Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முஸ்லிம்களின் தாய்மொழியாக சிங்கள மொழியை ஏற்கவேண்டும் ; பேருவளை நகர சபையில் தீர்மானம் நிறையேற்றம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

47304409_2009620255790963_4974668775652589568_o.jpg?_nc_cat=109&efg=eyJpIjoidCJ9&_nc_ht=scontent.fcmb2-1.fna&oh=79c0b31d8655d218d678ec3fc81db573&oe=5C6B0214

முஸ்லிம்களின் தாய்மொழியாக  சிங்கள மொழியை ஏற்கவேண்டும் என பேருவளை நகர சபையில் தீர்மானம் நிறையேற்றப்பட்டுள்ளமை தொடர்பில் தனது நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்வதாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

 

பேருவளை நகர சபை தலைவர் மஸாஹிம் மொஹமட் அவர்களுக்கு தனது நன்றியை வெளியிட்டுள்ள வாசு

 

தற்போது நாட்டின் இறையாண்மைக்கு ஆப்பு வைக்க சில சக்திகள் செயற்பட்டு வரும் நிலையில் அரசியலமைப்பிற்கு மதிப்பு வழங்கும் இது போன்ற செயற்பாடு நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் எனவும் முஸ்லிம்கள் சிங்கள மொழியை கற்பதில் ஆர்வம் காட்ட வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார். 

https://www.madawalaenews.com/2018/12/blog-post_4.html

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல விடயம் ....100 வருடத்தின் பின்பு சிங்களவர் றீல் விடமுடியாது.....சிங்கள லே என்று.....

சிறிலங்கா முஸ்லீம்கள் தங்களை சிங்கள முஸ்லீம்கள் என்று அடையாளப்படுத்த உதவியாக இருக்கும்....


என்ன தமிழ்பேசும் முஸ்லீம்கள் என்று அரசியல் பேசும் எம்மவ‌ருக்குத்தான் கொஞ்ம் கடுப்பாய் இருக்கும்....

எனைய உலக‌ மொழியை தாய்மொழியாக கொண்டவர்களில்   முஸ்லிம்கள் இருக்கின்றனர் ....முதல் முறையாக சிங்கள மொழியை தாய்மொழியாக கொண்ட முஸ்லீம்கள் உருவாகின்றனர்....

.

நல்ல விடயம் இவர்கள் சிங்களவர்களாகினால் தமிழர்களுக்கு மட்டும்தான் தீர்வுதேவை விட்டது கறுப்பு..

  • கருத்துக்கள உறவுகள்

அவர்களுக்கு மொழி முக்கியமில்லை மதம்தான் சிங்களவரின் சாதிக்குள் இன்னும் ஒரு சாதி கூடப்போகின்றது வாழ்த்துக்கள் எதிர்காலத்தில் கொள்ளுபடபோகும் இரண்டு தரப்புக்கும் .

ஏற்கனவே சிங்கள மொழியை தாய் மொழியாக கொண்ட தமிழ் இனம் நீர்கொழும்பு, சிலாபம் பகுதிகளில் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர். தமிழ் இன அடையாளமும் இன்றி, சிங்கள இனம் என்ற அடையாளமும் இன்றி வாழ்ந்து வருகின்றனர். முன்னேஸ்வரம் கோவிலை சுற்றியும் இவ்வாறு பலர் இருக்கின்றனர்.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, நிழலி said:

ஏற்கனவே சிங்கள மொழியை தாய் மொழியாக கொண்ட தமிழ் இனம் நீர்கொழும்பு, சிலாபம் பகுதிகளில் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர். தமிழ் இன அடையாளமும் இன்றி, சிங்கள இனம் என்ற அடையாளமும் இன்றி வாழ்ந்து வருகின்றனர். முன்னேஸ்வரம் கோவிலை சுற்றியும் இவ்வாறு பலர் இருக்கின்றனர்.

அவர்களின் மதம்  ஏன்ன?

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Jude said:

அவர்களின் மதம்  ஏன்ன?

நீங்கள் கேட்ப்பது புரியவில்லை 

 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Jude said:

அவர்களின் மதம்  ஏன்ன?

இந்து 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
13 hours ago, colomban said:

47304409_2009620255790963_4974668775652589568_o.jpg?_nc_cat=109&efg=eyJpIjoidCJ9&_nc_ht=scontent.fcmb2-1.fna&oh=79c0b31d8655d218d678ec3fc81db573&oe=5C6B0214

எவ்வளவு கெதியாய் செய்து முடிக்கேலுமோ அவ்வளவு கெதியாய் செய்து அலுவலை முடியுங்கப்பா.....துலைஞ்சுது ஒரு சோலி....tw_glasses:
 

நல்ல முஸ்லீம் சகோதரங்கள் மன்னிக்கவும்.

குப்பைகள் அகலுவது தமிழினத்துக்கு நல்லது.

9 hours ago, Jude said:

அவர்களின் மதம்  ஏன்ன?

சிங்களவர்களாக மாற்றப்பட்டவர்களில் கணிசமானவர்கள் பௌத்தர்களாகவும் கணிசமானவர்கள் கிறிஸ்தவர்களாகவும் சிலர் இந்துக்களாகவும் உள்ளனர்.

 

10 hours ago, நிழலி said:

ஏற்கனவே சிங்கள மொழியை தாய் மொழியாக கொண்ட தமிழ் இனம் நீர்கொழும்பு, சிலாபம் பகுதிகளில் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர். தமிழ் இன அடையாளமும் இன்றி, சிங்கள இனம் என்ற அடையாளமும் இன்றி வாழ்ந்து வருகின்றனர். முன்னேஸ்வரம் கோவிலை சுற்றியும் இவ்வாறு பலர் இருக்கின்றனர்.

சிலாபம் நீர்கொழும்பு பகுதிகளில் மட்டுமல்ல இதே நிலை பொலநறுவை, குருநாகல், அனுராதபுரம் பகுதிகளிலும்  நடந்துள்ளது. இப்பகுதியில் பரந்து வாழ்ந்த தமிழர்கள் கல்விக்காக போதியளவு தமிழ் மொழிப்  பாடசாலைகள் இல்லாமையும், காணி வேலைவாய்ப்பு போன்ற வசதிகளை வழங்கியமையும், இப்பகுதிகளில் தமிழர்களை வழிநடத்த நல்ல தலைவர்கள் இல்லாமையும் சிங்கள அரசின் தமிழின அழிப்புக்கு கைகொடுத்துள்ளது. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
7 minutes ago, போல் said:

சிங்களவர்களாக மாற்றப்பட்டவர்களில் கணிசமானவர்கள் பௌத்தர்களாகவும் கணிசமானவர்கள் கிறிஸ்தவர்களாகவும் சிலர் இந்துக்களாகவும் உள்ளனர்.

 

சிலாபம் நீர்கொழும்பு பகுதிகளில் மட்டுமல்ல இதே நிலை பொலநறுவை, குருநாகல், அனுராதபுரம் பகுதிகளிலும்  நடந்துள்ளது. இப்பகுதியில் பரந்து வாழ்ந்த தமிழர்கள் கல்விக்காக போதியளவு தமிழ் மொழிப்  பாடசாலைகள் இல்லாமையும், காணி வேலைவாய்ப்பு போன்ற வசதிகளை வழங்கியமையும், இப்பகுதிகளில் தமிழர்களை வழிநடத்த நல்ல தலைவர்கள் இல்லாமையும் சிங்கள அரசின் தமிழின அழிப்புக்கு கைகொடுத்துள்ளது. 

இதே நிலைமைதான் வடகிழக்கு பிரதேசங்களுக்கும் வந்து கொண்டிருக்கின்றது.

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, போல் said:

சிங்களவர்களாக மாற்றப்பட்டவர்களில் கணிசமானவர்கள் பௌத்தர்களாகவும் கணிசமானவர்கள் கிறிஸ்தவர்களாகவும் சிலர் இந்துக்களாகவும் உள்ளனர்.

ஆங்கிலேயர் வந்த போது மதம் மாறினோம்.இப்போ மொழி.

7 minutes ago, குமாரசாமி said:

இதே நிலைமைதான் வடகிழக்கு பிரதேசங்களுக்கும் வந்து கொண்டிருக்கின்றது.

நூற்றுக்கு நூறு உண்மை!

ஒருசிலருக்குத் தான் இந்த யதார்த்தம் விளங்குகிறது என்பது தமிழரின் பலவீனமாக உள்ளது.

வவுனியா தெற்கு, வவுனியா கிழக்கு, வவுனியா மேற்கு, மணலாறு (வெலிஓயா), கொக்கிளாய், தம்பலகாமம், மன்னம்பிட்டி (வலிகந்த), அம்பாறை, உடப்பு, முந்தல், புத்தளம் பகுதிகளில் ஏற்கனவே நடக்கிறது.

 

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ரதி said:

இந்து 

.நன்றி.  இப்படி சிங்களவராக மாற்றப்பட்ட. கத்தொலிக்கரில் நான் அறிந்தவர்கள்  இருக்கிறார்கள்.  இப்போது தான் இப்படியான இந்து சிங்களவர்கள்  இருப்பதை அறிகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களர் அனைவரும் உலகின் மூத்த மொழியும் இலங்கையின்ர தொன்மையான மொழியான அரபியை படிக்குக" என்று தீர்மானம் நிறைவேற்றாததையிட்டு சந்தோச பட வேண்டும் ☺️

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, நிழலி said:

ஏற்கனவே சிங்கள மொழியை தாய் மொழியாக கொண்ட தமிழ் இனம் நீர்கொழும்பு, சிலாபம் பகுதிகளில் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர். தமிழ் இன அடையாளமும் இன்றி, சிங்கள இனம் என்ற அடையாளமும் இன்றி வாழ்ந்து வருகின்றனர். முன்னேஸ்வரம் கோவிலை சுற்றியும் இவ்வாறு பலர் இருக்கின்றனர்.

ஓம் கண்டிருக்கிறேன் சுத்தமான தமிழ் சிங்களவர்கள் அடித்துக்கூட கேட்டால் கூட தமிழர் என்று சொல்லாதவர்கள்

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, Jude said:

.நன்றி.  இப்படி சிங்களவராக மாற்றப்பட்ட. கத்தொலிக்கரில் நான் அறிந்தவர்கள்  இருக்கிறார்கள்.  இப்போது தான் இப்படியான இந்து சிங்களவர்கள்  இருப்பதை அறிகிறேன்.

எனக்குத் தெரிஞ்ச ஒரு சிலாபத்தை சேர்ந்த பெண் இருக்கிறார்...அவர் திருமணம் செய்தது ஒரு சிங்களவரை ...அவர் சிங்களம் மட்டும் தான் கதைப்பார் தமிழ் விளங்கும் ஆனால் கதைக்கத் தெரியாது ,இத்தனைக்கும் அவரது தாயார் தமிழ் ...இப்படி எத்தனையோ தமிழர்கள் தங்கட இனம் மறந்து,மொழி மறந்து வாழ்ந்து கொண்டு இருக்குறார்கள்...மிகவும் கவலை தரக் கூடிய விஷயம் ...யுத்தத்திற்கு முன்னரான நிலைமையே இப்படி என்டால் நிகழ்காலத்தில் ,எதிர்காலத்தில் தமிழரின் நிலைமை? 

 

  • கருத்துக்கள உறவுகள்

இவளவு கதைக்கிற நாங்கள் இங்கை பிறந்து வளர்கிற எமது பிள்ளைகளின் நிலமையை வசதியாக மறந்து விடுகிறோம்.?

16 hours ago, Jude said:

.நன்றி.  இப்படி சிங்களவராக மாற்றப்பட்ட. கத்தொலிக்கரில் நான் அறிந்தவர்கள்  இருக்கிறார்கள்.  இப்போது தான் இப்படியான இந்து சிங்களவர்கள்  இருப்பதை அறிகிறேன்.

முன்னால் அமைச்சராக இருந்து தற்கொலை தாக்குதலினால் படுகொலை செய்யப்பட்ட ஜெயராஜ் பெர்ணாந்துபுள்ளே யும் இப்படியானவர் தானே? ஆனால் அவர் தமிழை சரளமாக கதைப்பார்.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, சுவைப்பிரியன் said:

இவளவு கதைக்கிற நாங்கள் இங்கை பிறந்து வளர்கிற எமது பிள்ளைகளின் நிலமையை வசதியாக மறந்து விடுகிறோம்.?

அப்பப்ப வந்து போனாலும் சடார் என்று எதையாவது சொல்லிட்டும் போறியள் உன்மையை:)

  • கருத்துக்கள உறவுகள்

77 கலவரத்தின்போது பல தமிழர்கள் தென்பகுதியிலிருந்து அடித்துத் துரத்தப்பட்டு மட்டக்களப்பிற்கு அகதிகளாக வந்தனர். அவர்கள் பெயர்தான் தமிழே தவிரச் சிங்களம் தவிர்ந்த ஒரு சொற்கூடத் தமிழ் தெரியாது. 

  • கருத்துக்கள உறவுகள்
On ‎12‎/‎5‎/‎2018 at 7:47 PM, சுவைப்பிரியன் said:

இவளவு கதைக்கிற நாங்கள் இங்கை பிறந்து வளர்கிற எமது பிள்ளைகளின் நிலமையை வசதியாக மறந்து விடுகிறோம்.?

நீங்கள் சொல்வது ஒரு விதத்தில் சரி என்டாலும்,ஊரில் இருப்பவர்களால் தான் நாட்டின் இருப்பை தக்க வைத்துக் கொள்ள முடியும்...இங்குள்ள பிள்ளைகள் தமிழ் கதைக்காட்டில்  அது இனத்தை  பாதிக்கும் தான்...ஆனால் அங்குள்ள மக்கள் தமிழே கதைக்கா விட்டால் தமிழர் அங்கு வாழ்ந்ததற்கான அடையாளமே இல்லாமல் போகும்

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ரதி said:

நீங்கள் சொல்வது ஒரு விதத்தில் சரி என்டாலும்,ஊரில் இருப்பவர்களால் தான் நாட்டின் இருப்பை தக்க வைத்துக் கொள்ள முடியும்...இங்குள்ள பிள்ளைகள் தமிழ் கதைக்காட்டில்  அது இனத்தை  பாதிக்கும் தான்...ஆனால் அங்குள்ள மக்கள் தமிழே கதைக்கா விட்டால் தமிழர் அங்கு வாழ்ந்ததற்கான அடையாளமே இல்லாமல் போகும்

மிக்க நன்றி ரதி,

அண்மையில் நீங்கள் எழுதிய கருத்துக்களில் என்னை மிகவும் கவர்ந்த கருத்து இது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.