Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரபல கவிஞர் வாலி காலமானார்.

Featured Replies

தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த கவிஞர் வாலி சுயநினைவை இழந்தா நிலையில் சற்று முன்னர் காலமானார். நுரையீரல் மற்றும் சுவாசக் கோளாறினால் பாதிக்கப்பட்ட கவிஞர் வாலி(82) கடந்த யூன் 7ம் திகதி சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கவிஞர் வாலி சிகிச்சை பலனின்றி   காலமானார்.

 

http://dinaithal.com/cinema/17332-wali-died-a-famous-poet.html

  • Replies 61
  • Views 8.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

அஞ்சலிகள்

செந்தமிழ்க் கவிஞர் காவியக் கவிஞர் என் உயிரிலும் மேலான கவிஞர் வாலி அவர்களுக்கு என் ஆத்மார்த்தமான அஞ்சலிகள். அவரின் குடும்பத்தாருக்கு எமது ஆறுதல்கள் 

 

வாலிபக் கவிஞருக்கு இரங்கற்பா!

-----------------------------------------------------

தலை நரை கடந்தும் 

தலைமுறை கடந்தும்

நரைக்காத எழுத்துக்கு 

சொந்தக்காரரே!

எத்தகு பாடல் கேட்டாலும்

யார் கேட்டாலும்

அள்ளக்குறையா 

உன் மனக்கேணியில்

வாளி வாளியாய் இறைத்து

திரையுலகின் மனம் நிறைத்த

வாலியே!

இலக்கியத்தில் 

வண்ணத்தமிழ் குழந்தைக்கு 

பாலூட்டும் தாயாகவும் 

திரையுலகில் 

தாய் சொல்லைத் தட்டாத 

செல்லக் குழந்தையாகவும்

கூடு விட்டு கூடு பாய்ந்த 

வித்தகனே!

கூடு விட்டுப் போனதேன் இன்று? 

திரையுலகில் 

இளையோர் பெரியோர் 

அனைவருக்கும் 

இனியவர் வாலி! 

இனி எவர் ? 

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணீர் அஞ்சலிகள் !!!!!

  • கருத்துக்கள உறவுகள்

மனந்தோய்ந்த கண்ணீர் வணக்கங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணீர் அஞ்சலிகள் !

கவிஞர் வாலி அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலிகள் !!!

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணீர் அஞ்சலிகள்

ஆயிரக்கணக்கான பாடல் வரிகள் மூலம் கோடிக்கணக்கான தமிழர்களை மகிழ்வித்த கவிஞருக்கு நன்றியும் இறுதி வணக்கமும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கண்ணீர் அஞ்சலிகள் 

தமிழ் சினிமாவின் இணையற்ற கவிஞர்களில் ஒருவரும், சாகை வரம் பெற்ற பல தேமதுர தமிழ்ப் பாடல்களைப் படைத்தவருமான கவிஞர் வாலி இன்று மாலை 5 மணிக்கு மரணமடைந்தார்.

அவருக்கு வயது 82.

வாலியின் இயற்பெயர் ரங்கராஜன். ஸ்ரீரங்கத்தில் 1931-ம் ஆண்டு பிறந்தவர். ஆரம்பத்தில் அகில இந்திய வானொலியில் நிலையக் கலைஞராக பணி்யாற்றிய வாலி, பின்னர் சினிமாவில் பாடலாசிரியராக 1958-ல் வாழ்க்கையைத் தொடங்கினார்.

 

18-vaali-poeter-600.jpg

 

எம்ஜிஆருக்காக நல்லவன் வாழ்வான் படத்தில் முதல் முதலாக பாடல் எழுதினார் வாலி. பின்னர் எம்ஜிஆரின் தர்பாரில் ஆஸ்தான கவிஞராக கடைசி வரை இருந்தார்.

திரையுலகில் அதிக பாடல்களை எழுதிய சாதனையாளர் வாலி. இதுவரை 10000 பாடல்களுக்கும் மேல் அவர் எழுதியுள்ளார்.

ஏற்கெனவே இதய அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட வாலிக்கு, நுரையீரல் தொற்று மற்றும் அதிகமான சளியின் காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டது. சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

40 நாட்களாக அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. கடந்த சில தினங்களுக்கு முன்பு மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் 2 நாட்களாக செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று மாலை 5 மணிக்கு அவரது உயிர் பிரிந்தது. 1958-ம் ஆண்டு படங்களுக்கு பாடல்கள் எழுதத் துவங்கிய கவிஞர் வாலி இதுவரை ஆயிரம் படங்களுக்கு மேல் பாடல்கள் எழுதியுள்ளார். பத்மஸ்ரீ மற்றும் தேசிய விருதுகளையும் பெற்றுள்ளார். சில படங்களுக்கு கதை வசனமும் எழுதியுள்ள வாலி, தமிழ் இலக்கியத்துக்கு தன் பங்களிப்பாக அவதார புருஷன் உள்ளிட்ட பல அரிய நூல்களை எழுதியுள்ளார்.

பொய்க்கால் குதிரை, சத்யா, ஹே ராம், பார்த்தாலே பரவசம் உள்ளிட்ட படங்களில் நடிகராகவும் பாராட்டுப் பெற்றுள்ளார்.

வாலியின் மனைவி சில ஆண்டுகளுக்கு முன் மறைந்துவிட்டார்.

வயது வித்தியாசம், ஈகோ மோதல் எதுவுமின்றி அனைவருடனும் இனிமையாகவும் உரிமையாகவும் பழகிய கவிஞரின் மறைவு தமிழ் திரையுலகை அதிர்ச்சியிலும் வேதனையிலும் ஆழ்த்தியுள்ளது.

www.thatstamil.com

 

VaaliM.jpg

தமிழ் சினிமாவின் இணையற்ற கவிஞர்களில் ஒருவரும், சாகை வரம் பெற்ற பல தேமதுர தமிழ்ப் பாடல்களைப் படைத்தவருமான கவிஞர் வாலி இன்று மாலை 5 மணிக்கு மரணமடைந்தார். அவருக்கு வயது 82.
 

மேலும் வாசிக்க...http://tamilworldtoday.com/?p=23152

  • கருத்துக்கள உறவுகள்
எம்.ஜி.ஆர். முதல் தனுஷ் வரை!

உடல்நலக்குறைவால் காலமான கவிஞர் வாலி திரைப்படங்களில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை எழுதியுள்ளார்.

திருச்சி அருகே ஸ்ரீரங்கத்தில் 1931ல் பிறந்த வாலியின் இயற்பெயர் ரங்கராஜன். எம்.ஜி.ஆர். தொடங்கி தற்போது உள்ள... தனுஷ் வரை பல்வேறு கதாநாயகர்களுக்கு திரைப்படங்களில் பாடல் எழுதியுள்ளார்

கவிஞர் வாலிக்கு 2007ம் ஆண்டுக்கான பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது

சிறந்த பாடலாசிரியருக்கான தமிழக அரசின் விருதை 5 முறை பெற்றவர் கவிஞர் வாலி

சிறுகதை, கவிதை, உரைநடை நூல்களையும் வாலி எழுதியுள்ளார் கவிஞர் வாலி
 
 
  • கருத்துக்கள உறவுகள்

கவிஞர் வாலி (82) என்ற ரங்கராஜன் அவர்கள் காலமானார்..

1958ல் தொடங்கி இதுவரை 10,000 பாடல்களுக்கு மேல் எழுதியுள்ளார்...

ஆழந்த அனுதாபங்கள்.... 

 

கண்ணீர் அஞ்சலிகள் !!!

  • கருத்துக்கள உறவுகள்

ஆழந்த அனுதாபங்கள். :(

 

dc-631.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆழ்ந்த அனுதாபங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

கவிஞர் வாலி அவர்களின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்..!

Top-Stories-Image27.png

 

பிரபல கவிஞரும், சினிமா பாடலாசிரியருமான கவிஞர் வாலி(வயது 82) உடல்நலக் குறைவால் இன்று காலமானார்.

நுரையீரல் தொற்று காரணமாக அவதிப்பட்டு வந்த கவிஞர் வாலியின் உடல்நிலை மோசமானதை தொடர்ந்து, கடந்த மாதம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சில தினங்களில் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டவுடன், சிறப்பு வார்டுக்கு மாற்றப்பட்டார்.

இந்நிலையில் மீண்டும் அவருக்கு உடல்நிலை பாதித்ததை அடுத்து தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்டார்.

கடந்த சில நாட்களாக அங்கு சிகிச்சைப் பெற்று வந்த அவரது உடல்நிலை நேற்று முன்தினம் இரவு மிகவும் மோசமானது.

அவருக்கு மருத்துவர்கள் செயற்கை சுவாசம் பொருத்தி தீவிர சிகிச்சை அளித்து வந்தார்கள்.  இந்நிலையில் சிகிச்சை பலனின்றி கவிஞர் வாலி இன்று காலமானார்.

அவரது மறைவிற்கு ஏராளமான திரையுலகத்தை சேர்ந்தவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.  வாழ்க்கை வரலாறு

திருச்சி மாவட்டத்தில் பிறந்த வாலியின் இயற்பெயர் ரங்கராஜன்.

எம்.ஜி.ஆரை மக்களிடம் பிரபலப்படுத்த இவரது தத்துவ பாடல்கள் கொண்ட வார்த்தைகள், வரிகள் பெரிதும் உதவியாக இருந்தது.

See more at: http://vuin.com/news/tamil/vaali-famous-tamil-poet-and-lyricist-dies

  • கருத்துக்கள உறவுகள்

brilliant-sympathy-wreath-funeral-flower

 

தமிழீழத்தையும், அம்மக்களையும்... நேசித்த ஒரு, மிகப் பெரிய தெய்வக் கவிஞன்.

அவரின் இழப்பு, எமக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு.

அன்னாரின் ஆத்ம சாந்திக்கு பிரார்த்திப்பதுடன், அவரின் பிரிவால் துயரும்.. உற்றார், உறவினர், அவரின் ரசிகர்கள் ....... அனைவருக்கும் ஆழ்ந்த அஞ்சலிகள்.

ஆழ்ந்த அஞ்சலிகள் .

சந்தோசமாக போய்வாருங்கள் .நீங்கள் எமக்கு தந்த விட்டு போகும் சொத்துக்கள்  காலத்தால் அழியாதவை .

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வாண்டு தமிழ் திரையுலகம் பல மூத்த மற்றும் சிறப்பான கலைஞர்களை இழந்திருக்கிறது. அதில் வாலியும் இணைந்து கொண்டுள்ளார்.

 

ஐயாவின் மரணத்தை இட்டு.. ஆழ்ந்த இரங்கல்களும் கண்ணீரஞ்சலியும்.

Edited by nedukkalapoovan

தமிழர் சரித்திரத்தில் என்றும் அழிக்கமுடியாதபடி தனது கவிகளால் தமிழையும் ,கலையையும் வாழவைத்த தெய்வம் இன்று வானகம் சென்றதேனோ ......................உங்கள் ஆத்மா என்றும் இறைவனுள் நித்தியமாக இளைப்பாறக்கடவதாக ..............

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.