Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாம்பு கடித்து இறந்த வாலிபர் 11 ஆண்டுக்கு பின் திரும்பினார் - தம்பியை மணந்த மனைவி அதிர்ச்சி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
பரேலி:பாம்பு கடித்து இறந்து போனதாக கருதப்பட்ட வாலிபர், 11 ஆண்டுக்கு பின் உயிருடன் திரும்பி வந்தார். இதனால் மனைவி மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.உத்தர பிரதேச மாநிலம் பரேலி தேவர்னியா பகுதியில் உள்ளது பத்வா கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்த சத்ராபால் (25) என்ற வாலிபரை பாம்பு கடித்து விட்டது. அவர் இறந்து விட்டதாக உறவினர்கள் கருதினர்.

 அவர்களுடைய வழக்கப்படி சத்ராபாலின் சடலத்தை ஆற்றில் வீசி இறுதி சடங்கு செய்து விட்டனர். சத்ராபாலின் மனைவி ஊர்மிளா, அப்போது கர்ப்பமாக இருந்தார். கணவன் இறந்த 2 மாதங்களுக்கு பிறகு ஊர்மிளாவுக்கு அபார்ஷன் ஆகிவிட்டது.இளம் வயதில் கணவனை இழந்ததால், அவருக்கு சத்ராபாலின் தம்பியை திருமணம் செய்து வைத்தனர். அவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், 11 ஆண்டுகளுக்கு பிறகு சத்ராபால் உயிருடன் கிராமத்துக்கு கடந்த திங்கட்கிழமை திரும்பி வந்தார். அவரை பார்த்து மனைவி மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

 சத்ராபால் கூறுகையில், பாம்பு கடித்து இறந்ததாக நினைத்து ஆற்றில் சடலத்தை வீசியுள்ளனர். ஆற்றில் மிதந்து சென்ற சடலத்தை பாம்பாட்டிகள் சிலர் மீட்டு சிகிச்சை அளித்து காப்பாற்றி உள்ளனர் என்றார்.இப்போது சத்ராபால் அவருடைய தம்பி இருவரையுமே, தனது கணவன்களாக ஊர்மிளா நினைக்கிறார். அவர்கள் இருவர் மற்றும் குடும்பத்தார் ஒப்புக் கொண்டால் இருவருக்கும் மனைவியாக இருக்க ஊர்மிளா சம்மதம் தெரிவித்துள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தற்சமயத்துக்கு சத்ராபாலின் தம்பியுடன் ஊர்மிளா உள்ளார். இந்த பிரச்னையில் குடும்பத்தினர் முடிவெடுக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார். - See more at: http://www.tamilmurasu.org/Inner_Tamil_News.asp?Nid=54126#sthash.Zs7ocra7.dpuf

கள உறவுகள் ஊர்மிளாவுக்கு நல்ல ஐடியாவைக் கொடுத்துதவவும்... :lol:

Edited by பிழம்பு

  • கருத்துக்கள உறவுகள்

அதுதான், மகாபாரதம் உதாரணம் இருக்கே.

நாம என்ன சொல்றது?

  • கருத்துக்கள உறவுகள்

கதாநாயகனைக்கடலில் இருந்து காப்பாற்றும் காட்டுவாசிகள் என்று படத்தில் வந்தாலே  கடுப்ப வரும் எனக்கு.....

இது வேற  சிக்கலையும் கொண்டு வந்திருக்கு...

அக்கா  அவசரப்படுகிறதை பார்த்தா

இவா தான் தூக்கி  எறிந்திருப்பா போலிருக்கு...

எதுக்கம் தம்பியார் கவனம்

அடுத்த  தூக்கு இவர்தான்..... :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

அவாக்கு ரெண்டிலயும் ஆசை வந்திட்டுது.நாம அட்வைஸ் குடுத்து கேட்கவா போறா

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப யாரை தூக்கி ஆத்தில வீசணும் புரியலை!

  • கருத்துக்கள உறவுகள்

சிக்கலான பிரச்சனை
கோபிநாத்திடம் விடலாமே?? :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

சரியப்பா...அவங்க எல்லாருக்கும் 'பதினெட்டு வயசுக்கு' மேல! :lol:

 

அவங்க முடிவை அவங்களே எடுத்துக்கொள்ளட்டும்! :o

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சரியப்பா...அவங்க எல்லாருக்கும் 'பதினெட்டு வயசுக்கு' மேல! :lol:

 

அவங்க முடிவை அவங்களே எடுத்துக்கொள்ளட்டும்! :o

 

அதென்னெண்டு அப்பிடி எடுத்தவாக்கிலை சொல்லேலும்? யாழ்களத்திலை இவ்வளவுபேர் என்னத்துக்கு இருக்கிறம்?  :D
 
இப்ப நான் என்ன சொல்ல வாறனெண்டால்.....பாப்பா விரும்பினால் இரண்டு பேரோடையும் பாகுபாடில்லாமல் குடும்பம் நடத்தட்டுமன்...fuma.gif
சத்ராபால் 11 வருடம் எங்கிருந்தாரோ அங்கேயே செல்ல வேண்டும். விசத்தால் உயிர் திரும்பியதும் மனைவியிடம் வந்திருக்கலாமே ?
 
 
( விக்கிரமாதித்தனின் இந்த சரியான பதிலால் அவன் மௌனம் கலைந்தது." ஏய் விக்கிரமாதித்தா !! உன் மௌனம் கலைந்து விட்டது ! " என்று வேதாளம் மீன்டும் முருங்கை மரத்தில் ஏறியது.   :D  )
 
vb1_zps8033c9c9.gif
  • கருத்துக்கள உறவுகள்

ஆண்கள் இரண்டு மூன்று நான்கு கட்டலாமெனில், பெண்களும் கட்ட விரும்புவதில் என்ன தவறு இருக்க முடியும்? vil-colere1.gif

 

கற்பு பெண்களுக்கு மட்டுமே உரித்தானதல்ல.

 

 

நான் ஊரில் ஆயிரம் பேரிடம் மேய்ந்து வருவேன் ஆனால் தன் பெண்டாட்டி 'கற்போடு' தன்னிடமட்டுமே இருக்கவேண்டுமென எதிர்பார்க்கும் மனநிலை கொண்ட 'மிருகங்களை' எதால் அடித்தாலும் தகும். mort.gif

  • கருத்துக்கள உறவுகள்

----

பரேலி:பாம்பு கடித்து  அவர்களுடைய வழக்கப்படி சத்ராபாலின் சடலத்தை ஆற்றில் வீசி இறுதி சடங்கு செய்து விட்டனர். சத்ராபாலின் மனைவி ஊர்மிளா, அப்போது கர்ப்பமாக இருந்தார். கணவன் இறந்த 2 மாதங்களுக்கு பிறகு ஊர்மிளாவுக்கு அபார்ஷன் ஆகிவிட்டது.இளம் வயதில் கணவனை இழந்ததால், அவருக்கு சத்ராபாலின் தம்பியை திருமணம் செய்து வைத்தனர்.

 

ஊர்மிளாவின் அக்காவை, அல்லது தங்கச்சியை.... சந்திரபாபுவுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும்.

ஊர்மிளாவின் அக்காவை, அல்லது தங்கச்சியை.... சந்திரபாபுவுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும்.

3fda0f4f179c019946730a4095523577_ls_lt.jசரியாக சொன்னீங்க மைக்கை  சிறி அண்ணாவிடம் கொடுங்க ....... :D  :D

Edited by தமிழ்சூரியன்

ஆண்கள் இரண்டு மூன்று நான்கு கட்டலாமெனில், பெண்களும் கட்ட விரும்புவதில் என்ன தவறு இருக்க முடியும்? vil-colere1.gif

 

கற்பு பெண்களுக்கு மட்டுமே உரித்தானதல்ல.

 

 

நான் ஊரில் ஆயிரம் பேரிடம் மேய்ந்து வருவேன் ஆனால் தன் பெண்டாட்டி 'கற்போடு' தன்னிடமட்டுமே இருக்கவேண்டுமென எதிர்பார்க்கும் மனநிலை கொண்ட 'மிருகங்களை' எதால் அடித்தாலும் தகும். mort.gif

 

 

சரியாகச் சொன்னீர்கள் வன்னி!! இந்த ஆண் சமுதாயம் ஒரு நாளும் திருந்தாது. 

Edited by அலைமகள்

சரியாகச் சொன்னீர்கள் வன்னி!! இந்த ஆண் சமுதாயம் ஒரு நாளும் திருந்தாது.  அந்தப் பெண் இருவரையும் கணவராக்கினால் இவையளுக்கு என்ன பிரச்சனையாம்????

 

1497551_10202134130628118_763782265_n_zp

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்கள் இரண்டு மூன்று நான்கு கட்டலாமெனில், பெண்களும் கட்ட விரும்புவதில் என்ன தவறு இருக்க முடியும்? vil-colere1.gif

 

கற்பு பெண்களுக்கு மட்டுமே உரித்தானதல்ல.

 

 

நான் ஊரில் ஆயிரம் பேரிடம் மேய்ந்து வருவேன் ஆனால் தன் பெண்டாட்டி 'கற்போடு' தன்னிடமட்டுமே இருக்கவேண்டுமென எதிர்பார்க்கும் மனநிலை கொண்ட 'மிருகங்களை' எதால் அடித்தாலும் தகும். mort.gif

 

உங்கள் கேள்வி  ஒருமுறை  சிந்திக்க தூண்டினாலும்

அண்ணன்

தம்பி   என்பதால் ஒரு அருவருப்பைத்தருகிறது எனக்கு...

 

அக்கா

தங்கையை ஒருத்தர்  கட்டும்போது இந்த அருவருப்பு எங்கு   போனது என்ற  உங்கள் பதில்  கேள்விக்கு பதில் தரமுடியாது ஐயா

நாங்கள் இப்படித்தான்............. :(

  • கருத்துக்கள உறவுகள்

சத்திரபாலுக்கு குழந்தை இல்லை. சுமார் ஏழு வருடங்கள்  காணாமல் போன ஒருத்தரைப் பற்றி ஒரு தகவலும் இல்லாத விடத்து அவருக்காகக் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. அதனால் சத்திரபாலே குழந்தைகளுடன் வாழும் அத் தம்பதியருக்கு குறுக்கே நிக்காமல் ஒதுங்கிப் போய்விட வேண்டும்.

 

மேலும் ஒரு பெண்  குடும்பத்தின் சகோதரர்களை கணவனாய் வரிக்கும் பழக்கம் சில கிராமங்களில் உண்டு . அதுபோன்ற வழக்கம் அங்கும் இருக்குமானால் பிரச்சினையில்லை...!

 

 அந்த செம்பை எடுடாதம்பி , இந்தப் பொயிலை ஒரே காரலாய்க் கிடக்கு...! :lol::D

  • கருத்துக்கள உறவுகள்
ஊர்மிளா எதுக்கும் நல்லா செக் பண்ண வேனும், அவர் உண்மையிலேயே சத்ராபால் தானோ எண்டு... :o
 
யாரும் வந்து குடும்பத்துக்குள்ள கும்மி அடிச்சிட்டு, ஓசில 'திண்டு' போட்டுப்  போயிருவினம்.  :wub:
 
பிறகு உள்ளதும் போச்சடி நொள்ளைக் கண்ணி என்ற 'வட போச்சே' நிலைமை தான்.  :blink:
:icon_mrgreen:  :icon_mrgreen:
  
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

article-2295380-18C102E1000005DC-737_634

 

அப்ப பாப்பாவுக்கு சனி,ஞாயிறு லீவோ?  :lol:

 

article-2295380-18C102EE000005DC-724_634

 

குந்தியிருக்கிற மூண்டு பேரும் பென்சன் எடுத்திட்டினம்  எண்டு நினைக்கிறன்?  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

article-2295380-18C102E1000005DC-737_634

 

அப்ப பாப்பாவுக்கு சனி,ஞாயிறு லீவோ?  :lol:

 

அஞ்சுபேருக்கு ஒரே ஒரு குழந்தை தானா ???? :D

 

 

  • கருத்துக்கள உறவுகள்

 

பாப்பாவிட்டை இருக்கிறது, ஒரு 'கருப்பை' தானே! :o

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.