Jump to content

யாழ்ப்பாணமும் கூகிள் செய்மதியும்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

j-1.jpg

விடியக்காலமையும் அதுவுமாய்...காகமொன்று மாறி மாறிக் கத்திக்கொண்டிருந்தது!

சனிக்கிழமையாவது கொஞ்சம் கண்ணயருவம் எண்டால் இந்தச் சனியன் பிடிச்ச காகம் விடுகுதில்லை என்று அலுத்துக் கொண்டார் அம்பலவாணர்! சனிக்கிழமை ஓய்வெடுக்கிற அளவுக்கு அம்பலத்தார் ஒண்டும் பெரிசா வெட்டிப் புடுங்கிறதில்லை எண்டாலும் மகளின்ர மூண்டு  பேரப்பெடியளும் அவரைப் போட்டுப் படுத்திற பாடு கொஞ்ச நஞ்சமில்லை! இண்டைக்கு மகள் லீவில நிப்பாள்! அதால அவருக்குக் கொஞ்சம்ஓய்வு கிடைக்கிற நாள் தான் இந்தச் சனிக்கிழமை! அம்பலத்தாரின்ர மனுசியும் மற்ற மகளின்ர பிள்ளைப்பெறு பாக்கவெண்டு அவுஸ்திரேலியாவுக்குப் போனது… போனது தான்! மருமகன் வலு கெட்டிக்காரன்! என்னவோ பூந்து விளையாடி மனுசியை டெம்பறரி  விசாவில அங்க நிக்க வைச்சிட்டான்! அம்பலத்தார் தான் தனிச்சுப் போனார்! ஆணாய்ப் பிறந்தால்.. இந்தப் பிள்ளைப் பேறு பாக்கிறதெண்டு சொல்லி விசா எடுத்துப் போகேலாது எண்டு தனக்குள் அங்கலாய்த்துக் கொண்டார்! எல்லா விசயத்திலும் ஈக்குவாலிட்டி பாக்கிற வெள்ளைக்காரன் இந்த விசயத்தில மட்டும் அசைய மாட்டதெண்டிறான் எண்டு நினைத்துக் கொண்டார்!

சரளமாக நகர்ந்து கொண்டிருந்த நினைவோட்டத்தைக் காகத்தின் சத்தம் மீண்டும் குழப்பியது! காகமும் வேண்டுமென்றே செய்வது போல… திறந்திருந்த ஜன்னல் அருகில் இருந்த வேலியிலிருந்து கத்தியது!

முருகா...இண்டைக்கு என்னவோ ஒரு அசமந்தம் நடக்கப்போகுது என்று நினைத்தவராக நல்லூர் முருகனை உதவிக்குக் கூப்பிட்டார்!

நல்லூர் மணி அடிக்கிற சத்தம் கேட்கத் தொடங்க...அவரது ரெலிபோன் மணியும் கிணுகிணுத்தது! முருகா...முருகா..என்ற படி  போனை எடுத்து ‘ஹலோ ஆர் பேசுறது?’ என்றார்!

அண்ணை சுகமாய் இருக்கிறீங்களே…? அவரது தங்கச்சி தான் லண்டனிலிருந்து அழைத்திருந்தாள்! கொஞ்சம் சுதாரித்துக் கொண்டவராக ...சுகத்திற்கு என்ன குறைச்சல்...நீ எப்படி என்று கேட்டார்! அண்ணை, நேரடியாக விசயத்துக்கு வாறன் அண்ணை! இப்ப எங்கட வளவையும் வீட்டையும் வானத்திலையிருந்து பாக்கிற மாதிரிப் பார்க்கலாம் அண்ணை! இண்டைக்குப் பார்த்தன்...வலு சந்தோசமாயிருக்கு!

சரி...சரி ...இப்ப சண்டையில்லாத படியால வடிவாத் தானே இருக்கும்! வேற மச்சான் எப்படி இருக்கிறார்? மருமக்கள்…. அம்பலத்தார் தொடர்ந்தார்!

அவர் தான் இப்ப எடுக்கச் சொன்னவர்! அவரும் வீட்டைப் பாத்தவர்! குண்டு விழுந்த வீடு மாதிரியே தெரியேல்லை! தென்னை மரங்களும் கொஞ்சம் உயர்ந்து போனாலும் கொத்துக் கொத்தாய் காய்ச்சிருக்கிறதைப் பாக்க ஆசையைக் கிடக்குது எண்டு சொல்லுறார்!

அது சரி… பெடியள் .. வீட்டுச் சொந்தக்காரர் வெளிநாட்டிலை எண்டு சொல்லி...வீட்டைத் தங்கட தேவைக்கு வேணுமெண்டு கேக்க/….நான் தானே எல்லா இடமும் திரிஞ்சு.. கடைசியாய்ப் பெரியவினின்ர மாமாவைப் பிடிச்சு ஒரு மாதிரி வீட்டை மீட்டனான்! உனக்கு நினைவிருக்கே தங்கச்சி!

ஓமண்ணை..நான் அதை எல்லாம் மறப்பனே …!

நீ மறக்க மாட்டாய் தானே தங்கச்சி… கூடப் பிறந்தனி எல்லே..! அதோட இந்த வீட்டைச் சீதனமாய் உனக்குத் தர முந்தி..இதைக் கட்ட எவ்வளவு காசை நான் கொட்டியிருப்பன் தங்கச்சி..!

உண்மை தானண்ணை! இண்டைக்கு இந்த வீட்டைக் கூகிள்ல பாத்த மனுசன் ..என்னப்பா.. எங்களுக்கும் வயது போகுது..பிள்ளையளும் வளந்திட்டுது தானே.. ஊரில இப்ப பிரச்சனைகள் இல்லாத படியால்.. ஓய்வெடுத்த பிறகு ஊரில போய் இருப்பமா எண்டு கேட்டிது !

சரி..சரி … வாங்கோவன் உங்கட வீடு தானே.. கொஞ்ச நாளைக்கு  வந்து நின்டிட்டுப் போறதில எங்களுக்குச் சந்தோசம் தானே!

கொஞ்ச நாளில்லை அண்ணை… இஞ்ச குளிருக்கை வயசு போகப் போக நிண்டு பிடிக்கேலாது போல கிடக்கண்ணை! அது தான் அங்க வந்து நிரந்தரமாய் இருக்கலாம் எண்டு யோசிக்கிறம்!

நீ தானே தங்கச்சி...சொன்னனி…! நாங்கள் எங்கை இனி அந்தப பக்கம் வரப்போறம்… பிள்ளையள் எல்லாம் இங்கத்தைப் பழக்க வழக்கத்தில வளந்ததுகள்.. அங்க வந்து இருக்க மாட்டுதுகள்..நீங்கள் தானே வீட்டை இவ்வளவு காலமும் பாத்தனீங்கள்..அப்படியே அங்கயே இருந்து உங்களுக்குப் பிறகு ..உங்கட மகளுக்கு எங்கட அன்பளிப்பாய் குடுத்து விடுங்கோ எண்டு சொன்னனீ...மறந்திட்டியா?

அமபல்த்தார் அழுது விடுவார் போல இருந்தார்!

உண்மை தான் அண்ணை… இப்ப நிலவரம் கொஞ்சம் மாறிப் போச்சு… அது தான்….!

சரி… சரி… பிறகு எடுக்கிறன்   என்று கூறிப் போனைத் துண்டித்து விட்டாள்  தங்கச்சி…!

இடிந்து போய் உட்கார்ந்து விட்டார்.. அம்பலத்தார்!

இதுக்குத் தான் அந்தக் கண்டறியாத காகம் காதுக்குள்ளை வந்து கத்தினதாக்கும் என்று நினைத்த படி…. முருகா என்றார்!

இவள் சொன்னதை நம்பிக் கையில இருந்த காசையும் போட்டு...சுத்து மதில் எல்லாம் கட்டி… தென்னம் பிள்ளையளையும் வச்சு வளர்த்து விட்டது பிழையாய்ப் போச்சுது.. என்று தன்னைத் தானே நொந்து கொண்டார்!

சரி… கோயிலுக்காவது போயிற்று வருவம் எண்டு நினைச்சப் படி...மகளை எழுப்பாமல்.. ஒரு காக்காக் குளியலுடன்..நாலு முழமொன்றைச் சுத்தியபடி,,சைக்கிளில் ஏறிக் கோவிலை நோக்கி உழக்கினார்!

விதானையாரும் கிட்டத் தட்ட என்ர நிலை தான்…! அவரிட்டை...ஏதும் வெளி நாட்டுக்காரர் திரும்பவும் வந்து வீட்டைத் திரும்பிக் கேட்கிறதைத் தடுக்க ...ஏதாவது வழியிருக்கா எண்டு கேட்க வேண்டும் என்று நினைத்தார்!

கொஞ்ச நேரத்திலேயே..தங்கச்சி அந்நியமாகிப் போனது அவருக்கே ஆச்சரியாக இருந்தது! அவையிட்ட என்ன காசா இல்லை...வேணுமெண்டால் ஒரு வீட்டை வாங்கிறது தானே.. என்றும் மறுத்தான் போடிற தனது மனதைச் சமாதானப் படுத்திக் கொண்டார்!

கோவில் வாசலிலேயே விதானையைக் கண்டதும்...முருகா...நீ கண் கண்ட தெய்வம் தானப்பா...என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டார்!

இவரைக் கண்டதும் விதானையாரும் இவரிடம் ஓடி வந்தார்!

அம்பலம்..ஒரு பிரச்சனை..என்றவர் ...ராத்திரி ஒரு போன் கோல் வந்தது! அது தான் கொஞ்சம் குழப்பமாய்க் கிடக்கு என்றவரின் முகம் பேயறைந்தவரின் முகம் போலக் காணப்பட்டது!

நானிருக்கிற வீட்டுக்காரன் என்னிட்டை வாடகை வாங்கிறதில்லை எண்டு தெரியும் தானே! நல்ல மனுசன்! போன வருசம் கிணத்தையும் வடிவாய்க் கட்டித் தண்ணித் தாங்கியையும்  கட்டச்சொல்லி இரண்டு லட்சம் ரூபா அனுப்பியிருந்தவன் ! நானும் என்ர பெடிச்சியைக் கலியாணம் கட்டி வெளியால அனுப்பினனான் எல்லோ .! போய்ச் சேர்ந்த உடனை ..அவரிட்டைச் சொல்லி அனுப்பி விடுகிறன் எண்டு சொன்னவள்.. போன போக்குத் தான்.! ஒண்டையும் காணேல்லை! நான் எப்படிப் போய் மருமகனிட்டைக் காசை அனுப்பச் சொல்லிக் கேக்கிறது..அனுப்பிற நேரம் அனுப்பட்டும் எண்டு விட்டிட்டன்!

சரி ...அதுக்கு இப்ப என்ன..விதானை?

பிரச்சனை என்னவெண்டால்.. பெடியன் காசை அனுப்ப.. கிணத்தையும் ..ராங்கையும் கொஞ்ச நாளால கட்டுவம் எண்டு.. வீட்டுக்காரன் அனுப்பின காசில கையை வச்சிட்டன்!

வீட்டுக்காரன் இப்ப.. கூகிளிலை வீட்டைப் பாத்திட்டு… என்ன விதானை கட்டின கிணத்தையும்,,, ராங்கையும் காணேல்லை.. ஒரு வேளை மரங்கள் மறைக்குதோ...எண்டு கேக்கிறான்!

படிச்ச பெடியன் எல்லோ...கொஞ்சம் கௌரவமாய்க் கேட்கிறான் போல கிடக்கு!

எனக்கெண்டால் பகிடியும் விளங்கேல்லை….வெற்றியும் விளங்கேல்லை  என்று கூறியபடி...நீ என்னவோ கேக்க வேணுமெண்ட மாதிரிக் கிடந்தது..என்ன பிரச்சனை என்று  கேட்டார் விதானையார்!

அது கிடக்கட்டும்… கூகிள் பிரச்சனை தான் எனக்கும் என்ற படி… முருகா என்று கோவில் மூலஸ்தானத்தை நோக்கித் திரும்பினார்..அம்பலத்தார்!

(யாவும் கற்பனை)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கூகிள்லில பார்த்துக் கதைவழிப் படுவினம் என்று காகத்துக்கு எப்படித் தெரிந்தது. நம்ம காகங்கள் இப்பவும் தமது வயர்லெஸ் பவரை தக்க வைச்சுக் கொண்டிருக்கு...! ம்... காகமா ,கொக்கா...!!

விதானைமார்தான் இன்னும் மாறவேயில்லை....!  tw_blush:

கதைக்கு நன்றி புங்கை...! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, புங்கையூரன் said:

உண்மை தானண்ணை! இண்டைக்கு இந்த வீட்டைக் கூகிள்ல பாத்த மனுசன் ..என்னப்பா.. எங்களுக்கும் வயது போகுது..பிள்ளையளும் வளந்திட்டுது தானே.. ஊரில இப்ப பிரச்சனைகள் இல்லாத படியால்.. ஓய்வெடுத்த பிறகு ஊரில போய் இருப்பமா எண்டு கேட்டிது !

கொஞ்ச நாளில்லை அண்ணை… இஞ்ச குளிருக்கை வயசு போகப் போக நிண்டு பிடிக்கேலாது போல கிடக்கண்ணை! அது தான் அங்க வந்து நிரந்தரமாய் இருக்கலாம் எண்டு யோசிக்கிறம்!

உது இப்ப லண்டனில..  ஊரைவிட்டு போரைச் சாட்டி ஓடியாந்து.. அசைலம் அடிச்சு சிற்றிசன் சிப்பும் வைச்சிருக்கிறவை.. அவையை கலியாணம் முடிச்சு வந்தவையிட...  நவீன உளறல்களில்.. முதன்மையானது.

தமிழன் சமூகம் திருந்தாது.... ஆனால் எந்த சூழலிலும்.. தக்கன.. பிழைச்சுக்கும்.tw_blush:

கதை அல்ல.. காதுக்கெட்டியவரை இது நிஜம். பகிர்விற்கு நன்றி... புங்கை அண்ணா. உங்கட ஆக்கம் என்றால் வாழ்த்துக்கள். tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாட்டுக்காரர் கன பேர் இப்பிடி ஊரோட வரப்போறம் என்று  சொல்லி, வீட்டை, அங்க இருந்து பார்த்து, காபந்து பண்ணிண சொந்தக்கார இன சனங்களை கிளப்பி, காதும், காதும் வைச்சமாதிரி, வித்துப் போட்டு, விசா அலுவலா கொழும்பு போட்டோடி வாறம் என்று காசோட பறந்திடுகினம்.

தேசவழமை சட்டப்படி, முதலில் வாங்கக் கூடிய நிலையில் உள்ள உறவினருக்கு தான், முதலில் வாங்கும் உரிமை உள்ளது என்பதனையும், அவர்கள் தம்மால் வாங்க வசதி இல்லை என்று தெரிவித்தால் மட்டுமே, வெளியாருக்கு விக்க முடியும் என்பதையும் அறிந்திருக்க வேண்டும்.

இல்லாவிடில் விற்பனை, ரத்தாகும். வாங்கியவர், காசு கேட்டு, போனைப் போடுவார். அலுப்பு.

வழக்கு வம்பு என்று உறவினர்கள் போகாவிடில் அல்லது அவர்களுக்கு கொஞ்சம் காசைக் காட்டினால், ஓகே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாராட்டுகள் புங்கையூரான். நல்லநகைச்சுவையாக ஆனால் உண்மையை எழுதியுள்ளீர்கள். 

கடந்தவாரம் எனது மனைவிக்கு விடயத்தைக் காட்டினேன். அப்போது அவ சொன்ன விடயம் இனிநம்பிப் பணமனுப்பலாம் ஏனென்றால் பேக்காட்டேலாது என்று....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புங்கையர்! கதை அந்த மாதிரி......tw_thumbsup:

அது சரி வெளிநாட்டு சிற்றிசன் எடுத்த தங்கச்சி ஊருக்கு போய் சொத்து சொந்தம் கொண்டாடலாமோ? சட்டங்கள் இடம் குடுக்குமோ? :rolleyes:

ஏனெண்டால் கூகுள் கார் போகேலாத இடத்திலையெல்லாம் எனக்கு எக்கச்சக்கமான காணிபூமி இருக்கு.அதுதான் கேட்டனான் :cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

புங்கையர்! கதை அந்த மாதிரி......tw_thumbsup:

அது சரி வெளிநாட்டு சிற்றிசன் எடுத்த தங்கச்சி ஊருக்கு போய் சொத்து சொந்தம் கொண்டாடலாமோ? சட்டங்கள் இடம் குடுக்குமோ? :rolleyes:

ஏனெண்டால் கூகுள் கார் போகேலாத இடத்திலையெல்லாம் எனக்கு எக்கச்சக்கமான காணிபூமி இருக்கு.அதுதான் கேட்டனான் :cool:

நம்பலாமா தாத்தா நெறைய பூமிக்கு உறுதி போட்ட ஆட்கள் பழைய ஆட்கள் ??

கதை ம் நிஜத்தை கொண்டு வந்து சென்று விட்டது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, புங்கையூரன் said:

-----

பிரச்சனை என்னவெண்டால்.. பெடியன் காசை அனுப்ப.. கிணத்தையும் ..ராங்கையும் கொஞ்ச நாளால கட்டுவம் எண்டு.. வீட்டுக்காரன் அனுப்பின காசில கையை வச்சிட்டன்!

வீட்டுக்காரன் இப்ப.. கூகிளிலை வீட்டைப் பாத்திட்டு… என்ன விதானை கட்டின கிணத்தையும்,,, ராங்கையும் காணேல்லை.. ஒரு வேளை மரங்கள் மறைக்குதோ...எண்டு கேக்கிறான்!

படிச்ச பெடியன் எல்லோ...கொஞ்சம் கௌரவமாய்க் கேட்கிறான் போல கிடக்கு!

------

நகைச்சுவை கலந்த, உண்மைக் கதை என்றாலும், போரின் போது... அந்தச் சொத்துக்களை பாதுகாத்தவர்களின் நிலைமை சோகமானது. அழகாக கதையை நகர்த்திச் சென்ற விதம் அருமை  புங்கை.

15 hours ago, suvy said:

கூகிள்லில பார்த்துக் கதைவழிப் படுவினம் என்று காகத்துக்கு எப்படித் தெரிந்தது. நம்ம காகங்கள் இப்பவும் தமது வயர்லெஸ் பவரை தக்க வைச்சுக் கொண்டிருக்கு...! ம்... காகமா ,கொக்கா...!!

விதானைமார்தான் இன்னும் மாறவேயில்லை....!  tw_blush:

கதைக்கு நன்றி புங்கை...! 

காகம் கத்துவதை வைத்தே.... முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும் ஆக்கள் எல்லோ நாங்கள். Bild in Originalgröße anzeigentw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

புங்கையர்! கதை அந்த மாதிரி......tw_thumbsup:

அது சரி வெளிநாட்டு சிற்றிசன் எடுத்த தங்கச்சி ஊருக்கு போய் சொத்து சொந்தம் கொண்டாடலாமோ? சட்டங்கள் இடம் குடுக்குமோ? :rolleyes:

ஏனெண்டால் கூகுள் கார் போகேலாத இடத்திலையெல்லாம் எனக்கு எக்கச்சக்கமான காணிபூமி இருக்கு.அதுதான் கேட்டனான் :cool:

குசா வெளிநாட்டு சிற்றிசன் எடுக்க முதல் நீங்கள் வாங்கியிருந்தால் / உங்களது பெயருக்கு உறுதி எழுதப்பட்டிருந்தால் பிரச்சனை இல்லை. ( உபயம் - சும்) 

 

Link to comment
Share on other sites

புங்கை அண்ணா,

 

தொழிநுட்பத்தை, எங்கள் சமுதாயம் பயன்படுத்தும் முறையை மிக அழகாக சொல்லியுள்ளீர்கள் அண்ணா. இந்த கதைக்குள் இரண்டு கதை இருக்கிறது. ஒன்று அம்பலவாணர் ஐயாவுடையது, மற்றையது விதானையாருடையது. இரண்டுக்கும் காரணம் ஒன்று தான்.  

இது இன்று அங்கு உருவாகி வரும் சமூக பிரச்சனையின் இரு வேறு முகங்கள். ஒன்றில்  ஏமாற்றப்பட்டவர் தாயகத்திலும் , மற்றதில் புலம்பெயர் தேசத்திலும் இருக்கிறார்கள். அங்கு தான் உங்கள் கதையின் நடுநிலைமை நிற்கிறது. ஆனால் "ஹேராம்" படம் போல 90 வீதமான கதை எதை சொல்லுதோ நாங்கள் அதை மட்டுமே உள்வாங்கி கொள்கிறோம். இதில் புலம்பெயர் தேசத்தில் இருப்பவர் மீது தான் எங்களுக்கு கோபம் வருகிறது, அது தான் இங்கு யதார்த்தமாகிறது.

மேலும் மேலும் நீங்கள் எழுத வேண்டும். உங்களுக்கு என்று ஒரு கதை சொல்லும் பாணியை வைத்திருக்கிறீங்கள். அதில் உங்கள் அனுபவம் 100 வீதம் இருக்கிறது . நாங்கள் பார்த்த இடத்தை கூட நீங்கள் வர்ணிக்கும் விதத்தில் தெரிகிறது நீங்கள் தாயகத்தை எவ்வளல்வு ஆத்மார்த்தமாக நேசிக்கிறீங்கள் என்பது. தாயகம் என்பது வெறும் மண் மட்டுமல்ல. அங்கு வாழும் குயில் கிளியில் இருந்து, தென்னை மரங்கள், கிளுவைகள், கிணத்தடி, "தாயக நிலவு" (நிலவு வெளிநாட்டில் இருந்தாலும்- எங்களூர் நிலவு ஒரு அழகு தான்) எல்லாமே சேர்ந்து தான் தாயகம். இது உங்கள் கதைகளில் "தெறி"க்கின்றன.   

உங்கள் எழுத்துகள் ஒரு நாள் எங்களை எல்லாம் "தாயகத்துக்கு புலம்பெயர" வைக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

குறிப்பு : இன்னும் கூகுள் வீதி பார்வை live ஆக விடவில்லை என்பது ஒரு ஆறுதல். ஆக குறைந்தது ஒரு வருடம் பின்னோக்கிய(பழைய) படங்களையே அது வெளியிட்டுள்ளது. 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
49 minutes ago, பகலவன் said:

குறிப்பு : இன்னும் கூகுள் வீதி பார்வை live ஆக விடவில்லை என்பது ஒரு ஆறுதல். ஆக குறைந்தது ஒரு வருடம் பின்னோக்கிய(பழைய) படங்களையே அது வெளியிட்டுள்ளது. 

 

ஓம்........லைவ்விலை ஒண்டுமில்லை நல்ல காலம்.  அந்த வசதியுமிருந்திருந்தால் கிணறு,ராங்கியை கூகுள்ளை தேடின சனம்.........கிணத்தடியிலை இப்ப ஆர் குளிச்சுக்கொண்டு நிக்கினம் எண்டதையும் தேட வெளிக்கிடுவினம்.:cool:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புங்கையர், 

பத்தாம் வட்டாரம் எல்லாம், கூகிள் கமரா சுழலுதா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Nathamuni said:

புங்கையர், 

பத்தாம் வட்டாரம் எல்லாம், கூகிள் கமரா சுழலுதா?

யோவ்.... நாதமுனி,  வாயை.... வைச்சிட்டு சும்மாரும்யா....
வட்டாரக் கதை கிழப்பி, சிங்களவனை விட... தமிழனை பிரிக்கும் வேலை செய்யாதீர்.
நல்லவற்றை... நல்லவர்கள், அமைதியாக செய்து கொண்டு உள்ளார்கள்.  
(புங்குடு தீவு மக்கள்..... ஏன்? வட்டாரத்தில் பிரிந்து நிற்கிறார்கள், அது... புலம் பெயர் நாட்டிலும் தொடர்வது ஏன்? எனற ஆதங்கத்தில் எழுந்த கேள்வி.)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, தமிழ் சிறி said:

யோவ்.... நாதமுனி,  வாயை.... வைச்சிட்டு சும்மாரும்யா....
வட்டாரக் கதை கிழப்பி, சிங்களவனை விட... தமிழனை பிரிக்கும் வேலை செய்யாதீர்.
நல்லவற்றை... நல்லவர்கள், அமைதியாக செய்து கொண்டு உள்ளார்கள்.  
(புங்குடு தீவு மக்கள்..... ஏன்? வட்டாரத்தில் பிரிந்து நிற்கிறார்கள், அது... புலம் பெயர் நாட்டிலும் தொடர்வது ஏன்? எனற ஆதங்கத்தில் எழுந்த கேள்வி.)

ஒய் சிறியர்,

உது, நானும் புங்கையரும் வேற ஒரு திரியில தொடங்கி, இங்கின இழுக்கிற பகிடி...

ஐயோ, ஐயோ... பதற வேண்டாம் ஐயா. :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, Nathamuni said:

ஒய் சிறியர்,

உது, நானும் புங்கையரும் வேற ஒரு திரியில தொடங்கி, இங்கின இழுக்கிற பகிடி...

ஐயோ, ஐயோ... பதற வேண்டாம் ஐயா. :grin:

மிகவும் வருத்தமாக இருக்குது, நாதமுனி. 
எல்லோரும், பயங்கர.... திறமை சாலிகள். 14.gif
விசுகருடன், அண்மையில் சந்தித்த போதும்.... 
எல்லோரிடனும் அந்த, ஏக்கம் இருந்தது. Smileys

இவங்கள்... கதிர்காமக் கந்தனுக்கு,  கோவணம்  கட்டி விட்டதை... 
அந்த, முருகன்... இன்னும் மறக்கவில்லைப் போல் உள்ளது. lol26.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, குமாரசாமி said:

ஓம்........லைவ்விலை ஒண்டுமில்லை நல்ல காலம்.  அந்த வசதியுமிருந்திருந்தால் கிணறு,ராங்கியை கூகுள்ளை தேடின சனம்.........கிணத்தடியிலை இப்ப ஆர் குளிச்சுக்கொண்டு நிக்கினம் எண்டதையும் தேட வெளிக்கிடுவினம்.:cool:

'மாமியார் தலையில கையும், கூகிள் காமராவில கண்ணும்' எண்டு பிறகு பழமொழியும் மாறும்......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கை புங்கையரின் கதையை விட மக்காள் எல்லாருக்குரும் கூகிள் வீதி பார்வை படம் தான் பிரச்சனை போல் தொியுது. :)அது நல்லாத்தானே இருக்குது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, சுவைப்பிரியன் said:

இங்கை புங்கையரின் கதையை விட மக்காள் எல்லாருக்குரும் கூகிள் வீதி பார்வை படம் தான் பிரச்சனை போல் தொியுது. :)அது நல்லாத்தானே இருக்குது.

சத்தியமாய்.... இன்னும், யாழ் கூகிள் படத்தை இன்னும் பார்க்க... மனதில் தெம்பு வரவில்லை. 
பழைய நினைவுகளுடன்.... வாழ்க்கையை நகர்த்துவது, நல்லது என்றே கருதுகின்றேன். 11.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புங்கையர் என்னோட பிரச்சனையை உங்களுக்கு சொல்லாமலேயே எப்படி உங்களால் முடிந்தது என்று எண்ணி தடுமாறிக் கொண்டிருக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, MEERA said:

குசா வெளிநாட்டு சிற்றிசன் எடுக்க முதல் நீங்கள் வாங்கியிருந்தால் / உங்களது பெயருக்கு உறுதி எழுதப்பட்டிருந்தால் பிரச்சனை இல்லை. ( உபயம் - சும்) 

 

பிரச்சனை என்னவெண்டால்.....இப்ப ஊரிலை இருக்கிற ஒருத்தர் வெளிநாட்டுக்காரனுக்கு தன்ரை சொத்தை  அதாவது காணி பூமியை எழுதிக்குடுக்கலாமோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தெரியவில்லை, விசாரித்து சொல்கிறேன்.

7 minutes ago, குமாரசாமி said:

பிரச்சனை என்னவெண்டால்.....இப்ப ஊரிலை இருக்கிற ஒருத்தர் வெளிநாட்டுக்காரனுக்கு தன்ரை சொத்தை  அதாவது காணி பூமியை எழுதிக்குடுக்கலாமோ?

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணா,நீங்கள் ஊரில போய் இருக்கப் போறீங்களா?...இல்லையென்டால் அங்கே இல்லாத ஆட்களுக்கு எழுதிக் கொடுக்கலாம் தானே!.இந்த தங்கச்சியையும் மனசில வையுங்கோ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, குமாரசாமி said:

பிரச்சனை என்னவெண்டால்.....இப்ப ஊரிலை இருக்கிற ஒருத்தர் வெளிநாட்டுக்காரனுக்கு தன்ரை சொத்தை  அதாவது காணி பூமியை எழுதிக்குடுக்கலாமோ?

 

10 hours ago, ரதி said:

அண்ணா,நீங்கள் ஊரில போய் இருக்கப் போறீங்களா?...இல்லையென்டால் அங்கே இல்லாத ஆட்களுக்கு எழுதிக் கொடுக்கலாம் தானே!.இந்த தங்கச்சியையும் மனசில வையுங்கோ

பாதை இல்லாத காணிகள் இருந்தால் எழுதிக் குடுங்கோ, தங்கச்சி ஹெலில போய் இறங்கட்டும்.  வழக்குச் சிலவும் தலை இடியும் குறையும்....!  tw_blush:

எங்களிடம் அப்படி ஒரு  காணி இருந்து அறாவிலைக்கு முன் வீட்டுக் காறனுக்கே குடுக்க வேண்டியதாப் போட்டுது....!

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

புங்கையூரன் இந்த கோவில்காரனையும் ஒருக்கா பாருங்கோ.....உங்களது கதையை முதலே படித்துவிட்டேன் இன்றுதான் இந்த செல்பியை கண்டுபிடித்தேன்....

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதை நடைமுறை யதார்த்தத்தைச் சொல்கின்றது. 

பகலவன் சொன்னமாதிரி கூகிள் ஒரு வருடத்திற்கு முந்தைய பாதைப் படத்தைத்தான் காட்டுகின்றது. ஊரில் முன்னர் போய் வந்த ஒழுங்கைகளையெல்லாம் கூகிள் உதவியோடு நானும் போய்வந்தேன். இனி ஊருக்குப் போய்த்தான் பார்க்க என்ன இருக்கின்றது!

இதுதான் ஒழுங்கையெல்லாம் போயிருக்கின்றது!

Google%25252520Amazonia%252525201%252525

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: DIGITAL DESK 3 26 APR, 2024 | 10:28 AM   குரங்குகளின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த வளையம் வடிவிலான புதிய கருப்பை கருவியை பேராதனை பல்கலைக்கழகத்தில் உள்ள கால்நடை மருத்துவ பீடம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கருவி பெண் குரங்களின் கருப்பையில் கருவுறுவதை தடுக்கும் என தெரிவித்துள்ளது. கருவியை ஒருமுறை குட்டி ஈன்ற ஒன்றரை வயது பெண் குரங்கிற்கு சோதனைக்காக பயன்படுத்தப்பட்டது. சோதனையின் பின்னர் மேற்கொள்ளப்பட்ட கதிரியக்க பரிசோதனையில், கருப்பையில் பொருத்தப்பட்ட கருவி வெற்றிகரமாக செயல்பட்டுள்ளதை அவதானித்ததாக பேராதனை பல்கலைக்கழகத்தின் கால்நடை மருத்துவ பீடத்தைச் சேர்ந்த சிரேஷ்ட பேராசிரியர் அசோக தங்கொல்ல தெரிவித்தார். பெண்களுக்கு கர்ப்பம் தரிப்பதை தடுக்கும் நடைமுறையிலுள்ள சாதாரண அளவிலான கருவியை பயன்படுத்திய போது அது தோல்லி அடைந்தது. அதனால் சிறிய அளவிலான வளையத்தை உருவாக்க முடிவு செய்தோம் என தெரிவித்துள்ளார்.  பேராதனை போதனா வைத்தியசாலையின் மகப்பேறு மற்றும் நரம்பியல் திணைக்களத்தின் வைத்தியர்களும் பேராதனையிலுள்ள பல் வைத்திய பீடத்தினரும் இந்த முயற்சிக்கு தமது ஒத்துழைப்பை வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். “இந்த கருவியை பொறுத்த விலங்கை அமைதிப்படுத்த அரை மணி நேரம் எடுக்கும், அதைத் தொடர்ந்து அறுவை சிகிச்சைக்கு மற்றொரு அரை மணி நேரம் எடுக்கும். இந்த முறை நாட்டில் குரங்குகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளைக் கொண்டுள்ளது." என தெரிவித்துள்ளார். இந்த வளையம் வடிவிலான புதிய கருப்பை கருவியை உற்பத்தி செய்ய 2000 ரூபாய் செலவாகும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181987
    • 25 APR, 2024 | 07:33 PM   (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) சிரேஷ்ட பிரஜைகளுக்கான வட்டியை 15 வீதமாக வழங்க வேண்டுமானால் அரசாங்கம் மேலும்  40 பில்லியன் ரூபாவை அதற்காகச் செலுத்த நேரிடும். அரசாங்கத்தின் தற்போதைய நிதி நிலைமையைக் கவனத்தில் கொண்டு அது தொடர்பில் உரியக் கவனம் செலுத்தப்படும்  என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய  தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (25) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் தமது கேள்வியின் போது வங்கி வட்டி வீதங்கள் குறைக்கப்பட்டுள்ள நிலையில் சிரேஷ்ட பிரஜைகளுக்கான வங்கி வைப்புக்கான வட்டி வீதமும் குறைக்கப்பட்டுள்ளது. அதனை நம்பி வாழும் அவர்களின் வட்டி வீதத்தை அதிகரித்து வழங்க அரசாங்கம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். அது தொடர்பில்  இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், இக் காலங்களில் வங்கி வட்டி வீதம் தொடர்பில் பிரச்சினைகள் எழுந்துள்ளன. கடனுக்கான வட்டி அதிகரிக்கப்பட்டு வங்கி வைப்புக்கான வட்டியை 16 வீதத்திலிருந்து தற்போது தனி இலக்கத்திற்குக் கொண்டு வந்துள்ளோம். வைப்புக்களுக்கான வட்டியைக் குறைப்பது இயல்பாக இடம்பெறுகின்ற ஒன்று. அது தொடர்பில் சிரேஷ்ட பிரஜைகளும் சில பாதிப்புகளை எதிர்கொள்ள நேர்ந்துள்ளது. அதேவேளை, சிரேஷ்ட பிரஜைகள் முகம் கொடுக்கும் மற்றுமொரு பிரச்சினை ஒரு லட்சம் ரூபாவுக்கு குறைவாகப் பணத்தை வைப்புச் செய்வது. அவ்வாறான பிரச்சினைகளுக்கு நாம் நடவடிக்கை ஒன்றை எடுத்தோம். எனினும் அது சாத்தியப்படவில்லை. சிரேஷ்ட பிரஜைகளின் வங்கி வைப்புகளுக்கு வட்டி அதிகரிக்க வேண்டியது அவசியம். எனினும் அதற்கான நிதியை அரசாங்கமே ஒதுக்க வேண்டியுள்ளது. இவ்வாறான விடயங்களுக்காக ஏற்கனவே வங்கிக்கு அரசாங்கம் வழங்க வேண்டிய நிலுவை இன்னும் தொடர்கிறது.  நீண்ட காலமாக இவ்வாறு சிரேஷ்ட பிரஜைகளுக்கு அதிக வட்டியை வழங்குவதற்கு அரசாங்கமே வங்கிகளுக்கு நிதி வழங்கி வந்துள்ளது.  நூற்றுக்கு 15 வீதமாக அதனை வழங்க வேண்டுமானால் சுமார் 40 பில்லியன் ரூபாவை அரசாங்கம் அதற்காக ஒதுக்க வேண்டியுள்ளது. முன்னரை விட அதிகமான நிதியை இப்போது ஒதுக்க நேர்ந்துள்ளது. அந்த வகையில்  நாட்டின் தற்போதைய நிலையையும் கவனத்திற் கொண்டு எவ்வாறு இந்த நிலைமையைச் சரி செய்வது என்பது தொடர்பில் அரசாங்கம் அதிக கவனம் செலுத்தி வருகிறது என்றார். https://www.virakesari.lk/article/181967
    • அரைச்சதம் அடித்து வென்றபோதும் விமர்சிக்கப்படும் கோலி; ஆர்சிபி கேப்டன் கூறியது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES 26 ஏப்ரல் 2024, 03:06 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் கடந்த 6 போட்டிகள் முடிந்தபோதெல்லாம் ஆர்சிபி வீரர்கள் முகத்தில் சோகம், விரக்தி, நம்பிக்கையின்மை, டக்அவுட்டுக்கும் கவலையோடு சென்றனர், ஆர்சிபி ரசிகர்களும் சோகத்தோடு வீட்டுக்குப் புறப்பட்டனர். ஆனால், நிலைமை நேற்று தலைகீழாக மாறியது. ஆர்சிபி வீரர்கள், ரசிகர்கள் முகம் நிறைய மகிழ்ச்சி, புன்னகை மிதந்தது, வீரர்கள் ஒவ்வொருவரும் கட்டிஅணைத்து மிகழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர். காரணம், ஒரு மாதத்துக்குப்பின் கிடைத்த வெற்றி. ஒவ்வொரு ஆட்டத்தின் முடிவிலும் ஆர்சிபி அணியின் கேப்டன் டூப்பிளசிஸ் போட்டி முடிந்தபின் பேட்டியளிப்பது வழக்கம். ஆனால், ஒரு மாதத்துக்குப்பின் கிடைத்த வெற்றியால், கொண்டாட்டமனநிலையில் கேப்டன் டூப்பிளசிஸ் பேட்டியளிக்கவே மறந்துவிட்டார். சக வீரர்களுடன் வெற்றிக் கொண்டாட்டத்தை முடித்தபின்புதான் டூப்பிளசிஸ் சேனல்களைச் சந்தித்தார். ஹைதராபாத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 41-ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 35 ரன்களில் வீழ்த்தி ஒரு மாதத்துக்குப்பின் ஆர்சிபி அணி வெற்றியை ருசித்தது. முதலில் பேட் செய்த ஆர்சிபி அணி 7 விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் சேர்த்தது. 207 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் சேர்த்து 35 ரன்களில் தோல்வி அடைந்தது.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஆர்சிபிக்கு ப்ளே ஆஃப் வாய்ப்பு இன்னும் இருக்கிறதா? ஆர்சிபி அணி தொடர்ந்து 6 தோல்விகளைச் சந்தித்த நிலையில் இந்த வெற்றி அந்த அணிக்கு பெரிய ஊக்கமாகவும், நம்பிக்கையையும் அளித்துள்ளது. இந்த வெற்றியால் புள்ளிப்பட்டியலில் பெரிதாக மாற்றத்தை ஆர்சிபி ஏற்படுத்தவில்லை என்றபோதிலும், வீரர்களின் அணுகுமுறை, நம்பிக்கை, உற்சாகம் ஆகியவை அதிகரிக்கும். ஆர்சிபி அணி 9 போட்டிகளில் 2 வெற்றி, 7 தோல்விகள் என 4 புள்ளிகளுடன் 10-வது இடத்திலேயே நீடிக்கிறது. நிகர ரன்ரேட்டில் மைனஸ் 0.721 என்ற ரீதியில் இருக்கிறது. இந்த வெற்றியால் ஆர்சிபி அணி ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்கவைத்துள்ளது. அடுத்துவரும் 5 போட்டிகளிலும் ஆர்சிபி அணி தொடர் வெற்றிகள் பெறும்பட்சத்தில் , பிற அணிகளின் தோல்விகளும் சாதகமாக இருந்தால் ஆர்சிபி அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்ல முடியும். அதேசமயம், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இதுவரை 8 போட்டிகளில் 5 வெற்றி, 3 தோல்விகள் என 10 புள்ளிகளுடன் 3 - ஆவது இடத்திலேயே நீடிக்கிறது, நிகர ரன்ரேட்டில் 0.577 என்ற நிலையில் இருக்கிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES ஆர்சிபியின் வெற்றிக்குக் காரணம் என்ன? ஆர்சிபி அணிக்கு நேற்று கிடைத்த வெற்றி ஒரு தனிநபர் உழைப்பால் கிடைத்ததாகக் கூறமுடியாது. தொடக்கத்தில் ஆர்சிபி அணிக்கு கிடைத்த வாய்ப்பை நழுவவிடாமல் கடைசிவரை சன்ரைசர்ஸ் அணிக்கு கொடுத்த நெருக்கடியால் வெற்றி வசமானது. இதில் ஏதேனும் ஒரு கட்டத்தில் கேப்டன்ஷிப்பில் சுணக்கம் ஏற்பட்டிருந்தாலோ அல்லது, வீரர்களிடையே உற்சாகக் குறைவு ஏற்பட்டிருந்தாலோ ஆட்டம் கைமாறி இருக்கும். ஆர்சிபி அணி தங்களுக்கு கிடைத்த தருணத்தை தவறவிடாமல் கடைசிவரை எடுத்துச் சென்றதே வெற்றிக்கு முக்கியக் காரணம், பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங்கில் ஒவ்வொரு வீரர்களும் தங்களின் அதிகபட்ச பங்களிப்பை அளித்தனர். அதில் குறிப்பாக மெதுவான விக்கெட்டைக் கொண்ட மைதானத்தில் 19 பந்துகளில் அரைசதம் அடித்து ஆட்டமிழந்த ரஜத் பட்டிதார் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரின் கணக்கில் 2 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் அடங்கும். அதிலும் மயங்க் மார்க்கண்டே வீசிய 11வது ஓவரில் தொடர்ந்து 4 சிக்ஸர்களை பட்டிதார் பறக்கவிட்டு அரைசத்ததை நிறைவு செய்தார். பட்டிதாரின் ஸ்ட்ரைக் ரேட் 250 ஆக இருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES பொறுமையாக ஆடிய கோலி விராட் கோலியும் அரைசதம் அடித்தார். ஆனாலும் அவர் மீது சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்தன. கோலி ஆட்டமிழந்தபோது 43 பந்துகளில் 51 ரன்கள் சேர்த்திருந்தார். இதில் ஒரு சிக்ஸர், 4 பவுண்டரி, ஸ்ட்ரைக் ரேட் 118.60 ஆக இருந்தது. விராட் கோலி தனது இருப்பை ஆட்டம்முழுவதும் வைத்திருக்கும் நோக்கில் டி20 போட்டி என்பதையே மறந்துவிட்டு பேட் செய்கிறாரா என்று ரசிகர்கள் விமர்சித்தனர். விராட் கோலி பவுண்டரி, சிக்ஸர் அடிக்க வேண்டிய பந்துகளில் கூட ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்கிறேன் எனக் கூறிக்கொண்டு ஒரு ரன், 2 ரன்கள் எடுத்தார் என ரசிகர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. அது மட்டுமல்லாமல் விராட் கோலி வீணாக்கிய பந்துகளால் ஆர்சிபி அணியின் ஸ்கோர் 20 முதல் 30 ரன்கள் குறைந்துவிட்டது என்றும் விமர்சிக்கப்படுகிறது. இந்த ஆட்டத்தில் ஆர்சிபி அணியில் அரைசதம் அடித்திருந்தபோதிலும் ஸ்ட்ரைக் ரேட் குறைவாக வைத்திருந்த ஒரே பேட்டர் கோலி மட்டும்தான். கேப்டன் டூப்பிளசிஸ் தொடக்கத்தில் சிறிய கேமியோ ஆடி 12 பந்துகளில் 25 ரன்கள் சேர்த்து 250 ஸ்ட்ரைக் ரேட்டில் பேட் செய்து ஆட்டமிழந்தார். கேமரூன் க்ரீன் 20 பந்துகளில் 37 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இவரின் ஸ்ட்ரைக் ரேட் 185 ஆக இருந்தது. கடைசி வரிசையில் களமிறங்கிய மகிபால் லாம்ரோர், தினேஷ் கார்த்திக், ஸ்வப்னில் சிங் ஆகிய 3 பேரின் ஸ்ட்ரைக் ரேட்டும் 175க்கு அதிகமாகவே இருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES பந்துவீச்சில் பொறுப்புணர்வு ஆர்சிபி அணி பந்துவீச்சாளர்கள் நேற்றைய ஆட்டத்தில் கட்டுக்கோப்பாகப் பந்துவீசினர். முகமது சிராஜ் வழக்கமாக ரன்களை வாரி வழங்கும் நிலையில் 4 ஓவர்கள் வீசி 20 ரன்கள்தான் கொடுத்தார். யாஷ் தயால் 3 ஓவர்கள் வீசி 18 ரன்கள் ஒருவிக்கெட், கரன் ஷர்மா 4 ஓவர்கள் வீசி 29 ரன்கள் கொடுத்து 2 விக்கெட், கேமரூன் க்ரீன் 2 ஓவர்கள் வீசி 12 ரன்களுடன் 2 விக்கெட் என 6 ரன்ரேட்டுக்குள் கட்டுக்கோப்பாக பந்துவீசினர். ஸ்வப்னில் சிங், பெர்குஷன், ஜேக்ஸ் மட்டுமே இரட்டை இலக்க ரன்ரேட் வைத்திருந்தனர். மற்ற பந்துவீச்சாளர்கள் கட்டுக்கோப்புடன் பந்துவீசியது வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தது. வெற்றி கிடைக்காவிட்டால் என்ன நடந்திருக்கும்? ஆர்சிபி அணியின் கேப்டன் டூப்பிளசிஸ் கூறுகையில் “ ஒவ்வொரு போட்டி முடிந்தபின்பும் பேட்டியளிப்பேன் ஆனால் இன்று மறந்துவிட்டேன். காரணம் 6 போட்டிகள் தோல்விக்குப்பின் கிடைத்த வெற்றிதான். கடந்த போட்டிகளில் எல்லாம் நாங்கள் வெற்றிக்கு அருகே வந்துதான் அதை அடையமுடியாமல் தோற்றோம். கொல்கத்தா அணியுடன் ஒரு ரன்னில் வெற்றியை இழந்தோம். எங்களால் வெற்றி பெற முடியும் கடைசி நேரத்தில் ஏதோ தவறு நடக்கிறது என்பதை புரிந்துகொண்டோம். இதுபோன்ற நெருக்கடியான நேரத்தில் கிடைக்கும் வெற்றிதான் வீரர்களுக்கு நம்பிக்கையளிக்கும். இந்த வெற்றி எங்களுக்கு மகத்தானது.” “இந்தவெற்றி கிடைக்காவிட்டால் வீரர்கள் மனதளவில் பாதிக்கப்பட்டிருப்பார்கள், நம்பிக்கையை ஒட்டுமொத்தமாக குலைத்திருக்கும். நம்பிக்கையை பற்றி ஓய்வறைக்குள் பேசவே முடியாது, போலியான நம்பிக்கையை வீரர்களிடம் செலுத்த முடியாது. களத்தில் நமது செயல்பாடுதான் நம்பிக்கையை ஏற்படுத்தும். போட்டித்தொடரின் முதல்பாதியில் நம்முடைய முழுதிறமைக்கும் விளையாடவில்லை என்று நினைத்தோம். 50சதவீதம் முதல் 60 சதவீதத்தை வெளிப்படுத்தனால், உங்களால் நம்பிக்கையைப் பெற முடியாது. கடந்த வாரம் முழுவதும் நாங்கள் அனைவரும் கடினமாக பயிற்சி செய்தோம், உழைத்தோம், சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த திட்டமிட்டோம்.” “ரஜத் பட்டிதார் தொடர்ந்து இரு அரைசதங்களை விளாசியுள்ளார். கிரீன் தேவையான கேமியோ ஆடினார். சின்னசாமி அரங்கு எங்களுக்கு மிகப்பெரிய மனவேதனையை அளித்தது. அதுபோன்ற சிறிய மைதானத்தில் பந்துவீசுவது பந்துவீச்சாளர்களுக்கு கடினமான பணி. கரன் சர்மா அவரின் திறமையை வெளிப்படுத்த ஒரு தளம் தேவைப்பட்டது, அதற்கு இந்தப் போட்டி உதவியது. எங்களிடம் தற்போது லெக் ஸ்பின்னரும் இருக்கிறார்” எனத் தெரிவித்தார் பட மூலாதாரம்,GETTY IMAGES சன்ரைசர்ஸ் பலவீனத்தை அம்பலமாக்கிய ஆர்சிபி சன்ரைசர்ஸ் அணி இந்த சீசனில் இதற்கு முன் பெற்ற வெற்றிகள் அனைத்தும் முதலில் பேட் செய்து மிகப்பெரிய ஸ்கோரை எட்டி, எதிரணியை திக்குமுக்காடச் செய்து பெற்றவையாகும். சேஸிங் செய்து சன்ரைசர்ஸ் அணி வெற்றி பெற்றது குறைவுதான். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் 207 ரன்கள் இலக்கு வைத்து சன்ரைசர்ஸ் அணியை சேஸிங் செய்ய அழைத்தபோது அந்த அணியின் பலவீனத்தை ஆர்சிபி அணி வெளிப்படுத்திவிட்டது. அதாவது மிகப்பெரிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டால், சன்ரைசர்ஸ் பேட்டர்களும் பதற்றத்தில் சொதப்புகிறார்கள் என்பதை வெளிப்படுத்திவிட்டது. ஹைதராபாத் ஆடுகளம் சன்ரைசர்ஸ் அணிக்கு சொந்த மைதானம். பேட்டிங்கிற்கு சொர்க்கபுரியான இந்த மைதானத்தில்தான் சன்ரைசர்ஸ் அணி மிகப்பெரிய ஸ்கோரையும் எட்டியுள்ளது. அப்படி இருந்தும் நேற்றைய ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் அணி தோற்றதற்கு சேஸிங்கை கையில் எடுத்ததுதான் என்று ஆர்சிபி வெளிப்படுத்தியுள்ளது. அடுத்துவரும் ஆட்டங்களில் சன்ரைசர்ஸ் அணி ஒருவேளை டாஸில் தோற்றால், எதிரணிகள் பேட்டிங் செய்து, சன்ரைசர்ஸ் அணியை சேஸிங் செய்யவைத்து நெருக்கடி கொடுக்கும் வியூகத்தை கையில் எடுக்கலாம். பட மூலாதாரம்,GETTY IMAGES சன்ரைசர்ஸ் பேட்டர்களை எவ்வாறு சுருட்டுவது என கேப்டன் டூப்பிளசிஸ் பல உத்திகளைப் பயன்படுத்தினார். முதல் ஓவரிலேயே ஜேக்ஸை பந்துவீசச் செய்து டிராவிஸ் ஹெட் விக்கெட் வீழ்த்தப்பட்டது, அடுத்து ஸ்வப்னில் சிங் மூலம் ஒரே ஓவரில் கிளாசன், மார்க்ரம் என இரு ஆபத்தான பேட்டர்கள் பெவிலியனுக்கு அனுப்பப்பட்டனர். கிளாசன் இமாலய சிக்ஸர் அடித்த நிலையில் அடுத்த பந்தில் விக்கெட்டை இழந்தார். மார்க்ரம் ஃபுல்டாஸ் பந்தில் கால்காப்பில் வாங்கி வெளியேறினார். அபிஷேக் சர்மா விக்கெட்டை யாஷ் தயாலும், நிதிஷ் ரெட்டி விக்கெட்டை கரண் சர்மாவும் எடுக்கவே சன்ரைசர்ஸ் பேட்டிங் வரிசை ஆட்டம் கண்டது. பவர்ப்ளே ஓவருக்குள் சன்ரைசர்ஸ் அணி 4 விக்கெட்டுகளை இழந்தது, 10 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை சன்ரைசர்ஸ் இழந்து தடுமாறியது. பாட்கம்மின்ஸ் கேமியோ ஆடி 31 ரன்கள் சேர்த்து க்ரீன் பந்துவீச்சிலும், புவனேஷ்வர் குமார் 13 ரன்னில் க்ரீன் பந்துவீச்சிலும் ஆட்டமிழந்தனர். ஷாபாஸ் அகமது மட்டும் 40 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அடுத்தடுத்து விக்கெட் சரிவு, பெரிய இலக்கு ஆகியவை சன்ரைசர்ஸ் அணியை மேலும் நெருக்கடிக்குள் தள்ளி, தோல்வியடையச் செய்தது.   பட மூலாதாரம்,GETTY IMAGES பட்டிதார் அளித்த உத்வேகம் ஆர்சிபி அணி பெரிய ஸ்கோரை எட்டுவோம் என்ற நோக்கத்தில் ஆட்டத்தைத் தொடங்கியது, புவனேஷ்வர், கம்மின்ஸ் வீசிய ஓவர்களை அதிரடியாக அடித்த கேப்டன் டூப்பிளசிஸ் பவுண்டரி, சிக்ஸர் விளாசினார். 3ஓவர்களில் 43 ரன்கள் என பெரிய ஸ்கோர் சென்றது. ஆனால், நடராஜன் பந்துவீச்சில் டூப்பிளசிஸ் 25 ரன்களில் ஆட்டமிழந்தவுடன் ரன்ரேட் குறையத் தொடங்கியது. ஷாபாஸ் சுழற்பந்துவீச்சில் கோலி வழக்கம்போல் மெதுவாக ஆடத் தொடங்கினார். பவர்ப்ளே ஓவர்கள் முடிவில் ஆர்சிபி ஒரு விக்கெட் இழப்புக்கு 61 ரன்கள் சேர்த்தது. தொடக்கத்தில் வேகமாக பேட்டை சுழற்றிய கோலி 11 பந்துகளில் 23 ரன்கள் சேர்த்தார், அதன்பின், 32 பந்துகளில் கோலி 28 ரன்கள் மட்டுமே சேர்த்தார். ஜேக்ஸ் 6 ரன்னில் மார்க்கண்டே பந்துவீச்சில் ஆட்டமிழந்தபின் பட்டிதார் களமிறங்கினார். பட்டிதார் களத்துக்கு வந்தபின்புதான் ஆர்சிபியின் ஸ்கோர் எகிறத் தொடங்கியது. வேகப்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக 125 ஸ்ட்ரைக்ரேட்டிலும், சுழற்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக 197 ஸ்ட்ரைக் ரேட்டிலும் பட்டிதார் ஆடி ரன்களைச் சேர்த்தார். அதிலும் மார்க்கண்டே வீசிய 11-வது ஓவரில் தொடர்ந்து 4 சிக்ஸர்களை விளாசிய பட்டிதார் 19 பந்துகளில் அரைசதம் அடித்தார். கேமரூன் நடுவரிசையில் களமிறங்கி தேவையான ஒரு கேமியோ ஆடி ஸ்கோரை உயர்த்தினார். குறிப்பாக கேப்டன் கம்மின்ஸ் பந்துவீச்சில் கேமரூன் 4 பவுண்டரிகளை விளாசி 20 பந்துகளில் 37ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த சீசனில் சிறப்பாக பேட் செய்து வரும் டிகே 11 ரன்னில் ஆட்டமிழந்தார். ஸ்வப்னில் சிங் 12 ரன்னில் விக்கெட்டை இழந்தார். https://www.bbc.com/tamil/articles/c80z102przro
    • தந்தை செல்வாவின் 47வது நினைவு தினம்! வவுனியாவில் தந்தை செல்வாவின் 47வது நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. குறித்த நிகழ்வானது வவுனியா மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் உள்ள அன்னாரின் சிலையருகில் இடம்பெற்றிருந்தது. இதன்போது அன்னாரின் திருவுருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்து மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டதுடன், நினைவு பேருரையும் இடம்பெற்றிருந்தது. தமிழரசு கட்சியின் தந்தை செல்வா நற்பணி மன்றத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கட்சி ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். https://athavannews.com/2024/1379846
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.