Jump to content

ரொரண்டோவில் முன்னாள் மனைவியை படுகொலை செய்த ஈழத் தமிழர்


Recommended Posts

27 வயதான தன் முன்னாள் மனைவியை வாளால் பல முறை வெட்டி ஈழத் தமிழர் ஒருவர் படுகொலை செய்துள்ளார்.

நேற்று புதன் கிழமை (செப்ரம்பர் 11) 27 வயதான தர்சிகா ஜெகநாதனை 38 வயதான சசிகரன் தனபாலசிங்கம் வீட்டின் நடைப்பாதைக்கு அருகில் வைத்து தள்ளி விழுத்திய பின்னர் வாளால் பல முறை வெட்டி படுகொலை செய்துள்ளார். படுகொலை செய்த பின்னர் காரில் ஏறி தப்பிச் சென்றவர் பின்னர் அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

இவர் கொல்லப்பட்டவரின் முன்னாள் கணவர் என்று சில செய்திகளும், விவாகரத்து வழக்கு இன்னும் முடியவில்லை என வேறு சில செய்திகளும் சொல்கின்றன.

இது ரொரண்டோ மாநகரில் இவ் ஆண்டில் இடம்பெற்ற 45 ஆவது கொலையாகும்.

-----

Man, 38, charged with 1st-degree murder in fatal Scarborough machete attack

Tharshika Jeganathan, 27, died of her injuries Wednesday evening in Toronto neighbourhood

 
machete-attack.jpg
Police tape is set up in the Toronto suburb of Scarborough on Thursday morning. Police have charged a 38-year-old Toronto man with first-degree murder after a woman died in a machete attack Wednesday evening. (Linda Ward/CBC)

A 38-year-old man has been charged with first-degree murder after a woman, who was attacked with a machete, died in Toronto's Scarborough neighbourhood, police say.

The shocking attack, witnessed by several people in the Scarborough neighbourhood of Morrish and Ellesmere roads, happened around 6:15 p.m. ET on Wednesday evening.

 

"Witnesses observed a male suspect running around, chasing a female victim with a machete," said Insp. Stacey Davis on Thursday morning.

When officers arrived, they located Tharshika Jeganathan, 27, who succumbed to her injuries on the scene.

"Obviously, it was a machete so there were substantial injuries to the female victim," Davis said. 

Davis told reporters that Toronto resident Sasikaran Thanapalasingam drove to the nearby 42 Division police station and surrendered around 7 p.m. Wednesday. He and Jeganathan had a "previous domestic relationship," Davis said.

Thanapalasingam is scheduled to appear in court on Thursday afternoon. 

 
machete-attack.jpg
Witnesses say a man and a woman were seen arguing on this street near Morrish and Ellesmere on Wednesday evening. Police say the man struck the woman repeatedly with a machete. She later died. (John Grierson/CBC)

'We could have done something about it'

Local resident Aamir Farooqi said he saw a man holding a woman's shoulders while they were arguing.

"They were arguing about something — I thought it was like a regular thing what goes on, so I didn't pay much attention," Farooqi said. "If I knew that this was going to happen, we could have done something about it, but you never know."

Blanche Barretto said she and her husband only saw the aftermath of the incident, which included seeing the body of the woman lying on the ground.

"It was sad. We were so disturbed all night. We haven't slept," she said.

On Thursday morning, a fire crew could be seen hosing down the part of the street where the attack happened.

 
machete-attack.jpg
Firefighters can be seen hosing down the section of the sidewalk where the attack happened. (Martin Trainor/CBC)

The homicide unit is investigating, police say.

Police are asking anyone with information about the incident or the two people involved to come forward. 

https://www.cbc.ca/news/canada/toronto/woman-injured-machete-attack-scarborough-1.5280226

Link to comment
Share on other sites

  • Replies 81
  • Created
  • Last Reply

1. இறந்தவரின் ஆத்மா சாந்தியடையட்டும் 
2. கொலை செய்யத்தவர் என குற்றம் சாட்டப்பட்வர் விடயத்தில் சட்டம் தனது கடமையை செய்யும் 
3. இவ்வாறான செயல் கனேடிய தமிழர் விடயத்தில் வெகு அரிது. ஒரு சமூகமாக நாம் இவ்வாறான செயல்கள் நடக்காமல் இருக்க எம்மாலானதை செய்யவேண்டும். கனேடிய சமூக சட்டங்களுக்கு ஏற்ப வாழ மாறவும் வேண்டும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னத்தை சொல்ல...நாடு விட்டு நாடு வந்தும் திருந்தாத ஜென்மங்கள்.

Link to comment
Share on other sites

https://www.cp24.com/news/toronto-man-charged-with-first-degree-murder-after-woman-killed-in-machete-attack-1.4590462

Tharshika Jeganathan

Tharshika Jeganathan, 27, is pictured. (Facebook)

 
Sasikaran Thanapalasingam

Sasikaran Thanapalasingam is pictured in this undated image. (Facebook)

விருப்பம் இருந்தா சேர்ந்து வாழலாம் விருப்பம் இல்லாதபோது பிரிந்து செல்லலாம். இரண்டு சிறந்த வழி இருக்கும் போது எதுக்கு உயிரை எடுக்கவேணும் ?  குடும்ப வன்முறைகள் உச்சத்தை தொட முன் பிரிந்து செல்வதே சிறந்தவழி ஆனால் இங்கு பிரிந்து செல்ல முயற்சித்ததுக்காக மனைவி உயிரை எடுத்ததுபோல் தெரிகின்றது. 
Link to comment
Share on other sites

கனடா|ஸ்காபரோவில் தமிழ்ப் பெண் கொலை!

கணவர் சரணடைந்தார்

செப்டம்பர் 12, 2019

கனடா, ஸ்காபரோவில் எல்ஸ்மியர் / கொன்லின்ஸ் சந்திப்புக்கருகில் வசித்துவந்த 27 வயதுடைய தர்ஷிகா ஜெகநாதன் புதனன்று, வாள் வெட்டுக்கு இலக்காகி மரணமடைந்தார். இவரது கொலையில் சம்பந்தப்பட்டவர் என்ற காரணத்துக்காக 38 வயதுடைய சசிகரன் தனபாலசிங்கம் காவல்துறையால் வழக்குப் பதியப்பட்டுள்ளார்.

image-1.jpg
தர்ஷிகா ஜெகநாதன்

எல்ஸ்மியர் / கொன்லின்ஸ் சந்திப்பிலுள்ள ஃபிஷெறி வீதியில் மாலை 6:15 மணியளவில் ஒரு ஆண் வாளுடன் ஒரு பெண்ணைத் துரத்திக்கொண்டு ஓடுவதைக் கண்ட பலர் காவல்துறையினருக்கு தொலைபேசியில் தகவல் தந்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

 

image.jpg
சசிகரன் தனபாலசிங்கம்

தர்ஷிகா ஜெகநாதன் என்ற 27 வயதுடைய பெண் பலத்த வெட்டுக்காயங்களுடன் அந்த இடத்திலேயே மரணமானார் எனவும் கொலையைச் செய்தவர் எனச் சந்தேகிக்கப்படும் 38 வயதுடைய சசிகரன் தனபாலசிங்கம் ரொறோண்டோ காவல்துறையின் 42 பிரிவு அலுவலகத்துக்குத் தன் வாகனத்திலேயே சென்று சரணடைந்தார் எனவும் காவல்துறைப் பேச்சாளர் தெரிவித்தார்.

சந்தேக நபர் கொலை செய்யப்பட்ட தர்ஷிகாவின் கணவர் எனவும் அவரிடமிருந்து பிரிந்து வாழ்வதற்குத் திட்டமிட்டிருந்ததாகவும் அறியப்படுகிறது.

இந்த இருவரையும் நன்கு அறிந்தவர்களுடன் பேச விரும்புவதாக இக் கொலையை விசாரிக்கும் காவல்துறை அதிகாரிகள் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர்.

http://marumoli.com/கனடாஸ்காபரோவில்-தமிழ்ப்/?fbclid=IwAR05zNbbVvIAm6TYyPUygO7qobEkEUrFKJ9xpQC09uBOGvwlssU9md_w18g

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன கொடுமை ஐயா இது 
27 வயது?
மணமுடித்து 
பிரிந்து 
கொலையாகி போகிற வயதா? 

பேசாமல் இருப்பவர்கள் நல்லவர்கள் என்றும் 
ஒன்றும் செய்யாது இருப்பவர்களை நல்ல பிள்ளையென்றும் 
ஏதாவது நல்லது செய்யப்போய் சிறிதாக தவறுவோரை தப்பானவர்கள் 
என்று பாப்பதே எமது சமூகம்.

இப்படி வாளால் வெட்ட கூடியவர் ஏற்கனவே சைக்கோவாகத்தான் இருந்து இருப்பார் 
இப்படியான அறிகுறி உள்ளவர்களை பற்றிய கவனம் அவதானிப்பு நிர்ச்சயம் தேவை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாட்டில்... வாளால், வெட்டி கொலை செய்யும் அளவுக்கு வந்ததை நினைக்க,
மிகவும் வேதனையாக உள்ளது.

இருவருக்கும்... 11 வயது வித்தியாசம் எனும் போது...
பெற்றோரால் வற்புறுத்தி நிச்சயிக்கப் பட்ட திருமணமாக இருந்தால்,
அவர்களிலும் தவறு உள்ளது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, தமிழ் சிறி said:

வெளிநாட்டில்... வாளால், வெட்டி கொலை செய்யும் அளவுக்கு வந்ததை நினைக்க,
மிகவும் வேதனையாக உள்ளது.

இருவருக்கும்... 11 வயது வித்தியாசம் எனும் போது...
பெற்றோரால் வற்புறுத்தி நிச்சயிக்கப் பட்ட திருமணமாக இருந்தால்,
அவர்களிலும் தவறு உள்ளது.

மிகவும் வேதனையான விடயம்.  உண்மை பொய் தெரியாது.... என் காதுக்கு எட்டியது.... அந்த பெண் இந்தியாவில் இருந்ததாகவும்.... கனடாவில் இருந்த ஆணை திருமணம் செய்து அவர் ஸ்பான்சர் செய்து கனடா வ‌ந்தா‌ர் எனவும்.... இங்கு citizenship கிடைத்ததும் விவாகரத்து கேட்டார் எனவும்.... இ‌ங்கு வருவதற்காக திருமண நாடகமாடி த‌ன்னை ஏமாற்றிய விரக்தியில் தான் இச்சம்பவம் நடந்ததாக கேள்விபட்டேன். 

Link to comment
Share on other sites

22 minutes ago, Sabesh said:

மிகவும் வேதனையான விடயம்.  உண்மை பொய் தெரியாது.... என் காதுக்கு எட்டியது.... அந்த பெண் இந்தியாவில் இருந்ததாகவும்.... கனடாவில் இருந்த ஆணை திருமணம் செய்து அவர் ஸ்பான்சர் செய்து கனடா வ‌ந்தா‌ர் எனவும்.... இங்கு citizenship கிடைத்ததும் விவாகரத்து கேட்டார் எனவும்.... இ‌ங்கு வருவதற்காக திருமண நாடகமாடி த‌ன்னை ஏமாற்றிய விரக்தியில் தான் இச்சம்பவம் நடந்ததாக கேள்விபட்டேன். 

ஆனால் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பிலுள்ள செய்தியின் படி

2015 இல் இந்தியாவில் திருமணம் முடித்துள்ளனர். 2017 இல் கொலை செய்யப்பட்ட பெண் கனடா வந்துள்ளார். வந்து சில மாதங்களிலேயே மனைவியை அடித்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு பின் பிணையில் வந்துள்ளார். இரண்டு மாதங்களுக்கு பிறகு பிணை விதிகளை மீறியமைக்காக மீண்டும் கைது செய்யப்பட்டு பின்னர் மனைவியை எக்காரணம் கொண்டும் சந்திக்க கூடாது என்ற நிபந்தனையில் probation இல் இருக்கும் போதுதான் கொலை செய்துள்ளார்.

2017 இல் வந்த ஒருவரால் 2019 இல் குடியுரிமை பெற முடியாதல்லவா? ஆகக் குறைந்தது 1095 நாட்கள் (3 வருடங்கள்) கனடா மண்ணில் இருந்து இருக்க வேண்டும். 

இப் பெண் நிலக்கீழ் அறையில் தான் கடந்த 2 வருடங்களாக தனியாக வசித்து வந்துள்ளார். டொலர் கடையில் வேலை செய்து தன் தேவைகளை நிறைவேற்றியிருக்கின்றார்.

https://globalnews.ca/news/5896906/sasikaran-thanapalasingam-charged/

காணொளியையும் பார்க்கவும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

image-4-720x450.jpg

கொலை செய்யப்பட்ட தர்ஷிகாவின் உடலை இலங்கைக்கு கொண்டு வர முடிவு!

ஸ்கார்பரோவில் கொலை செய்யப்பட்ட, தமிழ் இளம் குடும்ப பெண் தர்ஷிகா ஜெகநாதனின் உடல், அவரின் சொந்த நாடான இலங்கைக்கு வரப்படவுள்ளது.

நெருங்கிய உறவினர் யாரும் கனடாவில் இல்லாத நிலையில், உடலத்தைப் பொறுப்பேற்றுத் தாயகத்துக்கு அனுப்புவதற்காக, ஏற்பாடுகள் தீவிர படுத்தப்பட்டுள்ளது.

இதற்கு தர்ஷிகாவின் குடும்பத்தினர், நண்பர்கள் சார்பில் ரொறன்ரோவைத் தளமாகக் கொண்டியங்கும் ‘I SEE INITIATIVE’ எனும் இலாப நோக்கற்ற நிறுவனம், Go Fund Me ஊடாக ஒரு நிதி சேகரிப்பில் ஈடுபட்டுள்ளது.

கடந்த புதன்கிழமை மாலை ஸ்கார்பரோவின் கிழக்கு பகுதி- ஃபிஷரி வீதியில் உள்ள குறுக்கு வீதியில் 27 வயதான தர்ஷிகா ஜெகநாதன் கத்தியால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக, அவரது கணவரான 38 வயதான சசிகரன் தனபாலசிங்கம் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சசிகரன் – தர்ஷிகா தம்பதியினர், கடந்த 2015ஆம் ஆண்டு திருமணம் செய்துள்ளனர். எனினும் குழந்தையில்லாத காரணத்தால் சசிகரன், தர்ஷிகாவை தொடர்ந்து தாக்கி வத்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து 2017ஆம் இரண்டு வன்முறைச் சம்பவங்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்களில் இருந்து, சசிகரன் 2019ஆம் ஆண்டு பெப்ரவரியில் விடுவிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையிலேயே குறித்த கொலை நடந்துள்ளது.

எனினும், இந்த கொலைக்கான காரணம் இதுவரை தெளிவாக வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/கொலை-செய்யப்பட்ட-தர்ஷிகா/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

சசிகரன் – தர்ஷிகா தம்பதியினர், கடந்த 2015ஆம் ஆண்டு திருமணம் செய்துள்ளனர். எனினும் குழந்தையில்லாத காரணத்தால் சசிகரன், தர்ஷிகாவை தொடர்ந்து தாக்கி வத்துள்ளார்

இந்தப் பேய்க் குஞ்சுக்குக்.....குழந்தை பிறக்காதது....ஒரு நல்ல விடயம் போலவே உள்ளது...!😑

Link to comment
Share on other sites

13 hours ago, தமிழ் சிறி said:

image-4-720x450.jpg

கொலை செய்யப்பட்ட தர்ஷிகாவின் உடலை இலங்கைக்கு கொண்டு வர முடிவு!

ஸ்கார்பரோவில் கொலை செய்யப்பட்ட, தமிழ் இளம் குடும்ப பெண் தர்ஷிகா ஜெகநாதனின் உடல், அவரின் சொந்த நாடான இலங்கைக்கு வரப்படவுள்ளது.

நெருங்கிய உறவினர் யாரும் கனடாவில் இல்லாத நிலையில், உடலத்தைப் பொறுப்பேற்றுத் தாயகத்துக்கு அனுப்புவதற்காக, ஏற்பாடுகள் தீவிர படுத்தப்பட்டுள்ளது.

இதற்கு தர்ஷிகாவின் குடும்பத்தினர், நண்பர்கள் சார்பில் ரொறன்ரோவைத் தளமாகக் கொண்டியங்கும் ‘I SEE INITIATIVE’ எனும் இலாப நோக்கற்ற நிறுவனம், Go Fund Me ஊடாக ஒரு நிதி சேகரிப்பில் ஈடுபட்டுள்ளது.

கடந்த புதன்கிழமை மாலை ஸ்கார்பரோவின் கிழக்கு பகுதி- ஃபிஷரி வீதியில் உள்ள குறுக்கு வீதியில் 27 வயதான தர்ஷிகா ஜெகநாதன் கத்தியால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக, அவரது கணவரான 38 வயதான சசிகரன் தனபாலசிங்கம் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சசிகரன் – தர்ஷிகா தம்பதியினர், கடந்த 2015ஆம் ஆண்டு திருமணம் செய்துள்ளனர். எனினும் குழந்தையில்லாத காரணத்தால் சசிகரன், தர்ஷிகாவை தொடர்ந்து தாக்கி வத்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து 2017ஆம் இரண்டு வன்முறைச் சம்பவங்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்களில் இருந்து, சசிகரன் 2019ஆம் ஆண்டு பெப்ரவரியில் விடுவிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையிலேயே குறித்த கொலை நடந்துள்ளது.

எனினும், இந்த கொலைக்கான காரணம் இதுவரை தெளிவாக வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

http://athavannews.com/கொலை-செய்யப்பட்ட-தர்ஷிகா/

 

12 hours ago, புங்கையூரன் said:

இந்தப் பேய்க் குஞ்சுக்குக்.....குழந்தை பிறக்காதது....ஒரு நல்ல விடயம் போலவே உள்ளது...!😑

குழந்தையில்லாத காரணம் என்று கூறுவது கூட மிகத் தவறான காரணமாகவே இருக்கின்றது. ஒன்று இல்லாமையால் புருசன் கோவிச்சு அடிச்சு கொண்டு போட்டுட்டான் என்ற நியாயப்படுத்தலும் இப்படிச் சொல்வதில் இருக்கின்றது.

தர்சிகா கனடா வந்தது 2017 இல் (இந்தியாவில் திருமணம் 2015). வந்து இரண்டு மூன்று மாதங்களில் தன் உயிருக்கு அச்சுறுத்தல் வரும் அளவுக்கு கணவன் அடித்து துன்புறுத்தியதாக தனியாவே சென்று பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். இவருக்கு கனடாவில் குடும்பமோ சகோதரங்களோ இல்லாத நிலையில் புதிதாக வந்த நாட்டில் உள்ள பொலிஸ் நிலையத்துக்கு சென்று முறைப்பாடு செய்யும் அளவுக்கு வன்முறை நிகழ்ந்து இருக்கு. தர்சிகா ஊரில் உள்ள தன் பெற்றோருடன் கதைக்கும் உரிமை கூட மறுக்கப்பட்டு இருந்துள்ளது.

முதல் தடவை முறைப்பாடு செய்யப்பட்டதில் இருந்து தனியாகவே வாழ்ந்து இருக்கின்றார். ஆக ஒன்றாக சேர்ந்து வாழ்ந்ததே ஒரு சில மாதங்கள் தான். இதில் கர்ப்பமாகவில்லை என்று குற்றம்சாட்ட எந்த ஏது நிலையும் இல்லை.

தர்சிகா தன் வாழ்வை வாழ மிகவும் பிரயத்தனப்பட்டு இருக்கின்றார். ஒரு போராளியாகவே இறக்கும் வரைக்கும் இருந்துள்ளார். குடும்ப வன்முறையின் victim  ஆக இல்லாமல் அதில் இருந்து survivor ஆக போராடியிருக்கின்றார். தட்டத் தனியாளாக கனடாவில் இறுதி வரைக்கும் தன்னால் ஏலுமானவரை முயன்று வாழத் துடித்து இருக்கின்றார்.

கொலை செய்யப்பட்டு இறந்து கிடக்கும் போது கூட கொலையாளி பல தடவை தலையிலும் உடலிலும் தாக்கினார் என சாட்சிகள் சொல்கின்றன. நல்ல வெயிலான நேரத்தில் நிறை வெறியில் தர்சிகா வேலையில் இருந்து பேரூந்தில் இறங்கி வரும் வரைக்கும் காத்திருந்து கத்தியால் எண்ணற்ற தடவை குத்தி கொலை செய்து இருக்கின்றார்

-----
ஒரு பெண் தன் கணவனால் வன்முறைக்குள்ளாகி, அதை பொலிசில் முறையிட்டு, விவாரகத்தாகி பிரியவும் முற்பட்ட பின்னரும் அதே ஆணால் வன்முறையால் கொலையாவது என்பது குடும்ப வன்முறைகளுக்குள்ளாகும் பெண்களுக்கு சரியான பாதுகாப்பு இன்னும் கனடாவில் இல்லை என்பதைத் தான் இது காட்டுகின்றது

----
பொதுவாக இப்படியா விடயங்களை இலகுவாக கடந்து விடும் இம் முறை கொஞ்சம் ஆழமாக நோக்குகின்றது.

செவ்வாய்க் கிழமை ஈஸ்ட் எப் எம் வானொலியின் காலை நேர நிகழ்வில் ஒரு மணித்தியாலம் இக் கொலை தொடர்பான தகவல்களையும், குடும்ப வன்முறைக்கு எதிராக எடுக்க கூடிய சட்ட நடவடிக்கைகளையும் பற்றி விபரமாக கதைத்து இருந்தனர்.

---
தர்சிகாவின் உடலை இலங்கைக்கு அனுப்ப தேவைப்படும் நிதிப் பங்களிப்பை வழங்க:

https://www.gofundme.com/f/tcqe4-in-memory-of-tharshika-jeganathan?pc=fb_dn_postdonate_r&rcid=r01-156857811409-2aa560ff13544138&utm_source=facebook&utm_medium=social&utm_campaign=fb_dn_postdonate_r&fbclid=IwAR2Du0ffHDM4h-XV8Vj-ktLy6y4SYr4D208dfpE0aM1Hi0mDWeklAl9Yhdc

--
இன்றும் காலையில் பிரம்டன்  எனும் ரொரன்டோ பெரும்பாகத்தில் உள்ள நகரில் 64 வயதான கணவனால் 58 வயதான மனைவி கடுமையாக தாக்கபட்டு பலியானார் என செய்திகள் தெரிவிக்கின்றன (தமிழர்கள் அல்ல)

Link to comment
Share on other sites

சேர்ந்து வாழ்வது பிடிக்கவில்லையென்றால், கொல்லவேண்டிய தேவையென்ன? பிரிந்து சென்றால், இருவரும் நிம்மதியாக வாழலாமே? 

இந்தக் கொலை தொடர்பாகத் தேடியபோது, கனடாவில் நடைபெறும் தமிழர்களுக்கிடையிலான வன்முறைகள், ஆயுதக் குழுக்கள் என்று சில தகவல்களும் கண்ணில் பட்டது.

குறிப்பாக, ஏ. கே கண்ணன் குழு, வல்வெட்டித்துறைக் குழு, சில்வர் போய்ஸ் என்று பல்வேறு தமிழ் இளைஞர் குழுக்கள் வன்முறைகளில் ஈடுபட்டு வருவதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இக்குழுக்களின் தோற்றம் மற்றும் செயற்பாடுகள் பற்றி ஏன் இங்கே எவரும் எழுதுவதில்லை? இவைபற்றி அறிந்துகொள்ள விரும்புகிறேன்.

Link to comment
Share on other sites

2 hours ago, ragunathan said:

 

குறிப்பாக, ஏ. கே கண்ணன் குழு, வல்வெட்டித்துறைக் குழு, சில்வர் போய்ஸ் என்று பல்வேறு தமிழ் இளைஞர் குழுக்கள் வன்முறைகளில் ஈடுபட்டு வருவதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இக்குழுக்களின் தோற்றம் மற்றும் செயற்பாடுகள் பற்றி ஏன் இங்கே எவரும் எழுதுவதில்லை? இவைபற்றி அறிந்துகொள்ள விரும்புகிறேன்.

இக் குழுக்கள் 99 வீதம் அடக்கப்பட்டு பலர் நாடு கடத்தப்பட்டு விட்டனர். கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக தமிழ் குழு வன்முறை என்பது பெருமளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டு விட்டது.

Link to comment
Share on other sites

Quote

இந்த கொலைக்கான காரணம் இதுவரை தெளிவாக வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கொலை செய்தவரின் நெருங்கிய நண்பரை கிழக்கு எவ்.எம்மின்(eastfm 102.7) ரமணன் செவ்வி கண்டிருந்தார். அச்செவ்வியின் படி  மேற்படி பெண்ணின் ஆண் நண்பர் பிரான்சிலிருப்பதாகவும் அதனை மறைத்து இப்பெண் மேற்படி கொலை செய்தவரை ஏமாற்றி திருமணம் செய்து கனேடிய பி.ஆரை எடுத்துள்ளார். பின்னர் விவாகரத்து கோரியுள்ளார். மேற்படி கொலை செய்தவர் ஏமாற்றமும் விரக்தியும் அடைந்ததாக தெரிகிறது. மேற்படி பெண் பிரான்சுக்கான பிரயாண சீட்டையும் வாங்கி வந்திருப்பதாகவும் இதனை அறிந்து  கோபத்தில் கத்தியால் தாறுமாறாக வெட்டி கொலை செய்தார் என்றும் கூறப்படுகிறது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 9/13/2019 at 9:30 PM, Sabesh said:

மிகவும் வேதனையான விடயம்.  உண்மை பொய் தெரியாது.... என் காதுக்கு எட்டியது.... அந்த பெண் இந்தியாவில் இருந்ததாகவும்.... கனடாவில் இருந்த ஆணை திருமணம் செய்து அவர் ஸ்பான்சர் செய்து கனடா வ‌ந்தா‌ர் எனவும்.... இங்கு citizenship கிடைத்ததும் விவாகரத்து கேட்டார் எனவும்.... இ‌ங்கு வருவதற்காக திருமண நாடகமாடி த‌ன்னை ஏமாற்றிய விரக்தியில் தான் இச்சம்பவம் நடந்ததாக கேள்விபட்டேன். 

20 minutes ago, nunavilan said:

கொலை செய்தவரின் நெருங்கிய நண்பரை கிழக்கு எவ்.எம்மின்(eastfm 102.7) ரமணன் செவ்வி கண்டிருந்தார். அச்செவ்வியின் படி  மேற்படி பெண்ணின் ஆண் நண்பர் பிரான்சிலிருப்பதாகவும் அதனை மறைத்து இப்பெண் மேற்படி கொலை செய்தவரை ஏமாற்றி திருமணம் செய்து கனேடிய பி.ஆரை எடுத்துள்ளார். பின்னர் விவாகரத்து கோரியுள்ளார். மேற்படி கொலை செய்தவர் ஏமாற்றமும் விரக்தியும் அடைந்ததாக தெரிகிறது. மேற்படி பெண் பிரான்சுக்கான பிரயாண சீட்டையும் வாங்கி வந்திருப்பதாகவும் இதனை அறிந்து  கோபத்தில் கத்தியால் தாறுமாறாக வெட்டி கொலை செய்தார் என்றும் கூறப்படுகிறது. 

நம்பிக்கை துரோகம் என்றால் கட்டுக்கடங்காத ஆத்திரம் வருவது இயல்பு  இருப்பினும் கொலை  முடிவல்ல.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த பெண்ணை புருசன் ஒருதரம் கத்தியால் குத்தி கொன்றான்.

ஆனால் நாம்? - ஆயிரம் முறை வார்த்தையால் வகுந்து எடுக்கிறோம்.

கொலையூண்டு கிடக்கும் பெண் யாரென்றே தெரியாமல் எப்படி இந்தமாதிரியான பிரான்சில் காதலன், விசாவுக்கு கல்யாணம் போன்ற அவதூறுகளை கொஞ்சமும் மன சஞ்சலமின்றி பொதுவெளியில் காவ முடிகிறது?

கொலை செய்தவரின் நெருங்கிய நண்பரிடம் உண்மையை தேடும் போக்கிலி ஊடகம். அந்த பெண்ணின் தரப்பில் ஒருவர் கூடவா கிடைக்கவில்லை?

பெரியார் சொல்லவே இல்லை. 

ஆனால் இதுதான் உண்மை.

#நாம் காட்டுமிராண்டிகள்

 

Link to comment
Share on other sites

இந்த திரியின் தலைப்பிலும், உள்ளடக்கத்தில் 'படுகொலை செய்த ஈழத் தமிழர்' மற்றும் 'படுகொலை செய்துள்ளார்' என்றும் குறிப்பிடுவது சட்டப்படி தவறு; தர்மமும் இல்லை. 

'கொலை செய்தார் எனக்குற்றம் சாட்டப்பட்டுள்ளார்' என்பதே சரியான செய்தி. அதாவது சட்டப்படி முதலாம் தர குற்றச்சாட்டு, திட்டமிட்ட கொலை குற்றச்சாட்டு. 

நீதிமன்றத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்ட பின்னரே இவர் படுகொலை செய்தாரா இல்லையா என்ற முடிவிற்கு வரலாம்.   அதுவரை குற்றம்சாட்டப்பட்டவர் குற்றவாளி இல்லை, குற்றம்சாட்டப்பட்டவர். 

Link to comment
Share on other sites

12 hours ago, ampanai said:

இந்த திரியின் தலைப்பிலும், உள்ளடக்கத்தில் 'படுகொலை செய்த ஈழத் தமிழர்' மற்றும் 'படுகொலை செய்துள்ளார்' என்றும் குறிப்பிடுவது சட்டப்படி தவறு; தர்மமும் இல்லை. 

'கொலை செய்தார் எனக்குற்றம் சாட்டப்பட்டுள்ளார்' என்பதே சரியான செய்தி. அதாவது சட்டப்படி முதலாம் தர குற்றச்சாட்டு, திட்டமிட்ட கொலை குற்றச்சாட்டு. 

நீதிமன்றத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்ட பின்னரே இவர் படுகொலை செய்தாரா இல்லையா என்ற முடிவிற்கு வரலாம்.   அதுவரை குற்றம்சாட்டப்பட்டவர் குற்றவாளி இல்லை, குற்றம்சாட்டப்பட்டவர். 


பலர் பார்க்கும் நல்ல வெயில் பொழுதொன்றில் பல முறை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு, தான் தான் கொலையாளி என்று ஒப்புக் கொண்டு இரத்தம் தோய்ந்த ஆடைகளுடன் பொலிசில் சரணடைந்தவரை (காவல் நிலையத்தில் இருந்த பொலிஸ்காரர் ஒருவரையும் தாக்கியுமுள்ளார்) இன்னும் சந்தேக நபர் என்று மெழுகு பூசி அழைக்க தேவையில்லை,

நீதிமன்றில் குற்றம் நிரூபிக்கப்பட்ட பின் தான் குற்றவாளி என்று (தானே ஒத்துக் கொண்டு சரணடைந்த பின்னரும் கூட) படுகொலையாளிகளை அழைக்க வேண்டும் என்ற உங்களின் இந்த அளவுகோலை தமிழர் அல்லாதவர்கள் மீதும் பிரயோகிப்பீர்களா.... போர்க்குற்றவாளிகள் உட்பட?

16 hours ago, nunavilan said:

கொலை செய்தவரின் நெருங்கிய நண்பரை கிழக்கு எவ்.எம்மின்(eastfm 102.7) ரமணன் செவ்வி கண்டிருந்தார். அச்செவ்வியின் படி  மேற்படி பெண்ணின் ஆண் நண்பர் பிரான்சிலிருப்பதாகவும் அதனை மறைத்து இப்பெண் மேற்படி கொலை செய்தவரை ஏமாற்றி திருமணம் செய்து கனேடிய பி.ஆரை எடுத்துள்ளார். பின்னர் விவாகரத்து கோரியுள்ளார். மேற்படி கொலை செய்தவர் ஏமாற்றமும் விரக்தியும் அடைந்ததாக தெரிகிறது. மேற்படி பெண் பிரான்சுக்கான பிரயாண சீட்டையும் வாங்கி வந்திருப்பதாகவும் இதனை அறிந்து  கோபத்தில் கத்தியால் தாறுமாறாக வெட்டி கொலை செய்தார் என்றும் கூறப்படுகிறது. 

நுணா இந்த செவ்வியை நீங்கள் உங்கள் காதுகளால் கேட்டீர்களா?

நான் ஏன் இப்படிக் கேட்கின்றேன் என்றால், ரமணனின் தர்சிகா தொடர்பான காலை நிகழ்வை நான் கடைசி 6 நிமிடங்கள் வரைக்கும் கேட்டுக் கொண்டு இருந்தேன். நீதன் ஷான் தன் இறுதி குறிப்பினை கதைக்கும் வரைக்கும் கேட்டனான். பின்னர் எழில் என்பவர் இறுதியாக கதைத்துக் கொண்டு இருந்தார். ஆனால் அது வரைக்கும் ரமணன் படுகொலையாளியின் நண்பரை செவ்வி எடுத்திருக்கவில்லை. இறுதி 6 நிமிடங்களில் எடுத்திருக்க வாய்ப்புகளும் மிகக் குறைவு என்பதால்.

அப்படி எடுத்திருப்பின் வேலிக்கு ஓணானை சாட்சிக்கு கூப்பிட்ட கதையாக தான் இருந்திருக்கும். சசிதரனின் குடும்பம் அப் பெண் மீது இது மட்டுமல்ல, இதை விட அதிகமாக வசைகளை அள்ளிக் கொட்டிக் கொண்டு இருக்கின்றனர்.

Link to comment
Share on other sites

15 hours ago, goshan_che said:

இந்த பெண்ணை புருசன் ஒருதரம் கத்தியால் குத்தி கொன்றான்.

ஆனால் நாம்? - ஆயிரம் முறை வார்த்தையால் வகுந்து எடுக்கிறோம்.

கொலையூண்டு கிடக்கும் பெண் யாரென்றே தெரியாமல் எப்படி இந்தமாதிரியான பிரான்சில் காதலன், விசாவுக்கு கல்யாணம் போன்ற அவதூறுகளை கொஞ்சமும் மன சஞ்சலமின்றி பொதுவெளியில் காவ முடிகிறது?

கொலை செய்தவரின் நெருங்கிய நண்பரிடம் உண்மையை தேடும் போக்கிலி ஊடகம். அந்த பெண்ணின் தரப்பில் ஒருவர் கூடவா கிடைக்கவில்லை?

பெரியார் சொல்லவே இல்லை. 

ஆனால் இதுதான் உண்மை.

#நாம் காட்டுமிராண்டிகள்

 

ஒரு பெண், தனக்கு பிடிக்காத ஒரு திருமண உறவில் இருந்து விலகி , தனக்கு பிடித்த ஒரு திருமண உறவை நாடுவது கூட எம் சமூகத்தில் பலருக்கு ஒத்துக் கொள்ள முடியவில்லை என்பதைத்தான் இந்த அவதூறுகள் காட்டுகின்றன.  இதனால் தான் இன்னும் படுகொலையாளியின் மனம் புண்படுவதை விரும்பாதவர்கள் கூட இருக்கின்றனர்.


நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, goshan_che said:

இந்த பெண்ணை புருசன் ஒருதரம் கத்தியால் குத்தி கொன்றான்.

ஆனால் நாம்? - ஆயிரம் முறை வார்த்தையால் வகுந்து எடுக்கிறோம்.

கொலையூண்டு கிடக்கும் பெண் யாரென்றே தெரியாமல் எப்படி இந்தமாதிரியான பிரான்சில் காதலன், விசாவுக்கு கல்யாணம் போன்ற அவதூறுகளை கொஞ்சமும் மன சஞ்சலமின்றி பொதுவெளியில் காவ முடிகிறது?

கொலை செய்தவரின் நெருங்கிய நண்பரிடம் உண்மையை தேடும் போக்கிலி ஊடகம். அந்த பெண்ணின் தரப்பில் ஒருவர் கூடவா கிடைக்கவில்லை?

பெரியார் சொல்லவே இல்லை. 

ஆனால் இதுதான் உண்மை.

#நாம் காட்டுமிராண்டிகள்

முகநூலில் எனக்கு  நன்கு  தெரிந்த தம்பிகள்  சிலரும்   இந்த  பெண்  குறித்தம்
அவரது காதலன்  குறித்தும்
அவர் வெளிநாடு  வருவதற்காகவும்
தனது  காதலனை  கரம்  பிடிக்கவுமே  
இவரை  பயன்படுத்தினார்  என்று  எழுதினார்கள்
நான் அவர்களுடன் இது  தவறு  இவ்வாறு  ஒருவரது  தனிப்பட்ட விடயங்களை
பொது  வெளியில்  இவ்வாறு  எழுதுவது  தவறு
எழுதக்கூடாது என சண்டை  பிடித்தபோது
பெண்கள்  என்றவுடன் அவர்களுக்காக  இரக்கத்தை  மட்டும் காட்டாதீர்கள்  அண்ணா
எங்களிடம்  முழு  ஆதாரம் இருக்கு
இல்லாமல்  பேசக்கூடியவர்களா  நாம் என கேட்டார்கள்
நான்  ஒதுங்கிவிட்டேன்

அங்கே எழுதியவர்கள் பொழுது  போக்குக்கு  எழுதுபவர்கள்  அல்ல..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, நிழலி said:

ஒரு பெண், தனக்கு பிடிக்காத ஒரு திருமண உறவில் இருந்து விலகி , தனக்கு பிடித்த ஒரு திருமண உறவை நாடுவது கூட எம் சமூகத்தில் பலருக்கு ஒத்துக் கொள்ள முடியவில்லை என்பதைத்தான் இந்த அவதூறுகள் காட்டுகின்றன.  இதனால் தான் இன்னும் படுகொலையாளியின் மனம் புண்படுவதை விரும்பாதவர்கள் கூட இருக்கின்றனர்.


நன்றி

ஒரு பெண் தனக்கு பிடித்தவரை  திருமணம் செய்வதற்கு சகல உரிமைகளும் அவருக்கு உண்டு.அதற்கு நானும் ஆதரவு. ஆனால் ஒரு பெண் தான் விரும்பியவரை மணம் முடிப்பதற்கு எடுக்கும் ஏமாற்று வேலைகளே சிக்கலாக வருகின்றது.
இல்லையேல்.......
நடந்த சம்பவத்தின் கொலையாளி மனநோயாளியாகவும் இருக்கலாம் அல்லவா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1. இன்றைய உலகில் முன்னாள் காதலன்/காதலி இல்லாதவர்கள். கட்டிய கணவனை தவிர வேறு யாரையும் முன்பு நேசிக்காமல் கல்யாணம் முடிப்பவர்கள் எத்தனை பேர்? ஆகவே ஒரு பெண்ணுக்கு முன்பு ஒருவர் மீது நேசம் இருந்தது (இருந்தது என்றே வைப்போம் -பேச்சுக்கு) என்பது மட்டுமே அவர் கல்யாணம் முடித்ததே எமாற்றி கனடா வரத்தான் என்று ஆகாது. ஆகவே இந்த ஆதாரங்கள் எல்லாம் “காகம் காகமாக சத்தி எடுத்த” கதைதான்.

2. இந்த விடயம் நீதி மன்றில் உள்ளது. இப்படியான விடயங்களை கதைப்பதே நீதிமன்ற அவமதிப்பாகலாம். ஆதாரம் இருந்தால் கோட்டில் அல்லவா கொடுக்க வேண்டும்? பேஸ்புக்கிலா கொடுப்பது ?

3. இங்கே சிலர், ஏமாற்றிவள்தானே, சாகத்தான் வேண்டும் என்ற மனநிலையில் இருப்பது தெரிகிறது. இப்படி ஏமாற்றியதுக்கு  (ஏமாற்றினாலும்-பேச்சுக்கு) ஒரு கொலை எந்தவகையில் சரியான எதிர்வினையாகும்? இந்த பெண் இந்த மனிதனின் உறவுகளை கொன்றிருக்காதவரையில், அவரை இந்த மனிதன் கொன்றது அநியாயமே. எனவே இந்த பெண் இப்படி செய்தார், அப்படிச் செய்தார், இதனால்தான் அப்பாவி மனிதன் கொலைவரை போனார் என்பதெல்லாம் ஆணாதிக்க, வன்முறை மனோநிலையே.

33 minutes ago, விசுகு said:

முகநூலில் எனக்கு  நன்கு  தெரிந்த தம்பிகள்  சிலரும்   இந்த  பெண்  குறித்தம்
அவரது காதலன்  குறித்தும்
அவர் வெளிநாடு  வருவதற்காகவும்
தனது  காதலனை  கரம்  பிடிக்கவுமே  
இவரை  பயன்படுத்தினார்  என்று  எழுதினார்கள்
நான் அவர்களுடன் இது  தவறு  இவ்வாறு  ஒருவரது  தனிப்பட்ட விடயங்களை
பொது  வெளியில்  இவ்வாறு  எழுதுவது  தவறு
எழுதக்கூடாது என சண்டை  பிடித்தபோது
பெண்கள்  என்றவுடன் அவர்களுக்காக  இரக்கத்தை  மட்டும் காட்டாதீர்கள்  அண்ணா
எங்களிடம்  முழு  ஆதாரம் இருக்கு
இல்லாமல்  பேசக்கூடியவர்களா  நாம் என கேட்டார்கள்
நான்  ஒதுங்கிவிட்டேன்

அங்கே எழுதியவர்கள் பொழுது  போக்குக்கு  எழுதுபவர்கள்  அல்ல..

 

Link to comment
Share on other sites

1 hour ago, நிழலி said:

பலர் பார்க்கும் நல்ல வெயில் பொழுதொன்றில் பல முறை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு, தான் தான் கொலையாளி என்று ஒப்புக் கொண்டு இரத்தம் தோய்ந்த ஆடைகளுடன் பொலிசில் சரணடைந்தவரை (காவல் நிலையத்தில் இருந்த பொலிஸ்காரர் ஒருவரையும் தாக்கியுமுள்ளார்) இன்னும் சந்தேக நபர் என்று மெழுகு பூசி அழைக்க தேவையில்லை,

நீதிமன்றில் குற்றம் நிரூபிக்கப்பட்ட பின் தான் குற்றவாளி என்று (தானே ஒத்துக் கொண்டு சரணடைந்த பின்னரும் கூட) படுகொலையாளிகளை அழைக்க வேண்டும் என்ற உங்களின் இந்த அளவுகோலை தமிழர் அல்லாதவர்கள் மீதும் பிரயோகிப்பீர்களா.... போர்க்குற்றவாளிகள் உட்பட?

கனேடிய சட்டம் என்ற அளவுகோல் என்பது கனடாவில் உள்ள ஊடகங்களை கூட அளப்பது. எந்த கொலையை செய்தவரும் கொலையை ஒப்புக்கொண்டாலும்,  ஊடகங்கள் அவரை கொலையாளி என எழுதுவதில்லை. ஏனெனில் சட்டத்தால் நிரூபிக்கும்வரை அவர் நிரபராதி.

கனடாவின் அளவுகோல் : ஆயிரம் குற்றவாளிகள் தண்டிக்கப்படாவிட்டாலும் ஒரு நிரபராதி தண்டிக்கப்பட கூடாது என்பதே.

இந்த திரியின் தலைப்பை கனேடிய ஊடகத்தில் எழுத முடியாது. எழுதினால் அந்த ஊடகம் அரச சட்ட நடவடிக்கைக்கு உள்ளாகும்.   இது தமிழர் எனற கனேடியருக்கும் தமிழர் அல்லாத கனேடியருக்கும் பொதுவானது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கொலை தொடர்பாக நிறையவே செய்திகள் காதுவழி புகுந்து கடந்து செல்கின்றன. இரண்டுவிதமான பலத்த சர்ச்சை நம்மக்களிடையே உருவாகி இருக்கின்றன. கொலை செய்யப்பட்ட பெண்ணின் தரப்பிலும், கொலை செய்த ஆணின் தரப்பிலும் பலர் பேசுகின்றனர். ஒரு பிரச்சனைக்கு கொலை தீர்வாகாது. இது அப்பட்டமான ஆணின் பலத்தைக்காட்டுகிறது. இங்கு உயிரிழந்துள்ளவர் பெண் இருப்பினும் ஆண்களின் அதிகபட்ச கருத்தாடல்கள் மட்டுமல்ல பெண்களினது நாவீச்சுக்களும் இன்னும் நாம் மீளாத ஏதோ ஒன்றுக்குள்ளேயே அகப்பட்டிருக்கிறோம் என்பதை நிரூபித்துக் கொண்டிருக்கிறது. பலரும் வெளிப்படையாக கொலைக்கு எதிராக கருத்து தெரிவித்திருக்கும் வேளையிலும் கொலையுண்ட பெண் மீதான பிம்பத்தை தாம் வாழும் சமூகத்திற்கு ஏற்றாற்போலவே மாற்றுகிறார்கள். எங்கள் சமூகம் ஆண் மீதான பிம்பத்தை எப்போதுமே அழுக்கற்று சிருட்டிக்கவே விரும்புகிறது. அதிலிருந்து வெளிவர விரும்பவில்லை என்பதை நாம் பழகும் நம் மினம் ஒவ்வொரு காலகட்டத்திலும் வெளிப்படுத்திக் கொண்டே இருக்கிறது. அந்த வகையிலேயே இந்த கொலை செய்யப்பட்ட பெண் மீதான கருத்தாடல்கள் பல தளங்களில் நிகழ்கின்றன. அந்த ஆண் கொலைகாரன் ஆனதற்கும், இந்தப் பெண் பிள்ளை கொல்லப்பட்டதற்கும் உண்மையிலேயே அவர்கள் இருவரும் காரணம் இல்லை. நமது சமூகமே இந்தக் கொலையை ஆணின் கையைக் கொண்டு நிகழ்த்தி இருக்கிறது. நமது சமூகத்தில் தற்காலத்தில் பெண்கள் தெளிவடைந்து வெளியே வந்தளவுக்கு ஆண்கள் வரவில்லை என்பதே நிதர்சனம். இன்னும் எல்லாவிதத்திலும் தன்னுடைய ஆளுமைக்குள் பெண்ணாணவள் தங்கவேண்டும் அதாவது கீழ்படியவேண்டும் என்ற எண்ணம் இல்லாத ஆண்கள் மிகச்சிலரே. இன்னும் சற்று உள்ளாரபோனால் ஆண் பிள்ளைகளைப் பெற்ற பெண்களின் வளர்ப்பை நாம் அலசி ஆராயவேண்டியவர்களாவோம். ஏனெனில் ஒரு ஆணின் செயல் பெண்களுக்கு எதிரான வன்முறையாகிறது என்றால் அதற்குக் காரணம் அவர்கள் வளரும் பருவத்தில் துணிச்சலான, அல்லது சுதந்திரமான பெண்கள் மீது அவர்களின் சுதந்திரத்தையும், துணிவையும் ஏற்க விரும்பாத சமூகம் அவர்கள் மீது அவதூறுகளைப்பரப்பி சமூக வெளியில் அவர்களை அவமானப்படுத்துவதில் மும்முரம் காட்டியிருக்கும். அவர்கள் மீதான துன்பியலில் ஒரு வகை சுகம் கண்டிருக்கும் அப்படிப்பட்ட ஒரு மனோ நிலையில் வளர்கின்றவர்கள். சமூக அவதூறுகளுக்கு அஞ்சி அஞ்சியே வாழ்க்கையைத் தொலைப்பவர்களாக இருக்கின்றனர்.

உண்மையிலேயே நமது சமூகம் நம்மை சுய பரிசோதனை செய்யவேண்டிய தேவை இருக்கிறது. இலகுவாக யாரோ ஒரு பெண்ணை அவள் முன்னாள் துணைவன் கொன்று விட்டான் என்பதற்கு அப்பால் அவன்- அவள் என்று அவர்கள் மீது தம் சுயகற்பனைகளைத் திணித்து சுகம் காண்பதை நிறுத்தவேண்டும். இன்று இக்கொலையின் மூலம் வெளியே வந்திருக்கும் உண்மை என்ன? இன்னும் நாங்கள் அநாகரீகமானவர்களாகவும், பெண்மையை இழிவுபடுத்தும் சைக்கோக்களாகவும் இருக்கிறோம் என்பதே உண்மை. வீட்டுக்கு வீடு நம் எல்லோருக்கும் கவுன்சிலிங் ஏதோ வகையில் தேவைப்படுகிறது. அவை வெவ்வேறு பட்ட காரணங்களுக்காகவும் இருக்கும். ஆனால் அவற்றில் முக்கியமானது. ஆண், பெண் உறவுநிலை சம்பந்தமானது. பண்பாடு என்னாவது? கலாச்சாரத்தை கடாசி எறிவதா? என்று தற்காலத்தில் மேலைத்தேயத்தில் பிள்ளைகளுக்கும் பெற்றோருக்குமான பெரும் போராட்டம் நிகழ்ந்துகொண்டு இருக்கிறது.  அதே நேரம் புலம் பெயர்ந்த நாடுகளில் உள்ளவர்கள், இந்தியா, இலங்கை என்று அடக்கமான (அதாவது தமக்கு கீழ் தலையாட்டி நிற்கும் பெண்) பெண்களைத் தேடி சென்று திருமணம் செய்ய முனைவதும், அப்படியே அங்குள்ள பெற்றோரால் பெண்பிள்ளையின் விருப்புக்கு மாறாக திருமணம் செய்து வைக்கப்படுவதும் பெற்றோருக்கு மதிப்புக் கொடுக்கும் பிள்ளைகள் தலை கவிழ்ந்து வாழ்க்கையை ஏற்பதும், வெளிநாடு வந்த பின்னர் தனித்த வாழ்வில் முகங்கொடுக்கும் ஒவ்வொரு பிடிப்பற்ற நிகழ்வுக்கும் அதனோடு ஒட்டிய வன்முறைக்கும் பின்னராக ஏற்படும் நிமிர்விற்கும் பின்னரான விவாகரத்துகளுக்கும்... அப்படியே அதனோடு ஒட்டி நிகழ்த்தப்படும் வன்முறைகள் என்று நிறையவே சொல்லிக் கொண்டு போகலாம். ஒரு சிறிய வன்முறைகூட பெரிய பாதிப்பைக் கொடுக்கும் என்பதைச் சிந்திக்கும் திறனை அதிகரிக்கவேண்டும். அநேகமாக குடும்ப வன்முறையை எடுத்துக் கொண்டால் ஆத்திரக்காரக் கணவன் தன் கையால் சுவரோ அல்லது கதவுக்கோ அருகாமையில் நிற்கும் மனைவியை ஓங்கி குத்துகிறார் என்று   வைத்துக்கொண்டால் ஒன்று அந்தக் குத்தை எதிர்கொள்ளும் மனைவி காயப்படக்கூடும் மனைவி சற்று விலகினால் சுவரைப்போரையாக்கும் அல்லது கதவை உடைக்கும். ஒரு வேளை மனைவி காயப்பட்டால் பிள்ளைகள் அவசர உதவிக்கு ஆன்புலன்சை அழைத்தால் கூடவே காவல்துறையும் வரும்.  ஒருவேளை சுவர் அல்லது கதவு உடைந்தால் ஆத்திரத்தோடு ஓங்கியவர் கையும் காயப்படும். அப்போதும் அவசர உதவிக்கு ஆன்புலன்ஸ் வரும். சரி இவற்றைப் பார்த்துக் கொண்டு பயத்தில் நிற்கும் பிள்ளைகள் மன அளவில் பெரும் பாதிப்புக்கு உள்ளாவார்கள். வெளியே தெரியாமல் மன அழுத்தம் அவர்களின் கல்வியிலிருந்து எல்லாவற்றையும் பாதிக்கும். ஆத்திரம் தெளிந்து விடும் பாதிப்பு நிலைத்துக் கொள்ளும். பொருளாதாரத்திலிருந்து ஒற்றுமை, மனவளம்வரை பாதிப்பு நீளும். ஒரு சில நிமிட ஆத்திரத்திற்கே இத்தகை நிலை என்றால் என்பதை சிந்திக்கும் அறிவை வளர்த்துக் கொள்ள முயற்சி செய்யவேண்டும். அநேகமானவர்கள் கவுன்சிலிங் செய்பவர்களை கேலியாக பேசுவதை எமது சமூகத்தில் அவதானித்திருக்கிறேன். இந்தக் கேலியான போக்கு நமக்கான நாகரீகமான வாழ்க்கை முறையை அண்டவிடாது தூரமாக்கும். ஆக நமது சமூகம் தொடர்பான நடைமுறைகளில் ஏதாவது விழிப்புணர்வு ஏற்படுத்தப்படல் வேண்டும் என்பதைத் தவிர அக்கொலை தொடர்பாக எதுவும் பேச முடியவில்லை. எங்கிருந்து தொடங்குவது என்றுதான் யாருக்கும் தெரியவில்லை.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மேலும் தொடருங்கள் வாசிக்க காத்திருக்கிறோம். நிலாமதி அக்கா
    • "இப்பொது Neanderthals (Homo neanderthalensis) இன் மரபணு இப்போதுள்ள மனித வர்க்கத்தில் 2 - 2.5% இருக்கிறது என்பது பின்னைய முடிவு" ஆம் , அது சரி , ஏனென்றால்,     Though Modern humans and Neanderthals lived in separate regions evolving along separate evolutionary lineages for hundreds of thousands of years, Neanderthals are still our closest currently known relative. Because of that evolutionary proximity, despite being recognized as different species, it is still possible that members of our two species exchanged genetic information. This exchange of DNA is called introgression, or interbreeding. Neanderthal-Homo sapiens interbreeding Neanderthals are known to contribute up to 1-4% of the genomes of non-African modern humans, depending on what region of the word your ancestors come from, and modern humans who lived about 40,000 years ago have been found to have up to 6-9% Neanderthal DNA (Fu et al., 2015).  ............................................................... "சிங்கமும், மனிதனும் species அடிப்படை யில் மிக தொலைவு என்பதால் சாத்திய கூறுகள் மிக, மிக  குறைவு என்பதே இப்பொது நம்ப கூடியது" ஆம், அது முற்றிலும் சரியான வாதம்  ................................................................... "மகாவம்சம்  சிங்கம் என்ற சொல்லை மிருகத்தை குறிக்க பயன்படுத்தியதா அல்லது அந்த தன்மை மனிதன் (போன்ற) குறிக்க பயன்படுத்தியதா. " கட்டாயம் சிங்கத்தைக் [மிருகத்தைக்] குறிக்கத்தான் பயன்படுத்தப் பட்டுள்ளது தெளிவாக அங்கு தெரிகிறது  ஆறாம் அத்தியாயம் / விஜயன் வருகையில் [CHAPTEE VI / THE COMING OF VIJAYA ]  "மற்றவர்கள் அங்கும் இங்குமாக ஓடி விட்டனர். ஆனல் அவள் [விஜயனின் தாய்], சிங்கம் வந்த அதே பாதையில் ஓடினாள் .... தூரத்தில் அவளைப் பார்த்தது. உடனே காமவெறி சிங்கத்தைப் பற்றிக்கொண்டது. வாலைக் குழைத்துக் [ஆட்டிக்] கொண்டும், காதுகளை மடக்கிக் கொண்டும் அவளை நோக்கி வந்தது ....  அவளைத் தனது முதுகின் மீது சுமந்து கொண்டு வேகமாகத் தனது குகையைச் சென்றடைந்தது. அங்கு சிங்கம் அவளுடன் கூடியது. இந்தக் கூடலின் விளவாக ராஜகுமாரி இரட்டைக் குழந்தைகளைப் பெற்றெடுத்தாள். ஒன்று ஆண் [சீகபாகு / சிங்கபாகு /Sihabahu / Sinhabahu] ; ஒன்று பெண் [சிங்கசீவலி / சீகவலி / Sinhasivali or Sihasivali]. [the other folk fled this way and that, but she fled along the way by which the lion had come ...  love (for her) laid hold on him, and he came towards her with waving tail and ears laid back ...  took her  upon his back and bore her with all speed to his cave, and there he was united with her, and from this union with him the princess in time bore twin-children, a son and a daughter.]   "வாலைக் குழைத்துக் [ஆட்டிக்] கொண்டும், காதுகளை மடக்கிக் கொண்டும் அவளை நோக்கி வந்தது" [he came towards her with waving tail and ears laid back]   என்ற வரி தெளிவாக மிருகம் என்று சொல்லுகிறது. அதில் எந்த சந்தேகமும் இல்லை  ..................................................................... மகாவம்சம் அத்தக்கதா [Aṭṭhakathā - Buddhist Commentarial Literature / The word aṭṭhakathā is a general term, meaning exposition of the sense (aṭṭha = attha, Skt. artha), explanation, commentary.] Buddhist monks of Mahavihara, maintained this historical record of the Sri Lankan history starting from 3rd century B.C., some what similar to a modern day diary. These records were combined and compiled into a single document in the 5th century CE by Buddhist monk Mahathera Mahanama. There is evidence as per Wilhelm Geiger, there was another compilation prior to this known as “Mahavamsa Atthakatha” and Mahathera Mahanama relied on this text. Earlier document known as “Dipavamsa” also come down to us which is much simpler and contain less information than Mahavamsa, probably compiled using previously mentioned “Mahavamsa Atthakatha”?   ........................................... "சிங்களத்தில் இருந்த அத்தக்கதாவை  புத்தகோச பாளியில் எழுதிவிட்டு, சிங்கள மூலத்தை எரித்து விட்டததாகவும், ஏனெனில் சிங்களம் தெய்வ மொழி இல்லை என்றும் கருதப்படுகிறது' It is observed two groups of people in the 5th century A.D. – Hindus, speaking Tamil and the converts (Buddhists) speaking the new language (Sinhala).  There is a popular here say, emerged from the Later Burmese Biographical Text Buddhaghosuppatti ( perhaps as early as the 15th century) that Buddhaghosa Thera burnt ancient Sihala Atthakathas after he translated them into  Pali, introducing the Mula Bhasha [first language, primary language; epithet for Pali, the liturgical language of Theravada Buddhism. /  பாளி மொழியை வழிபாட்டு அல்லது தெய்வீக மொழியாக தேரவாத பௌத்தத்தில் கருதப்படுகிறது]  Please note that The Buddhaghosuppatti, a later biographical text, is generally regarded by Western scholars as being legend rather than history. So the text is not very reliable. Also It is not stated in Culavamsa [The Cūḷavaṃsa is a continuation of the Mahavamsa. But unlike the Mahavamsa it was written by different authors at different periods. / இதுவும்  பாளி மொழியில் தான் எழுதப்பட்டது / கிபி நான்காம் நூற்றாண்டு தொடக்கம் கிபி 1815 ஆம் ஆண்டு இலங்கைத்தீவின் கடைசி இராசதானியான கண்டி பிரித்தானியர் வசம் செல்லும் வரையான காலப்பகுதியின் இலங்கை அரசர் பற்றி இந்நூல் குறிப்பிடுகிறது] that he burned the scriptures , Though it contains the main account of Buddhaghosa’s life. ஆகவே உண்மையில் அவர் எரித்தாரா என்பதும் ஒரு கேள்விக்குறியே? Tradition regarding the Aṭṭhakathā [Buddhist Commentarial Literature by L. R. Goonesekere, BPS / Buddhist Publication Society, Kandy • Sri Lanka] The Ceylonese tradition regarding the aṭṭhakathā is that they were composed (in Pali, it is to be presumed) at the First Council (Saṅgīti) and rehearsed at the two following Councils. They were introduced to Ceylon by Mahinda who also, it is said, translated them into Sinhala. The earliest record of this tradition is contained in the introduction in Buddhaghosa’s commentaries. [“For explaining the meaning, the Commentary was originally recited by the 500 Masters (i.e. the Arahats assembled at the First Council) and was later rehearsed (at the two following Councils). Then it was brought to the island of the Sinhalese by the great Mahinda, the master (of Dhamma), and was rendered into the Sinhala language for the benefit of the island dwellers.”] It recurs in the accounts of Buddhaghosa contained in the Mahāvaṃsa  and the Saddhammasaṅgaha.  According to the Dīpavaṃsa  and the Mahāvaṃsa,  the commentaries (the Sinhala version, it is to be inferred) were put into writing in Ceylon along with the Pali canon in the reign of Vaṭṭagāmaṇī Abhaya in the first century B. C. The Mahāvaṃsa,  and Saddhammasaṅgaha  further state that, at the time of Buddhaghosa, the aṭṭhakathā (the original Pali) had disappeared in India. It is not known how far this statement was correct, but the original Pali aṭṭhakathā were not recorded in writing and no trace of them exists today. As will be seen, the Sinhala aṭṭhakathā put into writing in Vaṭṭagāmaṇī Abhaya’s time have also disappeared.
    • இலங்கையரசாங்கம் முன்வைத்த தீர்வுத்திட்டத்தினை முற்றாக நிராகரித்து, நான்கு அம்சக் கோரிக்கையின் அடிப்படையிலான தீர்வினை கோரிய தமிழ்த் தரப்பு   நான்காம் நாள் பேச்சுக்கள் பெரும் குழப்பத்திற்குள் நுழைந்தன. ஜெயவர்த்தன இன்னொரு சதியைத் திட்டமிட்டு அரங்கேற்றினார். பொலீஸாரைக் கொண்டு அரங்கேற்றப்பட்ட இச்சதியில் கொழும்பில் குண்டுத்தாக்குதலில் ஈடுபட வந்திருந்த ஈரோஸ் அமைப்பின் உறுப்பினர்களைத் தாம் கைதுசெய்திருப்பதாக ஜெயார் தெரிவித்தார். ஜனாதிபதி மாளிகைக்கு அண்மையாக சுற்றித்திருந்த இரு இளைஞர்களைக் கைதுசெய்து விசாரித்தவேளை அவர்கள் ஜனாதிபதியைக் கொல்வதற்காக ஈரோஸ் தலைமைப் பீடத்தால் அனுப்பிவைக்கப்பட்டிருப்பதை ஒத்துக்கொண்டதாக பொலீஸார் அறிவித்தனர். ஜெயாரின் திட்டத்தின்படி, கொழும்பு ஊடகங்களும் இச்செய்தியை பெரும் எடுப்பில் வெளியிட்டிருந்தன. இதனைச் செய்தியாக்கும்போது டெயிலி நியுஸ் காரியாலயத்தில் இருந்த உற்சாககத்தினை நேரடியாக நாண் கண்டேன். மறுநாள் ஆசிரியர்த் தலையங்கம் "முறியடிக்கப்பட்ட ஜனாதிபதி மீதான படுகொலை முயற்சி" என்று வெளியாகியிருந்தது. தன்மீதான இந்தப் பழியை சோடிக்கப்பட்ட புரளி என்று ஈரோஸ் தலைமைப்பீடம் அறிவித்தது. பொதுத் தபாலகத்திற்குச் சென்றுகொண்டிருந்த இரு அப்பாவிகளைக் கைதுசெய்து, கடுமையான சித்திரவதைகளின் பின்னர் பொய்யான வாக்குமூலம் ஒன்றினை கொடுக்க வைத்தே பொலீஸார் இந்த நாடகத்தினை ஆடுகிறார்கள் என்று ஈரோஸ் அமைப்பு விளக்கியிருந்தது.  நான்காம் நாள் பேச்சுக்கள் ஆரம்பமாகிய வேளை, அரசாங்கத்தின் பொய்யான வதந்திகுறித்து ஈரோஸ் அமைப்பினரும் ஏனைய தமிழ்ப் பிரதிநிதிகளும் தமது ஆட்சேபணையைத் தெரிவித்தார்கள். "இது ஜெயாரின் புரளி" என்றும் அதனை அழைத்தார்கள். அன்றைய நாளின் பெரும்பகுதி யுத்தநிறுத்த மீறல்கள் குறித்து ஒருவரையொருவர் சாடுவதிலேயே கழிந்தது. யுத்தநிறுத்த மீறல்கள் குறித்த வாக்குவாதங்கள் முடிவடைந்த பின்னர் பேசிய ஹெக்டர் ஜெயவர்த்தன தான் முன்வைத்துள்ள யோசனைகளை அதிகாரப் பரவலாக்கத்திற்கான அடிப்படையாக வைத்து செயற்பட முடியும் என்று கூறினார். அதற்குப் பதிலளித்த தமிழ்த் தரப்பு, அதிகாரங்கள், அதிகாரப் பரவலாக்கத்திற்கான அலகு, அரசாங்கத்தின் கட்டமைப்பு என்பன குறித்த சிக்கல்கள் தீர்க்கப்பட வேண்டும் என்றும், தமிழர்கள் எதிர்பார்க்கும் அதிகாரங்களுக்கும், அரசால் முன்வைக்கப்படும் அதிகாரங்களுக்கும் இடையே பாரியளவு இடைவெளி காணப்படுவதாகவும் விமர்சித்தனர்.  பேச்சுக்கள் முறிவடைவதைத் தவிர்ப்பதற்காக இந்திய அரசாங்கம் தனது வெளிநாட்டமைச்சர் ரொமேஷ் பண்டாரியை திம்புவிற்கு அனுப்பியது. இரு தரப்பினருடனும் ரொமேஷ் பண்டாரி ஒன்றன் பின் ஒன்றாக பல சந்திப்புக்களை நடத்தினார்.தமிழர் தரப்புடன் பேசிய பண்டாரி, அரசாங்கம் முன்வைத்திருக்கும் தீர்வு ஆலோசனையினை நிராகரிப்பதாகவும், ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழர்களின் அபிலாஷைகளை தீர்க்கக்கூடிய புதியதொரு தீர்வுத்திட்டத்துடன் அரசு வரவேண்டும் என்கிற கோரிக்கையினையும் முன்வைத்து அறிக்கையொன்றினை வெளியிடுமாறு கேட்டுக்கொண்டார். இதன்மூலம் அன்று முறிவடைய‌ இருந்த பேச்சுக்களை அவரால் நீட்டிக்க முடிந்தது. பேச்சுவார்த்தையின் ஐந்தாம் நாளான ஆடி 12 ஆம் திகதி தமிழ்ப் பிரதிநிதிகள் ஒன்றிணைந்து அரசு முன்வைத்திருக்கும் தீர்வுக்கான ஆலோசனைகளை நிராகரிப்பதாக அறிக்கையொன்றினை வெளியிட்டனர். அறிக்கை வெளியிடப்பட முன்னர் தமிழ் மக்களைஅவமானப்படுத்தும் விதமாக இலங்கைஅயரசாங்கம் தனது தீர்வு யோசனையினை முன்வைத்திருப்பதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டினர். அமிர்தலிங்கம் ஒருபடி மேலே சென்று, அரசு முன்வைத்திருக்கும் யோசனைகளை ஏற்றுக்கொள்ளமுடியாது என்று கூறினார்.  தமிழ்ப் பிரதிநிதிகள் சார்பாக டெலோ அமைப்பின் சார்ள்ஸ் அறிக்கையினை சமர்ப்பித்தார். தொடர்ச்சியாக ஆட்சிக்கு வந்த சிங்கள அரசாங்கங்களுக்கு தமிழரின் அபிலாஷைகள் குறித்த எமது கோரிக்கைகளை ஜனநாயக வழியில் புரியப்படுத்த முடியாமையினாலேயே நாம் ஆயுதம் தூக்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டோம். மேலும், எமது தேசியம் மீதான சிங்கள அரசுகளின் ஒடுக்குமுறையும், எம் மக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்டிருக்கும் அரச பயங்கரவாதமும், எம் மக்கள் மீதான இனவழிப்பும் அடக்குமுறைக்குள்ளாக்கப்பட்டிருக்கும் எம் மக்களுக்கான தர்க்கரீதியான ஒரே தீர்வு தனிநாடுதான் என்கிற நிலைமைக்கு எம்மைக் கொண்டுவந்து விட்டிருக்கிறது. இதன் தர்க்கரீதியான வெளிப்பாடே ஆயுதப்போராட்டம் என்றால் அது மிகையில்லை. ஆனாலும், இலங்கையரசாங்கம் நியாயமான, ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வொன்றினை முன்வைக்கும் பட்சத்தில் அமைதியான அத்தீர்வினை பரிசீலிக்க தமிழ் மக்கள் தயாராகவே இருக்கிறார்கள். ஏனென்றால், தமிழ் மக்கள் அமைதியினை விரும்பும் ஒரு மக்கள் கூட்டமாகும். சிறிலங்கா அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டிருக்கும் தீர்வு ஆலோசனைகள் எந்தவிதத்திலும் நேர்மையானதாகவோ, அமைதியை ஏற்படுத்தும் முகாந்திரங்களையோ கொண்டிருக்கவில்லை என்பதை எம்மால் உணர்ந்துகொள்ளமுடிகிறது. முதலாவதாக, சிறிலங்கா அரச பிரதிநிதிகள் குழுவின் தலைவர் தனது உரையில், இந்தத் தீர்வு ஆலோசனைகள் கடந்த வருடம் நடைபெற்ற சர்வகட்சி மாநாட்டில் இலங்கையரசாங்கத்தால் தீர்மானிக்கப்பட்ட ஆலோசனைகள் என்று திட்டவட்டமாகக் கூறிவிட்டார். ஆனால், பின்வரும் காரணங்களுக்காக சர்வகட்சி மாநாட்டினை நாம் முற்றாக நிராகரித்திருக்கிறோம், முதலாவதாக, சர்வகட்சி மாநாட்டில் பங்குகொண்ட தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி, சர்வகட்சி மாநாடு குழப்பகரமான நிலையில் முடிவிற்குக் கொண்டுவரப்பட்டவுடன் வெளியிட்ட அறிக்கையில் அதிகாரம் மிக்க பிராந்தியம் எனும் அடிப்படையில் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்விற்கு அருகில்க் கூட சர்வக‌ட்சி மாநாட்டில் அரசால் முன்வைக்கப்பட்ட தீர்வு வரவில்லை என்பதைத் தெளிவாகக் கூறியிருந்தது. இரண்டாவதாக, ஒரு விடுதலைப் போராட்ட அமைப்பு என்கிற வகையில், நவ பாஸிஸ இலங்கையரசு, தமிழ் மக்களின் அபிலாஷைகளுக்கு இராணுவ ரீதியில் தீர்வினை வழங்கவே சர்வகட்சி மாநாட்டினை போர்வையாகப் பாவித்தது என்பதனை ஐயம் திரிபுற  நம்புகிறோம். மேலும், ஈழத்திற்கான தேசியப் பிரச்சினையினை இலங்கையரசாங்கம் இதுவரையில் புரிந்துகொள்ளவில்லை என்பதையே அது இங்கு முன்வைத்திருக்கும் தீர்வு சுட்டிக் காட்டுகிறது. அதற்கான காரணங்களை நாம் முன்வைக்கிறோம்,   1. அரசாங்கம் முன்வைத்திருக்கும் தீர்வில் தமிழ் மக்கள் ஒரு தேசமாக அங்கீகரிக்கப்படவில்லை. ஆனால், தமிழ் மக்களால் எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாத மாவட்ட ரீதியிலான அதிகாரப் பரவலாக்க அலகினை அரசு முன்வைத்திருக்கிறது. 2. அரசு முனைத்திருக்கும் தீர்வு, தமிழ் மக்களினதோ அல்லது சிங்கள மக்களினதோ சுயநிர்ணய உரிமையினை புறக்கணித்திருப்பதுடன், சர்வஜன வாக்கெடுப்பு ஒன்றின்மூலமாகவோ அல்லது அதையொத்த இன்னொரு வாக்கெடுப்பு ஒன்றின்மூலமாகவோ தீர்வினை மக்கள் முன் கொண்டுசெல்லும் வழிவகையினைக் கொண்டிருக்கவில்லை. மக்களின் விருப்பினை நிராகரித்திருக்கும் அரசாங்கம், பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையினைக் கொண்டு அரசியல் சட்டத்தில் திருத்தத்தினைச் செய்யலாம் என்று கூறுகிறது.இப்படிச் செய்வதனூடாக மக்கள் மீது அரசியல் யாப்பின் அடைப்படையில் உருவாக்கப்படவிருக்கும் சர்வாதிகாரத்தைத் திணிக்க முயல்கிறது.  ஆகவே, இந்த நிலையில் மேற்கொண்டு பேச்சுக்களில் ஈடுபடுவதில் பயனில்லை என்கிற நிலைப்பாட்டிற்கு நாம் வந்திருப்பதுடன், நாடு இன்றிருக்கும் இக்கட்டான நிலைக்குக் காரணமாகியிருக்கும் அரசாங்கமே தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய நேர்மையானதும், அவர்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யக்கூடியதுமான தீர்வினை முன்வைக்க வேண்டும் என்றும் கோருகிறோம்.    நிரந்தர சமாதானத்தினைக் கருத்தில்க் கொண்டு, தமிழ் மக்களால் பரிசீலித்துப் பார்க்கக் கூடிய தீர்வொன்றுடன் மீண்டும் இலங்கையரச பிரதிநிதிகள் குழு பேச்சுவார்த்தைகளுக்குத் திரும்பவேண்டும் என்கிற தீர்க்கமான கோரிக்கையினை நாம் முன்வைக்கிறோம். ஜனாதிபதி ஜெயாரைப் படுகொலை செய்ய எத்தனித்ததாக தம்மீது முன்வைக்கப்பட்ட அரசின் குற்றச்சட்டிற்கெதிரான தனது அதிருப்தியினை ஈரோஸ் அமைப்பு எழுத்துமூல அறிக்கையொன்றின் ஊடாக வெளியிட்டது. இந்தியாவின் ரொமேஷ் பண்டாரி பேச்சுவார்த்தைக்குழுக்களுக்கான விருந்துபசராம் ஒன்றினை வழங்கினார். பேச்சுவார்த்தையின் இறுதிநாளான ஆடி 13 ஆம் திகதி அரச தரப்புப் பிரதிநிதிகளுடன் பேசிய தமிழ்த் தரப்பு தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளக்கூடிய புதிய‌ தீர்வொன்றுடன் அடுத்த கட்டப் பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைப்பு விடுத்ததுடன் தமிழ் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய தீர்வு அமையவேண்டிய அடிப்படைகள் குறித்து தனது நிலைப்பாட்டினையும் முன்வைத்தது.   பேச்சுவார்த்தைக் குழுக்கள் இணைந்து வெளியிட்ட சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த திம்புப் பிரகடணம் இவ்வாறு அமைந்திருந்தது, தமிழ்த் தரப்பு முன்வைத்த பிரகடணம்,   தமிழ்த் தேசிய பிரச்சினைக்கான அரத்தபுஷ்ட்டியான தீர்வு பின்வரும் நான்கு அடிப்படை விடயங்களை உள்ளடக்கியதாக இருக்கவேண்டும் என்று நாம் கருதுகிறோம்,   1. இலங்கைத் தமிழர்களைத் தனியான தேசமாக அங்கீகரிப்பது 2. இலங்கையில் தமிழருக்கென்று தனியான தாயகம் இருப்பதை அடையாளம் காண்பதும் அதனை அங்கீகரிப்பதும் 3. தமிழ்த் தேசத்தின் சுயநிர்ணய உரிமையினை அங்கீகரிப்பது 4. இலங்கையில் வாழும் அனைத்துத் தமிழர்களினதும் குடியுரிமை மற்றும் அடிப்படை உரிமைகளை அங்கீகரிப்பது   பல்வேறு நாடுகள் தமக்கு உகந்த செயற்திட்டங்கள் ஊடாக இந்த அடிப்படைகள் ஏற்றுக்கொள்ளப்படுவதனை உறுதிப்படுத்தியிருக்கின்றன. தமிழ் மக்களுக்கான அடிப்படை உரிமைகள் நிராகரிக்கப்பட்டமையினாலேயே அதற்குத் தீர்வாக தனிநாட்டினை முன்வைத்துப் போராடி வருகிறோம். தமிழ் மக்களின் தேசியப் பிரச்சினைக்கான தீர்வாக இலங்கையரசாங்கம் முன்வைத்திருக்கும் தீர்வினை எம்மால் எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதை திட்டவட்டமாகக் கூறிக்கொள்கிறோம். ஆகவே, 1985 ஆம் ஆண்டு ஆடி மாதம் 12 ஆம் திகதி நாம் வெளியிட்ட அறிக்கையின்படி இலங்கையரசாங்கம் இங்கு முன்வைத்திருக்கும் தீர்வு யோசனைகளை நாம் முற்றாக நிராகரிக்கிறோம். ஆனாலும், அமைதிக்கான வழிகளைத் தேடும் மக்கள் கூட்டம் எனும் அடிப்படையில், நாம் மேலே குறிப்பிட்ட நான்கு அடிப்படை அம்சங்களை உள்ளடக்கிய புதிய தீர்வு யோசனைகளை இலங்கையரசாங்கம் முன்வைக்கும் பட்சத்தில் அவற்றைப் பரிசீலிர்த்துப் பார்க்கத் தயாராக இருப்பதையும் இங்கு கூறிக்கொள்கிறோம்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.