Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆயுத வழியில் மீண்டும் ஒரு தமிழீழப் போராட்டத்திற்கு எந்த அமைப்பை ஆதரிப்பீர்கள்?!

ஆயுத வழியில் மீண்டும் ஒரு தமிழீழப் போராட்டத்திற்கு எந்த அமைப்பை ஆதரிப்பீர்கள்?! 39 members have voted

  1. 1. ஆயுத வழியில் மீண்டும் ஒரு தமிழீழப் போராட்டத்திற்கு எந்த அமைப்பை ஆதரிப்பீர்கள்?!

    • TELO
      0
    • EPRLF
      0
    • PLOTE
      0
    • EPDP
      1
    • EROS
      0
    • TULF
      0
    • ENDLF
      0
    • TMVP
      0
    • Only LTTE
      21
    • No one
      17

Please sign in or register to vote in this poll.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தாயகத்தில் சிங்களமும் பிராந்தியமும் சர்வதேசமும் செய்து வரும் நகர்வுகளின் அடிப்படையில் பார்த்தால் மீண்டும் ஒரு ஆயுதப் போராட்டத்திற்கான ஏது நிலைகளே அதிகம் உருவாக்கப்பட்டு வருகின்றன. இதனை தமிழ் மக்கள் தாங்கிக் கொள்ள முடியாத போதும் மாற்று வழி இன்றி அதனைத் தேர்வு செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டால்.. (ஒருவேளை)... இன்றைய நிலவரப்படி.. எந்த அமைப்பு அதனைத் தொடர்வதை விரும்புவீர்கள்..??!

 

கவனிக்கவும்.. இதில் ஒட்டுக்குழுக்களுக்கு அங்கீகாரம் வழங்கும் நோக்கம் எமக்கில்லை. ஒட்டுக்குழுக்கள் காட்டிக்கொடுப்புகள்.. மக்கள் விரோத நடவடிக்கைகள் என்று எல்லாவற்றையும் முழுமையாக கைவிட்டு இதய சுத்தியோடு செயற்பட்டு அளப்பரிய தியாகங்கள் புரிந்து குறைந்த அளவு அல்லது மக்களுக்கு பாதிப்பு வராத வகையில்.. தமிழீழத்தை மீட்பார்கள் என்று நீங்கள் இன்றைய நிலையில் எந்த அமைப்பை மீண்டும் போராட ஊக்குவிப்பீர்கள்..??!

 

வாக்குத் தெரிவுக்கு மேலதிகமாக உங்கள் கருத்துக்களையும் பகிர்ந்து கொள்ளலாம்.

 

நன்றி.

Edited by nedukkalapoovan

புலிகளின் தலைமை மீண்டும் வந்தால் அவர்களுக்கு மட்டுமே எனது ஆதரவு.

 

இழந்த மக்கள், கொடுத்த மாவீர செல்வங்கள் ... இவர்களை இலட்சம் இலட்சமாக இழந்து உள்ளோம்

எனவே மேலும் ஒரு ஆயுதப்போராட்டத்திற்கு இடம் தராமல்....

 

நியாயமான, எமது தாயக மக்கள் ஏற்ககூடிய கௌவரமான தீர்வை நாம் பெற முயற்சிக்கவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

புலிகளின் தலைமை மீண்டும் வந்தால் அவர்களுக்கு மட்டுமே எனது ஆதரவு.

புலிகளின் தலைமை மீண்டும் வந்தால் அவர்களுக்கு மட்டுமே எனது ஆதரவு.

 

இழந்த மக்கள், கொடுத்த மாவீர செல்வங்கள் ... இவர்களை இலட்சம் இலட்சமாக இழந்து உள்ளோம்

எனவே மேலும் ஒரு ஆயுதப்போராட்டத்திற்கு இடம் தராமல்....

 

நியாயமான, எமது தாயக மக்கள் ஏற்ககூடிய கௌவரமான தீர்வை நாம் பெற முயற்சிக்கவேண்டும்.

இந்த கேள்விகளுக்கு அப்பால் , முதலில் எல்லாரும் ஒற்றுமையாக வந்து விடுதலையை பெறவேண்டும்

இந்த ஒரு கொலை கார கூட்டமும் வேண்டாம் . எல்லா இயக்கங்களிலும் இருந்த முற்போக்கான சக்திகள் ஒன்றிணைந்த ஒரு இயக்கம்

ஒருவருக்கும் இல்லை என்பதனை தெரிவு செய்துள்ளேன். இனி ஒரு ஆயுதப் போராட்டம் எக்காலத்திலும் நடவாது; நடக்க கூடாது என்பதால் இந்த தெரிவு,

தமிழீழத்தில் உள்ள மக்களின் அடிப்படை உரிமைகளை பெறுவதற்கு முழு நேரமாக போராட யார் வருவீர்கள் என்று கேட்டால் நியாயம். 

 
அங்கு இருபவர்கள் ஆயுத போராட்டம் செய்ய வேணும் எண்டு இங்கிருந்து கொண்டு ஆதரவு மட்டும் தெரிவிப்பது எந்த விதத்தில் நியாயம்??
 
போங்கையா நீங்களும் உங்கள் கேள்விகளும். 

 

புலிகளின் தலைமை மீண்டும் வந்தால் அவர்களுக்கு மட்டுமே எனது ஆதரவு.

 

இழந்த மக்கள், கொடுத்த மாவீர செல்வங்கள் ... இவர்களை இலட்சம் இலட்சமாக இழந்து உள்ளோம்

எனவே மேலும் ஒரு ஆயுதப்போராட்டத்திற்கு இடம் தராமல்....

 

நியாயமான, எமது தாயக மக்கள் ஏற்ககூடிய கௌவரமான தீர்வை நாம் பெற முயற்சிக்கவேண்டும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழத்தில் உள்ள மக்களின் அடிப்படை உரிமைகளை பெறுவதற்கு முழு நேரமாக போராட யார் வருவீர்கள் என்று கேட்டால் நியாயம். 

 
அங்கு இருபவர்கள் ஆயுத போராட்டம் செய்ய வேணும் எண்டு இங்கிருந்து கொண்டு ஆதரவு மட்டும் தெரிவிப்பது எந்த விதத்தில் நியாயம்??
 
போங்கையா நீங்களும் உங்கள் கேள்விகளும். 

 

உலகில் எங்கும் ஒட்டு மொத்த மக்களும் போய் போராட்டின போராட்டம் என்று ஒன்றில்லை. பெரும்பாலான மக்களின் பங்களிப்போடு போராடப்பட்ட போராட்டங்களே உண்டு.

 

மேலும்.. ஈழத்தில் தமிழ் மக்கள் ஒரு ஆயுதப் போராட்டத்தை தொடங்குவார்கள் என்று 1970 களின் ஆரம்பத்தில் எவருமே யோசிச்சிருக்கமாட்டாங்க. ஏன் தமிழ் மக்களில் அநேகர் கூட அப்படியான மன நிலையில் இருக்கவில்லை. இருந்தும்.. அதற்கான தேவை இருந்துள்ளது. அது இன்று பல மடங்கு அதிகரித்த நிலையில் உள்ளது.

 

எனி ஒரு ஆயுதப் போராட்டம் அவசியம் தானா என்பதைக் காலமும் மக்களின் தேவையும்.. சர்வதேச உள்ளூர் அரசியலும் இதர நகர்வுகளும் தான் தீர்மானிக்க முடியுமே தவிர.. தனி மனிதர்கள் சிலர் வேண்டாம் என்று ஒதுங்கி நிற்பதால் ஒட்டுமொத்த மக்களும் தமக்கு விடுதலை வேண்டாம் இந்த உபத்திரபமான அடிமை வாழ்க்கையே போதும் என்றும் நினைக்கமாட்டார்கள்.

 

நிச்சயமாக.. இன்னொரு மனிதப் பேரிடர்.. எழும்புக்கூட்டு வாழ்க்கையை தமிழர்கள் விரும்பமாட்டார்கள். ஆனால்.. போர் முடிந்து கடந்த 3 ஆண்டுகளில் போர் நடந்த போது நிகழ்ந்த மரணங்களுக்கு ஒப்ப மரணங்கள் நிகழ்ந்துள்ளன. ஆனால்.. ஒப்பீட்டளவில் அவை தந்த பாதிப்புக்கள் என்பது போர்க்கால மரணங்கள் தந்த பாதிப்புக்கள் போன்றதாக இல்லை. இது இன அழிப்புச் செய்யும் எதிரிக்கு ஒரு சாதகமான அம்சமாக உள்ளது.

 

அண்மையில் ஒரு கள உறவின் குறிப்புப் பார்த்தேன்.. போர்  முடிந்து 3 ஆண்டுகள் மக்கள் நிம்மதியாக இருக்கினம் என்று  குறிப்பிட்டிருந்தார். ஆனால் அந்த உறவின் பார்வையில் போரின் பின்னான காலத்தில் நடந்த மரணங்களும் காணாமல் போதல்களும் மறைக்கப்பட்ட கொடுமை என்பது சாதாரணமானதல்ல. அது வெளிப்படையாகப் போர் ஒன்று செய்யும் தாக்கத்தை விட ஆபத்தானது..!

 

மற்றும்படி.. போராட வேண்டுமா.. இல்லையா என்பதை தீர்மானிக்க வேண்டியது அவலத்தில் இருந்து மீள விரும்பும் மக்களின் உரிமை. நாங்கள் கேள்வி கேட்கலாமே தவிர.. அவர்களுக்கு வகுப்பெடுக்க முடியாது. :):icon_idea:

Edited by nedukkalapoovan

No One .

வரும் காலங்களில் ஆயுதப் போராட்டம் ஆரம்பிக்கக் கூடிய சாத்தியமில்லை.

 

அப்படியென்று ஒரு கதைக்கு எடுத்துக் கொண்டால், லிபியா மாதிரி மற்றைய நாடுகளின் ஆதரவுடன் குறுகிய காலத்தில் நடக்க வேண்டும். அந்த நிலையில் தனி குழுக்களுக்கு ஆதரவு இல்லை. தமிழ் குழுவாகச் செயல்பட வேண்டும்.  பேரழிவைத் தந்த குழுநிலை வாத போராட்ட முறையைத் தெரிந்தெடுத்தால், மீண்டும் அழிவில்தான் கொண்டு விடும்.

 

முன்பு சேர, சோழ, பாண்டியன்.  பின்பு 32 இயக்கங்களை தங்களுக்குள் அடிபட்டுக் கொண்டு ஒரு இலட்சியத்தை / இலக்கை நோக்கி நகர்வதாக எண்ணிக் கொண்டு அழிவை  நோக்கி முன்னேறிய வரலாறு மீண்டும் வேண்டாம்.

Edited by தப்பிலி

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் மட்டுமே எனது தெரிவு!!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழர்களின் இனப்பிரச்சினை தீர்க்கப்டாத போது, இதற்க்கான தேள்வையும் முடிவு பெறவில்லை, சர்வதேசத்தில் நைறுதி நம்மபிக்கையும் அற்று போகும் பட்டசத்தில், இதற்கான தேள்வை முகிழ்க்கும், அனால் அது அங்கு இருக்கும் புதிய வர்களாளேயே உருவாகும். தமிழ் இனம் அதை விரும்பாத போதும் சிங்களம் தமிழ் இனத்தை அதைநோக்கியே நக்ர்த்தும்,அதற்க்கு முதல் அங்கு இருப்பவர்கள் ஆசூவாசபட்டு கொள்ள சிலகாலம் செல்லலாம். எந்த இனமும் அடிமையாக இருக்க விரும்புவதில்லை.

 

  • கருத்துக்கள உறவுகள்

நான் புலிகளை தெரிவு செய்துள்ளேன்.புலிகள் ஒரு நல்ல கட்டமைப்புடன் போராட்ட இயக்கத்தை வழி நடத்தியவர்கள்.

போரை நாம் விரும்பவில்லை, அப்படி ஒரு சூழ் நிலை வந்தால் எந்த இயக்கம் மக்களோடு மக்களாக நின்று போராடுகிறார்களோ ( புலிகள் மாதிரி) அவர்களுக்கு என்றும் ஆதரவு உண்டு. இப்ப நாம் உள்ள நிலையில் இந்தியா இல்லாத ஒரு வல்லரசின் ஆதரவுடன் இது சாத்தியம் ஆகலாம். அப்போதும் குட்டையை குழப்ப எம்முள் ஒரு மூன்றாம் படை இருக்கும். அதை புலிகள் எப்படி எதிர் கொண்டார்கள் என்பது எதிரிக்கும் தெரியும்.

கேள்வியில் சிறு மாற்றம் செய்து பாருங்கள்

 

கீழே  உள்ள மாதிரி ஒரு மாற்றம் செய்து மீண்டும் போட்டுப் பாருங்கள்

 

"ஆயுத வழியில் மீண்டும் ஒரு தமிழீழப் போராட்டத்திற்கு எந்த அமைப்பை ஆதரித்து உங்கள் பிள்ளைகளையும் போராட அனுப்புவீர்கள்?" என

 

அப்ப தெரிந்து இருக்கும் இங்கே இராணுவ போராட்டத்துக்கு தெரிவு செய்தவர்களின் உண்மையான வாக்களிப்பு என்னவென்று.

 

தமிழில் புளிச்சல் ஏவறைத் தனம் என்பது இப்படியான வாக்கெடுப்புகளைத் தான்.

 

 

 

 

புலிகள் மட்டுமே எனது தெரிவு!!!

  • கருத்துக்கள உறவுகள்

No One .

 

என்பதையே  தெரிவு செய்தேன்.

வாக்களித்து முடிந்ததும் பார்த்தபோது

புலிகள் மற்றும்

No One

இரண்டுமே  தெரிவு செயய்யப்பட்டிருப்பதை பார்த்தபோது..........

 

எனது தெரிவு சரியென்றே  தெரிகிறது.

ஏனெனில் இனிமேல் புலிகள் வந்து போராடவேண்டும் என்று நான் விரும்பப்போவதில்லை.  அவர்களை  விட்டுவிடுவதே சரி.

 

அப்படியானால் எவர்  போராடுவது??

எவருமே இல்லை.

எமக்குள் ஒற்றுமையை  இனி  கொண்டுவர  எவராலும்  முடியாது.  அதற்கு யாழே  சாட்சி.

இனி வெளிநாடுகள்  ஏதாவது செய்தாலொளிய  தமிழருக்கு மீட்சி  இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

இதற்கு எனது மேலான உருட்டும் முழிகளைப் பதிலாக இடுகிறேன்..!

 

:rolleyes: :rolleyes: :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்
இதற்கு எனது மேலான உருட்டும் முழிகளைப் பதிலாக இடுகிறேன்..!

 

:rolleyes: :rolleyes: :rolleyes:

 

நீங்கள் மேலே  பார்த்தாலும்

கீழே  பார்த்தாலும்

பாவம்

விட்டு விடுங்களேன்

இதற்கு ஒரு பதிலாக தமிழீழ விடுதலையை நேசிக்கும் எல்லா அமைப்பையும் சேர்ந்தவர்கள் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்றும் ஒரு தெரிவை வைத்திருந்தால் நல்லது.
 
இனி ஒரு ஆயுத போராட்டத்தை நான் விரும்பவில்லை. இருந்தாலும் சிங்களம் அதை எம்மீது திணித்தால் ஆயுதம் ஏந்தி போராடுவதை தவிர வேறு வழி இல்லை. அதற்கு நானும் என் குடும்பமும் பங்கெடுக்க தயார்.
 
நாங்கள் என்ன ஆயுதம் எடுக்க வேண்டும் என்பதை எதிரியே தீர்மானிக்கிறான்.
  • கருத்துக்கள உறவுகள்

சம்மந்தன் ஐயா இடுப்பில பிஸ்டல கட்டிக்கொண்டு நிக்கிறதா பாக்க எனக்கு ஆசையா இருக்கு சோ அவர் தலைமையில் ஒரு ஆயுதப்போராட்டம் தொடங்கினால் எனது மகத்தான ஆதரவு அவருக்கே

 No one!!

  • கருத்துக்கள உறவுகள்
நான் சுண்ட‌ல் தலைமையில் நெடுக்கர்,த.சூரியன் குடும்பம்,விசுகு அண்ணா குடும்பம்,இசைக் கலைஞன் குடும்பம் போராட‌ப் போனால் அவர்களுக்கு தான் என்ட‌ ஆதர‌வைக் கொடுப்பேன்.
 
இனி போராடுவதா? அப்படி போராடுவதானால் யாருடைய தலைமையில் போராடுவது என தீர்மானிக்க வேண்டியது அங்குள்ள மக்களே!
 
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
நான் சுண்ட‌ல் தலைமையில் நெடுக்கர்,த.சூரியன் குடும்பம்,விசுகு அண்ணா குடும்பம்,இசைக் கலைஞன் குடும்பம் போராட‌ப் போனால் அவர்களுக்கு தான் என்ட‌ ஆதர‌வைக் கொடுப்பேன்.
 
இனி போராடுவதா? அப்படி போராடுவதானால் யாருடைய தலைமையில் போராடுவது என தீர்மானிக்க வேண்டியது அங்குள்ள மக்களே!
 
 

 

உங்கள் ஆதரவை விட உபத்திரபமே அதிகம் இருக்கும். அதனால் நாங்கள் மீண்டும் களத்திற்குப் போனால்.. உங்கள் ஆதரவு தேவையில்லை..! நாங்களே ஏலவே களத்தில் இருந்து தான் வந்தனாங்கள். உங்களைப் போல வீட்டுக்க கிடந்திட்டு நேரா பிளேன் ஏறி வரல்ல..! :lol::icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தில் வாழும் தமிழ்மக்கள் தலைமையேற்று நடத்தப் போகின்ற மக்கள் போராட்டத்திற்கே 

எனது ஆதரவு.

 

அந்த அடிப்படையில் மேலே குறிப்பிட்ட  ஆயுதப் போராட்டக் குழுக்கள் மக்கள் பின் 

ஒற்றுமையாக அணிதிரண்டால் அவர்களுக்கும் எனது ஆதரவு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.