Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அறிவித்தல்

Featured Replies

களவிதிகளை மீறி பிரச்சனைகளை உருவாக்கிய உறவுக்கும், அதனை ஆதரித்து தலைப்புகளை ஆரம்பித்த சக உறவுகளுக்கும், பொறுப்பாளர் என்ற மரியாதை கொஞ்சம் கூட இல்லாமல் மோகன் அண்ணாவின் மனம் நோகும் படி நடந்து கொண்ட உறவுக்கும் நன்றிகள்... <_< <_< <_<

பகலவனின் கருத்தை வழிமொழிகிறேன்..! 2014 வரையிலாவது இக்களத்தை இழுத்து நடத்தினீர்களென்றால் நல்லது..! அதற்கான உதவிகளை நான் உட்பட பலர் செய்யக் காத்திருக்கிறார்கள்..! குழப்பம் விளைவிப்பவர்களை நீக்கிவிடுங்கள்..!

இசையின் கருத்தை நானும் வழிமொழிகிறேன் மோகன் அண்ணா...

  • Replies 79
  • Views 17.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

எனக்குதான் ஏழரை சனி எண்டால் யாழுக்குமா ?எனக்கு தான் அடிமேல் அடி போல கிடக்கு.எப்பிடிஎன்டாலும் ஏதாவது மனத்தாக்கம் வரும் போது யாழ்தான் ஒரு வடிகாலாக இருந்தது.அந்தவகையில் யாழுக்கும் மோகன் அண்ணாக்கும் மற்றும் கள உறவுகள் அனைவருக்கும் நன்றிகள்

மோகன் அண்ணா 13 வருடம் பூர்த்தி ஆகி 14 ஆவது வருடம் ஆரம்பிக்கும் மார்ச் 30 அன்று தளத்தை மாற்றி அமைத்து புதிய வடிவில் கொண்டு வர முயற்சிகள் மேற்கொண்டு அதற்காக நேரத்தினையும் பணத்தினையும் செலவழித்துக் கொண்டு இருந்தார். அவருக்கு இணையவன் தன்னாலான அனைத்து உதவிகளையும் தனக்கு கிடைக்கும் சொற்ப நேரங்களில் செய்து கொண்டு இருந்தார். இருவருக்கும் சொந்த வாழ்க்கை, தொழில் என்பன இருந்தும் அவற்றுக்கான நேரம் போக கிடைக்கும் சில மணித்துளிகளில் தான் யாழை மாற்றி அமைத்து வேறு வடிவில் கொண்டு வர முயன்று கொண்டு இருந்தனர்.

இவ்வாறு யாழ் அடுத்த கட்டத்தினை நோக்கி அடி எடுக்கும் போதுதான், யாழை நிர்மூலமாக்கியே தீருவோம் என்று புறப்பட்டு சாத்திரியின் தடையை தமக்கு சாதகமாக்கி எல்லா வழிகளிலும் நிர்வாகத்தையும் மோகன் அண்ணாவையும் அவமானப் படுத்தி யாழை மூடும் நிலைக்கு கொண்டு வந்து விட்டனர். இதில் ஈடுபட்டவர்களின் பெயர்களை முதல் வரிகளில் எழுதி விட்டு மோகன் அண்ணா அவர்களின் பெயரை வெளிவிடுவதை விரும்பமாட்டார் என்ற ஒரே ஒரு காரணத்திற்காக அழித்து விட்டு தொடர்கின்றேன்.

எம் இனத்தின் சாபம் இங்கும் தொடர்கின்றது. எதிரிகளால் நிறுத்தப்படாத யாழ் எம் இனத்தின் கோடாரிக் காம்புகளால் நிறுத்தப்படுகின்றது.

மோகன் அண்ணாவின் இந்த முடிவு வரவேற்கத்தக்கது. ஒரு இழி இனமான எமக்கு மோகன் அண்ணா போன்றோரும் தனக்கு கிடைக்கும் சொற்ப நேரத்திலும் யாழை மெருகூட்ட எந்த வித பிரதிபலனும் இல்லாமல் மினக்கெட்ட இணையவன் போன்றோரும் தேவையில்லை. இவர்கள் இருவரும் சிங்கள இனத்தில் பிறக்காத தவறைத் தவிர வேறு எதுவும் செய்யவில்லை. 'அம்மா' என்று முதல் மொழி சொல்வதற்கு பதிலாக 'அம்மே' என்று சொல்லி இருந்தால் இன்று இவர்களை சிங்கள இனம் தலையில் தூக்கி வைத்து கொண்டாடி இருக்கும்.

இதுக்கு மேலும் எழுத முற்படும் போது தூசனம் தான் வருகின்றது....

நன்றி

Edited by நிழலி

காலையில் திண்ணையில் எழுத முயன்று முடியாமல் ஏமாந்து போய்விட்டேன்.

30ம் திகதியை வெகு விமர்சையாக கொண்டாடி மோகன் அண்ணாவை மகிழ்வித்து விடுங்கள். யாழ் 100 ஆண்டு காலம் வாழட்டும். இந்த திரியை அதற்கான வழிகளை ஆராயும் திரியாக மாற்றிவிடுங்கள் .

யாழ் போனால் நம் எல்லோராலும் தான் போனதாக வைத்து கொள்ளுங்கள். நாங்கள் எல்லோரும் கைகொடுத்தால் நிச்சயமாக மோகன் அண்ணாவுக்கு சாத்திரியாரின் விடையத்தை கையாள முடியும் என்று நம்புங்கள். எனவே யாழை கையில் எடுக்க முயலாமல் கருத்துகளை மட்டும் எழுதி பிரச்சனைகளைத் தீர்க்க முயலுங்கள்.

நாம் எல்லோரும் பிழைகள் விட்டிருக்கிறோம். நமது வீக்கத்திகேற்ப எதையாவது சாதித்துமிருக்கிறோம். ஆனால் யாழை எங்கள் எல்லோரையும் இணைத்து மோகன் அண்ணா இதுவரையும் நடத்தி வந்தது சாதனையே.

பகலவனின் கருத்துக்களை ஆமோதித்து, இன்று என்றுமில்லாத ஒரு கால கட்டத்தில் எமது தாயக மக்கள் போராட்டம் நுழைந்துள்ள நிலையில் யாழ்கள தேவைகள் தொடரவேண்டும்.

இந்தக்களம் பல திறமையுள்ள உறுப்பினர்களை, எழுத்தாளர்களை உருவாகியுள்ளது. இருந்தும் தேசியம், தலைவர்,புலிகள் என்ற தலைப்புக்களே நேயர்களை அதிகம் உள்வாங்கும் ( எத்தனை பேர் பார்த்தார்கள் என்ற புள்ளி விபரம்) விடயமாக உள்ளது.எனவே அந்த நோக்கமே எமக்கு முதன்மையானது. அதற்கு தொடர்ந்தும் நாம் உதவி, எமது தாயக மக்கள் அவர்கள் விடுதலை,நல்வாழ்வு என்ற இலட்சியங்களுக்கு தோள்கொடுப்போம்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக்களம் பல திறமையுள்ள உறுப்பினர்களை, எழுத்தாளர்களை உருவாகியுள்ளது. இருந்தும் தேசியம், தலைவர்,புலிகள் என்ற தலைப்புக்களே நேயர்களை அதிகம் உள்வாங்கும் ( எத்தனை பேர் பார்த்தார்கள் என்ற புள்ளி விபரம்) விடயமாக உள்ளது.எனவே அந்த நோக்கமே எமக்கு முதன்மையானது. அதற்கு தொடர்ந்தும் நாம் உதவி, எமது தாயக மக்கள் அவர்கள் விடுதலை,நல்வாழ்வு என்ற இலட்சியங்களுக்கு தோள்கொடுப்போம்.

முற்றுமுழுதாக உங்களின் கருத்தை ஏற்றுக்கொள்கின்றேன் அகூதா

மோகன் அண்ணா, தயவு செய்து யாழை மூடாதீர்கள். நான் யாழில் எழுதுவது குறைவுதான். ஆனால், யாழின் முக்கியத்துவத்தை அறிந்து வைத்திருக்கிறேன். உங்கள் களவிதிகளைக் கடுமையாகக் கடைப்பிடியுங்கள் அண்ணா. களவிதிகளை மதிக்காதவர்களைக் களைந்து விட்டு மேற்கொண்டு யாழை நடத்துங்கள். களவிதிகளை மதிப்பவர்களை மட்டும் கொண்டு யாழை நடத்துங்கள்.

இந்தப் புல்லுருவிகளுக்காகவெல்லாம் யாழை மூடாதீர்கள். வேறு காரணத்திற்காக மூடுவதாக இருந்தாலும் தயவு செய்து இந்த சந்தர்ப்பத்தில் மூடாதீர்கள். அப்படி மூடுவீர்களானால், அந்தப் புல்லுருவிகளுக்குப் பயந்து மூடுவதாக அவர்கள் வெற்றிக் களிப்பில் இருப்பார்கள். உங்களுக்கு அப்படியான ஒரு பெயர் வரக்கூடாது அண்ணா.

  • கருத்துக்கள உறவுகள்

மோகண்ணா இது அதிர்ச்சியான செய்தி, ஒரு பருவ வயதை எட்டும் யாழை இழுத்து மூடுவது, எமக்கு மட்டுமல்ல, யாழின் வாசகர்களுக்கும்தான் அதிர்ச்சி,

ஈழ மக்களுக்கான எஞ்சிருக்கும் ஒரு உறவு பாலத்தை தயவு செய்து மூடிவீடாதீர்கள்

மோகன் அண்ணா இணையத்தை மூடுவது பற்றி மீள் பரிசிலனை செய்யமுடியாதா ? என்னைப்போன்றோருக்கு பெரிய இழப்பு மூடாதேங்கோ மோகன் அண்ணா அன்பாக கேட்டு கொள்கின்றேன்.

இந்தக்களம் பல திறமையுள்ள உறுப்பினர்களை, எழுத்தாளர்களை உருவாகியுள்ளது. இருந்தும் தேசியம், தலைவர்,புலிகள் என்ற தலைப்புக்களே நேயர்களை அதிகம் உள்வாங்கும் ( எத்தனை பேர் பார்த்தார்கள் என்ற புள்ளி விபரம்) விடயமாக உள்ளது.எனவே அந்த நோக்கமே எமக்கு முதன்மையானது. அதற்கு தொடர்ந்தும் நாம் உதவி, எமது தாயக மக்கள் அவர்கள் விடுதலை,நல்வாழ்வு என்ற இலட்சியங்களுக்கு தோள்கொடுப்போம்.

அகூதா அவர்களின் கருத்தே என்னுடையதும்.

நேற்றுத்தான் யாழில் இணைந்தேன். ஆனாலும் பலகாலமாய் யாழின் வாசகன்.

மோகன் அவர்கள் தனது முடிவை மாற்றுவார் என நம்புகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

கோடாரிக் காம்புகளுக்காக யாழை மூடுவது வெட்கக்கேடானது. இவர்களை கட்டாயம் யாழ் கள உறுப்பினர்கள் எல்லாருக்கும் வெளிப்படுத்த வேண்டும்.யாழ் கழத்தில் வாதிட முடியாமல் மோகன் அண்ணாவுக்கு மிரட்டல் விடுபவர்கள் தமிழராக இருக்க லாயக்கற்றவர்கள்.

யாழ்க்களத்தை இவ்வளவு காலமும் கொண்டு நடாத்திய மோகன் அண்ணாவுக்கும் ஏனையவர்களுக்கும் நன்றி.

மோகன் யாழை மூடப்போகின்றேன் என்பதும், எல்லோரும் வந்து மூடாதீர்கள் என்று கெஞ்சுவதும் வழமையாகிவிட்டது. மூடுவதென்றால் மூடுங்கள், திறந்து வைத்திருப்பதென்றால் திறந்துவைத்திருங்கள். எப்படியான தெரிவிற்கும் எனது ஆதரவு உண்டு. சென்றதடவைபோல் உணர்ச்சிவசப்பட்டு யாராவது உங்கள் இரகசியங்களை இங்கே அவிழ்த்துவிடுவீர்கள் என்பதை எதிர்பார்த்து காத்திருக்கின்றேன். புத்தன், கவலை வேண்டாம் மார்ச் 30 இற்கு இன்னும் ஆறு நாட்கள் உள்ளன. 200 மேலதிக கருத்துக்களை எழுதி 50 சதங்கள் அடிப்பது சாத்தியமே.

  • கருத்துக்கள உறவுகள்

இதைவிட எத்தனையோ சோதனைகள் வந்த போதெல்லாம் கலங்காக மோகன்

இப்போது இப்படியான முடிவை எடுத்திருப்பது வேதனையழிக்கிறது.

எதிரிகளுக்கு சந்தர்ப்பம் கொடுக்காதீர்கள்.

அடுத்த ஆண்டிற்கான ஆயதங்களை தொடங்கிவிட்டு பின்னர் மூடதீர்மனித்திருப்பதேன்பது மனதை கொஞ்சம் நெருடுகின்றது .

கருத்துகளத்தில் எழுதுவதுடன் எனது அலுவல் முடிந்துவிடும் ,உள்ளே அப்படி என்ன பாரதூரமாக நடந்ததோ எனக்கு தெரியாது .

தனிநபர் தாக்குதல் என்று ஒன்றை (அது யார் மீதாகவும் இருக்கலாம் ) அனுமதித்தால் அது என்றோ ஒரு நாள் பிரச்சனைக்கு அடிகோலிவிடும் என்று மட்டும் உணர்ந்திருந்தேன் ,

முடிவை மீள்பரிசீலனை செய்து, விதிகளை சற்று இறுக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்

மோகன் யாழை மூடப்போகின்றேன் என்பதும், எல்லோரும் வந்து மூடாதீர்கள் என்று கெஞ்சுவதும் வழமையாகிவிட்டது. மூடுவதென்றால் மூடுங்கள், திறந்து வைத்திருப்பதென்றால் திறந்துவைத்திருங்கள். எப்படியான தெரிவிற்கும் எனது ஆதரவு உண்டு. சென்றதடவைபோல் உணர்ச்சிவசப்பட்டு யாராவது உங்கள் இரகசியங்களை இங்கே அவிழ்த்துவிடுவீர்கள் என்பதை எதிர்பார்த்து காத்திருக்கின்றேன். புத்தன், கவலை வேண்டாம் மார்ச் 30 இற்கு இன்னும் ஆறு நாட்கள் உள்ளன. 200 மேலதிக கருத்துக்களை எழுதி 50 சதங்கள் அடிப்பது சாத்தியமே.

நீங்களும் , நெடுக்ஸும் யாழைவிட்டு போனால், யாழைதொடர்ந்து இயங்க வைக்க முடியும்.

  • கருத்துக்கள உறவுகள்

கருத்துக்களத்திற்குரிய விதிகளை நடைமுறைப்படுத்த முடியாத நிலை ஏற்படுதல்

கருத்துக்களம் சின்னாபின்னமாகி அதற்குரிய தனித்துவத்தை இழந்துவிடுதல்.

பத்தோடு பதினொன்றாக சந்தர்ப்பவாதத்திற்கு ஏற்ப யாழ் மாறுதல்

போன்ற நிலைமைகள் ஏற்படின் இதுவரை காலமும் யாழ் நடைபோட்ட பாதை களங்கமுறும்.

சிலரின் நிதானம் இழந்த செயல்கள் ஒரு கருத்துக்களத்தை முடக்கும் சக்தி வாய்ந்ததா?

இருந்தகாலம் வரையும் நிமிர்ந்து நின்றோம் என்ற பெருமையோடு நிறுத்தப்படுவதே சிறப்பிற்குரியது.

ஒரு பொதுத்தளத்தில் ஒரு சின்ன விடயத்தை செய்ய முற்பட்டாலே எவ்வளவு சவால்களையும் சங்கடங்களையும் தாண்ட வேண்டி இருக்கிறது. மோகனண்ணா நீங்கள் உங்கள் அமைதியைத் தொலைத்து இந்த சமூக வலைத்தளத்தால் மன உளைச்சல்களையே அதிகம் பெற்றிருப்பீர்கள் என்பது நாம் அறிந்த ஒன்றே....

சில கருத்துக்களை வாசிக்கும் எமக்கே நிம்மதி தொலையும்போது அதனை அகற்றும் அல்லது மாற்றம் செய்யச் சொல்லி பதிவிட்டவரை அணுகும் மட்டுறுத்தினர்களுக்கு எவ்வகையான மனோநிலை ஏற்படும் என்பதை சிந்தித்துப்பார்க்கவே கடினமாக இருக்கிறது.

நிர்வாகத்தினரை கருத்தாளர்கள் உதாசீனப்படுத்துவதும், விதிமுறைகளை உதாசீனம் செய்வதும் கருத்துக்களத்திற்கு வெளியே நிர்வாகத்தினர் கொடுக்கும் எச்சரிக்கை மடலை பலருக்கு அனுப்பி உண்மையான நிலையை அறியாத அவர்களை, நிர்வாகத்திற்கு எதிராக எழுத உந்துவதும் இந்தக்கருத்துக்களத்தில் உலவும் சில உறுப்பினர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் ஒரு விடயமாக இருக்கிறது. சமீப காலமாக இது ஒருவகைச் சுயவிளம்பரமாகவும் பயணிப்பதை அவதானிக்கமுடிகிறது. அந்தச் சுயவிளம்பிகளை இங்கு வெளிச்சம் போட்டுக்காட்டத்தேவையில்லை அநேகமாக பலருக்குத் தெரியும்.

இத்தகையோரின் எதிர்பார்ப்பு என்ன என்பதை நாம் அடையாளம் கண்டு கொண்டால் போதும்.

இந்தக்கருத்துக்களம் நிறுத்தப்பட்டால்..... அண்மைக்காலத்தில் ஒருவருக்குக் கிடைக்கப்பெற்ற தடையின் நிமித்தம் இந்தக்கருத்துக்களம் சறுக்குண்டு அதன் நிமித்தம் நிறுத்தப்பட்டதாய் நிறையச் செய்திகள் தந்தியடிக்கும். புதிய உறுப்பினராக இருந்தாலும் பழைய உறுப்பினராக இருந்தாலும் விதிமுறைகளுக்குக் கட்டுப்படவேண்டும். இன்று இணைய உலகில் யாழ் கருத்துக்களம் ஒரு நேர் கோட்டில் வாளின் கூர் முனையில் நிற்பதை உணர முடிகிறது. ஒரு பெரும் படைப்பாளி என்பதற்காக விதிமுறைகளைத் தளர்த்தினால் தொடர்ந்தும் மற்றவர்களுக்காகவும் மீண்டும் மீண்டும் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் யாழ் கருத்துக்களம் அந்நிலைக்குத் தள்ளப்படும்.

யாழ் இணையம் இயங்கவேண்டும்

அதற்கு எவ்வகையில் என்னால் உதவ முடியும் என்பதை விளங்கிக் கொள்ள முடியாமல் தவிக்கிறேன்

யாழ் இணையத்தை மூடாதீர்கள் என்று மோகனண்ணாவிடம் கேட்க முடியாது.....

யாழ் கருத்துக்களம் தொடர்ந்து இயங்கினால் மகிழ்வடைவேன் .. நிறுத்தப்பட்டால் தாங்கிக் கொள்வேன்.

செயல்படும் ஈழ இணையங்களில் மிகச் சிறப்பாக, சுயாதீனமாக செயற்பட்ட தளம். மோகனிற்கும் நிர்வாகத்திற்கும் நன்றி.

திண்ணையில் பிரச்சனைகள் ஆரம்பித்து, கருத்துக்களத்தில் பரவுவதை பகிடியாக 'யாழ் ஆளுமன்றத்தில்' பகிடியாகச் சொல்லி இருந்தேன்.

தங்கள் படைப்புக்களை பிரபலப்படுத்த பலர் இந்தக் களத்தை பயன்படுத்துகின்றனர் என்பது எனது தனிப்பட்ட கருத்து.

நிழலி

யார் அந்தக் கோடாரிக்காம்புகள்.

கோடரிக்காம்புகளின் பெயர்களை, யாராகினும் துணிந்து கூறலாமே?

இணையவெளியில், தமிழில், யாழ் களத்தில் மட்டுமே எழுதியுள்ளேன் என்ற வகையில் மனமார்ந்த நன்றிகளை மோகனிற்குத் தெரிவித்துக் கொள்வதோடு யாழின் முடிவு சார்ந்து கவலையினiயும் பதிவுசெய்து கொள்கிறேன்.

விவாதங்கள் வழியாக எவரையேனும் சங்கடப்படுததியிருந்தாலோ காயப்படுத்தியிருந்தாலோ மன்னித்துக்கொள்ளுங்கள் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்.

அனைத்து உறவுகளிற்கும் நன்றிகள்.

நீங்களும் , நெடுக்ஸும் யாழைவிட்டு போனால், யாழைதொடர்ந்து இயங்க வைக்க முடியும்.

இது உங்கள் கண்டுபிடிப்பு? அதை மோகன் சொல்லட்டும் நான் விலகிக்கொள்கின்றேன். அடுத்தவனை நோக்கி விரலைக்காட்டாமல் யாழ் நிலைப்பதற்கு நீங்கள் எதை உருப்படியாய் செய்தீர்கள் என்று சிந்தித்து பாருங்கள்.

நன்றி!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வணக்கம் மோகன்!

யாழை தொடர்ந்து நடத்துவதும் நடத்தாமல் உங்கள் தனிப்பட்டபிரச்சனை.ஓடுற வண்டியில் என்னைப்போன்றவர்கள் சேர்ந்து ஓடினமே தவிர....அதன் அனைத்து வலிகளும் சுமைகளும் தெரிந்திருக்கவுமில்லை.நீங்களும் அப்படித்தான் எங்களை நடத்தினீர்கள்!பல இடங்களில் கேள்விகளை கேட்டுவிட்டு அல்லது ஒரு விடயத்தை ஆரம்பித்துவிட்டு அதன் பதில்களுக்கு எந்தவொரு கருத்துக்களோ பதில்களோ நீங்கள் கொடுக்கவில்லை.சில இடங்களில் உங்கள் பதில்களுக்கு மூக்குச்சாத்திரம் பார்கவேண்டிய நிலையும் இருந்தது.

களம்,குடும்பம் என்றால் பலதும்பத்தும் இருக்கத்தான் செய்யும்.எடுத்ததிற்க்கெல்லாம் நல்லதே நடக்குமெனநினைத்தால் அது தவறு.எல்லோரும் நல்லதையே செய்வார்கள் எனநினைத்தால் அதுவும் தவறு.கூடப்பிறந்த சகோதரங்களுகிடையே ஆயிரம் வெட்டுப்பகை குத்துப்பகைகளை நேரடியாகவே காணக்கூடியதாக இருக்கின்றது.பெற்றதாய் தகப்பனையையே கவனிக்காத பிள்ளைகளையும் காணக்கூடியதாக இருக்கின்றது இந்த உலகம்.

உதாரணத்திற்கு எமது விடுதலைப்போராட்டத்தினை அன்று தொடக்கம் கவனித்துப்பாருங்கள் எத்தனை ஏற்றத்தாழ்வுகள் அழிவுகள்.

யாராக இருந்தாலும் யாழில் இடையூறு செய்பவர்களை (நானும் அடக்கம்)வெளியேற்றி விட்டு சிறந்தபடியாக யாழை முன்னெடுத்து செல்வதுதான் அழகு.இல்லை யாழ்களம் மூடப்படும் எடுத்தமுடிவு எடுத்ததுதான் என்றால் யாரால் என்ன செய்ய முடியும்?

இதுவரை காலமும் இங்கே நல்ல ஆக்கங்களை தந்தவர்களுக்கு நீங்கள் கூறும் பதில் என்ன?.......பதிவெடுத்துக்கொள்ளுங்கள்???????

  • கருத்துக்கள உறவுகள்

நிச்சயமாக மோகன் அண்ணாவின் உழைப்பினை புரியாது விட்ட வேதனையைப் புரிந்து கொள்கின்றேன். இதுவரை காலமும் யாழிற்காக செலவளித்த நேரம் மட்டுமல்லாமல், நேர்மை, சகிப்புத்தன்மை, இரகசியம் பேணல் தொடர்பான அனைத்து உயர் பண்புகளுக்குமாக மரியாதை செய்கின்றேன்.

புதினம் இணையத்தின் சகோதர இணையம் போலச் செயற்பட்ட இத்தளம், புதினம் முள்ளிவாய்க்கால்  துயரத்தோடு தன்னை நிறைவுசெய்த காலம் முதல், யாழும் விருப்பத்தோடு, விரும்பமின்றி இவ்வளவு தூரம் வந்ததே பெரிய விடயம். நிச்சயமாக கடந்த 6 வருடங்களாகப் பழகித் தொடர்பில் இல்லாது போன பல உறவுகளை நினைவில் கொள்கின்றேன்.

எல்லாக் காலத்திலும் சண்டை, சச்சரவு, இருந்தது தான். ஆனால், அன்று நமக்கென்று எல்லோருமே இருந்தார்கள். நம் சொந்தங்கள், தலைவர், போராளிகள், உறவுகள்.... ஆனால் அதை இழந்து நிர்கதியாக ஆறுதல் தேடுகின்ற சூழலில், எரிச்சல்படுத்தும் விதமாக களத்தில் நடந்து கொள்ளும் விதம் சரியானதாகத் தெரியவில்லை என்பது தான் தனிஎன்றோ

என்றோ ஒருநாள் அனைவரையும் சந்திக்க வேண்டும் என்ற ஆவல் உண்டு.. அது சாத்தியமாக வேண்டும் என இறைவனை இறைஞ்சுகின்றேன்!!

Edited by தூயவன்

  • கருத்துக்கள உறவுகள்

நீங்களும் , நெடுக்ஸும் யாழைவிட்டு போனால், யாழைதொடர்ந்து இயங்க வைக்க முடியும்.

தங்கள் சித்தமே எங்கள் பாக்கியம். உங்களின் மனநிலையில் வேறு சிலரும் இங்குளர் என்பதையும் நாங்களும் அறிவோம்..!

இதன் மூலம் யாழ் தொடர்ந்து இயங்கும் என்பதை மோகன் அண்ணா உறுதி செய்தால்.. நாம் நிச்சயமாக எமது ஐபி தடை செய்யப்பட கேட்டு.. இதில் இருந்து மிக மகிழ்ச்சியாக வெளியேறிக் கொள்வோம். எம்மால் எமது இனத்துக்கு நிகழப் போகின்ற ஒரு இணைய இழப்பை இவ்வழியில் தடுக்க முடியும் என்றால் நிச்சயம் அதை நாங்கள் செய்யத் தயாராகவே உள்ளோம்..!

யாழில் கற்றுக் கொண்ட இணையத் தமிழால் யாழில் எழுதப்பட்ட ஆக்கங்கள் யாழோடு சங்கமமாவதையே நாங்கள் விரும்புகின்றோம்..! எங்களுக்கும் எழுத இடமளித்த யாழிற்கு நன்றி..!

எங்களுக்கு யாழில் உள்ளவர்கள் எவரோடும் தனிப்பட்ட தொடர்புகள்.. தொடர்பாடல்கள் கிடையாது..! நாம் தொடர்ந்தும் அந்த நிலையைப் பேணுவதோடு.. யாழ் நிர்வாகத்திற்கு வெளியில் இருந்தோ உள்ளிருந்தோ.. இடர்கள் குறைகள் செய்ததும் இல்லை..! செய்யப் போவதும் இல்லை..! அந்த வகையில் எமது வெளியேற்றம் யாழை தொடந்து இயங்கச் செய்யும் என்ற வினீத் என்பவரின் அதி உச்ச கண்டுபிடிப்பை மதித்து.. மோகன் அண்ணா யாழை தொடர்ந்து இயங்க வைக்க எங்களை வெளியேற்றுவது குறித்து எந்த வித சங்கடங்களும் இன்றி முழுச் சுதந்திரத்தோடு முடிவெடுக்க இதயபூர்வமாக சம்மதிக்கிறோம்..!

நிச்சயம் ஒரு நாள் நியாயமும் உண்மையும் சத்தியமும் வெல்லும்..!

நன்றி.

என்றும்

நட்புடன் நெடுக்ஸ்..! :):icon_idea:

Edited by nedukkalapoovan

மிக கவலையளிக்கும் முடிவு.

மோகன் தயவு செய்து உங்கள் முடிவை மீள்பரிசீலனை செய்யுங்கள்.

தமிழினம் தன்னை நிலைநிறுத்தும் வரை தொடர்ந்து யாழை இயக்குங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இது குழந்தைத்தனமான கருத்து நெடுக்ஸ். உங்களின் இருப்பு, செயற்பாட்டினை 3ம் மனிதனால் கட்டுப்படுத்த செயற்படுத்த முயலுமெனில், நீங்கள் உலகத்தில் இருந்து என்ன பயன். ( நான் இப்படிச் சொன்னதற்காக, உயிர்த் தியாகம் எல்லாம் வேண்டாம்))

  • கருத்துக்கள உறவுகள்

இது குழந்தைத்தனமான கருத்து நெடுக்ஸ். உங்களின் இருப்பு, செயற்பாட்டினை 3ம் மனிதனால் கட்டுப்படுத்த செயற்படுத்த முயலுமெனில், நீங்கள் உலகத்தில் இருந்து என்ன பயன். ( நான் இப்படிச் சொன்னதற்காக, உயிர்த் தியாகம் எல்லாம் வேண்டாம்))

என்னுடைய சொந்த விடயம் என்றால்.. இந்த மூன்றாம் மனிதர்களை நான் மனிதர்களாகவே இனங்காண மாட்டேன். இவர்களின் வார்த்தைகள் கூச்சலை விட கேவலமாக கணிக்கப்பட்டிருக்கும்..! ஆனால்..

யாழ் என்பது ஒரு இனத்தின் இருப்புக்கான சமூக வலையமைப்பைப் பேணும் தளம். அந்த வகையில் அதன் இயக்கம் நின்று போவதற்கு நாங்கள் காரணமாக இருக்கக் கூடாது. அது மறைமுகமாக எமது எதிரிகளுக்கும் துரோகிகளுக்கும் உதவி நிற்பது போன்றது. எக்காரணம் கொண்டும் எம் இனத்துரோகிகளும்.. எதிரிகளும் எம்மால் நன்மையடையக் கூடாது.

தமிழ்நாதம்.. புதினம்.. தமிழ்நேசன் என்று பல பெறுமதிமிக்க இனத்தொண்டாற்றி வந்த இணையங்கள் இழுத்து மூடப்பட்ட போதும் வேறு சில இணையங்கள் வழித்தடம் மாறிய போதும்.. நான் அடைந்த வேதனை சொல்லில் அடங்காது.

அந்த நிலை சிலரின் அடாத்தான தூண்டலின் பெயரால் எங்களின் பெயரால் யாழிற்கும்.. நிகழ்வதை நாங்கள் விரும்பவில்லை. அந்த வகையில் மோகன் அண்ணா எங்களை எல்லாம் வெளியேற்றுவதன் மூலமாகத்தான்.. இந்த களத்தை.. இணையத்தை இயக்க வேண்டி இருப்பதாக எண்ணினால்.. அதற்கான முடிவை.. அவர் தயங்காமல் எடுக்க ஊக்குவிக்க வேண்டியது எமது இனத்தின் மேலான எமது கடமையும் கூட..!

அதையே தான் இங்கு சொல்லி இருக்கிறோம்.. தூயவன்..!

இவ்வளவு விளக்கமும் இத்தலைப்பில் போதும் என்று நினைக்கிறேன். எனி இதில் பதில் இடும் வகையில் எம்மை நோக்கி.. கேள்வி கேட்பதை கள உறவுகள் தயவுசெய்து தவிர்த்தீர்கள் என்றால் நல்லம்..!

நன்றி.

Edited by nedukkalapoovan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.