Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மகா சங்கத்தினரின் ஆலோசனைப்படி ஜெனிவா சவால்களை எதிர்கொள்வோம் - பிரதமர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, விளங்க நினைப்பவன் said:

சிங்களவர்கள் மட்டும் அல்ல இந்துக் கடவுள்களை வணங்கும் இலங்கை தமிழர்களும்  பயத்தினால் தான் வணங்குகிறார்கள். இந்துக்கள் மதம்மாறி இயேசுவை வணங்குவதும் பயத்தினால் தான். பேரச்சமே பக்திக்கு காரணம்.

தமிழர்கள் சந்திப்பில் கடவுள் புகழ் பேசாமல் இருப்பது அரிது.இயேசு சாயிபாவா அற்புதங்கள் பற்றிய பேச்சுக்களும் இடம் பெறும். மற்ற இனத்தவர்கள் சந்திப்பில் கடவுள் பேச்சு வந்தாலே நல்ல நகைச்சுவையாக இருக்கும்.

விளங்க நினைப்பவன்...!

இந்த விடயத்தில்  தென்னாபிரிக்க பாதிரியார் டெஸ்மன்ட் ருற்ரு அவர்கள் ஒரு முறை கூறீயது நினைவுக்கு வருகின்றது!

அவர்கள் வந்த போது நாடு எங்கள் கையிலிருந்தது! கண்களை மூடி ஜேசுவைப் பிரார்த்தியுங்கள் என்றார்கள்..!
கண்களைத் திறந்த போது....பைபிள் எங்கள் கையில் இருந்தது! நாடு அவர்கள் கையிலிருந்தது!

இப்போது கிறிஸ்தவ மதத்தை வளர்க்க அவர்கள் பிரச்சாரம் செய்ய வேண்டிய அவசியமே இல்லை!
மற்றவர்கள் அவர்களுக்காக அதை வளர்ப்பார்கள்...!

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, கற்பகதரு said:

சீனாவில் கூட விகாரைகளும் கிறீஸ்தவ ஆலயங்களும் பக்தியுடன் மக்கள் வழிபடும் இடங்களாக இருப்பதை நேரடியாக சென்று பார்க்க கிடைத்தது. Russian Orthodox Christianity என்ற கிறீஸ்தவ சமயமே ரஷ்சியர்களுக்காக இருக்கிறது. பிரான்ஸ், ஜேர்மனி ஆகிய நாடுகளில் கத்தோலிக்கமும் கிறீஸ்தவமும் அரச வரிப்பணத்தில் இயங்குகின்றன. மதம் முன்னோர் குறியீட்டு  விடயமாக (symbolic) மட்டும் உள்ள வளர்ச்சியடைந்த நாடுகள் சிலவற்றை உதாரணம் காட்டுவீர்களா?

கற்பகதரு, உங்கள் கவனத்துக்காகப் பின்வருவதை இணைக்கின்றேன்!

இது அவுஸ்திரேலிய அரசியலமைப்பின் மதங்கள் பற்றிய பகுதி.

 

Section 116

4.2
The starting point in any discussion about religious freedom in Australia is section 116 of the Australian Constitution:
The Commonwealth shall not make any law for establishing any religion, or for imposing any religious observance, or for prohibiting the free exercise of any religion, and no religious test shall be required as a qualification for any office or public trust under the Commonwealth.
4.3
There are four prohibitions on the Commonwealth in this section:
 
establishing any religion
 
imposing any religious observation
 
prohibiting the free exercise of any religion
 
requiring a religious test as a qualification for any office or public trust under the Commonwealth.
4.4
As Professor George Williams pointed out in his submission, these prohibitions apply to the Commonwealth, and not to the States. The Constitution contains no direct protection from State laws which may restrict religious freedom.2 Protection of religious freedom at State level is deliberately left to the States by the drafters of the Constitution. Indeed, the drafters’ primary purpose in section 116 was not to protect religious freedom, “but to preserve the States’ exclusive powers to regulate religious practices and local affairs”.3
4.5
Dr Luke Beck, a constitutional scholar whose principal research focus is on the history, meaning, and operation of section 116,4 agreed that this was the intention of the framers.5
4.6
State protections of religious freedom are discussed further in Chapter Five.
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
18 minutes ago, விளங்க நினைப்பவன் said:

சிங்களவர்கள் மட்டும் அல்ல இந்துக் கடவுள்களை வணங்கும் இலங்கை தமிழர்களும்  பயத்தினால் தான் வணங்குகிறார்கள். இந்துக்கள் மதம்மாறி இயேசுவை வணங்குவதும் பயத்தினால் தான். பேரச்சமே பக்திக்கு காரணம்.

ஒரு அரசின் கீழ் வாழும் நாம் சட்டதிட்டங்கள் தண்டனைகளுக்கு பயந்துதான் பணிந்து நடக்கின்றோம். மீறினால் தண்டனை பெறுகின்றோம்.ஏன் மரண தண்டனை கூட இருக்கின்றது. ஒரு காலத்தில் மதங்கள் சட்டமேதும் இல்லாமல் மனிதத்தை பயம் காட்டி அடக்கி வைத்திருந்தது. இன்றைய காலத்தில் அரசுகள் நேரடி தண்டனைகள் மூலம் மனிதத்தை அடக்கி வைத்திருக்கின்றது.

இதன் சாரம்சம் மனித குலத்திற்கு பய பக்தி அவசியம். இல்லையேல் அது காட்டு வெள்ளம்.

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, கற்பகதரு said:

சீனாவில் கூட விகாரைகளும் கிறீஸ்தவ ஆலயங்களும் பக்தியுடன் மக்கள் வழிபடும் இடங்களாக இருப்பதை நேரடியாக சென்று பார்க்க கிடைத்தது. Russian Orthodox Christianity என்ற கிறீஸ்தவ சமயமே ரஷ்சியர்களுக்காக இருக்கிறது. பிரான்ஸ், ஜேர்மனி ஆகிய நாடுகளில் கத்தோலிக்கமும் கிறீஸ்தவமும் அரச வரிப்பணத்தில் இயங்குகின்றன. மதம் முன்னோர் குறியீட்டு  விடயமாக (symbolic) மட்டும் உள்ள வளர்ச்சியடைந்த நாடுகள் சிலவற்றை உதாரணம் காட்டுவீர்களா?

 

1 hour ago, புங்கையூரன் said:

கற்பகதரு, உங்கள் கவனத்துக்காகப் பின்வருவதை இணைக்கின்றேன்!

இது அவுஸ்திரேலிய அரசியலமைப்பின் மதங்கள் பற்றிய பகுதி.

 

அவுஸ்திரேலிய சட்டத்தில், அரசு மத சார்பாக இயங்குவதை தடுப்பதற்காக இயற்றப்பட்ட சட்டங்கள் அவை. இந்தியா, அமெரிக்கா உட்பட பல நாடுகளில் இத்தகைய சட்டங்கள் உள்ளன. ஆனால் இவை, மதம் முன்னோர் குறியீட்டு  விடயமாக (symbolic) மட்டும் இயங்கும் படி செய்யும் நோக்கத்தை கொண்டிருக்கவில்லை. மாறாக, இந்த சட்டங்கள் மதத்தை மக்கள் விரும்பிய அளவு தீவிரமாக பின்பற்றும் உரிமையை பாதுகாப்பனவாகவே அமைந்திருக்கின்றன. அதனால் தான், அவுஸ்திரேலியா உட்பட்ட நாடுகளை சேர்ந்த அமைப்புகள், மக்களிடம் பணம் சேகரித்து சர்வதேச அளவில்,ஜெகோவாவின் சாட்சிகள் போன்ற தீவிரமான மதம் பரப்பும் செயற்திட்டங்களில் வெற்றி பெற்று வருகின்றன.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, புங்கையூரன் said:

விளங்க நினைப்பவன்...!

இந்த விடயத்தில்  தென்னாபிரிக்க பாதிரியார் டெஸ்மன்ட் ருற்ரு அவர்கள் ஒரு முறை கூறீயது நினைவுக்கு வருகின்றது!

அவர்கள் வந்த போது நாடு எங்கள் கையிலிருந்தது! கண்களை மூடி ஜேசுவைப் பிரார்த்தியுங்கள் என்றார்கள்..!
கண்களைத் திறந்த போது....பைபிள் எங்கள் கையில் இருந்தது! நாடு அவர்கள் கையிலிருந்தது!

இப்போது கிறிஸ்தவ மதத்தை வளர்க்க அவர்கள் பிரச்சாரம் செய்ய வேண்டிய அவசியமே இல்லை!
மற்றவர்கள் அவர்களுக்காக அதை வளர்ப்பார்கள்...!

நேரிலேயே காண்கின்றோமே 😟

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, புங்கையூரன் said:

அவர்கள் வந்த போது நாடு எங்கள் கையிலிருந்தது! கண்களை மூடி ஜேசுவைப் பிரார்த்தியுங்கள் என்றார்கள்..!
கண்களைத் திறந்த போது....பைபிள் எங்கள் கையில் இருந்தது! நாடு அவர்கள் கையிலிருந்தது!

இப்போ பைபிள் எல்லாம் தேவையில்லை. பணம், பதவி  கையில் வைத்தாலே போதும், நாட்டை தாரை வார்த்துவிடுவார்கள். அதற்கு இலங்கை சாட்சி.

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, tulpen said:

என்ன வரலாற்று விளக்கங்கள் கொடுக்கப்பட்டாலும்,   நடைமுறையில் மதங்களுக்கும் அந்த மத நம்பிக்கைகளுக்கும் அது   தொடர்பான மூடநம்பிக்கைகளுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கும் இடங்களில், அயோக்கியத்தனமும் சோம்பேறித்தனமும் வறுமையும் அநீதியான விடயங்களும் தலைவிரித்து ஆடும், என்பதே உண்மை.  மதத்தை  ஒரு சிறிய,  முன்னோர் குறியீட்டு  விடயமாக (symbolic) மட்டுமே, பயன்படுத்த வேண்டும். அதற்கு மேல் மதத்திற்கு  முக்கியத்துவம் கொடுக்காத அறிவியலை,  உலக மக்கள் பெற்றுக்கொண்டால்,  மதத்தை வைத்து மக்களைப் பயப்படுத்தி சோம்பேறிக் கூட்டங்களாக, அடிமைகளாக  தீயவர்கள் அதைப் பயன்படுத்துவதை தடுக்கலாம். 

சிங்கள பேரினவாத இன வெறியர்கள்   மதத்தை பயன்படுத்தி அப்பாவி சிங்கள மக்களை ஏமாற்றி மத வெறியை உருவாக்கியதன் மூலம்,  தமது அதிகாரத்தை நிலைநாட்டுகின்றனர். சாதாரண சிங்கள மக்களின் வாழ்ககைத்தரத்தில்  மதத்தினால் எந்த முன்னேற்றமும் கிடைக்கவில்லை. அவர்களும் பாதிக்கப்பட்ட மக்களே.

அதே போல பாப்பனர்கள் இந்து சனாதன மதம் என்ற நச்சு விதையை பயன்படுத்தி மக்களை பிரித்து மூடர்களாக்கி தமது வாழ்ககையை வளப்படுத்துகின்றனர். தமிழர்களை பொறுத்தவரையும் அவரகள் மன்னர்கள் காலம் தொட்டு இந்து/ சைவ (இரண்டும் நடைமுறையில் ஒன்று தான்)பார்ப்பன ஆச்சாரங்களுக்கும் மூடநம்பிக்கைகளுக்கும் அடிமைப்பட்டு,  தமது அறிவிழந்து, ஆட்சியையும் இழந்து, நிர்கதியாக நிற்கிறார்கள். அதிக ஆச்சாரங்களுக்கும் புனிதங்களுக்கும் சென்றி  மென்றுக்கும் மட்டுமே அடிமைப்பட்டிருப்பதால் தமது தவறுகளை கூட திரும்ப பரிசீலித்து அதை திருத்த முடியாத நிலையில்  அரசியல் என்ற  அறிவு சார்  தத்துவத்தையும் அந்த புனிதங்களுக்குள் தொலைத்த victims ஆக தமிழர்களாகிய நாம் உள்ளோம். 

துல்பென்...
இந்த திரியின் தலைப்பு "மகா சங்கத்தினரின் ஆலோசனைப்படி ஜெனிவா சவால்களை எதிர்கொள்வோம் - பிரதமர்" 

நீங்கள் எழுதியது மொத்தம் 21 வரிகள், 
முதல் 8 வரிகளில் பொதுவாக மதம், அறிவியல் போன்ற அருமையான கருத்துக்களை வைக்கும் நீங்கள், 

அடுத்து 4 வரிகளில் மேம்போக்காக சிங்கள இனவாதம், அப்பாவி சிங்கள மக்கள் அவர்களும் பாதிக்கப்பட்டார்கள் என்று கூறுகிறீர்கள்.

தொடரும் மிகுதி 9 வரிகளால்  பார்ப்பனர், இந்து சனாதனம், சைவம், மூடநம்பிக்கைகள்,  அடிமைத்தனம் ,  தமது அறிவிழந்து, ஆட்சியையும் இழந்து, நிர்கதியாக விக்டிமாக நிற்கிறார்கள் என்றும் அடிக்கோடிட்டு முடிக்கிறீர்கள். 

மகா சங்கத்தினரின் வழிகாட்டலால் பறிக்கப்பட்ட தமிழர்களின் உயிர், உடைமைகள் , அவர்களது வாழ்வியல் பற்றி நீங்கள் பேசாவிட்டால் யார் பேசுவார்கள்?

இதை வாசிக்கும் போது  நீங்கள் நல்ல கருத்தை சொல்லி இருந்தாலும் கூட, உங்கள் கவனம் எல்லாம் குறிப்பிட்ட ஒரு பகுதியை மையப்படுத்தி வெளியிடும் கருத்துக்களாக இருக்க வாய்ப்பு இருக்கிறதா?
இதை பலரும் இந்த கோணத்தில் தான் வாசித்து புரிந்து கொள்கிறார்களா?

Edited by Sasi_varnam

9 hours ago, Sasi_varnam said:

துல்பென்...
இந்த திரியின் தலைப்பு "மகா சங்கத்தினரின் ஆலோசனைப்படி ஜெனிவா சவால்களை எதிர்கொள்வோம் - பிரதமர்" 

நீங்கள் எழுதியது மொத்தம் 21 வரிகள், 
முதல் 8 வரிகளில் பொதுவாக மதம், அறிவியல் போன்ற அருமையான கருத்துக்களை வைக்கும் நீங்கள், 

அடுத்து 4 வரிகளில் மேம்போக்காக சிங்கள இனவாதம், அப்பாவி சிங்கள மக்கள் அவர்களும் பாதிக்கப்பட்டார்கள் என்று கூறுகிறீர்கள்.

தொடரும் மிகுதி 9 வரிகளால்  பார்ப்பனர், இந்து சனாதனம், சைவம், மூடநம்பிக்கைகள்,  அடிமைத்தனம் ,  தமது அறிவிழந்து, ஆட்சியையும் இழந்து, நிர்கதியாக விக்டிமாக நிற்கிறார்கள் என்றும் அடிக்கோடிட்டு முடிக்கிறீர்கள். 

மகா சங்கத்தினரின் வழிகாட்டலால் பறிக்கப்பட்ட தமிழர்களின் உயிர், உடைமைகள் , அவர்களது வாழ்வியல் பற்றி நீங்கள் பேசாவிட்டால் யார் பேசுவார்கள்?

இதை வாசிக்கும் போது  நீங்கள் நல்ல கருத்தை சொல்லி இருந்தாலும் கூட, உங்கள் கவனம் எல்லாம் குறிப்பிட்ட ஒரு பகுதியை மையப்படுத்தி வெளியிடும் கருத்துக்களாக இருக்க வாய்ப்பு இருக்கிறதா?
இதை பலரும் இந்த கோணத்தில் தான் வாசித்து புரிந்து கொள்கிறார்களா?

ச‍சி வர்ணம், 

யாழ் இணையம் என்பது தமிழர்க்களின் கருத்துக்களம். இது வெளிநாட்டவர்களுக்கான பரப்புரையும் அல்ல ஸ்ரீலங்கா ஆட்சியாளர்களாலும் வாசிக்கப்படுவதல்ல. முழுக்க முழுக்க தமிழர்களால் தான் வாசிக்கப்படுகிறது. எமது வீழ்ச்சிக்கான எமது பக்க காரணங்களை அதிக அளவில் தேடுவது தான் கருத்து களத்தின் வினைதிறனை அதிகரிக்கும் என்பதே எனது எண்ணம். அதனாலேயே எனது கருத்துக்கள் தமிழ்களாகிய எம் மீது வைக்கப்படும் சுயவிமர்சனமாக உள்ளது.  உங்களுக்கே தெரியும் சாதாரணமாக ஒரு  நிறுவனம் கூட தனது வியாபார இழப்புக்கு காரணம் தேட  தமக்குள்ளே விவாதிக்கும் போது தமது நிறுவனப்பக்கம் உள்ள தவறுகளை எப்படி திருத்துவது என்பது குறித்து  தான் அதிகம் விவாதிப்பார்கள். ஒரு சிறு நிறுவனமே அப்படி செய்யும் போது ஒரு தேசிய இனம் தனது பக்க தவறுகளை "பேசாப்பொருள்" என்ற வகுதிக்குள் அடக்க முடியாது.  

இங்கு வந்து எல்லோரையும் போல சிங்கள அரசின் மீது பாய்ந்து விழுந்து கருத்தை எழுதிவிட்டு அதை தமிழரளாகிய நாமே வாசித்து புளகாங்கிதம் அடைந்து எனக்கு பாராட்டு தெரிவிப்பது  எந்த பயனுமில்லை என்பது எனது கருத்தாக உள்ளது. ராஜபக்ச ஒழிக. கோட்டபாய ஒழிக, சிங்கள பேரினவாதம் ஒழிக என்று நாமே நமக்குள்  பேப்பரில் எழுதிவிட்டு நாமே வாசித்து சந்தோசமடைவதில் எனக்கு உடன்பாடில்லை. அதனால் ஒரு சிறிய நன்மை கூட எமக்கு கிடைக்கப்போவதில்லை. 

உலக அரசியலில் எல்லா நாடுகளும் த‍த்தமது  நன்மைகளுக்கு தான் முன்னுரிமை கொடுக்கும்.  தமிழீழம் என்ற நாடு உருவானாலும்  கூட  அது  உலக அரசியலில் ஈடுபடும் போது தமது நன்மைகளை மட்டும் பார்க்குமே தவிர உலக தர்ம‍ம்,நியாயம் என்று தனது சர்வதேச கொள்கைகளை வகுக்கப்போவதில்லை.

ஆகவே  இந்த உலக ஜதாரத்தத‍்தைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப நெகிழ்வுத்தன்மையுடன்  எமது  தரப்பு தலைமைகள்  என்றுமே போராடவில்லை என்பதை போராட்ட காலத்தில் புலிகளோடு ஒன்றாக இருந்த மூத்த அரசியல் ஆய்வாளர் மு. திருநாவுக்கரசு உட்பட பலர்  வெளிப்படையாக தெரிவித்துள்ளனர். இன்று அதை வெளிப்படையாக கூறும் திரு மு. திருநாவுக்கரசு  2009 க்கு முற்பட்ட காலத்தில் வன்னியில் இருந்து  தமிழீழ தேசிய தொலைக்காட்சியில்(NTT)  மறைமுகமாக அதை  எச்சரிக்கையாக அன்றிருந்த தலைமைக்கு தெரிவிக்க வேண்டிய சூழ்நிலையில் அவர்  அதை நேர்மையாக செய்த‍தை பேச்சுவார்த்தை காலத்தில் இங்கு NTT ஒலிபரப்பான போது நானே பல முறை கேட்டுள்ளேன்.  அன்று அவரது மறைமுக எச்சரிக்கைகள் புறக்கணிகப்பட்டதோ அல்லது புரியவில்லையே தெரியாது. ஆனால் அதன் விளைவுகளை நாம் இப்போது சந்தித்துகொண்டிருக்கிறோம். மாறிவிட்ட இன்றைய சூழ்நிலையிலாவது வெளிப்படையாக அதை பேசுவதில் தவறில்ல என்பது எனது கருத்து. 

நான் இவ்வாறு  வெளிப்படையாக கருத்துக்களை வைப்பதால் இங்கு உள்ள ஒரே கருத்தே கொண்ட, அரசியலை வெறும் சென்றிமென்றாகவும் அதை வேளை  ஒருபக்க பார்வை  மட்டுமே  பார்க்கும்  சிறு குழுவினரின் அதிக வெறுப்புக்கு உள்ளாகிறேன் என்பது எனக்கு தெரியும். என்றாலும் யாழ் இணையத்தின் பரந்துபட்ட சாமான்ய வாசகர்களின் சிந்தனையை தூண்டவே அவ்வாறு செய்கிறேன்.  அவ்வாறு செய்யும்  அரசியல் உரிமை சாதாரண தமிழரான எனக்கு உள்ளது என்று நம்புகிறேன். 

 

 

Edited by tulpen
ஒரு வரி தெளிவான விளக்கத்துக்கான திருத்தம்

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, tulpen said:

ச‍சி வர்ணம், 

யாழ் இணையம் என்பது தமிழர்க்களின் கருத்துக்களம். இது வெளிநாட்டவர்களுக்கான பரப்புரையும் அல்ல ஸ்ரீலங்கா ஆட்சியாளர்களாலும் வாசிக்கப்படுவதல்ல. முழுக்க முழுக்க தமிழர்களால் தான் வாசிக்கப்படுகிறது. எமது வீழ்ச்சிக்கான எமது பக்க காரணங்களை அதிக அளவில் தேடுவது தான் கருத்து களத்தின் வினைதிறனை அதிகரிக்கும் என்பதே எனது எண்ணம். அதனாலேயே எனது கருத்துக்கள் தமிழ்களாகிய எம் மீது வைக்கப்படும் சுயவிமர்சனமாக உள்ளது.  உங்களுக்கே தெரியும் சாதாரணமாக ஒரு  நிறுவனம் கூட தனது வியாபார இழப்புக்கு காரணம் தேட  தமக்குள்ளே விவாதிக்கும் போது தமது நிறுவனப்பக்கம் உள்ள தவறுகளை எப்படி திருத்துவது என்பது குறித்து  தான் அதிகம் விவாதிப்பார்கள். ஒரு சிறு நிறுவனமே அப்படி செய்யும் போது ஒரு தேசிய இனம் தனது பக்க தவறுகளை "பேசாப்பொருள்" என்ற வகுதிக்குள் அடக்க முடியாது.  

 

உலக அரசியலில் எல்லா நாடுகளும் த‍த்தமது  நன்மைகளுக்கு தான் முன்னுரிமை கொடுக்கும்.  தமிழீழம் என்ற நாடு உருவானாலும்  கூட  அது  உலக அரசியலில் ஈடுபடும் போது தமது நன்மைகளை மட்டும் பார்க்குமே தவிர உலக தர்ம‍ம்,நியாயம் என்று தனது சர்வதேச கொள்கைகளை வகுக்கப்போவதில்லை.

ஆகவே  இந்த உலக ஜதாரத்தத‍்தைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப நெகிழ்வுத்தன்மையுடன்  எமது  தரப்பு தலைமைகள்  என்றுமே போராடவில்லை என்பதை போராட்ட காலத்தில் புலிகளோடு ஒன்றாக இருந்த மூத்த அரசியல் ஆய்வாளர் மு. திருநாவுக்கரசு உட்பட பலர்  வெளிப்படையாக தெரிவித்துள்ளனர். இன்று அதை வெளிப்படையாக கூறும் திரு மு. திருநாவுக்கரசு  2009 க்கு முற்பட்ட காலத்தில் வன்னியில் இருந்து  தமிழீழ தேசிய தொலைக்காட்சியில்(NTT)  மறைமுகமாக அதை  எச்சரிக்கையாக அன்றிருந்த தலைமைக்கு தெரிவிக்க வேண்டிய சூழ்நிலையில் அவர்  அதை நேர்மையாக செய்த‍தை பேச்சுவார்த்தை காலத்தில் இங்கு NTT ஒலிபரப்பான போது நானே பல முறை கேட்டுள்ளேன்.  அன்று அவரது மறைமுக எச்சரிக்கைகள் புறக்கணிகப்பட்டதோ அல்லது புரியவில்லையே தெரியாது. ஆனால் அதன் விளைவுகளை நாம் இப்போது சந்தித்துகொண்டிருக்கிறோம். மாறிவிட்ட இன்றைய சூழ்நிலையிலாவது வெளிப்படையாக அதை பேசுவதில் தவறில்ல என்பது எனது கருத்து. 

நான் இவ்வாறு  வெளிப்படையாக கருத்துக்களை வைப்பதால் இங்கு உள்ள ஒரே கருத்தே கொண்ட, அரசியலை வெறும் சென்றிமென்றாகவும் அதை வேளை  ஒருபக்க பார்வை  மட்டுமே  பார்க்கும்  சிறு குழுவினரின் அதிக வெறுப்புக்கு உள்ளாகிறேன் என்பது எனக்கு தெரியும். என்றாலும் யாழ் இணையத்தின் பரந்துபட்ட சாமான்ய வாசகர்களின் சிந்தனையை தூண்டவே அவ்வாறு செய்கிறேன்.  அவ்வாறு செய்யும்  அரசியல் உரிமை சாதாரண தமிழரான எனக்கு உள்ளது என்று நம்புகிறேன். 

 

 

 

உங்கள் பதிலின் பெரும் பகுதியை ஏற்றுக்கொள்கிறேன்.👍
உங்களின் கருத்தை உள்வாங்கி அதன் அடிப்படை நோக்கத்தை புரிந்து கொள்ள பலரால் முடிவதில்லை.
அதற்கு நீங்களும் ஒரு காரணமாக அமைகிறீர்களோ என்று தான் எழுதி இருந்தேன்.
என்னுடைய நிலைப்பாடு "நயம் பட உரைத்தல்" 

உங்கள் கூற்றுப்படி....
இங்கு வந்து எல்லோரையும் போல சிங்கள அரசின் மீது பாய்ந்து விழுந்து கருத்தை எழுதிவிட்டு அதை தமிழரளாகிய நாமே வாசித்து புளகாங்கிதம் அடைந்து எனக்கு பாராட்டு தெரிவிப்பது  எந்த பயனுமில்லை என்பது எனது கருத்தாக உள்ளது. ராஜபக்ச ஒழிக. கோட்டபாய ஒழிக, சிங்கள பேரினவாதம் ஒழிக என்று நாமே நமக்குள்  பேப்பரில் எழுதிவிட்டு நாமே வாசித்து சந்தோசமடைவதில் எனக்கு உடன்பாடில்லை. அதனால் ஒரு சிறிய நன்மை கூட எமக்கு கிடைக்கப்போவதில்லை.

இதே கருத்தை தான் இன்னும் சிலர் வேறு மாதிரி சொல்கிறார்கள். சிங்கள அரசின் மீது பாய்ந்து விழுந்து ஜெனிவா , உலக நாடுகள் என்று ஒப்பாரி வைக்காமல் இருக்கின்ற சிங்கள அரசின் கேவல அரசியலோடு  நல்லிணக்கம்  செய்து அண்டிப்பிழையுங்கள். ஒரு சில நன்மைகளாவது கிடைக்கும்...
 

Edited by Sasi_varnam

  • கருத்துக்கள உறவுகள்

எமது வீழ்ச்சி

எமது பக்க காரணங்கள்.

தமிழர்களாகிய எம்மீது...இப்படிச்  சொல்லும்  துல்பன். .இந்தப்போராட்டம். தமிழர்களாகிய எம்மால்  நடத்தப்படடது..தமிழர்களாகிய நாமே பிழையும். விட்டோம் .

எனபதையும்   ஒத்துக்கொள்கிறார்..இந்த தமிழர் என்பதுக்குள் துல்பனும் அடக்கிவிட்டார்..

தமிழர்களாகிய நாம் இலங்கையில். எப்படிப் போராடினலும், எவ்வளவு பலம் கொண்டு போராடினலும், திருநாவுக்கரசு சொன்னபடி போராடினலும்...வேறு எந்தவழிகளில் போராடினலும். இன்றைய நிலைவரப்படி  வெற்றி பெற வாய்ப்பு இல்லை.சிங்களப் பெரும்பன்மையும். பௌத்த ஆதிக்கமும். இல்லாமால் செய்யப்பட்டல் மட்டும் இலங்கையில் தமிழருக்கு போராடமால் தீர்வு கிடைக்கலாம்.

உலகில் எந்தவெரு போராட்டமும் பிழையில்லாமால் நடைபெறவில்லை..அப்படி பிழை விடமால் நடந்த போராட்டங்களை பட்டியலிடுங்கள் பார்ப்போம்.  வல்லரசுகள் கூட பிழை விடுகின்றன...தமிழர் போராட்டத்தில் பிழைகள் நடத்திருக்கின்றன. அவை தவிர்க்க முடியாதவை .வெற்றி பெற்றலும்சரி. தோல்வி பெற்றலும்சரி. போராட்டங்களில் பிழைகள் இடம்பெறும் ..இனி வரும் காலங்களில் நடைபெறும் போராட்டங்களிலும் நிச்சயம் பிழைகள் இடம்பெறும்..ஆகவே தமிழர் போராட்டத்தில்

பிழைகள் நடந்தன என்று சொல்லுவது,எழுதுவது  கூட ஒரு பிழையான செயல் ஆகும்.😁😄😂

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Sasi_varnam said:

இதே கருத்தை தான் இன்னும் சிலர் வேறு மாதிரி சொல்கிறார்கள். சிங்கள அரசின் மீது பாய்ந்து விழுந்து ஜெனிவா , உலக நாடுகள் என்று ஒப்பாரி வைக்காமல் இருக்கின்ற சிங்கள அரசின் கேவல அரசியலோடு  நல்லிணக்கம்  செய்து அண்டிப்பிழையுங்கள். ஒரு சில நன்மைகளாவது கிடைக்கும்...
 

_நீங்கள் சொல்வது எனக்கு விளங்கியபடி,

இரெண்டு வழிகள் மட்டுமே உண்டு, அவையாவன:

1. சிங்கள அரசின் மீது பாய்ந்து விழுந்து ஜெனிவா , உலக நாடுகள் என்று ஒப்பாரி வைப்பது, அல்லது

2. சிங்கள அரசின் கேவல அரசியலோடு  நல்லிணக்கம்  செய்து அண்டிப்பிழைப்பது.

இது உண்மையல்ல. இவை தவிர மிகவும் காத்திரமான வேறு வழிகளும் உள்ளன. 

31 minutes ago, Kandiah57 said:

தமிழர்களாகிய நாம் இலங்கையில். எப்படிப் போராடினலும், எவ்வளவு பலம் கொண்டு போராடினலும், திருநாவுக்கரசு சொன்னபடி போராடினலும்...வேறு எந்தவழிகளில் போராடினலும். இன்றைய நிலைவரப்படி  வெற்றி பெற வாய்ப்பு இல்லை.

இதுவும் உண்மையல்ல. இன்றுதான் வெற்றிபெறும் சாத்தியம் உச்சத்தில் உள்ளது. ஆனால், அதற்கான பாதைகள் பற்றிய அறிவும், அவற்றில் பயணம் செய்யும் ஆற்றலும் பெரும்பான்மையான ஈழத்தமிழரிடம் இல்லை. உண்மையில் இந்த வெற்றிக்கு பெரும்பான்மையான ஈழத்தமிழர் இந்த பாதைகள் பற்றி அறிய வேண்டிய தேவையும் இல்லை. அவர்களின் பங்களிப்பும் கூட தேவையற்றது. விடயம் அறிந்த ஆற்றலுள்ள ஒரு சிலரே இந்த வெற்றியை ஏற்படுத்த கூடியவர்கள். இவை பற்றி அறிய விரும்புபவர்கள் மட்டும் எரித்ரியா, சோமாலிலாந்து, கிழக்கு தீமோர் ஆகியவற்றை பற்றி படித்து பாருங்கள்.

Edited by கற்பகதரு

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, கற்பகதரு said:

 இவை பற்றி அறிய விரும்புபவர்கள் மட்டும் எரித்ரியா, சோமாலிலாந்து, கிழக்கு தீமோர் ஆகியவற்றை பற்றி படித்து பாருங்கள்.

உண்மையில் நீங்கள் குறிப்பிடும் நாடுகள் போன்ற நிலைகளில் தமிழீழத்தை அடைந்திருக்க தலைவரால் முடிந்திருக்கும். ஆனால் அவர் அதையும் தாண்டி தூர நோக்கோடு சிந்தித்தார் என்று நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, கற்பகதரு said:

_நீங்கள் சொல்வது எனக்கு விளங்கியபடி,

இரெண்டு வழிகள் மட்டுமே உண்டு, அவையாவன:

1. சிங்கள அரசின் மீது பாய்ந்து விழுந்து ஜெனிவா , உலக நாடுகள் என்று ஒப்பாரி வைப்பது, அல்லது

2. சிங்கள அரசின் கேவல அரசியலோடு  நல்லிணக்கம்  செய்து அண்டிப்பிழைப்பது.

இது உண்மையல்ல. இவை தவிர மிகவும் காத்திரமான வேறு வழிகளும் உள்ளன. 

இதுவும் உண்மையல்ல. இன்றுதான் வெற்றிபெறும் சாத்தியம் உச்சத்தில் உள்ளது. ஆனால், அதற்கான பாதைகள் பற்றிய அறிவும், அவற்றில் பயணம் செய்யும் ஆற்றலும் பெரும்பான்மையான ஈழத்தமிழரிடம் இல்லை. உண்மையில் இந்த வெற்றிக்கு பெரும்பான்மையான ஈழத்தமிழர் இந்த பாதைகள் பற்றி அறிய வேண்டிய தேவையும் இல்லை. அவர்களின் பங்களிப்பும் கூட தேவையற்றது. விடயம் அறிந்த ஆற்றலுள்ள ஒரு சிலரே இந்த வெற்றியை ஏற்படுத்த கூடியவர்கள். இவை பற்றி அறிய விரும்புபவர்கள் மட்டும் எரித்ரியா, சோமாலிலாந்து, கிழக்கு தீமோர் ஆகியவற்றை பற்றி படித்து பாருங்கள்.

கற்பகதரு அவர்களே ! எரித்ரியா,சோமாலிலாந்து,கிழக்கு தீமோர் ஆகியவைபற்றி ஒரு திரியைத்திறந்து எழுதுங்கள் நானும் வாசிக்கின்றேன் மற்ற கள உறுப்பினர்களும் வாசிக்கட்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாரும் எல்லாம் அறிந்து கொள்ளும் போது ஈழத்தில் தமிழ் மக்கள் இருக்கமாட்டார்கள்.தொருங்கோ உங்கள் போராட்டங்களை.வெற்றி பெற வாழ்த்துக்கள்.(இந்த எனது கருத்து யாழில் இடம்பெறும் பல திரிகளுக்கும் சேர்த்துத்தான்)

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, tulpen said:

ச‍சி வர்ணம், 

யாழ் இணையம் என்பது தமிழர்க்களின் கருத்துக்களம். இது வெளிநாட்டவர்களுக்கான பரப்புரையும் அல்ல ஸ்ரீலங்கா ஆட்சியாளர்களாலும் வாசிக்கப்படுவதல்ல. முழுக்க முழுக்க தமிழர்களால் தான் வாசிக்கப்படுகிறது. எமது வீழ்ச்சிக்கான எமது பக்க காரணங்களை அதிக அளவில் தேடுவது தான் கருத்து களத்தின் வினைதிறனை அதிகரிக்கும் என்பதே எனது எண்ணம். அதனாலேயே எனது கருத்துக்கள் தமிழ்களாகிய எம் மீது வைக்கப்படும் சுயவிமர்சனமாக உள்ளது.  உங்களுக்கே தெரியும் சாதாரணமாக ஒரு  நிறுவனம் கூட தனது வியாபார இழப்புக்கு காரணம் தேட  தமக்குள்ளே விவாதிக்கும் போது தமது நிறுவனப்பக்கம் உள்ள தவறுகளை எப்படி திருத்துவது என்பது குறித்து  தான் அதிகம் விவாதிப்பார்கள். ஒரு சிறு நிறுவனமே அப்படி செய்யும் போது ஒரு தேசிய இனம் தனது பக்க தவறுகளை "பேசாப்பொருள்" என்ற வகுதிக்குள் அடக்க முடியாது.  

இங்கு வந்து எல்லோரையும் போல சிங்கள அரசின் மீது பாய்ந்து விழுந்து கருத்தை எழுதிவிட்டு அதை தமிழரளாகிய நாமே வாசித்து புளகாங்கிதம் அடைந்து எனக்கு பாராட்டு தெரிவிப்பது  எந்த பயனுமில்லை என்பது எனது கருத்தாக உள்ளது. ராஜபக்ச ஒழிக. கோட்டபாய ஒழிக, சிங்கள பேரினவாதம் ஒழிக என்று நாமே நமக்குள்  பேப்பரில் எழுதிவிட்டு நாமே வாசித்து சந்தோசமடைவதில் எனக்கு உடன்பாடில்லை. அதனால் ஒரு சிறிய நன்மை கூட எமக்கு கிடைக்கப்போவதில்லை. 

உலக அரசியலில் எல்லா நாடுகளும் த‍த்தமது  நன்மைகளுக்கு தான் முன்னுரிமை கொடுக்கும்.  தமிழீழம் என்ற நாடு உருவானாலும்  கூட  அது  உலக அரசியலில் ஈடுபடும் போது தமது நன்மைகளை மட்டும் பார்க்குமே தவிர உலக தர்ம‍ம்,நியாயம் என்று தனது சர்வதேச கொள்கைகளை வகுக்கப்போவதில்லை.

ஆகவே  இந்த உலக ஜதாரத்தத‍்தைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப நெகிழ்வுத்தன்மையுடன்  எமது  தரப்பு தலைமைகள்  என்றுமே போராடவில்லை என்பதை போராட்ட காலத்தில் புலிகளோடு ஒன்றாக இருந்த மூத்த அரசியல் ஆய்வாளர் மு. திருநாவுக்கரசு உட்பட பலர்  வெளிப்படையாக தெரிவித்துள்ளனர். இன்று அதை வெளிப்படையாக கூறும் திரு மு. திருநாவுக்கரசு  2009 க்கு முற்பட்ட காலத்தில் வன்னியில் இருந்து  தமிழீழ தேசிய தொலைக்காட்சியில்(NTT)  மறைமுகமாக அதை  எச்சரிக்கையாக அன்றிருந்த தலைமைக்கு தெரிவிக்க வேண்டிய சூழ்நிலையில் அவர்  அதை நேர்மையாக செய்த‍தை பேச்சுவார்த்தை காலத்தில் இங்கு NTT ஒலிபரப்பான போது நானே பல முறை கேட்டுள்ளேன்.  அன்று அவரது மறைமுக எச்சரிக்கைகள் புறக்கணிகப்பட்டதோ அல்லது புரியவில்லையே தெரியாது. ஆனால் அதன் விளைவுகளை நாம் இப்போது சந்தித்துகொண்டிருக்கிறோம். மாறிவிட்ட இன்றைய சூழ்நிலையிலாவது வெளிப்படையாக அதை பேசுவதில் தவறில்ல என்பது எனது கருத்து. 

நான் இவ்வாறு  வெளிப்படையாக கருத்துக்களை வைப்பதால் இங்கு உள்ள ஒரே கருத்தே கொண்ட, அரசியலை வெறும் சென்றிமென்றாகவும் அதை வேளை  ஒருபக்க பார்வை  மட்டுமே  பார்க்கும்  சிறு குழுவினரின் அதிக வெறுப்புக்கு உள்ளாகிறேன் என்பது எனக்கு தெரியும். என்றாலும் யாழ் இணையத்தின் பரந்துபட்ட சாமான்ய வாசகர்களின் சிந்தனையை தூண்டவே அவ்வாறு செய்கிறேன்.  அவ்வாறு செய்யும்  அரசியல் உரிமை சாதாரண தமிழரான எனக்கு உள்ளது என்று நம்புகிறேன். 

 

 

இடிப்பது  சிவன் கோவில் படிப்பது திருவாசகம் .

  • கருத்துக்கள உறவுகள்
On 14/2/2021 at 20:02, Kandiah57 said:

உலகில் எந்தவெரு போராட்டமும் பிழையில்லாமால் நடைபெறவில்லை..அப்படி பிழை விடமால் நடந்த போராட்டங்களை பட்டியலிடுங்கள் பார்ப்போம்.  வல்லரசுகள் கூட பிழை விடுகின்றன...தமிழர் போராட்டத்தில் பிழைகள் நடத்திருக்கின்றன. அவை தவிர்க்க முடியாதவை .வெற்றி பெற்றலும்சரி. தோல்வி பெற்றலும்சரி. போராட்டங்களில் பிழைகள் இடம்பெறும் ..இனி வரும் காலங்களில் நடைபெறும் போராட்டங்களிலும் நிச்சயம் பிழைகள் இடம்பெறும்..ஆகவே தமிழர் போராட்டத்தில்

பிழைகள் நடந்தன என்று சொல்லுவது,எழுதுவது  கூட ஒரு பிழையான செயல் ஆகும்.😁😄😂

Kandiah57 சொல்வதை தான் இலங்கை அரசும் சொல்கிறது.

உலகில் எந்தவொரு யுத்தமும் பிழையில்லாமால் நடைபெறவில்லை..அப்படி பிழை விடமால் நடந்த  யுத்தங்களை பட்டியலிடுங்கள் பார்ப்போம்.  வல்லரசுகள் கூட பிழை விடுகின்றன...இலங்கை யுத்தத்தில் பிழைகள் நடத்திருக்கின்றன. அவை தவிர்க்க முடியாதவை .வெற்றி பெற்றலும்சரி. தோல்வி பெற்றலும்சரி. யுத்தங்களில் பிழைகள் இடம்பெறும் ..இனி வரும் காலங்களில் நடைபெறும் யுத்தங்களிலும் நிச்சயம் பிழைகள் இடம்பெறும்..ஆகவே இலங்கை யுத்தத்தில்

பிழைகள் நடந்தன என்று சொல்லுவது,எழுதுவது  கூட ஒரு பிழையான செயல் ஆகும்.😁😄😂

 

 

  • கருத்துக்கள உறவுகள்
On 14/2/2021 at 19:33, கற்பகதரு said:

கிழக்கு தீமோர் ஆகியவற்றை பற்றி படித்து பாருங்கள்.

விடயம் தெரிந்த ஒருவருடன் கதைக்கும் போது சொன்னார், இப்பொது வடக்கு கிழக்கில் சிறிலங்கா  அரசு செய்வது, கிழக்கு தீமோரில், இந்தோனேசியா இறுதி பகுதியில் போன்றே இருக்கிறது என்றும், இந்தோனேசியா பொருளாதரமும் அதல பாதாளத்தில் இருந்தது, சிறி லங்காவின் பொருளாதரமும் அதல பாதாளத்தில் இருகிறது.

ஒரு வித்தியாசம், அப்போது சீன ஓர் சக்தியாக இல்லை, இப்போது பொருளாதார மற்றும் அரசியல் போக்கில் செல்வாக்கு செலுத்தும் அல்லது திருப்பத்தை ஏற்றப்படுத்தக் கூடியளவு  சீன ஓர் சக்தியாக இருக்கிறது.      

இந்தோனேசியா, அப்படியான நேரத்தில் வகை தொகை இன்றி கொலைகளையும் செய்தது என்று  நினைக்கிறன்.   

  • கருத்துக்கள உறவுகள்
On 14/2/2021 at 19:33, கற்பகதரு said:

இதுவும் உண்மையல்ல. இன்றுதான் வெற்றிபெறும் சாத்தியம் உச்சத்தில் உள்ளது. ஆனால், அதற்கான பாதைகள் பற்றிய அறிவும், அவற்றில் பயணம் செய்யும் ஆற்றலும் பெரும்பான்மையான ஈழத்தமிழரிடம் இல்லை. உண்மையில் இந்த வெற்றிக்கு பெரும்பான்மையான ஈழத்தமிழர் இந்த பாதைகள் பற்றி அறிய வேண்டிய தேவையும் இல்லை. அவர்களின் பங்களிப்பும் கூட தேவையற்றது. விடயம் அறிந்த ஆற்றலுள்ள ஒரு சிலரே இந்த வெற்றியை ஏற்படுத்த கூடியவர்கள். இவை பற்றி அறிய விரும்புபவர்கள் மட்டும் எரித்ரியா, சோமாலிலாந்து, கிழக்கு தீமோர் ஆகியவற்றை பற்றி படித்து பாருங்கள்

சமீபத்தில் வந்த கட்டுரைகள் பற்றி படிக்கலையா கற்பக தரு ?

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பெருமாள் said:

சமீபத்தில் வந்த கட்டுரைகள் பற்றி படிக்கலையா கற்பக தரு ?

படித்திருக்கிறேனே? பாரதிய ஜனதா கட்சி இலங்கையில் ஆட்சி அமைக்கும் என்றது கடைசி தகவல்.

  • கருத்துக்கள உறவுகள்
On 15/2/2021 at 22:10, விளங்க நினைப்பவன் said:

Kandiah57 சொல்வதை தான் இலங்கை அரசும் சொல்கிறது.

உலகில் எந்தவொரு யுத்தமும் பிழையில்லாமால் நடைபெறவில்லை..அப்படி பிழை விடமால் நடந்த  யுத்தங்களை பட்டியலிடுங்கள் பார்ப்போம்.  வல்லரசுகள் கூட பிழை விடுகின்றன...இலங்கை யுத்தத்தில் பிழைகள் நடத்திருக்கின்றன. அவை தவிர்க்க முடியாதவை .வெற்றி பெற்றலும்சரி. தோல்வி பெற்றலும்சரி. யுத்தங்களில் பிழைகள் இடம்பெறும் ..இனி வரும் காலங்களில் நடைபெறும் யுத்தங்களிலும் நிச்சயம் பிழைகள் இடம்பெறும்..ஆகவே இலங்கை யுத்தத்தில்

பிழைகள் நடந்தன என்று

 

 

என்னுடைய கருத்துக்கு பதிலில்லை என்பதை மிக ஆழகான முறையில்  எடுத்து கூறியிருக்கிறிர்கள் மிக்கநன்றி. மிகக்கஸ்ரப்பட்டு சிந்தித்து என் கருத்துக்குள் இலங்கை என்ற சொல்லைச்செருகியிருக்கிறிர்கள். தமிழர்கள போராடியது தங்கள் இழந்த உரிமையை மீட்ப்பாதற்காக மட்டும் தான்.தமிழரிடம் விமானப்படையுமிருந்தது. பள்ளிக்கூடங்கள்,மருத்துவமனைகள், கோயில்கள், தேவாயாலயங்கள்,சிறுவர் இல்லங்கள்,....இப்படியான இடங்களில் திட்டமிட்டு ஆகயாவிமானத்க்குண்டுத்தாக்குதல் செய்யவில்லை.காரணம் மக்களை கொல்லவிரும்பவில்லை. அப்படிச்செய்திருந்தால் , என்றே பல முள்ளிவாக்கல்கள் உருவாகியிருக்கும்.(தெற்கில்)

இலங்கையரசு ஏன் போர் செய்தது? ஆகக்குறைத்த பட்சம் இந்தியாவில் உள்ளது போன்ற மாநில சுயாட்சி வழங்கி போரைத்தவிர்திருக்கலாம் இல்லையா? பள்ளிக்கூடங்கள் மருத்துவமனைகள்  கோயில்கள். தேவாயலயங்கள்.....போன்ற இடங்களில் ஏன் ஆகாயவிமானத்க்குண்டுத்தாக்குதல் செய்தார்கள்? தமிழர் சனத்தொகையைப்படிப்படியாக குறைத்து முழு நாட்டையும் சிங்களவர் நாடாக மாற்றவா ?இன்று தீர்வு வழங்கினால் ,ஏன் போர் செய்திர்கள் ?போர் செய்ய முதலே தமிழர்களுக்கு தீர்வைக் கொடுத்திருக்கலாம் என சிங்களமக்கள் அரசாங்கத்தை கேட்கமாட்டார்களா?

On 12/2/2021 at 19:09, பிழம்பு said:

(எம்.மனோசித்ரா)

 

மகா சங்கத்தினரின் ஆலோசனை மற்றும் வழிக்காட்டல்களுடன் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் சவால்களை எதிர்கொள்வோம் என தெரிவித்துள்ள பிரதமர் மஹிந்த ராஜபகஷ , தேசப்பற்று சட்டமூலத்தின் அவசியம் குறித்தும் இதன் போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

 

இதைத்தான் மொடடைதலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுவதென்பதோ?

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, Kandiah57 said:

இலங்கையரசு ஏன் போர் செய்தது? ஆகக்குறைத்த பட்சம் இந்தியாவில் உள்ளது போன்ற மாநில சுயாட்சி வழங்கி போரைத்தவிர்திருக்கலாம் இல்லையா? பள்ளிக்கூடங்கள் மருத்துவமனைகள்  கோயில்கள். தேவாயலயங்கள்.....போன்ற இடங்களில் ஏன் ஆகாயவிமானத்க்குண்டுத்தாக்குதல் செய்தார்கள்? தமிழர் சனத்தொகையைப்படிப்படியாக குறைத்து முழு நாட்டையும் சிங்களவர் நாடாக மாற்றவா ?இன்று தீர்வு வழங்கினால் ,ஏன் போர் செய்திர்கள் ?போர் செய்ய முதலே தமிழர்களுக்கு தீர்வைக் கொடுத்திருக்கலாம் என சிங்களமக்கள் அரசாங்கத்தை கேட்கமாட்டார்களா?

இலங்கையரசு ஏன் போர் செய்தது?

இந்திய ஏகாதிபத்தியத்தின் இலங்கை மீதான அடக்குமுறையின் ஒரு அங்கமாக இந்திய அரசால் பயிற்றுவிக்கப்பட்ட உள்ளூர் படைகளின் கிளர்ச்சியை அடக்கவே இலங்கை போர் செய்தது. இதை எனக்கு சொன்னவர் பிரேமதாச ஜனாதிபதியாக இருந்தபோது அவருக்கு ஆலோசகராக இருந்த அமெரிக்க விஞ்ஞானி. அந்த நாட்களில் அவருடன் நெருங்கிப்பழகும் சந்தர்ப்பம் கிடைத்திருந்தது.

ஆகக்குறைத்த பட்சம் இந்தியாவில் உள்ளது போன்ற மாநில சுயாட்சி வழங்கி போரைத்தவிர்திருக்கலாம் இல்லையா?

போரை தவிர்ப்பதற்கு முதலில் தேவையாக இலங்கை அரசுக்கு இருந்தது, தீர்வின் பின் ஆயுததாரிகளின் ஆயுதக் களைவுக்கான திட்டம். இந்தியப்படைகளுக்கு ஆயுதங்களை கையளித்த பின்னும் ஆயுதப்போர் தொடர்ந்தது போல தீர்வின் பின்னும் தனிநாடு நோக்கி ஆயுதப்போர் தொடரும் என்பதில் இலங்கை அரசுக்கு துளியளவும் சந்தேகம் இருக்கவில்லை. தீர்வு இந்திய மாநில ஆட்சியை ஒத்திருந்தாலும் இந்தியா இலங்கையில் கிளர்ச்சியை தொடரச்செய்து இலங்கையை முழுமையாக அடிபணிய வைக்கும் என்று இலங்கை அரசு நம்பியது.

 

Edited by கற்பகதரு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.