Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வேட்டை.............

Featured Replies

1977 ல் ஒருநாள் காலைமை எங்கடை வீட்டு கோலிலை இருந்து படிக்கின்றன் எண்டு  அப்பாவுக்கு படம் காட்டிக்கொண்டிருந்தன் . எனக்கு அப்பாவிலை செரியான கோபம் . நான் தமிழிலை 85 மாக்ஸ் எடுத்தனான் . அவருக்கு நான் 95 மாக்ஸ் எடுக்கேலையெண்டு தென்னம்பாழையாலை தன்ரை கோபத்தை என்னிலை தீத்து போட்டார் .  நான்தான் வகுப்பிலை கெட்டிக்காறன் . எலாப்பாடத்திலையும் 80க்கு மேலை எடுப்பன் .  நல்லாய் விளையாடுவன் . நான்தான் உயரம் பாயிறதிலையும் சரி , குண்டு எறியிறதிலையும் சரி ,  உதைபந்து அடிக்கிறதிலையும் சரி முதல் ஆள் . இதாலை பெட்டையளிட்டை போட்டி  ஆர் என்னோடை கூடப் பளகிறதெண்டு . இந்த குவாலிபிக்கேசன் எல்லாம் என்ரை அப்பரை குளித்திப்படுத்தேலை . என்னை தென்னம்பாழையாலை வகுந்து போட்டார் .

 

அப்பர் அடிச்ச காயம் எனக்கு செரியான கோபத்தை கிளறி போட்டிது . நான் சாப்பிடாமல் அடம் பிடிச்சன் . அம்மாச்சி வேப்பண்ணை பூசி சமாதானத்துக்கு வந்திது . நான் அம்மாச்சியோடையும் கதைக்கேலை .  இண்டைக்கு காலமை எழும்பி தமிழ் புத்தகத்தை துறந்து வைச்சுக்கொண்டு சும்மா  படம் காட்டிக்கொண்டிருந்தன் . சந்திரனும் முயலும் பாட்டும் எனக்கு மண்டையிலை ஏறேலை . எங்கடை கறுவல் நாய் காலடியிலை கிடந்து என்னைப் பாத்து கொண்டிருந்திது .

 

தூரத்திலை  நாயள் குலைச்சு கேட்டிது . அதோடை விசில் சத்தங்களும் கேட்டிது . எனக்கு ஒண்டுமாய் விளங்கேலை . நாயள் குலைச்ச சத்தம் வரவர கிட்டீச்சுது என்ரை காலடியியைலை கிடந்த கறுவல் காதை நிமித்தி எழும்பி நிண்டு எதிர்பாட்டு பாட ஆயுத்தப்படுத்தீச்சிது .  நான் மெதுவாய் ஒழுங்கையை எட்டிப் பாத்தன் . ஒழுக்கையில ஐஞ்சாறு மண்ணிற வேட்டை நாயள் நாக்கை தொங்கப் போட்டுக்கொண்டு வந்திதுகள் . அவைக்கு பின்னாலை கறுவல் நிறத்திலை கோமணம் கட்டிக்கொண்டு ஒரு ஏழு எட்டு பேர் வந்து கொண்டிருந்தினம் . அவையளுக்கு பின்னாலை வைத்தியும் புண்ணாக்கும் ஓடிக்கொண்டு வந்தாங்கள் . எங்கடை கேற்றடியிலை நிண்டு என்னை பாத்து சொன்னாங்கள் ,

 

" டேய் பத்து இடியப்பம் வேட்டைக்காங்கள் வந்திருக்கிறாங்கள் . வாடா பம்பல் பாப்பம் " எண்டு .

 

நான் ஒருக்கா வீட்டை பாத்துப் போட்டு நானும் அவங்களோடை சேந்து ஓடினன் . எங்களோடை சேந்து சின்னன் பொன்னன் எல்லாம் எங்களுக்குப் பின்னாலை ஓடியந்திதுகள் . வேட்டை காறர் கேணியடிக்கு பக்கத்திலை இருந்த சிறாப்பற்ரை பத்தை காணியிலை நிண்டாங்கள் .  சிறப்பற்றை காணிக்குள்ளை நாயுண்ணி பத்தையளும் கொஞ்சம் பெரிய மரங்களும்தான் கிடக்கு .  நாங்கள் நாயளுக்கு பின்னாலை நிண்டம் . எங்களுக்கு கிட்ட போக பயமாய் கிடந்திது . அதுகள் இடுப்புக்கு கிட்ட  உயரமாய் நிண்டுதுகள்.

 

நாங்கள் நாயளை பாத்துக்கொண்டு நிக்க , சிறாப்பற்றை காணியிலை கிடந்த ** நாயுண்ணிபத்தைக்கை ஒரு அசுமாத்தத்தை கண்ட வேட்டைகாறன் தன்ரை பீப்பீ குழலை ஊதி கொண்டு ,  நாயளை பாத்து "சூய்............... "  எண்டான் .  பத்தைக்குள்ளை ரெண்டு காட்டு முயலுகள் பிச்சுக்கொண்டு ஒட , நாயள் விட்டு கலைச்சுதுகள் . நாங்கள் நாயளைப் பாத்து ஓடு........ ஓடு.......... எண்டு கத்தினம் . வேட்டைக்காறர் பீப்பீயை ஊதிறிதை நிப்பாட்டாமல் ஊதீச்சினம் . ஓடின நாயள் தூரத்திலை போய் காட்டுமுயலை கழுத்தான் குத்தியிலை பிடிச்சு கொண்டு திரும்பி எங்கடை பக்கம் ஓடியந்திதுகள் . முயலுகளின்ரை கழுத்திலை ரத்தம் வந்திது . ஒரு வேட்டைக்காறன் முயலுகளை நாயளின்ரை வாயிலை இருந்து எடுத்து , தன்ரை இடுப்பிலை இருந்த வில்லுக்கத்தியாலை முயலின்ரை தோலை உரிச்சான்  . மற்றவன் பக்கத்திலை நிண்ட பனை வடலியிலை பனை ஓலையை வெட்டி தொன்னை செஞ்சு அதிலை முயலுகளை போட்டு கட்டினான் . 

 

பக்கத்திலை நிண்ட இலுப்பை மரத்திலை நிண்டு விளையாடிக்கொண்டு இருந்த  அணிலுக்கு அண்டைக்கு பாத்து சனி வக்கிரிச்சு போட்டிது . வைத்தியோடை நிண்ட வேட்டைக்காறன் தன்ரை கையில இருந்த கெற்றம் போலாலிலை கல்லை வைச்சு ஒரு கண்ணை மூடிக்கொண்டு இழுத்து அணிலின்ரை தலைக்கு அடிச்சான் . அணில் சுறுண்டு விழுந்திது . புண்ணாக்கு அணில் விழுந்ததை வாயை பிளந்து கொண்டு பாத்தான் . அணிலும் பனை ஓலை தொன்னைக்குள்ளை போச்சிது . நாயள் பேந்தும் ஒரு முயலை கலைச்சு கொண்டு ஓடீச்சிதுகள் . இந்தமுறை முயல் நாயளை உச்சிப்போட்டுது . ஆனால் நாயள் முயல் ஒழிச்ச பத்தையை சுத்தி ரவுண்டப் பண்ணீட்டுதுகள் . கடைசியில முயலை ஒரு நாய் பத்தைக்குள்ளை பூந்து கழுத்திலை பிடிச்சு கொண்டு வர , மற்ற நாயளும் ஆரவாரப்பட்டு எல்லாம் ஓடி வந்தீச்சிதுகள் . அந்தமுயலும் பனை ஓலைக்குள்ளை போச்சிது .

 

வேட்டை காறர் அண்டைக்கு செய்த வேலையாலை எங்கடை மூண்டு கூட்டுக்கும் நல்ல பம்பல் . அவை எல்லா இறைச்சி தொன்னையளையும் இடுப்பிலை கட்டி நாயளை கூட்டி கொண்டு திரும்ப ஒழுங்கையாலை வந்தீச்சினம் . வேட்டைக்காறங்களை பாத்த அம்மாச்சிக்கு அண்டங்கிண்டம் எல்லாம் பத்தீச்சிது . அவங்களை தூசணத்தாலை பேசி எனக்கு நல்ல மண்டகப்படி தந்திது .

 

 1985 ஒருநாள் காலமை நான் பள்ளிகூடம் வெளிக்கிட்டு ஒழுங்கை தண்டி பருத்திதுறை றோட்டுக்கு வந்தன் . தூரத்திலை ஒரு உறுமல் சத்தம் கேக்கிது . எனக்கு விளங்கீட்டுது வேட்டைகாறங்கள் வாறாங்கள் எண்டு .  கவசவாகனத்திலை வந்த வேட்டைக்காறர் என்னோடை வந்த வைத்தி , புண்ணாக்கு , தோப்பிளாண்டி , சுறுக்கன் எல்லாரையும் உடுப்பை கழட்டி பெண்டறோடை றோட்டிலை படுக்க வைச்சுபோட்டாங்கள் . நாங்கள் சிறாப்பற்றை நாயுண்ணி பத்தைக்குளால ஓடின காட்டுமுயலுகள் மாதிரி முழுசிக்கொண்டு றோட்டிலை படுத்திருந்தம் .

 

யாவும் உண்மையே

 

** ஒரு வரி கதையின் தேவை கருதி சேர்கப்பட்டுள்ளது .

Edited by கோமகன்

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல காலம் பத்தைக்குள முயலோட போச்சு வேற ஒண்டும் இல்லை என்ற கடவுளே வேற ஏதாச்சும் இருந்திருந்தா என்ன ஆகி இருக்கும்? நினைச்சு பாக்கவே பயமா இருக்கு :D

நினைவுப்பகிர்வு அருமை பாராட்டுக்கள்

  • கருத்துக்கள உறவுகள்

வேட்டைக்காரர்கள் இப்பொழுது அடிக்கடி வெளிப்படும் தேசமாகிவிட்டது ஈழம்..அருமையான பகிர்வு..பாராட்டுக்கள்..

வேட்டைக்காரர்களின் இலக்குகள் இன்று முயல்களை தாண்டி, குஞ்சு கிளிகளையும் குறிவைத்து குதறுகின்றன //////////////////////கதையாக சொன்னவிதம் அருமை கோமகன் ஐயா.

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான பதிவு கோமஸ்.. வேட்டைக்காரர் டிசைன் டிசைனா இருக்கினம்..

  • கருத்துக்கள உறவுகள்

கிராமத்துத் தமிழில், நல்ல ஒரு பதிவு, கோமகன்!

தொடர்ந்து கிராமத் தமிழில், எழுதுங்கள், நல்லாயிருக்கு!

 

 

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு கெட்டிக்காரராய் இருந்திருக்கிறீங்கள் கோமகன்...பிறகு என்ன நடந்தது படிப்பு குழம்பி போயிட்டுதே?

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாக இருக்கிறது, தொடர்ந்து பகிருங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

கோ வட்டார வழக்கிலை நல்லதொரு கதை .நீங்கள் எழுதிய இறைச்சி வைப்பதற்கு  பனை ஓலையால் செய்யும் தொன்னையை  எங்கள் ஊரில்  பறி. அல்லது உமல் எண்டும் சொல்கிறவை. தொடருங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

சுப்பேர்ப்.....நல்ல கதை தந்த கோமகனுக்கு நன்றிகள்

மிருக வேட்டை மனித வேட்டையாகிவிட்டதை பகிர்ந்திருக்கிறீர்கள் கோ அண்ணா! ஆனாலும் முயல் வேட்டை நடக்கிற போது முயலுகள் காட்டிக் குடுக்கேல்லை. ஆனால் மனிசர் தான் மனிசரையே காட்டிக் குடுத்து ஆருவருக்கத்தக்க விதமா நடக்கினம்...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்கண்டை ஏரியாவிலை வேட்டைக்காரர் முயல் மட்டுமில்லை அகழி போல வெட்டி சுண்டெலி கூட பிடிப்பார்கள்.

எழுதுவதற்கு பல விடையங்கள் இருக்கு என்பதை உணர்த்தியுள்ளீர்கள். மறந்து போன நினைவுகளை மீட்டியிருக்கிறீர்கள் வாழ்த்துக்கள் அண்ணா பதிவுக்கு. :)

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கதை கோ. வகுப்பில நான்தான் கெட்டிக்காரன் எண்டு சொன்னதுதான்............. :D

எனக்கும் இப்படியான அனுபங்கள் உண்டு .வெள்ளெலி ,அகிழான்,காடை ,கவுதாரி என்றெல்லாம் பிடிப்பார்கள் .பனை ,தென்னையில் இருக்கும் அணிலை பிடிக்க மரத்தின் அடியில் கல்லால் குத்துவார்கள் ,அணில் பயத்தில் பாயும் போது ஒரே அடி .அணில் அம்புட்டுத்தான் .

வேட்டை நாய்கள் மட்டும் மாறவில்லை கோ, நாங்கள் வளர்த்த கறுப்பன்களுமே இரத்த ருசி கண்டு எம்மை கடித்து குதறியதுதான் கொடுமையிலும் கொடுமை .

இப்படியான ஆக்கங்கள் பல  உங்களிடம் இருந்து எதிர்பார்க்கின்றேன் .

  • கருத்துக்கள உறவுகள்
எனக்கும் இப்படியான அனுபங்கள் உண்டு .வெள்ளெலி ,அகிழான்,காடை ,கவுதாரி என்றெல்லாம் பிடிப்பார்கள் .பனை ,தென்னையில் இருக்கும் அணிலை பிடிக்க மரத்தின் அடியில் கல்லால் குத்துவார்கள் ,அணில் பயத்தில் பாயும் போது ஒரே அடி .அணில் அம்புட்டுத்தான் .

வேட்டை நாய்கள் மட்டும் மாறவில்லை கோ, நாங்கள் வளர்த்த கறுப்பன்களுமே இரத்த ருசி கண்டு எம்மை கடித்து குதறியதுதான் கொடுமையிலும் கொடுமை .

இப்படியான ஆக்கங்கள் பல  உங்களிடம் இருந்து எதிர்பார்க்கின்றேன் .

 

மூணாம் வகுப்பு படிக்கும்போது எங்க ஊரு மொள்ளைமாரி ஒண்டு முயலைக்கண்டால் முழங்கால்ல கல்லால குத்து ரத்தம் வந்தா முயல் ஓடாதின்னு சொல்லி பேய்க்காட்டி இருக்கான்.. :D

  • தொடங்கியவர்

நல்ல காலம் பத்தைக்குள முயலோட போச்சு வேற ஒண்டும் இல்லை

என்ற கடவுளே வேற ஏதாச்சும் இருந்திருந்தா என்ன ஆகி இருக்கும்? நினைச்சு பாக்கவே பயமா இருக்கு

:D

நினைவுப்பகிர்வு அருமை பாராட்டுக்கள்

 

 

ஏன் உங்களுக்கு எப்பவும் குறுக்காலபோன புத்தி  :lol:  :lol:  ?? வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிகள் சுண்டல்  :)  :)  .

  • கருத்துக்கள உறவுகள்

வேட்டைக்காரர் என்றால் குறவர்களா அல்லது இலங்கையின் ஆதிக்குடி வேடுவர்களா?

 

இப்படியான வேட்டை எல்லாம் யாழ்ப்பாணப் பகுதியில் நடந்தது என்பது ஆச்சரியமான விடயம்தான்..

 

 

கோ வட்டார வழக்கிலை நல்லதொரு கதை .நீங்கள் எழுதிய இறைச்சி வைப்பதற்கு  பனை ஓலையால் செய்யும் தொன்னையை  எங்கள் ஊரில்  பறி. அல்லது உமல் எண்டும் சொல்கிறவை. தொடருங்கள்

 

எங்கள் ஊரில் பனையோலையில் சாப்பிடத் தட்டுவம், குடிக்கப் பிளா எல்லாம் செய்வார்கள். தொன்னை பலா இலையில் கூழ் குடிக்கச் செய்வது!

  • கருத்துக்கள உறவுகள்

ஊரங்குச்சட்டம் போட்டிருக்ற நேரம் நாங்களே (கொஞ்ச பொடி சைஸுகள்)வேட்டையாடியிருக்கிறோம்.நன்றி கோ பழசை கிளறியதுக்கு.

  • தொடங்கியவர்
வேட்டைக்காரர்கள் இப்பொழுது அடிக்கடி வெளிப்படும் தேசமாகிவிட்டது ஈழம்..அருமையான பகிர்வு..பாராட்டுக்கள்..

 

 

உங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றிகள் சுபேஸ் :) :) .

  • தொடங்கியவர்
வேட்டைக்காரர்களின் இலக்குகள் இன்று முயல்களை தாண்டி, குஞ்சு கிளிகளையும் குறிவைத்து குதறுகின்றன //////////////////////கதையாக சொன்னவிதம் அருமை கோமகன் ஐயா.

 

ஆம்..........   அப்போது நாங்கள் பம்பலாய் பாத்த உண்மையான முயல் பிடிக்கிற வேட்டைக்காறரிக்கும் , இப்ப இருக்கிற வேட்டைக்காறரையும் பாத்தால் எவ்வளவோ வித்தியாசம் . மிக்க  நன்றி நேற்கொழு வருகைக்கும் கருத்திற்கும் .

  • தொடங்கியவர்
அருமையான பதிவு கோமஸ்.. வேட்டைக்காரர் டிசைன் டிசைனா இருக்கினம்..

 

அந்த டிசைனுகளை விளப்பமாய் சொன்னால் பிள்ளையள் ஆர்வமாய் கேப்பினமல்லோ :lol::D ? வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள் இசை :) :) .

  • தொடங்கியவர்
கிராமத்துத் தமிழில், நல்ல ஒரு பதிவு, கோமகன்!

தொடர்ந்து கிராமத் தமிழில், எழுதுங்கள், நல்லாயிருக்கு!

 

செய்தால் போச்சு ? உங்கடை ஆசையை எப்ப தட்டினனான் ?? ஆனால் எல்லாருக்கும் விளங்குமோ புங்கையார் ??  அதையும் யோசிக்கிறன் . உங்கடை வரத்துக்கும் கருத்துக்கும் நன்றி சொல்லிறன் :) :) .

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொருவருக்கும் ஊரில் நிகழ்ந்த ஆக்கிரமிப்பாளர்களின் தாக்கம் வேறு வேறானது கோமகனின் அனுபவம் இம்முறை வளமையைவிட வித்தியாசமான எழுத்தின் மண்வாசனையோடு வந்திருக்கிறது வாழ்த்துக்கள்.

  • தொடங்கியவர்
இவ்வளவு கெட்டிக்காரராய் இருந்திருக்கிறீங்கள் கோமகன்...பிறகு என்ன நடந்தது படிப்பு குழம்பி போயிட்டுதே?

 

நீங்கள் நினைக்கிறமாதிரி படிப்பு குளம்பேலை . யாழ் இந்துவிலை ஏல் படிச்சு போட்டு இந்தியாவிலை படிச்சன் . பேந்து இங்கை வந்து பிறென்ஜ் அலையன்ஸ் பிறான்சேய்ஸ் இலை படிச்சன் . உங்கடை தம்பி கெட்டிக்காறன் . நன்றி உங்கடை கருத்துக்கு .

  • தொடங்கியவர்
நன்றாக இருக்கிறது, தொடர்ந்து பகிருங்கள்

 

வரவுக்கும் கருத்திற்கும் நன்றி உடையார் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.