Jump to content

தேசியத் தலைவர் மேதகு.பிரபாகரன் அவர்களின் சகோதரியின் கணவர் மரணம்


Recommended Posts

தேசியத் தலைவர் மேதகு.பிரபாகரன் அவர்களின் சகோதரியின் கணவர் மரணம்

தேசியத் தலைவர் மேதகு.பிரபாகரன் அவர்களின் சகோதரி விநோதினி அவர்களின் கணவர் திரு.ராஜேந்திரம் அவர்கள் இன்று கனடாவில் மாரடைப்பால் மரணமடைந்தார்.

வல்வை மக்களின் உணர்வு அஞ்சலி

அமரர் திரு. இராசேந்திரம்

தமிழீழ மாதா பெற்றெடுத்த ஈடு இணையில்லாத் தவப்புதல்வன்

தன்மானமொன்றே தகுதியெனக் கொண்டு தலை நிமிர்ந்தோன்..

எத்தனை சோகம் வாழ்வில் வந்தாலும் தளராத தமிழன்..

தலைவர் வழியில் நடந்த தமிழர்கண்டு தன் மனம் மகிழ்ந்தவன்

தலைவரைப் போல தன்னரும் மாமனாம் மாத்தந்தை

வேலுப்பிள்ளை போல நேர்வழி சென்ற புனித வாழ்க்கை..

பட்டம் பதவி, பகட்டு என எத்தனையோ அருகில் கிடந்தும்

எதையும் தொடாது எளிமை வாழ்வு வாழ்ந்த ஏற்றம்..

கற்பொழுக்கத்தை பொது வாழ்விலும் கடைப்பிடித்த கண்ணியம்..

ஈழம் மலரும் இன்னுயிர்த் தமிழ் அரியணை ஏறும் என்று

இரவும் பகலும் இன்னல்களைத் தாங்கி இதய யாகம் செய்தோன்

நல்லோன்.. நற்றமிழோன்.. அமைதி வாழ்வால் அகிலம் வென்றோன்..

தான் கடுகளவு சாய்ந்தாலும் போராட்டத்தின் கண்ணியம் சாயுமென

கண் தூங்காது சமன் செய்து சீர்தூக்கும் துலாக்கோலாய் வாழ்ந்தோன்

நெறிமுறை பிறழாத நேரியோன் இன்று பாரில் இல்லை..

தமிழீழத்தாய் தன் இனிய புதல்வனை இரு கரங்களால் ஏந்துகிறாள்..

தமிழீழ மக்கள் அனைவரும் சிரந்தாழ்த்தி விடை தருகிறார்..

ஏற்றமே எங்கள் எழில் தமிழே வல்வை தந்த மாணிக்கமே..

சென்று.. வா..

ஆத்ம சாந்திக்கு வல்வை மக்களின் உணர்வு அஞ்சலி

http://www.alaikal.com

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்.

Link to comment
Share on other sites

ஆழ்ந்த இரங்கல்கள்!

Link to comment
Share on other sites

ஆழ்ந்த இரங்கல்கள்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தலைவரின் மைத்துனர் என்றதற்காக அல்லாமல், ஒரு தமிழர் என்பதற்காக இவருக்கு எனது கண்ணிர் அஞ்சலிகள். இவர் போன்றே தினமும் மரணிக்கும் அனைத்து மனிதர்களுக்கும் எனது கண்ணீர் அஞ்சலிகள்.

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணீரஞ்சலி.

 

கவிதையில் தமிழ் பணி  செய்தாதக உள்ளது

இவர் தமிழருக்கு  ஆற்றிய  பணிகளை யாரும் எழுதினால் நல்லது

அல்லது இவருக்கு தேசியத்தலைவரின் புகழை சேர்ப்பது சரியன்று.......

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.