Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வியாபாரிகள் மட்டும்..

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

enhanced-buzz-30070-1287457531-0.jpg

பாடையில் ஏற்றும் பிணத்தின் நெற்றியில் ஒட்டும்

நாணயக்குற்றியை நெஞ்சாங்கட்டை நெருப்பெரிந்து முடிந்ததும்

கரியைக் கழுவிக் காசெடுக்கும் வெட்டியான்களாய்..

விதைகள் சுமந்த விருட்சங்கள் எல்லாம்

வேரோடு அழிக்கப்பட்டு விட்டன வியாபாரிகளால்..

அறுக்கும் முன் அலங்கரிக்கப்படும் ஆட்டுக்கடாக்கள் போல

விதைக்கும் முன்னே வீழ்த்தப்பட்டு விட்டது..

பருத்துக் கொழுப்பதற்காய் கிளிசறியாக்குழையும் பூவரசங்குழையும்

பருத்திப்புண்ணாக்கும் முத்தர் வீட்டு நல்ல தண்ணியும் குடுத்து

நலமெடுத்துக் கிலோ ஏத்தி நல்ல நாள்ப் பார்த்து

நாற்பது பேர் சேர்ந்து சுத்தி நிக்க வெட்டி

இரத்தம் மூளை மார்பு,தொடை,வயிறு குடல் என்று

பங்கு நல்ல விலை அதிலும் நல்ல வியாபாரம்..

மயிலற்றை ஆடு நல்ல விலையாம்..

பெரிய தாடை, வளைஞ்ச கொம்பு

தொடை மட்டும் பத்து பத்து தேறுமாம்

நல்ல கொழுத்த ஆடு

வெட்டப்பட்ட பின்பும் பெருமைகள் மட்டும்

செமித்து மலங்கழிக்கும் வரை பேசப்படும்..

வீழ்ந்த ஆடுகளும் வம்சமில்லாமல்

வெட்டிய மரங்களும் மொட்டையாய்

வியாபாரிகள் மட்டும் விற்ப்பதற்காய்..

[size=2] ஜீவா 22/07/2012 12:23[/size]

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]நல்ல கொழுத்த ஆடு[/size]

[size=4]வெட்டப்பட்ட பின்பும் பெருமைகள் மட்டும்[/size]

[size=4]செமித்து மலங்கழிக்கும் வரை பேசப்படும்..[/size]

எங்கட பலவீனமே இது தானே, ஜீவா!

இவ்வளவு நடந்த பின்பும்,

கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தில்,

இமய மலையில் கருவாடு சுட்டவன் தமிழன்!

என்று மார் தட்ட, வேறு யாரால் முடியும்?

கவிதைக்கு நன்றிகள்!

Edited by புங்கையூரன்

  • கருத்துக்கள உறவுகள்

விதைகள் சுமந்த விருட்சங்கள் எல்லாம்

வேரோடு அழிக்கப்பட்டு விட்டன வியாபாரிகளால்..

அறுக்கும் முன் அலங்கரிக்கப்படும் ஆட்டுக்கடாக்கள் போல

விதைக்கும் முன்னே வீழ்த்தப்பட்டு விட்டது..

[size=2]ஜீவா 22/07/2012 12:23[/size]

இவ்வளவு நடந்த பின்பும்... குற்ற உணர்ச்சி இல்லாமல் வாழும் மனிதர்களை நினைக்க...

இனத்தின் மீதே..... விரக்தி தான் வருகின்றது ஜீவா.

:( :( :(

ஜீவா அண்ணா நான் இன்று தான் முதல் முறையாக கவிதைப்பகுதியில் உங்களை கண்டேன். நன்றாக இருக்கிறது. தொடர்ந்து எழுதுங்கள். :)

  • கருத்துக்கள உறவுகள்

ஆடு அறுப்பதிலும் ஆடு

புலி ஆட்டம்....

வீட்டில் வளர்த்த

பிராணி கண் மூடி

முளிக்கும் ஒவ்வொரு

கணமும் நினைவில்

வந்து போனாலும்

பங்கு போட,

வெளிக்கிட்டால் பாவம்

புண்ணியம் பறந்தே

போய் விடும்...

வாரவிடுமுறையில் ஆடு

அறுசுவை உணவாகி

நிற்கும்

Edited by யாயினி

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]விதைகள் சுமந்த விருட்சங்கள் எல்லாம்[/size]

[size=4]வேரோடு அழிக்கப்பட்டு விட்டன வியாபாரிகளால்..[/size]

[size=4]அறுக்கும் முன் அலங்கரிக்கப்படும் ஆட்டுக்கடாக்கள் போல[/size]

[size=4]விதைக்கும் முன்னே வீழ்த்தப்பட்டு விட்டது..[/size]

[size=4]வீழ்ந்த ஆடுகளும் வம்சமில்லாமல்[/size]

[size=4]வெட்டிய மரங்களும் மொட்டையாய்[/size]

[size=4]வியாபாரிகள் மட்டும் விற்ப்பதற்காய்..[/size]

என்னை தொட்ட வரிகள் ..

தொடருங்கள் தம்பி ஜீவா :)

வியாபாரிகளால் வஞ்சிக்கப்படும் இனம் பற்றி சிலவரிகள்.

வருசத்திற்கு ஒன்று எழுதினாலும் அது முத்துத்தான்.

அருமை...

ஆனால் கல் தோன்றா காலத்துக்கு முந்தி பிறந்த முத்தின குடி எங்களது...அதை நக்கலடித்தால் நாங்கள் பிறகு உங்களையும் துரோகிப் பட்டியலில் சேர்த்துடுவம்..கவனம் !!

வெட்டப்பட்ட பின்பும் பெருமைகள் மட்டும்

செமித்து மலங்கழிக்கும் வரை பேசப்படும்..

[size=4]உண்மையைச் சொல்வதற்கும் தில்வேண்டும் . வாழ்த்துக்கள் . இத்துடன் நில்லாது தொடர்ந்து தையுங்கள் கவிதையை .[/size]

  • கருத்துக்கள உறவுகள்

மயிலற்றை ஆடு நல்ல விலையாம்..

பெரிய தாடை, வளைஞ்ச கொம்பு

தொடை மட்டும் பத்து பத்து தேறுமாம்

நல்ல கொழுத்த ஆடு

வெட்டப்பட்ட பின்பும் பெருமைகள் மட்டும்

செமித்து மலங்கழிக்கும் வரை பேசப்படும்..

அறைகிறது

  • கருத்துக்கள உறவுகள்

நெத்தியடி ஜீவா....அருமை...

  • கருத்துக்கள உறவுகள்

இந்தவார வார்ப்பில் தீபிகாவால் எழுதப்பட்ட கவிதையும் இதே வியாபாரிகளைப் பற்றி பேசி நிற்கிறது...

கண்களை மூடும் காட்சிகள்

---------------------------------------

தங்கள்

பிள்ளைகள் கொல்லப்படுகிற காட்சியை

பார்க்கிற தாய்மார்களின் கண்கள்

பெற்ற வயிறுகளை

கைகளால் அடித்தபடி வழிகின்றன.

சிதைக்கப்பட்டிருக்கிற குழந்தைகளின்

காயங்களிலிருந்து,

இரத்தம் சிந்தச் சிந்த விரியும்

அவர்களின் கடைசி நேர ஓவியங்கள்

தாய்மார்களின் துக்கம் நிறைந்த

மூச்சுக் காற்றை அடைக்கின்றன.

பிள்ளைகளின் நிர்வாண மரணங்களை

தாய்மார்கள் பார்க்கவேண்டிய

கனத்த துயரத்தின் விதியை

காலமெம் தேசமெங்கும் எழுதியிருக்கிறது.

தாய்மாரின்

வறண்டு போன தொண்டைகளிலிருந்து

உருகிவிழும் வார்த்தைகளும்

கண்கள் கட்டப்பட்டிருக்கும்

நீதி தேவதையின் காதுகளுக்கு எட்டாமல்

நலிந்து போய் சாகின்றன.

கடவுள்கள் புன்னகைத்துக்கொண்டிருக்கிற

கோயில்களின் வாசல்களில்

தாய்மார்கள் கண்ணீரோடு இருக்கிறார்கள்.

எல்லா பிரார்த்தனைகளும்

கைவிடப்பட்டு விட்ட மனிதர்களாய்.

இனிமேல்

தொட்டும் பார்க்க முடியாதபடி

குப்புறக் கிடக்கிற பிள்ளைகளின் சடலங்கள்

கைகள் கட்டப்பட்டபடி கிடந்து

தாய்மார்களின் கைகளை மாரடிக்கச் செய்கின்றன.

எந்தப் பிள்ளைகளைப் பற்றியும்

எந்தத் தாய்மார்கள் பற்றியும்

கவலை இல்லாத வியாபாரிகள்

தங்கள் கள்ளச் சந்தைகளில்

பிள்ளைகளின்

நிர்வாண உடல்களை காட்டிக் காட்டி

வியாபாரம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

பிள்ளைகள் சுடப்படுவதற்கு முன்பு

இவர்கள் திருகிக் கொன்ற

நீதி தேவதையை கூட்டி வருவதாக

பொய் சொல்லிச் சொல்லி

வியாபாரிகள் சனங்களை

இப்போதும் ஏமாற்றுகிறார்கள்.

திரும்பிவர முடியாத பிள்ளைகளின்

காயப்பட்ட தேகங்களை

திரும்ப திரும்ப குவித்துக் காட்டி

பதறிக் கொண்டிருக்கிற தாய்மார்களின்

வலி நிறைந்த கண்களையும்

காட்சிகள்

விரைவில் மூடிவிடப் பார்க்கின்றன.

http://www.vaarppu.com/view/2615/

Edited by சுபேஸ்

  • கருத்துக்கள உறவுகள்

சூப்பர் ஜீவா

  • கருத்துக்கள உறவுகள்

ஆழமான எழுத்துக்கள் ஜீவா

வியாபாரிகளைச் சந்தையில் சந்திக்கும் போது

சில கேள்விகளை முன்னிறுத்த வேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அருமையாக எழுதியிருக்கின்றீர்கள் ஜீவா.

  • கருத்துக்கள உறவுகள்

வெட்டப்பட்ட பின்பும் பெருமைகள் மட்டும்

செமித்து மலங்கழிக்கும் வரை பேசப்படும்..

அருமை ஜீவா, மனித இனமே சுயநலம் மிக்கது தானே, அதிலும் இந்த வியாபாரிகள் ஒரு படி மேல்.

Edited by Thumpalayan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

enhanced-buzz-30070-1287457531-0.jpg

பாடையில் ஏற்றும் பிணத்தின் நெற்றியில் ஒட்டும்

நாணயக்குற்றியை நெஞ்சாங்கட்டை நெருப்பெரிந்து முடிந்ததும்

கரியைக் கழுவிக் காசெடுக்கும் வெட்டியான்களாய்..

விதைகள் சுமந்த விருட்சங்கள் எல்லாம்

வேரோடு அழிக்கப்பட்டு விட்டன வியாபாரிகளால்..

அறுக்கும் முன் அலங்கரிக்கப்படும் ஆட்டுக்கடாக்கள் போல

விதைக்கும் முன்னே வீழ்த்தப்பட்டு விட்டது..

பருத்துக் கொழுப்பதற்காய் கிளிசறியாக்குழையும் பூவரசங்குழையும்

பருத்திப்புண்ணாக்கும் முத்தர் வீட்டு நல்ல தண்ணியும் குடுத்து

நலமெடுத்துக் கிலோ ஏத்தி நல்ல நாள்ப் பார்த்து

நாற்பது பேர் சேர்ந்து சுத்தி நிக்க வெட்டி

இரத்தம் மூளை மார்பு,தொடை,வயிறு குடல் என்று

பங்கு நல்ல விலை அதிலும் நல்ல வியாபாரம்..

மயிலற்றை ஆடு நல்ல விலையாம்..

பெரிய தாடை, வளைஞ்ச கொம்பு

தொடை மட்டும் பத்து பத்து தேறுமாம்

நல்ல கொழுத்த ஆடு

வெட்டப்பட்ட பின்பும் பெருமைகள் மட்டும்

செமித்து மலங்கழிக்கும் வரை பேசப்படும்..

வீழ்ந்த ஆடுகளும் வம்சமில்லாமல்

வெட்டிய மரங்களும் மொட்டையாய்

வியாபாரிகள் மட்டும் விற்ப்பதற்காய்..

[size=2]ஜீவா 22/07/2012 12:23[/size]

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாத்திரி என்னவோ, வாசித்த பின்பு மீள தலைக்குள் சுத்தினது உங்களுக்கு காதில அறைந்த இடந்தான்...

ஆனால் நம்பவில்லை, அது செமித்து மலமாகுமென்று. அதையும் காறித்துப்பி புத்தம் புதிய கிடாய் ஆக்க ஆக்கள் ரெடி.

ஜீவா, ஒன்று மட்டும் சொல்ல வேண்டும், எங்களுக்கும் உந்த வியாபாரிகளுக்கும் அதிகம் வித்தியாசம் இல்லை..அவர்கள் மொத்த வியாபாரிகள், நாங்கள் சில்லறை வியாபாரிகள்....ஏன்னெனில் அங்கே யாரும் வாடிக்கையாளர்களாக இருக்கவில்லை அது வியாபாரிகளுக்கும் கிடாய்களுக்கும் இடையான இடம் மாத்திரமே.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

enhanced-buzz-30070-1287457531-0.jpg

பாடையில் ஏற்றும் பிணத்தின் நெற்றியில் ஒட்டும்

நாணயக்குற்றியை நெஞ்சாங்கட்டை நெருப்பெரிந்து முடிந்ததும்

கரியைக் கழுவிக் காசெடுக்கும் வெட்டியான்களாய்..

கவிதை நன்றாக இருக்கிறது ஜீவா தொடரந்து எழுதுங்கள்

இந்தக் கூட்டம் இன்னும் கழுகுகள் போல் மொய்த்துக் கொண்டிருப்பதுதான் வேதனையான விடயம்

[size=2]ஜீவா 22/07/2012 12:23[/size]

  • கருத்துக்கள உறவுகள்

ஜீவா,அத்தி பூத்தால் போல கவிதை எழுதினாலும் கவிதை கனதியானது.நன்றிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

யார் இந்த வியாபாரிகள்? :unsure:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்கட பலவீனமே இது தானே, ஜீவா!

இவ்வளவு நடந்த பின்பும்,

கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தில்,

இமய மலையில் கருவாடு சுட்டவன் தமிழன்!

என்று மார் தட்ட, வேறு யாரால் முடியும்?

கவிதைக்கு நன்றிகள்!

அடிப்படையிலையே பல சிக்கலான கட்டமைப்புக்களால் பின்னப்பட்டு மீளமுடியாத ஒரு இனக்குழுமத்தில் இவ்வளவு பெரிய பேரழிவின் பின்பும் மீள முடியாத இக்கட்டு நிலையிலும் அவலங்களைக் கூடக்காசாக்கும்,அரசியல் வியாபாரம் செய்வோர் மீதான வெறுப்பே.. :(

நன்றி அண்ணா வருகைக்கும் கருத்துக்கும். :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இவ்வளவு நடந்த பின்பும்... குற்ற உணர்ச்சி இல்லாமல் வாழும் மனிதர்களை நினைக்க...

இனத்தின் மீதே..... விரக்தி தான் வருகின்றது ஜீவா.

உண்மை தான் சிறி அண்ணா, அதே வலியின் வேதனையின் பிரதிபலிப்பே இது.

நன்றி அண்ணா வருகைக்கும்,கத்துக்கும் :)

:( :( :(

ஜீவா அண்ணா நான் இன்று தான் முதல் முறையாக கவிதைப்பகுதியில் உங்களை கண்டேன். நன்றாக இருக்கிறது. தொடர்ந்து எழுதுங்கள். :)

நன்றி உங்கள் வருகைக்கும்,ஊக்குவிப்புக்கும். :)

ஆடிக்கொருக்கா,அமாவாசைக்கு ஒருக்கா எழுதுவதுண்டு.

ஆடு அறுப்பதிலும் ஆடு

புலி ஆட்டம்....

வீட்டில் வளர்த்த

பிராணி கண் மூடி

முளிக்கும் ஒவ்வொரு

கணமும் நினைவில்

வந்து போனாலும்

பங்கு போட,

வெளிக்கிட்டால் பாவம்

புண்ணியம் பறந்தே

போய் விடும்...

வாரவிடுமுறையில் ஆடு

அறுசுவை உணவாகி

நிற்கும்

நன்றி அக்கா, அருமையான கவிதை.

"பங்கு போட,

வெளிக்கிட்டால் பாவம்

புண்ணியம் பறந்தே

போய் விடும்..."

எனக்குப்பிடிச்ச வரிகள்..

என்னை தொட்ட வரிகள் ..

தொடருங்கள் தம்பி ஜீவா :)

நன்றி அண்ணா.. :)

உங்கள் ஊக்குவிப்பு இருக்கும் போது எழுத முயற்சிக்கிறேன்.

வியாபாரிகளால் வஞ்சிக்கப்படும் இனம் பற்றி சிலவரிகள்.

வருசத்திற்கு ஒன்று எழுதினாலும் அது முத்துத்தான்.

வியாபாரிகளில் தான் எத்தனை வகை.. :wub:

நன்றி அண்ணா வருகைக்கும் கருத்துக்கும். :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அருமை...

ஆனால் கல் தோன்றா காலத்துக்கு முந்தி பிறந்த முத்தின குடி எங்களது...அதை நக்கலடித்தால் நாங்கள் பிறகு உங்களையும் துரோகிப் பட்டியலில் சேர்த்துடுவம்..கவனம் !!

:D :D

பொறுங்கோ இப்பத்தான் நாங்கள் யூதர்கள் போன்று அறிவிலையும் (அப்படின்ன என்ன னு என்னைக்கேட்க கூடாது சொல்லிப்போட்டன் :lol: ) மாயன்கள் தமிழரோ என்ற முக்கிய ஆராய்ச்சிலை இருக்கிறம் எல்லாம் முடிச்சிட்டு வந்து ஏதும் மிஞ்சினால் பார்ப்பம்.. :wub::icon_idea:

நன்றி அண்ணா வருகைக்கும் உங்கள் ஊக்கத்திற்கும். :)

வெட்டப்பட்ட பின்பும் பெருமைகள் மட்டும்

செமித்து மலங்கழிக்கும் வரை பேசப்படும்..

[size=4]உண்மையைச் சொல்வதற்கும் தில்வேண்டும் . வாழ்த்துக்கள் . இத்துடன் நில்லாது தொடர்ந்து தையுங்கள் கவிதையை .[/size]

நன்றி அண்ணா.. :)

உங்க தலையெழுத்து இதை எல்லாம் வாசிக்க வேணும் என்றால் தைக்கிறன்.. :D:lol::icon_idea:

அழகான கவிதை. நன்றி தொடர்ந்து எழுதுங்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.