Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்கலாம்; சரத் பொன்சேகா எச்சரிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்கலாம்; சரத் பொன்சேகா எச்சரிக்கை 

dfa4f50c77533d7b2fb43c7aa7c128eb.jpg
விடுதலைப் புலிகள் விவகாரத்தை சரியான வகையில் கையாளாவிடின் நாட்டின் மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்கும் என முன்னாள் இராணுவ தளபதியும் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
 
வடக்கில் யுத்தம் உச்ச கட்டத்திலிருந்ததை விட இப்போது மிக குறைவாகவே அங்கு இராணுவம் உள்ளது. தேவையேற்படின் பயன்படுத்தக்கூடிய அளவுக்கு வைத்துக்கொண்டு இராணுவ குறைப்பை மேற்கொள்ள வேண்டும்.
 
 
மேலைத்தேய நாடுகளிலும் தமிழ் நாட்டிலும் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் இப்போதும் உள்ளனர். இதுபோல வடக்கு, கிழக்கிலும் ஒரு சில அரசியல்வாதிகள் இருக்கலாம். அதை பூரணமாக மறுக்க முடியாது. 
 
நிலைமையை அரசியல் ரீதியாவும் இராணுவ ரீதியாவும் சரியாக கையாளப்படாவிடின் பயங்கரவாதம் அதன் கொடூரத்தை மீண்டும் தொடங்க முடியும்.
 
வடக்கு, கிழக்கில் வாக்களிக்க செல்பவர்களை தடுக்கவென தேர்தலின்போது, மேலதிக படையினர் நகர்த்தப்படவில்லை. ஆனால், வாக்களிப்பை தடுப்பதற்காக சில அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருந்தன. 
 
 
தேர்தலுக்கு முன்னர், வடக்கு பாதுகாப்பு படைகளின் தளபதியை இடமாற்றம் செய்தனர். சில புலனாய்வு அதிகாரிகளுடன் சேர்ந்து திட்டங்களை வகுத்தனர். எம்மிடம் இது தொடர்பான விவரங்கள் உள்ளன. விரைவில் இவற்றை விசாரணைகளின் மூலம் அம்பலப்படுத்துவேன் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
 
சில மாதங்களுக்கு முன்னர் சில தமிழீழ விடுதலைப் புலிகள் கைது செய்யப்பட்டனர். முன்னிருந்த அரசின் அக்கறையின்மையே இவ்வாறானதொரு நிலைமை ஏற்படக் காரணம். நான் இராணுவத்தை விட்டு இளைப்பாறியதும் அவர்கள் தேடுதல் முயற்சியில் ஈடுபட்டிருக்க வேண்டும்.
 
இதன்மூலம் தப்பியிருந்த புலி உறுப்பினர்களை பிடித்திருக்கலாம். ஆனால், முன்னைய அரசு இதை செய்யவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=265643831826650805#sthash.SzHS643p.dpuf

இப்ப என்ன சொல்ல வாரிங்க . விழுங்காமல் வெளிப்படையாக சொல்லுமோய் 

  • கருத்துக்கள உறவுகள்

 

சில மாதங்களுக்கு முன்னர் சில தமிழீழ விடுதலைப் புலிகள் கைது செய்யப்பட்டனர். முன்னிருந்த அரசின் அக்கறையின்மையே இவ்வாறானதொரு நிலைமை ஏற்படக் காரணம். நான் இராணுவத்தை விட்டு இளைப்பாறியதும் அவர்கள் தேடுதல் முயற்சியில் ஈடுபட்டிருக்க வேண்டும்.
 
இதன்மூலம் தப்பியிருந்த புலி உறுப்பினர்களை பிடித்திருக்கலாம். ஆனால், முன்னைய அரசு இதை செய்யவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

கடலும்

மண்ணும்

மிருகங்களும்

பறவைகளும்

சிங்களமும் மாறவில்லை.

 

தமிழன் மாறிவிட்டான்

ஈழத்தை புதைத்துவிட்டான்....... :( 

சிங்களவர்களின் பார்வையில் தமிழன் எப்போதும் புலிமுகத்துடன்தான் தெரிவான்.

  • கருத்துக்கள உறவுகள்

கடலும்

மண்ணும்

மிருகங்களும்

பறவைகளும்

சிங்களமும் மாறவில்லை.

 

தமிழன் மாறிவிட்டான்

ஈழத்தை புதைத்துவிட்டான்....... :( 

எல்லோரும் சேர்ந்து தமிழனை புதைத்தனர் 

ஈழமும் புதைந்து விட்டது.  

இனி நீங்களும் நானும் கவலைப்பட்டு எதுவும் நடக்கப்போவதில்லை 

கோட்டு சூட்டு போட்டு வந்து கோமாளிகள் கூத்தாடும் ஜெனிவாவுக்கு தயாராகுங்கள் 

கூத்தை பார்க்க நாங்களும் தயாராகிறோம். :)  

  • கருத்துக்கள உறவுகள்

தமிழன் புதைத்தாலும் சிங்களவன் புதைக்கமாட்டான்

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோரும் சேர்ந்து தமிழனை புதைத்தனர் 

ஈழமும் புதைந்து விட்டது.  

இனி நீங்களும் நானும் கவலைப்பட்டு எதுவும் நடக்கப்போவதில்லை 

கோட்டு சூட்டு போட்டு வந்து கோமாளிகள் கூத்தாடும் ஜெனிவாவுக்கு தயாராகுங்கள் 

கூத்தை பார்க்க நாங்களும் தயாராகிறோம். :)  

 

நிச்சயமாக வருவேன்.

புலம் பெயர் தமிழர் என்ன செய்யணும் என்பதில் தெளிவாக உள்ளேன்....

img173_Page_1.jpg

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவனின் இருப்புக்கு புலிகளும், தமிழனும் மிக முக்கியம். பிச்சைக்காரனின்  புண் போல. 

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு, தமிழர்கள் யாராவது கோட்டுச்சூட்டுப்போட்டால்  ஒருசிலரது முதுகு அரிப்பெடுக்குது.

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு, தமிழர்கள் யாராவது கோட்டுச்சூட்டுப்போட்டால்  ஒருசிலரது முதுகு அரிப்பெடுக்குது.

அண்ணை 

நாங்க சொல்வது ஆணையாளர்கள் (அழுகையாளர்கள் ) என்ற பெயரிலும் ,அனுசரணையாளர்கள்

என்ற பெயரிலும் வந்து கதிரை பிடிச்சி விளையாடும் கோமாளிகளை (இதில கேம்பிரிட்ஜ், ஹார்வர்ட் படிப்புகள் வேற), இன்னும் கொஞ்ச காலத்தில் அங்க போய் காயுற  நம்மட சனத்தையும் கோமாளியாக்கிடுவானுகள்...பிறகென்ன ஜெனிவா வெள்ளி விழா ,ஜெனிவா பொன் விழா என்று கொண்டாட வேண்டியதுதான் 

(தமிழர் கோட்டு சூட்டு போட்டதால் தான் இந்த விவகாரம் ஜெனிவாவரை  இவ்வளவு தூரம் வந்தது என்பதை மறக்குமளவு இன்னும் நன்றி கேட்டு போய்விடவில்லை நாங்கள் )

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப் புலிகள் விவகாரத்தை சரியான வகையில் கையாளாவிடின் நாட்டின் மீண்டும் பயங்கரவாதம் தலைதூக்கும் என முன்னாள் இராணுவ தளபதியும் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்/////

சரி இனி என்ன தமிழ் மக்களின் வாக்குகளை வைத்து ஆட்சியில் அமர்ந்தாச்சு......இனி 5 வருஷத்துக்கு புலி பூச்சாண்டி காட்டி.....தமிழர்களை தொடர்ந்தும் இராணுவ ஆட்சிக்குள் வைத்திருக்க வேண்டியது தான்........

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்கலாம்; சரத் பொன்சேகா எச்சரிக்கை

 

புத்தியை காட்ட வெளிக்கிட்டுட்டாங்கள்.......  நாய்வாலை நிமித்தலாம் எண்டு சொன்ன ஆக்கள் வரிசையாய் வாங்கோ.... :lol:  :D

இதற்கு நாங்களும் முழு ஆதரவுதான் .இந்த விடயத்தில் கூட்டமைப்பும் இவர்களுக்கு முழு ஒத்துழைப்பும் வழங்கவேண்டும் .

 

கனேடிய தமிழ் காங்கிரஸ் மைத்திரியின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்திருக்கின்றார்கள் .

இன்றும் கொடியுடன் அலையும் அமைப்புகளுடன் எந்த உறவையும் வைக்காமல் கூட்டமைப்பு இலங்கை அரசுடனும் புலம்பெயர்ந்த அமைப்புகளுடனும் சமயோசிதமாக நடந்து நாட்டில் உள்ள தமிழர்களுக்கு ஒரு விடிவைகொண்டுவரவேண்டும் .

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணை 

நாங்க சொல்வது ஆணையாளர்கள் (அழுகையாளர்கள் ) என்ற பெயரிலும் ,அனுசரணையாளர்கள்

என்ற பெயரிலும் வந்து கதிரை பிடிச்சி விளையாடும் கோமாளிகளை (இதில கேம்பிரிட்ஜ், ஹார்வர்ட் படிப்புகள் வேற), இன்னும் கொஞ்ச காலத்தில் அங்க போய் காயுற  நம்மட சனத்தையும் கோமாளியாக்கிடுவானுகள்...பிறகென்ன ஜெனிவா வெள்ளி விழா ,ஜெனிவா பொன் விழா என்று கொண்டாட வேண்டியதுதான் 

(தமிழர் கோட்டு சூட்டு போட்டதால் தான் இந்த விவகாரம் ஜெனிவாவரை  இவ்வளவு தூரம் வந்தது என்பதை மறக்குமளவு இன்னும் நன்றி கேட்டு போய்விடவில்லை நாங்கள் )

 

எழுதுவதற்கு எல்லாம் இலகுதான். ஆனால் அந்தக் கோட்டுச் சூட்டுப் போட்டு ஜெநீவாவரை ஒரு குழுவினரை அனுப்பப் படும்பாட்டைப்பற்றியும் அதற்காக குறிப்பிட்ட சிலர் மட்டுமே இழக்கும் தம் சொந்தப் பணம் நேரம் மற்றும் விரயங்கள் பற்றியும் யாருக்கும் விளங்கப் போவதில்லை. அனால் நாங்களும் எழுதவேண்டும் என்று எழுத மட்டும் முடியும்.

  • கருத்துக்கள உறவுகள்

இதற்கு நாங்களும் முழு ஆதரவுதான் .இந்த விடயத்தில் கூட்டமைப்பும் இவர்களுக்கு முழு ஒத்துழைப்பும் வழங்கவேண்டும் .

 

கனேடிய தமிழ் காங்கிரஸ் மைத்திரியின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்திருக்கின்றார்கள் .

இன்றும் கொடியுடன் அலையும் அமைப்புகளுடன் எந்த உறவையும் வைக்காமல் கூட்டமைப்பு இலங்கை அரசுடனும் புலம்பெயர்ந்த அமைப்புகளுடனும் சமயோசிதமாக நடந்து நாட்டில் உள்ள தமிழர்களுக்கு ஒரு விடிவைகொண்டுவரவேண்டும் .

இவர்களின் அலுவலகங்கள் உங்கள் வீட்டு குசினிக்குள்ளா இருக்கிறது ?

சரத் பொன்சேகாவிற்கு பதவி ஆசை வந்துவிட்டது. இப்போ வேறு ஒரு திரியில் தனித்து தீப்பந்தத்தின் கீழ் போட்டியிடப்போவதாக கூறியிருக்கின்றார்.தன்னுடைய குடியுரிமை கிடைக்கும் வரை வாலைச்சுருட்டி கொண்டிருந்தவர் வாலை வெளியே நீட்டியுள்ளார்.இவர் ராணுவப்புரட்சி செய்தாலும் வியப்பில்லை.குதிரையின் குணமறிந்து தான் கொம்பில்லாதது போல் இவரை அறிந்து தான் இவரின் குடியுரிமை நீக்கப்பட்டிருக்கலாம். இப்போ குழப்ப வெளிக்கிட்டுள்ளார்.புலிகள் எத்தனை பேர் இறந்தார்கள்,எத்தனைபேர் தப்பினார்கள் என்று இவருக்கும் கோத்தாவுக்கும் தான் வெளிச்சம். இல்லையேல் இச்செய்தி எழுதும் வரையில் ராணுவப் பிரசன்னத்தில் நடைமுறையில் இதுவரை எந்த மாற்றமும் நிகழவில்லை என்பது தானே உண்மை 

 

(எல்லோராலும் கோரமான  படங்களைப்பார்க்க முடியாது)

 

http://www.nitharsanam.net/27298/news/27298.html/comment-page-2

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
60/70 வருச பிரச்சனையை 100 நாளிலை முடிச்சு காட்டுறன் எண்டுறான் அவன்..
:rolleyes:
யாழ்களத்திலையும் இரண்டொரு பேர் பட்டுவேட்டி சால்வையோடை நன்நாளை பொன்னாளாய் கொண்டாடப்போகினமாம். :lol:  :lol:  :lol:
 
அதுசரி அதிரடியாய்  ரெடி பண்ண இதென்ன தேத்தண்ணியும் வடையுமே?????? :icon_idea:
  • கருத்துக்கள உறவுகள்

கோத்தா முடிச்சது போக மிச்சத்துக்கு இவர் கணக்குப் பண்ண வந்திருக்கிறார் போல. இவருக்கும் எம்மக்களை வாக்குப் போடச் சொல்லி சிங்கக் கொடியை தூக்கினோர் எம்மினத்தில் உண்டு. :rolleyes::icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதற்கு நாங்களும் முழு ஆதரவுதான் .இந்த விடயத்தில் கூட்டமைப்பும் இவர்களுக்கு முழு ஒத்துழைப்பும் வழங்கவேண்டும் .

 

கனேடிய தமிழ் காங்கிரஸ் மைத்திரியின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்திருக்கின்றார்கள் .

இன்றும் கொடியுடன் அலையும் அமைப்புகளுடன் எந்த உறவையும் வைக்காமல் கூட்டமைப்பு இலங்கை அரசுடனும் புலம்பெயர்ந்த அமைப்புகளுடனும் சமயோசிதமாக நடந்து நாட்டில் உள்ள தமிழர்களுக்கு ஒரு விடிவைகொண்டுவரவேண்டும் .

 

அரச பயங்கரவாதமும் ஒட்ட நறுக்கப்படவேண்டும்.

சரத் சரியான முறையில் தான் சொல்கிறார். தமிழர் பிரச்சனை அரசியல் ரீதியாக‌ தீர்க்கப்பட வேண்டும் இல்லையேல் பயங்கரவாதம் மீண்டும் தலை தூக்கும் என்று சிங்களவர்களுக்கு சொல்லப்படும் செய்தியாக இருக்க வேண்டும்.
 
ஒரு வகையில் நல்ல செய்தி தான். வெற்றியீட்டி விட்டோம் தமிழருக்கு எதுவும் தேவையில்லை என்ற நினைப்புள்ள  சிங்களவருக்கு தமிழர் பிரச்சனை தீர்க்கப்பட வேண்டிய அவசியத்தை உணர்த்தும். அதுவும் ஒரு ராணுவத் தளபதியின் வாயில் இருந்து வருவது இன்னும் நல்லது.
 
  • கருத்துக்கள உறவுகள்

மேற்குலக, தென் கிழக்காசிய நாடுகளின் அரசியல் முழுக்க... இப்ப 'பயங்கரவாதம்' எண்ட எண்ணெய்யில தான் ஓடுது!  :o

 

வட இந்தியனுக்கு 'வருணாச்சிரம தர்மத்தை' விட்டால், பிழைக்கிறதுக்கு வழி இல்லை!

 

சிங்களவனுக்கும், தமிழனை விட்டால் வருமானத்துக்கு வேற வழியில்லை!

 

இது தான் நடை முறை 'யதார்த்தம்'!

சரத் சரியான முறையில் தான் சொல்கிறார். தமிழர் பிரச்சனை அரசியல் ரீதியாக‌ தீர்க்கப்பட வேண்டும் இல்லையேல் பயங்கரவாதம் மீண்டும் தலை தூக்கும் என்று சிங்களவர்களுக்கு சொல்லப்படும் செய்தியாக இருக்க வேண்டும்.

ஒரு வகையில் நல்ல செய்தி தான். வெற்றியீட்டி விட்டோம் தமிழருக்கு எதுவும் தேவையில்லை என்ற நினைப்புள்ள சிங்களவருக்கு தமிழர் பிரச்சனை தீர்க்கப்பட வேண்டிய அவசியத்தை உணர்த்தும். அதுவும் ஒரு ராணுவத் தளபதியின் வாயில் இருந்து வருவது இன்னும் நல்லது.

சந்தேகப்பட்டால் எல்லாவற்றிலும் சந்தேகப்படுவது நம்பினாலும் கண்ணை மூடிக்கொண்டு எல்லாவற்றையும் நம்புவது தமிழரின் பலவீனம்..
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அரச பயங்கரவாதம் தலைதூக்காமலிருந்திருந்தால் தமிழ்த்தீவிரவாதம் தோன்றியிராது என்பதை இன்னும் சிங்களம் புரிந்துகொள்ள மறுக்கிறதா?

 

அட அழிவுக்குள் வாடும் எம்மில் பலபேருக்கே புரியாதபோது அழித்துவிட்டு, மீதியையும் அழிக்கத் திட்டமிடுவோருக்கா புரியப்போகிறது! 

அரச பயங்கரவாதம் தலைதூக்காமலிருந்திருந்தால் தமிழ்த்தீவிரவாதம் தோன்றியிராது என்பதை இன்னும் சிங்களம் புரிந்துகொள்ள மறுக்கிறதா?

 

அட அழிவுக்குள் வாடும் எம்மில் பலபேருக்கே புரியாதபோது அழித்துவிட்டு, மீதியையும் அழிக்கத் திட்டமிடுவோருக்கா புரியப்போகிறது! 

எவருக்கும் எதுவும் புரியாமல் இல்லை .சுதந்திரத்திற்கு முன்பே சிங்களவரிடம் தோற்ற வரலாறு எமது .

தமிழர்களின் அரசியலை தலைமைகள் கையாண்ட விதங்கள் பற்றித்தான் விமர்சனங்கள் .அரசியல் போராட்டமோ ஆயுத போராட்டமோ இரண்டிலும் தோற்றவர்கள் நாங்கள்தான் .ஒரு விடயம் ஏன் தோல்வி அடைகின்றது என்றால் அது சரியாக நடாத்தப்படாததால் தான் .

இன்று இருக்கும் எமது அரசியல் தலைமை கூட உண்மையானதோ நேர்மையானதோ மக்களுக்காக தம்மை அர்பணிப்பவர்களோ அல்ல எனவே மீண்டும் நாம் தோற்கவேண்டிவரலாம் .

வெறும் சுயநலத்தால் பிழையான தலைமைகளுக்கு பின்னால் மக்கள் இழுபட்டுக்கொண்டிருந்தால் எக்காலமும் நாம் சிங்களத்தை வெல்லப்போவதில்லை .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எமது பிரச்சனைகளுக்கு எல்லாம் தீர்வு வருகின்ற வேளையில்....

பொங்கல் பானையை காலால் உதைத்து போல் உதைத்து விட்டு...

இப்போது வியாக்கியானம் பேசிப்பலன் இல்லை.

இன்னும் காக்கை வன்னியர்கள் புதுப்பரிமாணத்தில் வருவார்கள்/வந்து கொண்டிருக்கின்றார்கள்..... தமிழினத்திற்கு இதுவும் புதிதல்ல.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.