Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிங்களவர்களை... திருமணம் செய்ய, முண்டியடிக்கும் யாழ் பெண்கள்...

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, புங்கையூரன் said:

பண்டைய தமிழன் இதைச் சரியாகப் புரிந்திருந்தான் என்றே நான் கருதுகின்றேன்!

அதனால் தான்,

யாதும் ஊரே. யாவரும் கேளிர்.

அதனால் தான் சிங்களவன் சாமி தூக்கிய போதும், எனக்கும் கோபம் வரவில்லை!

சாண்டில்யனின் கதையொன்றில் மஞ்சளழகி என்றொரு பாத்திரம் வரும் , , வாசித்திருக்கிறீர்களா..

 அது 100 % கற்பனை என்று நான் ஒரு போதும் நினைத்ததில்லை ....

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, சாமானியன் said:

சாண்டில்யனின் கதையொன்றில் மஞ்சளழகி என்றொரு பாத்திரம் வரும் , , வாசித்திருக்கிறீர்களா..

 அது 100 % கற்பனை என்று நான் ஒரு போதும் நினைத்ததில்லை ....

வாசித்திருக்கிறேன்… 

அனுபவங்களிலிருந்து தானே கற்பனைகள் பிறக்கின்றன.

பாலகுமாரன் அண்ணா ஒருமுறை சொன்னது தான் நினைவுக்கு வருகின்றது.

நாங்கள் உலகெங்கும் விதைக்கப் பட்டிருக்கின்றோம்.

அறுவடை நெருங்கும் போது, சிங்களவனால் அண்ணார்ந்து பார்க்க மட்டுமே முடியும். 

 

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, குமாரசாமி said:

தலையங்கம் தான் பிழையே தவிர......கலப்பு திருமணங்கள் காலா காலமாக /சாதாரணமாக நடந்து வரும் ஒன்றுதான்.

உலக அனுபவம் காணது ...ஊடகவியலாளர்களுக்கும் ....கருத்தாலாளர்களுக்கும்  .....🤣எல்லோரும்  பொடிகட்டி

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே சொல்பவர்கள் எல்லாம், இலங்கையில் 40- 50 ஆண்டுகளுக்கு முற்றப்பட்ட கலப்பு திருமணம் அல்லது  மேற்கில் நடை பெறுவதில் இருக்கும் அவரவரின்  அவதான (anecdotal) வழியாக  ஊகம் அடிப்படையில் வந்தடைந்த (inferred ) கருத்தே (opinion) தவிர (முடிவு அல்ல), ஆராய்வு முடிவு அல்ல.

அந்த கட்டுரையை  இட்டவரும் அப்படித் தான், அவதான (anecdotal) வழியாக  ஊகம் அடிப்படையில் வந்தடைந்த (inferred ) கருத்தே (opinion).

முதலாவது, மேற்கில் நடக்கும் கலப்பின திருமண  பிணைப்புகளின்  விளைவை, இலங்கையில், அதுவும் அரசு இலங்கைத் தீவை சிங்களமயமாக்குவதில்  கொள்கை முனைப்போடு, மூர்க்கமாக,  இருக்கும் போது, ஒப்பிட முடியாது.

முக்கியமாக, எல்லா அரசுகளுக்கும், 'சமூக பரிசோதனை' செய்வதற்கு  ஏற்றவாறு சூழ்நிலைகளை  உருவாக்க கூடிய கொள்கைகளை நடைமுறைபடுத்தவும், பரிசோதனை செய்வதற்கும் உரிமை இருக்கிறது.  

முன்பு சொல்லி இருக்கிறேன், இதை போன்ற ஒரு திரியில் (அது மொழி கொள்கை என்று நினைவு), சமூக ஒழுங்கு மாற்றங்களில்,  எதற்கும் ஓர் நிலைமாறும் கனதி (critical mass) இருக்கிறது.   

சிறிய உதாரணம்  போதும். உலகில் மிக கூடிய சனத்தொகை கொண்ட சீனாவின் ஒரு பிள்ளை கொள்கை. அதன் விளைவு இப்பொது தான் தெரிகிறது.  சீன மேலும் வளர்வதத்திற்கு பொருளாதார அடிப்படையில் இடம் உண்டானாலும், உத்வேகமாக உழைக்க கூடிய சீனாவின் சனத்தொகை சீனா அமெரிக்காவை per capita அடிப்படையில் நெருங்குவதற்கு போதாது. சீனா நிலைமாறும் கனதி கடுந்து விட்டது. கொள்கையை சீன இப்பொது மறு சீரமைத்துள்ளது, அனால் மீண்டும் நிலை மாறு கனதியை அடைவதற்கு 25-30 வருடங்கள் தேவை.  ஆனால், இது சீனாவின் அடிப்படை இருப்பை இந்த நிலை மாறிய சனத்தொகை வளர்ச்சி வீத கனதி பாதிக்கவில்லை.    

ஆனால், எமக்கு, நேரமோ அல்லது சனத்தொகையோ இல்லை, இனப்பரம்பலையம், செறிவையும், இருப்பையும்  பாதிக்கும் சமூக மாற்றங்களின் நிலைமாறு கால கனதியில்  இருந்து மீள்வதற்கு.   

தனிப்பட்ட விருப்புக்களை பற்றி சொல்வதற்கு ஒன்றும் இல்லை. 
 

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, சாமானியன் said:

அடடா முஸ்லீம் பையன்களும் மொட்டாக்கு போடுறாங்கள் என்பது எனக்கு ஒரு புதிய தகவல் ..😀

மொட்டாக்குக்குள் இருந்து கையும் காட்டுவார்கள் 🤣

  • கருத்துக்கள உறவுகள்

கலப்பின திருமணம் வழமையானது, காதல் இயற்கையானது மறுக்கவில்லை. 

தலைப்பும் சொன்ன விதமும் அருவருக்கதக்கதே.

ஆனால் இதன் பின்னால் இருக்கும் நுண்ணரசியல் மறுக்க முடியாதது. 

அதற்காக அரசியலுக்காக காதல் வசப்படுகிறார்கள் என்பதல்ல ஆனால் கலப்பு திருமணத்தின் பின் அந்த குடும்பங்களின் இன அடையாளம் என்னவாக இருக்கிறது என பார்த்தால் இதன் பின்னால் உள்ள அரசியல் புரியும்.

குறிப்பாக முஸ்லிம்கள் - தமிழ் பெண்ணுக்கு, நூல் விடுவார்கள். சிங்கள பெண்ணுக்கும் நூல் விடுவார்கள் - ஐயர் வீட்டு பள்ளி சிறுமிக்கு நூல் விடாமல் போனோமே என அங்கலாய்ப்பார்கள்😡 ஆனால் மதம் மாறினால்தால் கல்யாணம். அல்லது பெண்ணுக்கு கையிறு கொடுத்து விடுவார்கள்.

இது அவர்கள் மதம் போதிப்பது. நம்பிக்கை இல்லாத பெண்ணுடன் வாழ்வது விபச்சாரம் என்கிறது இஸ்லாம்.

ஆகவே இயற்கையான காதலை, திருமணத்தை தனக்கு சாதமாக திருப்ப இஸ்லாம் ஒரு built-in பொறிமுறையை வைத்துள்ளது.

அதே போல் கொழும்பில் வாழும் தமிழ்-சிங்கள கலப்பு பிள்ளைகள் எத்தனை பேர் தமிழ் மீடியத்தில் படிக்கிறார்கள், எத்தனை பேர் சிங்கள மீடியத்தில் படிக்கிறார்கள் என பார்த்தால் உண்மை புரியும்.

இங்கே சிங்களமாக மாறுவது - இலகு, வாழ்கை பிரச்சனை இல்லாமல் போகும் என்ற ரீதியில் சிங்கள இனம் இன்னொரு built-in பொறிமுறையை வைத்துள்ளது.

தமிழர்கள்? எந்த பொறிமுறையும் இல்லை. தமிழர் முஸ்லீமை கட்டினால் அன்றே முஸ்லிமாக மாற வேண்டும். சிங்களவரை கட்டினால் அடுத்த தலைமுறை மாறும். இதுதான் வித்தியாசம். யதார்தம்.

வெளிநாட்டில் இது ஒரு மேட்டர் இல்லை. ஆனால் இலங்கையில் நாம் செய்யும் அடையாளம் சார் அரசியலுக்கு இந்த போக்கு ஆபத்துத்தான்.

மீண்டும் சொல்கிறேன் காதலுக்கு கண் மட்டும் இல்லை, அறிவு உட்பட வேறு எதுவுமே இல்லை ஆகவே தனிபட்ட ரீதியில் கலப்பு திருமணங்கள் இயற்கையானவை. 

ஆனால் மேலே கடஞ்சா சொன்னது போல இதன் பின்னான அரசியலும் கருத்தில் எடுக்கப்பட வேண்டும்.

Edited by goshan_che
Built-in

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

குறிப்பாக முஸ்லிம்கள் - தமிழ் பெண்ணுக்கு, நூல் விடுவார்கள். சிங்கள பெண்ணுக்கும் நூல் விடுவார்கள் - ஐயர் வீட்டு பள்ளி சிறுமிக்கு நூல் விடாமல் போனோமே என அங்கலாய்ப்பார்கள்😡 ஆனால் மதம் மாறினால்தால் கல்யாணம். அல்லது பெண்ணுக்கு கையிறு கொடுத்து விடுவார்கள்.

இது அவர்கள் மதம் போதிப்பது. நம்பிக்கை இல்லாத பெண்ணுடன் வாழ்வது விபச்சாரம் என்கிறது இஸ்லாம்.

நாங்கள் மிகவும் புனிதம் என்று சொல்லிக்கொண்டே நாரபய வேலையெல்லாம் பார்க்கும் முஸ்லீம்கள்பத்தி புட்டு புட்டு வைத்ததுக்கு  கோசானுக்கு

ஒரு லைக்.

அதுகூட நம்ம @மருதங்கேணி எனும் மருதுவ  பல நாட்களா இந்த ஏரியாவில் காணவில்லை என்ற துணிவில் இந்த கருத்து வைக்கிறன், இல்லையென்றால் அவர்களுக்கு எதிராய் கருத்து வைச்சால் இந்த நாய் சேகரை மருது சாகடிச்சிடுவார். 😜

9 hours ago, புங்கையூரன் said:

பண்டைய தமிழன் இதைச் சரியாகப் புரிந்திருந்தான் என்றே நான் கருதுகின்றேன்!

அதனால் தான்,

யாதும் ஊரே. யாவரும் கேளிர்.

அதனால் தான் சிங்களவன் சாமி தூக்கிய போதும், எனக்கும் கோபம் வரவில்லை!

புங்கையண்ணா கண்டிப்பா ஊமைகுத்து குத்துறீங்கள் எண்டு விளங்குது.🙄

உங்கள் பாணியிலேயே சொல்வதானால்... 

இதயங்கள் பேசும் மொழிகள் இனத்தின் மொழி ஆவதில்லை .

இனத்தின் மொழி கணக்கில் எடுக்கப்படும் ஒரு நாளில் இதய மொழிகளுக்கு வேலையில்லை.

அதனால்தான் அரசியல் பொறுப்பாளர் நடேசனின் சிங்கள மனைவியும் அவருடன் சேர்த்து கொல்லப்பட்டார்...

சரியா சொன்னேனா, இல்லை சொதப்பிட்டேனா என்று புங்கையண்ணா நீங்கதான் சொல்லணும்🤔

  • கருத்துக்கள உறவுகள்

நானும்  வேண்டாம்  வேண்டாம்  என்று ஒதுங்கினாலும்

தம்பிமார்  விடுவதாக  இல்லை

சிங்களவர்களை... திருமணம் செய்ய, முண்டியடிக்கும் யாழ் பெண்கள்...

நாங்க படிக்கும்  காலத்தில் இந்தநிலை  தலைகீழாக  இருந்தது

 

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கலப்பு திருமணங்கள் அதிலும் இலங்கையில் சிங்களவர்களை(ஆண் அல்லது) திருமணம் செய்வது முன்பே இருந்திருந்தாலும், இப்பொழது இதற்கு பின்னால் உள்ள அரசியலை கவனித்தால் அது ஆபத்து உள்ளது என்றால், எங்களது சமூகத்தில் சில வேரூடிய பிரச்சனைகளை தீர்க்காதுவிடில் இவற்றை தடுக்க முடியாது என்பது எனது கருத்து. 

-  தமிழர் சனத்தொகையில் ஆண் பெண் விகிதசாரம்.. பெண்களின் விகிதசராம் அதிகம் எனலாமா?  

- கல்வி தகமை/வேலை வாய்ப்பு - என்னதான் கூறினாலும் ஆண் கல்வியற்றவராகவும் அல்லது வேலை இல்லாதவராக இருந்தால் திருமணங்கள் சாத்தியமா? இல்லை அது எத்தனை காலம் நிலைத்திருக்கும்? யாழ்ப்பாணத்தில் எந்த அலுவலகம் போனாலும், அலுவலகர்களாக இருப்பது பெண்களே.. “ திருமணம்” என்ற ஒன்றிற்காக வேலையில்லாத ஒரு ஆணை செய்ய இயலுமா? 

- சீதனம்.. சீதனம் கொடுக்க முடியாமல் எத்தனை தமிழ் முதிர்கன்னிகள் இன்னமும் இலங்கையில் இருக்கிறார்கள்.. சீதனம் வாங்காத ஆண்களை ஏளனமாக பாரக்கும் மனிதர்களும் எங்களிடையே இருக்கிறார்கள் தானே!

- புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களின் பெண்பிள்ளைகள்/ ஆண்பிள்ளைகள். திருமணமாகாமல் இருக்கிறார் அவர்கள் இலங்கையில் உள்ள ஆண்/பெண் ஒருவரை திருமணம் செய்ய இயலுமா? வேறு பல பிரச்சனைகள் இருப்பதால், அதற்கான சாத்தியங்கள் குறைவு.. 

- சாதி மற்றும் சமூக அந்தஸ்து.. இதைப்பற்றி புதிதாக கதைக்க ஒன்றுமில்லை.. 

 

இந்த மாதிரி விடயங்களை சிங்களவர்கள் தமக்கு ஆதாயமாக காட்டுவார்கள், எங்களாலும் ஒன்றும் செய்ய முடியாதுவிட்டால் இந்த செய்தி கொஞ்ச நாளில் அடங்கிவிடும் மீண்டும் இதே போல இன்னொரு செய்திவரும் வரையில்..அவ்வளவுதான்

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்
On ‎22‎-‎07‎-‎2021 at 11:07, nedukkalapoovan said:

நீங்க என்ன எழுதுறீங்க என்பது உங்களுக்கே விளங்கவில்லைப் போல.

இந்த தலைப்புக்குள் நெடுக்ஸை உள்ளுழுத்தது தாங்கள். ஒரு ஆக்கிரமிப்பு தேசத்தில் இப்படியான சில்லறை தனங்கள் நடப்பது இயல்பு. எம்மவர்கள் கடந்த காலங்களிலும் இதனை செய்துள்ளனர். அதற்காக அந்த ஒட்டுமொத்த இனத்தின் உரிமையும் இருப்பும் அதன் தார்மீகக் கோரிக்கைகளும் இல்லையென்றாகாது.

கருணா டக்கிளஸ் பிள்ளையான் சித்தார்த்தன் போன்ற கூட்டு இனப்படுகொலையாளர்களை நீங்கள் ஆதரிக்கலாம்.. இப்படி சிங்களவர்களை திருமணம் செய்பவர்களே ஆதரிக்கமாட்டார்கள். ஏனெனில்.. இவ்வாறான நிகழ்வுகள்..தனிப்பட்ட சூழலில் நிகழ்பவை. ஒரு இனத்தின் பொதுத் தளத்தில் அல்ல.

மலையக மக்கள் சிங்களவரோடு வாழ்ந்தாலும்.. இன்னும் சிங்கள முழுக்கலப்பை சந்திக்கவில்லை. தமிழர்கள் கொழும்பில் வாழ்ந்தாலும் எத்தனை சதவீதம் பேர் சிங்களக் கலப்படைந்திருக்கிறார்கள்.

நீங்கள் ஒட்டுக்குழுக்கள்.. தமிழின துரோகிகள்..செய்யும் இனத்துரோகத்தை நியாயப்படுத்த இப்படியா தனி நிகழ்வுகளை உங்களுக்கு சாதகமாக்கிக் கொள்ள நினைக்கிறீர்கள்.

இன்றும்.. நீர்கொழும்பில் வாழும் தமிழர்கள்.. சிங்களக் கலப்பை முழுமையாக கடைப்பிடிக்கவில்லை. தமிழ் கடவுளை தான் கும்பிடுகிறார்கள். பிள்ளைகள் வீட்டில் தமிழ் வெளியில் சிங்களம் பேசுகிறார்கள். இது சாதாரண மக்களின வாழ்வியல் சார்ந்ததே.. தவிர.. இனத்துரோகமல்ல. ஆனால்.. கருணா.. முரளிதரன்.. பிள்ளையான்,.. டக்கிளஸ் கும்பல் செய்வது இனத்துரோகம். ஒட்டுமொத்த இனத்தையும் மண்ணையும் மக்களையும் பாதிக்கும் செயல்களாகும். 

நான் என்ன எழுதுறேன் என்று நன்றாய் விளங்கித் தான் எழுதுகிறேன் ...விளங்காத திரிகளில் நான் போய் எழுதுவதில்லை ...நீங்கள் தான் கிழக்கு மாகாணத்தில் தனிப்பட என்ன நடந்தாலும் அதற்கு கருணாவையும் ,பிள்ளையானையும் குற்றம் சாட்டி இருந்தீர்கள்...அந்த கருத்திற்கு பதிலாகத் தான் என் கருத்து இருந்தது ...வடக்கில் தமிழ் [பெண்கள் சிங்களவரை மணம் முடிப்பதற்கு யார் பொறுப்பு ?  கஜன் கூட்டனியா என்று நான் பதிலுக்கு எழுத முடியும் ...எடுத்ததற்கெல்லாம் அடுத்தவரை பிழை கூற முன் பிழை எங்கேயிருக்குது என்று ஆராய்ந்து போட்டு எழுதுங்கோ. 

 

  • கருத்துக்கள உறவுகள்

இப்பதான் ஊர் உலகுக்கு பிரச்சினை தெரிய வந்திருக்கு  சாதி மாறி கல்யாணம் கட்டிக்கொடுத்தால் விலக்கி வைப்பதும் , வெட்டு குத்து எழும்புவதும்  இல்லாமல் பெரிய பூகம்பமே எழும்பும் இப்ப அந்த நிலை வராமல் பிள்ளைகள்  ஒரு முடிவ எடுத்திருக்கு 

இந்த சுப்பிரமணிய பிரபாவுக்கு ஒரு கல்யாணம் கட்ட பெண் கிடைக்காததால அவன் எழுதுற ஆக்கம் எல்லாம் இப்ப சரவெடியா இருக்கு  கூட்டமைப்பு சொம்பு  அவன் என்ற நண்பனும் கூட 

  • கருத்துக்கள உறவுகள்

தலையங்கம் சும்மா அதிருது.

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, colomban said:

தலையங்கம் சும்மா அதிருது.

இதை வாசிசிட்டு நீங்கதான் இணைச்சிருப்பீங்க எண்டு நினைச்சன்🤣

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, colomban said:

தலையங்கம் சும்மா அதிருது.

 

6 minutes ago, goshan_che said:

இதை வாசிசிட்டு நீங்கதான் இணைச்சிருப்பீங்க எண்டு நினைச்சன்🤣

இது...  "தொப்பி அளவானவர்க்கான"  வேறை, "லெவல்"  உள் குத்து.  😂

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, தமிழ் சிறி said:

 

இது...  "தொப்பி அளவானவர்க்கான"  வேறை, "லெவல்"  உள் குத்து.  😂

🤣

ஆனால் கொழும்பானின் வெளிப்படைத்தன்மை எனக்கு பிடிக்கும். யாழ்பாணத்தை சிறுமைப்படுத்தும் செய்திகளை அவர் தேடி இணைப்பது அவரை இன்னார் என அடையாளம் காட்டினாலும் (ஊகம்) - அவர் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றி நான் காணவில்லை.

 

  • கருத்துக்கள உறவுகள்
Quote

அவர் வாழைப்பழத்தில் ஊசி ஏற்றி நான் காணவில்லை.

🤣அப்படியா கோசான்??

  • கருத்துக்கள உறவுகள்

இக்காலத்துத் தமிழ் இளைஞர்கள் அதற்குச்சரிவரமாட்டார்கள் என அனுபவரீதியாக அறிந்ததால் யாழ் தமிழ் பெண்கள் மனநிலை அப்படிப்போகுதோ தெரியவில்லை. எதற்கும் யாழ் இளைஞர்கள் உள்ளூர் மாத்துருபூதத்திடம் அலோசனையும் அதற்கான சிகிச்சைகளையும் பெற்றால் நல்லது.

2 hours ago, Elugnajiru said:

இக்காலத்துத் தமிழ் இளைஞர்கள் அதற்குச்சரிவரமாட்டார்கள் என அனுபவரீதியாக அறிந்ததால் யாழ் தமிழ் பெண்கள் மனநிலை அப்படிப்போகுதோ தெரியவில்லை. எதற்கும் யாழ் இளைஞர்கள் உள்ளூர் மாத்துருபூதத்திடம் அலோசனையும் அதற்கான சிகிச்சைகளையும் பெற்றால் நல்லது.

 

அது தான் வேறையென்ன? எங்கடையள் சாப்பிறது, பக்கர், பிசா, சிக்கின் கொக்கா, டக்கிலோ, ஸ்பிறிங் றோள், கபப், கொக்க மக்க ..

பிள்ளை வடிவா சொல்லிபோட்டுதே அவர் வடிவா COMPLETE பன்னுவார் என்று.

 

 

 

 

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்
On 22/7/2021 at 03:02, nedukkalapoovan said:

எங்கினையன் ஒன்றிரண்டு பேர் செய்வதெல்லாம்... ஒரு இனமே செய்வதாகாது. எங்கடை ஆக்கள் ஹிந்திய இராணுவத்தையும் தான் கல்யாணம் கட்டிச்சினம். கண்ணிவெடி எடுக்க வந்த கறுப்பனையும் தான் கட்டிச்சினம். 

வடக்குக் கிழக்கில் நிகழ்வது திட்டமிட்ட இன அழிப்பும்.. சுத்திகரிப்பும். இதே மகிந்த கும்பல்.. பாலியல்..பலவந்தப்படுத்திய சிங்கள இராணுவத்துக்கே.. தமிழ் பெண்களை கட்டிவைத்தது அது தான்.. இன அழிப்பின் இன்னொரு வடிவம். 

மேலும்.. .தனிப்பட்ட நபர்கள் ஒரு சிலர் செய்வது.. பொதுவிதியாகாது.

விக்கியர் வீட்டில்லும் சிங்களத்தில் பெண்ணெடுத்திருக்கிறார்கள். புலிகள் அமைப்பிலும் நடேசன் போன்றவர்கள் சிங்களத்தில் பெண்ணெடுத்திருக்கிறார்கள்... மேலும்.. சிங்கள மக்கள் மத்தியிலும் எல்லாரும் பேரினவாதப் போக்கோடு.. மகிந்த கோத்தா சந்திரிக்கா ரணில் மைத்திரி பிரேமதாச ஜே ஆர் கணக்கில் தமிழர்களை அழித்து அடக்கி அடிமைப்படுத்தி.. வாழனுன்னு நினைப்பதில்லை. அங்கும் தமிழர்களின் உரிமையை மதிப்பவர்கள்.. இருக்கிறார்கள். 

உண்மைதான் நெடுக்கர்...இந்த தலைப்பிலை செய்தி எழுதுற எழுத்தாளர்மார் உண்மையான புலி எதிர்ப்பு ,இனஎதிர்ப்பு வாதிகள்...இவை இனத்துடன்  பழகும்போது உறங்கல் இருக்கை நிலையில்தான் இருப்பினம்...

எப்பன் வாயிலை பட்டவுடன் அவர்களுடைய சுயரூபம் புலப்படும் ...இவைமட்டுமல்ல உத்தியோகம் என்றடீதியில் சிங்களத்திற்கு கு ..கழுவுறவையும்தான்...

  • கருத்துக்கள உறவுகள்
On 24/7/2021 at 06:32, Elugnajiru said:

இக்காலத்துத் தமிழ் இளைஞர்கள் அதற்குச்சரிவரமாட்டார்கள் என அனுபவரீதியாக அறிந்ததால் யாழ் தமிழ் பெண்கள் மனநிலை அப்படிப்போகுதோ தெரியவில்லை. எதற்கும் யாழ் இளைஞர்கள் உள்ளூர் மாத்துருபூதத்திடம் அலோசனையும் அதற்கான சிகிச்சைகளையும் பெற்றால் நல்லது.

பின்ன பதின்ம வயதிலேயே மாவாவும், ஐஸுமா அலைஞ்சால் தண்டு வடம் சுருண்டு படுக்காமல் என்ன செய்யும் 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.