Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இஞ்சை பார்ரா லோங்ஸ் போட்டிருக்கான்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்த தலைப்பைப் பார்க்கும் பலருக்கு இதில என்ன புதினம் இருக்கு என்று நக்கல் நழினமாக பார்க்கலாம்.

ஆனால் என்னோடு ஒத்த வயதினருக்கு இந்த லோங்ஸ்இன் வலி புரிந்திருக்கும்.

ஏறத்தாள 45 வருடங்கள் முன்பாக யாரும் நினைத்த நேரத்தில் இந்த லோங்சை மாட்ட முடியாது.அதை மாட்டுவதற்கு ஒரு தகுதி இருக்க வேண்டும் என்று எழுதாத சட்டம் ஒன்று இருந்தது.

பாலர் வகுப்பிலிருந்து பத்தாவது வகுப்பு வரை சந்தோசமாக போகும் பள்ளி வாழ்க்கை ஜீசிஈ எனும் பரீட்சையில் வந்து தடம் புரழும்.

இதுவரை அரைக் காற்சட்டைளோடு சுதந்திரமாக திரிந்தவர்கள் இந்த பரீட்சையில் சித்தியெய்தினால் மட்டுமே அடுத்த கட்ட படிப்பு மாத்திரமல்ல எதிர் காலமே சூனியமாகிவிடும்.

இந்த சோதனைகளில் சித்தியடைந்தவர் மட்டும் புதிதாக லோங்ஸ் மாட்டிக் கொண்டு வருவார்கள்.மற்றையவர்கள் அதே அரைக் காற்சட்டையோடு கொஞ்ச காலம் பின்னர் வெளியில் வேட்டி வீட்டிலும் ஊரிலும் சாரம் தான்.

அந்த நேரங்களில் யார்யார் சோதனை பாசாகிட்டார்கள் என்று உடுப்பிலேயே தெரியும்.இஞ்சை பார்ரா லோங்ஸ் போட்டிருக்கிறான் என்றால் அவன் பாசாகிட்டான் என்றே அர்த்தம்.

இதே மாதிரி மணிக்கூடு கட்டியிருந்தால் அவர் ஏஎல் பாசாகிட்டார்.

பெண்கள் தாவணி போட்ட ஞாபகம்.வீட்டிலும் பள்ளியிலும் பெண்கள் இல்லாதபடியால் சரிவர தெரியவில்லை.இதை பெண்கள் தான் எழுத வேண்டும்.

இப்போது பிறக்கும் போதே விரும்பிய உடுப்புகள் போடலாம்.

நானும் 1971 இல் லோங்ஸ் போட்டேன்.மணிக்கூடு கட்ட முடியாமல் போய்விட்டது.அந்த நேரம் தான் பெல்பொட்டம் வந்த நேரம் மாட்டிக் கொண்டு சுற்ற வேண்டியது தானே.

யாழ் களத்திலும் இப்படி அனுபவப்பட்ட புங்கை குமாரசாமி தமிழ்சிறி சுவியர் இன்னும் பலர் இருக்லாம்.உங்கள் அனுபவத்தையும் கொட்டுங்கள் பார்க்கலாம்.

  • Replies 52
  • Views 4.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நான் லோங்கிஸ் போட்டது 1999  பத்தாம் வகுப்பு  எப்ப பத்தாம் ஆண்டுக்கு போய் லோங்கிசை போடுவம் என்ற ஆவல்  லோங்கிஸ் போட்ட பிறகே பொடிச்சிகளை பார்க்க ஒரு ஆசை வந்தது அந்த வயது அப்படி :unsure:tw_blush:

மீண்டுமொரு  நினைவுக்குள் இழுத்து சென்று விட்டியளே :104_point_left::104_point_left:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, முனிவர் ஜீ said:

நான் லோங்கிஸ் போட்டது 1999  பத்தாம் வகுப்பு  எப்ப பத்தாம் ஆண்டுக்கு போய் லோங்கிசை போடுவம் என்ற ஆவல்  லோங்கிஸ் போட்ட பிறகே பொடிச்சிகளை பார்க்க ஒரு ஆசை வந்தது அந்த வயது அப்படி :unsure:tw_blush:

மீண்டுமொரு  நினைவுக்குள் இழுத்து சென்று விட்டியளே :104_point_left::104_point_left:

முனிவர் 75 அல்லது 80 களின் பின்பே அந்த கலாச்சாரம் முடிந்ததென்றே எண்ணுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ஈழப்பிரியன் said:

முனிவர் 75 அல்லது 80 களின் பின்பே அந்த கலாச்சாரம் முடிந்ததென்றே எண்ணுகிறேன்.

இல்லை 90 களிலும் இருந்தது, யாழ் நகரப் பகுதிகளில் 10/11 ம் ஆண்டுகளிலேயே போடத் தொடங்கி விட்டார்கள். யாழ் நகர தனியார் கல்வி நிறுவனங்களுக்கு போட்டு சென்றார்கள்.

(10ம் ஆண்டிலேயே private ஆக O/L சோதனை எடுத்து,  8பாடங்களும் சித்தியடைந்ததால் முன்னரே போட்டாச்சு)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, MEERA said:

இல்லை 90 களிலும் இருந்தது, யாழ் நகரப் பகுதிகளில் 10/11 ம் ஆண்டுகளிலேயே போடத் தொடங்கி விட்டார்கள். யாழ் நகர தனியார் கல்வி நிறுவனங்களுக்கு போட்டு சென்றார்கள்.

(10ம் ஆண்டிலேயே private ஆக O/L சோதனை எடுத்து,  8பாடங்களும் சித்தியடைந்ததால் முன்னரே போட்டாச்சு)

நான் 77 இலேயே வெளிநாடு புறப்பட்டதால் 80 களிலேயே அந்த கலாச்சாரம் மாறியிருக்கும் என நினைத்தேன்.90 வரை இருந்ததென்றால் ரொம்பவும் அதிசயம் தான்.நன்றி மீரா.

  • கருத்துக்கள உறவுகள்

வேலையில் சேர்ந்த பின்புதான் காக்கித் துணியில் முதன் முதலில் லோங்சை மாட்டியது ஞாபகம்.

அக்காவும் அவரது நண்பியும் அரைத்தாவணி போடும் பருவம் அடைந்ததும், அதற்கேற்ற துணிகள் வாங்கவும், தைக்கவும், நான் விளையாடக்கூடப் போகமுடியாது அவர்களுக்குக் காவல் நாயாக அலைந்ததும், தாவணி போட்டபின் அவர்களுக்கு வந்த வெட்கமும், முகத்தில் ஏற்பட்ட சந்தோசமும்,பூரிப்பும் இன்றும் பசுமையாக நினைவில் உள்ளது.

Bildergebnis für தாவணி

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப ஒரு பத்து நிமிடத்துக்கு முன்தான் எனது அயலவர்கள் வீட்டில் வந்து கதைத்துக் கொண்டிருந்தோம். அப்போது கதை உங்களின் எந்த சிறு வயதில் இருந்து சம்பவங்கள் ஞபகத்தில் இருக்கு என்று சுவாரஸ்யமாய் கதைத்துக் கொண்டிருந்தோம். கிட்டதட்ட அதே தலைப்பில் இங்கே கருத்தாடல்கள் நடந்து கொண்டிருக்கு.

நான் எட்டாம் வகுப்பிற்கு பிறகு ஜி.சி. ஈ-- ஓ எல் வரை கல்லூரியில் நடக்கும் விழாக்களுக்கு பிரிபக்துராக வெள்ளை லோங்ஸ்சும் வெள்ளை சேட்டும் போடுவோம். அது முடிந்ததும் உடனே அரைக்காற் சட்டைக்கு மாறிடுவோம். பின்பு நான் பாடசாலை விட்டதும் கொழும்பில் ஓரிரு வருடங்கள். அங்கு கூச்சமின்றி லோங்ஸ் போட முடிந்தது. ஆனால் யாழ்ப்பாணம் வரும்போது காற்சட்டைதான். பின்பு அத்தான் வற்புறுத்தி லோங்ஸ் போடவைத்து முள்ளியவளைக்கு அக்கா வீட்டுக்கு வந்தேன். அங்கு பெரியம்மாவுக்கும் அக்காவுக்கும் நல்ல சந்தோசம். பிறகு அப்படியே யாழ்ப்பாணம் வந்தேன்.

அதைவிட எனது நண்பன் ஐந்தாம் வகுப்புடன் வேலைக்கு போய்விட்டான்.அவன்  வாகனத்துக்கு சாமான் எடுக்க கொழும்பு வந்தவன் என்னிடம் மாட்டுப் பட்டு அவன்ர வெட்கம் கீல வெடக் நே. அங்கேயே இரண்டு லோங்ஸ் தைத்து அதைப் போட்டுக் கொண்டு யாழ்ப்பாணம் வந்தபோது அவரின் தாயார் அடைந்த சந்தோஷத்துக்கு அளவில்லை......! நன்றி ஈழப்பிரியன்....! tw_blush:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 hours ago, ஈழப்பிரியன் said:

யாழ் களத்திலும் இப்படி அனுபவப்பட்ட புங்கை குமாரசாமி தமிழ்சிறி சுவியர் இன்னும் பலர் இருக்லாம்.உங்கள் அனுபவத்தையும் கொட்டுங்கள் பார்க்கலாம்.

அதையேன் பேசுவான்......

ஓஎல் பாஸ் பண்ணினவுடனை லோஞ்சுக்கும் சேட்டுக்கும் துணி எடுக்க ஜப்னா நியூ மாக்கற்ருக்கு போய் அவிஞ்சு கருவாடாகி வந்த கதை பிள்ளையார்கதையை விட பெருங்கதை...:grin:

பாப்பம் ...

நேரமும் மனமும் ஒருங்கிணைந்தால் ஆயிரம் பக்கக்கங்கள் எழுதலாம்.

நீங்கள் ஆரம்பித்த கதை ஈழத்தவர்களுக்கு மிகமிக சுவாரசியமானது.tw_thumbsup:

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் நினைவிருக்கின்றன...அந்த நாட்கள்!

அதுவும் வெள்ளை நிறம் தான் எங்களுக்குப் போட அனுமதியுண்டு!

அதுவும் அயன் பண்ணி...அந்த மடிப்புத் தெரிய...!

அதுவும் ஒரு காலம்..!

 

நன்றி....ஈழப்பிரியன்!

  • கருத்துக்கள உறவுகள்

பதினைஞ்சு வயசிலிருந்து  களிசானுடனும்,சாரத்துடனும் திரிந்த காலம் ,1989 கடைசியில் 1990 தொடக்கத்தில் தான் புது உடுப்பு வந்தபோது தான் ரவுசர் போடும் சந்தர்ப்பம்  கிடைத்தது.

  • கருத்துக்கள உறவுகள்

அந்த லோங்ஸ் ஐ வாங்க காசுக்கு படும்பாடு ... நடுத்தர குடும்பத்துக்கு ஒரு  சுமை  யாக இருக்கும்.

 காலங் கடந்த பின் இளமையை அசை போடுவது ஒரு சுகம் 

  • கருத்துக்கள உறவுகள்

1970s fashion women bell bottom jeans     bell bottom jeans  

"இஞ்சை பார்ரா லோங்ஸ் போட்டிருக்கான்." என்ற வார்த்தையை, நண்பர்களின் வாயால் கேட்கும் போது....
வரும் ஆனந்தத்தையும், பெருமையும் வெறும்  வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. அப்படி ஒரு பரவசம் உடம்பெல்லாம் பரவி இருக்கும்:love:. முதல் கால் சட்டை போட்டால்...  நண்பர்களுக்கு, தேத்தண்ணி கடையில்.. வடை, சூசியம் எல்லாம் வாங்கிக் கொடுத்து பார்ட்டி வைக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதி. அந்தச் செலவு... கால் சட்டை  தைத்ததை  விட அதிகம் பிடிக்கும். :grin:

அப்போது "ஜீன்ஸ்" துணி அவ்வளவு பிரபலமாகாத காலம். ரெடிமேட் கால்சட்டைகளையும் யாரும் விரும்புவதில்லை. நாமே துணி எடுத்து...  தமக்கு பிடித்த, தையல்காரரிடம் கொடுத்து தைப்போம்.
எனது முதல் கால்சட்டை துணியின் நிறம்.. மெல்லிய மண்ணிறம் என்பது. இப்போதும் நினைவில் உள்ளது. 
அந்நேரம் "பெல் பொட்டம்"  தான்.... பலரும் அணிவார்கள். சாதாரண பெல் பொட்டத்தின்  அடிப்பகுதி... 28 இஞ்சியிலிருந்து 30 இஞ்சிக்குள் இருந்தால் தான் நாம் நிற்கும் போது... அது நேராக நிற்கும் என்று ரெய்லர் சொல்லுவார். இன்னும் பெரிதாக இருந்தால் தான்...  "லேடீஸ்  கொளிச்"  பெட்டையள் திரும்பி பார்ப்பார்கள்:D:  என்பதற்காக...  நாங்கள் அதை 32, 33 இஞ்சியாக தைத்து தரும்படிதான்  ரெய்லரிடம் சொல்வோம். ஒரு பெல் பொட்டம் தைக்க... 25 - 30 ரூபாய் வரை   கூலி கொடுக்க வேண்டும்.

அந்த  பெல் பொட்டம் நிலத்தில்  முட்டாமல் இருக்க... சிங்கப்பூரில் இருந்து வந்த.. ஒரு இஞ்சி மொத்தமான றப்பர் செருப்பு வேறை செலவு. அதற்கிடையில்... சைக்கிள் ஓடும் போது, அது செயின்  கவர் இல்லாத சைக்கிள் என்றால்.... கொழுப்பு பிரண்டுடும் என்று, காலை அகட்டி, குதிக்காலால்  "பெடலை" மிதிக்க வேண்டும். அப்படியும்... சிலவேளை கொழுப்பு   பிரளும். அந்தக் கொழுப்பை எடுக்க, கால்பகுதியை   மண்ணெண்ணெய்க்குள்   ஊறவிட்டு, பொச்சு மட்டையால் உரஞ்ச வேண்டும்.  எத்தனை  கஸ்ரப் பட்டாலும்  அந்த வயதில்... கால் சட் டையுடன் வலம்  வருவது இனிமையான அனுபவம்.:love:

நல்ல தொரு தலைப்பை... நினைவு ஊட்டியதற்கு,  நன்றி ஈழப்பிரியன். :)

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

நான் எச்என்சிE( HNCE)குறூப் அது 78 இல் பெல்பொட்டம் காலம்.அதுவும் எலிபன்ற் பெல்ஸ் மிகவும் அகலம்.நல்லா காத்து கீழால போகும்.பிறகு ஜீன்ஸ்.அதிலையும் இந்த டெனிம் போட்டா மதிக்க மாட்டாங்கள்.கொசப்புகள்தான் இதைப் போடுறது என்று பெரியாக்கள் சொல்லுவினம். அனா அதுதான் நல்லாப் பாவிக்கும். ஊரிலஒரே ஒரு டெனிம் ஜீன்ஸ் போட்டன். புதது ஆக்களுக்கு நான் இயக்கத்தில சேர்ந்துட்டனோ என்று டவுட். ஒருத்தர் வெளிப்படையாகவே கேட்டார். தம்பி ஏதாவது முவ்மென்ற்றில இருக்கிறீங்களோ னெ;று. அது ஒரு கனாக்காலம். வெளிநாட்டுக்கு வந்த பிறகு டெனிம் ஜீன்ஸ்தான்அதுதான் குளிருக்கும் நல்லது. பட்டையடி அடிக்கும் அதைக் கிழியக்கிழியப் போட்டாலும் ஸ்ரைல்தான் ஊத்தையாப்போட்டாலும் ஸ்ரைல்தான்.யாரும் எதுவும் கேட்க மாட்டார்கள்.

ஒருகாலத்தில ஒரு ஸரையில் பொக்கற் உள்ளே வைச்சிருப்பாங்கள். நான் ரியூசன் காசை உள் பொக்கற்றுக்குள் வைக்கிறதுப்பதிலாக ஆக உள்ளே வைச்சிட்டன் அது கீழால காலுக்குள்ளால கீழ விழுந்துட்டுது.

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, ஈழப்பிரியன் said:

 

யாழ் களத்திலும் இப்படி அனுபவப்பட்ட புங்கை குமாரசாமி தமிழ்சிறி சுவியர் இன்னும் பலர் இருக்லாம்.உங்கள் அனுபவத்தையும் கொட்டுங்கள் பார்க்கலாம்.

எங்களுக்கும் உந்த அனுபவமுண்டு ....நான் 77 ஆம் ஆண்டு போடத்தொடங்கி விட்டேன் இரண்டு மூன்று காற்சட்டையோட இரண்டு வருடஉயர்தர‌ பள்ளி படிப்பை முடித்து விட்டேன்..அனுபவம் பகிர்வு சுப்பர் ....சிட்னிக்கு வந்து போனபின்பு நீங்களும் ஒரு எழுத்தாளராக வாறீங்கள்:10_wink:

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, putthan said:

எங்களுக்கும் உந்த அனுபவமுண்டு ....நான் 77 ஆம் ஆண்டு போடத்தொடங்கி விட்டேன் இரண்டு மூன்று காற்சட்டையோட இரண்டு வருடஉயர்தர‌ பள்ளி படிப்பை முடித்து விட்டேன்..அனுபவம் பகிர்வு சுப்பர் ....சிட்னிக்கு வந்து போனபின்பு நீங்களும் ஒரு எழுத்தாளராக வாறீங்கள்:10_wink:

அந்த மண்ணின் மகிமை அப்படி !

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, புங்கையூரன் said:

அந்த மண்ணின் மகிமை அப்படி !

பின்ன ....மண் அப்படி சந்திச்ச ஆட்கள் அப்படி:unsure:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, Paanch said:

வேலையில் சேர்ந்த பின்புதான் காக்கித் துணியில் முதன் முதலில் லோங்சை மாட்டியது ஞாபகம்.

அக்காவும் அவரது நண்பியும் அரைத்தாவணி போடும் பருவம் அடைந்ததும், அதற்கேற்ற துணிகள் வாங்கவும், தைக்கவும், நான் விளையாடக்கூடப் போகமுடியாது அவர்களுக்குக் காவல் நாயாக அலைந்ததும், தாவணி போட்டபின் அவர்களுக்கு வந்த வெட்கமும், முகத்தில் ஏற்பட்ட சந்தோசமும்,பூரிப்பும் இன்றும் பசுமையாக நினைவில் உள்ளது.

Bildergebnis für தாவணி

பாஞ்ச் பெண் பிள்ளைகள் பருவ வயதில் இயற்கை அழகோ அழகு அதிலும் தாவணியில் சொல்லத் தேவையில்லை.

சரி மணிக்கூடு எப்போது?

15 hours ago, suvy said:

இப்ப ஒரு பத்து நிமிடத்துக்கு முன்தான் எனது அயலவர்கள் வீட்டில் வந்து கதைத்துக் கொண்டிருந்தோம். அப்போது கதை உங்களின் எந்த சிறு வயதில் இருந்து சம்பவங்கள் ஞபகத்தில் இருக்கு என்று சுவாரஸ்யமாய் கதைத்துக் கொண்டிருந்தோம். கிட்டதட்ட அதே தலைப்பில் இங்கே கருத்தாடல்கள் நடந்து கொண்டிருக்கு.

நான் எட்டாம் வகுப்பிற்கு பிறகு ஜி.சி. ஈ-- ஓ எல் வரை கல்லூரியில் நடக்கும் விழாக்களுக்கு பிரிபக்துராக வெள்ளை லோங்ஸ்சும் வெள்ளை சேட்டும் போடுவோம். அது முடிந்ததும் உடனே அரைக்காற் சட்டைக்கு மாறிடுவோம். பின்பு நான் பாடசாலை விட்டதும் கொழும்பில் ஓரிரு வருடங்கள். அங்கு கூச்சமின்றி லோங்ஸ் போட முடிந்தது. ஆனால் யாழ்ப்பாணம் வரும்போது காற்சட்டைதான். பின்பு அத்தான் வற்புறுத்தி லோங்ஸ் போடவைத்து முள்ளியவளைக்கு அக்கா வீட்டுக்கு வந்தேன். அங்கு பெரியம்மாவுக்கும் அக்காவுக்கும் நல்ல சந்தோசம். பிறகு அப்படியே யாழ்ப்பாணம் வந்தேன்.

அதைவிட எனது நண்பன் ஐந்தாம் வகுப்புடன் வேலைக்கு போய்விட்டான்.அவன்  வாகனத்துக்கு சாமான் எடுக்க கொழும்பு வந்தவன் என்னிடம் மாட்டுப் பட்டு அவன்ர வெட்கம் கீல வெடக் நே. அங்கேயே இரண்டு லோங்ஸ் தைத்து அதைப் போட்டுக் கொண்டு யாழ்ப்பாணம் வந்தபோது அவரின் தாயார் அடைந்த சந்தோஷத்துக்கு அளவில்லை......! நன்றி ஈழப்பிரியன்....! tw_blush:

சுவியர் நான் நினைத்த மாதிரியே உங்களிடமிருந்து அனுபவ ஞாபகம் வந்திருக்கிறது.நன்றி.

12 hours ago, குமாரசாமி said:

அதையேன் பேசுவான்......

ஓஎல் பாஸ் பண்ணினவுடனை லோஞ்சுக்கும் சேட்டுக்கும் துணி எடுக்க ஜப்னா நியூ மாக்கற்ருக்கு போய் அவிஞ்சு கருவாடாகி வந்த கதை பிள்ளையார்கதையை விட பெருங்கதை...:grin:

பாப்பம் ...

நேரமும் மனமும் ஒருங்கிணைந்தால் ஆயிரம் பக்கக்கங்கள் எழுதலாம்.

நீங்கள் ஆரம்பித்த கதை ஈழத்தவர்களுக்கு மிகமிக சுவாரசியமானது.tw_thumbsup:

குமாரசாமி அந்த நேரங்களில் பண்டதரிப்பு நெசவாலையில் இருந்து கொஞ்சம் மலிவு விலையில் கூப்பன் கடைகளில் கொடுத்ததாக ஞாபகம்.அதிலே தான் எனது முதல் லோங்ஸ்.

பெல்பொட்டமெல்லாம் போடலையோ?

மணிக்கூடு என்ன மாதிரி?எனக்கு கட்ட கிடைக்கவில்லை.

ஆனால் கட்டிய சிலர் அந்த கையால் போற வாறவருக்கெல்லாம் கை காட்டுவார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, புங்கையூரன் said:

இன்னும் நினைவிருக்கின்றன...அந்த நாட்கள்!

அதுவும் வெள்ளை நிறம் தான் எங்களுக்குப் போட அனுமதியுண்டு!

அதுவும் அயன் பண்ணி...அந்த மடிப்புத் தெரிய...!

அதுவும் ஒரு காலம்..!

 

நன்றி....ஈழப்பிரியன்!

புங்கை உங்களிடமிருந்து இன்னும் எதிர் பார்த்தேன்.மடிப்பு கலையாமல் போடுறதிலேயே கவனமாக இருந்திருக்கிறிர்கள்.

அந்த நாட்களில் மின்சார அயன் இல்லை.சிரட்டையை எரித்து தணல் போட்டுத் தான் அயன்.இத்தனையும் செய்வதை விட மடித்து போட்டு பேப்பருக்குள் வைத்து கட்டில் மெத்தைக்கு கீழ் வைத்தால் அயன் பண்ணியது போலவே வரும்.

10 hours ago, நந்தன் said:

பதினைஞ்சு வயசிலிருந்து  களிசானுடனும்,சாரத்துடனும் திரிந்த காலம் ,1989 கடைசியில் 1990 தொடக்கத்தில் தான் புது உடுப்பு வந்தபோது தான் ரவுசர் போடும் சந்தர்ப்பம்  கிடைத்தது.

நந்தன் எமது காலம் தான் அப்படி.பின்னால் வந்தவர்கள் சிறு வயதிலேயே போட்டிருப்பார்கள் என தவறான எண்ணம் கொண்டுவிட்டேனோ என்று எண்ண தோன்றுகின்றது.

9 hours ago, நிலாமதி said:

அந்த லோங்ஸ் ஐ வாங்க காசுக்கு படும்பாடு ... நடுத்தர குடும்பத்துக்கு ஒரு  சுமை  யாக இருக்கும்.

 காலங் கடந்த பின் இளமையை அசை போடுவது ஒரு சுகம் 

நிலாமதி நீங்கழுமா லோங்ஸ் போட்டீர்கள்.நான் நினைத்தேன் உங்கள் தாவணிக் கனவுகளைத் தான் எழுதப் போகிறீர்கள் என்று.நன்றி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தமிழ் சிறி said:

"இஞ்சை பார்ரா லோங்ஸ் போட்டிருக்கான்." என்ற வார்த்தையை, நண்பர்களின் வாயால் கேட்கும் போது....
வரும் ஆனந்தத்தையும், பெருமையும் வெறும்  வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது. அப்படி ஒரு பரவசம் உடம்பெல்லாம் பரவி இருக்கும்:love:. முதல் கால் சட்டை போட்டால்...  நண்பர்களுக்கு, தேத்தண்ணி கடையில்.. வடை, சூசியம் எல்லாம் வாங்கிக் கொடுத்து பார்ட்டி வைக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதி. அந்தச் செலவு... கால் சட்டை  தைத்ததை  விட அதிகம் பிடிக்கும். :grin:

சிறி லோங்ஸ் போட்டிருக்கிறான் என்றால் அதற்கு ஒரு அர்த்தம் இருக்கும்.படித்தவன் என்ற மரியாதையையும் சமூகத்தில் தந்துவிடும்.

இந்த பெல்பொட்டங்களை நினைக்க உண்மையிலேயே சரியான வெட்கமாக இருக்கிறது சிறி.காலுக்கு கீழ் பெரிதாக ஆட வேண்டும்.பொக்கிளுக்கு மேல் நிற்க வேண்டும்.நீங்கள் எழுதியது போல் அதை பராமரிப்பது மகா கஸ்டம்.

உங்களிடமிருந்து எதை எதிர்பார்த்தேனோ அதைவிட மிக அழகாக படங்களுடன் விபரமாக எழுதி இருக்கிறீர்கள்.நன்றி சிறி.

3 hours ago, புலவர் said:

நான் எச்என்சிE( HNCE)குறூப் அது 78 இல் பெல்பொட்டம் காலம்.அதுவும் எலிபன்ற் பெல்ஸ் மிகவும் அகலம்.நல்லா காத்து கீழால போகும்.பிறகு ஜீன்ஸ்.அதிலையும் இந்த டெனிம் போட்டா மதிக்க மாட்டாங்கள்.கொசப்புகள்தான் இதைப் போடுறது என்று பெரியாக்கள் சொல்லுவின

புலவர் எமக்கு பின் வந்தவர்களை என் சி ஈ ஈ  ஏச் என் சி ஈ என்று பாடங்களையும் கூட்டி பிள்ளைகளை குழப்பியடித்த காலம்.

இருந்தும் இலகுவாக சித்தியடையலாம் என்று சொன்னார்கள்.

இலங்கையில் அந்த காலத்தில் யாரும் டெனிம் போட்டதாக ஞாபகம் இல்லை.வெளிநாடு வந்த பின்பே டெனிமைப் பற்றி தெரிந்து கொண்டேன்.நன்றி புலவர்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, putthan said:

எங்களுக்கும் உந்த அனுபவமுண்டு ....நான் 77 ஆம் ஆண்டு போடத்தொடங்கி விட்டேன் இரண்டு மூன்று காற்சட்டையோட இரண்டு வருடஉயர்தர‌ பள்ளி படிப்பை முடித்து விட்டேன்..அனுபவம் பகிர்வு சுப்பர் ....சிட்னிக்கு வந்து போனபின்பு நீங்களும் ஒரு எழுத்தாளராக வாறீங்கள்:10_wink:

புத்து வெளிநாட்டு கலாசாரம் 80 களிலேயே வந்தபடியால்

ஒ எல் பாசாகி தான் லோங்ஸ் ஏ எல் பாசாகி தான் மணிக்கூடு என்ற வரையறை முடிந்திருக்குமென எண்ணிவிட்டேன்.

3 hours ago, putthan said:

....சிட்னிக்கு வந்து போனபின்பு நீங்களும் ஒரு எழுத்தாளராக வாறீங்கள்

எல்லாம் உங்களை சந்தித்ததன் பலன் தான்.

உனது நண்பன் யாரென்று சொல்லு
நான் உன்னைப் பற்றி சொல்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு இப்பவும் நல்லஞாபகம் இருக்க முதல் முதல் லோன்ஸ் போட்டது.இங்கை எல்லாரும் முக்கியமான ஒன்றை மறந்து விட்டீhக்ள் அநேகமாக லோன்ஸ் போடத் தொடங்கும் போதுதான் கோவணமும் பொடத் தொடங்கியிருப்பம்.:)

  • கருத்துக்கள உறவுகள்

 

37 minutes ago, சுவைப்பிரியன் said:

எனக்கு இப்பவும் நல்லஞாபகம் இருக்க முதல் முதல் லோன்ஸ் போட்டது.இங்கை எல்லாரும் முக்கியமான ஒன்றை மறந்து விட்டீhக்ள் அநேகமாக லோன்ஸ் போடத் தொடங்கும் போதுதான் கோவணமும் பொடத் தொடங்கியிருப்பம்.:)

ஞாலத்துக்கே முதல்வர் விநாயகர். அவர்காலத்திலேயே கோவணமும் வந்துவிட்டது. உள்ளே தெரிகிறதா சுவியரே.! :103_point_down:

Bildergebnis für கோவணம் 

எழுதாத சட்டங்கள் ஏராளம். இச்சட்டங்கள் எப்போதும் மிக மன அழுத்தத்தை ஏற்படுத்திக்கொண்டே இருக்கும். சமூக ஒடுக்குமுறைகள் வாய்வழியாகவே நடைமுறைப்படுத்தப்பட்டது. அதனால் தான் எம்மவர்கள் சிறு சுடு சொல்லையும் தாங்க மாட்டார்கள். சில பேர்  10. 20 வருடமாக பகையாக இருப்பார்கள் ஆராய்ந்துபார்த்தால் சிறு வார்த்தைப் பிரயோகம் நொட்டை சொட்டை  சுடுசொல் காரணமாக இருக்கும். இதற்கு உதாரணம் இக்களத்தில் கோபித்துக்கொண்டு போகின்றவர்களில் கூட காண முடியும். அடுத்தவன் என்ன நினைப்பானோ சொல்வானோ என்று தமது சந்தோசத்தை அழித்தவர்கள் உலகில் நம்மவர்கள் தான் அதிகம் என்பேன். எத்தனையோ பேர் வாங்கிய உடுப்பை போடாமலே இருப்பார்கள். 

இவ்வாறான பல கட்டமைப்புகளை எழுதாத சட்டங்களை உடைத்தெறிந்தது போராட்டமே !  சிங்களவனிடம் போராட்டம் தோற்றபோதிலும் பல இடங்களில் வெற்றிபெற்றிருக்கின்றது. இவ்வாறான சின்ன சின்ன விடயங்களை ஆராயும் போதுதான் இதற்கு பின்னாலான பெரும் சமூக ஒடுக்குமுறைகள் புரியும். 

பதிவுக்கு நன்றி

 

நல்லதொரு அனுபவ பதிவு ஈழப்பிரியன். 

எனக்கு நினைவில் உள்ளபடி நான் 8 ம் வகுப்பு படிக்கும்போது லோங்ஸ் போட்டேன். பாடசாலை நேரம் போடாவிடினும் கிரிக்கெட் விளையாட போடுவது. 

நீள காற்சட்டையை எல்லா இடமும் தைக்க கொடுப்பதில்லை. யாழ் நகரில் மின்சார நிலைய வீதியால்  மலாயன்கபே தாண்டி போக அதே பக்கம் ஒரு சிறு ஒடுக்கமான வீதி வரும். அதில் இருக்கும் முதல் கடை முஸ்லிம் ஆட்களது அங்குதான் தைக்க கொடுப்போம். அவர்கள் இடம் கொடுத்தால் எப்படியும் தைத்து தர 15 இல் இருந்து 20 நாள் எடுக்கும். அந்த அளவு அவர்கள் பிஸி. :)

அதே போல அந்த நேரத்தில் காதை மூடி தலைமயிர் வளர்ப்பதுதான் ஸைரைல் அதை சக்கி கட் என்பார்கள்.tw_blush: அதற்கும் ஆஸ்பத்திரி வீதியில் ஒரு சலூன் இருந்து. அதன் பெயரே சக்கி சலூன் என நினைக்கிறேன். அங்கு தலைமயிர் வெட்ட அந்த காலத்திலேயே Appoinment வைக்க வேண்டும். tw_blush:

  • கருத்துக்கள உறவுகள்
39 minutes ago, சண்டமாருதன் said:

அடுத்தவன் என்ன நினைப்பானோ சொல்வானோ என்று தமது சந்தோசத்தை அழித்தவர்கள் உலகில் நம்மவர்கள் தான் அதிகம் என்பேன்.

 

உண்மை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.