Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாங்களும் துரோகிகளே......

Featured Replies

1238347_710662875627034_2084550094_n.jpg

 

இத்தழிந்து போய்விடவில்லை

என் இனத்தின் நம்பிக்கை.

 

கொழுந்தெறித்து கிளைபரப்பிய

இனவிருட்சத்தின் வேர்களை கிளறியவனே

பார்......

 

செத்துவிடவில்லை எங்கள் வேர்களில்

இன்னும் நம்பிக்கை.

 

என்ன செய்யப்போகிறாய் இனி....

 

எங்களை

கொன்ற கதையை

யார்யாருக்கோவெல்லாம்

வென்ற கதையாக சொன்னாய்.....

 

எங்கள்

பிணங்களை புணர்ந்த பின்னான பொழுதை

மாலை புனைந்து கொண்டாடினாய்.....

 

எங்கள்

மகவுகளின் நெஞ்சுகளில்

நச்சுகுண்டுகளை விதைத்துவிட்டு

மண் வணங்கி மகிழ்ந்தாய்.....

 

உனக்கான காலமென்று ஒன்றிருந்தால்

எமக்கான காலமொன்றும் வரும் !

மீண்டும் வரும் !!

 

***********************

காலம் திரும்புகிறது.

 

நாச்சியார் விழிநீர் துடைக்கிறாள்

குருவிச்சியும் இனி வரக்கூடும்

வன்னியன் குதிரையின் காலடியும் கேட்கலாம்.

 

நாச்சியார் கோபம் இனி

நெடுங்காலம்  அடங்கிக்கிடக்காது.

எல்லாகேள்விகளையும் சுமந்திருக்கிறாள்.

 

வீரையும் பாலையும் நிலம் பிளந்து

வான்நோக்காது போனதுமில்லை,

வீரமும் வேகமும் கொண்டவன்

நேரமறிந்து எழுந்துகொள்ளாமல் போனதில்லை.

 

காலம் திரும்புகிறது. 

 

வல்லையிலும் ஆனையிறவிலும் 

கண்டல் காடுகளில் இருந்து எழுகிறது 

பெயர் தெரியாப்பறவை.

 

தொண்டைமானாற்றிலும் 

வளுக்கியாற்றிலும் மீண்டும் ஒலிக்கிறது 

துடுப்புக்களின் ஓசை.

 

பூநகிரியிலும் கல்லுண்டாயிலும் 

சன்னதம் கொள்கிறது காற்று 

தேவன் குறுச்சியிலும் வீரமாகளியம்மன்  திடலிலும் 

புறப்பாட்டின் குலவை எதிரொலிக்கிறது.

 

காலம் திரும்புகிறது.

*************

தாயின் கண்ணீரின் கனதியை 

கரங்களில் ஏந்ததுணிந்தவள்  

எப்படி சுமப்பாள்?

கண்ணீரின் காயாத பிசுபிசுப்பை 

எங்கே துடைப்பாள் இவள்.?

 

என் குழந்தையே..... 

துள்ளி விளையாடும் வயதினில் 

உன்னையும் இங்கழைத்தது 

எங்களின் விதியோ ?

 

எழுதுகோல் சுமந்து பள்ளிசெல்லும் நேரத்தில் 

படம் தந்து ரோட்டில் நிறுத்தியது 

எங்களின் இயலாமையோ ? 

 

விரல் நீட்டும்  உன் உணர்வுகூட 

எமக்கின்றிப்போனதே

மரணிதவர்களா நாம்?  

 

மன்னித்துவிடு மகளே 

உனக்கு முன் 

நாங்களும் துரோகிகளே...... 

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான உங்கள் வரிகள் நம்பிக்கை தருகின்றன கவிஞனே

  • கருத்துக்கள உறவுகள்
 
நேற்கொழு தாசன், கவிதைக்கு நன்றி.

விரல் நீட்டும்  உன் உணர்வுகூட 

எமக்கின்றிப்போனதே

மரணிதவர்களா நாம்?  

செத்துவிடவில்லை எங்கள் வேர்களில்

இன்னும் நம்பிக்கை.

 

நாச்சியார் விழிநீர் துடைக்கிறாள்

குருவிச்சியும் இனி வரக்கூடும்

வன்னியன் குதிரையின் காலடியும் கேட்கலாம்.

 

நாச்சியார் கோபம் இனி

நெடுங்காலம்  அடங்கிக்கிடக்காது.

எல்லாகேள்விகளையும் சுமந்திருக்கிறாள்.

 

வீரையும் பாலையும் நிலம் பிளந்து

வான்நோக்காது போனதுமில்லை,

வீரமும் வேகமும் கொண்டவன்

நேரமறிந்து எழுந்துகொள்ளாமல் போனதில்லை.

 

/// உங்கள் கவிதையின் பாடுபொருள் பல இடங்களுக்கும் தாவிச்சென்று ,  இறுதியில் ஆற்றாமையை வெளிப்படுத்தி நிற்கின்றது . ஓர் மிகச் சிறந்த கவிஞன் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளீர்கள்  கொழுவன் . உங்கள் கவிதைக்கு எனது மனங் கனிந்த வாழ்த்துக்கள் :) :) .

Edited by கோமகன்

  • கருத்துக்கள உறவுகள்

எங்கள்

பிணங்களை புணர்ந்த பின்னான பொழுதை

மாலை புனைந்து கொண்டாடினாய்.....

 

 

விரல் நீட்டும்  உன் உணர்வுகூட 

எமக்கின்றிப்போனதே

மரணிதவர்களா நாம்?  

 

மன்னித்துவிடு மகளே 

உனக்கு முன் 

நாங்களும் துரோகிகளே......

  • தொடங்கியவர்

சுமேரியர் அம்மா, nunavilan,தமிழ் சூரியன், kkran கோமகன், கவிஞர் poet  ,அபராஜிதன்  அனைவருக்கும் என் நன்றிகள். உங்களின் கருத்திடல்கள் என் இருத்தலை இன்னும் இன்னும் வளப்படுத்தும்.

 

  ///ஓர் மிகச் சிறந்த கவிஞன் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளீர்கள்  கொழுவன். கோமகன் //////// மன்னிக்க வேண்டும் கோமகன் ஐயா. நான் இன்னும் ஆரம்ப புள்ளியில் தான் இருக்கிறேன். எனக்கான அடுத்த கட்டங்களை அடைய உங்களைப் போன்றவர்களின் விமர்சனங்களே அதிகம் தேவை எனக்கு. விமர்சியுங்கள் அதற்காக காத்திருக்கிறேன். தவறென்றால் மன்னிக்க.  

  • கருத்துக்கள உறவுகள்

என் குழந்தையே..... 

துள்ளி விளையாடும் வயதினில் 

உன்னையும் இங்கழைத்தது 

எங்களின் விதியோ ?

 

எழுதுகோல் சுமந்து பள்ளிசெல்லும் நேரத்தில் 

படம் தந்து ரோட்டில் நிறுத்தியது 

ங்களின் இயலாமையோ ? 

 

 

இயலாமை தொக்கி நிற்கின்றதா? :( 

  • கருத்துக்கள உறவுகள்

எமது இழப்புக்களையும், ஏக்கங்களையும் கண் முன்னே கொண்டு வருகின்றன, வலிமை மிகுந்த உங்கள் வரிகள்!

 

எமது பொழுதும் ஒரு நாள் விடியும் என்னும் நம்பிக்கை சுமந்து வாழ்வோம்!

 

கவிதைக்கு நன்றிகள், தம்பி!

  • கருத்துக்கள உறவுகள்

நெற்கொழு மீண்டும் நம்பிக்கை நிறைத்து ஆற்றாமைகளின் மையத்திலிருந்து பொங்கி எழுந்திருக்கின்றன வரிகள். தொடர்க.

உங்கள் கவிதையின் ஒவ்வொரு வரியிலும்....

இயலாமையின் ஏக்கங்களை உடைத்தெறிந்துகொண்டு வெளிவரும் உணர்வெழுச்சியின் அதிர்வு தெரிகிறது நேற்கொழுதாசன்.

காலம் மாறும்...!

மிக்க நன்றி நேற்கொழுதாசன் :)

 

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு இனத்தின் போராட்டம் அந்த இனம் விடுதலை அடையும்வரை ஓயாது
 

கவிதைக்கு நன்றி தாசன்

  • கருத்துக்கள உறவுகள்

கவிதைக்கு நன்றிகள், தம்பி!

 

இக்கவி

இயலாமையைச்சுட்டி நிற்கிறது என்று பலராலும்  தெரிவிக்கப்பட்டாலும்

எனக்கு அது 

எதையே  கேட்பது போலுள்ளது

காலம்  கடந்துவிடவில்லையடா  தமிழா

முடியும்

உன்னால் முடியுமடா.........

  • கருத்துக்கள உறவுகள்

 

1238347_710662875627034_2084550094_n.jpg

 

இத்தழிந்து போய்விடவில்லை

என் இனத்தின் நம்பிக்கை.

 

கொழுந்தெறித்து கிளைபரப்பிய

இனவிருட்சத்தின் வேர்களை கிளறியவனே

பார்......

 

செத்துவிடவில்லை எங்கள் வேர்களில்

இன்னும் நம்பிக்கை.

 

என்ன செய்யப்போகிறாய் இனி....

 

எங்களை

கொன்ற கதையை

யார்யாருக்கோவெல்லாம்

வென்ற கதையாக சொன்னாய்.....

 

எங்கள்

பிணங்களை புணர்ந்த பின்னான பொழுதை

மாலை புனைந்து கொண்டாடினாய்.....

 

எங்கள்

மகவுகளின் நெஞ்சுகளில்

நச்சுகுண்டுகளை விதைத்துவிட்டு

மண் வணங்கி மகிழ்ந்தாய்.....

 

உனக்கான காலமென்று ஒன்றிருந்தால்

எமக்கான காலமொன்றும் வரும் !

மீண்டும் வரும் !!

 

***********************

காலம் திரும்புகிறது.

 

நாச்சியார் விழிநீர் துடைக்கிறாள்

குருவிச்சியும் இனி வரக்கூடும்

வன்னியன் குதிரையின் காலடியும் கேட்கலாம்.

 

நாச்சியார் கோபம் இனி

நெடுங்காலம்  அடங்கிக்கிடக்காது.

எல்லாகேள்விகளையும் சுமந்திருக்கிறாள்.

 

வீரையும் பாலையும் நிலம் பிளந்து

வான்நோக்காது போனதுமில்லை,

வீரமும் வேகமும் கொண்டவன்

நேரமறிந்து எழுந்துகொள்ளாமல் போனதில்லை.

 

காலம் திரும்புகிறது. 

 

வல்லையிலும் ஆனையிறவிலும் 

கண்டல் காடுகளில் இருந்து எழுகிறது 

பெயர் தெரியாப்பறவை.

 

தொண்டைமானாற்றிலும் 

வளுக்கியாற்றிலும் மீண்டும் ஒலிக்கிறது 

துடுப்புக்களின் ஓசை.

 

பூநகிரியிலும் கல்லுண்டாயிலும் 

சன்னதம் கொள்கிறது காற்று 

தேவன் குறுச்சியிலும் வீரமாகளியம்மன்  திடலிலும் 

புறப்பாட்டின் குலவை எதிரொலிக்கிறது.

 

காலம் திரும்புகிறது.

*************

தாயின் கண்ணீரின் கனதியை 

கரங்களில் ஏந்ததுணிந்தவள்  

எப்படி சுமப்பாள்?

கண்ணீரின் காயாத பிசுபிசுப்பை 

எங்கே துடைப்பாள் இவள்.?

 

என் குழந்தையே..... 

துள்ளி விளையாடும் வயதினில் 

உன்னையும் இங்கழைத்தது 

எங்களின் விதியோ ?

 

எழுதுகோல் சுமந்து பள்ளிசெல்லும் நேரத்தில் 

படம் தந்து ரோட்டில் நிறுத்தியது 

எங்களின் இயலாமையோ ? 

 

விரல் நீட்டும்  உன் உணர்வுகூட 

எமக்கின்றிப்போனதே

மரணிதவர்களா நாம்?  

 

மன்னித்துவிடு மகளே 

உனக்கு முன் 

நாங்களும் துரோகிகளே...... 

 

 

அந்தக்காலத்தின் வரவையே எதிர்பார்த்திருக்கிறோம். எல்லாருடைய எண்ணத்தையும் உங்கள் கவிதை சுமந்துள்ளது தம்பி நன்றிகள்

 

  • கருத்துக்கள உறவுகள்
உனக்கான காலமென்று ஒன்றிருந்தால்
எமக்கான காலமொன்றும் வரும் !
மீண்டும் வரும் !!
 
நாச்சியார் கோபம் இனி
நெடுங்காலம்  அடங்கிக்கிடக்காது.
எல்லாகேள்விகளையும் சுமந்திருக்கிறாள்.
 
வீரையும் பாலையும் நிலம் பிளந்து
வான்நோக்காது போனதுமில்லை,
வீரமும் வேகமும் கொண்டவன்
நேரமறிந்து எழுந்துகொள்ளாமல் போனதில்லை.//
 
 
நேற்றைய நினைவுகளை நெருப்புக்குள் புதைத்துவிட்டுக் காத்திருக்கிறோம்... புலுனிகளும் செம்பகங்களும் தாவிய கிழுவை வேலி துளிர்த்தளுக்காய் தவித்திருக்கிறது... அணில்கள் கோதிப்போட்ட வேப்பம்பூக்கள் தூவிய கிணற்றடி வெம்மையில் தவிக்கிறது..வெளியே போர் இல்லாமல் ஊர் இருக்கிறது உள்ளே வழியில் தேர் அறுந்த வலியை மறைத்தபடி.. இன்னமும் எஞ்சியிருக்கும் நம்பிக்கைகளுக்கு ஒற்றடம் தந்தது உங்கள் கவிதை... நன்றி நன்றி..

Edited by சுபேஸ்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.