Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாட்கள்....(கிருபன்)

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இன்று கிருபன் அண்ணாவின் புளொக்கை வாசித்தேன்...அதில் உள்ள நாட்கள் எனும் கவிதை எனது நினைவுகளையும் தட்டிவிட்டது...போருக்குள் ஊரில் வாழ்ந்த தொலைபேசி இல்லாத நாட்களில் அப்பாவின் கடிதங்களுக்காக காத்திருந்த நாட்கள் கண்களில் நிழல் ஆடின..அந்தக் காலங்களில் அதற்க்கு சற்றும் குறையாத பரிதவிப்புடன் ஊரில் உள்ள உறவுகளின் கடிதங்களுக்காக புலம்பெயர்ந்த நாடுகளில் தனிமையில் உறவுகள் எவ்வளவு தவிப்புடன் இருந்திருப்பார்கள் என்பதை கிருபன் அண்ணாவின் இந்தக் கவிதை நெஞ்சைத்தொடும் வகையில் பேசுகிறது.....

நாட்கள்....

கிருபன்

குளிர் காலங்களிலும்

கடும் கோடைகளிலும்

உதிர்கின்றன நாட்கள்.

பிரசவிக்கும் காலைகளில்

தூக்கக் கலக்கத்துடன்

விழிகள் எதிர்பார்க்கும் தபாற்காரனை.

கதவிடுக்கின்வழி விழுகின்ற

பழுப்பு, வெள்ளை நிறக்

கடிதங்களிடையே

இடைக்கிடை சில

வான் கடிதங்கள்

எட்டிப் பார்க்கும்.

வாசிக்கும் அவசரத்தில்

அலங்கோலமாகக் கிழியும்

வான் கடிதம்.

கடித வரிகளில் கண் மேயும்

மண் ஒழுங்கைகளில் மனம் பாயும்.

வாசித்த சில நிமிடங்களில்

வழுக்கும் தார் வீதியில்

கால்கள் பரபரக்கும்

வேலையிடம் நோக்கி......

இது கிருபன் அண்ணாவின் மற்றொரு கவிதை...

இழந்து போனவை..

கிருபன்

விடிகாலை விண்ணில் கிழக்கிலெழும்

விடிவெள்ளியையும்

விருச்சிக விண்மீன் கூட்டங்களையும்

விரும்பிப் பார்க்கவென்று எழுந்ததும்

பூபாளம் பாடும் புள்ளினங்களும்

எங்கள் வீட்டுக் கோழிகளும்

நடாத்தும் இசைக் கச்சேரியைக் கேட்டு

இன்புற்று விடியலை எதிர்கொண்டதும்

மழை பொழியும் கார்த்திகையில்

நிலந்தெரியாத இருளினுள்

இலாம்புடன் அசைந்துவரும்

குழைவண்டில்களை பார்த்து மகிழ்ந்ததும்

மாசி மாதத்து பனிமூட்டத்தினுள்ளே

தூரத்துப் பனைமரத்தினூடு எழுகின்ற

சூரியக் கதிர்களின் வரவுக்காக

வெற்றுடம்புடன் வெடவெடுத்துக் காத்திருந்ததும்

கொட்டும் மழைக்காலத்தில்

திரண்டோடும் வெள்ளத்தினுள்

காகிதக் கப்பல்கள் விட்டுப்

பின்னால் ஓடியதும்

காவிளாய்ச் செடிகள்மீது உட்காரும்

வண்ணத்துப் பூச்சிகளையும் தும்பிகளையும்

நூல்தடம் கொண்டு

விரட்டிப் பிடிக்க அலைந்ததும்

முயல் உடும்பு வேட்டைக்கெனச் சென்று

பற்றைகளையும் தோட்டங்களையும்

உழக்கி அணில்களையும் ஓணான்களையும்

அடித்துக் கொன்றதும்

நீந்தி பழகவென கீரிமலை

வட்டப்பாறை, தொண்டமனாறுபோய்

உப்புநீரின் அடர்த்தியைக்

குடித்து அறிந்ததும்

வயதுக்கு வந்துவிட்டோம்

என்ற உணர்வில்

கடைக்கண் பார்வைக்கும்

ஒரு கீற்றுப் புன்னகைக்கும்

கால்கடுக்கக் காத்திருந்ததும்

தறித்துப் போட்ட பனைக்குற்றிகளிலும்

வீதியோர மதவுகளிலும் குந்தியிருந்து

நாட்டின் அரசியல் முதல்

பருவச்சிட்டுக்கள் வரை

வம்பளந்து மகிழ்ந்ததும்

உக்கிரம் தணிந்த மாலையில்

வல்லை வெளியில் தனிமையையும்

தென்றலையும் தேடி ஒடியதும்

மெல்லக் கனவாய்ப் பழங்கதையாய்

மறைந்துபோக

நானோ

ஐரோப்பிய முதலாளியின் அடுப்பங்கரையில்

மனிதத்தை இழந்து இயந்திரமானேன்...

Edited by சுபேஸ்

கதவிடுக்கின்வழி விழுகின்ற

பழுப்பு, வெள்ளை நிறக்

கடிதங்களிடையே

இடைக்கிடை சில

வான் கடிதங்கள்

எட்டிப் பார்க்கும்.

இதை 90களிலை இங்கையிருந்து நான் உணர்ந்திருக்கிறன் . ஆனால் இப்ப ஆரும் வான்கடிதம் போடுவதில்லை . மெயிலிலையே ஏன் நாயே எண்டு கேக்கிறாங்கள் இல்லை . இது எங்கடை கிருபன்ஜியோ எளுதினது சுபேஸ் ? பகிர்வுக்கு நன்றிகள் .

Edited by கோமகன்

கிருபன், அழகாக எழுதுகிறீர்கள். வேறும் இருந்தால் அவசியம் பதியுங்கள்.

கிருபனின் ஊர்க்கவிதைக்குத் துணையாக செழியனின் கவிதை ஒன்று :

வெய்யில்

மரங்கள் எதுவுமற்ற

நெடும்பாதை

உலர்ந்த உதடு

பாதி வழி கடக்கையில்

தனி விளாத்திப் பிஞ்சுபபோல்

மார்பிரண்டு

உதறிவிட்டு

சைக்கிள் ஏறி மிதிக்க

ஊர்

உடைந்துபோன

மனம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இது எங்கடை கிருபன்ஜியோ எளுதினது சுபேஸ் ? பகிர்வுக்கு நன்றிகள் .

அண்ணணேதான்....

  • கருத்துக்கள உறவுகள்

கிருபன் கவிதை எல்லாம் எழுதுவாரோ பிறகு யாழில் வந்து எழுதுவதில்லை :unsure: பாராட்டுக்கள் கிருபன் இணைத்த சுபேசுக்கும் நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

அட சொல்லவேயில்லை

http://kirubans.blogspot.ca/

கன பண்டிதர்கள் யாழில் இருக்கினம் போலை..

கன பண்டிதர்கள் யாழில் இருக்கினம் போலை..

  • கருத்துக்கள உறவுகள்

பாராட்டுகளுக்கு நன்றிகள்.. பல வருடங்களுக்கு முன்னர் எழுதியவை என்பதைப் படிக்கும்போது தெரிந்திருப்பீர்கள்!

மீள வாசிக்கும்போது சில சொற்கள் எனக்கே புதிதாகத் தெரிந்ந்தது (உ+ம்: காவிளாய்!)

தற்போது எழுதுவதைவிட வாசிப்பதில்தான் விருப்பம் அதிகம்..

வலைப்பதிவையும் (http://kirubans.blogspot.com/) கவனிக்காமல் பல காலம்

சுபேஸ் இதையும் வெட்டி ஒட்டியிருக்கலாம் :icon_mrgreen:

அழுக்கு

வேலைக் களைப்பும்

வியர்வை நாற்றமும்

கிள்ளும் பசியுமாய்

காத்திருக்கின்றேன்

பேரூந்துக்காய்.

வெயிலில் உருகும்

ஐஸ் கிறீமாக

கரைகின்றன

மணித்துளிகள்

தள்ளி எட்டி

பார்க்கின்றேன்

நீளும் வீதியில்

முடிவிலியைக் காண்கின்றேன்

பேரூந்தைக் காணவில்லை.

அலுப்புடன்

எதிர்வீதியில்

திரும்பியது

பார்வை.

பொன் கேசமும்

நீல விழிகளுமாய்

வெப்பக் காங்கையில்

சுகம் காண

வருகின்றாள்

ஒரு தேவதை.

அழகுப் பதுமை

நெருங்கியபோது

தொலைந்தன விழிகள்

தேடினேன்.......

கண்டுகொண்டேன்!

பிதுங்கிய அவளின்

மார்புகளுக்குள்

புதைந்து கிடந்தன

என்னிரு விழிகள்!

பேரூந்து வராமலேயே

இருக்கட்டும்.

Edited by கிருபன்

  • கருத்துக்கள உறவுகள்

இதற்குப் பின்னரும் நாங்கள் உங்களைக் கவிஞர்

என ஏற்றுக்கொள்ளாவிட்டால் அபத்தம் அபத்தம் :D

  • கருத்துக்கள உறவுகள்

அடக்கடவுளே இந்தக்கிருமி கவிஞர் என்று கனபேருக்குத் தெரியாதா?

கிருமி

நீங்கள் ஒரு தயங்கு, இயங்கு சாயலில் கவிதை ஒன்று எழுதினீர்களே அதையும் இணைத்துவிடுங்கள் எல்லாரும் தலை முடியைப்பிய்த்துக் கொண்டு திரியட்டும் :lol:

Edited by வல்வை சகாறா

  • கருத்துக்கள உறவுகள்

முடியைப் பிய்க்கின்ற அளவிற்கெல்லாம் எழுதியதில்லை.. எழுதவும் வராது!

Bachelor Party

கண்கள் மேலே சொருகின

கால்கள் வளைந்து நெளிந்தன

விழ வேண்டும் பின்னர்

எழ வேண்டும் என்றோர்

உன்னுதல்

விழுந்தால் எழுமாட்டாய்

என்றோர் குரல் உள்ளிருந்து.

ஓ! இன்னும் அமிழவில்லை.

இசையின் இரைச்சல் காதுகளில்

சிந்திய உணவுத் துணுக்குகள் கால்களில்

நீந்தினேன் நடன முன்றலை நோக்கி.

எண்ணெய்ப் படலமூடே

சொடுக்கும் கைகளும்

துள்ளிடும் கால்களும்.

மேலெழுந்து கீழிறங்கும்

இடைகளின் நடுவே நான்.

நிலை கொள்ளமுடியவில்லை

இரப்பர் போல் ஈய்ந்தேன்.

சமனம் கொள்ள விரிந்து

வளைந்தன கைகள்.

நெளிந்து வளைந்து

எவர்மேலேயோ சாய்ந்தேன்.

வியர்வைப் பிசுக்குடன்

இளஞ்சூடான மேனியின்

கதகதப்பு தூண்டியது

உணர்வுகளை.

துவண்ட தலையை நிமிர்த்தி

குவித்தேன் கண்களை.

சிலந்தி வலைப் பார்வையில்

தெரிந்தாள் துணியின்றி

துகிலுரி நங்கை.

துவண்டது தலை

மீண்டும்!

முடியைப் பிய்க்கின்ற அளவிற்கெல்லாம் எழுதியதில்லை.. எழுதவும் வராது!

Bachelor Party

...

துவண்ட தலையை நிமிர்த்தி

குவித்தேன் கண்களை.

சிலந்தி வலைப் பார்வையில்

தெரிந்தாள் துணியின்றி

துகிலுரி நங்கை.

..

துணியின்றித் தெரிந்த துகிலுரி நங்கையில் சாய்ந்தபடி 'சிலந்திவலைப் பார்வை' என்ற அடைமொழியினை நங்கைக்குப் பொருத்தி நியாயம் கற்பிக்க வெளிக்கிடாமல் உங்களைச் சார்ந்து முன்வைத்துள்ளீர்கள் பாருங்கள் அங்கு தான் இக்கவிதை அதியுச்சத்தைத் தொட்டதாய்; எனக்குப் படுகிறது.

இந்த றேஞ்சிற்கெல்லாம் கவிதை எழுதத்தெரிந்தும் எழுதாமல் இருப்பது அநியாயம். அவசியம் தொடர்ந்து எழுதுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த றேஞ்சிற்கெல்லாம் கவிதை எழுதத்தெரிந்தும் எழுதாமல் இருப்பது அநியாயம். அவசியம் தொடர்ந்து எழுதுங்கள்.

நல்ல ஆக்கங்களைப் படைக்க நிறையப் படிக்கவேண்டும்.. படிக்கப் படிக்க சுயமாக எழுதுவதைவிட வாசிப்பதிலேயே ஆர்வம் அதிகரிக்கின்றது. அத்தோடு எழுதவேண்டும் என்று நினைத்து எதையும் எழுதியதில்லை. சந்தர்ப்பம் கிடைக்கும்போது எழுத முயற்சிக்கின்றேன்..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பொடியள் புகுந்து விளையாடுறாங்கள்....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சுபேஸ் இதையும் வெட்டி ஒட்டியிருக்கலாம் :icon_mrgreen:

ஒட்டுவம் எண்டுதான் நினைத்தேன்...பின்னர் கவிதை கொஞ்சம் கசமுசாவாய் இருந்ததால் ஏன் வம்பென்று இணைக்கவில்லை... :icon_mrgreen:

பொடியள் புகுந்து விளையாடுறாங்கள்....

hehehee... :icon_mrgreen:

Edited by சுபேஸ்

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான கவிதைகள், கிருபன் எழுதத் தொடங்குங்கள்

நன்றி சுபேஸ் பகிர்வுக்கு

  • கருத்துக்கள உறவுகள்

கிருபா நீங்களும் கவிஞனா? சொல்லவேயில்லையே...........

  • கருத்துக்கள உறவுகள்

கிருபன், கவிதைகள் நன்றாக இருக்கின்றன!

தொடர்ந்து எழுதுங்கள்!

மன்னிக்கவும்! தொடர்ந்து கவியுங்கள்!!!

கிருபன் கவிதைகள் நன்றாக இருக்கின்றன. உங்கள் உணர்வுகளை வடியுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

கிருபன் கவிதைகள் நன்றாக இருக்கின்றன. உங்கள் உணர்வுகளை வடியுங்கள்.

ஏன்யா இந்தக் கொலைவெறி??!! :unsure::rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

யாழின் மூத்த உறுப்பினராகிய கிருபனின் கவிதை என்பதால் வாசிக்காமேலே நல்லாயிருக்கு என சொல்ல வேண்டும்,பச்சை குத்த வேண்டும் இல்லா விட்டால் கிருபன் கோவிப்பார் சரியா :lol::D:rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

யாழின் மூத்த உறுப்பினராகிய கிருபனின் கவிதை என்பதால் வாசிக்காமேலே நல்லாயிருக்கு என சொல்ல வேண்டும்,பச்சை குத்த வேண்டும் இல்லா விட்டால் கிருபன் கோவிப்பார் சரியா :lol::D:rolleyes:

மூத்த உறுப்பினர் என்ற சொல்லைப் பார்த்தவுடன் இறந்துபோனவர்களின் நினைவுதான் வந்தது? வை திஸ் கொலவெறி ரதி?

நல்லாயில்லை என்பது தெரியுமாகையால் கோபம் எல்லாம் வராது!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்பதான் இருந்த பட்டம் ஒன்றை புத்தனுக்கு கொடுத்தனான், பார்ப்பம் இன்னுமொரு பட்டம் வராமலா போகும். வாழ்த்துக்கள் கிருபன்:

  • கருத்துக்கள உறவுகள்

மூத்த உறுப்பினர் என்ற சொல்லைப் பார்த்தவுடன் இறந்துபோனவர்களின் நினைவுதான் வந்தது? வை திஸ் கொலவெறி ரதி?

நல்லாயில்லை என்பது தெரியுமாகையால் கோபம் எல்லாம் வராது!

கிருபன் இதை எல்லாம் சீரியசாக எடுக்க கூடாது நான் சும்மா பகிடிக்குத் தான் எழுதினேன் :rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.