Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழக மக்களுக்காக முதல்வராக விரும்புகிறேன் – மக்களை நேரில் சந்திக்க உள்ளேன் – மனம் திறந்த கமல்

Featured Replies

தமிழக மக்களுக்காக முதல்வராக விரும்புகிறேன் – மக்களை நேரில் சந்திக்க உள்ளேன் – மனம் திறந்த கமல்

kamal5656.jpg

தாம் அரசியலுக்கு வருவது உறுதி எனவும் தமிழக மக்களுக்காக முதல்வராக விரும்புகிறேன் எனவும் நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.   இந்தியா டுடே  தொலைக்காட்சி சேவைக்கு வழங்கிய சிறப்பு பேட்டியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.   அரசியலுக்குள் நுழைவது என்பது முள் கிரீடத்தை தலையில் சுமப்பதற்கு சமமானது என தெரிவித்துள்ள அவர்   மக்களைப் பொறுத்தவரை அவர்களின் பிரச்னைகளை யாரும் கண்டு கொள்வதில்லை என்றே நினைக்கின்றனர். இடதுசாரியா, வலதுசாரியா அல்லது வேறு சிந்தனையுடையவனா என்பதையெல்லாம் மக்கள் பார்க்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

என்னைப் பொருத்தவரை கறுப்பு தான் என்னுடைய நிறம். அதில் தான் காவி உட்பட அனைத்து நிறங்களும் உள்ளன. அரசியல் ஒரு புதைகுழி என்பதை மாற்றி அனைவருக்குமானதாக மாற்ற வேண்டும் என்பதே இப்போதைய தேவையாக உள்ளது.  அரசியல்வாதி ஆவதற்கு முன்னர் என்னை நான் தயார்படுத்திக் கொள்ள வேண்டும். இதற்காக மக்களை நேரில் சந்திக்க உள்ளேன், என்னுடைய மக்கள் சந்திப்பு பயணத்தை விரைவில் அறிவிப்பேன் எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும் உடனடியாக எந்த மாற்றத்தையும் செய்து விடுவேன் என்று நான் உறுதியளிக்கவில்லை. ஆனால் மாற்றத்திற்காக நான் தலைவணங்கத் தயாராக இருக்கிறேன் என்பதையே சொல்கிறேன் என்று கூறியுள்ளார்.

இதே போன்று டைம்ஸ் நவ் தொலைக்காட்சி சேவைக்கு   வழங்கிய  பேட்டியில்   மக்களின் ஒத்துழைப்பு இன்றி எதையுமே செய்ய முடியாது, ஏன் நான் அவர்களுக்காக உதவ நினைப்பதில் பாதியைக் கூட நிறைவேற்ற முடியாது. என்னைப் பொறுத்தவரையில் நான் பகுத்தறிவாளன்.

கடவுள் இருக்கிறாரோ இல்லையோ இது எல்லாவற்றையும் விட நான் மக்களின் அன்பை மதிக்கிறேன். நான் மக்களுக்கு உதவுவதற்காக எந்த அளவிற்கு வேண்டுமானாலும் கீழே இறங்கிச் செல்லத் தயாராக இருக்கிறேன். நான் மக்களுக்காக உதவும் ஒரு கருவி அதைத் தவிர வேறு ஒன்றும் சொல்வதற்கில்லை என கமல்ஹாசன் கூறியுள்ளார்.

kamal-haasan2.jpg.pagespeed.ic_.Aido8Iiakamal-hassan.jpg

http://globaltamilnews.net/archives/42101

  • Replies 57
  • Views 3.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

மறுபடியும் இன்னொன்னா..? தாங்காதுப்பா..!

தமிழ்நாட்டில் இருப்பவர்கள் வடிகட்டின மடையர்கள் என்றே முடிவெடுத்துவிட்டார் போலும்..!!

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ராசவன்னியன் said:

மறுபடியும் இன்னொன்னா..? தாங்காதுப்பா..!

தமிழ்நாட்டில் இருப்பவர்கள் வடிகட்டின மடையர்கள் என்றே முடிவெடுத்துவிட்டார் போலும்..!!

இது தமிழ் ரத்தம் உள்ளவர் ஆக்கும் 

  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்சம் கஸ்டப்பட்டவர் கடைசி நேரங்களில் எடுத்த படங்களால் கொஞ்சம் சேர்த்து வைத்துள்ளார்.

இருக்கிறதை விடுவதற்கு வழி தேடுகிறார்.

இருந்தாலும் தமிழ்நாட்டு மக்களை கணிப்பது கஸ்டம்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக அரசியலும் சினிமாவும் பிரிக்கமுடியாதது. தமிழக அரசியல் சினிமாவுக்கு அப்பால் நின்று எழக்கூடிய நிலையில் இல்லை அதற்கு தமிழ்நாட்டு மக்களும் தயாரில்லை ஆகவே தமிழக அரசியலில் அறவே சினிமா சம்பந்தம் இல்லாதவர் வெற்றியடைவது சாத்தியமன்று. எப்பயோ சினிமாவின் ஆதிக்கத்தில்தான்தொடரும் அரசியல் மாற்றங்களும் நிகழ வாய்ப்பிருக்கிறது. அதனால் கமல் அரசியலுக்கு வருவதாக அறிவித்தால் வரவேற்பதில் தவறில்லை. அரசியல் பிரவேசம் கமலுக்கு சாபமாக்கூட அமையலாம். இருப்பினும் அந்த கலைஞனுக்குப் பின்னால் சாதிக்கவேண்டும் என்ற ஒரு பேரவா இருப்பதை உணரமுடிகிறது. இப்போது இருப்பதிலிருந்து பெரிய மாற்றங்கள் நிகழாவிட்டாலும் சின்னச் சின்ன மாற்றங்கள் உருவாக வாய்ப்பிருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

கொஞ்சம் கஸ்டப்பட்டவர் கடைசி நேரங்களில் எடுத்த படங்களால் கொஞ்சம் சேர்த்து வைத்துள்ளார்.

இருக்கிறதை விடுவதற்கு வழி தேடுகிறார்.

இருந்தாலும் தமிழ்நாட்டு மக்களை கணிப்பது கஸ்டம்.

என் உணர்வு என்னவோ முரண்டு பிடிக்குது....!

இவர் ஒண்டும் சப்பானியல்ல, சகலகலாவல்லவன்.....!

இப்ப பாசுபதாஸ்திரமாக இருக்கிறார். வில்லாளி  பசுபதியோ பார்த்தனோ யாரோ யாமறியோம்.....!

ம்.....வரும் மலிந்தால்.......!

  • கருத்துக்கள உறவுகள்

சிவாஜி கணேசனே வந்தார், ஓடினார்....

எல்லோருக்கும் ஒரு ஆசை.....

அனைவரும் மறந்துவிடுகிறார்கள்.... எம்ஜிஆர்..... ஒரு ஒழுக்கமானவர், வள்ளல் என்ற இமேஜினை பத்திரமாக கட்டி எழுப்பி, அதன் மீது சினிமா புகழை தூவி வென்றார்.

இவர் தனி மனித ஒழுக்கம் இல்லாதவர். அய்யங்கார்.... சுஜநலவாதி என்ற முத்திரை உள்ளவர்...

மிகவும் கஷடம்....

அரசியலில் கமலின் அணுகுமுறை ரஜனி சிவாஜி போல் இருக்குமா என்பது சந்தேகமே! தமிழக அரசியலின் வெற்றிடத்துக்குள் நுளைவதற்கு பதிலாக தமிழகத்துக்கும் மத்திய அரசியலுக்கும் உள்ள வெற்றிடத்தில் நுளைந்து தமிழக அரசியலில் கால்பதிக்கும் அணுகுமுறைபோல் உள்ளது. தமிழக மக்கள் அதிமுக திமுக போன்றகட்சிகளை கடந்த என்ன முடிவு எடுப்பார்கள் என்பதை காலம் தான் தீர்மானிக்கும். 

  • கருத்துக்கள உறவுகள்

முஸ்லிம்களுக்குள் இடையே இருக்கும் ஒரு விதமான புரிந்துணர்வு போன்ற ஒன்று.....பிராமண குலத்தவரிடையேயும் ஒரு விதமான புரிந்துணர்வு இருந்து கொண்டேயிருக்கும்!

தமிழ் பேசுவதானால் மட்டும் ஒருவனைத் தமிழன் எனவும்...தமிழர்களின் நலன் நோக்கியே ,,,அவர்கள் நடவடிக்கைகள் நகரும் என எதிர்பார்ப்பது முட்டாள் தனம் என்பதைக் காலம் எமக்கு உணர்த்தியுள்ளது!

இந்து ராம், துக்ளக் சோ, சுப்பிரமணியன் சுவாமி, ஜெயலலிதா ஜெயராம் போன்ற அனைவருக்குள்ளும் ஒரு விதமான புரிந்துணர்வு எப்போதுமே இருக்கும்!

எல்லோரும் முள்ளி வாய்க்காலுக்காக முதலைக் கண்ணீர் வடித்தார்களே ஒழிய...தமிழனுக்காக உண்மையாக அழுதவர்கள் தமிழகத்தின் கீழ்மட்டத் தமிழர்களே!

அவர்களைச் சரியான வகையில் வழி நடத்த...ஒரு தலைவன் தமிழ் நாட்டில் இது வரை இல்லை என்றே நினைக்கிறேன்!

அப்படியான தலைமை ஒன்று உருவாகும் வரைக்கும்....தமிழ் நாட்டுத் தமிழன் ...சந்தையில் இருக்கும் ஒரு வியாபாரப் பொருளாகவே இருப்பான்!

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

என் உணர்வு என்னவோ முரண்டு பிடிக்குது....!

இவர் ஒண்டும் சப்பானியல்ல, சகலகலாவல்லவன்.....!

இப்ப பாசுபதாஸ்திரமாக இருக்கிறார். வில்லாளி  பசுபதியோ பார்த்தனோ யாரோ யாமறியோம்.....!

ம்.....வரும் மலிந்தால்.......!

இவர் வெறும் எம் பி யாக இருக்க பிரியமில்லாதவர்.எடுத்த எடுப்பிலேயே முதலமைச்சர் என்று முரண்டு பண்ணுகிறார்.

28 minutes ago, புங்கையூரன் said:

முஸ்லிம்களுக்குள் இடையே இருக்கும் ஒரு விதமான புரிந்துணர்வு போன்ற ஒன்று.....பிராமண குலத்தவரிடையேயும் ஒரு விதமான புரிந்துணர்வு இருந்து கொண்டேயிருக்கும்!

தமிழ் பேசுவதானால் மட்டும் ஒருவனைத் தமிழன் எனவும்...தமிழர்களின் நலன் நோக்கியே ,,,அவர்கள் நடவடிக்கைகள் நகரும் என எதிர்பார்ப்பது முட்டாள் தனம் என்பதைக் காலம் எமக்கு உணர்த்தியுள்ளது!

இந்து ராம், துக்ளக் சோ, சுப்பிரமணியன் சுவாமி, ஜெயலலிதா ஜெயராம் போன்ற அனைவருக்குள்ளும் ஒரு விதமான புரிந்துணர்வு எப்போதுமே இருக்கும்!

எல்லோரும் முள்ளி வாய்க்காலுக்காக முதலைக் கண்ணீர் வடித்தார்களே ஒழிய...தமிழனுக்காக உண்மையாக அழுதவர்கள் தமிழகத்தின் கீழ்மட்டத் தமிழர்களே!

அவர்களைச் சரியான வகையில் வழி நடத்த...ஒரு தலைவன் தமிழ் நாட்டில் இது வரை இல்லை என்றே நினைக்கிறேன்!

அப்படியான தலைமை ஒன்று உருவாகும் வரைக்கும்....தமிழ் நாட்டுத் தமிழன் ...சந்தையில் இருக்கும் ஒரு வியாபாரப் பொருளாகவே இருப்பான்!

 

 

உண்மைதான்.. 

இந்த புரிதல் சாதிவாரியாக வருகின்றாதா அல்லது ஆரிய திராவிடம் என்ற அடிப்படையில் வருகின்றதா என்பதை உணர்வது கஸ்டம் ஆனால் நாட்டை ஆட்சிசெய்ய வேண்டியவர்கள் இந்திய தேசீயத்துக்கும் அதிகாரத்துக்கும் உரித்துடையவர்கள் நாங்கள் என்ற புரிந்துணர்வு இதில் உண்டு. 

இந்த புரிந்துணர்வு சாதிவாரிக்கட்சியான ப ம க வன்னியர்களுக்கு இடையில் கூட இல்லை. திராவிடம் என்ற அடிப்படையிலும் இல்லை. எதிர்காலத்தில் தமிழ்த்தேசீயம் சார்ந்து ஒருவேளை ஏற்பட வாய்புள்ளது. இருந்தும் பணமுதலைகளே இந்த புரிந்துணர்வையும் தீர்மானிப்பார்கள். 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சினிமாக்கள் எப்பவும் நல்லதை சொல்லித்தான் பாட்டுப்படிச்சு கதையள் விடும்.
அதை நம்பி ஆற்றிலை இறங்கி தமிழினம் தேய்ஞ்சுபோன கதையள் எக்கச்சக்கம்.
வேற்றுவழி அரசியலையும் மக்கள் சிந்திக்க வேண்டும்.
 

  • கருத்துக்கள உறவுகள்

சீமானை பற்றி பிரபலங்கள்..

பேச்சின் உச்சம் தொட்டவர் சீமான்...
இனியாவது தமிழர்கள் விழித்துக்கொள்ள வேண்டும்...
சகாயம் ஐயா..

சீமானின் அரசியல் பேச்சை கண்டு நான் வியந்துபோனேன்...
ரஜினிகாந்த்..

அதிமுக, திமுக சரியில்லை எனில் சீமானை தேர்ந்தெடுப்போம்...
கமல்ஹாசன்....

என் உடலை தம்பி சீமானிடம் கொடுத்து புலிக்கொடி போத்தி அடக்கம் செய்யுங்கள்..
மணிவண்ணன்...

நாம் தமிழர் பிள்ளைகள் மீது நான் மிகுந்த நம்பிக்கையோடு பயணிக்கிறேன்...
ஏனெனில் அவர்கள் தலைவன் அப்படி..
நம்மாழ்வார்...

ஆளபோகிறான் தமிழனென்று தன்படத்திற்கு தலைப்புசெய்தி தந்தார்....
விஜய்....

எல்லாதுறையிலும் தமிழன் சாதிக்கனும்.. தமிழ்நாட்டை தமிழனே ஆளனும்....
ஏஆர் ரகுமான்...

கடைசி வாய்ப்பு தம்பி சீமான்தான்..
இதையும் தவறவிட்டீங்க உங்களை யாராலும் காப்பத்தவே முடியாது....
சத்யராஜ்...

அண்ணனைவிட சிறப்பான அரசியல் உரிமை கொள்கைகளை யாராலும் தரமுடியாது....
அமீர்...

சீமான், சகாயம் போன்றவர்கள் தான் தமிழ்நாட்டை ஆளவேண்டும்....
மன்சூர் அலிகான்...

சீமானின் சிறந்த அரசியல் தத்துவங்களுக்காக தலைவணங்குகிறேன்....
சேரன்...

உடல்பொருள் ஆவியை தமிழுக்காக தியாகம் செய்ய நினைத்தேன்...
நாம்தமிழர் கட்சிக்கு உழைப்பதே அந்த தியாகத்திற்கு ஈடுஇணை....
பொன்வன்னன்...

தமிழன் என்ற இனஒற்றுமையோடு இரு... தமிழ்நாட்டில் இனி தமிழனையே ஆளவையுங்கள்....
சீமானின் பேச்சை பரப்புங்கள்...
பாரதிராஜா..

சீமானே சிறந்த ஆளுமைமிக்க தலைவர்....
ரவிமரியா...

கடவுளையும் வழிபாட்டையும் மேற்கொள்பவர்களை பக்திமான் என்போம்..
தமிழையும் தமிழ்நாட்டையும் வழிபாபடாக கொண்டிருப்பவரை திரு.சீமான் என்போம்..
நியூஸ்7தொலைக்காட்சி நிருபர்..

எத்தனை சீமான் வந்தாலும் தமிழர்களை திருத்த முடியாது..
தமிழருவி மணியன்...

ஆடு மாடு மேய்த்தல் அரசுப்பணி என்கிறார் சீமான்.. என்று பாராட்டினார்..
பாண்டே...

காலத்தின் தேவை.. சீமான்
(நாம் தமிழர் கட்சி)

https://www.facebook.com/groups/1593696960948161/permalink/1943761099275077/

 

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, ஈழப்பிரியன் said:

சீமானை பற்றி பிரபலங்கள்..

பேச்சின் உச்சம் தொட்டவர் சீமான்...
இனியாவது தமிழர்கள் விழித்துக்கொள்ள வேண்டும்...
சகாயம் ஐயா..

சீமானின் அரசியல் பேச்சை கண்டு நான் வியந்துபோனேன்...
ரஜினிகாந்த்..

அதிமுக, திமுக சரியில்லை எனில் சீமானை தேர்ந்தெடுப்போம்...
கமல்ஹாசன்....

என் உடலை தம்பி சீமானிடம் கொடுத்து புலிக்கொடி போத்தி அடக்கம் செய்யுங்கள்..
மணிவண்ணன்...

நாம் தமிழர் பிள்ளைகள் மீது நான் மிகுந்த நம்பிக்கையோடு பயணிக்கிறேன்...
ஏனெனில் அவர்கள் தலைவன் அப்படி..
நம்மாழ்வார்...

ஆளபோகிறான் தமிழனென்று தன்படத்திற்கு தலைப்புசெய்தி தந்தார்....
விஜய்....

எல்லாதுறையிலும் தமிழன் சாதிக்கனும்.. தமிழ்நாட்டை தமிழனே ஆளனும்....
ஏஆர் ரகுமான்...

கடைசி வாய்ப்பு தம்பி சீமான்தான்..
இதையும் தவறவிட்டீங்க உங்களை யாராலும் காப்பத்தவே முடியாது....
சத்யராஜ்...

அண்ணனைவிட சிறப்பான அரசியல் உரிமை கொள்கைகளை யாராலும் தரமுடியாது....
அமீர்...

சீமான், சகாயம் போன்றவர்கள் தான் தமிழ்நாட்டை ஆளவேண்டும்....
மன்சூர் அலிகான்...

சீமானின் சிறந்த அரசியல் தத்துவங்களுக்காக தலைவணங்குகிறேன்....
சேரன்...

உடல்பொருள் ஆவியை தமிழுக்காக தியாகம் செய்ய நினைத்தேன்...
நாம்தமிழர் கட்சிக்கு உழைப்பதே அந்த தியாகத்திற்கு ஈடுஇணை....
பொன்வன்னன்...

தமிழன் என்ற இனஒற்றுமையோடு இரு... தமிழ்நாட்டில் இனி தமிழனையே ஆளவையுங்கள்....
சீமானின் பேச்சை பரப்புங்கள்...
பாரதிராஜா..

சீமானே சிறந்த ஆளுமைமிக்க தலைவர்....
ரவிமரியா...

கடவுளையும் வழிபாட்டையும் மேற்கொள்பவர்களை பக்திமான் என்போம்..
தமிழையும் தமிழ்நாட்டையும் வழிபாபடாக கொண்டிருப்பவரை திரு.சீமான் என்போம்..
நியூஸ்7தொலைக்காட்சி நிருபர்..

எத்தனை சீமான் வந்தாலும் தமிழர்களை திருத்த முடியாது..
தமிழருவி மணியன்...

ஆடு மாடு மேய்த்தல் அரசுப்பணி என்கிறார் சீமான்.. என்று பாராட்டினார்..
பாண்டே...

காலத்தின் தேவை.. சீமான்
(நாம் தமிழர் கட்சி)

https://www.facebook.com/groups/1593696960948161/permalink/1943761099275077/

 

உண்மையான புலிகளின் கொள்கையில் போராடிய எவரும் சீமானை ஏற்கமாட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, புங்கையூரன் said:

முஸ்லிம்களுக்குள் இடையே இருக்கும் ஒரு விதமான புரிந்துணர்வு போன்ற ஒன்று.....பிராமண குலத்தவரிடையேயும் ஒரு விதமான புரிந்துணர்வு இருந்து கொண்டேயிருக்கும்!

தமிழ் பேசுவதானால் மட்டும் ஒருவனைத் தமிழன் எனவும்...தமிழர்களின் நலன் நோக்கியே ,,,அவர்கள் நடவடிக்கைகள் நகரும் என எதிர்பார்ப்பது முட்டாள் தனம் என்பதைக் காலம் எமக்கு உணர்த்தியுள்ளது!

...

இதுதான் யதார்த்தம்..

இந்த புரிந்துணர்வு, தொடர்பாடல், இணக்கம் மிக நுணுக்கமானது.. அதான் ஆழத்தை அறிவது மிககடினம், இடையில் பிற அந்நிய குறுக்கீடுகளை இவர்கள் அனுமதிப்பதில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, நந்தன் said:

உண்மையான புலிகளின் கொள்கையில் போராடிய எவரும் சீமானை ஏற்கமாட்டார்கள்.

புலிக்கொள்கை: ஆயுதப்போராட்டம். அதனை அவர் செய்தால் வாழ்நாள் முழுவதும் உள்ளே தான்.

புலிகளை வெறுத்த ரெலொ, புளட், கருணா அம்மான் பிரிவினர் சகலருமே சீமானை எதிர்ப்பர்.

சீமானுக்கும் இது தெரியும். அவருக்கு நாம் தேவையோ இல்லையோ, எமக்கு அவரது ஆதரவு தேவை.

பிரபாகரன், பெயர் மற்றும் பதாதையுடன் அவரால் சாதியாக, மதமாக பிரிந்து கிடக்கும் தமிழர்களை எல்லாம் தமிழனாக இணைக்க முடிகிறது என்ற ஒரு விசயத்துச்காகவே எனது ஆதரவு.

Edited by Nathamuni

  • தொடங்கியவர்

தமிழகத்தின் முதல்வராகி ஈழத்தமிழருக்காக பாடுபடுவேன்; நடிகர் கமல்ஹாசன்!

நடிகர் கமல்ஹாசன் தமிழகத்தின் முதல்வராக வந்து ஈழத் தமிழ் மக்களுக்கு உதவி செய்வேன் என்று தெரிவித்ததாக ஸ்ரீலங்கா ஊடகம் ஒன்று தகவல் தெரிவித்துள்ளது.

விரைவில் அரசியல் கட்சி ஆரம்பித்து, தமிழகத்தின் முதல்வர் தேர்தலில் போட்டியிடுவேன் என்று தெரிவித்துள்ள கமல்ஹாசன், தான் வெற்றிபெறும் பட்சத்தில் இலங்கையின் தமிழ் மக்கள் தொடர்பிலும் இதுவரை இல்லாத அளவுக்கு செயற்படுவேன் என்று தெரிவித்ததாக மேற்படி ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.

தமிழகத்தின் முதல்வராகி ஈழத்தமிழருக்காக பாடுபடுவேன்; நடிகர் கமல்ஹாசன்!

இது குறித்து இந்திய டுடே தொலைக்காட்சிக்கு கமல்ஹாசன் செவ்வி ஒன்றினை வழங்கியிருந்தார். அதில் தான் அரசியலில் இறங்கப்போவதாகவும் முன்னாள் முதலமைச்சர் ஜெயெலலிதாமீது தனக்கிருந்த மரியாதையின் நிமிர்த்தத்தினால்தான் இதுவரை அரசியலில் இறங்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் ஜெயெலலிதாவின் மறைவினால் தமிழகத்தில் ஒரு சரியான அரசியல் தலைமைக்கான வெற்றிடம் ஒன்று நிலவுவதாகவும் அதற்காக புதிய தலைமைத்துவம் ஒன்றை தமிழக மக்கள் எதிர்பார்த்துள்ளதாகவும் குறிப்பிட்ட கமல்ஹாசன் மிக விரைவில் அதற்கான மக்கள் சந்திப்பை நிகழ்த்தப்போவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இடது சாரியோ வலது சாரியோ மக்களுக்குப் பிரச்சினை இல்லை, ஆனால் மக்களுக்கு அவர்களது பிரச்சினைதான் முக்கியமானது எனக் குறிப்பிட்ட கமல்ஹாசன், தான் உடனடியாக மாற்றத்தை ஏற்படுத்தாவிட்டாலும் அந்த மாற்றத்திற்காக தலை வணங்குவதாகவும் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

https://news.ibctamil.com/ta/internal-affairs/for-Eelam-Tamils-as-the-Chief-Minister

 

நடிகர் கமல்ஹாசன் தமிழகத்தின் முதல்வராக வந்து ஈழத் தமிழ் மக்களுக்கு உதவி செய்வேன் என்று தெரிவித்ததாக ஸ்ரீலங்கா ஊடகம் ஒன்று தகவல் தெரிவித்துள்ளது.

 

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழருக்காக பாடுபடுவேன் என்று தமிழகத்தில்சொல்லிக்கொண்டு எவரும் அரசியலில் முன்னுக்கு வரமுடியாது கடந்தகாலங்களை அனுபவமாகக்கொண்டு தொடரும் காலத்தை நிர்ணயிக்க தெரிந்திருக்கவேண்டும். முதலில் தமிழகத்தை நன்னெறிப்படுத்தவும் தெளிவை உருவாக்கவும் மட்டுமே முழுமையான ஒரு தமிழக அரசு தேவை. முதலில் தமிழக மக்களுக்கான தலைமைத்தேடல் என்பது மேலே புங்கை ஊரான் கூறிய கருத்திலிருந்து மாற்றமில்லாதது. அண்மைக்கால தமிழக சினிமாவில் நிறையவே விழிப்புணர்வைதூண்டும் கருத்துகளும் காட்சிப்படுத்தல்களும் வலம் வருகின்றன. பிரபலங்களின் திரைப்படங்களில் வியாபாரத்திற்காகவும் விசிலடிப்புகளுக்காகவும்... அதே நேரம் வளர்ந்து வரும் புதிய கலைஞர்களின் தேடல்களிலும் இலக்குகளாகவும் இலட்சிய நெருப்புகளாகவும் உருவகப்பட்டுவருவது கண்கூடு... இன்னும் சிறிது  காலம் செல்லும்.... மெல்ல எழுந்து நடக்கமுயலும் பிள்ளையைபோல சினிமாத்துறை தமிழக நலன்கள் பற்றி பேச முற்படுகிறது... வரவேற்கவேண்டிய விடயம் ஆனால் அவற்றை கபாளீகரம் செய்வபோல்தொலைக்காட்சி சேவைகள் மக்களை மந்தைகளாக்கி ஏப்பவிடுகின்றன.tw_angry:

8 hours ago, Nathamuni said:

 

பிரபாகரன், பெயர் மற்றும் பதாதையுடன் அவரால் சாதியாக, மதமாக பிரிந்து கிடக்கும் தமிழர்களை எல்லாம் தமிழனாக இணைக்க முடிகிறது என்ற ஒரு விசயத்துச்காகவே எனது ஆதரவு.

இவற்றை சொல்லிக் கொண்டு இருக்கும் காலம் வரைக்கும் சீமானால் தேர்தலில் கட்டுப் பணத்தை கூட பெற முடியாது.

ஆனால் அண்மை காலங்களில் தமிழக மக்களின் நலன்கள் பலவற்றுக்காக குரல் கொடுக்க தொடங்கி இருப்பது நல்ல மாறுதல் (நீட்டுக்கு எதிராக, கதிரமங்கலம் மக்கள் போராட்டத்துக்கு ஆதரவாக செயல்பாடுகளில் சீமானை காண முடிந்தது)

  • தொடங்கியவர்

கமலுக்கு எதிராகத் திரும்பிய இணையவாசிகள்

தமிழக அரசு மீது நடிகர் கமலஹாசன் விமர்சனம் வைத்தபோதெல்லாம் ஆதரவையோ அல்லது அமைதியான ஏற்பையோ வழங்கிய இணையவாசிகள் முதல்வராக விரும்புவதாக அவர் கூறியதும் கணிசமாக அவரை விமர்சிக்கத் தொடங்கியுள்ளார்கள். அவரது அரசியல் விருப்பத்தை வரவேற்கும் பதிவுகளும் காணப்பட்டன.

சுவையும், நக்கலும் நிறைந்த பதிவுகளால் அவரது அரசியல் விருப்பம் இணையவாசிகளால் விமர்சிக்கப்பட்டது. நேரடியாகவே முதல்வராகும் விருப்பத்தை வெளியிட்டிருந்தது பலருக்கும் எரிச்சலை ஏற்படுத்தியிருந்தது தெரிந்தது.

ஆசை வெட்கமறியாதுபடத்தின் காப்புரிமைFACEBOOK

மேம்போக்காகவும், நகைச்சுவையாகவும் அந்த விமர்சனங்கள் வைக்கப்பட்டாலும், அவற்றில் பல வாதங்கள் உள்ளுறையாக இருந்தன. டிவிட்டரில் வெளியான இந்தப் பதிவு தாமே எல்லாமாவுமாக இருக்க விரும்புகிறவராக கமலை விமர்சிக்கிறது.

மெர்சல்படத்தின் காப்புரிமைTWITTER

சமூகப்பணிகள், பிரச்சினைகளை எதிர்த்துப் போராட்டங்கள் ஏதும் செய்யாத கமல் அரசியலுக்கு வருவதை விமர்சிக்கும் பதிவுகள், அவரது சமூகப் பார்வையை கேள்வி கேட்கும் பதிவுகளும் வெளியாயின.

டிராஃபிக் ராமசாமிபடத்தின் காப்புரிமைFACEBOOK

அவரை பாஜக விமர்சிப்பதை அடுத்து அவருக்கு ஆதரவாக வந்தப் பதிவு.

தமிழிசைபடத்தின் காப்புரிமைFACEBOOK

கமல் ஒவ்வொரு தலைவரையும் சந்திக்கும்போதெல்லாம் அவர் அந்தக் கட்சியில் சேர்வார் என்று விமர்சகர்கள் சொல்வதைக் கிண்டலடிக்கும் ஒரு பதிவு.

பொதுவாகக் கிண்டலடிக்கும் பதிவுகள் சில.

மச்சான்படத்தின் காப்புரிமைFACEBOOK முதல்வன்படத்தின் காப்புரிமைFACEBOOK

அவரது வருகை திமுக-வின் வாக்குகளைப் பிரிக்கும் அளவுக்கு வல்லதா என்ற கேள்வியை எழுப்பும் பதிவு ஒன்று.

வாக்குப் பிரிப்புபடத்தின் காப்புரிமைFACEBOOK

அவரது தொலைக்காட்சித் தொடரை வைத்து கமலை விமர்சிக்கும் பதிவு ஒன்று.

கடந்து செல்க டுவிட்டர் பதிவு இவரது @senthilcp

அரசியலோ, ஜாதி, மதமோ எதுவும் இந்த சமுதாயத்தை சீர்கெடுத்துவிட முடியாது: கமல் # பிக்பாஸ் ,மானாட மயிலாட,சீரியல்கள் போதும் அந்த வேலைக்கு

 
 

முடிவு டுவிட்டர் பதிவின் இவரது @senthilcp

 

http://www.bbc.com/tamil/india-41361741

  • கருத்துக்கள உறவுகள்

ரஜனி காந்தை விட... தமிழ் அடிப்படை உணர்வு உள்ள,  கமலஹாசன்.....  எவ்வளவோ மேல்.

இவரை... அரசியலுக்கு இழுக்க வைத்தவர்,  
போருக்கு தயாராகுங்கள் என்று... முதலில்,  தனது ரசிகர்களுக்கு  அழைப்பு விடுத்த  ரஜனி தான்.
கமல்... அரசியலுக்குள் நுழையப்  போகின்றேன் என்றவுடன், 
ரஜனிகாந்த்....  இருந்த இடம் இல்லாமல் பதுங்கி விட்டார்  என்பதே உண்மை.
அந்த விதத்தில்.... கமலுக்கு நன்றி கூற  வேண்டும்.

பிற் குறிப்பு: நான்.... கமல் ரசிகன் அல்ல. ரஜனிக்கு... வாய்ப்  பூட்டு  போட்ட  காரணத்தால்,  அவரை வரவேற்கின்றேன்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நிழலி said:

இவற்றை சொல்லிக் கொண்டு இருக்கும் காலம் வரைக்கும் சீமானால் தேர்தலில் கட்டுப் பணத்தை கூட பெற முடியாது.

ஆனால் அண்மை காலங்களில் தமிழக மக்களின் நலன்கள் பலவற்றுக்காக குரல் கொடுக்க தொடங்கி இருப்பது நல்ல மாறுதல் (நீட்டுக்கு எதிராக, கதிரமங்கலம் மக்கள் போராட்டத்துக்கு ஆதரவாக செயல்பாடுகளில் சீமானை காண முடிந்தது)

திமுக கடந்த தேர்தலில் வெல்லமுடியாமல் போனமைக்கு காரணம் வெறும் 2.5 இலட்சம் வாக்குக்கள். பல தொகுதிகளில் 100 முதல் 2000 வரை வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பறிபோனது .

கட்டுமரம் அத்துடன் படுத்தவர் தான் இன்னும் எழவில்லை.

சீமான் கடந்த தேர்தலில் எடுத்த வாக்குகள் 4.5 இலட்சம்.

சரியாகப் பார்த்தால், திமுகவின் தோல்வியின் காரணம் சீமான் அவர்களிடம் இருந்து திருடிக் கொண்ட வாக்குகள்.

நாம் தமிழர்கள் இந்த ஒரு வருடத்தில் அபார வளர்ச்சி. இவரது வாக்குகள் 10 இலடசம் வரையாவது கூடும். இவர்கள் குறைந்தது சீமானையாவது சட்டசபைக்கு அனுப்ப முயலக் கூடும்.

மறுபுறத்தே, அதிமுக, திமுக வாக்குகள் மட்டுமே, ரஜனி, கமல் வந்தால் பிரியும்.

EPS, OPS, தினகரன், பாஜக எல்லோருமே தேர்தல் வந்தால் செல்லாக் காசுகள். 

 

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, வல்வை சகாறா said:

தமிழக அரசியலும் சினிமாவும் பிரிக்கமுடியாதது. தமிழக அரசியல் சினிமாவுக்கு அப்பால் நின்று எழக்கூடிய நிலையில் இல்லை அதற்கு தமிழ்நாட்டு மக்களும் தயாரில்லை ஆகவே தமிழக அரசியலில் அறவே சினிமா சம்பந்தம் இல்லாதவர் வெற்றியடைவது சாத்தியமன்று. எப்பயோ சினிமாவின் ஆதிக்கத்தில்தான்தொடரும் அரசியல் மாற்றங்களும் நிகழ வாய்ப்பிருக்கிறது. அதனால் கமல் அரசியலுக்கு வருவதாக அறிவித்தால் வரவேற்பதில் தவறில்லை. அரசியல் பிரவேசம் கமலுக்கு சாபமாக்கூட அமையலாம். இருப்பினும் அந்த கலைஞனுக்குப் பின்னால் சாதிக்கவேண்டும் என்ற ஒரு பேரவா இருப்பதை உணரமுடிகிறது. இப்போது இருப்பதிலிருந்து பெரிய மாற்றங்கள் நிகழாவிட்டாலும் சின்னச் சின்ன மாற்றங்கள் உருவாக வாய்ப்பிருக்கிறது.

தமிழ்நாட்டு...  நிதர்சன அரசியல் உண்மையை... பிரதிபலிக்கும்,  அருமையான.... கருத்து, வல்வை  சகாரா.

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Nathamuni said:

புலிக்கொள்கை: ஆயுதப்போராட்டம். அதனை அவர் செய்தால் வாழ்நாள் முழுவதும் உள்ளே தான்.

புலிகளை வெறுத்த ரெலொ, புளட், கருணா அம்மான் பிரிவினர் சகலருமே சீமானை எதிர்ப்பர்.

சீமானுக்கும் இது தெரியும். அவருக்கு நாம் தேவையோ இல்லையோ, எமக்கு அவரது ஆதரவு தேவை.

பிரபாகரன், பெயர் மற்றும் பதாதையுடன் அவரால் சாதியாக, மதமாக பிரிந்து கிடக்கும் தமிழர்களை எல்லாம் தமிழனாக இணைக்க முடிகிறது என்ற ஒரு விசயத்துச்காகவே எனது ஆதரவு.

இந்த விடயங்களை.... 
"விரல்  நுனியில்"  வைத்திருந்து, பதில்  எழுதுவதற்கு..... "நாதமுனி"  திறமான ஆள். :)

28 minutes ago, Nathamuni said:

திமுக கடந்த தேர்தலில் வெல்லமுடியாமல் போனமைக்கு காரணம் வெறும் 2.5 இலட்சம் வாக்குக்கள். பல தொகுதிகளில் 100 முதல் 2000 வரை வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பறிபோனது .

கட்டுமரம் அத்துடன் படுத்தவர் தான் இன்னும் எழவில்லை.

சீமான் கடந்த தேர்தலில் எடுத்த வாக்குகள் 4.5 இலட்சம்.

சரியாகப் பார்த்தால், திமுகவின் தோல்வியின் காரணம் சீமான் அவர்களிடம் இருந்து திருடிக் கொண்ட வாக்குகள்.

நாம் தமிழர்கள் இந்த ஒரு வருடத்தில் அபார வளர்ச்சி. இவரது வாக்குகள் 10 இலடசம் வரையாவது கூடும். இவர்கள் குறைந்தது சீமானையாவது சட்டசபைக்கு அனுப்ப முயலக் கூடும்.

மறுபுறத்தே, அதிமுக, திமுக வாக்குகள் மட்டுமே, ரஜனி, கமல் வந்தால் பிரியும்.

EPS, OPS, தினகரன், பாஜக எல்லோருமே தேர்தல் வந்தால் செல்லாக் காசுகள். 

 

இன்று இருக்கும் தமிழக அரசியல் நிலையில் எப்ப தேர்தல் வரும் என்று தெரியாது. ஒரு வேளை இரண்டு வருடத்துக்குள் வருமாயின்

1. பெரும் எண்ணிக்கை வித்தியாசத்தில்  தி.மு.க வெல்லும்
2. அதிமுக படு தோல்வி அடையும்
3. சீமான் திராவிடக் கட்சி ஒன்றுடனோ அல்லது பலவற்றுடனோ கூட்டணி அமைக்காவிடின் எந்த தொகுதியிலும் வெல்ல மாட்டார். தொகுதி வாரி தேர்தல் என்பதால் கூட்டணி இல்லாமல் அவரால் வெல்ல முடியாது

மற்றது, தி மு க கூட்டணி  தோற்றது 2.5 இலட்ச வாக்குகளால் அல்ல. 4.4 இலட்ச வாக்குகளால். நாம் தமிழர் கட்சி இதனை விட  அதிகமாக 4.5 இலட்சம் பெற்று இருந்தது. ஆனால் தமிழக தேர்தல் தொகுதி வாரி தேர்தல் என்பதால் வெற்றிக்கு கிட்ட கூட வர முடியவில்லை

பார்க்கவும்: https://en.wikipedia.org/wiki/Tamil_Nadu_Legislative_Assembly_election,_2016

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.