Jump to content

செத்துப்போன கருவாடு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

செத்துப்போன கருவாடு

 பயிர்ச்செய்கைக்கு அதிகளவு இரசாயன உரங்களைப் பாதிப்பதால், நுகர்வோருக்கு புற்று நோய் ஏற்படும் அபாயம் இருப்பதாக சமீபத்தில் ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்திருக்கிறது

பிரேஸில் நாட்டில், குருவிகள் சோயாச் செடிகளை அழிப்பதில் இருந்து பாதுகாப்பதற்காக செடிகளின்மேல் தெளிக்கப்படும் இராசயன மருந்து மிகவும் ஆபத்தானது. இந்த மருந்தின் தாக்கம் சோயாவில் இருந்து தயாரிக்கும் ´Tofu’ விலும் கண்டறியப் பட்டிருக்கிறது என்பது சமீபத்திய ஆய்வு அறிக்கை. அப்படியாயின் புடலங்காய், பயித்தங்காய், முருங்கைக்காய், பாவற்காய் என்று பிளேன் ஏறி எங்களிடம் வந்து சேரும் மரக்கறிகளுக்கு என்ன  உரங்களைப் போட்டிருப்பார்கள்? அதைப் பற்றியெல்லாம் எங்களுக்கு ஏது கவலை.

 வியாழக்கிழமை தமிழ்க்கடைக்குப் போனால் fresh ஆக மரக்கறிகள் வாங்கலாம் என்பது அனேகமாகன புலம்பெயர் தமிழர்களின் மூளைக்குள் பதியப்பட்டு விட்டது. தமிழ்க்கடை என்றால் ஊரின் நினைவு வரவேண்டாமோஊரில் கிராமங்கள் தோறும் உள்ள பெட்டிக்கடைகளில், கோபால் பற்பொடி, தேயிலை, பொரித்த கடலைப் பருப்பு, எள்ளு உருண்டை போன்ற பல பொருட்கள் பக்கெற் பக்கெற்றாகத் தொங்குமே ஏறக்குறைய அதே பாணியில்தான் இங்கே ஐரோப்பாவில் பல தமிழ்க் கடைகள் தங்களை வடிவமைத்து இருக்கின்றன.

 கடைக்கு உள்ளே போனால், முதலாளி யாருடனோ தொலை பேசியில் உரையாடிக் கொண்டிருப்பார். அல்லது கைத்தொலைபேசியை நோண்டிக் கொண்டிருப்பார். இதில் அவரது தொலைபேசி உரையாடல் இருக்கே அது எப்போதுமே full volume தான்

 கடைக்குள் பெட்டி பெட்டியாக இருக்கும் மரக்கறிகளை ஓரளவு அவதானித்து எடுத்து விடலாம். பச்சை மிளாகாயில்தான் கொஞ்சமாகத் தடுமாற்றம் வரும். முதற்கிழமை மிஞ்சிய, காம்புப் பக்கம் சாடையாக கறுத்து நசிந்து அழுது கொண்டிருக்கும் பச்சை மிளகாய்களும் புதியவைகளோடு சாமர்த்தியமாக கலந்து இருக்கும். ஒவ்வொன்றாக எடுத்துப் பார்க்க நேரம் எங்கே இருக்கிறது? அள்ளிப் போட்டு வங்கிக் கொண்டுபோய் வீட்டிலும் வாங்கிக் கட்டிக் கொள்ளத்தான் இருக்கு.

உள்ளே இருப்பதை கண்டு கொள்ளக் கூடாது என்பதற்காகத்தான் தேங்காயின் ஓடு இவ்வளவு கடினமாக இருக்கிறதோ என்று நான் சில சமயங்களில் நினைப்பதுண்டு.

 “தேங்காய் எப்பிடி நல்லதோ?” என்று ஒரு தடவை கடை முதலாளியிடம் நான் கேட்ட போது, “அது, அவனவனுக்குப் பெண்சாதி வாய்ச்ச மாதிரிஎன்று அவர் ஒரு அற்புதமான பதிலைத்  தந்து என்னைக் கவலைப்பட வைத்து விட்டார்.

 எங்கள் நாட்டுக் கடலில் பிடிபடும் மீன்கள் செத்தாலும் வீரியம் மிக்கவை. அவைகளை ஒருநாளும் பக்கெற்றுக்குள் அடைத்து வைக்க முடியாது. கடைக்குள் உள்ள குளிர்சாதனப் பெட்டிக்குள் அவை துள்ளிக் குதித்து பக்கெற்றை விட்டு வெளியே வந்து ஐஸ் படிந்து விறைப்பாகவே இருப்பதை பார்த்தாலே தெரியும்.

 சரி விடயத்துக்கு வருகிறேன்.

 எனது நகரில் இருக்கும் தமிழ்க்கடைக்கு போன கிழமை போயிருந்தேன். எனக்கான மரக்கறிகளை எடுத்துக் கொண்டு முதலாளியிடம் காசு கொடுக்கப் போகும் போதுதான் நினைவுக்கு வந்தது, முதல்நாள் வாங்கிய வெங்காயம். மலிவாக இருக்கிறதென்று Super market இல் இரண்டரைக் கிலோ வெங்காயம் 89 சென்ற்ஸுக்கு  வாங்கியிருந்தேன். “எதுக்கு இவ்வளவு? “ என்று வீட்டில் ஒரு பார்வை பார்த்த போது, “சீனிச்சம்பல் செய்யலாம்என்ற சமாளிப்போடு தப்பிவிட்டேன். சீனிச்சம்பலுக்கு மாசிக்கருவாடு போட்டால் அதன் ருசியே தனி. அந்த நினைவுதான் இப்பொழுது எனக்கு வந்தது.

 “தம்பி மாசிக்கருவாடு இருக்கே?”

 “மாசிக்கருவாடோ? முடிஞ்சுது எண்டு நினைக்கிறன்சொல்லிக் கொண்டே நிமிர்ந்து என் முகத்தைப் பார்த்த முதலாளிக்கு என்னவோ மனதில் சட்டென்று தோன்றி இருக்க வேண்டும். “பொறுங்கோ கீழே இருக்குதோ எண்டு பாத்திட்டு வாறன்

 போனவர் ஒரு கொர்லிக்ஸ் போத்தலுக்குள் இருந்த மாசிக்கருவாட்டு துகள்களுடன் வந்தார். “உங்களுக்கு அதிர்ஷ்டம் இருக்கண்ணை.ஒரு போத்தல் இருக்கு

 எனக்கான அதிர்ஷ்டம்  போத்தலுக்குள் இருந்த மாசிக் கருவாட்டுத் துகள்களுக்குள் அடங்கிபோனதில் சற்று கவலை இருந்தாலும் சிரித்துச் சமாளித்தேன்.

 முதலாளி மேசையில் வைத்த எனதுஅதிர்ஷ்டமாசிக் கருவாட்டு போத்தலை எதேச்சையாக நான் பார்த்த போதுதான் அது சொன்னது, use before 08.11.2016 என்று.

 “தம்பி கருவாடு செத்து ஒரு வருசத்துக்கு மேலாச்சுது போலை

 “செத்தால்தான் அண்ணை கருவாடு. உயிரோடு இருந்தால் அது மீன்முதலாளி அல்லவா. பேச்சு அந்த மாதிரி.

 “டேற் முடிஞ்சுது. 2016 எண்டு போட்டிருக்கு

 “ஊரிலை கருவாட்டுக்கு expiry date இருக்கே? இஞ்சை எல்லாத்துக்கும் ஒரு  date  போடுவாங்கள். சாமான் பழுதில்லை நம்பிக்கையா கொண்டு போங்கோ. இதுன்ரை விலை ஆறு யூரோ. உங்களுக்கு நான் நாலு யூரோ போடுறன்

 மலிவு வெங்காயத்துக்கே வீட்டில் ஒரு பார்வை கிடைச்சிருக்கு. மாசிக்கருவாட்டுக்காக இன்னொரு பார்வையை  எதுக்கு வில்லங்கத்துக்கு வாங்குவான்?

 “வேண்டாம் தம்பி

 முதலாளிக்கு சற்று கோபம் வந்திருக்க வேண்டும். அவரது பார்வை மாறியிருந்தது.

 “நீங்கள்  expiry date முடிஞ்சதை கடையிலை வைச்சிருக்கிறதாலை பிரச்சினைகள் வரலாம். கவனம்என்றேன்.

 “பிராங்போர்ட்டிலை வேண்டின இடத்திலை இதைக் கொண்டுபோய் திருப்பிக் குடுத்தால் புது லேபிள் ஒட்டி புது expiry date அடிச்சுத் தருவாங்கள். அப்ப சிலநேரம் விலை ஏழு யூரோவா இருக்கும்சொல்லிக் கொண்டே மாசிக் கருவாட்டுப் போத்தலை பத்திரமாக தன் மைசைக்குக் கீழே வைத்தார்.

 தமிழ்க்கடையை விட்டு வெளியே வரும் போதுஇந்த வெங்காயத்தை என்ன செய்யலாம்?” என்று யோசித்துக் கொண்டே வந்தேன்.

 கவி அருணாசலம் 

01.01.2018

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Kavi arunasalam said:

 “தேங்காய் எப்பிடி நல்லதோ?” என்று ஒரு தடவை கடை முதலாளியிடம் நான் கேட்ட போது, “அது, அவனவனுக்குப் பெண்சாதி வாய்ச்ச மாதிரிஎன்று அவர் ஒரு அற்புதமான பதிலைத்  தந்து என்னைக் கவலைப்பட வைத்து விட்டார்

இன்னுமொரு அருமையான அனுபவப் பகிர்வு..!

இப்பவெல்லாம்....தேங்காயை உடைச்சுத் தான் வாங்கிறது! 

அண்ணை...தேங்காய் முடி போனால் கெதியாய்ப் பழுதாகிப் போடும் எண்டு கடைக்காரர் கதை விட்டுப் பார்த்தவர் தான்..!

அண்ணை....இல்லையெண்டால்...நான் கடையை மாத்த வேண்டி வரும் எண்டு சொன்ன பிறகு...முதலாளி அடக்கி வாசிக்கிறார்!

தொடர்ந்தும் எழுதுங்கள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, Kavi arunasalam said:

செத்துப்போன கருவாடு

 .... தமிழ்க்கடை என்றால் ஊரின் நினைவு வரவேண்டாமோஊரில் கிராமங்கள் தோறும் உள்ள பெட்டிக்கடைகளில், கோபால் பற்பொடி, தேயிலை, பொரித்த கடலைப் பருப்பு, எள்ளு உருண்டை போன்ற பல பொருட்கள் பக்கெற் பக்கெற்றாகத் தொங்குமே ஏறக்குறைய அதே பாணியில்தான் இங்கே ஐரோப்பாவில் பல தமிழ்க் கடைகள் தங்களை வடிவமைத்து இருக்கின்றன.

 கடைக்கு உள்ளே போனால், முதலாளி யாருடனோ தொலை பேசியில் உரையாடிக் கொண்டிருப்பார். அல்லது கைத்தொலைபேசியை நோண்டிக் கொண்டிருப்பார். இதில் அவரது தொலைபேசி உரையாடல் இருக்கே அது எப்போதுமே full volume தான்.

கிராமங்களில் மளிகைக் கடைகள் எப்படியிருக்குமென பழைய ஞாபகத்தை தூண்டியது இப்பதிவு..:)

 

1 hour ago, Kavi arunasalam said:

...

 “நீங்கள்  expiry date முடிஞ்சதை கடையிலை வைச்சிருக்கிறதாலை பிரச்சினைகள் வரலாம். கவனம்என்றேன்.

 “பிராங்போர்ட்டிலை வேண்டின இடத்திலை இதைக் கொண்டுபோய் திருப்பிக் குடுத்தால் புது லேபிள் ஒட்டி புது expiry date அடிச்சுத் தருவாங்கள். அப்ப சிலநேரம் விலை ஏழு யூரோவா இருக்கும்சொல்லிக் கொண்டே மாசிக் கருவாட்டுப் போத்தலை பத்திரமாக தன் மைசைக்குக் கீழே வைத்தார்.

 கவி அருணாசலம்.

 

ஏமாற்றத்தோடு கடையைவிட்டு வெளியே வந்த கவிக்கு, ஒரு மாசிக்கருவாடு போத்தல் உடனடியாக 'புது லேபில்' ஒட்டி டெலிவரி செய்ய கடைக்காரர் ஏற்பாடு செய்துள்ளார்.

image.jpg

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தங்கத்தை வாங்கி கொண்டு கொடுத்தாலும் குறை சொல்லும் ஆட்கள் பெண்கள் கருவாடோடு தலை தப்பியது என்று நினைத்துக்கொள்ளுங்கள் இல்லாட்டா உங்கள் மீது டெஸ்ட்டிங் நடந்திருக்கும் 

அனுபவபகிர்வு போல் இருக்கிறது வாழ்த்துக்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Kavi arunasalam said:

உள்ளே இருப்பதை கண்டு கொள்ளக் கூடாது என்பதற்காகத்தான் தேங்காயின் ஓடு இவ்வளவு கடினமாக இருக்கிறதோ என்று நான் சில சமயங்களில் நினைப்பதுண்டு

தேங்காய் தோப்பில் பிறந்து வளர்ந்த நாங்களே கூடாத தேங்காயை வாங்கிக் கொண்டு வந்து வீட்டில் உடைக்க அது மணக்க

என்ன தோப்பு மாப்பிள்ளை இந்த தேங்காயை வாங்கி கொண்டு வந்திருக்கிறியள்!என்று மனைவி கேட்கும் போது ரொம்ப அசடு வழியும்.

5 hours ago, Kavi arunasalam said:

தமிழ்க்கடையை விட்டு வெளியே வரும் போதுஇந்த வெங்காயத்தை என்ன செய்யலாம்?” என்று யோசித்துக் கொண்டே வந்தேன்.

வெண்காயத்திற்கு காலாவதி இல்லாத வரை சந்தோசமே.

அனேகமான தமிழ்கடைகளில் புதிய புதிய லேபல்கள் தயாராக வைத்திருப்பார்களோ?

இங்கே ஒரு அடிக்கு மேல் பனி கொட்ட போகுது என்றால் எல்லாகடை அலுமாரிகளும் வெறுமையாக கிடக்கும்.அந்த நேரம் சனம் காலாவதி திகதி எல்லாம் பார்த்துக் கொண்டிராது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பல கடைகளில தாங்களே லேபிளை மாத்திறாங்கள் எண்டு கேள்வி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Kavi arunasalam said:

 தமிழ்க்கடையை விட்டு வெளியே வரும் போதுஇந்த வெங்காயத்தை என்ன செய்யலாம்?” என்று யோசித்துக் கொண்டே வந்தேன்.

மாசிக்கருவாடு போடாமலும் சீனிச்சம்பல் செய்யலாம் எண்டதை இந்த இடத்தில்லை சொல்லிக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, மெசொபொத்தேமியா சுமேரியர் said:

பல கடைகளில தாங்களே லேபிளை மாத்திறாங்கள் எண்டு கேள்வி.

கேள்விப்பட்டனீங்களோ இல்லாட்டி சொந்த அனுபவமோ? ஏனெண்டால் நீங்களும் கொத்தாரும்  கொஞ்சநாள் கடை கல்லாப்பெட்டியெண்டு புடுங்குப்பட்டு திரிஞ்சனீங்கள் எல்லே...:grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அநுபவப்பகிர்வு மிக நன்றாக சொல்லியுள்ளீர்கள்.  காலவதியான திகதிகளுடன் பல பொருட்கள் தமிழ் கடைகளில் இருப்பதை அவதானித்து வாங்க இப்பொழுது பழகி விட்டோம். மூடியில் சீல் பண்ணி இருக்காத எந்தப் பொருளையும் வாங்குவது நல்லதல்ல. மீன் செத்தால்தானே கருவாடு. பதிர்வுக்கு நன்றி.
மனைவி அமைவதெல்லம் இறைவன் கொடுத்த வரம்
நல்ல தேங்காய் அமைவதெல்லாம் வாங்குபவர் பெற்ற வரம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 “ஊரிலை கருவாட்டுக்கு expiry date இருக்கேஇஞ்சை எல்லாத்துக்கும் ஒரு  date  போடுவாங்கள்சாமான் பழுதில்லை நம்பிக்கையா கொண்டுபோங்கோஇதுன்ரை விலை ஆறு யூரோஉங்களுக்கு நான் நாலு யூரோ போடுறன்

 expiry   date   அண்மித்த  பொருட்க்கள் தான் மலிவு  விலையில் வரும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, Kavi arunasalam said:

பிரேஸில் நாட்டில், குருவிகள் சோயாச் செடிகளை அழிப்பதில் இருந்து பாதுகாப்பதற்காக செடிகளின்மேல் தெளிக்கப்படும் இராசயன மருந்து மிகவும் ஆபத்தானது. இந்த மருந்தின் தாக்கம் சோயாவில் இருந்து தயாரிக்கும் ´Tofu’ விலும் கண்டறியப் பட்டிருக்கிறது என்பது சமீபத்திய ஆய்வு அறிக்கை. அப்படியாயின் புடலங்காய், பயித்தங்காய், முருங்கைக்காய், பாவற்காய் என்று பிளேன் ஏறி எங்களிடம் வந்து சேரும் மரக்கறிகளுக்கு என்ன  உரங்களைப் போட்டிருப்பார்கள்? அதைப் பற்றியெல்லாம் எங்களுக்கு ஏது கவலை.

எங்கள் சாப்பாடுகளே மருந்தாகி இருந்த காலம் உண்டு , இங்கு உணவே நஞ்சாகும் காலம் நாக்கு தினமும் சுவையாக சாப்பிடனும் என்று அலைய வஞ்சகமில்லாமல் கொட்டி கொள்கிறம் .விளைவு ஊரில் இருந்து வரும்போது கின் என்ற உடம்பு உள்ளே கறையான் அரித்த வீடாகி விட்டுது . 

இங்கு வரும் அநேக காய்கறிகளின் தாயகம் இந்தியா தான் அங்கு அவர்களுக்கே விளைபொருள் காணாது . காரணம் அவ்வளவு மக்கள் பெருக்கம் . இரண்டாம் உலகப்போரில் நஞ்சு ஆக தயாரிக்கப்பட்ட Endosulfan எனும் நஞ்சு இந்தியாவில் மிக   குறைந்த விலை கிருமி நாசினியாக உபயோகிக்கிரார்கள். இதை பலவருடம்களுக்கு முன்பே வளர்ந்த நாடுகள் விவசாயத்தில் உபயோகிப்பதை தடை செய்து விட்டன . ஆனால் துரதிஸ்டவசமாக தமிழகத்தில் இதன் தயாரிப்பை திமுக அரசியல் வாதியின் செல்வாக்கில் அவருக்கு அந்த நிறுவன பங்குகள் 70 வீதத்துக்கு மேல் உள்ளது .தமிழகத்தில் அதன் உபயோகம் கட்டுபாடு இல்லாமல் ஊக்குவிக்கபடுகிறது . விளைவு இங்கு ஐரோப்பிய யூனியனில் இருந்து பலமுறை எச்சரிக்கை கொடுக்கபட்டு Endosulfan எண்டோ சல்பன் அதிகளவில் செறிவாக காணபட்ட கறிவேப்பிலை தடை செய்யபட்டது . விளைவு பல ஏக்கர்களில் கறிவேப்பிலை விவசாயம் முடங்கியது அதன்பின் Endosulfan உபயோகிக்காமல் ஓர்கானிக் கறிவேப்பிலை என்று   அனுப்பினார்கள் இங்கும் அனுமதித்தார்கள் திடிர் என சோதனை செய்த போது Endosulfan உபயோகித்த கறிவேப்பிலை காணப்பட இங்குள்ள Port Health Authorities எந்த சமரசத்துக்கும் இடமில்லாமல் கறிவேப்பிலை விற்பதே தண்டனைக்குரிய குற்றமாக்கி விட்டார்கள்.

ஊரில் கொல்லையில் நிற்க்கும் antibiotics அதாங்க நோய் எதிர்ப்பு மருந்து நஞ்சாகிய  கதை இன்னும் வெண்டி,    பாவற்காய் , மாம்பழம் நிறைய கதைகள்   இருக்கு .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, பெருமாள் said:

எங்கள் சாப்பாடுகளே மருந்தாகி இருந்த காலம் உண்டு , இங்கு உணவே நஞ்சாகும் காலம் நாக்கு தினமும் சுவையாக சாப்பிடனும் என்று அலைய வஞ்சகமில்லாமல் கொட்டி கொள்கிறம் .விளைவு ஊரில் இருந்து வரும்போது கின் என்ற உடம்பு உள்ளே கறையான் அரித்த வீடாகி விட்டுது . 

இங்கு வரும் அநேக காய்கறிகளின் தாயகம் இந்தியா தான் அங்கு அவர்களுக்கே விளைபொருள் காணாது . காரணம் அவ்வளவு மக்கள் பெருக்கம் . இரண்டாம் உலகப்போரில் நஞ்சு ஆக தயாரிக்கப்பட்ட Endosulfan எனும் நஞ்சு இந்தியாவில் மிக   குறைந்த விலை கிருமி நாசினியாக உபயோகிக்கிரார்கள். இதை பலவருடம்களுக்கு முன்பே வளர்ந்த நாடுகள் விவசாயத்தில் உபயோகிப்பதை தடை செய்து விட்டன . ஆனால் துரதிஸ்டவசமாக தமிழகத்தில் இதன் தயாரிப்பை திமுக அரசியல் வாதியின் செல்வாக்கில் அவருக்கு அந்த நிறுவன பங்குகள் 70 வீதத்துக்கு மேல் உள்ளது .தமிழகத்தில் அதன் உபயோகம் கட்டுபாடு இல்லாமல் ஊக்குவிக்கபடுகிறது . விளைவு இங்கு ஐரோப்பிய யூனியனில் இருந்து பலமுறை எச்சரிக்கை கொடுக்கபட்டு Endosulfan எண்டோ சல்பன் அதிகளவில் செறிவாக காணபட்ட கறிவேப்பிலை தடை செய்யபட்டது . விளைவு பல ஏக்கர்களில் கறிவேப்பிலை விவசாயம் முடங்கியது அதன்பின் Endosulfan உபயோகிக்காமல் ஓர்கானிக் கறிவேப்பிலை என்று   அனுப்பினார்கள் இங்கும் அனுமதித்தார்கள் திடிர் என சோதனை செய்த போது Endosulfan உபயோகித்த கறிவேப்பிலை காணப்பட இங்குள்ள Port Health Authorities எந்த சமரசத்துக்கும் இடமில்லாமல் கறிவேப்பிலை விற்பதே தண்டனைக்குரிய குற்றமாக்கி விட்டார்கள்.

ஊரில் கொல்லையில் நிற்க்கும் antibiotics அதாங்க நோய் எதிர்ப்பு மருந்து நஞ்சாகிய  கதை இன்னும் வெண்டி,    பாவற்காய் , மாம்பழம் நிறைய கதைகள்   இருக்கு .

உந்தப்பிரச்சனை அவுஸ்திரெலியாவில் இல்லை. சிட்னியில் பல தமிழ் வீடுகளில் கறுவெப்பமரம், கீரை ,மாமரம் எல்லாம் இருக்கிறது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு சிட்னியில் சில கடைகளில்( உ+ம் ஆர்த்தி ஸ்பைஸ் பென்டில்கில்) மன்னாரில் உள்ள "சிவனருள் இல்லம்"  அறக்கட்டளையில் இருந்து தயாரிக்கப்படும் பொருள்கள் விற்பனை செய்யப்படுகின்றன. விலையும் மலிவு. வாங்கிறதினால் அங்கு ஊரில் உள்ளவர்களுக்கு உதவி செய்தோம் என்ற திருப்தியுமில்லோ கிடைக்குது.

Link to comment
Share on other sites

தமிழ்க்கடையை விட்டு வெளியே வரும் போது "இந்த வெங்காயத்தை என்ன செய்யலாம்?" என்று யோசித்துக் கொண்டே வந்தேன்.

animated-laughing-image-0175.gif

"இந்த வெங்காயத்தை (கடைக்காரனை) என்ன செய்யலாம்?"

 

ஐயா, கட்டுரை அருமை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, ராசவன்னியன் said:

ஏமாற்றத்தோடு கடையைவிட்டு வெளியே வந்த கவிக்கு, ஒரு மாசிக்கருவாடு போத்தல் உடனடியாக 'புது லேபில்' ஒட்டி டெலிவரி செய்ய கடைக்காரர் ஏற்பாடு செய்துள்ளார்.

கொஞ்சம் அவசரப்பட்டு ஓடர் பண்ணிட்டீங்கள் ராசவன்னியன், கடையிலை வாங்கினால் நாலு யூரோதானே. புது லேபிள் ஓட்டினால் காசு கூடக் கேப்பாங்களே.

அதுசரி பழைய ரெலிபோனையே பிடிச்சு தொங்கிட்டு இருக்கிறீங்களே, எப்போ புதுசு வாங்கப் போறீங்கள்?

 
18 hours ago, ஈழப்பிரியன் said:

தேங்காய் தோப்பில் பிறந்து வளர்ந்த நாங்களே கூடாத தேங்காயை வாங்கிக் கொண்டு வந்து வீட்டில் உடைக்க அது மணக்க

என்ன தோப்பு மாப்பிள்ளை இந்த தேங்காயை வாங்கி கொண்டு வந்திருக்கிறியள்!என்று மனைவி கேட்கும் போது ரொம்ப அசடு வழியும்.

ஈழப்பிரியன், தேங்காய்த் தோப்பு ஆள், தேங்காய் வாங்கி ஏமாந்து வீட்டிலை வாங்கிக் கட்டி முகத்தில் எண்ணை வழியிறதைப் பார்த்தால் மனசு கொஞ்சம் ஆறுதலாக இருக்கும்

 
12 hours ago, குமாரசாமி said:

மாசிக்கருவாடு போடாமலும் சீனிச்சம்பல் செய்யலாம் எண்டதை இந்த இடத்தில்லை சொல்லிக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன்.

 

கடமைஉணர்வோடு தகவல் தந்ததற்கு, நன்றி குமாரசாமி.

 “இந்த வெங்காயத்தை என்ன செய்யலாம்?” என்று என்னை நானே நொந்து கொண்டேன் என்றொரு கருத்தும் கொள்ளலாம் அல்லது...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கந்தப்பு, இதற்கும் கட்டுரைக்கும் தொடர்பில்லை, ஆனாலும் கேட்காமல் இருக்க முடியவில்லை. “அன்னையைத் தமிழ்வாயால் 'மம்மி' என்றழைத்தாய்.. வெள்ளைக்காரன்தான் உனக்கு அப்பனா?”

என்று   போட்டிருக்கிறீர்கள். ‘ அன்னை’ என்பது தமிழ்வார்த்தைதானா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, Kavi arunasalam said:

கந்தப்பு, இதற்கும் கட்டுரைக்கும் தொடர்பில்லை, ஆனாலும் கேட்காமல் இருக்க முடியவில்லை. “அன்னையைத் தமிழ்வாயால் 'மம்மி' என்றழைத்தாய்.. வெள்ளைக்காரன்தான் உனக்கு அப்பனா?”

என்று   போட்டிருக்கிறீர்கள். ‘ அன்னை’ என்பது தமிழ்வார்த்தைதானா?

"அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்." -கொன்றை வேந்தன்  - ஔவையார்   
"தமிழா! நீ பேசுவது தமிழா? , அன்னையைத் தமிழ்வாயால் 'மம்மி’ என்றழைத்தாய்…அழகுக் குழந்தையை ‘பேபி’ என்றழைத்தாய்… - காசி ஆனந்தன்
அன்னை, பெயர்ச்சொல். (பெற்ற) தாய்;அம்மா · (எ. கா.) அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம். மரியாதைக்குரிய வேறு பெண்களையும் இச் சொல்லால் குறிப்பதுண்டு.-அன்னை பூபதி   

 நான் தமிழ் படித்த பண்டிதனும் அல்ல.  யாராவது பண்டிதர்கள் தான் இதற்குப்பதில் சொல்லவேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kavi arunasalam said:

கொஞ்சம் அவசரப்பட்டு ஓடர் பண்ணிட்டீங்கள் ராசவன்னியன், கடையிலை வாங்கினால் நாலு யூரோதானே. புது லேபிள் ஓட்டினால் காசு கூடக் கேப்பாங்களே.

அதுசரி பழைய ரெலிபோனையே பிடிச்சு தொங்கிட்டு இருக்கிறீங்களே, எப்போ புதுசு வாங்கப் போறீங்கள்?

"ஓல்ட் ஈஸ் கோல்ட்" கேள்விப்பட்டதில்லையா..சார்..? :) Planning to buy 8 soon.

தங்களின் அனுபவ பதிவுகளும், நகைச்சுவையுடனான எழுத்தாற்றல் மிக நன்றாக உள்ளது..!

கனசடுதியில் வந்து போகும் தங்களின் 'யாழ் பிரசன்னம்' பற்றிய தொகுப்பு, யூடூபில் வெளியாகியுள்ளதே...! கவனித்தீர்களா...? :grin:

 

 

.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப கடைகளில் மிஞ்சும் மரக்கறிகளை வெட்டி பலதும் கலந்து பக்கட்டுகளில் போட்டு ஒரு ஈரோவுக்கு கொடுக்கிறார்கள். தை மாதம் மூன்று ஈரோவுக்கு வித்த காலண்டர் இப்ப இலவசமாய் கிடைக்குது. வியாபாரத்தில் இதெல்லாம் சகஜம். எமக்கும் வேறு தெரிவுகள் இல்லையே.அடுத்த தலைமுறையை நினைத்தால் மிகவும் கவலையாய் இருக்கு...!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எத்தினை லேபல்களை மாத்தி மாத்தி ஒட்டினாலும் எங்கள் உடம்பு தாங்கும்! இரும்பைத் தின்று கஷாயம் குடிப்பவர்கள் அல்லவா நாங்கள்! இத்துப்போன கருவாட்டிலும் அழுகிப்போன வெங்காயத்திலும் செய்த சீனிச் சம்பல் சிம்பிளாக செரிக்கும்?

Link to comment
Share on other sites

நல்லதொரு அனுபவ கட்டுரை

தமிழ் கடைகளில் வாங்கி வாங்கி சாப்பிட்டு உடம்பு அதுக்கு ஏற்றமாதிரி இயைபாக்கம் ஆகிட்டுது. உண்மை நிலவரம் தெரிந்தாலும் இனி உணவுப் பழக்கத்தை மாத்தவும் முடியாது. சனி ஞாயிறுகளில் வல்லாரையும், முருங்கக் காயும், ஊர் கொடுவாவும் சாப்பிடாமல் எப்படி இருக்க முடியும்?

இங்கு கடந்த வாரம் நடந்த ஒரு விடயத்தை சொல்லாலம் என நினைக்கின்றேன்.

இங்கு இரா  சுப்பர் மார்கெட், ஸ்பைஸ் லேண்ட் (Spiceland)  என்ற இரண்டு கொஞ்சம் பெரிய தமிழ் கடைகள் இருக்கு. இவை இரண்டும் புதிய கிளைகளை திறக்க திறக்க சின்ன தமிழ் கடைகள் எல்லாம் பூட்டிக் கொண்டு போக வேண்டி வந்தது. சனம் எக்கச்சக்கமாக வரும் இவற்றுக்கு.  மார்க்கம் நகரில் இவற்றுக்கு அருகில் No Frills என்ற ஒரு பெரிய Grocery கடை இருக்கு (கனடா முழுதும் உள்ளனர் ). இந்த மார்க்கம் கடையினை நடத்த தமிழர் ஒருவர் அண்மையில்  வாங்கினார். தமிழ் கடைகளுக்கு பழக்கப்பட்ட எம் சனம் இங்கு அவ்வளவாக போகவில்லை.  போன வாரம் என்ன செய்தார் என்றால் 'ஊர் விளை மீன்' வாங்கி Sale போட்டார். மற்ற தமிழ் கடைகளில் ஒரு இறாத்தல் 7 dollars இற்கு விற்கப்படும் போது இங்கு 5 dollars இற்கு விற்றார் (அதிக பட்சம் 5 Lb தான் வாங்க முடியும்)..ரேடியோவிலும் விளம்பரம் கொடுத்தார்.   சனம் அள்ளுப்பட்டு போய் வாங்கினார்கள். புருஷன் 5 இறாத்தல் மனுசி 5 இறாத்தல் என்று வாங்கி  குவித்தனர். அத்துடன் மிளகாய் தூள், பப்படம், தமிழர்களின் மரக்கறிகள், தேங்காய் என்று நிறைய தமிழர்களை இலக்கு வைத்து விற்றனர். அங்கு வாங்கி முடிஞ்சு இரா சூப்பர் மார்க்கட் பக்கம் எட்டிப் பார்க்க மீன் பக்கம் ஒரு சனமும் இல்லை.

இன்றும் Sale போடுகின்றார்கள் என்று கேள்வி. நிழலியை 6 மணிக்கு அங்கு காணலாம் இன்று

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் ஒரு தடவை மட்டன் கொத்து சுட சுட வாங்கி வந்து நல்லா மென்று மென்று, அரைத்து அரைத்து, சுவைத்து சுவைத்து சாப்பிட்டேன், அடடா என்ன ருசி என்ன ருசி.. இடையிலே ஒரு துண்டு நல்ல மென்மையாக கடிபட்டிச்சு , குடலும் சேர்த்து அடிச்சிருக்கிறானுகள்போல என்று நினைத்து மகிழ்ச்சி டபுள் மடங்காகி விடாமல் சப்பினேன்,

ஒரு முடிவுக்கு வருகுதில்லையே எண்டு  வெளியில எடுத்து பார்த்தேன் நான் ரசித்து நீண்டநேரம் வாய்க்குள் இடம் வலமாக  நகர்த்தி நகர்த்தி சுவைத்தது ஒரு Finger cot, குடல் குழம்போடு சேர்ந்ததால் குடல் கலரிலயே இருந்துது,

ஆட்டுகுடல் என்று நினைத்து ருசித்த என்ர குடலே ஒரு நிமிஷம் ஆடிபோச்சு, ஒரு மணிநேரம் வாந்தியாகி ஆரோக்கியமே நாறி போச்சு, 

அதேபோல ரின் மீன் ஒரு தடவை வாங்கி வந்தேன்,சம்பல் போடலாம் என்று , ரின்னில் Expiration date- இருக்கல்ல, வீட்டில் வந்து ரின்னை திறந்தபோது உள்ளே தண்ணி விளாம்பள கலரில் இருந்தது மீன் துண்டுகள் அனைத்துமே கறள் பிடிச்ச கலரில் இருந்துது, கடைசியில் வெறும் பாணை , ஊர்ல நாய் பழஞ்சீலையை இழுத்தமாதிரி இழு இழு எண்டு இழுத்து சாப்பிட்டு விட்டு வேலைக்கு போனது எழுத்தில் சொல்லிமுடிக்க முடியாத  துயரம்.. 

கவி அருணாச்சலம் அவர்களின் பதிவு சுய ஆக்கம் மட்டுமல்ல, ஒவ்வொருவரும் அனுபவித்த சொந்த சோகம்,

உங்களின் எழுத்தோடு சேர்ந்த எச்சரிக்கையுணர்வை தூண்டும் ஆக்கத்துக்கு நன்றி!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நிழலி said:

நல்லதொரு அனுபவ கட்டுரை

தமிழ் கடைகளில் வாங்கி வாங்கி சாப்பிட்டு உடம்பு அதுக்கு ஏற்றமாதிரி இயைபாக்கம் ஆகிட்டுது. உண்மை நிலவரம் தெரிந்தாலும் இனி உணவுப் பழக்கத்தை மாத்தவும் முடியாது. சனி ஞாயிறுகளில் வல்லாரையும், முருங்கக் காயும், ஊர் கொடுவாவும் சாப்பிடாமல் எப்படி இருக்க முடியும்?

இங்கு கடந்த வாரம் நடந்த ஒரு விடயத்தை சொல்லாலம் என நினைக்கின்றேன்.

இங்கு இரா  சுப்பர் மார்கெட், ஸ்பைஸ் லேண்ட் (Spiceland)  என்ற இரண்டு கொஞ்சம் பெரிய தமிழ் கடைகள் இருக்கு. இவை இரண்டும் புதிய கிளைகளை திறக்க திறக்க சின்ன தமிழ் கடைகள் எல்லாம் பூட்டிக் கொண்டு போக வேண்டி வந்தது. சனம் எக்கச்சக்கமாக வரும் இவற்றுக்கு.  மார்க்கம் நகரில் இவற்றுக்கு அருகில் No Frills என்ற ஒரு பெரிய Grocery கடை இருக்கு (கனடா முழுதும் உள்ளனர் ). இந்த மார்க்கம் கடையினை நடத்த தமிழர் ஒருவர் அண்மையில்  வாங்கினார். தமிழ் கடைகளுக்கு பழக்கப்பட்ட எம் சனம் இங்கு அவ்வளவாக போகவில்லை.  போன வாரம் என்ன செய்தார் என்றால் 'ஊர் விளை மீன்' வாங்கி Sale போட்டார். மற்ற தமிழ் கடைகளில் ஒரு இறாத்தல் 7 dollars இற்கு விற்கப்படும் போது இங்கு 5 dollars இற்கு விற்றார் (அதிக பட்சம் 5 Lb தான் வாங்க முடியும்)..ரேடியோவிலும் விளம்பரம் கொடுத்தார்.   சனம் அள்ளுப்பட்டு போய் வாங்கினார்கள். புருஷன் 5 இறாத்தல் மனுசி 5 இறாத்தல் என்று வாங்கி  குவித்தனர். அத்துடன் மிளகாய் தூள், பப்படம், தமிழர்களின் மரக்கறிகள், தேங்காய் என்று நிறைய தமிழர்களை இலக்கு வைத்து விற்றனர். அங்கு வாங்கி முடிஞ்சு இரா சூப்பர் மார்க்கட் பக்கம் எட்டிப் பார்க்க மீன் பக்கம் ஒரு சனமும் இல்லை.

இன்றும் Sale போடுகின்றார்கள் என்று கேள்வி. நிழலியை 6 மணிக்கு அங்கு காணலாம் இன்று

என் மனதை.....எப்போதும் கொதி நிலைக்குக் கொண்டு சென்று விடுவதில்....இந்தத் தமிழ்க் கடைகளின் பங்கு அளப்பரியது!

விடலைப்பருவத்தில் ஒரு உறவினரின் கடையில் நின்றபோது...ஒரு நள்ளிரவு நேரத்தில்...ஒரு சிங்கள் நோனா.,..தனது அழுகின்ற குழந்தையைத் தோளில் சுமந்த படி...கடைக்கு வந்தார்! அவரைப் பார்த்ததுமே..மிகவும் வறுமையான நிலையில் வாழ்பவர் போலத் தெரிந்தது! அவர் முலைகளில் பாலே இல்லைப்போல தோன்றியது! குழந்தையைச் சமாதானப் படுத்துவதற்காக ஒரு றப்பர் சூப்பி ஒன்றை வாங்கத் தான் வந்திருந்தார்! அவரிடம்...ஐம்பது சதம் மட்டும் தான் இருந்தது! சூப்பியின் வழமையான விலையும் அப்போது அது தான்! குழந்தை அழுவதைக் கண்ட கடைச் சிப்பந்தி...சூப்பியின் விலை...இரண்டு ரூபாய் என்று சொல்ல...நோனாவிடம் காசில்லை! ஆனால் அந்த நேரம் வேறு கடைகளும் திறந்திருக்கவில்லை!அதைப் பார்த்துக் கொண்டிருந்த...அந்தோனியார் கோவிலுக்கு முன்னால்...பூ வித்துக் கொண்டிருந்த ஒரு முதியவர்...இரண்டு ரூபாய்களைக் கொடுத்து...அந்த சூப்பிய வாங்கிக் குழந்தையிடம் கொடுக்க....அந்தக் குழந்தையின் முகத்தில் தோன்றிய சிரிப்பையும்....அந்த நோனாவின் முகத்தில் தோன்றிய நன்றியுணர்வையும் எழுத்தில் வடிக்க இயலாது!

அப்போது நான் கடைக்காரரிடம் கேட்டேன்! ஏன்...நீங்கள் ஐம்பது சதத்துக்கே கொடுத்திருக்கலாமே என்று..!

அதற்கு அவர் சொன்ன பதில்   என்னால் இன்று வரை மறக்க முடியாதது! 

தம்பி...நீங்கள் நிண்ட படியால தான்...இரண்டு ரூபாய் சொன்னனான்! இல்லாவிட்டால் எப்படியும் ஒரு அஞ்சு ரூபா கறந்திருப்பன்!

அடுத்த நாள்....பொன்னம்பலவாணேசர் கோவிலில்....திருநீறும்...சந்தனமும்...போட்ட படி....பக்தியில் உருகிய நிலையில் அவரைக் கண்ட போது....தலையாட்டக் கூட எனக்கு மனம் வரவில்லை@

விள மீனை...ஐந்து டொலருக்கு விற்கும் அவருக்கு...நிச்சயம் இருபத்தைந்து வீதமாவது லாபம் இருக்கும் என்று வைத்துக் கொண்டாலும்...மீனின் விலை

நாலு டொலர் தான் வரும்! அதையே ஏழு டொலருக்கு...விற்றால்..மூன்று டொலர் லாபம் வரும்! அதாவது..எழுபத்தைந்து வீத லாபத்தில் விற்கிறார்கள்!இவர்களில் பலர் காசு மட்டும் தான் வாங்குவார்கள்! அதாவது விற்பனை வரியோ...வருமான வரியோ இவர்கள் கட்டுவது கிடையாது! அநேகமாக அகதி நிலையில் உள்ள..வாய் திறக்கவியலாதவர்களைத் தான் வேலைக்கும் வைத்திருப்பார்கள்! ஏறத்தாள லண்டனில்..பட்டேல்களின் வியாபார முறை தான் இவர்களதும்! இவர்களது வர்த்தக நிலையங்களின் இலாப நட்டக் கணக்குகள் செய்வதில்...கொஞ்சக் காலம் ஈடு பட்ட படியால்....இந்தப் பெரிய மனிதர்களின் கணக்குகள்..அத்து படி!
இதை விடவும் அநியாயம் என்னவென்றால்...இவர்கள் தான் எமது சமுதாயத்தைப் பிரதி பலிக்கும் முக்கியத்தர்களும் ஆவர்!  பனியிலும்...பாலை வனங்களிலும், நல்ளிரவுகளிலும் வேலை செய்து...வேலைக்கேற்ற கூலி கிடைக்காத தமிழர்கள் நாம்! இப்படி உழைக்கும் பணம்...இப்படியானவர்களிடம் தான்...இறுதியில் சங்கமிக்கிறது! எனது மகளுக்கு..இளமையில் பரத நாட்டியம் படிப்பித்த படியால்...அண்மையில் ஒரு அரங்கேற்றத்துக்குப் போக ஆசைப்பட்டாள்! நானும், மனுசியும் வேறு அலுவல் இருந்த படியால்...அவளே போய் ஒரு 'சல்வார் கமீஸ்' வாங்கி வந்தாள்! அதன் விலை.....இருநூற்று ஐம்பது டொலர்கள்! இந்தியாவில் அதன்   விலை...ஐம்பது டொலர்களுக்குள் தான் இருக்கும் என நினைக்கிறேன்!
எங்கள் பார்வையின் பொருளைப் புரிந்து கொண்ட அவள்....நானும் உங்களைப் போல...முன்னூற்றி ஐம்பது டொலரில்...இருந்து...இருநூற்றி ஐம்பது டொலர் வரை...பார்கயின் பண்ணித் தான் வாங்கினேன் என்றாள்!

கடைக்காரர் நிச்சயம்...கொடுப்புக்குள்...சிரித்திருப்பார்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, கந்தப்பு said:

அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்." -கொன்றை வேந்தன்  - ஔவையார்   
"தமிழா! நீ பேசுவது தமிழா? , அன்னையைத் தமிழ்வாயால் 'மம்மி’ என்றழைத்தாய்

கந்தப்பு, நானும் உங்களைப் போல்தான் பண்டிதன் இல்லை.

ஆனாலும்அன்னைஎன்ற சொல் இஸ்லாமியர்கள் தமிழ்நாட்டுக்கு கொடுத்த சொல் என்பது மட்டும் தெரிகிறது.

காசி ஆனந்தன் பெரிய கவிஞர். அடியேன் சிறியேன் யாருடனும் மோத நான் விரும்பவில்லை.

 

1968இல் டீச்சம்மா என்றொரு திரைப்படம் வந்தது. அந்தப் படத்தில் கண்ணதாசன் பாடலை எழுத ரி.ஆர்.பாப்பா இசை அமைக்க பி.சுசீலா பாடியிருப்பார். நல்லதொரு பாடல். மனது சிரமப்படும் நேரமெல்லாம் இந்தப்பாடலைக் கேட்டு நான் கவலைகளை மறந்திருக்கிறேன்.

அம்மா என்பது தமிழ் வார்த்தை 

அதுதான் குழந்தையின் முதல் வார்த்தை 

அம்மா இல்லாத குழந்தைகட்கும் 

ஆண்டவன் வழங்கும் அருள் வார்த்தை 

 

கவலையில் வருவதும் அம்மா அம்மா 

கருணையில் வருவதும் அம்மா அம்மா 

தவறு செய்தாலும் மன்னிப்புக்காக 

தருமத்தை அழைப்பதும் அம்மா அம்மா 

 

பூமியின் பெயரும் அம்மா அம்மா 

புண்ணிய நதியும் அம்மா அம்மா 

தாய் மொழி என்றும் தாயகம் என்றும் 

தாரணி அழைப்பதும் அம்மா அம்மா 

 

அம்மா இருந்தால் பால் தருவாள் 

அவளது அன்பை யார் தருவார் 

அனாதை என்னும் கொடுமையை தீர்க்க 

ஆண்டவன் வடிவில் அவள் வருவாள் 

 

 

 

 

19 hours ago, suvy said:

அடுத்த தலைமுறையை நினைத்தால் மிகவும் கவலையாய் இருக்கு...!  tw_blush:

Suvy, கவலை எதற்கு? அடுத்த தலைமுறை தமிழ்க் கடைப்பக்கம் போகாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, புங்கையூரன் said:

இதை விடவும் அநியாயம் என்னவென்றால்...இவர்கள் தான் எமது சமுதாயத்தைப் பிரதி பலிக்கும் முக்கியத்தர்களும் ஆவர்!

புங்கையூரான், நல்லதொரு பதிவு.??

1952இல் பராசக்தி படம் வெளிவந்தது. அதில் கலைஞர் கருணாநிதி ஒரு பாடல் எழுதியிருந்தார் அதில் உள்ள வரிகள் எனக்குப பிடிக்கும்

ஆரியக் கூத்தாடினாலும் தாண்டவக்கோனே - காசு

காரியத்தில் கண் வையடா தாண்டவக்கோனே

உள்ளே பகை வையடா தாண்டவக்கோனே

உதட்டில் உறவாடடா தாண்டவக்கோனே

முட்டாப் பயலையெல்லாம் தாண்டவக்கோனே - காசு

முதலாளி ஆக்குதடா தாண்டவக்கோனே

பிணத்தைக்கட்டி அழும்போதும் தாண்டவக்கோனே 

பணப்பெட்டிமேலே கண் வையடா தாண்டவக்கோனே..”

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எனக்கு கீழ வாறதில பிரச்சனை இல்லை. ஆனால் குத்தியன். @குமாரசாமி  க்கு கீழ வரக் கூடாது.
    • "தமிழரின் தோற்றுவாய்? [எங்கிருந்து தமிழர்?]" / பகுதி: 06        [1] குமரிக் கண்டம் :        தெற்கே அவுஸ்திரேலியா, மேற்கே ஆபிரிக்கா, வடக்கே தற்போது உள்ள இந்தியா முதலியவற்றை தொட்டுக் கொண்டு இலங்கையையும் உள்ளடக்கிக் கிடந்தது குமரிக்கண்டம் என்று வாதாடுபவர்கள் இன்னும் சிலர் உள்ளனர்.  இதுவே உலக நாகரிகத்தின் தொட்டில்; கன்னித் தமிழ் முன்னோரின் இருப்பிடம் என்று அதற்கு ஒரு மதிப்பும் கொடுக்கிறார்கள். எப்படி பூம்புகார் நகரம் கடலில் மூழ்கியதோ, அப்படி, இதுவும், ஆனால் மாபெரும் அனர்த்தத்தால் மூழ்கியிருக்கலாம் என நம்புகிறார்கள்??       ஸ்பென்சர் வேல்ஸ் [Spencer Wells] இனதும் பிச்சப்பன் [Pitchappan] இனதும் இந்த ஆய்வு மட்டும் கல்விமான்களின் கவனத்தை இந்திய [குறிப்பாக தமிழ் நாடு] பக்கம் திருப்பவில்லை. பிரித்தானிய கடல் துறை தொல் பொருள் ஆய்வாளர் கிரகம்ஹன்கொக் [Graham Hancock]  பூம்புகாரின் கடற்கரையிலிருந்து 3கி.மீ. தூரத்தில் 75 அடி ஆழத்தில் 2012ல் ஆய்வு மேற்கொண்டார். அங்கு, ஆய்வின் பொழுது, கடலடியில்  நகரம் ஒன்றைக் கண்டார். அது 9500 ஆண்டுகள் முதல் 11,500 ஆண்டுகள் வரை பழமையானது என்று கருதப் படுகிறது. அவருடைய கருத்தை டர்காம் பல்கலைக்கழகப் பேராசிரியர் கிளன் மில்னே [Dr.Glen Milne  / The Durham geologists] உறுதி செய்துள்ளார். எனவே, பூம்புகார் நாகரிகம் இக்கால ஈராக்கில் இருந்த சுமேரியா நாகரிகத்தை விடவும்  சிந்துவெளி நாகரிகத்தை விடவும், அதாவது அரப்பா, மொகஞ்சதரோ நாகரிகங்களை விடவும் பழமையானவை ஆகும் என்று மேலும் கருத்து கூறினார். முன்பு பனி யுகம் [ICE AGE  / பனி உருக்கு காலம்] எனப்படும் பனி உருகி கடல் மட்டம் உயர்வது நடந்து உள்ளதாக வரலாறு கூறும். அதாவது வடதுருவப் பனி உருகி பல நாடுகளின் பகுதிகள் கடலில் மூழ்கின என அறிகிறோம். அவ்வாறே, கடைசி பனி உருகும் காலத்தில், அதாவது 17000 இற்கும் 7000 ஆண்டிற்கும் இடையில் பூம்புகாரின் நாகரிகம் கடலடியில் முழ்கியுள்ளது என்கிறார்.     தேசிய ஆழ்கடல் ஆராய்ச்சிக் கழகம் என்ற நிறுவனம் 1980 ஆம் ஆண்டு தொடக்கம் வரலாற்றுப் புகழ் பெற்ற பூம்புகார் நகரக் கடற்பகுதியில் ஆய்வுகள் மேற்கொண்டது. அப்பொழுது அங்கே கண்டு பிடிக்கப் பட்டவை, கிரகம்ஹன்கொக்கின் கொள்கையை மேலும் வலுவூட்டியது. ஆய்வின் போது, பூம்புகார் கடற் பகுதியிலிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவிற்குள் பல வட்ட வடிவமான கிணறுகள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இந்தக் கிணறுகள் பூம்புகார் முதல் தரங்கம்பாடி வரையிலான கடற்பகுதியில் பரவியிருப்பது கண்டறியப்பட்டது. இது தவிர குதிரை குளம்பு வடிவில் அமைந்த கட்டட பகுதியும்  கண்டறியப் பட்டன [படம்: 01]. இவை அனைத்தும் பூம்புகார் கடற் பகுதியில் ஒரு பெரிய நகரம் மூழ்கி இருக்கக் கூடும் என்பதை உறுதிப்படுத்தும் விதத்தில் அமைந்திருகிறது. சங்க காலத்தைச் சேர்ந்தது என கருதப்படும் சுட்ட செங்கற்களால்லான  கட்டிட அமைப்பு கடல்வற்றும் போது வானகிரி போன்ற பகுதிகளில் இன்னும் காணக் கூடியதாக உள்ளது.      இங்கு புதைந்து கிடப்பது ஒரு பட்டினம் மட்டுமல்ல. தமிழர்களின் பண்பாட்டு வரலாற்றின் தொன்மையும் கூட என நாம் கருத இடம் உண்டு. பூம்புகாருக்கு அருகில் உள்ள மேலப் பெரும்பள்ளத்தில் ஒரு முதுமக்கள் தாழியும் கிடைத்துள்ளது. 2700-2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த புறநானூறு 228, 256 முதுமக்கள் தாழி [burial urn] பற்றிய குறிப்பைத் தருகிறது.     "கலம் செய்கோவே கலம் செய்கோவே அச்சுடைச் சாகாட்டு ஆரம் பொருந்திய சிறு வெண் பல்லி போலத் தன்னொடு சுரம் பல வந்த எமக்கும் அருளி வியன் மலர் அகன் பொழில் ஈமத் தாழி அகலிது ஆக வனைமோ நனந்தலை மூதூர்க் கலம் செய்கோவே."    [புறநானூறு 256]     ஒருபெண் தன் கணவனுடன் சென்று கொண்டிருந்தாள். அவர்கள் சென்று கொண்டிருந்த வழியில், போரில் அவள் கணவன் இறந்தான். கணவனை இழந்த அப்பெண், இறந்தாரை அடக்கம் செய்யும் தாழி செய்யும் குயவனை நோக்கி, “தாழி செய்யும் குயவனே! நான் வண்டியின் உருளையில் உள்ள ஆர்க்காலைப் [ஆரம் = ஆர்க்கால்] பற்றிக்கொண்டு வந்த பல்லிபோல் என் கணவனுடன் இங்கு வந்தேன். வந்த இவ்விடத்தில் அவன் போரில் இறந்தான். அவனை அடக்கம் செய்வதற்குத் தாழி ஒன்று தேவைப் படுகிறது. நீ அவனை அடக்கம் செய்வதற்குத் தாழி செய்யும் பொழுது, நானும் அவனுடன் உறையும் அளவுக்குப் பெரிய தாழியை எனக்காக அருள் கூர்ந்து செய்வாயாக” என்று அவள் வேண்டுவதாக இப்பாடலில் புலவர் கூறுகிறார்.     குமரிக்கண்டம் என்பது பண்டைத் தமிழ் இலக்கிய நூற்களில் கூறப்பட்ட கடலில் மூழ்கிப்போன ஒரு கண்டம் அல்லது பெரு நிலப்பரப்பாகும். இது இந்தியா கடலில், இன்றைய கன்னியாகுமரி மாவட்டத்திற்கு தெற்கே, ஆஸ்திரேலியாவையும் தென்னாப்பிரிக் காவையும் இந்தியாவையும் இணைத்துக் கொண்டிருந்த பெரும் நிலப்பரப்பு என நம்பப்படுகிறது. இது பின் மூழ்கிப் போனதாக கருதப்படுகிறது. இந்த நிகழ்விற்கான சொல் அவர்களிடம் இருந்துள்ளது. அது தான் கடற் கோள் ஆகும் . இதன் கருத்து கடல் நிலத்தை விரைவாக விழுங்குதல் ஆகும்.     தேசிய கடலாராய்ச்சி நிறுவனம் மார்ச் 7, 1991ல் தரங்கம்பாடிக்கும் பூம்புகாருக்கும் இடையே உள்ள பகுதியில் கடல் ஆய்வு செய்தது. சோனோகிராப் [Sonography] எனப்படும் கருவியை இதற்குப் பயன்படுத்தினர். இந்தக் கருவி கடலில் மிதக்கும் போது, கடலுக்கடியில் கட்டடமிருந்தால் ஒலி எழுப்பக் கூடியது. அப்போது 23 மீ. ஆழத்தில் ஆங்கில எழுத்தான U வடிவத்தில் [குதிரைலாட  வடிவத்தில்] கட்டுமானம் ஒன்றைக் கண்டுபிடித்தனர். அதன் இரண்டு முனைகளுக்கும் மிடையில் 20 மீட்டர் தூரம் இருக்கும். அது கோயிலாகவோ அல்லது கோட்டை மதில் சுவராகவோ இருக்கலாம்?  இந்த கட்டுமானம் கிறிஸ்துக்கு முன் 9000 ஆண்டளவில் மூழ்கியிருக்கலாம் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. அதாவது கிட்டத்தட்ட 11000 வருடங்களுக்கு முன் ஆகும். ஆகவே இந்த கட்டுமானம் மெசொப்பொத்தாமியா கட்டமைப்பை விட 5000 - 5500 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. இந்த தொல்பொருள், புவியியல் சான்றுகள், முதலாவது தமிழ் சங்க காலத்தில், தமிழ் நாகரிகம் ஒரு உச்ச கட்டத்தில் இருந்ததை உறுதி படுத்துகின்றது. அப்பொழுது இலங்கை, தென் இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்துள்ளது. சில ஆராய்ச்சி யாளர்கள் கிறிஸ்துக்கு முன் 6000 க்கும் 3000 க்கும் இடைபட்ட காலத்தில் இவை பிரிந்து இருக்கலாம் என முடிவு செய்துள்ளார்கள். அதன் பின் தற்போதைய பாக்கு நீரினை தோன்றியிருக்கலாம் என்கின்றனர். ஒரு காலத்தில் சோழர்களின் தலைநகரமாகவும் கோவலன், கண்ணகி வாழ்ந்த நகரமாகவும் விளங்கிய பூம்புகார் பல்வேறு சிறப்புகளைக் கொண்டதென இலக்கியத்தில் படித்திருக்கிறோம். சோழப் பேரரசின் தலைநகராக இருந்த பூம்புகார் ஊருக்கு காவிரிப்பூம் பட்டினம் என்றும் இன்னொரு பெயர் உண்டு. அப்படிப்பட்ட இந்த  நகரத்தை முழுமையாக அறிந்துகொள்ள பூம்புகார் குறித்த ஆய்வு மேலும் தீவிரப்பட வேண்டும் என்று எண்கிறேன்.     பாளி புத்த காப்பியம் 'மகாவம்சம்', புத்தர் காலத்தில் இலங்கையில் மனித இனத்திற்குக் கீழ்ப்பட்ட உயிரினமே [sub-human beings] இருந்ததாக குறிப்பிட்டு இருந்தாலும், உண்மையில் அங்கு மனிதர்கள் வாழ்ந்ததாக தொல் பொருள் ஆய்வு உறுதிப்படுத்தி உள்ளது. இலங்கையின் பாகியன் குகையில் (Fa Hien Cave), மேற்கொண்ட ஆய்வுகளில் அகழ்ந்தெடுக்கப்பட்ட ஆதி மனிதயெலும்புகள், அப்பெரிய குகையில் 37 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் துவங்கி 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்வரை, தொடர்ச்சியாகப் பல தலைமுறையினர் வாழ்ந்தனர் என்பது காணப்பட்டுள்ளது. மேலும் சில குகைகளிலும் இப்படி காணப்பட்டுள்ளன. அத்துடன் புதிய கற்காலத்தைச் சேர்ந்த கற்கருவிகளும் அங்கு அவர்களின் சமூக வாழ்வை உறுதிப் படுத்து கின்றன. இவர்களை பலாங்கொடை மனிதன் (Homo sapiens balangodensis, Balangoda Man) என்று அழைக்கிறார்கள். இந்த பலாங்கொடை மனிதன் 174 செ.மீ. (ஐந்து அடி எட்டு அரை அங்குலம்) உயரம் உடையவனாகவும் காணப்படுகிறது. திரு R. பிரேமாதிலகே [Mr. R. Premathilake recorded in his paper presented at the seminar on ‘First Farmers in Global Perspective’] தனது 'உலகளாவிய பார்வையில் முதலாவது விவசாயிகள்' என்ற ஆய்வு கட்டுரையில், ஆரம்ப இரும்பு  காலத்தில், கி மு 900 ஆண்டில், குதிரை வளர்ப்பு, இரும்பு உற்பத்தி, மற்றும் நெல் சாகுபடி அனுராதபுரத்தில் காணப்பட்டதாகவும்,  கி மு 15,500 ஆண்டு அளவில் அங்கு பார்லி / வாற்கோதுமை மற்றும் ஓட்ஸின் / காடைக்கண்ணியின் [barley and oats] தொடக்க மேலாண்மை இருந்ததாகவும் கூறுகிறார் . அதே போல,   பேராசிரியர் T. W. விக்ரமநாயகே [Prof T. W. Wikramanayake] தனது 'வியயனின் வருகைக்கு முன் இலங்கையில் விவசாயம்' [‘Pre-Vijayan Agriculture in Sri Lanka’] என்ற புத்தகத்தில், வரலாற்றுக்கு முந்தைய குடியேற்றங்கள் இலங்கையில் 40,000 ஆண்டுகளுக்கு முன்பே இருந்தது என்றும், ஹோமோ சேபியன்ஸ் [Homo sapiens] தென் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் உலவி இருப்பார்கள் என்றும், இலங்கையும் தென் இந்தியாவும் துண்டிக்கப் பட்ட பின்பும் கூட, அவைகளுக்கு இடையில், கடல் மட்டம் வீழ்ச்சியடைந்த போதெல்லாம், நில பாலங்கள் [land bridges] உண்டாகி இருக்கும் என்றும், எனவே தங்கு  தடை இன்றி, மரபணு ஓட்டம் அல்லது பரம்பரையலகு ஓட்டம் [gene flow] நடை பெற்று இருக்கும் என்றும், எனவே கட்டாயம் அங்கு தென் இந்தியருக்கும் இலங்கையருக்கும் ஒரு இனக் கலப்பு [complex patterns of miscegenation, between the pre-historical people of South India and Sri Lanka] நடை பெற்று இருக்கும் என்று வாதாடுகிறார்.  இவை எல்லாம், தென் இந்தியாவும் இலங்கையும் ஒரு நிலப்பரப்பாக இருந்ததையும், ஒரே மொழி பேசும் இன மக்கள் [ திராவிடம் அல்லது தமிழ்] இரு இடமும் உலாவியதையும், புத்தர் காலத்துக்கு முன்பே இலங்கையில் நாகரிக மக்கள் இருந்ததையும் எடுத்து காட்டுகிறது.      [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]     பகுதி :07 தொடரும்       பி கு : படம் 02 : பூம்புகாரில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழி / burial urn found at Poompuhar         
    • 😀........ நீங்கள் இலங்கை அணியை மட்டும் தான் சொல்கிறீர்களா அல்லது இலங்கை அணி தோற்க வேண்டும் என்று இங்கு கும்பிட்ட 21 பேரையும் சேர்த்தும் சொல்கிறீர்களா என்று கொஞ்சம் குழப்பமாக இருக்குது........🤣.
    • எல்லோருக்கும் நன்றி  "புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலி இல்லை கனவு காணும் மனிதனுக்கு நினைப்பதெல்லாம் கனவு அவன் காணுகின்ற கனவினிலே வருவதெல்லாம் உறவு"  
    • உண்மை தான்.. ஆசிரியர் மாணவர்களும் நல்ல கட்டுப்பாடு. அதற்கு பிறகு எல்லாம் ஒரே மேய்ச்சல்.   அதிபரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.