Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் இந்து ஆசிரியர் முத்துகுமாரசாமி பிரிவு .

Featured Replies

JHC Master முத்துக்குமாரசுவாமி

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் நீண்ட காலம் இரசாயன ஆசிரியராக பணி புரிந்து ஆயிரக்கணக்கான மருத்துவ நிபுணர்கள், பொறியிலாளர்கள் போன்றவர்களை உருவாக்கிய மென்மையான இதயமும் மேலான பண்புகளும் கொண்ட யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி மாணவர்களின் பெரு மதிப்புக்கு உரிய ஆசிரியப் பெருந்தகை செல்லப்பா முத்துக்குமாரசுவாமி அவர்கள் இன்று தனது 86ம் வயதில் மாரடைப்பினால் கொழும்பில் காலமாகிவிட்டார்.

புன்னாலைக்கட்டுவன் தெற்கைச் சேர்ந்த அமரர் ஐயாத்துரை செல்லப்பா அமரர் வள்ளியம்மைப்பிள்ளை தம்பதிகளின் ஒரே புதல்வரான செல்லப்பா முத்துக்குமாரசுவாமி அவர்கள் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில் தனது பாடசாலைக் கல்வியைக் கற்று பின்னர் யாழ் இந்துக்கல்லூரியில் இரசாயன ஆசிரியராகக் கடமையாற்றி யாழ் இந்துக் கல்லூரியின் உப அதிபராகவும் விளங்கி இளைப்பாறியவர். யோக சுவாமிகள் மீது மிகவும் பற்றுக் கொண்ட முத்துக்குமாரசுவாமி அவர்கள் சிவதொண்டன் நிலையத்தின் வளர்ச்சிக்கு மிகவும் உறுதுணையாக விளங்கியவர். அத்துடன் 1979ம் ஆண்டு மே மாதம் கைதடி வீரகத்திப் பிள்ளையார் கோவில் தேர்த் திருவிழாவின் போது நிகழவிருந்த இரத்தக் களரியைத் தடுத்து வட இலங்கையில் சுமூகமான ஆலயப் பிரவேசங்கள் நடை பெற வழிகோலியவர். இவரின் பாரியார் அமரர் தெய்வநாயகி அவர்கள் யாழ் இந்து மகளீர் கல்லூரியில் நீண்டகாலம் விஞ்ஞான ஆசிரியராக கடமையாற்றியவர். இவர்களின் ஒரே மகன் யோககுமாரன் 2003ம் ஆண்டு இங்கிலாந்தில் கார் விபத்தொன்றில் காலமானார்.

ஆசிரியப் பெருந்தகை அவர்களின் பூதவுடல் இறுதி மரியாதைகளுக்காக நாளை அக்டோபர் 11திகதி பொறளை ஜெயரட்ன அந்திமசேவை நிலையத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் பொறளை மயானத்தில் தகனம் செய்யப்படும்.

(இது முக புத்தகத்தில் இருந்து )

எனக்கு ஒன்பதாம் வகுப்பில் வகுப்பாசிரியராக இருந்த ஆசிரியர் இவர் . நான் பாடசாலை விட்டு வெளியேறும் வரை என்னுடன் மிக தொடர்பிலும் என்னில் மிக அன்புடனும் இருந்தவர் .

அன்னாருக்கு எனது அஞ்சலிகள் .

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் அன்பான, ஒரு கண்ணியமான மனிதன் இவர்.

மாணவர்களை, அணைத்த்துத் தன்னோடு கொண்டு செல்வதில், இவருக்கு நிகர், இவரே தான்!

'வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன்,வானுறையும்,

தெய்வத்துள் வைக்கப் படும்"

என்ற வள்ளுவனின் வாக்குக்கிணங்க, இவரது ஆன்மாவது இறைவன் நிழலில் அமைதியடையட்டும்!

இவரின், பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு, எனது ஆழ்ந்த அனுதாபங்களுடன், அன்னாருக்கு, எனது பணிவான அஞ்சலிகள்!

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள் & அஞ்சலிகள்

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]ஆழ்ந்த அனுதாபங்கள் & அஞ்சலிகள்[/size]

  • கருத்துக்கள உறவுகள்

இவர் எந்தக் காலத்தில் ஆசிரியராக இருந்தவர்..??!

ஆழ்ந்த அனுதாபங்களும் அஞ்சலியும்..!

  • கருத்துக்கள உறவுகள்

சிவபதம் எய்திய, முத்துக்குமாரசாமி மாஸ்ரரின்.... ஆத்ம சாந்திக்கு எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன்.

இவர் எந்தக் காலத்தில் ஆசிரியராக இருந்தவர்..??!

1975 களில் ஆசிரியராக இருந்தவர்.

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]ஆழ்ந்த அனுதாபங்களும் அஞ்சலியும்.[/size]

ஆழ்ந்த அனுதாபங்கள். அருமையான ஆசிரியர். இவர் பின்னால் உதவி அதிபராகவும் கடமையாற்றினார். 80களின் கடைசிவரை இருந்தார். 6 ஆம் வகுப்பில் விஞ்ஞானம் படிப்பித்தார்.

இவரது மருமகன் தான் யாழ்ப்பாணத்தில் பிரபல வைத்தியர் சிவகுமாரன்.

முத்தரைப்பற்றி கேள்விப்பட்டிருக்கிறன் . நான் இந்துவுக்கு வரேக்கை ஆள் இல்லை . அவரின் . ஆத்மா சாந்தியடைய எல்லோருக்கும் பொதுவான இறைவனைப் பிரார்த்திக்கின்றேன் . அவரின் குடும்பத்திற்கும் எனது அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன் .

[size=4]ஒரு ஆசிரியர் சமூகத்திற்கு செய்யவேண்டிய கடமைகளை மிக சிறப்பாக செய்துள்ளவரின் ஆத்மா சாந்தியடையட்டும்.[/size]

ஆழ்ந்த அனுதாபங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

[size=4]ஆழ்ந்த அனுதாபங்கள் & அஞ்சலிகள்[/size]

ஆழ்ந்த அனுதாபங்கள்!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[size=4]ஆழ்ந்த அனுதாபங்கள்.[/size]

[size=4]ஆசிரியர் முத்துக்குமாரசாமி அவர்கள் மிகுந்த பண்பாளர்; பழகுவதற்கு

எளிமையானவர், இனிமையானவர்.யோகசுவாமிகளிடம் மிகுந்த பக்தி கொண்டவர். வாழ்வாங்கு வாழ்ந்த பெருந்தகை.அவரின் குடும்பத்தினருக்கு

எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.[/size]

ஆழ்ந்த அனுதாபங்கள்...

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்..!

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்!

[size=4]ஆழ்ந்த இரங்கல்கள்..![/size]

  • கருத்துக்கள உறவுகள்

நானும் இவர் படிப்பிச்ச காலத்துக்குப் பிறகுதான் இந்துவில படிச்சனான். ஆனா இவரைப் பற்றி நிறையக் கேள்விப்பட்டிருக்கிறன்.

"எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்."

அன்னாரது இழப்பு இந்துவின் குடும்பத்துக்குப் பேரிழப்பாகும்.

ஆழ்ந்த இரங்கல்கள்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆழ்ந்த அனுதாபங்கள். அருமையான ஆசிரியர். இவர் பின்னால் உதவி அதிபராகவும் கடமையாற்றினார். 80களின் கடைசிவரை இருந்தார். 6 ஆம் வகுப்பில் விஞ்ஞானம் படிப்பித்தார்.

இவரது மருமகன் தான் யாழ்ப்பாணத்தில் பிரபல வைத்தியர் சிவகுமாரன்.

ஆழ்ந்த அனுதாபங்கள்..

யார் அந்த சிவகுமாரன் என்று சொல்ல முடியுமா? மகர யாழ் விருது பெற்ற சிவகுமரனோ ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.