எம்.ஜி.ஆர் நினைவிடம் அமைந்துள்ள வளாகத்திலேயே ஜெயலலிதாவுக்கு சமாதி அமைக்கப்படும் என்று தெரிகிறது.

http://tamil.oneindia.com/news/tamilnadu/jayalalitha-cremation-today-evening-4-30-pm-at-marina-beach-269069.html

கண்ணீர் அஞ்சலிகள்!

இறுதி சில வருடங்களாக ஈழத் தமிழருக்கு மாபெரும் ஆதரவாக இருந்தவர்!

  • கருத்துக்கள உறவுகள்

முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்.

 

ஆண் சிங்கங்கள் நடமாடும் அரசியல் காட்டுக்குள் ஒற்றை பெண்சிங்கமாய்,  தனியொரு பெண்மணியாய் பல ஆண்டுகளாக ராஜ தர்பார் செய்தவர்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நடிகை ஜெயலலிதாவின் மறைவிற்கு என் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.

விளக்கணைந்தால் விடியல் வரும், வேகப்புயலில் வேரறுந்தால் வீழ்ந்த கிளை தளிர்க்கும்
நீளப்பாதையில் நெடும்தூரம் தான் அலைந்து வேதனையால் சோர, வாடி விழ காட்டில்
காள மழை பொழியும், கண்ணில் தண்ணிப்பொய்கை தெரியும், தாகத்துயர் தணியும், 
மீளா பாவித்தமிழனம் போர் வேங்கை உனையிழந்தால் புலம்பலன்றி போகும் பாதையேதம்மா? 
 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு நடிகையாக எனக்கு அவரை மிகவும் பிடிக்கும். 

ஆழ்ந்த இரங்கல்கள்..

தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைந்தார்..!    அப்போலோ மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 68. டிசம்பர் 5-ஆம் தேதி இரவு 11.30 மணிக்கு மருத்துவர்களின் தீவிர சிகிச்சை பலனின்றி ஜெயலலிதா காலமானதாக அப்போலோ மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைந்தார்..!

அப்போலோ மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பலனின்றி காலமானார். அவருக்கு வயது 68. டிசம்பர் 5-ஆம் தேதி இரவு 11.30 மணிக்கு மருத்துவர்களின் தீவிர சிகிச்சை பலனின்றி ஜெயலலிதா காலமானதாக அப்போலோ மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

   

தமிழக முதல்வர் ஜெயலலிதா செப்டம்பர் மாதம் 22-ம் தேதி இரவு திடீர் உடல்நலக்குறைவு காரணமாக, சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். காய்ச்சல் என்று சொல்லி அனுமதிக்கப்பட்டவர் நுரையீரல் பிரச்னை, சுவாசக் கோளாறு, நோய்த் தொற்று என பல உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டார். அவரது உடல்நிலை குணமடையவேண்டி தமிழகம் முழுக்க அ.தி.மு.க. தொண்டர்கள் பல்வேறு வழிபாடுகளை நடத்தி வந்தனர்.

 

jeyalalitha-061216%20(14).jpg

 

ஜெயலலிதா உடல்நிலை தேறிவருவதாக அப்போலோ மருத்துவர்கள் சொல்லிவந்த நிலையில், டிசம்பர் 4-ம் தேதி திடீரென அவருக்கு இதய முடக்கம் ஏற்பட்டதாகச் சொன்னார்கள். இதைத் தொடர்ந்து ஜெயலலிதா தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டதாகவும் தகவல் தெரிவித்தார்கள். இந்நிலையில் தொடர் தீவிர சிகிச்சை பலனளிக்காமல் டிசம்பர் 5-ந் தேதி இரவு 11:30 மணிக்கு காலமானார் ஜெயலலிதா.

 

jeyalalitha-061216%20(15).jpg

 

 

jeyalalitha-061216%20(16).jpg

 

 

jeyalalitha-061216%20(17).jpg

 

தமிழகம் கடந்து உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் மத்தியிலும் இந்திய அரசியல் அரங்கிலும் இந்தச் செய்தி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஜெயலலிதா மறைவு, தமிழர்களுக்கு மட்டுமல்லாது உலகம் முழுக்கவே அதிர்வலைகளை உண்டாக்கியிருக்கிறது.

திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருவரங்கத்தை பூர்வீகமாகக் கொண்ட ஜெயலலிதா, 1948-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி கர்நாடக மாநிலம், மேல்கோட்டை எனும் கிராமத்தில் பிறந்தவர். பள்ளி செல்லும் பிராயத்திலேயே நடிக்கத் தொடங்கி, தமிழர்களின் அபிமான நடிகையாக தடம் பதித்தார். அவர் மனதுக்குப் பிடித்துதான் நடிப்புத் தொழிலை தேர்ந்தெடுத்தார் என்று சொல்வதற்கில்லை... ஆனால், அதில் தன்னை முழுமையாக அர்ப்பணித்து கொண்டார். தன் முழு உழைப்பையும் கொட்டினார். ஆம், இதுதான் அவர் இயல்பே! எதையும் அவரால் அரை மனதுடன் செய்ய முடியாது. இதை அவர் ஒரு நேர்காணலிலும் பகிர்ந்திருக்கிறார்.

 

jeyalalitha-061216%20(1).jpg

 

 

jeyalalitha-061216%20(2).jpg

 

 

jeyalalitha-061216%20(3).jpg

 

இதனால்தான் தமிழ் மொழி மட்டுமல்லாது தெலுங்கு, கன்னட மொழி சினிமாக்களிலும் முத்திரைப் பதித்து 120-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் முன்னணிக் கதாபாத்திரங்களில், அவரால் நடிக்க முடிந்தது. அரசியல் அரங்கில் அ.தி.மு.க உறுப்பினராக அடியெடுத்து வைத்த ஜெ. 1984-ஆம் ஆண்டு முதல் 1989-ஆம் ஆண்டு வரை தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதிலும், அவர் மிளிர்ந்தார். அவரது பேச்சாற்றலை மூத்த ஊடகவியலாளர் குஷ்வந்த் சிங் பாராட்டி இருக்கிறார். தன் தாய் சந்தியாவுக்கு அடுத்து இந்திரா காந்தியை ஜெயா மிகவும் நேசித்தார். தமிழகத்தின் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் இறப்புக்குப் பின்னர் அவரது அரசியல் வாரிசாக தொண்டர்களால் தேர்வு செய்யப்பட்டவர் ஜெயலலிதா. அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, இறக்கும்வரை அக்கட்சியின் நிரந்தரப் பொதுச்செயலாளராக இருந்தார்.

1989-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க-வுக்குக் கிடைத்த எதிர்க்கட்சி அந்தஸ்தின் மூலம் தமிழகத்தின் முதல் பெண் எதிர்க்கட்சித் தலைவரானார். 1991 தேர்தலில் வெற்றி பெற்று, முதல் முறையாக முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதேபோல, 2001, 2011 மற்றும் 2016 ஆண்டு தேர்தல்களில் வெற்றி பெற்று தமிழக முதல்வராக தேர்வானார். 2001-’06 காலகட்டத்தில் டான்சி வழக்கு காரணமாக முதல்வர் பதவியிலிருந்து விலக நேர்ந்தது. மேல் முறையீட்டில் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டு மீண்டும் முதல்வரானார். அதே போல் 2014-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, சிறை செல்ல நேர்ந்ததால், முதல்வர் பதவியை இழந்தார். பின்னர் அதிலிருந்து விடுவிக்கப்பட்டதால், 2015 மே மாதம், மீண்டும் தமிழக முதல்வரானார்.

2016 தேர்தலில் மீண்டும் தமிழக முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தமிழக அரசியலில், எம்.ஜி.ஆர் காலத்துக்குப் பின்னர், ஒரு தலைவர் தொடர்ச்சியாக இருமுறை ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தது என்றால், அது ஜெயலலிதாதான்! தன்னம்பிக்கையும், மிகுந்த துணிச்சலும் கொண்ட ஜெயலலிதா தமிழகத்தின் முதல்வராக 6 முறை பதவி வகித்தவர். தற்போது முதல்வராக இருக்கும்போதே மரணமடைந்துள்ளார்.

‘புரட்சித் தலைவி’ என்றும், ‘அம்மா’ என்றும் அ.தி.மு.க-வினரால் கொண்டாடப்படும் செல்வி. ஜெ.ஜெயலலிதா உயிரிழந்தது அ.தி.மு.க. தொண்டர்களுக்கு நிச்சயம் ஈடு செய்ய முடியாத இழப்பாகும். அவர்களின் துக்கத்தில் விகடனும் பங்கெடுக்கிறான்.

ஜெயலலிதாவின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்!

 

jeyalalitha-061216%20(4).jpg

 

 

jeyalalitha-061216%20(5).jpg

 

 

 

jeyalalitha-061216%20(7).jpg

 

 

jeyalalitha-061216%20(8).jpg

 

jeyalalitha-061216%20(9).jpg

 

 

jeyalalitha-061216%20(10).jpg

 

 

jeyalalitha-061216%20(11).jpg

 

 

jeyalalitha-061216%20(12).jpg

 

 

jeyalalitha-061216%20(13).jpg

 

 

http://www.seithy.com/breifNews.php?newsID=171135&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

15326290_700122980164327_4659287390272838480_o.jpg

15283936_1819923028227851_6564929451897077417_n.jpg?oh=5df5b7bd1740fbb3f3707b0e162a158e&oe=58B30DC1

துணிவான பெண்மணி. அன்னாரின் மறைவுக்கு, ஆழ்ந்த அனுதாபங்கள். 

 

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள் 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் உடல், சென்னை மெரீனா கடற்கரையில் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.
 
1481028935-2794.jpg
 

கடந்த செப்டம்பர் 22ம் தேதி முதல் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அனுமதிக்கப்பட்டு இருந்தார்.

இந்நிலையில், முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து, உடனடியாக அவர் சிகிச்சை பிரவில் வைத்து சிகிச்சை அளிக்கப்படுவதாக கூறப்பட்டது.

இந்நிலையில், நேற்று திங்கட்கிழமை இரவு 11.30 மணியளவில் ஜெயலலிதா இறந்து விட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக ராஜாஜி மஹாலில் வைக்கப்பட்டது.

ஜெயலலிதாவின் உடலுக்கு பிரதமர் நரேந்திர மோடி, குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, காங்கிரஸ் கட்சி துணைத் தலைவர் ராகுல் காந்தி, ஆந்திர முதல்வர் சந்திராபாபு நாயுடு, ஒடிஸா முதல்வர் நவீன் பட்நாயக், கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா, கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன், பாஜக தலைவர் வெங்கய்யா நாயுடு, காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், மத்திய பிரதேசம் சவுராஜ் சிங் சவுகான், மஹாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் உள்ளிட்ட தேசிய தலைவர்கள் பலரும் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

அதேபோல், தமிழகத்தில் இருந்து தமிழக எதிர்கட்சித் தலைவரும், திமுக பொருளாளருமான முக ஸ்டாலின், கனிமொழி, தேமுதிக தலைவர் விஜயகாந்த், பிரேமலதா விஜயகாந்த், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், பொன். ராதாகிருஷ்ணன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் ஜி ராமகிருஷ்ணன், தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன், குஷ்பூ உள்ளிட்ட தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர்.

சினிமா துறையினரை சேர்ந்த ரஜினிகாந்த், லதா ரஜினிகாந்த், சிவக்குமார், கவுண்டமனி, செந்தில், நடிகர் சங்க தலைவர் நாசர், விஷால், சரத்குமார், கார்த்தி, ராதரவி, சத்யராஜ், விஜயகுமார் உள்ளிட்ட பலரும் இறுதி அஞ்சலியில் கலந்து கொண்டனர்.

 
1481028991-964.jpg
 

மேலும், தமிழகம் முழுவதிலும் இருந்து ஏராளமான அதிமுக தொண்டர்களும், பொதுமக்களும், பிற கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகளும் ஜெயலலிதா உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பிறகு ஜெயலலிதாவின் உடல் தங்க பேழையில் வைக்கப்பட்டு மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். சமாதி அருகே அடக்கம் செய்வதற்கு கொண்டு வரப்பட்டது.

பின்னர் அவருக்கு ராணுவ மரியாதை செலுத்தப்பட்டது. முப்படை வீரர்கள் ஜெயலலிதாவிற்கு இறுதி மரியாதை செலுத்தினர். பின்னர், ’புரட்சித்தலைவி செல்வி ஜெ.ஜெயலலிதா’ என்று பொறிக்கப்பட்ட சந்தன பேழையில் ஜெயலலிதாவின் உடல் வைக்கப்பட்டு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

ஜெயலலிதாவிற்கு அவருடைய தோழி சசிகலா அவர்கள் இறுதிச் சடங்குகளை செய்தார். பின்னர், 12 வீரர்கள் 5 முறை வானத்தை நோக்கி முழங்க சுட்டனர். 60 குண்டுகள் முழங்க அவருக்கு முழு அரசு மரியாதை செலுத்தப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.

 

http://tamil.webdunia.com/article/regional-tamil-news/tn-ex-cm-selvi-jayalalithaa-body-buried-with-army-respect-116120600038_1.html

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கலைத் தமிழக உறவுகளோடு பகிர்ந்து கொள்கின்றேன். 

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணீர் அஞ்சலிகள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.