Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜம்பது என்றால் அரை சதம் என கிரிக்கட் விளையாட்டில் சொல்லுவார்கள்.வாழ்க்கையில் 50 வயசை தாண்டினால் அரை கிழடுதான் ஆனால் மனம் ஒத்துக்கொள்ளாது.உண்மையிலயே அரைகிழடு என்று சொல்வதைவிட முக்கால் கிழடு என்றுதான் சொல்ல வேண்டும்.மனித வாழ்க்கையில் முழுசதம் போட்டவர்கள் மிக குறைவு.சராசரி மனித வாழ்க்கை 75  அல்லது 80 என்றுதான் சொல்லாம்.அதன் பின்பும் மனிதன் வாழ்ந்து முழுசதம் போட்டால் அது அவர்களுக்கு கிடைத்த போனஸ் அல்லது ஆறுதல் பரிசே ஆகும்..

நான் சிறுவனாக இருக்கும் பொழுது 40 வயதுக்கு மேற்பட்டோரை கண்டால் முதியவர்கள் என்ற எண்ணம்  தான்  தோ ன் றும்,அதே வயதை நான் அடைந்த பொழுது அன்று நான் நினைத்த வயதானோர்(கிழடுகள்)என்ற எண்ணம் வரவில்லை,அன்று இருந்த ஆசைகளும் எண்ணன்களும்தான் மனதில் வருகின்றது.உடலின் புறதோற்றத்தில் பல மாற்றங்களை காணக்கூடியதாகவுள்ளது. தலை முடி நிறமாறுகிறது அதற்கு கறுப்பு சாயம் பூசினாலும் முகத்தில் விழும் சுருக்கங்கள் முடி நிறம் மாற்றப்பட்டுள்ளது என்பதை காட்டுகிறது.

ஜம்பதிலும் ஆசை வரும் என கவிஞர்கள் சொன்னதை சாதாரண மனிதர்களும் கிளிப்பிள்ளை போல் சொல்கிறார்கள் ,ஆசை போனால்தானே வருவதற்கு ஒன்பது,பத்து வயதுகளில்  தோன் றிய "அந்த ஆசைகள்"ஜம்பதை தாண்டியும் தொடர்கிறது இன்னும் எத்தனை வயது வரை அந்த ஆசைகள் தொடரும் என்பதை அந்த வயதை அடைந்தவர்கள்தான் எழுத வேண்டும். அப்படி எழுதுபவர்களும் உணமையை எழுதவேண்டும்,மற்றையவர்கள் எம்மைபற்றி தப்பாக நினைத்து விடுவார்கள் என்ற எண்ணத்தில் உண்மைக்கு புறம்பாக எழுதவோ கிறுக்கவோ கூடாது.

இளம் வயதில "அந்த ஆசைகள் "வரும் பொழுது  அடைய வேணும்  என்ற ஒரு தீவிரவாதம் இருக்கும்,சிலர் அதை நிறை வேற்றுவார்கள் .அதற்கு காதல் என பெயரும் சுட்டிக்கொள்வார்கள்  வேறு சிலரோ சமுகத்திற்கும் பெற்றோருக்கும் பயந்து தங்களை கட்டுப்படுத்துவார்கள்.சுய ஒழுக்கம் என்று சொல்லியும் கொள்வார்கள்.சந்தர்ப்பம் சூழ்நிலை இந்த சுய ஒழுக்கத்தை தோற்கடித்துவிடும்.

சிலர் ஜம்பதை அடைந்தவுடன் தங்களது ஆசைகளை அடக்க வேண்டும் முயற்சி செய்வார்கள்,அதற்காக புறதோற்றத்தில் பல மாற்றங்களை செய்வார்கள் தங்களது பழக்க வழக்கங்களை கூட மாற்றிக்கொள்வார்கள்

. அநேகர் மது அருந்துவதை ,அசைவம் சாப்பிடுவதை நிறுத்துவார்கள்.பக்தி கூடும் ,கோயில் குளம் என்று செல்லத்தொடங்குவார்கள். என்னதான் புற தோற்றத்தில் மாற்றங்களை செய்தாலும் "அந்த ஆசைகள்" அவர்களை விடவில்லை என்பதை அவர்களின் பேச்சுக்கள் மற்றும் வேறு செயல்கள்  மூலம் அறியகூடியதாக இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி புத்தன் இது நிஐம்தான், அனுபவம் கூட கூட ஆசை கூடுதே playboys தாத்தா மாதிரி........

ஊரில் கிழடுகள் செய்யும் அட்டகாசம்.........,

இங்கு executive playground என்ற பெயரில்...

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோரையும் ஒரு சுய சுய பரிசோதனைக்கு உள்ளாக்குகின்றது உங்கள் கிறுக்கல், வழக்கம் போல!

ஆசைகளை 'மாயை' என்று முன்னோர்கள் கூறியுள்ளார்கள்! இதன் உள்ளர்த்தம், அந்தக் காலங்களில் விளங்குவதில்லை!

அந்தந்த வயதில்,வாழவேண்டிய முறையில் வாழ்ந்து விடா விட்டால், நடந்து போகும் பாதையில் இருந்து திரும்பிப் பார்க்க வேண்டியிருக்கும்! சரியான முறையில் வாழ்ந்திருந்தால், திரும்பிப் பார்க்க வேண்டய தேவை ஏற்படமாட்டாது!

நினைவில் வைத்திருங்கள்!'

பிரமச்சரியம்,கிருகஸ்தம்,வானப்பிரஸ்தம், சந்நியாசம்!

இந்த வரிசை தவறும்போது கட்டாயம் திரும்பிப் பார்க்கவேண்டியிருக்கும்!

உதாரணம்- நித்தியானந்தா! :unsure: :unsure: :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

உதென்டால் 100 வீதம் உண்மை.உடம்புதான் மறுதே தவிர மனசு மாறியமாதிரித்தெரியவில்லை. :lol:

40 (வயசி) ல தான் வாழ்க்கை தொடங்குதாம்.. அண்மைய தமிழ் படம் ஒன்றில் சொன்னார்கள்

'நாற்பதுக்குப் பின் நாய்க் குணம்' என்பார்கள்.

கனக்க போகத் தேவையில்லை. இங்கு யாழில் எழுதும் நாற்பதைக் கடந்தவர்களின் எழுத்தை வாசித்தாலே விளங்கும். :icon_mrgreen:

Edited by தப்பிலி

  • கருத்துக்கள உறவுகள்

நான் அவன் இல்லை

  • கருத்துக்கள உறவுகள்

நான் அவன் இல்லை

அதை மற்றவர்கள் சொல்லவேண்டும் :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

அதை மற்றவர்கள் சொல்லவேண்டும் :icon_mrgreen:

இதுதான்

பொல்லைக்கொடுத்து வாங்கிக்கட்டுவது என்பதா.... :lol: :lol: :D :D

  • கருத்துக்கள உறவுகள்

அவர்களை "அந்த ஆசைகள்" விட‌வில்லை என்று எதை வைத்து அறியலாம் :lol:

  • கருத்துக்கள உறவுகள்

அவர்களை "அந்த ஆசைகள்" விட‌வில்லை என்று எதை வைத்து அறியலாம் :lol:

இன்ரநெற் பாவிப்பவர்களாக இருந்தால், அவர்கள் வழமையாகப் பார்க்கும் தளங்கள், எவ்வளவு நேரம் மினக்கெடுகின்றார்கள் என்பதில் இருந்தும், அவர்கள், கோயில், குளம், குட்டைகளுக்குப் போவார்களாக இருந்தால் அங்கு எதிர்ப்பாலாரை எப்படிப் பார்க்கின்றார்கள்/பழகுகின்றார்கள் என்பதில் இருந்தும் அறியலாம்.

இதில் பெரிய வித்தியாசம் ஒன்றுமில்லை.வீடு உள்ளவன் வீட்டில் படுப்பான்.இல்லாதவன் எங்கு இடம் கிடைக்கிறதோ அங்கெல்லாம் படுப்பான்.இதில் தப்பு செய்கிறவன்,வீடு உள்ளவன் தான்.இன்னொரு வீட்டில் போய் படுக்க எண்ணுவது தப்பு.தேவையாயின் ஒரு வீட்டை ஊர் அறிய வேண்டி நாலுபேரை கூப்பிட்டு பாலைகாச்சி குடிபுந்து போய் படுத்தால் நிம்மதியாகவிருக்கும்

நன்றி புத்தன் இது நிஐம்தான், அனுபவம் கூட கூட ஆசை கூடுதே playboys தாத்தா மாதிரி........

ஊரில் கிழடுகள் செய்யும் அட்டகாசம்.........,

இங்கு executive playground என்ற பெயரில்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்ரநெற் பாவிப்பவர்களாக இருந்தால், அவர்கள் வழமையாகப் பார்க்கும் தளங்கள், எவ்வளவு நேரம் மினக்கெடுகின்றார்கள் என்பதில் இருந்தும், அவர்கள், கோயில், குளம், குட்டைகளுக்குப் போவார்களாக இருந்தால் அங்கு எதிர்ப்பாலாரை எப்படிப் பார்க்கின்றார்கள்/பழகுகின்றார்கள் என்பதில் இருந்தும் அறியலாம்.

இன்ரநெற் விசர்ச்சாமான்.....உதுகளுக்கு எங்கடை கோயில்குளம் சொல்லி வேலையில்லை...இந்தமுறை கம் கோயில் தேருக்கு போனனான்.அம்மனை ஒருக்கால் கையை தூக்கி கும்புடுவமெண்டால்....கையை மேலை தூக்கேலாத அளவுக்கு....அவ்வளவு நெரிச்சல்....சின்னன்...பெரிசு...எண்டு வித்தியாசமில்லாமல் எல்லாருக்கும் ஒரே பக்திபரவசம்...ஒரே தள்ளுப்பாடு...இடிபாடு...நெருக்கி..நெருக்கி..பினைபட்டு....பின்னுப்பட்டு...கொஞ்சநேரம் சீயெண்டு போச்சுது :D ...வாறவருச தேருக்கு தனிய போறதெண்டு பிளான்பண்ணியிருக்கிறன் :wub: :wub: ......எல்லாம் அவள் சித்தம் :huh:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றி புத்தன் இது நிஐம்தான், அனுபவம் கூட கூட ஆசை கூடுதே playboys தாத்தா மாதிரி........

ஊரில் கிழடுகள் செய்யும் அட்டகாசம்.........,

இங்கு executive playground என்ற பெயரில்...

நன்றி உடையார் ....எல்லாம் அவன் செயல்.....

எல்லோரையும் ஒரு சுய சுய பரிசோதனைக்கு உள்ளாக்குகின்றது உங்கள் கிறுக்கல், வழக்கம் போல!

ஆசைகளை 'மாயை' என்று முன்னோர்கள் கூறியுள்ளார்கள்! இதன் உள்ளர்த்தம், அந்தக் காலங்களில் விளங்குவதில்லை!

அந்தந்த வயதில்,வாழவேண்டிய முறையில் வாழ்ந்து விடா விட்டால், நடந்து போகும் பாதையில் இருந்து திரும்பிப் பார்க்க வேண்டியிருக்கும்! சரியான முறையில் வாழ்ந்திருந்தால், திரும்பிப் பார்க்க வேண்டய தேவை ஏற்படமாட்டாது!

நினைவில் வைத்திருங்கள்!'

பிரமச்சரியம்,கிருகஸ்தம்,வானப்பிரஸ்தம், சந்நியாசம்!

இந்த வரிசை தவறும்போது கட்டாயம் திரும்பிப் பார்க்கவேண்டியிருக்கும்!

உதாரணம்- நித்தியானந்தா! :unsure: :unsure: :unsure:

நன்றி கள் புங்கையூரான்

உதென்டால் 100 வீதம் உண்மை.உடம்புதான் மறுதே தவிர மனசு மாறியமாதிரித்தெரியவில்லை. :lol:

ஆமா..ஆமா ..ஆமா thank you sagevan

40 (வயசி) ல தான் வாழ்க்கை தொடங்குதாம்.. அண்மைய தமிழ் படம் ஒன்றில் சொன்னார்கள்

அப்ப எனக்கு இன்னும் 10 வருசத்திற்க்கு பின்புதான் நாய்குணம்....நன்றிகள் வீணா

'நாற்பதுக்குப் பின் நாய்க் குணம்' என்பார்கள்.

கனக்க போகத் தேவையில்லை. இங்கு யாழில் எழுதும் நாற்பதைக் கடந்தவர்களின் எழுத்தை வாசித்தாலே விளங்கும். :icon_mrgreen:

நன்றிகள் தப்பிலி...அப்ப 50 தாண்டினால் யானைக்குணமோ?

நான் அவன் இல்லை

நன்றிகள் விசுகு... நானும் அவன் இல்லை

அதை மற்றவர்கள் சொல்லவேண்டும் :icon_mrgreen:

நன்றிகள் கிருபன்..மற்றவையள் சொல்ல மாட்டார்களே...அவர்கள் உத்தமர்கள்

அவர்களை "அந்த ஆசைகள்" விட‌வில்லை என்று எதை வைத்து அறியலாம் :lol:

நன்றிகள் ரதி.....விஞ்ஞானிகள் இப்ப ஆராச்சி செய்யினம்....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இதில் பெரிய வித்தியாசம் ஒன்றுமில்லை.வீடு உள்ளவன் வீட்டில் படுப்பான்.இல்லாதவன் எங்கு இடம் கிடைக்கிறதோ அங்கெல்லாம் படுப்பான்.இதில் தப்பு செய்கிறவன்,வீடு உள்ளவன் தான்.இன்னொரு வீட்டில் போய் படுக்க எண்ணுவது தப்பு.தேவையாயின் ஒரு வீட்டை ஊர் அறிய வேண்டி நாலுபேரை கூப்பிட்டு பாலைகாச்சி குடிபுந்து போய் படுத்தால் நிம்மதியாகவிருக்கும்

எல்லாம் இந்த மனசு செய்யிற சேட்டைதான் நீலப்பறவையாரே....நன்றிகள் நீலப்பறவை

இன்ரநெற் விசர்ச்சாமான்.....உதுகளுக்கு எங்கடை கோயில்குளம் சொல்லி வேலையில்லை...இந்தமுறை கம் கோயில் தேருக்கு போனனான்.அம்மனை ஒருக்கால் கையை தூக்கி கும்புடுவமெண்டால்....கையை மேலை தூக்கேலாத அளவுக்கு....அவ்வளவு நெரிச்சல்....சின்னன்...பெரிசு...எண்டு வித்தியாசமில்லாமல் எல்லாருக்கும் ஒரே பக்திபரவசம்...ஒரே தள்ளுப்பாடு...இடிபாடு...நெருக்கி..நெருக்கி..பினைபட்டு....பின்னுப்பட்டு...கொஞ்சநேரம் சீயெண்டு போச்சுது :D ...வாறவருச தேருக்கு தனிய போறதெண்டு பிளான்பண்ணியிருக்கிறன் :wub: :wub: ......எல்லாம் அவள் சித்தம் :huh:

நன்றிகள் கு.சா எல்லாம் அவள் சித்தம்....அம்மனை வழிபட்டால் அதிக வரம் பெறலாம்....

  • கருத்துக்கள உறவுகள்

தினசரி உடற்பயிற்சி, இனிமையான சிந்தனைகள்,எப்போதும் சுறுசுறுப்பாக இயங்குதல் போன்றவை கணவன் மனைவி இருவரிடமும் இருந்தால் வயதெல்லாம் ஒரு பிரச்சனையா?

இன்ரநெற் விசர்ச்சாமான்.....உதுகளுக்கு எங்கடை கோயில்குளம் சொல்லி வேலையில்லை...இந்தமுறை கம் கோயில் தேருக்கு போனனான்.அம்மனை ஒருக்கால் கையை தூக்கி கும்புடுவமெண்டால்....கையை மேலை தூக்கேலாத அளவுக்கு....அவ்வளவு நெரிச்சல்....சின்னன்...பெரிசு...எண்டு வித்தியாசமில்லாமல் எல்லாருக்கும் ஒரே பக்திபரவசம்...ஒரே தள்ளுப்பாடு...இடிபாடு...நெருக்கி..நெருக்கி..பினைபட்டு....பின்னுப்பட்டு...கொஞ்சநேரம் சீயெண்டு போச்சுது :D ...வாறவருச தேருக்கு தனிய போறதெண்டு பிளான்பண்ணியிருக்கிறன் :wub: :wub: ......எல்லாம் அவள் சித்தம் :huh:

அம்மாளாச்சி :o :o குசா உங்களுக்காக தனியத் தேர் ஓட்டப்போறாங்களோ :D :D ?

நல்ல விடையத்தை உங்கள் பாணியில் கிறுக்கயுள்ளீர்கள் புத்தன் . ஆசைகள் மனம் அனுபவம் சம்பந்தப்பட்டது , இதற்கு வயதெல்லைகள் கிடையது :) .

இப்பதான்........ 30 அடிக்குறதுக்கு மட்டையை ஸ்ரோங்காப் பிடிச்சுக்கொண்டு நிக்கிறன்! :o அதுக்குள்ள இதுகளச் சொன்னால் நான் ஹிட்-விக்கெட்டில அவுட்டாகிப் போயிடுவன் சொல்லிப் போட்டன்! :(

50 ஓ 100 ஓ ரன் அடிக்க முடிஞ்சவன் அடிக்கட்டும் விடுங்கோப்பா! :rolleyes: பட்டிங் பிட்ச்சா இருந்தா ஈஷியா அடிக்கலாம்.... :wub: ம்ம்ம்ம் :lol: விடுங்கப்பா!!!!!!!!

  • கருத்துக்கள உறவுகள்

இப்பதான்........ 30 அடிக்குறதுக்கு மட்டையை ஸ்ரோங்காப் பிடிச்சுக்கொண்டு நிக்கிறன்! :o அதுக்குள்ள இதுகளச் சொன்னால் நான் ஹிட்-விக்கெட்டில அவுட்டாகிப் போயிடுவன் சொல்லிப் போட்டன்! :(

கவிதைக்குள் இத்தனை அர்த்தமா, என்னமா போட்டு தள்ளிறியள்

  • கருத்துக்கள உறவுகள்

அவர்களை "அந்த ஆசைகள்" விட‌வில்லை என்று எதை வைத்து அறியலாம் :lol:

ஏன் அவையை கன்டு பிடிச்சு மண்டையில் போடவா :unsure: அந்த ஆசை சாகும் வரைக்கும் இருக்க வேனும்.அப்படி இல்லாதவன் 30 இலும் பிணத்துக்கு சமன். :D மற்றது இப்ப விஞ்ஞானம் எங்கையோ போட்டுது ஆனால் இது மட்டும் அப்படியே அந்த இடத்தில்தான் நிக்குது.என்ன நாட்டுக்கு நாடு கலாச்சாரத்துக்கு :unsure: தகுந்த படி கொஞ்சம் உருமாற்றம் தெரியலாம். அவளவுதான்.நாங்கள் இப்பவும் தோசைக்கு அவிச்ச மா போடலாமா இல்லை பச்சை மா போடலாமா என்று கதைப்போம்.மற்றது எல்லாம் எப்பவும் பேசாப்பொருள்தான்.அது தான் சில எங்கடைகள் 47 ம் அப்பா அம்மா ஆகுதுகள்.(விபத்தாக)

புத்தன் எனக்கு என்னவோ நீங்கள் சரியா பீல் பண்ணுறமாதிரி தெரியுது.

மனத்திற்கு என்ன வயசு புத்தன் ? என்றும் 16 தான். :)

மனத்தைத் தொடும் பதிவு.

புத்தன் உங்கள் உணர்வுகளை என்னாலும் புரியமுடிகிறது. சில பேரால் தான் அதனை வெளிப்படையாகவும் தெளிவாகவும் வெளிப்படுத்த முடியும். அதில் நீங்களும் ஒருவர்.

  • கருத்துக்கள உறவுகள்

..... வெளிப்படையாகவும் தெளிவாகவும் வெளிப்படுத்த முடியும். ...........

அபிராம், புத்தனை உசுப்பேத்தி பப்பிளிக்கா செய்ய வைக்க பாக்கிறீங்க, வேண்டாம் இந்த விஷ பரீட்சை... :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

வயது முத்திப் பழுத்தாலும் சரி, வருத்தக்காறனாகிச் சீரழிந்தாலும் சரி, ஆண்கள் கண்களில் இருந்து ஆசை மட்டும் இறங்காது. இந்த உலகில் வேறு என்ன சந்தோஷம் மனிதனுக்கு மிஞ்சியிருக்கின்றது?

-- தற்போது படிக்கும் புத்தகத்தில் இருந்து

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.