Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனவாதிகளின் பிடியில் நேற்று நாங்கள் இன்று முஸ்லிம்கள் – சுமந்திரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இனவாதிகளின் பிடியில் நேற்று நாங்கள் இன்று முஸ்லிம்கள் – சுமந்திரன்

 

M.A.Sumanthiran.jpg

இனவாதிகளிடமிருந்து முஸ்லிம் அமைச்சர்களுக்கு அளுத்தம் கொடுக்கப்பட்டமை துரதிருஷ்டவசமானது என தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசாங்கம் தவறியதாக குற்றம்சாட்டி இன்று தமது அமைச்சு, பிரதி அமைச்சு மற்றும் இராஜாங்க அமைச்சு பதவிகளை இராஜினாமா செய்ததாக 9 முஸ்லிம் அமைச்சர்கள் அறிவித்துள்ளனர்.

இது தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது “முஸ்லிம் அமைச்சர்கள் இனவாதத்திற்கு இரையானது வருந்தத் தக்கது. நேற்று நாம், இன்று நீங்கள் நாளை இன்னொரு ‘மற்றவர்’.

நாம் முஸ்லிம் மக்களோடு தொடர்ந்தும் தோழமையோடு நிற்போம். நேர்ச்சிந்தனையுள்ள அனைத்து இலங்கையரையும் அதையே செய்யுமாறு அழைக்கிறோம்” என தெரிவித்துள்ளார்.

 

http://athavannews.com/இனவாதிகளின்-பிடியில்-நேற/

  • கருத்துக்கள உறவுகள்

மிஸ்டர் சுமத்திரன், நீங்கள்  உங்கள் முஸ்லீம் சகோதரர்களுக்கு சொல்லுங்கோ...தமிழருக்கு பிரச்சனை வரேக்குள்ள தமிழ் பேசுபவர்களாகிய நீங்கள் எங்களோடு சேர்ந்திருந்தால் உங்களுக்கு இந்த நிலைமை வந்திருக்காது என்று சொல்லுங்கோ 

  • கருத்துக்கள உறவுகள்

படத்தை மாத்துங்கப்பா. எத்தனை நாளைக்கு தான் இந்த படத்தை போடப்போறீங்க. கையை காட்டி 36–29–38 என்று பிகருக்கு அளவு சொல்றமாதிரியிருக்கு.  வழக்கம்போலவே இவரு இராஜதந்திரமா பேச புறப்பட்டு கடைசியில் கதை கந்தலாகி புஸ்வாணம் விடுவாரு. பாத்துக்கிட்டே இருங்க.

  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, vanangaamudi said:

படத்தை மாத்துங்கப்பா. எத்தனை நாளைக்கு தான் இந்த படத்தை போடப்போறீங்க. கையை காட்டி 36–29–38 என்று பிகருக்கு அளவு சொல்றமாதிரியிருக்கு. 

கையளவை வைச்சு, பிகர்அளவை கச்சிதமா சொல்லும் வித்தகன், அய்யா நீர்... 😂

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Quote

இனவாதிகளிடமிருந்து முஸ்லிம் அமைச்சர்களுக்கு அளுத்தம் கொடுக்கப்பட்டமை துரதிருஷ்டவசமானது 

நீங்கள் அரசியலுக்கு அடி எடுத்துவைத்த நாள் முதல் உங்களையும் அவர்களின் இடத்திலையே கணித்து வைத்திருந்தேன்.அதை நிரூபித்து விட்டீர்கள். இலங்கை தமிழினத்து வரலாறு தெரியாத முட்டாள்களா அல்லது சோரம் போன பரம்பரைக்குணமா? 

  • கருத்துக்கள உறவுகள்

இனவாதிகளை விட தமிழனுக்கு கேடு விளைவித்த கூட்டம் ஒண்டு உண்டு அதன் பெயர் தமிழரசு கட்சி முதலில் இவர்களா எமக்கு விடிவை தருபவர்கள் ?

வெளிநாடு போய்வந்த கையோடு சதிகார சுமந்திரன் தமிழினப் படுகொலைகார்களான சிங்களவனுக்கும் முஸ்லிம்களுக்கும் எடுபிடி அரசியல் செய்யும் தனது பாரம்பரிய தொழிலை ஆரம்பித்துள்ளார்.

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் நன்மைக்கு தான்...

தமிழர்கள் தமக்கு கீழானவர்கள் போலவும், தாங்கள், சிங்களவர்கள் மடியில் விளையாடும் செல்லப் பிள்ளைகளாக நினைத்துக் கொண்டிருந்த இஸ்லாமியர்களுக்கு, தேள் கொட்டி விட்டது.

இப்போது, யதார்த்தம் என்ன என்பதும், சிங்கள பேரினவாதம் என்ன என்பதும் அவர்களுக்கு நன்கு புரியும்.

இனிமேலும், ஹிஸ்புல்லா, அதாவுல்லா, ரிஷாட் அடாவடி அரசியல் எடுபடாது. அவர்களுக்கு பணம் வந்த பாதை அடைக்கப்பட்டு விட்டது. வந்த பணத்தினையும், து வாங்கிய சொத்துக்களையும் சிங்களம் பறித்து விடும்.

இனி, தான் நீங்கள் மார்க்கத்தால் தான் முஸ்லிம்கள், மொழியால் தமிழ் பேசும் மக்கள் என்பது சிங்களத்தால் புரிய வைக்கப்படும்.

இலங்கையில், 28 சதவீத மக்கள் சிங்களவர்கள் அல்ல என்று புரிந்து, சேர்ந்தால் மட்டுமே, நிம்மதியாக வாழமுடியும் என்பது அந்த 28% மக்களுக்கு புரியவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Nathamuni said:

இலங்கையில், 28 சதவீத மக்கள் சிங்களவர்கள் அல்ல என்று புரிந்து, சேர்ந்தால் மட்டுமே, நிம்மதியாக வாழமுடியும் என்பது அந்த 28% மக்களுக்கு புரியவேண்டும்.

அதுகளுக்கு புரிந்தால் முதலில் பயங்கரவாத தடை சட்டம் போன்றவைக்களுக்கு ஆதரவை விலக்கட்டும் அதன் பின் பார்ப்பம் உண்மை நிலவரம் .

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, பெருமாள் said:

அதுகளுக்கு புரிந்தால் முதலில் பயங்கரவாத தடை சட்டம் போன்றவைக்களுக்கு ஆதரவை விலக்கட்டும் அதன் பின் பார்ப்பம் உண்மை நிலவரம் .

ஏப்ரல் 21 முதல் இன்றுவரை 558 இஸ்லாமியர்கள், பயங்கரவாத தடை சட்டத்தினால் உள்ள இருக்கிறார்கள்.

எப்படி இந்த தடை சட்ட நீக்கத்துக்கு ஆதரவு தராமல் இருக்க முடியும்?

இன்று ரமலான் பண்டிகைக்கு சாப்பிட போன மைத்திரி, 'சும்மா' சொல்லி வைத்திருக்கிறார்.... அப்பாவிகள் இருந்தால் விரைவில் விடுதலை செய்ய நடவடிக்கை எடுப்பதாக.... எத்தனை தடவை தமிழர்கள், இந்த 'திருவாக்கினை' கேட்டு இருப்பார்கள்.

தனக்கு வந்தால் தான் தெரியும் என்று சும்மாவா சொன்னார்கள்? 

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, Nathamuni said:

தனக்கு வந்தால் தான் தெரியும் என்று சும்மாவா சொன்னார்கள்? 

முஸ்லிம்களுக்கு ஒண்டு என்றவுடன் துடிக்கும் ஒரு சில  நம்மவர்கள், அவர்கள் முஸ்லீம்கள் இவ்வளவு பட்டும் எந்த முஸ்லீம் அரசியல்வாதியும் தமிழருடன் சேர்ந்து சிறுபான்மை இனத்தின் வலிமையை காட்டுவோம் என்று சொல்கிறார்களா ?  இல்லை எங்களுக்கு  அனுசாரனையா கதைக்கிறார்களா ? ஆனால் எங்கடை படித்த கூட்டம் மட்டும் அழுது புலம்புகிறனர் முள்ளிவாய்க்கால் பொழுதுகளில் கூட இப்படி அழுது ஒப்பாரி வைத்து இருக்க மாட்டினம் .

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, பெருமாள் said:

முஸ்லிம்களுக்கு ஒண்டு என்றவுடன் துடிக்கும் ஒரு சில  நம்மவர்கள், அவர்கள் முஸ்லீம்கள் இவ்வளவு பட்டும் எந்த முஸ்லீம் அரசியல்வாதியும் தமிழருடன் சேர்ந்து சிறுபான்மை இனத்தின் வலிமையை காட்டுவோம் என்று சொல்கிறார்களா ?  இல்லை எங்களுக்கு  அனுசாரனையா கதைக்கிறார்களா ? ஆனால் எங்கடை படித்த கூட்டம் மட்டும் அழுது புலம்புகிறனர் முள்ளிவாய்க்கால் பொழுதுகளில் கூட இப்படி அழுது ஒப்பாரி வைத்து இருக்க மாட்டினம் .

இல்லை பெருமாள்....

இப்ப தான்.... தேள் கொட்ட தொடங்கி இருக்கிறது.... 

நாம் 30 வருடங்களாக உணர்ந்த வலி அவர்கள் உணர சில மாதங்கள் ஆகும். அது வருடங்களாக இருக்காது, காரணம் இவர்கள், இலங்கை இஸ்லாமியர்களாக வெளியே எங்கும் ஓட முடியாத புறசூழல்.

நானும், எவ்வளவு காலம் தான் நோகவில்லை என்று நடிக்கிறது என்ற வடிவேலு சொல்வது போல, இவர்களும் வந்தே தீருவர்.

அப்போது, சிங்களவர்களின் பிரித்தாளும் விளையாட்டுக்கும் முடிவு வரும்.

இப்போது இருக்கும் முஸ்லீம் அரசியல்வாதிகள் சகலரும் பணக்கொழுப்பு மிக்கவர்கள். 

முஸ்லீம் சாப்பாட்டு கடைகள், வியாபார நிலையங்கள் புறக்கணிக்கப் படுகின்றன. பொருளாதரீதியில் மோசமான எதிர்காலம் காத்திருக்கிறது. சாதாரண முஸ்லீம் மக்கள் தான் அவலத்துக்கு முகம் கொடுக்கிறார்கள். அவர்கள் படும் துன்பம் புரியாத இவர்களை தூக்கி எறிவார்கள்.

முள்ளிவாய்க்கால் அவல பொழுதுகளில் பால் சோறு உண்டு மகிழ்ந்தவர்கள்.

கொழும்பில் எனது உறவினர் வீட்டுக்கு, பக்கத்தில் இருக்கும் முஸ்லீம் பெண்மணி பால்சோறு கொண்டு வந்திருக்கிறார். வேண்டுமென்று அல்ல... அப்பாவித்தனமாக.

அன்றிலிருந்து உறவினர் பேசுவதை விட்டு விட்டார். வேறு எங்கோ வீடு மாறி சென்ற அந்த பெண், 10 வருடத்துக்கு பிறகு, இப்பொது வந்து, தான் புரியாமல் செய்தது தவறு... இப்போது தான் புரிகிறது, வருந்துகிறேன் என்று சொல்லி இருக்கிறார்.

இதைத்தான் சொன்னேன், தனக்கு வந்தால் தான் தெரியும் என்று.
 

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, கிருபன் said:

நாம் முஸ்லிம் மக்களோடு தொடர்ந்தும் தோழமையோடு நிற்போம். நேர்ச்சிந்தனையுள்ள அனைத்து இலங்கையரையும் அதையே செய்யுமாறு அழைக்கிறோம்” என தெரிவித்துள்ளார்.

சுமந்திரனை ஒருமுறை சும்மா விட்டுப்பார்த்தால் உண்மை புலப்படலாம். 🤣

தமிழர்களுக்கு ஒன்று என்றால் கோபப்படாமல் அமைதி காக்கும் சுமந்திரன் முஸ்லிம்கள் என்றதும் முந்திக்கொண்டு வந்து அறிக்கை விடுகிறார்.

முஸ்லிம் மக்கள் இப்பவும் சமூக வலைத்தளங்களில் தமிழர்களுக்கு எதிராக தான் எழுதுகிறார்கள். நீங்கள் மட்டும் ஒற்றுமை பற்றி கதையுங்கோ.

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, Lara said:

முஸ்லிம் மக்கள் இப்பவும் சமூக வலைத்தளங்களில் தமிழர்களுக்கு எதிராக தான் எழுதுகிறார்கள். நீங்கள் மட்டும் ஒற்றுமை பற்றி கதையுங்கோ.

தமிழருக்கு எதிராக எழுதி கிளிக்க ஏதுமில்லை.

அடிப்பது சிங்களவர்.போங்க, போய், வாங்குங்கு எண்டு சொல்லவேண்டியது தானே.

  • கருத்துக்கள உறவுகள்

ba007d.jpg

ஒரு பழமொழிக்கு தானும் "மூஞ்சுறு" என ரைப் செய்து இணையத்தில் தேடினால் முழுதும் இலங்கை தமிழ் அரசியல்வாதிகளின்ர படமே வருகுது.. 😢 ஒருவழியா கண்டுபிடித்தாகி விட்டது ..

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறவுகள்

முனாக்கள் எல்லாம் ஒற்றுமை, எல்லோரும் சேர்ந்து பதவி விலகீற்றினம் எண்டு யாரோ சொல்லிச்சினம்.

இண்டைக்கு முசாமில், மேல்மாகாண கவனராகிட்டார்.

 

1 hour ago, Nathamuni said:

தமிழருக்கு எதிராக எழுதி கிளிக்க ஏதுமில்லை.

அடிப்பது சிங்களவர்.போங்க, போய், வாங்குங்கு எண்டு சொல்லவேண்டியது தானே.

😀😀

நான் அவர்களுக்கு பதில் எழுதுவதில்லை.

அவர்கள் இப்பவும் தாம் பயங்கரவாதிகளை அழிக்க உதவியவர்கள் என்று சொல்லித்திரிகிறார்கள், இப்ப முஸ்லிம்களை பயங்கரவாதிகள் என்று சிங்களவர்கள் சொல்லித்திரியும் நிலையிலும். 😎

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, கிருபன் said:

இனவாதிகளின் பிடியில் நேற்று நாங்கள் இன்று முஸ்லிம்கள் – சுமந்திரன்

 

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது “முஸ்லிம் அமைச்சர்கள் இனவாதத்திற்கு இரையானது வருந்தத் தக்கது. நேற்று நாம், இன்று நீங்கள் நாளை இன்னொரு ‘மற்றவர்’.

என்னப்பா  இந்தாளுக்கு  என்னாச்சு??

இனவாதிகளா??

அதனால்  தமிழர்கள்  பாதிக்கப்பட்டார்களா??

ஆதாரம்  இருக்கா?

கொடுப்பதை  ஐநா நம்புற  அளவுக்கு  ஒன்றுமே  இல்லையே  எம்மிடம்???

அறளை  பேந்திட்டுதோ???

55 minutes ago, விசுகு said:

என்னப்பா  இந்தாளுக்கு  என்னாச்சு??

இனவாதிகளா??

அதனால்  தமிழர்கள்  பாதிக்கப்பட்டார்களா??

ஆதாரம்  ஆதாரம்  இருக்கா?இருக்கா?😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😆😁😆😁😆😆

கொடுப்பதை  ஐநா நம்புற  அளவுக்கு  ஒன்றுமே  இல்லையே  எம்மிடம்???😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

அறளை  பேந்திட்டுதோ???

இவர் இனிமேல் ஆதாரம் இல்லை என்றால்; இதை ஆதாரமாகக் காட்டலாம்

  • கருத்துக்கள உறவுகள்

"அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு" எமது வரலாற்றில் எட்டப்பன் , காக்கைவன்னியன் , கருணா என்று பலர் உள்ளனர் இதற்கு விதி விலக்காக, ஆனால் எல்லாம் முடிந்த விடயங்கள் , வரும் காலங்களிலாவது சிறுபான்மையினர் ஒற்றுமையாக இருந்தால்தான் உண்டு அல்லது " வரலாறு மீண்டும் மீண்டும் நிகழும் முதற்தடவை துன்பியல்நிகழ்வாகவும் மறுமுறை கேலிக்கூத்தாகும்" என்பதற்கு நாங்களே நல்ல உதாரணமாவோம்.

  • கருத்துக்கள உறவுகள்
On 6/3/2019 at 8:10 PM, கிருபன் said:

இனவாதிகளின் பிடியில் நேற்று நாங்கள் இன்று முஸ்லிம்கள் – சுமந்திரன்

 

M.A.Sumanthiran.jpg

 

 

 

 “முஸ்லிம் அமைச்சர்கள் இனவாதத்திற்கு இரையானது வருந்தத் தக்கது. நேற்று நாம், இன்று நீங்கள் நாளை இன்னொரு ‘மற்றவர்’.

நாம் முஸ்லிம் மக்களோடு தொடர்ந்தும் தோழமையோடு நிற்போம். நேர்ச்சிந்தனையுள்ள அனைத்து இலங்கையரையும் அதையே செய்யுமாறு அழைக்கிறோம்” என தெரிவித்துள்ளார்.

 

http://athavannews.com/இனவாதிகளின்-பிடியில்-நேற/

பகையாளிகளாக இருந்தாலும் பக்குவமாக நடந்து கொள்ளவேண்டும்
எங்களுக்கு யார் துரோகம் செய்தார்கள் எப்படிச் செய்தார்கள் என்பது தெரியும்.
இருந்தாலும் அவர்களுடைய துன்பத்தில் நாங்களும் பங்கு  கொள்வது மனித இயல்பு என்று சொல்ல வருகின்றார்

ஆனாலும் பங்காளிகள் துரோகம் செய்வது மனித இயல்பு இல்லை என்பதைச் சொல்ல மறந்து விட்டார்

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Nathamuni said:

ஏப்ரல் 21 முதல் இன்றுவரை 558 இஸ்லாமியர்கள், பயங்கரவாத தடை சட்டத்தினால் உள்ள இருக்கிறார்கள்.

எப்படி இந்த தடை சட்ட நீக்கத்துக்கு ஆதரவு தராமல் இருக்க முடியும்?

இன்று ரமலான் பண்டிகைக்கு சாப்பிட போன மைத்திரி, 'சும்மா' சொல்லி வைத்திருக்கிறார்.... அப்பாவிகள் இருந்தால் விரைவில் விடுதலை செய்ய நடவடிக்கை எடுப்பதாக.... எத்தனை தடவை தமிழர்கள், இந்த 'திருவாக்கினை' கேட்டு இருப்பார்கள்.

தனக்கு வந்தால் தான் தெரியும் என்று சும்மாவா சொன்னார்கள்? 

பயங்கரவாத தடைச்சட்டம் என்பது உண்மையில் ஒரு பயங்கரவாத சட்டம் , சட்டத்தின் அடிப்படையே ஒரு நிரபராதி தண்டிக்கப்படக்கூடாது ஆனால் இந்த பயங்கரவாதச்சட்டம் மக்களின் அடிப்படை உரிமைகளை பறிக்கும் ஒரு சட்டமாகும் இதனை எதிர்க்க மறுக்கும் அரசியல்வாதிகள் மற்றும் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் புறக்கணிப்பு நடத்தும் அரசியல்வாதிகள் உண்மையன பயங்கரவாதிகள் , ஒரு நாட்டை ஆள்வது அரசு அல்ல சட்டம் ஆகும் அதனை இயற்றுபவர்கள்(அரசு) சட்டத்தை அமுல்படுத்துவர்கள் (காவல்) எல்லோரும் இலங்கயின் உண்மையான பயங்கரவாதிகளாக உள்ளார்கள் ஒவ்வொருதடவையும் சிறுபான்மையினர் தாக்கப்படும்போதும் அரசும் சட்ட அமாலாக்கப்பிரிவும் தாம் இயற்றிய சட்டத்தை மதித்திருந்தால் சிறுபான்மையினர் தமக்கான நியாயத்தை நித்தியானந்த்தவிடம் போய் தேடியிருக்கமாட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இவரு.. குடும்பம் குடும்பமா.. கொழும்பில் வாழ்ந்து கொண்டு.. இப்படி கதைப்பது தமிழர்களுக்கு நல்லதல்ல. 

சுமந்திரன் போன்ற எடுபிடிகளின் கைகளில் இன்று தமிழர் சிக்கியுள்ளனர்!
நாளை முஸ்ஸாமில் போன்ற எடுபிடிகளின் கைகளில் முஸ்லிம்கள் சிக்குவார்கள்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.