Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பேரீச்சம் பழத்துக்குப் போகுது வணங்காமண் கப்பல்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பேரீச்சம் பழத்துக்குப் போகுது வணங்காமண் கப்பல்.

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் உலகெங்கும் வாழும் தமிழர்கள் மத்தியில் பரபரப்பாகப் பேசப்பட்ட விடயம் வணங்காமண் கப்பல். வணங்கா மண்ணால் தமிழினம் காக்கப்படப்போகிறதென்ற நம்பிக்கையையும் உலகத் தமிழர் முதல் தாயகத்தமிழர் வரை நம்பியிருந்தனர். அடங்காமண் நோக்கி வணங்கா மண்ணென்றெல்லாம் வீரம் பேசி மகிழ்ந்தோம்.

இந்தத் திட்டம் தொடங்கப்பட்ட பொழுது முல்லைத்தீவில் தமிழீழத் தலைமையும் பல இலட்சம் மக்களும் போருக்குள் நின்றனர். அரசபயங்கரவாதம் அரங்கேறியது முதல் பல்லாயிரம் பேரை முல்லைமண் இழந்து கொண்டிருந்தது.

யுத்தம் நடந்து கொண்டிருந்த அந்த நேரம் பெரியதொரு நம்பிக்கையாகவும் வணங்காமண் வலிமையானதெனவும் நம்பினர் தமிழர். சாவுக்குள் நின்ற அந்த மக்கள்கூட வணங்காமண்ணைப் பெரிதும் நம்பினர். தனது உறவுகளைப் பலிகொடுத்த ஒரு இளைஞன் கண்ணீரோடு கப்பல் வருமா எங்களைக் காக்குமா எனக் கதறியது எங்கள் எல்லோரையும் அழ வைத்தது.

புலம்பெயர் தேசமெங்கும் வாழும் தமிழர்கள் இந்தக் கப்பல் திட்டத்திற்கு பெரும் வரவேற்பு மட்டுமல்ல ஒர் உணர்வு கலந்த உதவிகளை அனைத்துத் தமிழர்களும் ஓடியோடிச் செய்தது மட்டுமல்லாமல் வளமை போல் தம்மைத் தேசிய ஊடகம் என்று சொல்லிக் கொள்ளும் ஊடகங்கள் முதலாக பிரபல ஆய்வாளர்கள் வரை, இந்தக் கப்பல்தான் முல்லைத்தீவில் முடக்கப் பட்டிருந்த பல இலட்சம் மக்களினதும் மீட்புக் கப்பல் என்பதைப்போல பேசியும் எழுதியும் கொண்டிருந்தனர்.

அவையெல்லாம் அந்தக் கப்லின் பயணத்திற்கான விபரங்களை மக்களிடம் கொண்டு போய்ச் சேர்த்து அதற்கான உதவிகளைப் பெறுவதே நோக்கமாக இருந்தது .எனவே அதில் தவறு சொல்வதற்கில்லை. ஆனால் பெரும் விளம்பரங்களுடனும் பிரமாண்டமான ஏற்பாடுகளுடனும் இந்தத் திட்டத்தினைத் தொடக்கியவர்கள் தமிழர் புனர்வாழ்வுக்கத்தினர்.

தமிழர் புனர்வாழ்வுக்கழகம் இலங்கையரசினாலும் மற்றும் வெளிநாடுகளிலும் தடைசெய்யப்பட்ட ஒரு அமைப்பாக இருந்ததனால் எந்தவொரு கப்பல் நிறுவனமும் இவர்களுக்குக் கப்பலை வாடைகைக்குக் கொடுக்க முன்வரவில்லை.அது மட்டுமல்ல சர்வதேசத் தொண்டு நிறுவனங்களோ செஞ்சிலுவைச்சங்கத்தின் உதவிகளோ கிடைக்க முன்னரே சட்ட வல்லுனர்களின் உதவியுடன் சட்ட நுணுக்கங்களை ஆராய்ந்து சர்வதேச சட்டங்களிற்கமைய , அதே நேரம் சர்வதேச செஞ்சிலுவைச்சங்கம் மற்றும் வேறு தொண்டு நிறுவனங்களின் உதவியுடனும் , அதன் உறுப்பினர்களுடனும் ஒரு மருத்துவர்கள் அடங்கிய குழு ஒன்றுடனும் தான் இந்தக் கப்பல் புறப்படும் என்றும் சொல்லப்பட்டது. எனவே இலங்கையரசு இந்தக் கப்பலைத் தடுத்தாலும் சர்வதேச நாடுகளும் உதவி அமைப்புக்களும் இலங்கையரசிற்கு அழுத்தங்களைக் கொடுக்கும்ஆகவே அது கூட எமது போராட்டத்திற்கான ஒரு பரப்புரையாக அமையும் என்றும் அதன் ஏற்பாட்டாளர்களினால் மக்களிற்கு விளக்கமும் கொடுக்கப்பட்டது. எனவே மக்களும் தங்கள் உறவுகளுக்கு எல்லாம் போய்ச்சேரப்போகிறதென நம்பிப் பணமாகவும் பொருட்களாகவும் போதும் வேண்டாம் என்று சொல்லும் வரை அள்ளிக் கொடுத்தனர்.

பணம் பொருட்கள் எல்லாம் தயாரான பின்னரும் கப்பல் தயாராகாததால் கப்பல் பறப்படுமா இல்லையா என்றொரு குழப்பம் இருந்தது. பணம் கொடுத்த மக்கள் ஊடகங்களில் நேரடியாகவே தங்கள் கோபங்களை வெளிப்படுத்தத் தொடங்கியிருந்தனர். மக்களின் கோபத்தினை திசை திருப்புவதற்காக பிரான்சிலிருந்து ஒரு கப்பலும் யெர்மனியிலிருந்து ஒரு கப்பலும் பறப்படுவதற்கு தயாராகின்றது என்று பரபரப்புக் கதைகளைப் பரப்பிவிட்டபடியே ஒருவாறு பழைய கைவிடப்படவேண்டிய நிலையிலிருந்த *கப்டன் அலி* என்கிற சிரிய நாட்டுக் கப்பலைப் பல இலட்சம் யுரோக்களிற்கு விலைக்கு வாங்கி அதில் 800 தொன் உணவுப் பொருட்களையும் ஏற்றிக் கொண்டு பின்லாந்து நாட்டுக்காரரின் தலைமையில் ஒரு தமிழர் உட்பட கப்பல் ஊழியர்கள் 13 பேருடன் வணங்காமண் கப்பல் கடலில் நகரத் தொடங்கிய பொழுது முல்லைத்தீவில் முள்ளிவாய்க்கால் பகுதியில் இறுதியாய் இருந்த அனைவரும் மண்ணோடு மண்ணாகிவிட்டிருந்தனர்.

இந்தக் கப்பலின் எற்பாட்டாளர்கள் கூறியது போல கப்பலில் சர்வதேச தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகளோ வைத்தியர் குழுவோ இருந்திருக்கவில்லை.கப்பலும் இலங்கையரசினால் மறிக்கப்பட்டு சோதனைக்குள்ளாக்கப்பட்டு கப்பலில் தடைசெய்யப்பட்ட பொருட்கள் எதுவும் இல்லை மருந்துகளும் உணவுப் பொருட்கள் மாத்திரமே உள்ளது ஆனாலும் அதனைப் பாதிக்கப்பட்ட தமிழர்களிற்குக் கொடுக்க அனுமதிக்கமாட்டோம் என்று திமிராகக் கூறிவிட்டுக் கப்பலையும் திருப்பி அனுப்பிவிட்டது.

பணமும் பொருளும் அள்ளிக் கொடுத்த மக்களின் எதிர் பார்ப்பின்படி எந்தப் பொருட்களும் எமது உறவுகளிடம் சென்று சேரவுமில்லை அதே நேரம் ஏற்பாட்டாளர்கள் கூறியதைப் போல எந்தப் பரப்புரையும் நடக்கவுமில்லை. எந்தவொரு நாடும் ஏன் எந்தவொரு மனிதவுரிமை அமைப்புக்கூட ஒரு கண்துடைப்புக்கேனும் ஒரு கண்டனத்தைக்கூட வெளியிடவில்லையென்பது கவனிக்கப்படவேண்டிய விடயம். காரணம் இதன் எற்பாட்டாளர்கள் சர்வதேச ரீதியான ஆதரவினைப் பெற்றுக் கொள்ளாததும். சட்டரீதியாகத் தடைசெய்யப்பட்ட புலிகளின் உப அமைப்பு எனப்படும் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினர் இதனை ஏற்பாடு செய்ததுமேயாகும்.

அது மட்டுமல்ல கப்பல் இலங்கையிலிருந்து திருப்பப்பட்டதும் அதில் உள்ள பொருட்களையாவது பொறுப்பெடுத்து பாதிக்கப்பட்டவர்களிற்கு வழங்கும்படிதொண்டு நிறுவனங்களிடமும் சில இந்திய(தமிழ்நாட்டு)அரசியல் வாதிகளிடமும் கோரிக்கைகளும் வைக்கப்பட்டன. தங்களுக்கும் புலிச்சாயம் அடிக்கப்பட்டுவிடும் என்கிற அச்சத்தில் யாரும் பொறுப்பெடுக்க முன்வராததால் கப்பல் தற்சமயம் இந்தியாவின் கல்கத்தா துறைமுகம் நோக்கிப் பயணித்தபடி இருக்கின்றது.

கல்கத்தா சென்றடைந்ததும் கப்பலில் உள்ள பொருட்களை யாரோ ஒருவர் ஏலத்தில் எடுக்கப்போகிறார் , மீதி கடலில் எறியப்படும் , கப்பலும் பழைய கப்பல்கள் உடைக்கும் ஒரு நிறுவனத்திடம் விற்கப்பட்டு உடைக்கப்பட்டு கல்க்கத்தாவில் உள்ள கலாயன் கடைகளில் விலைக்குப் போடப்படும்.

இங்கு உடைபடப்போவது வணங்காமண் என்கிற கப்பல் மட்டுமல்ல , புலம்பெயர் தேசத்து மக்கள் ஒவ்வொருவரின் உழைப்பும் , உணர்வும் , எதிர்பார்ப்புக்களும் , நம்பிக்கைகளும் தான்.

இது யாருடைய தவறு??? இப்படி ஒரு திட்டத்தினைப் போட்டது தவறல்ல ஆனால் அதனை வழிநடத்தியவர்களின் தவறேயாகும். தங்களிற்கே எல்லாம் தெரியுமென்கிற அதிமேதாவித்தனம் , இங்கிலாந்தின் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் ஆதரவுக்குரல் தந்துவிட்டால் நாடாளுமன்றமே ஆதரவு தந்துவிட்டதாகக் கட்டப்பட்ட மனக்கோட்டைகள் என எங்களது தவறான புரிதல்களும் வழிநடாத்தல்களுமேயாகும்.

பலவிடயங்கள் சட்டரீதியாக சர்வதேச விதிமுறைகளிற்கு அமையாமலும் சர்வதேச தொண்டு நிறுவனங்களின் ஆதரவுகளைத் திரட்டாததும் தான் காரணமாகும். இப்படி மக்களின் பணமும் , உழைப்பும் , எதிர்பார்ப்புக்களும் , நம்பிக்கைகளும் சில புலத்து மேதாவிகளால் விணடிக்கப்படுவது இது முதல் தடைவையல்ல என்பதை எல்லோருமே அறிவார்.. ஆகவே இனியாவது இப்படியான தவறுகளை விடாதீர்கள். மக்களை ஏமாற்றாதீர்கள் எனத் தாழ்மையுடன் வேண்டுகிறோம். இதற்கு மேலும் ஏமாற்றங்களைத் தாங்க எம்மால் முடியாது.

10.06.09

Edited by shanthy

  • Replies 76
  • Views 14.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இங்கு உடைபடப்போவது வணங்காமண் என்கிற கப்பல் மட்டுமல்ல , புலம்பெயர் தேசத்து மக்கள் ஒவ்வொருவரின் உழைப்பும் , உணர்வும் ,

எதிர்பார்ப்புக்களும் , நம்பிக்கைகளும் தான்...............

....உண்மை சாந்தி .............பதிவுக்கு நன்றி ..........

.நம் மக்கள் மிகுந் நம்பிக்கையுடன் எதிர்பார்த்திருந்தார்கள். இறுதியில் ஏமாற்றம் தான் மிஞ்சியது . அதை நல் மனதுடன் கொடுத்தவர்களும்

நம்பிக்கையுடன் தான் கொடுத்தார்கள். இறுதியியில் .............

எல்லோரயும் ஏற்றிச் செல்ல .............கப்பல் வருமா ? என்ற பாடல் தான் நினைவு வருகிறது ..........

பேரீச்சம் பழத்துக்குப் போகுது வணங்காமண் கப்பல்.

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் உலகெங்கும் வாழும் தமிழர்கள் மத்தியில் பரபரப்பாகப் பேசப்பட்ட விடயம் வணங்காமண் கப்பல். வணங்கா மண்ணால் தமிழினம் காக்கப்படப்போகிறதென்ற நம்பிக்கையையும் உலகத் தமிழர் முதல் தாயகத்தமிழர் வரை நம்பியிருந்தனர். அடங்காமண் நோக்கி வணங்கா மண்ணென்றெல்லாம் வீரம் பேசி மகிழ்ந்தோம்.

இந்தத் திட்டம் தொடங்கப்பட்ட பொழுது முல்லைத்தீவில் தமிழீழத் தலைமையும் பல இலட்சம் மக்களும் போருக்குள் நின்றனர். அரசபயங்கரவாதம் அரங்கேறியது முதல் பல்லாயிரம் பேரை முல்லைமண் இழந்து கொண்டிருந்தது.

யுத்தம் நடந்து கொண்டிருந்த அந்த நேரம் பெரியதொரு நம்பிக்கையாகவும் வணங்காமண் வலிமையானதெனவும் நம்பினர் தமிழர். சாவுக்குள் நின்ற அந்த மக்கள்கூட வணங்காமண்ணைப் பெரிதும் நம்பினர். தனது உறவுகளைப் பலிகொடுத்த ஒரு இளைஞன் கண்ணீரோடு கப்பல் வருமா எங்களைக் காக்குமா எனக் கதறியது எங்கள் எல்லோரையும் அழ வைத்தது.

புலம்பெயர் தேசமெங்கும் வாழும் தமிழர்கள் இந்தக் கப்பல் திட்டத்திற்கு பெரும் வரவேற்பு மட்டுமல்ல ஒர் உணர்வு கலந்த உதவிகளை அனைத்துத் தமிழர்களும் ஓடியோடிச் செய்தது மட்டுமல்லாமல் வளமை போல் தம்மைத் தேசிய ஊடகம் என்று சொல்லிக் கொள்ளும் ஊடகங்கள் முதலாக பிரபல ஆய்வாளர்கள் வரை, இந்தக் கப்பல்தான் முல்லைத்தீவில் முடக்கப் பட்டிருந்த பல இலட்சம் மக்களினதும் மீட்புக் கப்பல் என்பதைப்போல பேசியும் எழுதியும் கொண்டிருந்தனர்.

அவையெல்லாம் அந்தக் கப்லின் பயணத்திற்கான விபரங்களை மக்களிடம் கொண்டு போய்ச் சேர்த்து அதற்கான உதவிகளைப் பெறுவதே நோக்கமாக இருந்தது .எனவே அதில் தவறு சொல்வதற்கில்லை. ஆனால் பெரும் விளம்பரங்களுடனும் பிரமாண்டமான ஏற்பாடுகளுடனும் இந்தத் திட்டத்தினைத் தொடக்கியவர்கள் தமிழர் புனர்வாழ்வுக்கத்தினர்.

தமிழர் புனர்வாழ்வுக்கழகம் இலங்கையரசினாலும் மற்றும் வெளிநாடுகளிலும் தடைசெய்யப்பட்ட ஒரு அமைப்பாக இருந்ததனால் எந்தவொரு கப்பல் நிறுவனமும் இவர்களுக்குக் கப்பலை வாடைகைக்குக் கொடுக்க முன்வரவில்லை.அது மட்டுமல்ல சர்வதேசத் தொண்டு நிறுவனங்களோ செஞ்சிலுவைச்சங்கத்தின் உதவிகளோ கிடைக்க முன்னரே சட்ட வல்லுனர்களின் உதவியுடன் சட்ட நுணுக்கங்களை ஆராய்ந்து சர்வதேச சட்டங்களிற்கமைய , அதே நேரம் சர்வதேச செஞ்சிலுவைச்சங்கம் மற்றும் வேறு தொண்டு நிறுவனங்களின் உதவியுடனும் , அதன் உறுப்பினர்களுடனும் ஒரு மருத்துவர்கள் அடங்கிய குழு ஒன்றுடனும் தான் இந்தக் கப்பல் புறப்படும் என்றும் சொல்லப்பட்டது. எனவே இலங்கையரசு இந்தக் கப்பலைத் தடுத்தாலும் சர்வதேச நாடுகளும் உதவி அமைப்புக்களும் இலங்கையரசிற்கு அழுத்தங்களைக் கொடுக்கும்ஆகவே அது கூட எமது போராட்டத்திற்கான ஒரு பரப்புரையாக அமையும் என்றும் அதன் ஏற்பாட்டாளர்களினால் மக்களிற்கு விளக்கமும் கொடுக்கப்பட்டது. எனவே மக்களும் தங்கள் உறவுகளுக்கு எல்லாம் போய்ச்சேரப்போகிறதென நம்பிப் பணமாகவும் பொருட்களாகவும் போதும் வேண்டாம் என்று சொல்லும் வரை அள்ளிக் கொடுத்தனர்.

பணம் பொருட்கள் எல்லாம் தயாரான பின்னரும் கப்பல் தயாராகாததால் கப்பல் பறப்படுமா இல்லையா என்றொரு குழப்பம் இருந்தது. பணம் கொடுத்த மக்கள் ஊடகங்களில் நேரடியாகவே தங்கள் கோபங்களை வெளிப்படுத்தத் தொடங்கியிருந்தனர். மக்களின் கோபத்தினை திசை திருப்புவதற்காக பிரான்சிலிருந்து ஒரு கப்பலும் யெர்மனியிலிருந்து ஒரு கப்பலும் பறப்படுவதற்கு தயாராகின்றது என்று பரபரப்புக் கதைகளைப் பரப்பிவிட்டபடியே ஒருவாறு பழைய கைவிடப்படவேண்டிய நிலையிலிருந்த *கப்டன் அலி* என்கிற சிரிய நாட்டுக் கப்பலைப் பல இலட்சம் யுரோக்களிற்கு விலைக்கு வாங்கி அதில் 800 தொன் உணவுப் பொருட்களையும் ஏற்றிக் கொண்டு பின்லாந்து நாட்டுக்காரரின் தலைமையில் ஒரு தமிழர் உட்பட கப்பல் ஊழியர்கள் 13 பேருடன் வணங்காமண் கப்பல் கடலில் நகரத் தொடங்கிய பொழுது முல்லைத்தீவில் முள்ளிவாய்க்கால் பகுதியில் இறுதியாய் இருந்த அனைவரும் மண்ணோடு மண்ணாகிவிட்டிருந்தனர்.

இந்தக் கப்பலின் எற்பாட்டாளர்கள் கூறியது போல கப்பலில் சர்வதேச தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகளோ வைத்தியர் குழுவோ இருந்திருக்கவில்லை.கப்பலும் இலங்கையரசினால் மறிக்கப்பட்டு சோதனைக்குள்ளாக்கப்பட்டு கப்பலில் தடைசெய்யப்பட்ட பொருட்கள் எதுவும் இல்லை மருந்துகளும் உணவுப் பொருட்கள் மாத்திரமே உள்ளது ஆனாலும் அதனைப் பாதிக்கப்பட்ட தமிழர்களிற்குக் கொடுக்க அனுமதிக்கமாட்டோம் என்று திமிராகக் கூறிவிட்டுக் கப்பலையும் திருப்பி அனுப்பிவிட்டது.

பணமும் பொருளும் அள்ளிக் கொடுத்த மக்களின் எதிர் பார்ப்பின்படி எந்தப் பொருட்களும் எமது உறவுகளிடம் சென்று சேரவுமில்லை அதே நேரம் ஏற்பாட்டாளர்கள் கூறியதைப் போல எந்தப் பரப்புரையும் நடக்கவுமில்லை. எந்தவொரு நாடும் ஏன் எந்தவொரு மனிதவுரிமை அமைப்புக்கூட ஒரு கண்துடைப்புக்கேனும் ஒரு கண்டனத்தைக்கூட வெளியிடவில்லையென்பது கவனிக்கப்படவேண்டிய விடயம். காரணம் இதன் எற்பாட்டாளர்கள் சர்வதேச ரீதியான ஆதரவினைப் பெற்றுக் கொள்ளாததும். சட்டரீதியாகத் தடைசெய்யப்பட்ட புலிகளின் உப அமைப்பு எனப்படும் தமிழர் புனர்வாழ்வுக் கழகத்தினர் இதனை ஏற்பாடு செய்ததுமேயாகும்.

அது மட்டுமல்ல கப்பல் இலங்கையிலிருந்து திருப்பப்பட்டதும் அதில் உள்ள பொருட்களையாவது பொறுப்பெடுத்து பாதிக்கப்பட்டவர்களிற்கு வழங்கும்படிதொண்டு நிறுவனங்களிடமும் சில இந்திய(தமிழ்நாட்டு)அரசியல் வாதிகளிடமும் கோரிக்கைகளும் வைக்கப்பட்டன. தங்களுக்கும் புலிச்சாயம் அடிக்கப்பட்டுவிடும் என்கிற அச்சத்தில் யாரும் பொறுப்பெடுக்க முன்வராததால் கப்பல் தற்சமயம் இந்தியாவின் கல்கத்தா துறைமுகம் நோக்கிப் பயணித்தபடி இருக்கின்றது.

கல்கத்தா சென்றடைந்ததும் கப்பலில் உள்ள பொருட்களை யாரோ ஒருவர் ஏலத்தில் எடுக்கப்போகிறார் , மீதி கடலில் எறியப்படும் , கப்பலும் பழைய கப்பல்கள் உடைக்கும் ஒரு நிறுவனத்திடம் விற்கப்பட்டு உடைக்கப்பட்டு கல்க்கத்தாவில் உள்ள கலாயன் கடைகளில் விலைக்குப் போடப்படும்.

இங்கு உடைபடப்போவது வணங்காமண் என்கிற கப்பல் மட்டுமல்ல , புலம்பெயர் தேசத்து மக்கள் ஒவ்வொருவரின் உழைப்பும் , உணர்வும் , எதிர்பார்ப்புக்களும் , நம்பிக்கைகளும் தான்.

இது யாருடைய தவறு??? இப்படி ஒரு திட்டத்தினைப் போட்டது தவறல்ல ஆனால் அதனை வழிநடத்தியவர்களின் தவறேயாகும். தங்களிற்கே எல்லாம் தெரியுமென்கிற அதிமேதாவித்தனம் , இங்கிலாந்தின் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் ஆதரவுக்குரல் தந்துவிட்டால் நாடாளுமன்றமே ஆதரவு தந்துவிட்டதாகக் கட்டப்பட்ட மனக்கோட்டைகள் என எங்களது தவறான புரிதல்களும் வழிநடாத்தல்களுமேயாகும்.

பலவிடயங்கள் சட்டரீதியாக சர்வதேச விதிமுறைகளிற்கு அமையாமலும் சர்வதேச தொண்டு நிறுவனங்களின் ஆதரவுகளைத் திரட்டாததும் தான் காரணமாகும். இப்படி மக்களின் பணமும் , உழைப்பும் , எதிர்பார்ப்புக்களும் , நம்பிக்கைகளும் சில புலத்து மேதாவிகளால் விணடிக்கப்படுவது இது முதல் தடைவையல்ல என்பதை எல்லோருமே அறிவார்.. ஆகவே இனியாவது இப்படியான தவறுகளை விடாதீர்கள். மக்களை ஏமாற்றாதீர்கள் எனத் தாழ்மையுடன் வேண்டுகிறோம். இதற்கு மேலும் ஏமாற்றங்களைத் தாங்க எம்மால் முடியாது.

10.06.09

ம்ம்ம்... இப்படி ஒரு தலைப்பின் கீழ் வந்த இந்த செய்தி எங்கு இருந்து யாழுக்கு பிரசுரம் செய்தீர்கள் சாந்தி?

Edited by குட்டி

.ம்ம்ம்ம்ம்ம்....... யூதனுக்கு நிகராக மண்டைக்குள் சரக்குள்ளவர்கள் நாங்கள், என இவ்வளவு நாளும் ஓர் இறுமாப்பு!!!!!! ஆனால் ......... இப்பதான் தெரிகிறது .................. வடித்தெடுத்த முட்டாள் கூட்டங்கள் நாங்கள் என்று(என்னையும் சேர்த்துத்தான்)!! ...... விட்டால் வாயால் ...... ராக்கட்டும் சந்திரனுக்கு விடும் வல்லமை எமக்குள்ளது!!! ....... நானும் வணங்காமண்ணுக்கு நூறைக்கொடுத்தேன்!! ....... அம்போஓஓஓஓஓ.............

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் இப்பவும் மேசையிலை அடிச்சுச்சொல்லுறன் எங்கடை புலம்பெயர் தலையளுக்குத்தான் எல்லாம் தெரியும்.

ஏலுமெண்டால் பந்தயம் கட்டிப்பாப்பம் :icon_idea:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம்... இப்படி ஒரு தலைப்பின் கீழ் வந்த இந்த செய்தி எங்கு இருந்து யாழுக்கு பிரசுரம் செய்தீர்கள் சாந்தி?

கனக்க யோசிக்காதையுங்கோ குட்டி இதையெழுதியது நான் தான். எனது வலைப்பூவிலிருந்து கொண்டு வந்து இங்கே போட்டுள்ளேன்.

முல்லைமண் வலைப்பூ :icon_idea:

.ம்ம்ம்ம்ம்ம்....... யூதனுக்கு நிகராக மண்டைக்குள் சரக்குள்ளவர்கள் நாங்கள், என இவ்வளவு நாளும் ஓர் இறுமாப்பு!!!!!! ஆனால் ......... இப்பதான் தெரிகிறது .................. வடித்தெடுத்த முட்டாள் கூட்டங்கள் நாங்கள் என்று(என்னையும் சேர்த்துத்தான்)!! ...... விட்டால் வாயால் ...... ராக்கட்டும் சந்திரனுக்கு விடும் வல்லமை எமக்குள்ளது!!! ....... நானும் வணங்காமண்ணுக்கு நூறைக்கொடுத்தேன்!! ....... அம்போஓஓஓஓஓ.............

இன்னும் கனவுகளுடன் இருக்க வேண்டுமாம் மக்கள். இதைத்தான் இங்குள்ள மாமனிதமாணிக்கங்கள் விரும்புகின்றனர். இக்கட்டுரைக்குப் பின்னர் அடித்துப் பிடித்து வந்த தொலைபேசிகளின் தொல்லை எல்லாத்திலும் தொல்லை.

யூதனுக்கு நிகராகவுள்ளோம் என்று சொல்லி இப்ப யேர்மனியிலிருந்தும் ஒரு கப்பல் போகவுள்ளதாம். அதுக்குப் பெயர்*வன்னிக்கப்பல்*. இந்த ஏற்பாட்டை முன்னெடுப்பது இங்குள்ள வன்னிரெக் தலைவர். வணங்காமண்ணே பல மில்லியன்களை வீணாகக் கொடுத்துவிட்டு கல்கத்தாவில் உடையப்போகிறது. இந்த யேர்மனிக் கப்பல் எங்கை உடையப்போகுதோ தெரியேல்ல ?

நான் இப்பவும் மேசையிலை அடிச்சுச்சொல்லுறன் எங்கடை புலம்பெயர் தலையளுக்குத்தான் எல்லாம் தெரியும்.

ஏலுமெண்டால் பந்தயம் கட்டிப்பாப்பம் <_<

ஓம் அப்பு நீங்கள் சொல்வது நூறுவீதம் உண்மை. <_< ஆனா பந்தயம் கட்ட வரமாட்டோம். பிறகு அதிலையும் போடுற முதல் இழப்புத்தானே. :huh:

.நம் மக்கள் மிகுந் நம்பிக்கையுடன் எதிர்பார்த்திருந்தார்கள். இறுதியில் ஏமாற்றம் தான் மிஞ்சியது . அதை நல் மனதுடன் கொடுத்தவர்களும்

நம்பிக்கையுடன் தான் கொடுத்தார்கள். இறுதியியில் .............

எல்லோரயும் ஏற்றிச் செல்ல .............கப்பல் வருமா ? என்ற பாடல் தான் நினைவு வருகிறது ..........

எல்லோரது நம்பிக்கைகளும் கல்கத்தாவில் உடைகிறது. நம்பிக்கையை நமது இனம் ஏனோ ஏமாற்றுக்களாக மாற்றுகிறது.

எல்லோரையும் ஏற்றிப்போக கப்பல் போகுதோ இல்லையோ எல்லோரது உழைப்பையும் ஏற்றிப்போக கப்பல்கள் வரும்.

  • கருத்துக்கள உறவுகள்

நான் இந்தத் திட்டம் தொடுங்கும் போதே இது போய் சேருமா அதற்கான சரியான ஏற்பாடுகளை செய்கின்றார்களா என்று கேள்விகளைக் கேட்டபோது அப்போதைய நேரத்தில் எரிந்து விழுந்தவர்கள் இப்போ.. தாங்களே நம்பிக்கை இழந்து அதனை பழிக்கின்றனர்.

எண்ணித் துணிக கருமம்.. துணிந்த பின் எண்ணுவம் என்பது இழுக்கு. என்று 2000 வருடங்களுக்கு முன்னே வள்ளுவன் வரியில் எழுதி வைச்சிட்டுப் போட்டான். இருந்தும் இந்த நவீன உலகில்.. நாம்.... :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரி அவர்களுடைய முயற்சி கைகூடவில்லை என்ன செய்வது யோசிக்காமல் செய்துவிட்டனர்

கனக்க யோசிக்காதையுங்கோ குட்டி இதையெழுதியது நான் தான். எனது வலைப்பூவிலிருந்து கொண்டு வந்து இங்கே போட்டுள்ளேன்.

முல்லைமண் வலைப்பூ <_<

நல்ல ஆக்கபூர்வமான சிந்தனையில் சொற்களைத் தெரிவுசெய்து, அதற்கு ஏற்றாபோல் போட்ட தலைப்பும் உங்கள் கட்டுரைக்கு சிறப்பளிகிறது... :icon_idea:

மனம் வைத்து உதவி செய்த எல்லாராலும் சிந்தித்து இப்படி ஒரு தலைப்புக் கொடுத்து எழுதுவது சுலபமானதல....

ஏற்பாட்டாளர்கள் வேணும் என்று புலம்பேர் மக்களின் பணத்தை வீணாக்கினார்களா?? நல்லெண்ணத்தோடு தானே ஏற்பாடு செய்தார்கள்...??? எடுத்த முயற்சி எல்லாம் எடுத்த எடுப்பில் வெற்றியில் முடிந்தா இருக்கிறது....?

இங்கு நாம் செய்யும் செலவுகள் எல்லாம் அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டுமா செலவு செய்கிறோம்?? கிடைக்க வேணும் என்ற ஒரு எதிர் பார்ப்பில் மனம் வைத்து செய்தோம்...

ஒரு வேளை செய்யாமல் விட்டிருந்தால், இன்னும் வாய்கிளிய பேசியும், கைவலிக்க எழுதியும் இருப்போம்... அப்படி செய்திருக்கலாம், இப்படி செய்திருக்கலாம் என்று... (செய்தாலும் விமர்சிபம், செய்யவிட்டலும் விமர்சிப்பம் <_< )

இது ஒரு அனுபவம் தானே... இனிமேல் இதே போன்ற செயல்களில் ஏற்பாட்டாளர்கள் இறங்க மாட்டார்கள் என்று நினைக்கிறன்.

Edited by குட்டி

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோரும் சொத்தை வித்தா ...... வணங்காமண் கப்பலுக்கு உதவி செய்து விட்டீர்கள் .

அன்றாடம் செலவளிக்கும் செலவில் ஒரு பகுதியை தானே கொடுத்தீர்கள் .

வணங்காமண் புறப்படும் சூழலில் , அந்த மக்களுக்கு உங்களால் இயன்ற ஒரு சிறு உதவியை செய்து பார்ப்போம் என்னும் முயற்சி தானெ.

அதனையும் செய்து பார்த்திரா விட்டால் , குற்ற உணர்ச்சி மேலும் பிடுங்கி தின்றிருக்கும்.

என்ன செய்வது ....... சில அனுபவங்களை பெற , மொத்தமாக அதிக விலை கொடுக்க வேண்டியிருப்பது கசப்பான உண்மை .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சரி அவர்களுடைய முயற்சி கைகூடவில்லை என்ன செய்வது யோசிக்காமல் செய்துவிட்டனர்

இனியாவது கப்பல் அனுப்புவதைவிட்டுவிட்டு வேறுவழியில் உதவிகளை அந்த மக்களுக்குச் செய்யலாம் தானே சேகுவரா ?

இங்கு யேர்மனியில் மெடீக்கொ என்றொரு தொண்டு நிறுவனம் இருக்கிறது. இந்நிறுவனம் அந்த முகாம்களில் வாடும் உறவுகளுக்கு தமது அமைப்பு ஊடாக உதவிவருகிறது. அதன் ஊடாக நாம் உதவிகளைச் செய்தால் அவர்கள் நாங்கள் சொல்லும் இடத்திற்கு கொண்டுபோய் சேர்ப்பார்கள். இதில் எங்கள் பெயர் மறைக்கப்பட்டு உதவிகள் சென்றடையும் வழியுள்ளது.யார் செய்தாலும் பறவாயில்லை இப்போது மக்களை உதவிகள் சென்றடைவதே முக்கியம்.

ஆனால் இன்னார் செய்தோம் என்ற விபரம் உலகமெங்கும் தெரியத்தான் உதவிகள் போய் சேர வேண்டுமென்று நினைத்தால் வணங்காமண்போல யேர்மனியிலிருந்து முன்னெடுக்கப்படும் கப்பலும் உடையும் இல்லது திரும்பும்.

நான் இந்தத் திட்டம் தொடுங்கும் போதே இது போய் சேருமா அதற்கான சரியான ஏற்பாடுகளை செய்கின்றார்களா என்று கேள்விகளைக் கேட்டபோது அப்போதைய நேரத்தில் எரிந்து விழுந்தவர்கள் இப்போ.. தாங்களே நம்பிக்கை இழந்து அதனை பழிக்கின்றனர்.

எண்ணித் துணிக கருமம்.. துணிந்த பின் எண்ணுவம் என்பது இழுக்கு. என்று 2000 வருடங்களுக்கு முன்னே வள்ளுவன் வரியில் எழுதி வைச்சிட்டுப் போட்டான். இருந்தும் இந்த நவீன உலகில்.. நாம்.... :icon_idea:

உங்களோடை ஆர் எரிஞ்சு விழுந்தவையெண்டு தெரியேல்ல. அவைக்கு உங்கடை கேள்வி அப்ப விளங்காமல் போச்சுதோ தெரியேல்ல ? <_<

எண்ணித் துணிந்து இன்னும் கப்பல் அனுப்பி மில்லியன்களை இழப்பதே தருமம். <_<

எல்லோரும் சொத்தை வித்தா ...... வணங்காமண் கப்பலுக்கு உதவி செய்து விட்டீர்கள் .

அன்றாடம் செலவளிக்கும் செலவில் ஒரு பகுதியை தானே கொடுத்தீர்கள் .

சொத்துவிக்க தமிழரிட்டை சொத்தில்லை. புலத்தில எல்லாரும் கடன்காட்டுகளின்ரை புண்ணியத்திலைதான் வாழுகினம். இருந்த கடன்காட்டுகளை வழிச்சு பெருந்தொகையில்லை சிறுதுளி குடுத்தவர்களின் பெறுமதிதான் உடையப்போகும் கப்பலின் மில்லியன்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வணங்காமண் புறப்படும் சூழலில் , அந்த மக்களுக்கு உங்களால் இயன்ற ஒரு சிறு உதவியை செய்து பார்ப்போம் என்னும் முயற்சி தானெ.

அதனையும் செய்து பார்த்திரா விட்டால் , குற்ற உணர்ச்சி மேலும் பிடுங்கி தின்றிருக்கும்.

என்ன செய்வது ....... சில அனுபவங்களை பெற , மொத்தமாக அதிக விலை கொடுக்க வேண்டியிருப்பது கசப்பான உண்மை .

சிறு உதவி சென்றடையும் வழியை நேராகத்தேர்ந்தெடுக்காமல் இதோ அதோ என்று மக்களை நம்பவைத்து இப்போது உடைப்பது சரியென்கிறீர்களா சிறி ?

செய்து பார்த்துப் பெறுபேறு பெற இதென்ன பந்தயமா ?

சில அனுபவங்களைப்பெற இப்படி பல மில்லியன்கள் இழப்பு கட்டாயம் தேவைதான். ஏற்கனவே பெற்ற பல அனுபவங்களிலிருந்து பெற்றுக்கொள்ளாத அனுபவமா இந்தக்கப்பலால் பெறப்பட்டது சிறி ?

இக்கப்பலில் போனவற்றை அந்த மக்களுக்குச் சென்றடையச் செய்ய சிலரது தயவை நாடமுன்வந்தவர்களுக்கு ஏற்பாட்டாளர்கள் கொடுத்த பதில் என்ன தெரியுமா ? அவேட்டைப்போயெல்லாம் உதவியெடுத்து சாமான் குடுக்கத் தேவையில்லை. அதைவிட உடைக்கிறது மேலாம். இப்படி நிலமையிருக்க இன்னும் இழக்க வேண்டியவை நிறையவுள்ளது.

சரி இதற்குப்பின்னும் கப்பல் விட்டு என்ன பிரச்சாரத்தைப் பெற முடியும் ?

என்ரை வீட்டையும் நிறைய குப்பை இருக்கிறது சாந்தி

இங்கை வந்து கொட்டவா ?

ஏனப்பா உங்கடை வீட்டு குப்பை எல்லாத்தையும் இங்கை கொட்டுறீங்கள்

எவ்வளவு கொடுத்தனீங்கள் கப்பலிற்கு ஒரு அரிசிப்பருக்கை கூட கொடுத்திருக்க மாட்டீர்கள்

சீ

ஒரு முயற்சி எடுத்து அதில் தோற்றுப்போய்விட்டால் இப்படியா சேற்றை வாரி பூசுவது?

இது உண்மையான கவலையில் எழுதப்பட்டதாக தெரியவில்லை. உண்மையான வருத்தம் தொனிக்கவில்லை.. நக்கல்தான் தென்படுகிறது தலைப்பு உட்பட...

'பாத்தியா நான் சொன்னன் இவைக்கு நல்லா வேணும்' என்பது போல

சரி, நடந்தது நடந்துவிட்டது. கப்பலை திருப்பி, இந்தியாவில் முகாம்களில் உள்ள எம்மவருக்கு கொடுக்கலாமே. அவர்களும் எம்மவர் தானே. அவர்கள் போர்க்களத்தில் இல்லை தான், ஆனால் அங்கும் வசதி வாய்ப்புகள் இன்றி கஷ்டப்படுகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

சரி தான் சாந்தி. புலம் பெயர் தமிழர்களும், குறிப்பாக இந்த ஏற்பாட்டாளர்களும் புத்தி குறைந்தவர்கள் தான். நீங்கள் புத்தி சாலியாகத்தான் இருக்கிறீர்கள் (அல்லது கொஞ்ச நாளாக அப்படிக் காட்டிக் கொள்ளப் படாத பாடு படுகிறீர்கள்!). ஏன் தான் நீங்கள் இதையெல்லாம் தலைமையேற்று நடத்தக் கூடாது? இப்படி தவறு நிகழ்ந்த பிறகு நீண்ட ஆய்வுக் கட்டுரை எழுத வேண்டிய தேவை வராதெல்லோ? என்னோட பாய வேணாம். ஒரு செயல் திட்டம் அது திட்டமிடப் படும் போது இருக்கும் புறச் சூழ் நிலைகளைப் பொறுத்துத் தான் எல்லாம் செய்யப் படுகுது. கப்பல் திட்டம் ஆரம்பிச்ச பிறகு கள நிலைமை மாறிப் போச்சு. சரி புலிகள் போய்ச் சேர்ந்து விட்டார்கள் தானேயெண்டு சிறி லங்கா அரசு மனமிளகி தானாவது பொருட்களைப் பொறுப்பேற்கும் என்று நம்பினார்கள். நடக்கவில்லை. இனி மறந்து போட்டு அடுத்த கட்டத்துக்குப் போகலாம். அத விட்டுப் போட்டு இப்பிடி உடனயே judge பண்ணிக் கொதிக்கிறது ஒரு பலனையும் தராது என நான் நினைக்கிறன். உங்கட பிரச்சினை இப்ப கப்பலும் பொருட்களும் வீணாணது இல்ல. உங்கள யாரும் ஆலோசனை கேட்க இல்ல என்றது தான் போல! (கோவிக்காதையுங்கோ. இது தான் எனக்கு விளங்குது. திருப்பி வந்து என்ன சொல்லுவியள் எண்டு தெரியும். நான் வாறன். நீங்களே தனியக் கத்திக் கொள்ளுங்கோ).

வணங்கா மண் கப்பலிற்கு பணம் கொடுத்த உறவுகளிற்கு அவர்கள் அத்தாட்சியாக தாம் யாரையும் ஏமாற்றவில்லை என்பதற்காகவும் பற்றுச்சீட்டு வழங்கி தாம் நேர்மையான வழியில்தான் அனைத்தையும் செயற்படுத்தி இருக்கின்றோம் என்று நிருபித்து உள்ளார்கள்.

ஆகவே தயவுசெய்து அவர்களை குறை கூறாதீர்கள்

சாந்தியின் கருத்தை பார்க்க ஓரு பழைய மொழிதான் ஞாபகம் வருகுது

வைக்கல்லப்பட்டடை ..........தானும் தின்னாது தின்றவனையும் தின்ன விடாது

மன்னிக்கவும் சாந்தி இது தனிப்பட குறிப்பிட வில்லை

  • கருத்துக்கள உறவுகள்

இக்கப்பலில் போனவற்றை அந்த மக்களுக்குச் சென்றடையச் செய்ய சிலரது தயவை நாடமுன்வந்தவர்களுக்கு ஏற்பாட்டாளர்கள் கொடுத்த பதில் என்ன தெரியுமா ? அவேட்டைப்போயெல்லாம் உதவியெடுத்து சாமான் குடுக்கத் தேவையில்லை. அதைவிட உடைக்கிறது மேலாம். இப்படி நிலமையிருக்க இன்னும் இழக்க வேண்டியவை நிறையவுள்ளது.

அந்த "அவை" யாரெண்டு ஊகிக்க முடியுது ஓரளவு. தாடிக்காரர் கூட்டம் தானே? அப்ப அந்த மில்லியன் இயூரோ பொருட்கள் கடலுக்கையும் போயிருக்காது, வன்னிச் சனத்துக்கும் போயிருக்காது. ஆனா டக்கியிட தேர்தல் பிரசாரத்துக்கு பெரிய உதவியா இருந்திருக்கும். அப்ப நீங்களே வந்து திரும்பவும் எழுதுவீங்கள் இப்பிடி: " வணங்கா மண் வணங்கி விலை போனது இ.பி.டி.பி யின் தேர்தல் வெற்றிக்காக!" எண்டு தலைப்பிட்டு ஒரு எள்ளு எள்ளியிருப்பீங்கள். தயவு செய்து குறை நினையாதேங்கோ. ஆக்க பூர்வமா எதுவும் எழுத/"படைக்க" இயலா விட்டால் பேனாவுக்கு ஓய்வு கொடுப்பது ஒன்றும் வெட்கப் பட வேண்டிய விஷயமல்ல. பெரிய எழுத்தாளர்களுக்கே இது நடந்திருக்குது. உங்கட குழப்பங்கள் தீரும் வரை கொஞ்சம் ஓய்வெடுத்துட்டு வாங்கோ, புண்ணியமாப் போகும்!

  • கருத்துக்கள உறவுகள்

விசர் வேலையை பாத்தது.அடுத்த முறை சாந்தியக்காவிடம் தான் காசு அனுப்புவேன். :)

  • கருத்துக்கள உறவுகள்

தோற்கடிக்க படுமுன்னரே தோல்வியை ஒப்பு கொள்வது இறப்பதற்கு சமனானது!

எந்த ஆமையும் வெல்லும் முயலாமை ஒருபோதும் வெல்லாது!

"தன்னிலை தாழமையும் அந்நிலை தாழுமிடத்து உயிர் வாழாமையும் மானம் எனப்படும்" குறள்

அப்பாவி மக்கள் முகாம்களில் மட்டுமல்ல யாழ்பாணத்தில் கூட திறந்த வெளி சிறைசாலையில்தான் அடைபட்டு கிடக்கின்றார்கள் பெரிய வலிக்குள் சிறிய வலி மறைமட்டுகிடக்கின்றது.

போராளிகளுக்கும் ..... அறிவாளிகளுக்கும்.... மேதாவிகளுக்கும்..... மக்கள் காப்பாளர்களுக்கும்..... அகிம்சைவாதிகளுக்குமான களம் திறந்தே கிடக்கின்றது..... யாரும் யாரையும் சாடவேண்டியதில்லை. உங்களிலும் விட சிறியோர் அறிவு குறைந்தவர்கள் தவறுகளைத்தான் விடுவார்கள். நீங்கள் முன்சென்றுபோராடி மக்களுக்கு விடுதலை வாங்கி கொடுத்தால் நாம் உங்களுக்கு துணைநிற்போம் என்ற உறுதி ழொழியை தருகிறோம்.... தயவு செய்து களம் நோக்கி நோக்கி செல்லுங்கள். அதுவரைக்கும் யாழ்களத்தை இயன்ற அளவிற்கு நாம் பார்த்து கொள்கின்றோம்

  • கருத்துக்கள உறவுகள்

தமிழன் தமிழினத்தின் விடிவுக்காக முதுகுசொறியிறானோ இல்லையோ ஏதும் சறுக்கல் தோல்வியென்று கண்டால் போதும், நாக்ககை வளைச்சுக்கட்டுறதில பெரியாக்கள் போங்கோ.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நீங்கள் அனுப்பிய நிவாரண விமானம், பொருட்களை பத்திரமா வன்னில கொண்டு போய் சேர்த்திட்டுதாமே?! :)

கெட்டிகாரர் தான்.... :icon_idea:

பாராட்டுக்கள்! :(

இனி அடுத்த சந்தர்ப்பத்தில், புனர்வாழ்வு கழகத்திடம் இல்லை - உங்களிடமே எங்கள் credit card, வீட்டு உறுதி எல்லாம் கொணர்ந்து தாறம்!! :D

சிறிலங்கா அரசாங்கம் கப்பலை அனுமதிக்காது என்பது எதிர்பார்த்த ஒன்றுதான்.

ஆனால் வணங்கா மண் கப்பல் மூலம் பாரிய பரப்புரை முன்னெடுக்கப்படும் என்று சொல்லப்பட்டது. பத்திரிகையாளர்கள், மருத்துவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் என்று பலர் இணைந்து வணங்காமண் கப்பலில் பயணிப்பார்கள் என்று சொல்லப்பட்டது. அப்படி எதுவும் நடைபெறாமல் போய் விட்டது.

ஆகக் குறைந்தது கப்பலை தமிழ்நாட்டிற்காவது திருப்பியிருக்கலாம். அங்கே உள்ள ஈழத் தமிழ் அகதிகளுக்காவது கொடுத்திருக்கலாம். இப்படி செய்யும்படி சிலரால் ஆலோசனை சொல்லப்பட்டது. கடைசியில் அதுவும் நடைபெறவில்லை.

கலைஞருக்கு சங்கடம் கொடுக்க வேண்டாம் என்று நினைத்தார்களோ தெரியவில்லை

  • கருத்துக்கள உறவுகள்

ஆகக் குறைந்தது கப்பலை தமிழ்நாட்டிற்காவது திருப்பியிருக்கலாம். அங்கே உள்ள ஈழத் தமிழ் அகதிகளுக்காவது கொடுத்திருக்கலாம். இப்படி செய்யும்படி சிலரால் ஆலோசனை சொல்லப்பட்டது. கடைசியில் அதுவும் நடைபெறவில்லை.

கலைஞருக்கு சங்கடம் கொடுக்க வேண்டாம் என்று நினைத்தார்களோ தெரியவில்லை

அதான் அக்கோய் சொல்லி விட்டாவே அது த.பு.கழகத்தால செய்ததால தான் விடேல்லயாம்?பிறகு தமிழ் நாட்டில வெத்திலை வைச்சு வரவேற்பினமென்டு எந்த புத்திசாலி சொன்னது? நானறிய தமிழ் நாடு இந்தியாவிட ஒரு பகுதி தான், அப்பிடியில்லையோ?

வேற யாரும் செய்திருந்தால் மட்டும் உடன தூக்கி மக்களுக்குக் குடுத்து இருப்பானாக்கும் சிங்களவன்...??? யார் குடுத்து என்று முக்கியம் இல்லை.. யாருக்குப் போகுது என்று தான் அவங்கள் பார்த்து இருப்பாங்கள்...

'பனையால விழுந்தவனை மாடு ஏறி உள்ளக்கிறமாதிரி...' இவையளும் இவையளிண்டே ஆய்வுகளும்...

ம்ம்ம்... இவைதான் ஆட்கள்.... :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.