Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நான் சொல்வதை என் உடம்பு கேட்குமா??

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிறந்ததிலிருந்தே

உடம்பில் கவனம் எடுத்த பழக்கமில்லை.

அதிலும் கடந்த சில  வருடங்களாக சாப்பாட்டில் கவனமில்லை.

உடலும் வயிறும் வீஙகத்தொடங்கின.

 

மக்கள் சொல்வார்கள்

அப்பா 

உடம்பைக்கவனியுங்கள் என.

அதிலும் எவராவது என் வயதுக்காரர் மோசம் போய்விட்டால்

தாங்கவே முடியாது

 

ஆனாலும் 7 நாளும் வேலை

அத்துடன் பொது வேலைகள்..................

 

வேலை அலுப்பு

மற்றும் அதிக நேரவேலை

இதனால் தூக்கம் குறைவு

அதனால் எப்பொழுதும் ஒருவித சோர்வு கண்களுக்குள்....

எங்கு இருந்தாலும் தூக்கம் வரும்

கார் ஓடிக்கொண்டிருக்கும் போதும்....

அத்துடன் குறட்டை........

 

அப்பா

உடற்பயிற்சி  அல்லது  நீச்சலுக்காவது  செல்லுங்கள்

அல்லது  குளிசை  வாங்கிப்போடுங்கள்....

 

இல்லை மாட்டேன்

எனக்கு எதுவித வருத்தமுமில்லை..

என்று இத்தனைநாள் இழுத்தாச்சு

ஆனால் நிறை   கூடுவது மட்டும் நின்றபாடில்லை..

நூறை நெருங்கமுதல் தான் ஒருவாறு இசைஞ்சேன்

அதுவும் நம்ம சுமே  தந்த குளிசைக்கு மட்டும்......

 

தொடரும்.....

அண்ணா

உங்கள் உடல் நீங்கள் உண்ணும் உணவு.

மரக்கறியை கூட்டி, ஊர் அரிசி, முழு கோதுமை உணவை கூட்டுங்கள்.

மற்றும் உடற்பயிற்சியை வேலைகளோடு செய்யுங்கள். எலிவேட்டருக்கு பதில் படி, கிட்ட உள்ள இடங்களுக்கு நடை அல்லது சைக்கிள் என்று உடற்பயிற்சியை கூட்டுங்கள்.

இல்லாவிட்டால் கனடா வாருங்கள், எனது தோட்ட உடற்பயிற்சியில் கிழமைக்கு 30 பவுண்ட் இழக்கலாம். :D

  • கருத்துக்கள உறவுகள்

நூறை நெருங்கமுதல் என்றால் என்ன? நூறு கிலோவா??  :blink:

  • கருத்துக்கள உறவுகள்

நூறை நெருங்கமுதல் என்றால் என்ன? நூறு கிலோவா?? :blink:

இல்லை 99.99kg
  • கருத்துக்கள உறவுகள்

நானும் சாப்பாட்டுப் பிரியன்தான்.இறைச்சியை விட மீன்தான் கூடுதலாகச் சாப்பிடுவேன்.7நாளும் மச்சமில்லாவிட்டால் சாப்பாடு இறங்காது.நிறை கட்டுக்குள் இருக்கிறது.65-67கிலோ.உங்களைப்பொறுத்தவரை நிறைய மரக்கறியுடன்(சாப்பிட முடியாட்டி மீன் கறி அல்லது கருவாட்டுக்குழம்புடன்)பழவகைகளும் சாப்பிடுங்கள்.காலையில் 2 துண்டு பாண்.மத்தியானம் ஒரளவு நல்ல சாப்பாடு.இரவு 18.00மணிக்கு சலாட்,பழவகைகள் சாப்பிடவும்.அடிக்கடி பசித்தால் பழங்களை சாப்பிடவும்.தண்ணி???pயையும் பசித்தால் குடிக்கலாம்.சிவப்பு வைன் அருந்தலாம்.வாரத்திற்கு 2 தடவைகள் 30 நிமிடம் நடைப்பயிற்சி. செய்யவும்.உடம்பை; கவனமாகப் பார்க்கவும். ஆலோசனை சொல்வது இலகு.ஆனால் நடைமுறை??????

  • கருத்துக்கள உறவுகள்

From- facebook வயிறு தொப்பையை குறைக்க வேண்டுமா? 1. மிக மிக முக்கியமான விஷயம் "வாயை மூடி மென்று சாப்பிட வேண்டும்". நிறைய பேர் செய்வதே கிடையாது. அவசர உலகத்தில் அவசர அவசரமாக 5 அல்லது 10 நிமிடத்தில் சாப்பிட்டு எழுத்து விடுவார்கள். வாயை மூடி மென்று சாப்பிட்டால் 30 நிமிடங்கள் ஆகும். அது தான் சரியான முறை. 2.பசிக்கும் போது சாப்பிடுங்கள். Time- க்கு சாப்பிடுவது முக்கியமல்ல. பசிக்கும் போது சாப்பிடுவதுதான் முக்கியம். 3.அதிக எண்ணை பதார்த்தங்களை எடுத்துக் கொள்ள கூடாது. 4.Fast Food -சாப்பிடக்கூடாது. 5.முக்கியமாக Pizza மற்றும் பன்னீர் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். 6.தினமும் அரை மணி நேரம் நடைபயிற்சி வேண்டும். பசிக்கும் போது சாப்பிடாமல் நேரம் கிடைக்கும் போது சாப்பிட்டால் கண்டிப்பாக தொப்பை விழும். மேலும் முடிந்தால் Dance பண்ணலாம். தேவையில்லாத Cholestral அதிகம் ஆகும் போது, உடம்பில் பல பிரச்சனைகளை ஏற்படுத்தும். உடல் எடையை குறைய வேண்டும் என்று நினைத்துக் கொண்டு தயது செய்துFasting மட்டும் இருக்காதீர்கள். அப்படிFasting இருந்தால் வயிறு புண் ஆகிவிடும் அதாவது அல்சர் வந்துவிடும். எடை குறையவே குறையாது. அதனால் பசிக்கும் போது சாப்பிட்டால் தான் நல்லது. எனவே மேலே குறிப்பிட்டுள்ள படி கடைபிடித்து உடல் எடை மற்றும் தொப்பையை குறைக்க முயற்சி செய்யுங்கள்.

நானும் பலநேரங்களில் வரைமுறையின்றிச் சாப்பிடுவதுண்டு.  ஆனால், வசதி இருக்கும்போது டயட்டையும் செய்வதுண்டு.  அப்படி  வருடத்தில் இரண்டு மூன்று தடவைகளாவது பழ, மரக்கறி வகை டயட்டைப் பின்பற்றுவேன்.  அதனால், போனவருடம்கூட இன்சூரன்சிற்காகப் பரிசோதனை செய்த போது எனது உடம்பில் எந்த நோய் அறிகுறிகளும் இல்லாததால் நான் போட்ட தொகையைவிட அதிகம் தந்திருந்தார்கள்.   எனக்கு உடம்பைக் குறைப்பதில்தான் சிரமம் உள்ளது.  அதையும் இந்த வருடத்திற்குள் குறைப்பதாக உள்ளேன்.  குறைத்து விட்டு எனது அனுபவத்தை பகிர்கிறேன்.  

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
வயது போகப்போக வாற பிரச்சனையள்தானே விசுகர்...... :D
 
இதுக்குப்போய்..... :(
 
முந்தி செல்லவண்டி எண்டு என்ரை வண்டியை தடவின மனுசியே இப்ப என்னப்பா ரவுசர் ஒண்டும் அளவில்லாமல் போகுது எண்டு சலிக்கிற அளவுக்கு வந்திட்டுது.. :D

நானும் சாப்பாட்டுப் பிரியன்தான்.இறைச்சியை விட மீன்தான் கூடுதலாகச் சாப்பிடுவேன்.7நாளும் மச்சமில்லாவிட்டால் சாப்பாடு இறங்காது.

 

இன்றில் இருந்து நீங்களும் என் நெருங்கிய தோழன் ஆகிவிட்டீர்கள் புலவரே.

கல்யாணம் செய்ய முதல் 68 கிலோ. நேற்று அளந்த போது 74.
 
பின்னேரம் 6.30 தொடக்கம் 7 மட்டும் நடக்க உள்ளேன்.
 
வருகிற சனிக்கிழமை எப்படியும் 73 கிலோ.   :unsure:  :huh:
 
எப்படி புலவர் 65 கிலோ ??? எலும்பும் தோலுமாக இருப்பீர்களா ? :o  
  • கருத்துக்கள உறவுகள்

...ஆனால் நிறை   கூடுவது மட்டும் நின்றபாடில்லை..

நூறை நெருங்கமுதல் தான் ஒருவாறு இசைஞ்சேன்

....

தொடரும்.....

 

இந்த மாதிரி 'அளவுச் சாப்பாடு' (Limitted meals) சாப்பிடுங்கள் விசு, நாகேஷ் மாதிரி மெலிந்து 'சிக்'கென்று இருப்பீர்கள்! :wub:

2ik8u1z.jpg

  • கருத்துக்கள உறவுகள்

விரும்பிய உணவைச் சாப்பிடாமல் விடுவது என்பது கொடுமையிலும் கொடுமை. ஆனால் நான் கவனித்ததில் எமது ஆட்கள் சிறு வயதிலிருந்தே அதிகம் உண்டு பழகிவிட்டோம். பின் அது எம் மூலையில் பதிந்துவிட்டது. சிறிய வயதிலிருந்தே கொஞ்சமாகச் சாப்பிட்டுப் பழகினால் உடம்பு வைக்காது.

நான் இப்ப கிழமையில் ஐந்து நாட்கள் மதியம் அந்த ஐந்து மரக்கறிகளும் அவித்து உண்பது இரவில் சிறிதாக உண்பது. ஆனால் நிறை கூடவில்லையே ஒழிய பெரிதாகக் குறையவில்லை. ஆனால் வயிற்றுப்பகுதி வற்றிக்கொண்டு வருகிறது. மிக மெதுவாகத்தான்.

  • கருத்துக்கள உறவுகள்

எப்படி புலவர் 65 கிலோ ??? எலும்பும் தோலுமாக இருப்பீர்களா ? :o உயரம் 165 cm-100=65 ideal weight. 5கிலே கூட அல்லது குறைய இருக்கலாம்.ஆகவே எனது நிறை திருப்தி.வண்டி கொஞ்சம் கூட இந்த வயதுக்கு இது அழகு வண்டி.ஒவ்வொரு வருடமும் மருத்தவ பரிசோதனை செய்வேன்.டயபற்றிஸ் வியாதி இல்லை.கோப்பிக்கு மட்டும் நி-றைய சீனிபோட்டு(4தே.க) குடிப்பேன்.மற்றும்படி இனிப்புச் சாப்பாடு சாப்பிடுவதில்லை.இரத்தத்தில் கொழுப்பு இல்லை.ஆனால் வாய்க் கொழுப்பு கொஞ்சம் கூடத்தான்.இப்பொழுது ஒவ்வொரு நாளும் 1 மணித்தியாலம் சைக்கிள் ஓடுகிறேன்.(அதுவும் ஒரு வேலைதான்).சாப்பாட்டில் வஞ்சகம் இல்லை.அளவோடு குடிப்பேன்.அஸ்மாதான் தொடர்ந்து இருக்கிறது.இழுப்பு பெரிதாக இல்லை நெங்சுச் சளி இருக்கிறது.பம் தொடர்ந்து பாவிக்கிறேன்.

இந்த மாதிரி 'அளவுச் சாப்பாடு' (Limitted meals) சாப்பிடுங்கள் விசு, நாகேஷ் மாதிரி மெலிந்து 'சிக்'கென்று இருப்பீர்கள்! :wub:

2ik8u1z.jpg

இது விசயகாந்த், பிரபு டயட் போல் தெரிகிறது. :)

  • கருத்துக்கள உறவுகள்

விசுகர், எம்மில் அநேகமானவர்கள் முகம் கொடுக்கின்ற பிரச்சனையைப் பகிர்ந்துள்ளீர்கள்!

 

காலம்,காலமாக வாழ்ந்திருந்த மண்ணிலிருந்து, பலவந்தமாகப் பிடுங்கி எறியப்பட்ட தலை முறை எம்முடையது!

 

விவசாயம், நடை, துவிச்சக்கர வாகன உபயோகம் என ஒவ்வொருநாளும் நாமறியாத விதத்தில், உடற்பயிற்சி எமது வாழ்க்கையில் இணைந்திருந்தது!

 

பெற்றோர்களின் அரவணைப்பு, உறவுகளின் அரவணைப்பு என ஒரு கூட்டுக்குடும்ப முறையில் நாம் வாழ்ந்திருந்தோம்!

 

மிகப்பெரிய தேவைகளும், எதிர்பார்ப்புக்களும் இல்லாத வாழ்வாக, பொருளாதார வேறுபாடுகள் பெரிதாக இல்லாத சமுதாயத்தில் வாழ்ந்திருந்தோம்!

 

எல்லாவற்றுக்கும் மேலாக, மன அழுத்தம் இல்லாத வாழ்வாக அது இருந்தது!

 

இப்போது, ஒன்றை மட்டும் நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்! 

 

உங்கள் உடல்நிலையைப் பற்றி நீங்களாக எடுக்கிற 'உங்கள் அபிப்பிராயங்கள்' எப்போதும், உங்களுக்கு ஆதரவாகவே இருக்கும்! நாங்கள் எல்லோருமே, எங்களைப் பற்றி நல்ல அபிப்பிராயங்களையே வைத்திருக்கிறோம்! இல்லா விட்டாலும், அதற்கான சமாதானங்கக்ளையும் தேடிக்கொண்டிருப்போம்!

 

ஐரோப்பிய வாழ்வில், நானும் எனது உடல்நிலைபற்றி மிகவும் 'உயர்வான அபிப்பிராயம்; தான் வைத்திருந்தேன்!

 

இங்கு புலம் பெயர்ந்த ஆரம்பகாலத்தில், ஒவ்வொரு வாரமும் வாடகை 'வீட்டுக்காரரின் முகவரிடம்' கொண்டுபோய்க் கட்ட வேண்டும்! எனது வீட்டுக்கும், அந்த முகவரின் இடத்திற்கும் இடைவெளி, ஒரு ஐந்து கிலோமீட்டர் மட்டுமே இருக்கும்! ஒருக்கால், நடந்து தான் பார்ப்போமே என்று நடந்த போது. அரைவாசித்தூரம் கூட நடக்க முடியவில்லை! அப்போது தான் தெரிந்தது, ஐரோப்பிய வாழ்வு, ஊர் வாழ்விலிருந்து எவ்வளவு தூரத்திற்கு என்னை அந்நியப்படுத்தி விட்டது என்று!

 

அன்றிலிருந்து வார விடுமுறைகளில் நடப்பது, சைக்கிள் ஓடுவது, விடிகாலையில் 'சூரிய நமஸ்காரம்', தியானம் போன்றவற்றில் ஈடுபடுவது என்று,மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்!

 

எனது நிறை எப்போதும் அறுபத்தைந்துக்கும், எழுபதுக்கும் இடையில் மாறிக்கொண்டிருக்கும்!

 

சில நாட்கள், ஊரில் நின்றுவிட்டு வந்தபோது, சில கட்டுப்பாடுகளை வேண்டுமென்றே விட்டிருந்தேன்! திடீரென நிறை, அதிகரித்ததுடன் வண்டியும் வைக்கத் தொடங்கியது!

 

வெறும் நிலத்தில் படுத்திருந்தபோது, எனது மகள் எனது 'வண்டியை' அவதானித்திருக்க வேண்டும்!

 

அப்பா, திரும்பவும் நடக்கத் தொடங்குங்கோ என்று கூறினாள்!

 

ஏதோ, ஒரு பொறி தட்டிய மாதிரி இருந்தது!

 

திரும்பவும், பழைய படி, நடக்கத் தொடக்கி விட்டேன்!

 

எனவே, முதலாவது காலடியை எடுத்து வைத்துள்ளீர்கள்! பின் வாங்க வேண்டாம் என்பதே எனது அன்பு வேண்டுகோள்!

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் உடல்நிலையைப் பற்றி நீங்களாக எடுக்கிற 'உங்கள் அபிப்பிராயங்கள்' எப்போதும், உங்களுக்கு ஆதரவாகவே இருக்கும்! நாங்கள் எல்லோருமே, எங்களைப் பற்றி நல்ல அபிப்பிராயங்களையே வைத்திருக்கிறோம்! இல்லா விட்டாலும், அதற்கான சமாதானங்கக்ளையும் தேடிக்கொண்டிருப்போம்! உண்மையான வரிகள்!!!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சில உணவுகளை நாம் சாப்பிடும்போது அவைகள் உடல் எடையை குறைக்க உதவுகின்றது. இதற்கான காரணம் அந்த உணவுகளில் உள்ள கலோரியை விட அந்த உணவு ஜீரணமாக தேவைப்படும் கலோரி அதிகம். பட்டியல் கீழே உள்ளது. முயற்ச்சி செய்து பாருங்கள்.


Vegetables:
Artichokes
Asparagus
Green beans
String beans
Beets
Beet greens
Broccoli
Brussels sprouts
Cabbage
Chinese cabbage
Carrots
Cauliflower
Celeriac
Celery
Chervil
Chicory
Chives
Squash
Tomato (fresh/canned)
Corn (cob/canned)
Cucumbers
Dandelion greens
Dill pickles
Eggplant
Endive
Garlic
Kale
Kohlrabi
Leeks
Lettuce
Mushrooms
Mustard greens
Okra
Onions
Parsley leaves
Turnips
Watercress
Parsnips (raw/boiled)
Peas
Peppers (green/red)
Pickles (sour/sweet)
Pumpkin
Radishes
Rappini
Red cabbage
Rhubarb
Rutabagas
Sauerkraut
Salsify
Scallions
Shallots
Sorrel
Spinach

Fruits:
Apples
Apricots
Blackberries
Blueberries
Cantaloupe
Cherries
Cranberries
Currants
Damson plum
Figs
Fruit salad (fresh/canned)
Grapefruit
Grapes
Honeydew melon
Huckleberries
Kiwi
Kumquats
Lemons
Limes
Loganberries
Mangoes
Muskmelons
Nectarines
Oranges
Papaya
Peaches
Pears
Pineapple
Pomegranates
Prunes
Quince
Raspberries
Strawberries
Tangerines
Watermelon

Meat:
Abalone
Bass (fresh water/sea)
Buffalo fish
Catfish
Clams (cooked)
Cod Steaks
Crab
Crayfish
Flounder
Frog legs
Mussels
Oysters (half shell)
Shrimp
Terrapin
Trout
Tuna
 

இவைகளை சாப்பிடுவதால் உடல் எடை குறையும். ஆனால் நிறை உப்பும் தேங்காய் பாலும் மசாலா தூள்களும் போட்டு அவி அவி என்று அவித்து சாப்பிட்டால் அதில் எந்த பலனும் இருக்காது.

 

சோறு புட்டு இடியப்பம் பாண் போன்ற மாச்சாப்படுகளை நிறுத்தாமல் சீனி போட்ட தேத்தண்ணி உப்பின் அளவை குறைக்காமல் இவற்றை கடைப்பிடிப்பதிலும் பலனில்லை.

 

விரதங்களை கடைப்பிடிப்பது என்னுமொரு வழி. செவ்வாய் வெள்ளி சனிக் கிழமைககளிலும் பிரதோசம் மற்றும் கந்தசஸ்டி போன்ற பல விரதங்களை கடைப்பிடிப்பதால் தெய்வீக அருளும் கிடைக்கும் ஆன்மீக பலமும் உடல் ஆராக்கியமும் கிடைக்கும். விரதச் சமயலுக்கு உப்பு சேர்ப்பதில்லை.

 

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கருத்தக்களுக்கும்

அனுபவப்பதிவுகளுக்கும் நன்றி  உறவுகளே...

ஒவ்வொருவராக பின்னர் எழுதலாம்

தற்பொழுது எழுத தொடங்கிய  விடயத்தை  தொடரலாம் என்று நினைக்கின்றேன்.

Edited by விசுகு

இப்ப சில வருடங்களாகத்தான் எனக்கும் உடம்பில் கொஞ்சம் கவனம் வேண்டும் என்று தோன்றியது .

 

நேரத்திற்கு சாப்பிடுவதில்லை ,நேற்று காலை ஒரு மப்பன்(MUFFIN)  பின்னர் இரவு ரொட்டி கோழிக்கறியுடன் ஓடிவிட்டது .   இன்னதுதான் என்று சாப்பிடுவதில்லை அகப்பட்டைதை விழுங்கிவிடுவேன்.(ருசியாக வேண்டும் )

 

சிகரெட் இல்லை குடி சொல்லத்தேவையில்லை .உடற்பயிற்சி என்று பெரிதாக எதுவுமில்லை ஆனால் கிரிக்கெட், வோலிபால் ,நடை இப்போதும் இடைக்கிடை செய்வதுதான் .

 

மனைவி எனக்கு நேர் எதிர் .சாப்பாடு தொடக்கம் உடற்பயிற்சி யோகா என்று வலு ஒழுங்கு அதனால் நானும் சலாட் பழவகைகள்  என்று தின்ன வேண்டிய கட்டாயம் .தோசை புட்டு என்றால் கூட பல தானியங்கள் அரைத்து வைத்து அதில் கலந்துவிடுவார் .முட்டை அரை அவியல் உப்பு மிளகுடன் கருஞ்சீரகம் எல்லாம் இருக்கும் .

 

எனது குடும்ப வைத்தியர் சொன்ன புத்திமதி இது -இந்துவில் எனது யூனியர் எனது அப்பாவிற்கும் இவர்தான் குடும்ப வைத்தியர் 

 

நீர் இன்னொமொரு முப்பது நாப்பது வருடங்கள் வாழுவதற்காகதான் சில ஒழுங்குமுறைகளை சாப்பாட்டிலும் உடம்பிலும் பின் பற்ற சொல்லி சொல்லுகின்றோம் .இனி  கவனாமக் இருக்காவிட்டால் பல வித வருத்தங்கள் வர சாத்தியங்கள் இருக்கு. டயபிற்றிஸ்,நிரழிவு நோய் ,இதய நோய்கள்,கண்பார்வை குறைவு போன்றவை.

 உமது அப்பாவிற்கு நான் அப்படி சொல்லுவதில்லை ஏனெனில் அவருக்கு தொண்நூறு வயது ஆகிவிட்டது .

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கொஞ்ச  நாளாக எனது அனுபவத்தை 

நான் சாப்பிடும் முறையை

எனது உடல்நிலையை  இங்கு எழுதணும்

அது ஒரு சிலரையாவது சிந்திக்கத்தூண்டணும்   என  யோசித்திருந்தேன்

அதன் புறப்பாடே இது.

 

 

முதலில் இதுவரை  நான் சாப்பாடு

மற்றும் உடல் விடயத்தில் கடந்து வந்தபாதை... :D

 

சிறு வயதில் நல்ல மெலிசு

காலையிலும் மாலையிலும் வார  இறுதிகளிலும் வீட்டில் கட்டாய  கடமைகள்

பின்னேரம் 2  மணித்தியாலம் விளையாடப்போகலாம் என்ற  அப்பாவின் உபதேசம்

என்பவற்றால் வயிறு ஒட்டிய  மெலிசு.

சகோதரர்கள்  சொல்வார்கள்

எனது வயிற்றிற்குள் கறையான் இருக்கு என...

அந்தளவுக்கு என்னத்தை போட்டாலும் அசையாது..

 

அதன் பின் பருவ  வயதில்  கொழும்ப வர

அங்கு அண்ணா  சாப்பாட்டுக்கடை  அத்துடன் கொக்கா (Coco-cola)  பன்ரா (Fanta)  விநியோகித்தர்.

நான்  நடக்கும் போது எனது வயிறு காரணமாக முதுகு உள்ளோக்கி  வளைவதாக  சொல்வார்கள்...

 

அடுத்து

வெளிநாடு......

உள்ளதெல்லாம் போய்

மீண்டும் எலும்பும் தோலும்..........

 

வந்தார் என் காப்புக்கைகாறி....

எப்படி இருந்தவர்

இப்படி ஆகிவிட்டாரே என்று 

ஒரு வழி செய்கின்றேனா இல்லையா என.. :wub:

திருமணமாகும் போது

60 கிலோ

1.72 உயரம்..

 

அத்துடன் தொழில்  (Chef Cuisinier)  சமையல்காறர்.

 

என்ன  பிடிக்கும் என்று மனைவி  கேட்டதற்கு முதல் சொல்

முட்டை  பிடிக்கும்

அதிலும் பொரித்த முட்டை  பிடிக்கும்

அதிலும் வெங்காயத்தை அளவாக  வதக்கி

அத்துடன் முட்டை பொரித்தால் இன்னும் பிடிக்கும் ((Chef Cuisinier)  சமையல்காறர். அல்லவா?)

 

அன்றிலிருந்து இரவும் பகலும் முட்டைப்பொரியல் இல்லாது சாப்பாடில்லை

 

அத்துடன்    கொழும்பிலிருக்கும் போதே

இரண்டாவது தடவை  சோறு வாங்குவதை தவிர்க்கத்தொடங்கியிருந்தேன்

இப்பொழுதும் அப்படித்தான்

ஆனால் கறி  3  தடவையும் வாங்குவேன் :D

சோற்றைவிட அதிகம் கறி  

அதிலும் பயங்கர  காரமாக சாப்பிடும் பழக்கமுள்ளவன்.

இது எமது ஊர் பழக்கம்  என்று நினைக்கின்றேன்

நீங்கள் சிலவேளை எனது உறைப்பைக்கண்டால் அழுது விடுவீர்கள் :(

.

அத்துடன் பொது வேலைகள்

எமது மக்களில் ஒரு பழக்கமுள்ளது

வீட்டுக்கு போனால் உடனே  தேத்தண்ணீர் வந்து விடும்

வெக்கை என்றால் கொக்கா கோலா வந்துவிடும்.....

 

1990 இல் அரச  சார்பு கடிதம் ஒன்று வந்தது

இலவசமாக  உங்களது உடலை நூறு வீதம் செக்  பண்ணுங்கள் என்று....

 

சரி  செய்து  தான் பார்ப்பமே என்று செய்தால்

50  வயசில்  இருக்கவேண்டிய  கொழுப்பு  சீனி அத்தனையும் தற்பொழுதே வந்துவிட்டது என்றார் வைத்தியர்

வயசு 27 எனக்கு.

 

முதலாவதாக  மனைவி  கை  வைத்தது முட்டையில்தான்.  இதுவரை தடை.

அடுத்து பன்றி  இறைச்சி  ஆட்டிறைச்சி  இறால் நண்டு....

அத்துடன் அன்றிலிருந்து வதக்கி  கறி  வைப்பதில்லை

பால்  மற்றும்  எண்ணெயில் தரம் மற்றும் தவிர்த்தல்

 

நானாக விட்டது

இனிப்புவகை  கேக் மற்றும் தேத்தண்ணிக்கு சீனி  போடுவது.....

அது இன்று வரை தொடர்கிறது...

 

சொந்தத்தொழில்  என்று நான்   தொடங்கும்வரை 2003 - 

75 இலிருந்து 80 கிலோ

உயரம் 1.75

 

இன்றுவரை

எந்த மருந்தும் பாவிப்பதில்லை

எல்லாம் அளவுக்குள் நிற்கின்றன

ஆனால் எல்லாம் எல்லையில்....

சாப்பாட்டால் மட்டுமே கட்டுப்படுத்தப்பட்டவை  தான் இவை.

ஆனால் 

மற்ற  எந்தவகை  சாப்பாட்டிலும் மாற்றங்களில்லை

சோற்றைவிட கறி அதிகம் உட்பட.......

 

சில வருடங்களுக்கு முன்

சோற்றிலும்  மனைவி  கை வைக்க  கேட்க

அடியே

சோர்ந்து விழுந்திடுவன்  என்று பயப்படுத்தி

போன வருடம் வரை இழுத்து

போன வருடத்திலிருந்து சோறும் துறந்தாச்சு..

வெள்ளிக்கிழமை மட்டும்   சோறு  மரக்கறியுடன்.......

 

ஆனால் சோற்றுக்கு பதில்  ◌பாண்

அதற்கு அளவுக்கதிகமான கறி

பின்னர் எப்படி...??

மனைவியின் முயற்சிகள் தோல்வி.

அதப்பா

இதெல்லாம் பிறப்பால  என்னோட  வந்தது(கொழுப்பு)

அழியாது

மினக்கெடாத...

 

பைல் மெல்ல  மக்களிடம் மாறியது

அவர்கள் கூட்டம் போட்டு

வீட்டுக்கு முன்னால  காரில் ஏறினால்

கடைக்கு முன்னால  இறங்குகிறார்

நடக்க  பண்ணுவம் என்று ஏகமனதாக  தீர்மானம் நிறைவேற்றி

அதில் கொஞ்சம் பாசமழையையும் பொழிய..

(எங்கட  திருமணத்தை பார்க்கணும் பேரப்பிள்ளைகளை  வளர்க்கணும்....)

 

வீட்டைவிட்டு வெளியில் வர 3  கார்களும் நின்று  

என்னைக்கொண்டு போ  என்னைக்கொண்டு போ என  கெஞ்ச

நடந்து BUS எடுத்து ரெயின் எடுத்து மீண்டும்  BUS எடுத்து கடைக்கு வருவது இருக்கே..... :(  

 

அதற்கு பின்னராவது ஏதாவது முன்னேற்றம்....

நாமளாவது குறைகிறதாவது...........??? :D

 

முதலில்  இரண்டு கிலோ குறைந்தது தான்...

ஆனால் மீண்டும் ஏறுமுகம்.....

94 கிலோவை தாண்டியபோது தான்.....

 

 

வேலை அலுப்பு

மற்றும் அதிக நேரவேலை

தூக்கம் குறைவு

அதனால் எப்பொழுதும் ஒருவித சோர்வு கண்களுக்குள்....

எங்கு இருந்தாலும் தூக்கம் வரும்

கார் ஓடிக்கொண்டிருக்கும் போதும்....

அத்துடன் குறட்டை..

மனைவி  சொல்வாள்

மூச்சை இழுத்து சிறிது நிறுத்தி  குறட்டை விடுவதாகவும்

அது தனக்கு பயமாக இருப்பதாகவும்

அத்துடன் எனது பாரம் பற்றியும் முதல் முறையாக சொன்னாள்.. :icon_mrgreen:

 

இதனால்தான் நான் விழிக்கவேண்டி வந்தது

 

 

தொடரும்......

 

(ஒன்றை  மட்டும் நான் சொல்லிக்கொள்கின்றேன்.  இதை ஒரு நல்ல நோக்கத்துக்காகவே  எழுதுகின்றேன். எதையும் கூட்டியோ குறைத்தோ அழகு படுத்தியோ   என்னைப்பற்றிய உயர்ந்த அல்லது தாழ்ந்த பார்வை வரும் என்றோ எழுதவில்லை.  வைத்தியரிடமும் சட்டத்தரணியிடமும் உண்மையை  மட்டும் சொல்லணும் என்பதை உணர்ந்தவன் யான்)

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

உடல் எடை அதிகரிக்கும் காரணங்கள்

தூக்கம்............ போதிய தூக்கம் கிடைக்க வில்லையா? அப்படியானால் எடை அதிகரிக்கும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. இதற்கு காரணம் போதிய தூக்கம் இல்லாதவர்களுக்கு அதிகமாக பசிக்கும். அதனால் அவர்கள் உட்கொள்ளும் உணவின் அளவும் கூடும்.

மதுபானம்.......... பல ஆண்கள் கடின உழைப்பிற்கு பின் அலுப்பு தெரியாமல் இருக்க மது அருந்துவர். இது மன அழுத்தத்தை குறைத்து மனதை லேசாக வைத்திருந்தாலும், காலப்போக்கில் எடையை அதிகரிக்க செய்யும்.

காலை உணவு........ மற்ற வேளைகளில் நாம் உண்ணும் உணவை விட காலை உணவு தான் மிகவும் முக்கியமானது. இரவு நன்றாக தூங்கிய பின் காலை நம் உடம்பிற்கு போதிய அளவு எரிபொருள் வேண்டாமா? காலை சாப்பிடவில்லையென்றால் உடல் நிலை பாதிக்கும்


அளவில்லாமல் சாப்பிடுவது.......... அதிகமாக சாப்பாடு பரிமாறிவிட்டார்கள் என்ற ஒரே காரணத்திற்காக அனைத்தையும் சாப்பிட வேண்டும் என்ற அவசியம் கிடையாது. சரியான அளவு உணவே ஆரோக்கியத்தை தரும்.

உடற்பயிற்சி...... கண்டிப்பாக உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும். விளையாட்டு, உடற்பயிற்சி, நடை பயிற்சி போன்றவற்றில் ஈடுபட்டால் தேவைக்கு அதிகமான கலோரிகளை எரிக்கும். அது உங்கள் உடல்கட்டமைப்பு மற்றும் தன் னம்பிக்கையை அதிகரிக்க உதவும்.

இரவு விருந்து......... இரவு விருந்து முடிந்த பின் இனிப்பு பலகாரங்களை பொதுவாக உண்ணும் பழக்கம் உள்ளோர், அதற்கு பதில் சூடான தேநீர், சோடா அல்லது கலோரி இல்லாத உணவை உண்ணலாம்.
 

கடை........ கடும் பசியில் இருக்கும் போது கடைக்கு போனால், பசியை போக்க ஆரோக்கியமற்ற உணவை தான் முதலில் தேர்ந்தெடுப்போம். அதற்கு பதில் வீட்டிலேயே சாப்பிட்டு விட்டு சென்றால் பசி சிறிதளவாவது அடங்கும்.

கடையிலும் ஆரோக்கியமான பொருளை வாங்கலாம் அல்லது போகும் வழியில் ஒரு சாண்ட்விச் அல்லது க்ரில் செய்த கோழிக்கறி போன்றவற்றை சாப்பிடவும்.


சென்ற இடத்தில் பசி எடுத்தால் அருகில் என்ன கிடைக்கிறதோ அதை வாங்கி உண்ணுவோம் அல்லவா? பெரும்பாலும் நமக்கு கிடைக்கும் உணவு அனைத்தும் ஜங்க் உணவுகளே. அதனால் முன் கூட்டியே திட்டம் தீட்டி வீட்டிலிருந்தே சாண்ட்விச், பச்சை கேரட், நற்பதமான பழங்கள், பழச்சாறு என்று எதாவது எடுத்துக் கொள்ளவும்.

தேவையான அளவு........ உணவு வீட்டிலோ அல்லது அலுவலகத்திலோ, அளவில்லாமல் சாப்பிடுவது பலரது வழக்கம். இதனால் கணக்கில்லாமல் அதிக அளவு உணவை உட்கொள்கிறோம். எந்த அளவு உணவு சரியானது என்பதைதெரிந்து கொண்டு, அந்த அளவு மட்டுமே சாப்பிட வேண்டும்.

கலோரி உணவுகளுக்கு குட்பை சொல்லிவிடலாம். ஆரோக்கியமான பிஸ்கட் மற்றும் இதர உணவுகள் என்று கூறப்படும் அனைத்தும் அப்படி இருப்பதில்லை. எந்த அளவு கலோரி இருந்தாலும் அது நம் உடலுக்கு தீமையே. இதை போன்ற உணவுகளை தவிர்க்கவும்.

சாண்ட்விச்...... கடுகு அல்லது கொழுப்பு சத்து இல்லாத மயோனிஸை சாண்ட்விச்சில் தடவி உட்கொண்டால் கலோரி கட்டுப்பாட்டில் இருக்கும். இதனுடன் சேர்ந்து வெட்டிய காய்கறிகளையும் வைத்தால் ருசியுடன் ஆரோக்கியமும் கூடும்.

வார இறுதியில் அதிகமாக உண்ணுவது....... வார நாட்களில் உணவை கட்டுப்பாட்டில் வைத்து விட்டு, வார இறுதியில் உங்கள் கட்டுப்பாட்டை தளர்த்தி விடுகிறீர்களா? அப்படிச் செய்தால் வாரம் முழுவதும் கடைபிடித்த கட்டுப்பாடு வீணாகப் போய் விடும். இதனை தவிர்க்க தினமும் சிறிதளவு கட்டுப்பாட்டில் இருந்து தளர்த்திகொள்ளலாம்.

செயற்கை இனிப்பு...... செயற்கை இனிப்பு என்பது இயற்கை சர்க்கரையை விட 7000 மடங்கு அதிக சுவை நிறைந்தது. இது உங்கள் சுவை உணர்ச்சியை மங்கச் செய்யும் திறன் உள்ளது. செயற்கை இனிப்பு நமக்கு தெரியாமல் நாம் அன்றாடம் பயன்படுத்தும் உணவு தானியங்கள், புரதச்சத்து உள்ள பொருட்கள், சுவைச்சாறு, ஏன் குழந்தையின் உணவு பொருட்களில் கூட இருக்கிறது.

 

 

இணையத்தில்    வாசித்தது

 

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள் பதிவுகளுக்கும்  கருத்துக்களுக்கும்  உறவுகளே..

 

தொடரலாம்.....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நான் இதுவரை  செய்து பார்த்தவை

அல்லது தோற்றவை........

 

மெதுவாக  சாப்பிட  முயன்று தோல்வி

ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா என்ற  கேள்விக்கு இந்தப்பழக்கமும்உதாரணமாகத்தெரிகிறது எனக்கு...

முடியல.

ஒரு முறை விழுங்கும் முன் அடுத்த தடவைக்கு கை தயாராகிவிடுகிறது

அதனையும் முறியடிக்க முள்ளுக்கரண்டியால் சாப்பிடலாம் என  இங்கு படித்து 

அதையும் செய்து பார்த்தேன் முடியல........... :(

 

எனது வேலை காரணமாக

இரவுச்சாப்பாடுக்கு நேரமாகிவிடும்

சாப்பிட்டதும் படுக்கை

இதையும் மாற்ற முயன்று தோல்வி.

 

அடுத்து

பணிகளின் சுமை காரணமாக

உடற்பயிற்சி  இன்மை

அதுவும் ஒரு காரணம்

இந்த நிலை   இன்னும் சிறிது காலம் தொடரும்........

 

 

வீட்டில் உடற்பயிற்சி செய்வதற்காக செலவளித்தது

பல ஆயிரம்

ஆனால் அதைத்தொட்டது சில நிமிடங்களே

அத்துடன் அதுவும் காலாவதி...... :(

 

தற்பொழுதைய  வேலை

குனிந்து நிமிர தேவையில்லை சந்தர்ப்பம் எதுவுமில்லை

இருப்பது குறைவு

நிற்பதே 95 வீதம்....

பாரம் அதிகரிப்பதால் பல சிக்கல்கள்.... :(

 

உடுப்புக்கள்   இறுக்க  தொடங்க

பெரிதாக்கி  பெரிதாக்கி

இனி  அதிகரிக்க முடியாது

கூடாது என்ற மக்களின் நிலை... :(

இரண்டு  பெடியும்

தங்களைப்போல் (வயிறு)அப்பா வரணுமாம்

நடக்கிற  விடயமா  இது... :D

குடலைக்கொஞ்சம் வெட்டி  விடுகின்றேன்

என்றால் நோ...

அது தேவையில்லையாம்..

 

 

அத்துடன்

முகம் கறுக்கத்தொடங்கிவிட்டது

நான் எனது குடும்பத்தில்

வெள்ளையாக  அதுவும் பால் போல்  வெள்ளை  என்று

அம்மாவும் மூத்த சகோதரர்களும் சொல்வார்கள்

ஆனால் தற்பொழுது  பொது நிறத்தையும் தாண்டி ..... :(

 

இவை எல்லாவற்றையும்  கணக்கெடுத்து

கதைத்து

பலதையும் யோசித்து

முன் பின் பிரதிபலிப்புக்கள் அல்லது தாக்கங்களற்ற

சுமேயின் விரதத்தை தொடங்கினேன்.

 

முதலாவது நாள்

பழங்கள்   மட்டும்

இரண்டாவது நாள் 

மரக்கறிகள்  மட்டும்

மூன்றாவது நாள்

இரண்டும் கலந்து

நான்காவது நாளைப்பார்த்தும் மனைவியிடம்  சொன்னேன்

8 வாழைப்பழமும் 3 கப் பாலும்...

இத்துடன் விரதம் முடிக்கப்படும் என்று..

ஆனால் விரதம் தொடர்ந்தது

5வது நாள் ஒருபிடி  சோறும் 6  தக்காளிப்பழமும்

6வது நாள் ஒருபிடி  சோறும் மரக்கறிகளும் 

7வது நாள் ஒருபிடி  சோறும் மரக்கறிகளும் பழங்களும்..

 

விரதம் முடிந்தது

அதற்குள்ளெயே  மக்கள் சொல்லிவிட்டார்கள்

பெரும் வெற்றி  என்று...

நிறுத்தால்

6 கிலோ குறைந்தேன்..... :icon_idea:

தொடரும்...

 

 

 

 

 

 

Edited by விசுகு

என் மனைவியும் இந்த டயட் (GM diet) முறையை ஆரம்பித்து இன்றுடன் 4 ஆவது நாளாகின்றது. நானும் ஒரு முறை முயன்று பார்ப்பம் என்று நினைத்து இருந்தனான். ஆனால் என் மனைவி சாப்பிடும் அளவையும் உணவையும் பார்த்து விட்டு நமக்கெல்லாம் இது ஒரு விஷப் பரீட்சை என்று நினைக்கத் தொடங்கி விட்டேன்.... :)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.