Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழ்களத்தில், 10 வருடங்களை நிறைவு செய்த உறவுகள்.

Featured Replies

மீண்டும் வாருங்கள் எழுதுங்கள் பிரபா.

பழைய கருத்தாளர்கள் மீள இணைய வேண்டும். வாருங்கள் சிறி.

நன்றி சாந்தி மீண்டும் சந்தர்ப்பங்கள் கிடைக்கும் போது இணைகின்றேன்.

  • Replies 99
  • Views 8.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

குருவிகள், யாழுக்கும் உங்களுக்கும் மோகனுக்கும் நளாயினிக்கும் இடையில் நடந்த புடுங்குப்பாடு எனக்கு தெரியாது. ஆனால் நளாயினி மீது நீங்கள் தொடர்ந்து செய்த தனிமனித தாக்குதலே நளாயினியை தொடர்ந்து எழுதாமல் ஒதுங்க வைத்தது உண்மை.இந்த விடயத்தை நளாயினியை திரும்ப அழைத்த போது நளாயினியே சொன்னார். இனி உங்களது ஆலோசனையை நளாயினி கேட்கேல்லயென்று நீங்கள் குறைபட்டால் இது பற்றி நான் எழுத ஒன்றுமில்லை.

நளாயினி எனக்கு பிடிக்க பல விடயங்கள் உண்டு :-

காதல் கவிதைகள் ஆண்களால் மட்டுமே அதிகம் வெளிப்படுத்த முடியுமென்ற வரையறையை மறுத்து துணிந்து காதல் கவிதைகளை வெளிப்படையாக தன்னுணர்வு சார்ந்து எழுதுவது.

பெண்கள் பெண்விடுதலை அடக்குமுறைகள் பற்றி துணிச்சலோடு அது குருவியென்றாலென்ன தோழியான நானென்றாலென்ன துணிச்சலோடு எழுதுவது.

யாழ் களத்தில் எல்லா பெண்களையும் விட துணிவோடு உங்களது எல்லா பெண்கள் மீதான அநாகரீக கருத்துக்களுக்கு பதில் எழுதிய ஒருத்தி நளாயினி.

நளாயினி பற்றி இன்னும் நிறைய இருக்கு ஆறுதலாக எழுதுகிறேன்.

நளாயினியும் நானும் வானொலிகளில் ஒன்றாக நிகழ்ச்சிகள் செய்துள்ளோம். ஆனால் இருவருக்கும் தனித்த தனித்த கருத்துக்கள் பல விடயங்களில் இருந்தது இப்போதும் இருக்கிறது ஆனால் ஒருநாளும் எங்களது நட்புக்குள் அவற்றை புகுத்தி கோபித்து கொண்டு போனதில்லை. இப்போதும் அப்போதும் நளாயினி எனக்கு நல்ல நட்பு. யாழைவிட்டு நளாயினி ஒதுங்கிய பிறகும் பலதடவைகள் திரும்பி வாவென்று அழைத்தும் நளாயினி வராமல் போனது இன்னும் கவலைதான். நல்லதொரு கருத்தாளரை யாழ் கருத்தாளர்களாகிய நாங்கள் இழந்து போனோம்.

முரண்பாடான புதினங்களை கருத்துக்களை நீங்கள் இங்கு மீள இணைத்தாலும் நல்லது. இங்கு சுமேரியர் கொட்டாவி விட்டுக்கொண்டிருப்பதாகவும் பொழுது போகாமல் தவிப்பதாகவும் எழுதியுள்ளார். அவருக்கு பொழுது போக நீங்கள் உதவிய புண்ணியமும் வந்து சேரும்.

நிதர்சன், அருவி, கவிதன் , குளைக்காடான் இப்படி ஒரு குழு நாங்கள் தினமும் மெசென்சரில் பேசிக்கொள்வோம். நிதர்சன் எனது நிகழ்ச்சிகளை போடவதற்கு தனது இணையத்தளத்தின் சேவரையும் தந்த நல்லிதயம். ஆனால் இந்த நல்லிதயங்களுடன் கூட கருத்துக்களால் மோதியிருக்கிறேன். ஆனால் இன்றளவும் நட்பில் நாங்கள் எதிரிகளாகியதில்லை.

தம்பி கவிதன், அருவியை இப்போதும் நினைப்பதுண்டு. இன்று இதனை அவர்களால் வாசிக்க நேர்ந்தால் மீண்டும் அவர்கள் இங்கு வந்து எழுத வேண்டுமென வேண்டுகிறேன்.

குருவிகளாரே உங்களுடனும் நளாயினிக்கு அடுத்த ஆளாக முரண்பாடு நிறைய இருந்து வருகிறது கருத்தால். ஆனால் கருத்துகளம் தவிர்ந்து உங்கள் மீது அன்பும் மதிப்பும் இருக்கிறது. கருத்தை கருத்தால் வெல்ல உங்களுக்கும் தெரியும் எனக்கும் தெரியும். கொட்டாவிகளுக்கு இதெல்லாம் தெரியாது. உங்களிடம் மட்டுமல்ல எனக்க தெரியாத தொழில்நுட்ப விடயங்களை நிதர்சன், குருவிகள், இளைஞன், சுரதா அண்ணா இப்படி பல நண்பர்களிடம் கேட்டு அறிந்து எனது இணைய கணணி அறிவை வளர்த்துக் கொண்டுள்ளேன். உங்களுக்க பலமுறை தனித்து நன்றி சொல்லிப்பழகியதால் இங்கு உங்களது ஆதரவை சொல்ல மறந்துவிட்டேன் மன்னித்தருள்க தம்பியன்.

சேது இணைந்தது 2003 காலம்.

கனோன் - 2003(இவர் தான் எங்களது நெல்லையன். பிறகு சோழன் என பெயரை மாற்றிக்கொண்டார் பிறகு நெல்லையானார். நெல்லையன் கூட நல்லதொரு கருத்தாளர். 2000ம் களில் நாம் செய்த சில பரப்புரைகளுக்கு ஆங்கிலத்தில் எழுதத்தேவையான விடயங்களை எழுதித்தந்தவர்)

இன்னொரு உறவு - மதன். நல்ல கருத்தாளர் மட்டுமன்றி தேடல் வாசிப்பு மிகுந்தவர். கடந்தவருடம் அவரது நண்பர் ஒருவர் பற்றி நான் எழுதிய மாவீரர் நினைவொன்றை பார்த்துவிட்டு தொடர்ப கொண்டார். அவரும் யாழை விட்டு ஒதுங்கி போனார். மதன் இதனை படித்தால் நிச்சயம் திரும்பி வாருங்கள். பழையகளத்தில் இருந்தது போல மீண்டும் எழுதுவோம்.

வினித் இவர் நெதர்லாந்திலிருந்து எழுதிக்கொண்டிருந்தார். இவரும் 2003 காலங்களில் இணைந்ததாக ஞாபகம். எனது வானொலி நாடகம் ஒன்றுக்கு குரல் தந்தவர்.கவிதன் ,அருவி போன்றோரும் நாடகத்திலும் உதவியவர்கள்.

பரணி - 2000ம் களில் அரேபிய நாடொன்றில் இருந்த நினைவு. நல்ல கவிஞன், கருத்தாளன் ஆனால் பிறகு அதிகம் எழுதாமல் ஒதுங்கிக்கொண்டார். எனது வானொலி நிகழ்ச்சிகளில் பரணியின் கவிதைகள் ஒலித்திருக்கிறது. அதிகம் அப்போது காதல் கவிதைகளை எழுதியவர் பரணி.

விதுரன்- இவர் ஸ்கண்டிநேவிய நாடுகளில் ஒன்றிலிருந்து எழுதியவர். சிறந்த அரசியல் கருத்தாளர். இவரும் 2000ம்களில் இருந்தவர். பிறகு இங்கு வருவதில்லை.

தமிழினி என்றொரு தங்கை கணணிதொடர்பாக எனக்கு பல விடயங்கள் சொல்லித்தந்தவர். பிறகு இவரும் காணாமற்போனார். தமிழினி இதனை வாசித்தால் மின்மடலாயினும் போடுங்கள்.

2003 பிற்பட்ட காலங்களில் வலைப்பூவில் எழுதிக்கொண்டிருந்த தங்கை தூயா, மற்றும் சினேகிதி ,ரசிகை இவர்களெல்லாம் இணைந்து ஒரு பெண்கள் இணைய சஞ்சிகையையும் ஆரம்பித்தார்கள். பிறக தொடர்புகள் எதுவுமற்று ஒதுங்கிவிட்டார்கள். இவர்களும் இணைய வேண்டும் மீள.

சோழியன் நல்ல எழுத்தாளர். கருத்தாளர். நட்பு என்ற பெரிதாக சொல்லிக்கொள்ளும் அளவு நேரடி பழக்கம் குறைவு. 1997 தொடக்கம் வானொலிகள் பத்திரிகைகள் மூலம் நிறைய அறிந்த உறவு. 2000ம் ஆண்டு டோட்மூண்ட் நகரில் புத்தகத்திருவிழாவில் முதலில் சந்தித்தேன். இன்றுவரை கருத்துக்களால் பல இடங்களில் கருத்து மோதல் இருந்தது ஆனால் எதிரிகளாக கருத்துக்களுக்காக குத்துபட்டு முறித்துக்கொண்டு போகாமல் தொடரும் நல்ல நட்பு.

கிருபன் :- கிருபன் போடும் அனைத்து கருத்துக்களையும் இணைப்புகளையும் வாசிப்பேன்.பக்கசார்பற்று எல்லா விடயங்களையும் அறியும் ஆர்வம் மிக்க கருத்தாளர். நான் தவாறாமல் வாசிக்கும் கருத்தாளர் கிருபன்.நான் மதிக்கும் கருத்தாளர்களின் கிருபனுக்கு தனியிடம்.

குருவித்தம்பியா, கனக்க விடயங்கள் எழுதப்போகிறேன் தொடரும் என்று முதலே போட்டுள்ளன். ஆக பழைய பல உறவுகள் பற்றி விரைவில் எழுதுவேன். சிலருக்கு நேற்று மின்னஞ்சல் போட்டுள்ளேன் அவர்களது பெயர்களை எழுதுவதில் ஏதும் சங்கடம் இருப்பின் அறியத்தருமாறு.

விரைவில் தொடராக எழுதுவேன் அதுவரை பொறுத்தருள்ள குருவிகளே.

நளாயினி அக்கா யாழ் களத்தில் எல்லாப் பெண்களை விட தைரியமாக குருவிக்கு எதிராக கருத்து எழுதினார் என்டால் பின்னர் ஏன் குருவிகளது தனி மனித தாக்குதலை எதிர் கொள்ள முடியாமல் விட்டுட்டு ஓடினவர்? ...அவரை எப்படி சாந்தி அக்கா தைரியமானவர் என சொல்கிறார்.தைரியமானவ்ர் என்டால் தொடர்ந்து எதிர்த்து நின்று அல்லவா இருக்க வேண்டும்

நெல்லையனை நீங்கள் தானே யாழுக்கு வராமல் பண்ணீங்கள்:)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
மீண்டும் பலரை நினைவு படுத்தியமைக்கு நன்றி தமிழ் சிறி அண்ணா,
 
யாழில் high School படிக்கும் போது இணைந்தேன்…. அப்போது சமூக வலைத்தளங்கள் இல்லை அல்லது நான் அறிந்திருக்கவில்லை.  தமிழை தட்டச்சு செய்வதற்க்கும், தமிழில் இணைங்களை உருவாக்குதற்க்கும் யாழ் கற்றுத்தந்தது. குறிப்பாக இளைஞன் அண்ணா, பொறுமையோடு எம்.எஸ்.என்னில், ஸ்ஹைப்பில் எல்லாம் வந்து சொல்லித் தருவார்.
 
முதல் முதலாக யாழில் முலம் நேரடியாக அஜீவன் அண்ணாவை சந்திக்கும் பொருட்டு நாம். ரொரன்ரோவில் ஒன்று கூடினோம், நான் அருவி, ரமா அக்கா, சினேகிதி மற்றும் ரசிகை அக்கா, இவர்களோடு அர்ஜீன் அண்ணா மற்றும் அஜீவன் அண்ணா இருவரும் இணைந்து முதல் முதலாக நேருக்கு நேர் சந்தித்தோம்.
 
அதன் பின்னரும் பலரை சந்தித்தித்தோம்…
 
இன்று இவர்களின் பலர் யாழின் வாசகர்களாக மட்டும் மாறியிருக்கிறார்கள், நானும் அப்படியே சில காலம் எழுதவில்லை. ஆனால் மீண்டும் எழுத சந்தர்பப்ம் கிடைத்துள்ளது எழுதுகிறேன் முடிந்தளவுக்கு... இதில் குறிப்பிட்டு கூற வேண்டியது என்னவெனில் யாழால் இணைந்த, அருவி, ரமாக்கா, இரசிகை அக்கா, தூயவன் அண்ணா, சினேகிதி, மணிவாசன், போன்றோர் யாழுக்கு வெளியே இன்றும் நல்ல நண்பர்களாக இருக்கின்றோம். 
ஆனாலும் யாழில் எழுதும் கனடா வாழ் உறவுகள் பலரை சந்திக்க வேண்டும் என்ற ஆவல் இருந்தாலும்
தற்போது கால மாற்றத்துக்கு ஏற்ப நேரங்கள் கிடைப்பது அரிது. ஆனால் சந்தர்ப்பம் கிடைத்தால் சந்திக்க வேண்டும் என்ற விருப்பு உண்டு.
 
இன்னும் பல கனடா யாழ் உறவுகளை அறிவேன் ஆனால் நெருக்கமான பழக்கம் யாழுக்கு வெளியில் இல்லை. குறிப்பாக சகாரா அக்கா, கலைஞன் அண்ணா, குளைக்காட்டான், அர்ஜுன் அண்ணா, நிழலி அண்ணா இன்னும் சிலரின் பெயரை மறந்து விட்டேன் மன்னிக்க…  
 
2009 ம் ஆண்டு எனது சகோதரியின் வீரச்சாவின் போது பெரும்பாலான யாழ் உறவுகள் எங்கள் வீட்டுக்கு வந்தனர். ஆந்த நேரத்தில் யார் யார் வந்தார்கள் என்ற விபரத்தை நினைவுபடுத்த முடியவில்லை மன்னிக்கவும், 
ஆனால் யாழ் ஒரு இனிய குடும்பம்.
 
இந்த உறவு நிலை தொடர வேண்டும்..!
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆதை விட யாழின் மூலம் இணைந்த ஜேர்மனியை சேர்ந்த சோழியன் அண்ணா, அப்போது இங்கிலாந்தில் இருந்த கணிணிப்பித்தன், தற்போதும் கருத்தெழுதும் குருவி அண்ணா, தமிழினி,  கனடாவிலிருந்து சந்திக்க முடியாமல் போன கவிதன் அண்ணா,  விஸ்னு, பிரியசகி, இலங்கையில் இருந்து எழுதிய ஹரி அண்ணா,(எனக்கு ஜீ மெயில் அழைப்பை அனுப்பியவர் இவர் தான்)  நிலா அக்கா, கனடாவிலிருந்து எழுதிக சிறிரமணன்,  பிரித்தானியாவிலிருந்து எழுதும் சனியன் அண்ணா…! அனைவரும் தொலை தூரங்களில் இருந்தாலும் ஒரு குடும்பமாய் மாலைத் பொழுதில் எம்.எஸ்.என்னில் அரட்டை அடிப்போம்… 

ஆதை விட யாழின் மூலம் இணைந்த ஜேர்மனியை சேர்ந்த சோழியன் அண்ணா, அப்போது இங்கிலாந்தில் இருந்த கணிணிப்பித்தன், தற்போதும் கருத்தெழுதும் குருவி அண்ணா, தமிழினி,  கனடாவிலிருந்து சந்திக்க முடியாமல் போன கவிதன் அண்ணா,  விஸ்னு, பிரியசகி, இலங்கையில் இருந்து எழுதிய ஹரி அண்ணா,(எனக்கு ஜீ மெயில் அழைப்பை அனுப்பியவர் இவர் தான்)  நிலா அக்கா, கனடாவிலிருந்து எழுதிக சிறிரமணன்,  பிரித்தானியாவிலிருந்து எழுதும் சனியன் அண்ணா…! அனைவரும் தொலை தூரங்களில் இருந்தாலும் ஒரு குடும்பமாய் மாலைத் பொழுதில் எம்.எஸ்.என்னில் அரட்டை அடிப்போம்… 

 

அதுவும் நம்ம இளைஞன்...? யாகூ சற் ரூமில் 'அதைப்பற்றி கதைக்கிறோம்.. இதைப்பற்றிக் கதைக்கிறோம்' என்று கூப்பிடுவார்... பேந்து தட்டுத் தடுமாதிரி யாகூ சற் ரூம் போகப் பழகி... பேந்து வேற வேற சற் ரூம்கள் போகப் பழகி... இப்பிடித்தான் 'ஐஸ்கிறீம் சிலையே நீதானோ?' என்றொரு தொடர் கதை யாழில் உருவாச்சு.

 

கணனிப்பித்தன் போன்ற பலருடன் தொடர்பில் இருந்தேன்... 2009இன் பின் நானும் சிலகாலம் ஒதுங்கி அல்லது நெற் பாவனையைக் குறைத்து இருந்ததால் பலருடைய உரையாடலை இழந்துவிட்டேன்.. எனினும் அவர்களில் பலர் மௌனமாக எனது முகனூலில் இருந்து.. எப்பவாவது ஒருமுறையாவது நலம் விசாரித்துக் கொண்டுதான் உள்ளார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் பலரை நினைவு படுத்தியமைக்கு நன்றி தமிழ் சிறி அண்ணா,

யாழில் high School படிக்கும் போது இணைந்தேன்…. அப்போது சமூக வலைத்தளங்கள் இல்லை அல்லது நான் அறிந்திருக்கவில்லை. தமிழை தட்டச்சு செய்வதற்க்கும், தமிழில் இணைங்களை உருவாக்குதற்க்கும் யாழ் கற்றுத்தந்தது. குறிப்பாக இளைஞன் அண்ணா, பொறுமையோடு எம்.எஸ்.என்னில், ஸ்ஹைப்பில் எல்லாம் வந்து சொல்லித் தருவார்.

முதல் முதலாக யாழில் முலம் நேரடியாக அஜீவன் அண்ணாவை சந்திக்கும் பொருட்டு நாம்.ரொரன்ரோவில் ஒன்று கூடினோம், நான் அருவி, ரமா அக்கா, சினேகிதி மற்றும் ரசிகை அக்கா, இவர்களோடு அர்ஜீன் அண்ணா மற்றும் அஜீவன் அண்ணா இருவரும் இணைந்து முதல் முதலாக நேருக்கு நேர் சந்தித்தோம்.

அதன் பின்னரும் பலரை சந்தித்தித்தோம்…

இன்று இவர்களின் பலர் யாழின் வாசகர்களாக மட்டும் மாறியிருக்கிறார்கள், நானும் அப்படியே சில காலம் எழுதவில்லை. ஆனால் மீண்டும் எழுத சந்தர்பப்ம் கிடைத்துள்ளது எழுதுகிறேன் முடிந்தளவுக்கு... இதில் குறிப்பிட்டு கூற வேண்டியது என்னவெனில் யாழால் இணைந்த, அருவி, ரமாக்கா, இரசிகை அக்கா, தூயவன் அண்ணா, சினேகிதி, மணிவாசன், போன்றோர் யாழுக்கு வெளியே இன்றும் நல்ல நண்பர்களாக இருக்கின்றோம்.

ஆனாலும் யாழில் எழுதும் கனடா வாழ் உறவுகள் பலரை சந்திக்க வேண்டும் என்ற ஆவல் இருந்தாலும்

தற்போது கால மாற்றத்துக்கு ஏற்ப நேரங்கள் கிடைப்பது அரிது. ஆனால் சந்தர்ப்பம் கிடைத்தால் சந்திக்க வேண்டும் என்ற விருப்பு உண்டு.

இன்னும் பல கனடா யாழ் உறவுகளை அறிவேன் ஆனால் நெருக்கமான பழக்கம் யாழுக்கு வெளியில் இல்லை. குறிப்பாக சகாரா அக்கா, கலைஞன் அண்ணா, குளைக்காட்டான், அர்ஜுன் அண்ணா, நிழலி அண்ணா இன்னும் சிலரின் பெயரை மறந்து விட்டேன் மன்னிக்க…

2009 ம் ஆண்டு எனது சகோதரியின் வீரச்சாவின் போது பெரும்பாலான யாழ் உறவுகள் எங்கள் வீட்டுக்கு வந்தனர். ஆந்த நேரத்தில் யார் யார் வந்தார்கள் என்ற விபரத்தை நினைவுபடுத்த முடியவில்லை மன்னிக்கவும்,

ஆனால் யாழ் ஒரு இனிய குடும்பம்.

இந்த உறவு நிலை தொடர வேண்டும்..!

உங்கள் சகோதரியின் மரணச் செய்தி கேட்டு யாழ் களம் சார்பாக நிழலி,அர்ஜீன் அண்ணா,கலைஞன்,சகாறா அக்கா போன்றோர்[எனக்குத் தெரிந்து] உங்கள் வீட்டுக்கு வந்திருந்தனர்.அத் துயரத்தில் இருந்து நீங்கள் கொஞ்சமாவது மீண்டு வந்தது மகிழ்ச்சி

  • கருத்துக்கள உறவுகள்

நிதர்சனை ஏற்கனவே கண்டது போல் இருக்கிறதே எந்த high shcool ல் படித்தீர்கள் அறிந்து கொள்ளலாமா...விரும்பினால் சொல்லுங்கள். :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நிதர்சனை ஏற்கனவே கண்டது போல் இருக்கிறதே எந்த high shcool ல் படித்தீர்கள் அறிந்து கொள்ளலாமா...விரும்பினால் சொல்லுங்கள். :)

 

கண்டிருப்பதற்கு சந்தர்ப்பங்கள் அதிகமாக இருக்கலாம்...

 

high school : Nelson A boylen C,I (Jane and falstaff, North York)  இங்கு தமிழ் மாணவர்கள் என்று ஒரு 10 -15 மட்டும் தான்.

college: centennial college progress campus. (இங்க நம்ம ஆக்கள் நிறைய :D  கண்டிருக்க சந்தர்ப்பம் இருக்கு)

  • கருத்துக்கள உறவுகள்

கண்டிருப்பதற்கு சந்தர்ப்பங்கள் அதிகமாக இருக்கலாம்...

 

high school : Nelson A boylen C,I (Jane and falstaff, North York)  இங்கு தமிழ் மாணவர்கள் என்று ஒரு 10 -15 மட்டும் தான்.

college: centennial college progress campus. (இங்க நம்ம ஆக்கள் நிறைய :D  கண்டிருக்க சந்தர்ப்பம் இருக்கு)

 

ம்ம்ம்..சென்ரானியல் பக்கம் கண்டு இருக்கிறன். :lol:

  • கருத்துக்கள உறவுகள்

 photo-4.jpg?_r=0 பரணி. 14.04.2003.

 

வசி_சுதா.  21.04. 2003.

 

ஆளவந்தான். 20.06.2003.

 

தேவகுரு. 14.09.2003.

 

av-138.png?_r=0  பிரபா. 29.09.2003.

 

சனியன். 04.10.2003.

 

av-164.jpg?_r=0 ஆதிபன்.18.10.2003.

 

மதன். 29.01,2004.

 

சயந்தன். 21.07.2004.

 

நிர்மலன். 22.09.2004.

 

ஜூட். 24.09.2004.

 

av-831.jpg?_r=0சிறி. 25.09.2004.

photo-615.jpg?_r=1405268876 ஹரி.26.09.2004.

 

photo-636.jpg?_r=1416732807 நிதர்சன். 07.10.2004.

 

photo-786.jpg?_r=1389681032 டபிள். 17.11.2004

 

photo-845.jpg?_r=0 குளக்காட்டான்.30.11.2004.

 

ஈழப்பிரியன். 30.01.2005.

 

அனைவருக்கும், வாழ்த்துக்கள். :) 

 

குறை மாதத்தில் பிறந்த என்னையும் சேர்த்ததுக்கு பாராட்டுக்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
நானும் பத்துவருசமாய் இதுக்கை நிண்டு குப்பை கொட்டியிருக்கிறன்.....நம்பவே முடியேல்லையப்பா. :o  :D
 
அசரீதி:- வாறது நடுச்சாமத்திலை.......அதுவும் சுயநினைவிலை வாறேல்லை.....பத்தோடை பதினொண்டாய் இருக்கத்தான் லாயக்கு  :lol: 
  • கருத்துக்கள உறவுகள்

தொடர்ந்தும் சிறகசைத்துப் பறந்துகொண்டிருக்கும் நண்பர் குருவிகள் மாந்தோப்புக்கு வருகை தந்தது மகிழ்ச்சியைத் தந்தது. இப்போதைக்கு சாந்தி அக்கா ஞாபகவீதியில் பயணிப்பதால் அந்தப் பயணம் முடியுமட்டும் நான் பாதையோரத்தில் நின்று வேடிக்கை பார்த்துவிட்டுப் பின்னர் சிலவற்றை எழுதுகின்றேன். இந்தப் பத்தே முக்கால் வருடத்தில் யாழில் இருந்து கற்ற பாடம் என்னவென்றால் நாங்கள் ஒருபோதும் பாடம் கற்பதில்லை என்பதைத்தான்!

  • கருத்துக்கள உறவுகள்

தொடர்ந்தும் சிறகசைத்துப் பறந்துகொண்டிருக்கும் நண்பர் குருவிகள் மாந்தோப்புக்கு வருகை தந்தது மகிழ்ச்சியைத் தந்தது. இப்போதைக்கு சாந்தி அக்கா ஞாபகவீதியில் பயணிப்பதால் அந்தப் பயணம் முடியுமட்டும் நான் பாதையோரத்தில் நின்று வேடிக்கை பார்த்துவிட்டுப் பின்னர் சிலவற்றை எழுதுகின்றேன். இந்தப் பத்தே முக்கால் வருடத்தில் யாழில் இருந்து கற்ற பாடம் என்னவென்றால் நாங்கள் ஒருபோதும் பாடம் கற்பதில்லை என்பதைத்தான்!

 

குருவிகளார் ஒரு எட்டு எட்டிப்பார்த்திட்டு போயிருக்கார். :)

 

1924323_10152917175486810_38155349864371

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையாவா?

 

baby.jpg

யாழ் கள மத்திய குழு உறுப்பினர்களுக்கு வாழ்த்துக்கள்  :D

  • கருத்துக்கள உறவுகள்

 அனைத்து கள உறவுகளுக்கும் வாழ்த்துக்கள்...

அனைவருக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்

  • கருத்துக்கள உறவுகள்

தொடர்ந்தும் சிறகசைத்துப் பறந்துகொண்டிருக்கும் நண்பர் குருவிகள் மாந்தோப்புக்கு வருகை தந்தது மகிழ்ச்சியைத் தந்தது. இப்போதைக்கு சாந்தி அக்கா ஞாபகவீதியில் பயணிப்பதால் அந்தப் பயணம் முடியுமட்டும் நான் பாதையோரத்தில் நின்று வேடிக்கை பார்த்துவிட்டுப் பின்னர் சிலவற்றை எழுதுகின்றேன். இந்தப் பத்தே முக்கால் வருடத்தில் யாழில் இருந்து கற்ற பாடம் என்னவென்றால் நாங்கள் ஒருபோதும் பாடம் கற்பதில்லை என்பதைத்தான்!

ஏன் எங்க போனாலும் கற்க வேணுமெண்டு யோசிக்கிறீங்கள்? மகளோட சேர்ந்து Frozen படம் பார்த்த பின்னர் நானும் யோசிக்கிறன்! Let it go! :D

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் எங்க போனாலும் கற்க வேணுமெண்டு யோசிக்கிறீங்கள்? மகளோட சேர்ந்து Frozen படம் பார்த்த பின்னர் நானும் யோசிக்கிறன்! Let it go! :D

https://www.youtube.com/watch?v=moSFlvxnbgk

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் எங்க போனாலும் கற்க வேணுமெண்டு யோசிக்கிறீங்கள்? மகளோட சேர்ந்து Frozen படம் பார்த்த பின்னர் நானும் யோசிக்கிறன்! Let it go! :D

எல்லாம் வள்ளுவர் சொல்லித் தந்ததுதான்!

"கண்ணுடைய ரென்பவர் கற்றோர் முகத்திரண்டு

புண்ணுடையோர் கல்லா தவர்"

Frozen படத்தில் வருகின்ற மாதிரி அன்பு/நட்பு எனும் வேடம் பூண்டவரும் உளர்!

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் வள்ளுவர் சொல்லித் தந்ததுதான்!

"கண்ணுடைய ரென்பவர் கற்றோர் முகத்திரண்டு

புண்ணுடையோர் கல்லா தவர்"

Frozen படத்தில் வருகின்ற மாதிரி அன்பு/நட்பு எனும் வேடம் பூண்டவரும் உளர்!

 
குறள் 393
 
கண்னுடையவர் என்றுக் கூறப்படுபவர் கற்றவரே, கல்லாதவர் முகத்தில் இரண்டுப் புண் உடையவர் ஆவார்.

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்

 

 
குறள் 393
 
கண்னுடையவர் என்றுக் கூறப்படுபவர் கற்றவரே, கல்லாதவர் முகத்தில் இரண்டுப் புண் உடையவர் ஆவார்.

 

 

இந்தக் குறள் ஏற்றுக்கொள்ள முடியாதது.

 

  • கருத்துக்கள உறவுகள்

திருவள்ளுவருக்கு எதிராக வழக்கு போட உங்களுக்கு எல்லா உரிமையும் உண்டு 

  • கருத்துக்கள உறவுகள்

திருவள்ளுவருக்கு எதிராக வழக்கு போட உங்களுக்கு எல்லா உரிமையும் உண்டு 

 

வழக்குப் போடலாம் தான். இல்லாத ஆளுக்குப் போட்டு என்னதான் பயன். பொருத்தமில்லாத குறள்களைப் போடுறவைக்கு எதிராத்தான் வழக்குப் போடவேணும் இனி.

  • 1 month later...

தமிழ் சிறி கடந்த டிசம்பர் மாதத்தில் யாழில் இணைந்து 10 வருடங்கள் ஆனதை நினைவு படுத்தி, வாழ்த்தி மடல் போட்டிருந்தார், நன்றி. பொதுவாக  களத்துக்கு வந்து பதிவுகளை மேலோட்டமாக பார்த்து விட்டு போவது. நீண்ட நாட்களுக்கு பின் இன்று தான் களத்துக்குள் உறுப்பினராக உள்நுழைந்து பார்வையிட்டேன். என்னை நினைவில் வைத்திருக்கும் அனைத்து உறவுகளுக்கும் நன்றி. களத்தில் இணைத்து 10 வருடங்கள் போனதை நம்ப முடியாமல் இருக்கிறது. 2004 இல் புதிதாக புலம் பெயர்ந்து தனிய வசித்த நேரம், தமிழ்ல் வசிக்க, எழுத, தனிமை உணர்வை போக்க யாழ் உதவியது.

அப்போது பல உறவுகளுடன் யாழிலும், எம் எஸ் என் இலும் அடிக்கடி தொடர்பில் இருந்தேன். குறிப்பிட தக்க உறவுகளை சந்தித்தும் இருக்கிறேன். அதைபற்றி பின்னர் எழுதுகிறேன். கானடாவில் இருந்தாலும், ஒன்ராறியோவில் வசிக்காத  காரணத்தால் யாரையும் சந்திக்க முடிவதில்லை.

Edited by KULAKADDAN

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.