Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவர்ச்சி. காதல். காமம்.கண்ணியமான நட்பு . கடந்துவந்தபாதை. பாகம் 6

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எது கரவெட்டி ஆயக்கடைவையா??

பல கோவில்கள் இருக்கின்றன.கோவில் கதவுநிலையை தாண்டி உள்ளே வைத்தகால் உடம்பில் இருக்காது.

  • Replies 303
  • Views 61k
  • Created
  • Last Reply

நல்லாயிருக்கு சாத்திரியார். தொடருங்கள்....

(இது நான் படிக்கும் உங்களுடைய இரண்டாம் கதை.1.இந்திய பயணக் கட்டுரை)

  • கருத்துக்கள உறவுகள்

1975 அல்லது 77 என நினைக்கிறேன். சுழிபுரம் பறாளாய் விநாயகர் முருகன் ஆலயங்களில் சந்ததியார் முன்னிலையில் பிரவேசம் நடந்தது. ஊரில் நிற்கும் நாட்களில் பெரும்பகுதி அப்போது சந்ததியாருடன் கழிந்ததால் நானும் அங்கே நின்றேன். கத்தியின்றி இரத்தமின்றி என்பதுபோல அது நிகழ்ந்தது.

ஆனால் என்ன..?!!!

மறுநாளே ஆலயங்களை பூட்டினாங்கள்.. கொடிக் கம்பம் வரையும் கம்பியால் எல்லைபோட்டு அதனுள் அந்தணரைத் தவிர எவருக்கும் அனுமதி இல்லை என்றார்கள்.. புதிதாக ஆலயங்களுக்கு தொண்டர் சபையை உருவாக்கி (இது ஏற்கெனவே நல்லூரில் இருந்தது) அந்த சபையில் உள்ளவர்கள்தான் சாமி தூக்கலாம் என்றார்கள்.. பிறகு புதிதாக கும்பாபிசேகத்துடன் ஆலயங்களை திறந்தாங்கள்.. இப்பவரையும் எல்லாருக்கும் திறந்துதான் இருக்கு..

ஆனாலும் என்ன.. என்னத்தை திறந்து.. என்னத்தை போயி..?! :D

(சாத்ஸ் முதலாவது பகுதிக்கும் கருத்து எழுதணும்.. எழுத பஞ்சியாயிருக்கு சார்.. பிறகு எழுதுறன்.)

நல்லதொரு இரைமீட்பு.. இந்த வாசத்தில் என்னாலும் பலதை இரைமீட்க முடியும் என நம்புகிறேன்.. தொடருங்கள்.. வாழ்த்துகள்!! :)

தெரியும், கேள்விப்பட்டனான்..

பொன்னாலை கோவிலில் ஒவ்வொரு திருவிழாவுக்கு அடிபாடுதான், நான் 4-5வகுப்பு படிக்கும் போது என்னுடன் படித்த நண்பர்களில் பலர் மற்றவர்களால் ஒதுக்கப்பட்டவர்கள், எனக்கு படிகாட்டும் அவர்கள்தான் :D , கத்தி எடுத்தால் இரத்தம் காணமால் வைக்கமாட்டான்கள், பெரிய வகுப்புக்கு போனாலும் எங்கு கண்டாலும் அவன்களுடன் கதைக்க தவறுவதில்லை, நல்ல இதயம்

Edited by உடையார்

பல கோவில்கள் இருக்கின்றன.கோவில் கதவுநிலையை தாண்டி உள்ளே வைத்தகால் உடம்பில் இருக்காது.

வரனி சுட்டிபுரம் கோவில்(1993) திருவிழாவின் போது இடக்குறிச்சியை சேர்ந்தவர்கள் குளத்தில் இறங்கி குளித்துவிட்டு தேர் இழுத்துக்கு பெரிய வெட்டுக் குது நடைபெற்றது அதனால் அந்த இனம் காலம் கலமாக வைத்து இருந்த கள்ளு கோப்றனை எலலம் எரிக்கப்பட்டது சொந்த காணிகளுக்கு கள்ளுக் கூட சீவ விடவில்லை . பல பேரை புலிகள் கைது செய்து ஆறுமாதம் 1 வருசம் என்று வெளிஉலகத்துக்கு காட்டது வைத்து இருந்தார்கள் சிலரை இறுதிவரையும் காட்டவில்லை அவர்கள் காணாமல் போய்விட்டார்களோ தெரியா.

திருமணமாகி கொலண்டில் இரண்டு பிள்ளைகளிற்கும் தாயாகி வாழ்ந்து வரும் மல்லிகா கடந்த வருடம் ஊரிற்கு போய்விட்டு வந்து அவனிற்கு போனடித்தவள். ஊருக்கு போனனான் கோயிலுக்கும் போயிருந்தனான். கோயிலுக்குள்ளை போகேக்குள்ளை நந்தனையும் உங்களையும்தான் நினைச்சனான். நந்தனின்ரை பேரிலை அன்னதானமும் குடுத்தனான். கோயில் திருத்திறாங்கள் காசு குடுத்தவையின்ரை பெயரை கல்லிலை பதிக்கிறாங்களாம். கல்லிலை நந்தனின்ரை பெயரை பதிக்கச்சொல்லி காசு குடுத்திட்டு வந்தனான். ஏனெண்டால் அவனின்ரை நினைவு கல்லை உடைச்சுப்போட்டாங்கள் அதோடை அவனின்ரை பெயரிலை இருந்த வீதி பெயர் பலகையும் இப்ப இல்லை கோயில் கல்லிலையாவது அவனின்ரை பெயர் இருக்கும். எண்டாள்.

எங்கை இருக்கிறா? போன் நம்பர் இருக்கோ? :D:lol:

  • கருத்துக்கள உறவுகள்

பல கோவில்கள் இருக்கின்றன.கோவில் கதவுநிலையை தாண்டி உள்ளே வைத்தகால் உடம்பில் இருக்காது.

இப்போதும் நிலைமை அப்படித்தான் சில இடங்களில்..

பழைய தலைமுறை அழிந்துபோகப் புதிய தலைமுறையைச் சேர்ந்தவர்கள் மாற்றங்களை உள்வாங்குவார்கள் என்பதெல்லாம் இன்னும் பல தலைமுறைகளுக்கும் சொல்லிக்கொண்டிருக்க வேண்டும்!

  • கருத்துக்கள உறவுகள்

எங்கை இருக்கிறா? போன் நம்பர் இருக்கோ? :D:lol:

வினித் கிட்டிப்புள்ளு வீட்டுக்காரிக்கு ஒரு டசின் அனுப்பவா ? :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக்கதைக்கு நான் இப்படி பதில் எழுதுகின்றேன்.

எப்படி இருக்கு என்று சொல்லுங்கள்

நான் சிறுவனாக இருந்தபோது

எனது வீட்டுக்கு மீன் கொண்டுவர பலர்

தலைமுடி வெட்ட ஒருவர்

உடுப்பு தோய்த்துக்கொண்டுவர ஒருவர்

மா மிளகாய்த்தூள் இடிக்க போன்ற வேலைகளுக்கு ஒருவர்

தளபாட வேலைகளுக்கு சிலர்

கட்டிட வேலைகளுக்கு சிலர்.........

வந்து போவார்கள்

இவர்கள் எல்லோரும் எனது தகப்பனாரை வழியில் கண்டால் தலைப்பாகை கட்டியிருந்தால் அதை அவிட்டு கீழே பிடித்தபடி வணக்கம் சொல்வார்கள். அவர் வரும் வழியால் எதிரே வராது ஒதுங்கியே செல்வார்கள். இதை நான் நேரில் பலமுறை பார்த்திருக்கின்றேன். அவர்களிடம் கேட்டதற்கு எனது தகப்பனாரின் பிறப்பு தகுதி மற்றும் அவர் பிறந்த நேரத்திலிருந்தே இவருக்கு இந்த மதிப்பை கொடுத்துவருவதாக சொல்வார்கள்.

ஆனால் நான் இவர்களுடைய மக்கள் எல்லோருடனும் நண்பனாக பழகினேன். அவர்கள் வீடுகளுக்கும் போயிருக்கின்றேன். இதனால் சில எதிர்ப்புக்கள் வந்தாலும் அந்த வயது அவற்றைக்கண்டுகொண்டதில்லை. இன்றும் அவர்களில் பலர் நண்பர்களாகவே இருக்கின்றனர். இன்று ஒன்றாகவே தங்குகின்றோம் ஒன்றாகவே சாப்பிடுகின்றோம் தூங்குகின்றோம். இன்று இப்படி நான் எழுதுவது கூட சிலருக்கு இங்கு அசிங்கமாகத்தெரியும். அவர்களிடமிருந்து எந்த மரியாதையையும் நான் எதிர்பார்த்தில்லை. கேட்டாலும் கிடைக்கவும் போவதில்லை.

இனி

அடுத்த சந்ததி.

அதன் வளர்ச்சியும் பாய்ச்சலும் எல்லோருக்கும் தெரிந்ததே.

இதில் 2 வகைகளில் அவர்களினால் இந்த மரியாதை கொடுக்கப்பட்டது.

1- சாதி அடிப்படையில்

2 - அவர்களிடம் வேலை செய்து சம்பளம் பெறுபவர் என்ற அடிப்படையில்

சாத்திரியின் கதையிலும் இந்த இரண்டும் உண்டு. அந்தவகையில்தான் இந்த உடுப்பு அதை மீண்டும் போடுதல் என்பன வரும்.

இயக்கம் கூட அடக்கி வாசித்ததாக இங்கு சிலர் குறைப்பட்டார்கள்.

ஆனால் அதற்கு என்ன காரணம் என்று அவர்களுக்கு தெரிந்தும் வெறும் இயக்கம் மீதான குற்றச்சாட்டாகவே அது இருந்தது.

காரணம் அனுபவரீதியான படிப்பினையால் இதில் முழுமையாக தாம் இறங்காது அதிலிருந்து விடுபட்டு வரத்தொடங்கியவர்களையே அது ஊக்குவித்தது. பாதுகாத்தது.

புங்கையூரான் குறிப்பிடும் ஆசிரியர் தளையசிங்கம் அவர்கள்.

அவரது மகன் இங்குதான் உள்ளார். பெயரே புதுமை. புதுயுகன்.

விசுகு இப்படித்தான் பலரை நானும் சின்ன வயதில் கண்டிருக்கிறேன். எனது ஊருக்குள்ளும் ஆனால் எவரும் அந்து தலைப்பாகை கழற்றி தம்மை மரியாதை செய்வதை வேண்டாமென்று ஒதக்கவில்லை. அல்லது அவர்களது பிள்ளைகளும் அதனைச் செய்யவில்லை. உங்களது இக்கருத்து வெறும் சப்பைக்கட்டே. பூமியில் பிறந்த ஒவ்வோரு உயிரும் பெருமையோடு தான் பிறந்திருக்கிறது பிறக்கிறது. ஆனால் தங்கள் பிறப்ப தகுதியென்னும் புனிதமென்றும் மனிதனை மிதித்துவிடுகிற இழிவே இந்த நாடகமெல்லாம்.

இவ்வளவு மாற்றங்கள் நிகழ்ந்துவிட்டதாகக் கூறுகிற நாங்கள் ஆச்சரியப்படும் விடயங்கள் பல இயக்கம் கூட செய்ய வேண்டி வந்தது. திருமண விடயத்தில் சாதிபார்த்து திருமணம் செய்து வையுங்களென்று தலைவரே திருமணக் குழுவினருக்கு அறிவித்ததும் நடந்தது. காரணம் முன்மாதிரியாக நடந்த திருமணங்களில் பல சாதிப்பிரச்சனையால் இரண்டுபட்டதும் தலைவரின் விசாரணைக்குப் போனதும் நிறைய. தலைவர் மாற்றத்தை விரும்பினார் அவரோடு இருந்தவர்கள் அவர் விரும்பிய மாற்றத்தை மதிக்கவில்லை.மாறாக சாதியை இயக்கத்தினுள்ளும் வளர்த்தார்கள். ஏற்றுக் கொள்ள கசப்பானவை இவை. ஆனால் சொல்ல வேண்டியிருக்கிறது.

திருமணம் வரை சென்றுகூட பல திருமணங்கள் நடக்காமல் நின்றது இயக்கத்தில் கனக்க நடந்தது. காரணம் சாதிதான்.

அண்மையில் ஒரு முன்னாள் பெண் போராளிக்கு அவர்களத பெற்றோர் ஒரு மணகனைத் தேடுமாறு அவளது நட்புகளிடம் வேண்டினார்கள்.

போராளியாக இருந்த பெண் எல்லா மூடத்தனங்களையும் விட்டே திருமணத்திலும் இணைவாள் என நட்புகள் நினைத்து மணமகனைத் தேடினார்கள். ஆனால் அந்தக் குடும்பம் வைத்த முதல் நிபந்தனை சாதி தங்களதாக இருந்தால் போதும் மற்ற விட்டுக்கொடுப்புகள் எல்லாவற்றுக்கும் தயார் என. இப்படி இன்றும் சாதி எல்லா வடிவங்களிலும் எல்லாவற்றையும் ஆட்கொண்டுள்ளது.

இங்கு புலத்திலும் திருமணம் என்று வரும்போது அது விசுகு நீங்களானாலும் உங்கள் சாதியை விட்டு இன்னொரு சாதியில் திருமணத்திற்கு ஒப்புக் கொள்ளமாட்டீர்கள். உன்னால் முடியுமா என நீங்கள் கேட்டால் எனது பதில் இதுதான்.

எனது பிள்ளைகளுக்கு சாதியென்பது நான் சொல்லிக் கொடுக்கவில்லை. அதுபற்றி தெரியாது. ஆனால் அவர்கள் எனது இனம் அதாவது தமிழரைத் தமது வாழ்வுத் துணையாகத் தேர்ந்தால் வரவேற்பேன். இது எனது இனத்தோடு ஒட்டியிருந்து வாழ விரும்புவதால். இந்த விருப்பம்.

  • கருத்துக்கள உறவுகள்

நட்பு

அவள்பெயர் மல்லிகா(உண்மைப்பெயர்தான்)சிறியைவிட அவளிற்கு இரண்டுவயது குறைவு தலைக்கு எண்ணெய்வைத்து வழித்து இழுத்து பின்னப்பட்ட இரட்டைப்பின்னல். கறுப்பாக இருந்தாலும் களையான முகம். சிறியின் வீட்டிற்கு மாலை நேரத்தில் புல்லுக்கட்டு தலையில் சுமந்து வரும் அவளது தாயின் பின்னால் கையில் ஒரு தடியை வைத்து மரம் செடிகளிற்கு அடித்து அவைகளை உறுக்கி வெருட்டி குழப்படி செய்யக்கூடாது ஒழுங்கா படிக்கவேணும் என்று அவைகளோடு விழையாடியபடியே வருவாள்.அவளின் தாயார் வீடுகளிற்கு போய் மாவிடிப்பது கூட்டிபெருக்குவது வயல்களில் கூலிவேலை செய்வது இதுதான் அவரது தொழில். தந்தை அதிகம் படிக்காதவர். ஆனால் வாக்கு வேட்டைக்காக சிறிலங்கா சுததந்திரக்கட்சியின் வேட்பாளர் வினோதனின் புண்ணியத்தில் அவரிற்கு மானிப்பாய் பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் வாசல் காவலாளி வேலை. லீவுநாள்களில் ஊரில் உள்ளவர்களின் வீடுகளிற்கு வேலியடைப்பது குளைவெட்டுவது என்கிற வேலைகளை செய்வார் மல்லிகா ஒரேயொரு மகள்தான் அவரது இலட்சியமெல்லாம் தானும் தன்னுடைய சமூகமும் அதிகளவு படிப்பறிவற்றவர்களாகவே இருக்கிறார்கள் எனவே மல்லிகாவை எப்படியாவது பெரிய படிப்பு படிப்பித்து பெரியாளாக்குவது மட்டுமே அவரது இலட்சியம்.அவர்கள் கோயில் காணியில் ஒரு குடிசைபோட்டு வசித்துவந்தனர்.அவனின் வீட்டிற்கு வேலைக்காக வரும் காலங்களில் அவர்களிற்கு தேனீர் குடிப்பதற்கென்றே தனியாக சில கிளாசுகள் வீட்டின் பின்பக்கம் வைக்கப்பட்டிருக்கும் அதனை அவர்களே எடுத் கழுவி நீட்டினால்தான் அதில் தேனீர் கொடுக்கப்படும். தாயர் வேலை செய்யும பொழுது மல்லிகா அவளுடைய புத்தகங்களை கொண்டுவந்து படித்துக்கொண்டிருப்பாள். ஒருநாள் அவள் சிறியிடம் எனக்கு நெல்லிக்காய் பிடுங்கி தாறியளோ என்றதும் நெல்லி மரத்தில் பாய்ந்து ஏறியவன் அதன் கிளைகளை பிடித்துஉலுப்ப கீழே விழுந்த நெல்லிக்காய்களை ஓடியோடி மல்லிகா பொறுக்கி சேர்த்தாள். மரத்தைவிட்டு கீழே இறங்கியவனிடம் உங்களுக்கு வேணுமோ என ஒரு நெல்லிக்காயை நீட்ட அவனும் அதைவாங்கி சாப்பிட்டுக்கொண்டிருக்க அதை கவனித்த அவனது அம்மம்மா அவசரமாக வீட்டிற்குள்ளே கூப்பிட்டவர்

அவன் காதில் பிடித்து முறுக்கியபடி

உனக்கு எத்தினை நாள் சொல்லியிருக்கிறன் அவளோடை சேராதையெண்டு கேக்கமாட்டியா?? வீட்டிலைதானே நெல்லிமரம் நிக்கிது அவளிட்டையா வாங்கி தின்னவேணும்.??

ஏன் அவளிட்டை வாங்கி திண்டால் என்ன??

அவங்களிட்டை ஒண்டும் வாங்கி தின்னக்கூடாது அவங்கள் வேறை சாதி நாங்கள் வேறை சாதி.

நெல்லிக்காய் எங்கடைதானே

வாய்க்குவாய் கதையாதை அவளோடை நீ இனி சேந்ததை கண்டால் இனி அடிதான் கவனம்.

ஆனால் அதைப்பற்றியெல்லாம் அவனிற்கு கவலையில்லை வீட்டிற்கு தெரியாமலேயே வயல்களில் அவளோடு சேர்ந்து வெள்ளரி பிஞ்சுகளை களவெடுத்து தின்பது பட்டம்விடுவது . காய்ந்து கிடக்கும் வழுக்கையாற்று மணலில் விழையாடுவது மழைக்காலங்களில் வால்பேத்தை பிடிப்பது அவ்வப்பொழுது அவளுடன் அவனை அவனது உறவுகள் யாராவது கண்டால் திட்டு அல்லது ஓரிரண்டு குட்டுவிழும்.

0000000000000000

வருசாவருசம் கோயில் திருவிழா தொடங்க முதல் கோயிலின் சட்ட விழக்குகள் அனைத்தும் கழற்றி எண்ணெய் கழிம்புகளை துடைத்து சுத்தம் செய்வது வழைமை ஒரு சட்டவிளக்கில் 108 விளக்குகள் இருக்கும் . அப்படி ஒவ்வொரு வாசலிற்கும் ஒவ்வொரு சட்டவிளக்கு பொருத்தியிருந்தார்களை அவைகளை சுத்தம் செய்வது பெரியவேலை நாள்கணக்கில் துப்பரவு வேலை நடக்கும். அப்படித்தான் அந்த வருடமும் சிறியும் அவனது சித்தப்பாவோடு அவனது நண்பன் ஒருவருமாக சட்டவிளக்குகளை துடைத்துக்கொண்டிருந்தபொழுது தேனீர் எடுத்துவருவதற்காக சித்தப்பா வீட்டிற்கு போயிருந்தார். அந்த நேரம் கோயிலில் வெளியே வந்த மல்லிகா கற்பூரம் கொழுத்தி கும்பிட்டுவிட்டு விபூதி குடுவையில் கையை விட்டாள் விபூதி இல்லை அங்கிருந்தபடியே சிறியிடம் உள்ளே விபூதி எடுத்துத் தரும்படி கேட்டாள் சிறி தனது கைகளைகாட்டி கையெல்லாம் எண்ணெய் நீயே உள்ளை வந்து எடு என்றான் உள்ளே வந்தவள் விபூயை எடுத்து தான்பூசிவிட்டு கையில் கொஞ்சத்தை எடுத்தவள் அம்மாக்கு காச்சல் அதுதான் கற்பூரம் கொளுத்தின்னான் விபூதி கொண்டு போய் பூசிவிடப்போறன் என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே தேனீருடன் வந்த சித்தப்பா அவளை கண்டதுமே ஏனடி உள்ளை வந்தனி என்று கத்தியபடி அவளை விரட்ட கையில் பொத்திப் பிடித்த விபூதியுடன் அவன் ஓடித்தப்பிவிட்டாள்.

முச்சுவாங்கியபடி வந்த சித்தப்பா அவளை ஏன் உள்ளை விட்டனீங்கடளா என்று அவர்களை பாத்து கத்த சிறியின் நண்பன் இவன்தான் அவளை உள்ளை கூப்பிட்டவன் என்று போட்டுக்கொடுத்து விட்டு அங்கிருந்து ஓடிவிட்டான். சித்தப்பாவின் கோபம் பல பூவரசந் தடிகளை முறியவைத்தது. கோயிலில் இருந்து வீடுவரை கலைத்து கலைத்து அடித்து ஓய்ந்தார்.மல்லிகா அவரது கண்களில் படாமல் ஒழித்துத் திரிந்தாள்.

அப்படியான ஒரு நாளில்.மாரிக்காலம் .மழை வெள்ளம் வரும் காலங்களில் குடிசைகளில் வசிப்பவர்கள் பெரும்பாலும் இடம்பெயர்ந்து அங்குள்ள தேவாலயத்திலோ அல்லது பாடசாலையிலோ குடிபெயர்வது வழைமை. அந்த வருடமும் பெருவெள்ளத்தில் இடம் பெயர்ந்தவர்களில் மல்லிகாவின் குடும்பமும் ஒன்று. மாரிக்காலம் முடிந்து பாடசாலை தொடங்கும் போது மல்லிகாவின் பாடசாலை சீருடை வீட்டில் புகுந்த வெள்ளத்தில் பழுதாகிப் போய்விட்டதால் சாதாரண சட்டையுடன் பாடசாலைக்கு போன மல்லிகாவை சீருடை போடாமல் பாடசாலைக்கு வரவேண்டாமென அவளது வகுப்பு ஆசிரியை திட்டி அனுப்பியிருந்தார்.புது துணிவாங்கி சீருடை தைத்து வரும்வரை பாடசாலை போகமுடியாதென மல்லிகா அவனிடம் சொல்லி கவலைப்படவே அவனிற்கு ஒரு யோசனை தோன்றியது நேராக தன்னுடைய வீட்டிற்கு போனவன் அவனது தங்கைகளின் சீருடைகளில் ஒன்றை களவாய் எடுத்துக்கொண்டு போய் மல்லிகாவிடம் கொடுத்துவிட்டான். ஆனால் அவனது தங்கைகள் படித்தது மானிப்பாய் மகளிர் கல்லூரி மல்லிக படித்தது சண்டிலிப்பாய் இந்து மகாவித்தியாலயம்.மானிப்பாய் மகளிர் கல்லூரி சீருடைகளில் மானிப்பாய் மகளிர் கல்லூரி என்கிற சுருக்கம் MLC என சிறியதாய் ஒரு பட்டி வைத்து தைக்கப்பட்டிருக்கும்.அதைப்பற்றி அவனும் யோசிக்கவில்லை மல்லிகவிற்கும் அதைப்பற்றி சிந்திக்கின்ற வயது இல்லை.

அவள் அந்த சீருடையுடன் பாடசாலைக்கு போனதும் வகுப்பு ஆசிரியை சீருடையை கவனித்துவிட்டு யாரிட்டை களவெடுத்தாயென கேட்டு அவளிற்கு அடிக்கவே அவளும் நடந்த விடையத்தை சொல்லியிருக்கிறாள். அந்த ஆசிரியை அவனிற்கு உறவுக்காரர்வேறு பிறகென்ன ஏதோ இழவு செய்திபோல அவனது உறவுக்காரர்கள் எல்லாரிற்கும் செய்தி பரவியது.அன்று மாலையே அவனது அம்மம்மா வீட்டில் கண்டன கூட்டம் கூடியிருந்தது.அக்கம் பக்கத்து வீட்டு வேலிகளிலும் தலைகள் முளைத்திருந்தது.மல்லிகாவின் தாயும் தந்தையும் கைகளை கட்டியபடி வீட்டு முற்றத்தில் பவ்வியமாக தலையை குனிந்தபடி நின்றிருந்தனர். அவரகளிற்கு பின்னால் மிரண்ட விழிகளுடன் மல்லிகா மறைந்து நின்றிருந்தாள்.சிறியின் குடும்பத்தினர் அனேகமானவர்களுடன் அந்த ஆசிரியையும் வந்திருந்தார். பஞ்சாயத்தை தாத்தா தொடக்கினார்.

ஏனடா நடந்தது உனக்கு தெரியாதே??

இல்லை ஜயா நடந்தது சத்தியமா எனக்கு தெரியாது நான் வேலைக்கு போட்டன் இவளும் புத்தியில்லாமல் சட்டையை போட்டு பிள்ளையை பள்ளிக்கூடத்தக்கு அனுப்பிப் போட்டாள்.

தாத்தா மல்லிகாவின் பக்கம் பார்வையை திருப்பினார்.

ஜயா வழக்கமா நீங்கள் பழைய உடுப்புக்கள் தாறனீங்கள் தானே. தம்பி அப்பிடித்தான் இதையும் தாறார் எண்டு நான் நினைச்சிட்டன் சட்டை தோச்சு எடுத்துக்கொண்டந்திருக்கிறன் இந்தாங்கோ .

என்று சட்டையை முன்னால் நீட்டவே .கோபமாக யாருக்கடி வேணும் இந்த சட்டை என்று அதை பறித்து முற்றத்தில் எறிந்த அவனின் தாயார். என்ன திமிர் இருந்தால் அவள் போட்ட சட்டையை என்ரை மகளுக்கு போடச்சொல்லி திரும்ப கொண்டுவருவாய் என்று ஒரு அறையும் மல்லிகாவின் தாயார் கன்னத்தில் விழுந்தது.

பிழை முழுக்க இவனிலை அதுகளிலை கோவிச்சு பிரயோசனம் இல்லை முதல்லை உன்ரை மகனை திருத்து என்று தாத்தா மகளை சாந்தப் படுத்தினார்.

என்னட்டையும் உந்த வயசிலை இரண்டு பெட்டையள் இருக்க உவன் ஏனோ தெரியாது உந்த நளத்திக்கு பின்னாலைதான் திரியிறான். என்று தன்னுடைய எதிர்கால கவலையை மாமி வெளிட்டார்.

மாமியை அவன் முறைத்து பார்க்கவே .இஞ்வை பாருங்கோ என்னையே முறைக்கிறான் என்று மாமாவை உருப்பேத்த . மாமாவின் கையில் பூவரசந்தடி. உடனேயே அவனது அப்பாவிற்கு கௌரவப்பிரச்சனையானது மாமாவின் தடியை வாங்கி அவரே மாமிட்டை மன்னிப்பு கேளடா என்றபடி அவனில் அடித்து முறித்தார். அவன் அழக்ககூட இல்லை அசையாமல் நின்றிருந்தான். அப்பொழுதுதான் அங்கு வந்த சித்தப்பா நேராக மல்லிகாவிடம் போனவர் அவளது தலைமயிரை பிடித்து இழுத்து கன்னத்தில் ஒரு அறைவிட்டவர். அண்டைக்கு தப்பிஓடிட்டாய் நாயே இண்டைக்கு உன்னை விடமாட்டன் என்றபடி அவளை நிலத்தில் போட்டு கையாலும் காலாலும் அடிக்க அவளது தாய் மல்லிகாமீது விழுந்து தடுக்க ஒரே கூச்சல். அவன் எதுவும் செய்ய முடியவில்லை அப்பொழுதுதான் அவனிற்கு அழுகை வந்தது.

அதற்கிடையில் அவனது அம்மம்மா விலக்குபிடித்து மல்லிகா குடும்பத்தை அனுப்பிவிட்டதோடு இனி அவர்கள் வீட்டிற்கு வேலைக்கு வரவேண்டாம் எனவும். அதனையும் மீறி அவன் மல்லிகாவுடன் கதைத்தால் அவனை பாடசாலை விடுதியில் சேர்த்துவிடுவதாகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அழுதபடியே இரத்தம் கலந்த எச்சிலை துப்பியபடி மல்லிகா அவனை திரும்பி திரும்பி பார்த்படி போய்க்கொண்டிருந்தாள்.

00000000000000000000

1984 ம் ஆண்டு அதே சண்டிலிப்பாய் கல்வளை பிள்ளையார் கோயில் திருவிழா நெருங்கிக்கொண்டிருந்தது. இந்தமுறை திருவிழாவிலை பெடியள் எல்லாரையும் உள்ளை விடப்போறாங்களாம்..

இப்பிடித்தான் பத்து வருசத்துக்கு முதலும் சிலபேர் உள்ளை போகவெளிக்கிட்டு வெட்டு குத்திலை முடிஞ்சு ஒரு கொலையும் விழுந்து மூண்டு வருசமா திருவிழாவும் இல்லாமல் இருந்தது. திரும்பவும் அந்தநிலைதான் வரும் போலை.

இந்தமுறை பெடியளல்லோ முன்னுக்கு நிக்கிறாங்கள் அவங்களிட்டை துவக்கல்லோ இருக்கு இவையின்ரை வாளுகள் பொல்லுகளாலை ஒண்டும் செய்யேலாது கட்டாயம் அவங்கள் உள்ளை விடத்தான் போறாங்கள். இப்படி ஊரில் கதை நடந்துகொண்டிருந்தது.

திருவிழாவிற்கு முதல்நாள் இரவு கோயிலின் தேர்முட்டியில் இளைஞர்கள் குழுவும் கோயிலின் உள்ளே கோயில் நிருவாகக் குழுவும் ஆலோசனை நடாத்திக் கொண்டிருந்தார்கள். சிறியும் அவனது நண்பன் நந்தனும் தங்கள் நண்பர்களிற்கு அடுத்தநாள் திட்டத்தை விளங்கப்படுத்திக்கொண்டிருந்தார்கள். வேணுமெண்டால் எங்கடையாக்களையும் (புளொட்)வரச்சொல்லுறன் எண்டான் காந்தன். எங்கடை தோழர்களையும் (ஈ.பி.ஆர்.எல்.எவ்) கூப்பிடவா எண்டான் மதி. யாராவது எதிர்த்து கதைச்சா போட்டு தள்ளிட்டு அடுத்த வேலையை பாப்பம்;எண்டான் யோகராஜன்(ரெலோ).வேண்டாம் நாங்கள் சார்ந்த இயக்கங்களை இதுக்கை இழுக்காமல் முடிந்தளவு நாங்கள் இந்த ஊர்காரர் எண்ட அளவிலையே பிரச்சனையை முடிப்பம் இதுவே சிறியினதும் நந்தனுடையதும் முடிவாக இருந்தது.

அப்பொழுது கோயில் நிருவாக சபையில் இருந்த வயதானவரான ஆனால் எல்லாராலும் மதிக்கப்படுபவரான பழைய சிங்கப்பூர் பெஞ்சனியர் அமுதராசா அங்கு வந்தார். அவர் இளையவர்களின் செயற்பாடுகளிற்கு ஆதரவு கொடுப்பவர். அதனாலேயே கொயில் நிருவாகம் அவரை பெடியளுடன் கதைக்க அனுப்பியிருந்தது. அங்கு வந்தவர் தம்பியவை நான் இருந்தசிங்கபூரிலை கோயிலுக்கை எல்லாரும் போகலாம். ஆனால் இஞ்சை அப்பிடியில்லை அவங்கள் சுத்தபத்தம் இல்லாமல் தண்ணியடிச்சிட்டு வருவாங்கள் அதாலைதான் உள்ளை விடேலாது மற்றபடி வேறை பிரச்சனை ஒண்டும் இல்லை. எதுக்கும் யோசியுங்கோ எண்டார். ஜயா எல்லாரும் குளிச்சு சுத்தமாய் வேட்டியோடைதான் வருவினம். தண்ணியடிச்சிட்டு யாராவது வந்தால் நாங்களே உள்ளை விடமாட்டம் நாளைக்கு பிரச்சனை பண்ணாமல் பேசாமல் இருக்கச் சொல்லுங்கோ . பிரச்சனை பண்ணினால் பிறகு நாங்கள் வாயாலை கதைக்கமாட்டம் எண்டதை மட்டும் அவையிட்டை சொல்லிவிடுங்கோ.

0000000000000000

மறுநாள் திருவிழா தொடங்கிவிட்டிருந்தது ஏதும் பிரச்சனைகள் வந்தால் பாதுகாப்பிற்கென புலிகள் அமைப்பினை சேர்ந்தவர்கள் சிலர் ஒரு வானில் வெளிவீதியில் ஆயுதங்களுடன். வானிற்கு உள்ளேயே இருந்தனர். மற்றைய சமூகத்தை சேர்ந்தவர்கள் பலர் கோயிலின் உள்ளே போய்விட்டிருந்தனர். கோயிலுக்குள்ளை வந்திட்டாங்கள் ஆனால் என்ன நடந்தாலும் உவங்களை சாமிதூக்கவிடுறேல்லை என்று கோயில் நிருவாகத்தை சேர்ந்தவர்கள் முடிவெடுத்திருந்தார்கள். திருவிழாவின் இறுதிகட்டம் நெருங்கியது சாமிதூக்கவேண்டும். ஊர் இளைஞர்கள் திட்டமிட்டபடி ஏற்கனவே தயாராய் நின்றவர்களை விலக்கிவிட்டு ஊர் இளைஞர்களே சாமியை தூக்கினார்கள்.இதை கோயில் நிருவாகம் எதிர்பார்க்கவில்லை காரணம் சாமி தூக்கிய இளைஞர்கள் எல்லாருமே அவர்களது உறவுகள் என்பதால் ஆளையாள் பார்த்தபடி நின்றனர். சாமியை தூக்கியவர்கள் சிறிது தூரம் வந்ததும் தயாராய் நின்றிருந்தவர்களிடம் தோள் மாறியது. அப்பொழுதான் பெடியங்கள் தங்களை சுத்திப்போட்டாங்கள் என்பது அவர்களிற்கு புரிந்தது. என்ரை பிணத்தை தாண்டித்தான் இண்டைக்கு சாமி போகும் என்றபடி வெறிநாயைப்போல பாய்ந்து வந்தஅவனது சித்தப்பாவின் முகத்தில் ஓங்கி அவனது கை அறைந்தது. தட்டுத்தடுமாறி நிமிர்ந்தவரின் பட்டுவேட்டியில் அவரது முக்கிலிருந்து ஒழுகிய இரத்தம் கோலம் போட்டுக்கொண்டிருந்தது. வேறு சிலரும் சாமிதூக்கியவர்கள் மீது பாய இழுபறியில் சாமியை நிலத்தில் வைத்துவிட்டு கைகலப்பு தொடங்கவே நிலைமை மோசமாவதை உணர்ந்த நந்தன் வேகமாக வெளியே வானிற்கு ஓடிப்போனவன் அதிலிருந்த எஸ். எம்.ஜி துப்பாக்கியை எடுத்தவன் வானத்தை நோக்கி சில குண்டுகளை தீர்த்துவிட்டுஇண்டைக்கு சிலபேர் செத்தால்தான் திருவிழாநடக்குமெண்டால் சாக விரும்பிறவன் எல்லாம் வெளியாலை வா ..என்று கத்தினான்.

துப்பாக்கி சத்தத்திற்கு எல்லாரும் பயந்துபோயிருந்தனர்.அங்கு எரிந்துகொண்டிருந்த கற்பூரத்தின் மீது ஆவேசமாக அடித்து இனி செத்தாலும் நான் இந்த கோயில் பக்கம் வரமாட்டன் என்று சத்தியம் செய்த அவனது சித்தப்பா பிள்ளையாரே நீ உண்மையான சாமியாய் இருந்தால் அடுத்த திருவிழாவுக்குள்ளை இவங்களுக்கு நீ யாரெண்டு காட்டு என்று சாபமும் போட்டுவிட்டு சித்தி பிள்ளைகளை அழைத்துக்கொண்டு அங்கிருந்து போய்விட்டார். கோயில் நுளைவின் எதிர்ப்பாளர்களும் பயந்துபோன சில குடும்பத்தவர்களும் அங்கிருந்து போய்விட சாமி ஊர்வலம் வழைமைபோல நடந்து முடிந்தது.இறுதியாக சாமியின் அலங்காரங்களை அகற்றி தீபாராதனை காட்டும்வரை ஒருவர் பஞ்சபுராணம் பாடவேண்டும். வழைமையாக பஞ்சபுராணம் பாடும் பாலுஅண்ணர் முன்னாலைவந்து தலைக்குமேல் கைகளை கூப்பி திரச்சிற்றம்பலம் என்று தொடங்கவும். அவர் அருகில் போன அவன்' அண்ணை இண்டைக்கு உங்களுக்கு வேறை வேலை போய் பஞ்சாமிர்தம் குடுக்கிறவேலையை பாருங்கோ பஞ்சபுராணம் வேறை ஒராள் பாடுவார் ' எண்டதும் அவர் அங்கிருந்து போய்விட அதுவரை உள்ளே வராமல் வெளியிலேயே நின்றிருந்த மல்லிகா வைஅவன் அழைத்தான். தயங்கியபடி உள்ளே வந்தவளிடம் கெதியாய் போய் பஞ்சபுராணத்தைபடி ஜயர் காவல் நிக்கிறார் என்றவும். முன்னால் சென்ற மல்லிகா கைகள் கூப்பி கண்களை மூடி திருச்சிற்றம்பலம் என்று தொடங்கி கண்களில் நீர் செரிய பஞ்சபுராணங்களை பெருத்த குரலெடுத்து பாடத் தொடங்கினாள்.

000000000000000000000

திருமணமாகி கொலண்டில் இரண்டு பிள்ளைகளிற்கும் தாயாகி வாழ்ந்து வரும் மல்லிகா கடந்த வருடம் ஊரிற்கு போய்விட்டு வந்து அவனிற்கு போனடித்தவள். ஊருக்கு போனனான் கோயிலுக்கும் போயிருந்தனான். கோயிலுக்குள்ளை போகேக்குள்ளை நந்தனையும் உங்களையும்தான் நினைச்சனான். நந்தனின்ரை பேரிலை அன்னதானமும் குடுத்தனான். கோயில் திருத்திறாங்கள் காசு குடுத்தவையின்ரை பெயரை கல்லிலை பதிக்கிறாங்களாம். கல்லிலை நந்தனின்ரை பெயரை பதிக்கச்சொல்லி காசு குடுத்திட்டு வந்தனான். ஏனெண்டால் அவனின்ரை நினைவு கல்லை உடைச்சுப்போட்டாங்கள் அதோடை அவனின்ரை பெயரிலை இருந்த வீதி பெயர் பலகையும் இப்ப இல்லை கோயில் கல்லிலையாவது அவனின்ரை பெயர் இருக்கும். எண்டாள்.

00000000000000000000

இந்தியப்படை முல்லைத்தீவு அலம்பில் காட்டுபகுதியில் புலிகளின் தலைமையை குறிவைத்து முற்றுகையிட்டபொழுது அதனை உடைப்பதற்காக ஒரு குழுவிற்கு தலைமைதாங்கி போரிட்டு நந்தன். கப்ரன் நந்தனாக வீரச்சாவடைந்துவிட்டான் .சிறுவயது நண்பனின் நினைவுகளுடன் இந்த பதிவை எழுதியிருந்தேன் . அடுத்த வாரம் அடுத்த பதிவில் சந்திப்போம்.

மிக்க நன்றிகள் சாத்திரி. தொடருங்கள் ஆவலுடன் காத்திருக்கிறேன். உங்கள் போன்ரறவர்களின் அனுபவத்தைப் பகிர்வதற்கு நான் கொடுத்து வைத்திருக்கிறேன் என்றுதான் நினைக்கிறேன். மீண்டும் எனது மனமார்ந்த நன்றிகள் !!!

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு இப்படித்தான் பலரை நானும் சின்ன வயதில் கண்டிருக்கிறேன். எனது ஊருக்குள்ளும் ஆனால் எவரும் அந்து தலைப்பாகை கழற்றி தம்மை மரியாதை செய்வதை வேண்டாமென்று ஒதக்கவில்லை. அல்லது அவர்களது பிள்ளைகளும் அதனைச் செய்யவில்லை. உங்களது இக்கருத்து வெறும் சப்பைக்கட்டே. பூமியில் பிறந்த ஒவ்வோரு உயிரும் பெருமையோடு தான் பிறந்திருக்கிறது பிறக்கிறது. ஆனால் தங்கள் பிறப்ப தகுதியென்னும் புனிதமென்றும் மனிதனை மிதித்துவிடுகிற இழிவே இந்த நாடகமெல்லாம்.

இவ்வளவு மாற்றங்கள் நிகழ்ந்துவிட்டதாகக் கூறுகிற நாங்கள் ஆச்சரியப்படும் விடயங்கள் பல இயக்கம் கூட செய்ய வேண்டி வந்தது. திருமண விடயத்தில் சாதிபார்த்து திருமணம் செய்து வையுங்களென்று தலைவரே திருமணக் குழுவினருக்கு அறிவித்ததும் நடந்தது. காரணம் முன்மாதிரியாக நடந்த திருமணங்களில் பல சாதிப்பிரச்சனையால் இரண்டுபட்டதும் தலைவரின் விசாரணைக்குப் போனதும் நிறைய. தலைவர் மாற்றத்தை விரும்பினார் அவரோடு இருந்தவர்கள் அவர் விரும்பிய மாற்றத்தை மதிக்கவில்லை.மாறாக சாதியை இயக்கத்தினுள்ளும் வளர்த்தார்கள். ஏற்றுக் கொள்ள கசப்பானவை இவை. ஆனால் சொல்ல வேண்டியிருக்கிறது.

திருமணம் வரை சென்றுகூட பல திருமணங்கள் நடக்காமல் நின்றது இயக்கத்தில் கனக்க நடந்தது. காரணம் சாதிதான்.

அண்மையில் ஒரு முன்னாள் பெண் போராளிக்கு அவர்களத பெற்றோர் ஒரு மணகனைத் தேடுமாறு அவளது நட்புகளிடம் வேண்டினார்கள்.

போராளியாக இருந்த பெண் எல்லா மூடத்தனங்களையும் விட்டே திருமணத்திலும் இணைவாள் என நட்புகள் நினைத்து மணமகனைத் தேடினார்கள். ஆனால் அந்தக் குடும்பம் வைத்த முதல் நிபந்தனை சாதி தங்களதாக இருந்தால் போதும் மற்ற விட்டுக்கொடுப்புகள் எல்லாவற்றுக்கும் தயார் என. இப்படி இன்றும் சாதி எல்லா வடிவங்களிலும் எல்லாவற்றையும் ஆட்கொண்டுள்ளது.

இங்கு புலத்திலும் திருமணம் என்று வரும்போது அது விசுகு நீங்களானாலும் உங்கள் சாதியை விட்டு இன்னொரு சாதியில் திருமணத்திற்கு ஒப்புக் கொள்ளமாட்டீர்கள். உன்னால் முடியுமா என நீங்கள் கேட்டால் எனது பதில் இதுதான்.

எனது பிள்ளைகளுக்கு சாதியென்பது நான் சொல்லிக் கொடுக்கவில்லை. அதுபற்றி தெரியாது. ஆனால் அவர்கள் எனது இனம் அதாவது தமிழரைத் தமது வாழ்வுத் துணையாகத் தேர்ந்தால் வரவேற்பேன். இது எனது இனத்தோடு ஒட்டியிருந்து வாழ விரும்புவதால். இந்த விருப்பம்.

சாந்தி, சாதியைப்பற்றி எனது பெற்றோரும் என்னிடம் பேசியதில்லை, அல்லது எனக்கு அது விளங்கும் பக்குவம் வரும்போது அவர்கள் இறந்துவிட்டார்கள். எனது பிள்ளைகளுக்கும் நான் சாதியைப் பற்றிப் பேசப்போவதில்லை. அது என்னுடன் அழிந்துபோகட்டும். எனது இனமும் , மொழியும் கலாச்சாரமும் மட்டும்தான் எனக்கு முக்கியம். கலாச்சாரம் கெட்ட மேலைத்தேய நாகரீகத்தில் வளரும் எனது பிள்ளைக்ள் என்மொழிதெரியாத வேற்றுக்கலாச்சார உறவைத் தேடுவதை விட என்னுடைய இனத்தில் சேர்வது எனக்கு முக்கியம். தமிழனாக இருந்தால் மட்டுமே போதும், மதமும், சாதியும் எனக்குத் தேவையில்லை. எனது மனைவிக்கும் இதே மனநிலைதான். நாட்டையும், நாங்கள் பிறந்த வீட்டையும் இழந்து நாடோடிகளாக இங்கு வாழ்ந்துவரும் எங்களுக்கு எங்கள் இன அடையாளமாவது மிச்சமாயிருக்கட்டும்..

Edited by ragunathan

1975 அல்லது 77 என நினைக்கிறேன். சுழிபுரம் பறாளாய் விநாயகர் முருகன் ஆலயங்களில் சந்ததியார் முன்னிலையில் பிரவேசம் நடந்தது. ஊரில் நிற்கும் நாட்களில் பெரும்பகுதி அப்போது சந்ததியாருடன் கழிந்ததால் நானும் அங்கே நின்றேன். கத்தியின்றி இரத்தமின்றி என்பதுபோல அது நிகழ்ந்தது.

ஆனால் என்ன..?!!!

மறுநாளே ஆலயங்களை பூட்டினாங்கள்.. கொடிக் கம்பம் வரையும் கம்பியால் எல்லைபோட்டு அதனுள் அந்தணரைத் தவிர எவருக்கும் அனுமதி இல்லை என்றார்கள்.. புதிதாக ஆலயங்களுக்கு தொண்டர் சபையை உருவாக்கி (இது ஏற்கெனவே நல்லூரில் இருந்தது) அந்த சபையில் உள்ளவர்கள்தான் சாமி தூக்கலாம் என்றார்கள்.. பிறகு புதிதாக கும்பாபிசேகத்துடன் ஆலயங்களை திறந்தாங்கள்.. இப்பவரையும் எல்லாருக்கும் திறந்துதான் இருக்கு..

ஆனாலும் என்ன.. என்னத்தை திறந்து.. என்னத்தை போயி..?! :D

(சாத்ஸ் முதலாவது பகுதிக்கும் கருத்து எழுதணும்.. எழுத பஞ்சியாயிருக்கு சார்.. பிறகு எழுதுறன்.)

நல்லதொரு இரைமீட்பு.. இந்த வாசத்தில் என்னாலும் பலதை இரைமீட்க முடியும் என நம்புகிறேன்.. தொடருங்கள்.. வாழ்த்துகள்!! :)

ஒன்றை இங்கு குறிப்பிடுகிறேன் (குறிப்பிடுவது சரியோ தெரியேல்ல) இப்போ நல்லூக் கோயிலில் வசந்த மண்டபம் வரை(உள்ளும்) போகக்கூடியதாக காலம் வந்து விட்டது... (திருவிழாக்காலங்களில் அவதானித்திருக்கிறேன்)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இங்கு கருத்து எழுதிய மற்றும் எனது இந்த தொடரிற்கு வரவேற்பளிக்கும் அனைவரிற்கும் நன்றிகள்.. கதையில் வரும் சித்தப்பாவிற்கு பிறகு என்ன நடந்தது என அறிய ஆவல்பட்டிருக்கிறீர்கள். அவர் சில வருடங்களிற்கு முன்னர் புற்றுநோயால் இறந்து விட்டார். அவர் மீண்டும் கோயிலுக்குள் போயிருந்தாரா இல்லையா என்பது தெரியாது ஆளால் கடைசிவரை சிறியுடன் கதைக்கவில்லை

  • கருத்துக்கள உறவுகள்

சாந்தி, சாதியைப்பற்றி எனது பெற்றோரும் என்னிடம் பேசியதில்லை, அல்லது எனக்கு அது விளங்கும் பக்குவம் வரும்போது அவர்கள் இறந்துவிட்டார்கள். எனது பிள்ளைகளுக்கும் நான் சாதியைப் பற்றிப் பேசப்போவதில்லை. அது என்னுடன் அழிந்துபோகட்டும். எனது இனமும் , மொழியும் கலாச்சாரமும் மட்டும்தான் எனக்கு முக்கியம். கலாச்சாரம் கெட்ட மேலைத்தேய நாகரீகத்தில் வளரும் எனது பிள்ளைக்ள் என்மொழிதெரியாத வேற்றுக்கலாச்சார உறவைத் தேடுவதை விட என்னுடைய இனத்தில் சேர்வது எனக்கு முக்கியம். தமிழனாக இருந்தால் மட்டுமே போதும், மதமும், சாதியும் எனக்குத் தேவையில்லை. எனது மனைவிக்கும் இதே மனநிலைதான். நாட்டையும், நாங்கள் பிறந்த வீட்டையும் இழந்து நாடோடிகளாக இங்கு வாழ்ந்துவரும் எங்களுக்கு எங்கள் இன அடையாளமாவது மிச்சமாயிருக்கட்டும்..

ரகுநாதன்,

உங்கள் நிலைப்பாடே எனதும். மொழி முதல் எல்லாவற்றிலும் வேறுபட்ட ஒரு இனத்தைச் சேர்ந்த ஒருவரை எனது பிள்ளை வாழ்வுத்துணையாகத் தேர்வதிலும் பார்க்க எனது மொழி தெரிந்த என்னினத்தைத் தேர்வு செய்தால் போதும் என்ற நிலைப்பாடே எனது இப்போதைய சரியான தேர்வாக இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

சாந்தியக்கா

இங்கு சாதிபற்றி எழுதும்போது எனக்கு கூசியது. அப்படியிருந்தும் நான் வேண்டுமென்றே தான் அதை எழுதினேன்.

ஏனென்றால் இயக்கம் கிழிக்கவில்லை கிழித்திருக்கணும் என்று இங்கு நெற்றிக்கண் திறப்பவர்கள் எழுதணும். ஏன் என அவர்கள் உணர வைக்கணும் என்றுதான். ஆனால் எவரும் எழுதவில்லை. நீங்கள் தலைவர் வரை சென்றது பற்றி எழுதியுள்ளீர்கள். தலைவர் என்ன மேலிருந்து குதித்தவரா?

ஆனால் ஒன்று மட்டும் உண்மை

இங்கும் கூட மேல் சாதி எனப்படுவோர் மட்டுமே தாம் விட்டுக்கொடுத்ததாக விட்டுக்கொடுக்க தயாராக இருப்பதாக அதற்காக போராடியதாக பல இடர்களைச்சந்தித்ததாக எழுதியுள்ளனர். சாத்திரி உட்பட.

நான் முன்பும் எழுதியிருந்தேன். தீவான் என்ற கோட்டை நான் எதிர் நீச்சல் போட்டுத்தான் நீந்தினேன். நீந்துகின்றேன் என.

அவரவர்தான் அவற்றை உடைத்துவரணும். சுதந்திரம் எப்போதுமே போராடிப்பெறுவதுதான். எவனும் கொண்டுவந்து கையில் தரமாட்டான். நீ குனியும் வரை குட்டல்கள் தொடரவே செய்யும்.

மற்றது உங்கட பிள்ளை என் இனத்துக்குள் கட்டினால் போதும் என்பது விருப்பத்தினால் வந்ததல்ல. பயத்தினால் வருவது.

இப்ப புலத்தில் இதுதான் எங்கும் பேச்சு. ஆபிரிக்கரை அராபியரை ஐரோப்பியரைக்கொண்டு வந்து விடுவார்கள். அதனால் நாம் தாழ்ந்துவிடுவோம் என்பதால் வருவதுதான் இது. எனது வோட்டும் இதுக்குத்தான். ஆனால் எமது வாரிசுகளை மீண்டும் மட்டமாக கணக்குப்போடுகின்றோம் என்பதைத மட்டும் என் மனம் அடிக்கடி ஞாபகப்படுத்துகிறது.

ரகுநாதன்,

உங்கள் நிலைப்பாடே எனதும். மொழி முதல் எல்லாவற்றிலும் வேறுபட்ட ஒரு இனத்தைச் சேர்ந்த ஒருவரை எனது பிள்ளை வாழ்வுத்துணையாகத் தேர்வதிலும் பார்க்க எனது மொழி தெரிந்த என்னினத்தைத் தேர்வு செய்தால் போதும் என்ற நிலைப்பாடே எனது இப்போதைய சரியான தேர்வாக இருக்கிறது.

எல்லோருடைய நிலைப்பாடும் அப்படியில்லை.

ஒரு பெண்மணியுடன் கதைக்கும் பொழுது. 'சாதி குறைந்தவனைக் கட்டிறதிலும் பார்க்க , என்ர மகள் ஒரு வெள்ளைக்காரனைக் கட்டினாலும் பரவாயில்லை' என்று கூறினார். இவர் சனிக்கிழமைகளில் நடக்கும் தமிழ் பள்ளிக்கூடமொன்றில் கற்பிக்கும் ஆசிரியை.

தெரிந்த நண்பன் தமிழ் பெண்ணொருத்தியை விரும்பிஅவளை திருமணம் செய்யப் போவதாக சொன்ன பொழுது, அவரது அண்ணன் 'டேய் உனக்கு போயும் போயும் ஒரு **யாத்திதான் கிடைச்சாளா. அதைவிட ஒரு ஐரிஸ்காரியை லவ் பண்ணிருக்கலாமேடா' என்று ஏசினார். அதற்கு எனது நண்பன் சொன்ன பதிலை இங்கு எழுத முடியாது. :lol:

இருவரும் தமிழ் மீது பற்றுள்ளவர்கள். எனக்கு சிலவேளை தமிழர்களை புரிந்துகொள்ள முடிவதில்லை. :blink:

  • கருத்துக்கள உறவுகள்

அவரவர்தான் அவற்றை உடைத்துவரணும். சுதந்திரம் எப்போதுமே போராடிப்பெறுவதுதான். எவனும் கொண்டுவந்து கையில் தரமாட்டான். நீ குனியும் வரை குட்டல்கள் தொடரவே செய்யும்.

மற்றது உங்கட பிள்ளை என் இனத்துக்குள் கட்டினால் போதும் என்பது விருப்பத்தினால் வந்ததல்ல. பயத்தினால் வருவது.

இப்ப புலத்தில் இதுதான் எங்கும் பேச்சு. ஆபிரிக்கரை அராபியரை ஐரோப்பியரைக்கொண்டு வந்து விடுவார்கள். அதனால் நாம் தாழ்ந்துவிடுவோம் என்பதால் வருவதுதான் இது. எனது வோட்டும் இதுக்குத்தான். ஆனால் எமது வாரிசுகளை மீண்டும் மட்டமாக கணக்குப்போடுகின்றோம் என்பதைத மட்டும் என் மனம் அடிக்கடி ஞாபகப்படுத்துகிறது.

விசுகு நீங்கள் சொல்வது போல எனக்குள் பயமில்லை. ஏனெனில் பிள்ளை இதுதான் தனது தேர்வென்றால் நான் தலைகீழாக நின்றாலும் ஒன்றும் பண்ண முடியாது. அவரபவர் உடைச்சு வரவும் நீங்களும் உங்கள் தலைப்பாகை கவுரவமும் விட வேணுமே ? போராடித்தான் பெற வேணுமென்ற கனவோடு போன ஆயிரமாயிம் பேரின் நிலமையும் அவர்கள் கதைகளும் எங்கள் முன் விட்டுச் சென்றுள்ளது எதுவென்று சற்று நிதானத்தோடு பார்த்தீர்களானால் தெரியும் உண்மை.

தலைவர் பற்றி :-

அவர் மேலிருந்து குதித்ததாக எங்கும் சொல்லவில்லை. நாம் அது நீங்களும் நானும் அவரை மேலிருந்து குதிக்காமல் வானத்தில் நடந்து கொண்டிருப்பவர் என்று சொல்லியே அந்த மனிதனை எங்கும் முன்னிறுத்தி அந்த மனிதனும் என்னையும் உங்களையும் போன்ற மனிதர் என்பதனை யாவரும் மறந்து நெடுங்காலம். ஆனாலும் எங்கும் அந்த மனிதரை ஞாபகப்படுத்த வேண்டியதற்கான காரணம் தமிழரின் எல்லா மாற்றங்கள் மறுதலிப்புகள் யாவற்றிலும் தன்னால் இயன்ற உச்ச பங்களிப்பைச் செய்து அதற்காக தன்னை இழந்தவர்.

என் வரையில் அந்த மனிதன் கடவுள்தான். மேலிருந்தோ கீழிருந்தோ குதிக்காமல் எங்கள் இனத்துக்குள்ளிருந்து உதித்த சாமி. தமிழனின் அடிமைப்புத்தியையும் தேவையற்ற சம்பிரதாய சாதிய ஒடுக்குமுறைகளையும் உடைத்து சமமான ஒரு சமூகத்தை உருவாக்க கனவு கண்ட கடவுள். அந்தக் கடவுள் கூட இந்தச்சாதி விடயத்தில் வெல்ல முடியாது தோற்றுப் போனார் என்ற உண்மையை இங்கு மறைக்க முடியவில்லை.

இப்ப புலத்தில் இதுதான் எங்கும் பேச்சு. ஆபிரிக்கரை அராபியரை ஐரோப்பியரைக்கொண்டு வந்து விடுவார்கள். அதனால் நாம் தாழ்ந்துவிடுவோம் என்பதால் வருவதுதான் இது. எனது வோட்டும் இதுக்குத்தான். ஆனால் எமது வாரிசுகளை மீண்டும் மட்டமாக கணக்குப்போடுகின்றோம் என்பதைத மட்டும் என் மனம் அடிக்கடி ஞாபகப்படுத்துகிறது.

நாங்கள் இன்னும் வாழ் நிறையக் கத்துகிற நமது அடையாளம் தொலையாமிலிருக்க தமிழனைப் பிள்ளை வாழ்க்கைத் துணையாகத் தெரிவதால் இன்னொரு தலைமுறைக்கு இந்த தமிழினத்தை ஞாபகம் வைத்திருக்க முயல்கிற சின்னக் கனவுதான் இது.

எல்லோருடைய நிலைப்பாடும் அப்படியில்லை.

ஒரு பெண்மணியுடன் கதைக்கும் பொழுது. 'சாதி குறைந்தவனைக் கட்டிறதிலும் பார்க்க , என்ர மகள் ஒரு வெள்ளைக்காரனைக் கட்டினாலும் பரவாயில்லை' என்று கூறினார். இவர் சனிக்கிழமைகளில் நடக்கும் தமிழ் பள்ளிக்கூடமொன்றில் கற்பிக்கும் ஆசிரியை.

தெரிந்த நண்பன் தமிழ் பெண்ணொருத்தியை விரும்பிஅவளை திருமணம் செய்யப் போவதாக சொன்ன பொழுது, அவரது அண்ணன் 'டேய் உனக்கு போயும் போயும் ஒரு **யாத்திதான் கிடைச்சாளா. அதைவிட ஒரு ஐரிஸ்காரியை லவ் பண்ணிருக்கலாமேடா' என்று ஏசினார். அதற்கு எனது நண்பன் சொன்ன பதிலை இங்கு எழுத முடியாது. :lol:

இருவரும் தமிழ் மீது பற்றுள்ளவர்கள். எனக்கு சிலவேளை தமிழர்களை புரிந்துகொள்ள முடிவதில்லை. :blink:

மாற்றங்களை அதிகம் விரும்புவதாக உதட்டளவில் கூறிக்கொள்கிற கனபேரின் பிரச்சனை இதுதான். இத்தகை அனுபவத்தை நானும் பல இடங்களில் சந்தித்திருக்கிறென். இதுபற்றி கதைத்து பலரை எதிரிகளாக்கியுமிருக்கிறேன்.

இதுதான் சிலவேளை அதீத பற்றின் அடையாளமோ தெரியாது தப்பிலி. :mellow::blink:

ஒன்றை இங்கு குறிப்பிடுகிறேன் (குறிப்பிடுவது சரியோ தெரியேல்ல) இப்போ நல்லூக் கோயிலில் வசந்த மண்டபம் வரை(உள்ளும்) போகக்கூடியதாக காலம் வந்து விட்டது... (திருவிழாக்காலங்களில் அவதானித்திருக்கிறேன்)

தொண்டர் சபைக்கு வழிகாட்டியாக நல்லூரைக் குறிப்பிட்டேன். காரணம் தொண்டர் சபையில் உள்ளவர்களால்தான் சுவாமியை தூக்க முடியும் என்பதன் பின்னணியில் பல அர்த்தங்கள் உள்ளதல்லவா? பிரவேசங்கள் நிகழ்ந்தாலும் கூடவே தொண்டர்சபைகளின் உருவாக்கமும் நிகழ்ந்ததையும் கவனிக்கத்தானே வேண்டும்.

நல்லூரில் எந்தவிதமான கட்டுப்பாடும் இருந்ததில்லை. நாங்கள் படிக்கும் காலத்தில் நண்பர்களாகச் சேர்ந்து சுவாமி தூக்கியிருக்கிறோம். என்ன, கொடியேற்றத்தில் இருந்து நீங்கள் நிற்க வேண்டும். இடையில் வருபவர்களுக்கு சந்த்தர்ப்பம் கொடுக்கப்படுவது குறைவு.

சத்திரியர் உங்கள் பதிவுகள் பல முக்கியமான விடயங்களை சொல்கிறன . எனது கருத்தை சொல்ல மனம் உந்தினாலும், அவற்றை சரியான முறையில் தொகுத்து சொல்ல இப்போது பொறுமை இல்லாதது இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

ஆலயத்தினுள் அனுமதிக்க மாட்டோம் என்று சொல்லுமளவுக்கு இல்லா விட்டாலும், இந்தச் சாதி இழவு கத்தோலிக்க ஆலயங்களிலும் தாயகத்தில் இருந்தது (இப்பவும் இருக்கும் என நினைக்கிறேன்). யாழ் நகரின் மத்தியில் இருக்கும் மரியாள் ஆலயத்தில் வருடாந்த உற்சவத்தின் போது மாதா சிலையை சுற்றுத் தெருக்களில் ஊர்வலமாகக் கொண்டு வருவார்கள். இந்த ஊர்வலம் ஒரு குறிப்பிட்ட சாதியினர் வாழும் தெருவினால் செல்ல விடாமல் தடுக்க ஒவ்வொரு வருடமும் ஒரு குழுவினர் ஆலய நிர்வாக சபையினுள் இருந்தே முயல்வார்கள். கடைசியில் ஒவ்வொரு வருடமும் மாறி மாறி வெவ்வேறு பாதைகளினூடாக ஊர்வலம் செல்லும் படி ஆலய நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது. இப்ப எப்படியோ தெரியாது. இந்த சாதியை எப்படி இல்லாதொழிக்கிறது என்று எனக்கு எந்த வழியும் தெளிவாகத் தெரிய இல்ல. படிப்பும் கௌரவமான தொழில் நிலைகளும் கூடும் போது சாதி ஒழியும் என்று எங்கள் அப்பா சொல்லுவார். தமிழர்களைப் பொறுத்தவரை படிப்பும் ஒரு வரட்டுக் கௌவரவத்தின் அடையாளமே என்பதைப் பல தடவைகளில் கண்டிருக்கிறேன். சாதி என்ற "தோள்பட்டை நட்சத்திரம்" போலவே படிப்பையும் இன்னொரு நடசத்திரமாக அணிந்து கொண்டு வெட்டிப் பொழுது போக்கவே தாயகத்தில் இருக்கும் அனேகமான படித்த தமிழர்கள் முயல்வது போல எனக்குத் தெரிகிறது.புலம் பெயர் இளம் சமுதாயம் மட்டுமே இதை ஒழிக்க ஒரு நம்பிக்கையான வழி என நினைக்கிறேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீக்கப்பட்டுள்ளது

Edited by sathiri

அவனும் கட்டிலில் நித்திரையாகிபோயிருந்தான். அவனது கும்பகர்ண நித்திரை குழம்பிப்போய் திடுக்கிட்டு விழித்தான் ஒரே கும்மிருட்டு அவனை யாரோ இறுக்கி பிடித்திருந்தது போல இருந்தது சூடகவேறு இருந்தது மூச்சுவாங்கும் சத்தம் மட்டுமே கேட்டது .கைகளால் தடவிப்பார்த்தான் உடையற்றதொரு உடல் அவனோடு ஒட்டியிருந்தது அன்ரி என்று கூப்பிட்டு பார்தவன் திடுக்கிட்டவனாய் துள்ளியெழுந்து கையில் கிடைத்த ஒரு துணியை தன்மீது சுற்றிக்கொண்டு அவர்கள் வீட்டு கேற்றின் மீது ஏறி பாய்ந்து தன் வீட்டிற்கு ஓடிவிட்டிருந்தான்..மறுநாள் கையில் ஒரு இனிப்பு பொட்டலத்துடன் அன்ரி அவனைத்தேடி வந்தவர். டேய் நேற்று இரவு சரியான புளுக்கம் அதுதான் நான் அப்பிடி படுத்திட்டன் . அவ்வளவுதான் ஆனால் நீதான் என்ரை சோட்டியை (இரவு ஆடை) தூக்கிகொண்டு ஓடியந்திட்டாய். அதை கொண்டு வா என்றார். அவன் இடுப்பில் கட்டிக்கொண்டு வந்த அவரது சோட்டியை கொடுத்துவிட்டு அவர் கொடுத்த இனிப்பை வாங்கினான். அதை சாப்பிட மனம்வரவில்லைஆனால் அவன் பின்னர் அவரை சந்திப்பதையே தவிர்த்து வந்தான். நாட்டு பிரச்சனைகள் அதிகமாகியபொழுது அவர்கள் குடும்பமாக கனடாவிற்கு போய்விட்டிருந்தார்கள்அவனிற்கு முன்னைய சம்பவத்தில் பத்தன் மீது வந்ததுபோல் கோபமே பழிவாங்கும் எண்ணமோ வரவில்லை. பெரிதும் அன்புபாராட்டியதொருவர் இப்படி நடந்துவிட்டாரே என்கிற ஆதங்கம் மட்டும்தான்

ஐய்யோ கடவுளே!!!!!!!!!! எங்கடை சாத்துவை எப்பிடியெல்லாம் சாத்தியிருக்கினம் :o:o . சோபனா அன்ரி இப்பவும் கதைக்கிறவாவோ :lol::D:icon_idea: 1 .

  • delete.png

  • கருத்துக்கள உறவுகள்

கமலின் மன்மதலீலையோ?

ஒரு முக்கியமான "சாராம்சம்" நிறைந்த கதையினை சுவாரசியமாக... அதே சமயத்தில் விரசமில்லாமல் எழுதிய சாத்ஸ் அண்ணைக்கு என் பாராட்டுக்களும் நன்றிகளும்!

பெரும்பாலாக, பொடிப்பயலுகள் எல்லாருக்கும் பதின்ம வயதுகளில் இந்த சமாச்சாரத்தில் மறக்கமுடியாத அனுபவங்கள் இருக்கும்.

அதை பலபேர் வெளியே சொல்லாமல் மறைத்துவிடுவார்கள். அதுகூட ஒருவகையில் நல்லதுதான். :rolleyes:

இப்பிடிச் சொல்லுற எனக்கும் ஏதாவது ஒன்று இருக்குந்தானே...! :lol:

ஆனால், நான் உங்களை மாதிரி பதறியடிச்சு ஓடிப்போகேல அண்ணை!

சத்தியமா எனக்கு அப்ப எதுவுமே தெரியாது..... :unsure: ஆனா "நல்லா இருக்குதே" :wub: என்று நினைச்சுக்கொண்டு, அப்பிடியே படுத்திட்டன்...! :lol:

அதுசரி...... நீங்கள் ஓடினது எண்டு சொன்னது..... சும்மாதானே ?!? :lol:

நான் நம்ப மாட்டன்!!! :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரி அண்ணை.. பல இடங்களில் அடிபட்டுத்தான் வந்திருக்கிறீங்கள்..! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு வசதியான அன்ரி, ஒன்றிரண்டு மின்விசிறி போட்டிருக்கலாம்!

நீங்க, இருட்டில அலறியடிச்சுக் கொண்டு ஓடப், பாவம் அன்ரி நல்லாப் பயந்து போயிருப்பா போல!

நீங்களும் நெடுகத் தனிய படுத்துப் பழகினதால நல்லாப் பயந்திருப்பியள்! :D >>>>

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.