Jump to content

நம்பிக்கையும் ஏமாற்றமும்


Recommended Posts

நம்பிக்கையும் ஏமாற்றமும்.

 

என் மகன்மீதா பழிபோடுகிறாய்…! என்ன திமிரடி உனக்கு…!!“ பத்து வீடுகளுக்குக் கேட்கும் வண்ணம் பெரும் குரலெடுத்துக் கத்தினாள் பவானியம்மாள்,  பக்கத்துவீட்டு ராதா படபடத்து ஒடிவந்தாள். மிதித்தால் புல்லும்கூடச் சாகாத மென்மையானவள். அந்தத் தாய் பவானியம்மாள். இருமினால்கூட இரண்டாம் ஆளுக்குக் கேட்காது இருமுவாள். அப்படிப்பட்டவளா இன்று.....? அதிர்ந்துபோய் வந்தவள், தன்தோழி நந்தினி பேயறைந்ததுபோல் நிற்க, அவள் மாமியார் பவானியம்மாள் பத்திரகாளியாக நின்றாள். ஆருக்கடி சொல்லுகிறாய்…! என் மகனுக்கு வேறு ஒரு பெண்ணைக் கல்யாணம் செய்துவைச்சுப் பத்துமாத்திலை என் பேரனைக் கொஞ்சுகிறேனா இல்லையா பாரடி. என்று உச்சகட்டத்தில கூச்சலிட்டு ஆடினாள். நந்தினியின் கணவனோ கல்லாய்ச் சமைந்து நின்றான்.

 

தேவலோகத்து ரம்பை ஊர்வசிகளைக்கூட ஒப்பிட்டுப் பார்க்கமுடியாத அழகுநிறைந்தவள் நந்தினி. காண்போர் அனைவரையும் வசீகரிக்கும் அழகியான ராதாகூட நந்தினின் அழகு கண்டு பிரமித்தவள். திருமணமாகி நந்தினி அந்தப் பக்கத்து வீட்டிற்கு வந்தபோது கர்வியாக இருப்பாளோ....! என்றெண்ணிப் பழகத் தயங்கியவள் ராதா. அவள் கணவன் நந்தினியின் அழகுபற்றி ஏதாவது ஒரு சொல் சொன்னாலே பொருமியவள். போகப் போக நந்தினியின் பூப்போன்ற உள்ளம்கண்டு புன்னகைபூக்க....! அந்தப் புன்னகையே அவர்களைத் தோழிகளாக இணைத்தது. அந்தரங்களையும் கூச்சமின்றிக் கதைக்கும் அளவிற்குச் சினேகிதிகளாக்கி விட்டிருந்தது. அவர்கள் இருவரும் சேர்ந்து செல்லும்போது இருவரின் அழகு கண்டு தடுமாறும் இளவட்டங்களைக் கண்டு, தங்களுக்குள்ளேயே கேலியாகப் பேசி சிரித்துக் கொள்வார்கள்.

 

பவானியம்மாளும் நந்தினியை உள்ளம்கையில் வைத்துத் தாங்கினாள். கணவன் நந்தகுமாரோ...! சித்தெறும்புகூட வீட்டிற்குள் நுளையாது பார்த்துக்கொண்டான். இப்படியே இனிமையாக இரண்டு வருடங்கள் பறந்தோடிவிட்ட நிலையில்தான்,! இரு வருடங்களுக்கு மேலாகியும் இன்னும் குழந்தைல்லையே என்ற ஆதங்கத்தினால்.! பவானியம்மாளின் போக்கில் மாறுதல் ஏற்பட்டது. அற்ப விங்களுக்கெல்லாம் குறைகண்டுபிடிக்கத் தொடங்கினார். இதனால் கவலைகொண்ட நந்தினி அவளது கவலைகள்பற்றி ராதாவோடு மனம்விட்டுக் கதைத்தபோது....! நந்தினி எனக்குத் தெரிந்த லேடி டாக்டர் ஒருவர் இருக்கிறார் நீ அவரிடம் சென்று செக்கப் பண்ணிப் பார். உன்னிடம் குறையில்லை என்றால் உன் கணவரைச் செக்கப்பண்ணச் சொல்லு. என்று அறிவுரை வழங்கினாள். சரி என்று நந்தினியும் தன்னைப் பரிசோதனைக்கு உட்படுத்திய மூன்றாம் நாள் அவளிடம் குறை எதுவும் இல்லையென்று ரிப்போட் வந்ததை அடுத்து தன் கணவனைச் செக்கப்பண்ணச் சொன்னபோதுதான் பிரளயமே வெடித்தது.

 

நந்தகுமாரும் தன்னில் குறையில்லை, தான் பரிசோதனைக்குச் செல்லவேண்டிய அவசியம் இல்லயென்று உறுதியாக நம்பினான். அதற்குக் காரணமும் இருந்தது. முன்பு ஒருமுறை நந்தினிக்கு நாட்கள் தள்ளிப்போனபோது. வீட்டில் மகிழ்ச்சி பொங்கியது ஆனாலும் அந்த மகிழ்ச்சி ஆறேழு நாட்களிலே அற்றுப்போனது. கொடுத்ததைப் பாதுகாக்க முடியாத குறையை அவள் உடல் கொண்டிருப்பதாக அவன் பூரணமாக நம்பினான். அதற்காக அவளைப் பரிசோதனைக்கு அனுப்பிப் பார்க்க அவன் விரும்பவில்லை. கிடைக்கும்போது கிடைக்கட்டும் என அவன் இருந்துவிட்டான். அத்தோடு பக்கத்துவீட்டு ராதா குடும்பம் தங்களுக்கு 5 வருடங்களுக்கு குழந்தையே வேண்டாம் என்று செயற்கையாகவே முயற்சிகள் செய்யும்போது.... தங்களுக்கு இயற்கையாகவே அந்த வரம் கிடைத்திருப்பதை வரவேற்கவே செய்தான்.

 

நந்தினியைத் தவிர வேறு ஒரு பெண்ணை மனதாலும் தீண்டிப்பார்க்காத நந்தகுமாரைத் தாயின் உத்திர தாண்டவம் ஆட்டங்கொள்ளச் செய்தது. அம்மா எத்தனையோ குடும்பங்களில் பத்து வருடங்களுக்குப் பின்பும் குழந்தை கிடைத்துள்ளது எங்களுக்கு இரண்டு வருடங்கள்தானே, எனக்கூறி அவரை சமாதானப்படுத்த முயன்றான். மகனின் ஆதங்கத்தைக் கண்டு இறங்கிவந்த பவானியம்மாள், சரி இன்னமும் ஒருவருடம் பார்க்கிறேன், அப்போதும் இல்லையென்றால்....! உனக்கு வேறு கலியாணம்தான். நீ மறுத்தால் இந்த உலகைவிட்டே நான் போய்விடுவேன்.“ என்று மகனை ஆட்டம்காணச் செய்து அவனிடம் சத்தியமும் வாங்கிவிட்டாள். .

 

நந்தினியின் கணவன் நந்தகுமார் பரிசோதனைக்கு உட்பட மறுப்பதை அறிந்த அந்தப் பெண் வைத்தியரின் ஆலோசனைப்படி, பிறிதொரு நாளில் நந்தகுமாருக்கு வந்த சாதாரண நோய்க்கு மருந்தெடுக்கும் சாட்டில், ராதாவின் கணவனே நந்தகுமாரை அந்தப் பெண் வைத்திரிடம் கூட்டிச் செல்லவே சந்தேகம் எதுவும் இன்றி, வைத்தியரும் தனது பரிசோதனைக்குத் தேவையான அனைத்தையுமே பெற்றுக்கொண்டார். சோதனையின் முடிவை வைத்தியர் நந்தினியை மட்டுமே தனியாக அழைத்துத் தெரிவித்தார். நிவர்த்தி செய்யக்கூடிய குறையே அவள் கணவனுக்கு இருப்பதாகவும். அதற்கான மருந்தைப் பாலில் கலந்து ஒரு மாதம் மட்டும் கொடுத்தால் போதும். பலன் ஆறுமாதங்களின் பின்பு நிச்சயம் எனவும் தெரிவித்தார்.  

 

என்னதான் கூச்சல் போட்டாலும், மாமிக்கு மருமகளிடத்தில் அன்பு, பாசம் இல்லையென்று கூறிவிட முடியாது. தன் மகனைக் குறைகூறிவிட்டாளே…! என்ற ஆதங்கமே அவரை உருக்கொண்டு ஆடவைத்தது. சிறிதுநாளில், சற்று ஆத்திரம் அடங்கியதும் மருமகளைக் கடிந்துவிட்டோமே என்ற கவலை அவரை வாட்டியது. மருமகளைக் கூப்பிட்டு ஆறுதல் கூறத்தொடங்கினார். நந்தினி குழந்தை வரம் கடவுள் அருளால் கிடைப்பது. உந்த டாக்குத்தர்மாருக்கு உது ஒன்றும் புரியாது. என் சித்தப்பா இருக்கும் ஊரில் உள்ள அம்மன் மிகவும் சக்திவாய்ந்தவர். தற்போது அந்த அம்மனின் ஆச்சிரமத்தில் இருக்கும் இரண்டு சாமிமார்கள் சாத்திரம், குறி பார்ப்பது, காண்டம் வாசிப்பதிலும் தேர்ந்தவர்களாம். பலருடைய குறைகளைக் கேட்டறிந்து அதற்குப் பரிகாரமும் சொல்லிப் பலனடைய வைத்துள்ளார்களாம். சித்தப்பாவின் இருக்கும் ஊருக்கு இங்கிருந்து ஒரு நாளில் சென்றுவர முடியாது ஆகவே நீ அங்கு ஒருமுறை சென்று சித்தப்பா வீட்டில் ஒருநாள் தங்கி, அம்மனின் அருள்பெற்று உன் சாதகத்தையும் சாமிமார்களிடம் கொடுத்து உன் குறைகளையும், அதற்கான பரிகாரங்களையும் அறிந்துவா!“ என்றார். 

நந்தினியால் அதை மீறமுடியவில்லை.

 

நந்தகுமாருக்கு பணியிடத்தில் வேலைப்பளு அதிகமாக இருந்ததால் விடுமுறை பெறுவது கடினமாக இருந்தது. சாத்திரங்களில் நம்பிக்கை இல்லை என்றாலும் தாயை ஆறுதல்படுத்த வேண்டி நந்தினியை அனுப்பவேண்டிய தேவையும் இருந்தது. ஆகவே தன் மனைவியின் தோழியான ராதாவையும் அழைத்துச்செல்ல அவள் கணவனிடம் அனுமதியும் யாசிக்கப்பட்டது. நிலமையின் தாக்கத்தை உணர்ந்த அவரும் அனுமதி அளித்தார். சாத்திர சம்பிரதாயங்களில் நம்பிக்கை இல்லாவிட்டாலும் நந்தினியும், ராதாவும் வேறு வழியின்றிப் புறப்பட்டனர்.

 

 

இன்று மாலை கோவிலிலே அன்னதானம் வழங்குவார்கள். பூசை முடிய 10மணியாகும் அதன்பின்புதான் சாமிமார்கள் உங்களின் குறைகளைக் கேட்டுப் பரிகாரமும் சொல்வார்கள். சாமத்தில் இங்கு திரும்ப வருவது உங்களுக்குச் சிரமமாக இருந்தால் அங்கே மடத்திலேயே படுத்துறங்கவும் வசதியுள்ளது. காலையில் புறப்படும் பேரூந்தில் நேராகஊருக்கும் சென்றுவிடலாம் பவ்வியமான சித்தபாவின் கூற்றில் கஞ்சத்தனம் கடுகளவும் குறையாது தெரிந்தது.

 

அம்மன் பூசை முடிந்து அன்னதானமும் அருந்தியபின் சாமியார்களிடம் தங்கள் குறையறிந்து பரிகாரம்தேடவந்த பக்தர் கூட்டம் சாமிகளைச் சுற்றி இருந்தது. தங்கள் தியானத்திலிருந்து கண்களின் இமைகள் திறந்த சாமிகளைக் கண்டு பக்தர்களி்ன் முகங்கள் மலர்ந்தன. ஆனால் சாமிகளின் முகங்களோ…! நந்தினி ராதா என இருவரது முகங்களையும் கண்டு மலர்ந்தது. இவர்களைக் கண்டு வியக்கும் மனிதர்கள் பலரைக் கண்டு பழகிவிட்டதால் இருவருக்கும் அது பெரிதாகத் தெரியவில்லை. கைவிரல்களை மடித்தும், எண்ணியும், கண்கள்மூடித் தியானித்தும்  பக்தர்கள் கொண்டிவந்த ஏடுகளைப் புரட்டிப் பார்த்தும், அவற்றில் கண்டுகொண்ட குறைகளுக்கான பரிகாரங்களைச் செய்வதற்கான நாட்களையும் மின்னல் வேகத்தில் தெரிவித்த சாமியார்கள் நந்தினி ராதா இருவரது குறிப்பேடுகளைப் பார்த்ததும் உடனேயே இவற்றுக்குப் பரிகாரம் செய்யவேண்டும் எனக்கூறி. அதற்குரிய ஏற்பாடுகளைச் செய்யுமாறு தங்கள் ஏவல் ஆட்களுக்குக் கட்டளைகளை இட்டபின், ஏனைய பக்தர்களுக்கு விடைகொடுத்து அனுப்பினார்கள். இருவருக்கும் கிடைத்த அதிட்டத்தைக் கண்டு பக்தர்களும் அவர்களை வாழ்த்திக் கலைந்தார்கள்.

 

இந்தக் குடிலுக்கு வாருங்கள் அம்மா, பரிகாரத்திற்கு 2000 ரூபா செலவாகும் உள்ளதா என வினவினார்கள். ஆமாம் உள்ளது எனத் தெரிவித்துக் குடிலுக்குள் இருவரும் நுளைந்தனர். குடிலின் உள்ளே இருந்து வந்த நறுமணம் இனம்புரியாத உணர்வை உண்டுபண்ணியது. அம்மா இப்படி அமருங்கள்.சாமிகளில் ஒருவர் னிமையாக அழைத்து தனக்கு எதிரில் இருக்க வைத்தார். அவரின் இருபக்கமும் ஊதுபத்தியும் சாம்பிராணியும் நறுமணத்தை அள்ளி வீசிக்கொண்டிருந்தது. அம்மா உங்களுக்கு அம்மனின் ஆசி பரிபூரணமாய் கிட்டட்டும் என்று தனது இரு கைகளையும் இருவரின் தலைகள்மீது வைத்து ஆசீர்வாதம் வழங்க, அதனைக் கேட்டு ஒருவரை ஒருவர் பார்த்துப் புன்னகைத்துக் கொண்டார்கள். ஐயம் வேண்டாம்! நம்பிக்கை இல்லாதுவிட்டால் நீங்கள் எழுந்து செல்லலாம்.“ சாமிகள் கூறத் திடுக்கிட்ட இருவரும்…! எங்கள் மனதை எப்படி இவர் அறிந்துகொண்டார் என வியந்து அவரிடம் தயக்கமும், பயம்கலந்த பக்தியும் ஏற்பட்டது. அப்படி எதுவும் இல்லை சாமிகளே.“ என்று தெரிவித்த அவர்கள் மனம் தீர்க்கமாகன பயத்துடன் அம்மனையும் தியானித்தது.

 

 

சாதகக் குறிப்பை மீண்டும் புரட்டிப் பார்த்தவர் முகத்தில் மகிழ்ச்சி தெரிந்தது. கா.! மிக அருமையான ஜாதகங்கள்.! என்றவர், ஏதோ மந்திரங்களை உச்சரிக்கத் தொடங்கினார். அப்போது மற்றச் சாமியார் கையில் பால் செம்புடன்வந்து எங்கள் இருவரையும் அருந்தச் செய்தார். சாமிகள் மந்திரம் ஓதி முடிந்ததும், பரிகாரத்தை ஆரம்பிக்கலாம் என்றார். வீபூதியை எடுத்து கண்களை மூடச்சொல்லி இருவரது முகங்களிலும் ஊதினார். ஊதிய சிறிது நேரத்தில் அவர்களுக்கு ஏதோ மயக்கம் வந்ததுபோல் தெரிந்தது. மலர்ந்த இன்முகத்துடன் மயங்கி உறங்கினார்கள்.

 

பறவைகளின் சத்தமும் வானத்தின் சிவந்த ஒளியும் விடியலை உணர்த்தியது. கண்விழித்தபோது அடித்துப் போட்டதுபோல் உடம்பெல்லாம் வலி, எழமுடியாது அவர்கள் தலைகள் சுற்றியது. மிகவும் சிரமப்பட்டு இருவரும் எழுந்தபோதான் நடந்ததவை நினைவிலும், உணர்விலும் தெரிய விழிபிதுங்கி அதிர்ச்சி அடைந்தார்கள். அவர்களின் நிலையைக்காண.... அங்கு எவரும் இல்லை. ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்கவே முடியாத நிலையில் கூனிக் குறுகிக் குலுங்கிக் குலுங்கி அழுதார்கள். எல்லாம் முடிந்துவிட்டது. ஒருவர் மற்றவரைத் தேற்றிக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. நடந்தவற்றை வெளிப்படுத்தி அவர்கள் தங்களைத் தாங்களே அசிங்கப்படுத்திக் கொள்வதைவிட, அனைத்தையும் மனதுக்குள்ளே இறுகப் பூட்டிவைப்பதென முடிவானது.   

 

சாமிகளின் பரிகாரம் முடிந்து வந்து மாதம் ஒன்றும் கழிந்து, சிலநாட்களில் பவானியம்மாள் வானத்துக்கும் பூமிக்குமாகத் தாவித் குதித்தார். பெற்ற தாயைவிடவும் அன்போடு மருமகளை அரவணைத்தார். தானே அவள் முகத்தைக் கழுவித் துடைத்து வீபூதி குங்குமம் இட்டு அழகுபார்த்தார். சாப்பிடுவது கூட ஒரு வேலைதானே...! மருமகளுக்காக அதைத் தானே உண்ணமுடியாத நிலைமைக்கு வருந்தினாரென்றால் பார்க்கவேண்டுமே...! அத்தனை கவனிப்பு...!!

 

இன்றைய காலத்தில் கள்ளச் சாமிகள் அதிகரித்துள்ள நிலையில், நிதர்சனத்தை உணராமல் பவானியம்மாள் போன்ற அப்பாவிகளின் பழைய நம்பிக்கையின் பிடிவாதத்தால்…. அவர்களும் ஏமாறி, எத்தனைபேர் ஏமாந்து சீரழிந்தார்களோ....! சீரழிவார்களோ....! நந்தினியின் கண்கள் பனித்தது. ராதா அவள் கண்ணீரைத் துடைத்து எதையும் வெளிக்காட்டிக் கொள்ளக் கூடாதென்று கண்ணசைத்தாள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய காலத்தில் கள்ளச் சாமிகள் அதிகரித்துள்ள நிலையில், நிதர்சனத்தை உணராமல் பவானியம்மாள் போன்ற அப்பாவிகளின் பழைய நம்பிக்கையின் பிடிவாதத்தால்…. அவர்களும் ஏமாறி, எத்தனைபேர் ஏமாந்து சீரழிந்தார்களோ....! சீரழிவார்களோ....!நந்தினியின் கண்கள் பனித்தது

 

 நவீன  உலகின் இன்னும் இப்படி வாழ்கிறார்கள்   என் நினைக்க வேதனையாக   உள்ளது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Paanch said:

நம்பிக்கையும் ஏமாற்றமும்.

 

என் மகன்மீதா பழிபோடுகிறாய்…! என்ன திமிரடி உனக்கு…!!“ பத்து வீடுகளுக்குக் கேட்கும் வண்ணம் பெரும் குரலெடுத்துக் கத்தினாள் பவானியம்மாள்,  பக்கத்துவீட்டு ராதா படபடத்து ஒடிவந்தாள். மிதித்தால் புல்லும்கூடச் சாகாத மென்மையானவள். அந்தத் தாய் பவானியம்மாள். இருமினால்கூட இரண்டாம் ஆளுக்குக் கேட்காது இருமுவாள். அப்படிப்பட்டவளா இன்று.....? அதிர்ந்துபோய் வந்தவள், தன்தோழி நந்தினி பேயறைந்ததுபோல் நிற்க, அவள் மாமியார் பவானியம்மாள் பத்திரகாளியாக நின்றாள். ஆருக்கடி சொல்லுகிறாய்…! என் மகனுக்கு வேறு ஒரு பெண்ணைக் கல்யாணம் செய்துவைச்சுப் பத்துமாத்திலை என் பேரனைக் கொஞ்சுகிறேனா இல்லையா பாரடி. என்று உச்சகட்டத்தில கூச்சலிட்டு ஆடினாள். நந்தினியின் கணவனோ கல்லாய்ச் சமைந்து நின்றான்.

 

தேவலோகத்து ரம்பை ஊர்வசிகளைக்கூட ஒப்பிட்டுப் பார்க்கமுடியாத அழகுநிறைந்தவள் நந்தினி. காண்போர் அனைவரையும் வசீகரிக்கும் அழகியான ராதாகூட நந்தினின் அழகு கண்டு பிரமித்தவள். திருமணமாகி நந்தினி அந்தப் பக்கத்து வீட்டிற்கு வந்தபோது கர்வியாக இருப்பாளோ....! என்றெண்ணிப் பழகத் தயங்கியவள் ராதா. அவள் கணவன் நந்தினியின் அழகுபற்றி ஏதாவது ஒரு சொல் சொன்னாலே பொருமியவள். போகப் போக நந்தினியின் பூப்போன்ற உள்ளம்கண்டு புன்னகைபூக்க....! அந்தப் புன்னகையே அவர்களைத் தோழிகளாக இணைத்தது. அந்தரங்களையும் கூச்சமின்றிக் கதைக்கும் அளவிற்குச் சினேகிதிகளாக்கி விட்டிருந்தது. அவர்கள் இருவரும் சேர்ந்து செல்லும்போது இருவரின் அழகு கண்டு தடுமாறும் இளவட்டங்களைக் கண்டு, தங்களுக்குள்ளேயே கேலியாகப் பேசி சிரித்துக் கொள்வார்கள்.

 

பவானியம்மாளும் நந்தினியை உள்ளம்கையில் வைத்துத் தாங்கினாள். கணவன் நந்தகுமாரோ...! சித்தெறும்புகூட வீட்டிற்குள் நுளையாது பார்த்துக்கொண்டான். இப்படியே இனிமையாக இரண்டு வருடங்கள் பறந்தோடிவிட்ட நிலையில்தான்,! இரு வருடங்களுக்கு மேலாகியும் இன்னும் குழந்தைல்லையே என்ற ஆதங்கத்தினால்.! பவானியம்மாளின் போக்கில் மாறுதல் ஏற்பட்டது. அற்ப விங்களுக்கெல்லாம் குறைகண்டுபிடிக்கத் தொடங்கினார். இதனால் கவலைகொண்ட நந்தினி அவளது கவலைகள்பற்றி ராதாவோடு மனம்விட்டுக் கதைத்தபோது....! நந்தினி எனக்குத் தெரிந்த லேடி டாக்டர் ஒருவர் இருக்கிறார் நீ அவரிடம் சென்று செக்கப் பண்ணிப் பார். உன்னிடம் குறையில்லை என்றால் உன் கணவரைச் செக்கப்பண்ணச் சொல்லு. என்று அறிவுரை வழங்கினாள். சரி என்று நந்தினியும் தன்னைப் பரிசோதனைக்கு உட்படுத்திய மூன்றாம் நாள் அவளிடம் குறை எதுவும் இல்லையென்று ரிப்போட் வந்ததை அடுத்து தன் கணவனைச் செக்கப்பண்ணச் சொன்னபோதுதான் பிரளயமே வெடித்தது.

 

நந்தகுமாரும் தன்னில் குறையில்லை, தான் பரிசோதனைக்குச் செல்லவேண்டிய அவசியம் இல்லயென்று உறுதியாக நம்பினான். அதற்குக் காரணமும் இருந்தது. முன்பு ஒருமுறை நந்தினிக்கு நாட்கள் தள்ளிப்போனபோது. வீட்டில் மகிழ்ச்சி பொங்கியது ஆனாலும் அந்த மகிழ்ச்சி ஆறேழு நாட்களிலே அற்றுப்போனது. கொடுத்ததைப் பாதுகாக்க முடியாத குறையை அவள் உடல் கொண்டிருப்பதாக அவன் பூரணமாக நம்பினான். அதற்காக அவளைப் பரிசோதனைக்கு அனுப்பிப் பார்க்க அவன் விரும்பவில்லை. கிடைக்கும்போது கிடைக்கட்டும் என அவன் இருந்துவிட்டான். அத்தோடு பக்கத்துவீட்டு ராதா குடும்பம் தங்களுக்கு 5 வருடங்களுக்கு குழந்தையே வேண்டாம் என்று செயற்கையாகவே முயற்சிகள் செய்யும்போது.... தங்களுக்கு இயற்கையாகவே அந்த வரம் கிடைத்திருப்பதை வரவேற்கவே செய்தான்.

 

நந்தினியைத் தவிர வேறு ஒரு பெண்ணை மனதாலும் தீண்டிப்பார்க்காத நந்தகுமாரைத் தாயின் உத்திர தாண்டவம் ஆட்டங்கொள்ளச் செய்தது. அம்மா எத்தனையோ குடும்பங்களில் பத்து வருடங்களுக்குப் பின்பும் குழந்தை கிடைத்துள்ளது எங்களுக்கு இரண்டு வருடங்கள்தானே, எனக்கூறி அவரை சமாதானப்படுத்த முயன்றான். மகனின் ஆதங்கத்தைக் கண்டு இறங்கிவந்த பவானியம்மாள், சரி இன்னமும் ஒருவருடம் பார்க்கிறேன், அப்போதும் இல்லையென்றால்....! உனக்கு வேறு கலியாணம்தான். நீ மறுத்தால் இந்த உலகைவிட்டே நான் போய்விடுவேன்.“ என்று மகனை ஆட்டம்காணச் செய்து அவனிடம் சத்தியமும் வாங்கிவிட்டாள். .

 

நந்தினியின் கணவன் நந்தகுமார் பரிசோதனைக்கு உட்பட மறுப்பதை அறிந்த அந்தப் பெண் வைத்தியரின் ஆலோசனைப்படி, பிறிதொரு நாளில் நந்தகுமாருக்கு வந்த சாதாரண நோய்க்கு மருந்தெடுக்கும் சாட்டில், ராதாவின் கணவனே நந்தகுமாரை அந்தப் பெண் வைத்திரிடம் கூட்டிச் செல்லவே சந்தேகம் எதுவும் இன்றி, வைத்தியரும் தனது பரிசோதனைக்குத் தேவையான அனைத்தையுமே பெற்றுக்கொண்டார். சோதனையின் முடிவை வைத்தியர் நந்தினியை மட்டுமே தனியாக அழைத்துத் தெரிவித்தார். நிவர்த்தி செய்யக்கூடிய குறையே அவள் கணவனுக்கு இருப்பதாகவும். அதற்கான மருந்தைப் பாலில் கலந்து ஒரு மாதம் மட்டும் கொடுத்தால் போதும். பலன் ஆறுமாதங்களின் பின்பு நிச்சயம் எனவும் தெரிவித்தார்.  

 

என்னதான் கூச்சல் போட்டாலும், மாமிக்கு மருமகளிடத்தில் அன்பு, பாசம் இல்லையென்று கூறிவிட முடியாது. தன் மகனைக் குறைகூறிவிட்டாளே…! என்ற ஆதங்கமே அவரை உருக்கொண்டு ஆடவைத்தது. சிறிதுநாளில், சற்று ஆத்திரம் அடங்கியதும் மருமகளைக் கடிந்துவிட்டோமே என்ற கவலை அவரை வாட்டியது. மருமகளைக் கூப்பிட்டு ஆறுதல் கூறத்தொடங்கினார். நந்தினி குழந்தை வரம் கடவுள் அருளால் கிடைப்பது. உந்த டாக்குத்தர்மாருக்கு உது ஒன்றும் புரியாது. என் சித்தப்பா இருக்கும் ஊரில் உள்ள அம்மன் மிகவும் சக்திவாய்ந்தவர். தற்போது அந்த அம்மனின் ஆச்சிரமத்தில் இருக்கும் இரண்டு சாமிமார்கள் சாத்திரம், குறி பார்ப்பது, காண்டம் வாசிப்பதிலும் தேர்ந்தவர்களாம். பலருடைய குறைகளைக் கேட்டறிந்து அதற்குப் பரிகாரமும் சொல்லிப் பலனடைய வைத்துள்ளார்களாம். சித்தப்பாவின் இருக்கும் ஊருக்கு இங்கிருந்து ஒரு நாளில் சென்றுவர முடியாது ஆகவே நீ அங்கு ஒருமுறை சென்று சித்தப்பா வீட்டில் ஒருநாள் தங்கி, அம்மனின் அருள்பெற்று உன் சாதகத்தையும் சாமிமார்களிடம் கொடுத்து உன் குறைகளையும், அதற்கான பரிகாரங்களையும் அறிந்துவா!“ என்றார். 

நந்தினியால் அதை மீறமுடியவில்லை.

 

நந்தகுமாருக்கு பணியிடத்தில் வேலைப்பளு அதிகமாக இருந்ததால் விடுமுறை பெறுவது கடினமாக இருந்தது. சாத்திரங்களில் நம்பிக்கை இல்லை என்றாலும் தாயை ஆறுதல்படுத்த வேண்டி நந்தினியை அனுப்பவேண்டிய தேவையும் இருந்தது. ஆகவே தன் மனைவியின் தோழியான ராதாவையும் அழைத்துச்செல்ல அவள் கணவனிடம் அனுமதியும் யாசிக்கப்பட்டது. நிலமையின் தாக்கத்தை உணர்ந்த அவரும் அனுமதி அளித்தார். சாத்திர சம்பிரதாயங்களில் நம்பிக்கை இல்லாவிட்டாலும் நந்தினியும், ராதாவும் வேறு வழியின்றிப் புறப்பட்டனர்.

 

 

இன்று மாலை கோவிலிலே அன்னதானம் வழங்குவார்கள். பூசை முடிய 10மணியாகும் அதன்பின்புதான் சாமிமார்கள் உங்களின் குறைகளைக் கேட்டுப் பரிகாரமும் சொல்வார்கள். சாமத்தில் இங்கு திரும்ப வருவது உங்களுக்குச் சிரமமாக இருந்தால் அங்கே மடத்திலேயே படுத்துறங்கவும் வசதியுள்ளது. காலையில் புறப்படும் பேரூந்தில் நேராகஊருக்கும் சென்றுவிடலாம் பவ்வியமான சித்தபாவின் கூற்றில் கஞ்சத்தனம் கடுகளவும் குறையாது தெரிந்தது.

 

அம்மன் பூசை முடிந்து அன்னதானமும் அருந்தியபின் சாமியார்களிடம் தங்கள் குறையறிந்து பரிகாரம்தேடவந்த பக்தர் கூட்டம் சாமிகளைச் சுற்றி இருந்தது. தங்கள் தியானத்திலிருந்து கண்களின் இமைகள் திறந்த சாமிகளைக் கண்டு பக்தர்களி்ன் முகங்கள் மலர்ந்தன. ஆனால் சாமிகளின் முகங்களோ…! நந்தினி ராதா என இருவரது முகங்களையும் கண்டு மலர்ந்தது. இவர்களைக் கண்டு வியக்கும் மனிதர்கள் பலரைக் கண்டு பழகிவிட்டதால் இருவருக்கும் அது பெரிதாகத் தெரியவில்லை. கைவிரல்களை மடித்தும், எண்ணியும், கண்கள்மூடித் தியானித்தும்  பக்தர்கள் கொண்டிவந்த ஏடுகளைப் புரட்டிப் பார்த்தும், அவற்றில் கண்டுகொண்ட குறைகளுக்கான பரிகாரங்களைச் செய்வதற்கான நாட்களையும் மின்னல் வேகத்தில் தெரிவித்த சாமியார்கள் நந்தினி ராதா இருவரது குறிப்பேடுகளைப் பார்த்ததும் உடனேயே இவற்றுக்குப் பரிகாரம் செய்யவேண்டும் எனக்கூறி. அதற்குரிய ஏற்பாடுகளைச் செய்யுமாறு தங்கள் ஏவல் ஆட்களுக்குக் கட்டளைகளை இட்டபின், ஏனைய பக்தர்களுக்கு விடைகொடுத்து அனுப்பினார்கள். இருவருக்கும் கிடைத்த அதிட்டத்தைக் கண்டு பக்தர்களும் அவர்களை வாழ்த்திக் கலைந்தார்கள்.

 

இந்தக் குடிலுக்கு வாருங்கள் அம்மா, பரிகாரத்திற்கு 2000 ரூபா செலவாகும் உள்ளதா என வினவினார்கள். ஆமாம் உள்ளது எனத் தெரிவித்துக் குடிலுக்குள் இருவரும் நுளைந்தனர். குடிலின் உள்ளே இருந்து வந்த நறுமணம் இனம்புரியாத உணர்வை உண்டுபண்ணியது. அம்மா இப்படி அமருங்கள்.சாமிகளில் ஒருவர் னிமையாக அழைத்து தனக்கு எதிரில் இருக்க வைத்தார். அவரின் இருபக்கமும் ஊதுபத்தியும் சாம்பிராணியும் நறுமணத்தை அள்ளி வீசிக்கொண்டிருந்தது. அம்மா உங்களுக்கு அம்மனின் ஆசி பரிபூரணமாய் கிட்டட்டும் என்று தனது இரு கைகளையும் இருவரின் தலைகள்மீது வைத்து ஆசீர்வாதம் வழங்க, அதனைக் கேட்டு ஒருவரை ஒருவர் பார்த்துப் புன்னகைத்துக் கொண்டார்கள். ஐயம் வேண்டாம்! நம்பிக்கை இல்லாதுவிட்டால் நீங்கள் எழுந்து செல்லலாம்.“ சாமிகள் கூறத் திடுக்கிட்ட இருவரும்…! எங்கள் மனதை எப்படி இவர் அறிந்துகொண்டார் என வியந்து அவரிடம் தயக்கமும், பயம்கலந்த பக்தியும் ஏற்பட்டது. அப்படி எதுவும் இல்லை சாமிகளே.“ என்று தெரிவித்த அவர்கள் மனம் தீர்க்கமாகன பயத்துடன் அம்மனையும் தியானித்தது.

 

 

சாதகக் குறிப்பை மீண்டும் புரட்டிப் பார்த்தவர் முகத்தில் மகிழ்ச்சி தெரிந்தது. கா.! மிக அருமையான ஜாதகங்கள்.! என்றவர், ஏதோ மந்திரங்களை உச்சரிக்கத் தொடங்கினார். அப்போது மற்றச் சாமியார் கையில் பால் செம்புடன்வந்து எங்கள் இருவரையும் அருந்தச் செய்தார். சாமிகள் மந்திரம் ஓதி முடிந்ததும், பரிகாரத்தை ஆரம்பிக்கலாம் என்றார். வீபூதியை எடுத்து கண்களை மூடச்சொல்லி இருவரது முகங்களிலும் ஊதினார். ஊதிய சிறிது நேரத்தில் அவர்களுக்கு ஏதோ மயக்கம் வந்ததுபோல் தெரிந்தது. மலர்ந்த இன்முகத்துடன் மயங்கி உறங்கினார்கள்.

 

பறவைகளின் சத்தமும் வானத்தின் சிவந்த ஒளியும் விடியலை உணர்த்தியது. கண்விழித்தபோது அடித்துப் போட்டதுபோல் உடம்பெல்லாம் வலி, எழமுடியாது அவர்கள் தலைகள் சுற்றியது. மிகவும் சிரமப்பட்டு இருவரும் எழுந்தபோதான் நடந்ததவை நினைவிலும், உணர்விலும் தெரிய விழிபிதுங்கி அதிர்ச்சி அடைந்தார்கள். அவர்களின் நிலையைக்காண.... அங்கு எவரும் இல்லை. ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்கவே முடியாத நிலையில் கூனிக் குறுகிக் குலுங்கிக் குலுங்கி அழுதார்கள். எல்லாம் முடிந்துவிட்டது. ஒருவர் மற்றவரைத் தேற்றிக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை. நடந்தவற்றை வெளிப்படுத்தி அவர்கள் தங்களைத் தாங்களே அசிங்கப்படுத்திக் கொள்வதைவிட, அனைத்தையும் மனதுக்குள்ளே இறுகப் பூட்டிவைப்பதென முடிவானது.   

 

சாமிகளின் பரிகாரம் முடிந்து வந்து மாதம் ஒன்றும் கழிந்து, சிலநாட்களில் பவானியம்மாள் வானத்துக்கும் பூமிக்குமாகத் தாவித் குதித்தார். பெற்ற தாயைவிடவும் அன்போடு மருமகளை அரவணைத்தார். தானே அவள் முகத்தைக் கழுவித் துடைத்து வீபூதி குங்குமம் இட்டு அழகுபார்த்தார். சாப்பிடுவது கூட ஒரு வேலைதானே...! மருமகளுக்காக அதைத் தானே உண்ணமுடியாத நிலைமைக்கு வருந்தினாரென்றால் பார்க்கவேண்டுமே...! அத்தனை கவனிப்பு...!!

 

இன்றைய காலத்தில் கள்ளச் சாமிகள் அதிகரித்துள்ள நிலையில், நிதர்சனத்தை உணராமல் பவானியம்மாள் போன்ற அப்பாவிகளின் பழைய நம்பிக்கையின் பிடிவாதத்தால்…. அவர்களும் ஏமாறி, எத்தனைபேர் ஏமாந்து சீரழிந்தார்களோ....! சீரழிவார்களோ....! நந்தினியின் கண்கள் பனித்தது. ராதா அவள் கண்ணீரைத் துடைத்து எதையும் வெளிக்காட்டிக் கொள்ளக் கூடாதென்று கண்ணசைத்தாள்.

பச்சை தங்களின் எழுத்து நடைக்கு..! 'ஆசாராம் பாபு' கதைக்கு அல்ல..!! draplol.gif

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Bildergebnis für நித்தியானந்தா

8 hours ago, Paanch said:

இந்தக் குடிலுக்கு வாருங்கள் அம்மா, பரிகாரத்திற்கு 2000 ரூபா செலவாகும் உள்ளதா என வினவினார்கள். ஆமாம் உள்ளது எனத் தெரிவித்துக் குடிலுக்குள் இருவரும் நுளைந்தனர்.

 ஐயம் வேண்டாம்! நம்பிக்கை இல்லாதுவிட்டால் நீங்கள் எழுந்து செல்லலாம்.“ சாமிகள் கூறத் திடுக்கிட்ட இருவரும்…! எங்கள் மனதை எப்படி இவர் அறிந்துகொண்டார் என வியந்து அவரிடம் தயக்கமும், பயம்கலந்த பக்தியும் ஏற்பட்டது. அப்படி எதுவும் இல்லை சாமிகளே.“ என்று தெரிவித்த அவர்கள் மனம் தீர்க்கமாகன பயத்துடன் அம்மனையும் தியானித்தது.

அப்போது மற்றச் சாமியார் கையில் பால் செம்புடன்வந்து எங்கள் இருவரையும் அருந்தச் செய்தார். சாமிகள் மந்திரம் ஓதி முடிந்ததும், பரிகாரத்தை ஆரம்பிக்கலாம் என்றார். 

சாமி.... பயங்கர சாமி போல் உள்ளது. 
2000 ரூபாயையும் வாங்கி விட்டு தான்... அலுவல் பார்த்திருக்குது.
"என்னில்.... நம்பிக்கை இல்லாவிட் டால், நீங்கள் போகலாம் என்று... "வார்னிங்" கொடுத்த பிறகும், 
நந்தினியும், ராதாவும்.... உசாராகாமல், சிஷ்ய சாமி... கொடுத்த பாலை குடித்ததால்.....
குரு சாமிக்கும்,  சிஷ்ய சாமிக்கும்.... "வெள்ளி  திசை" அடிச்சிருக்குது.  :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதை நல்லாய் இருக்கு பாஞ்ச்... ! tw_blush:

துருச்சாமிக்கும் இவருக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. முக்கியமாய் அவருக்கு ஆசிரமங்களோ கிளைகளோ கிடையாது....!  :unsure:  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இல்லற உறவின்....அத்திவாரத்தையே ஆட்டி வைக்கின்ற அளவுக்கு ...சம்பவங்கள் நடந்துள்ளன!

நந்தினியும்..ராதாவும் எடுத்த முடிவு...அவர்கள் வாழும் சூழ்நிலையில் அவர்கள் மீது திணிக்கப்பட்ட ஒரு முடிவு தான்!

அவர்கள் வேறு எந்த முடிவும் எடுத்திருக்க முடியாது தான்!

நாளை ..அந்தக் குழந்தையை, அவளது கணவன் தூக்கிக் கொஞ்சும் ஒவ்வொரு நாளும்..அவளுக்கு வலிக்கத் தான் போகின்றது!

இப்படியே வாழ்ந்து முடித்தவர்கள் ஏராளம்!

ஊரில் வேறு வழியில்லாமல் .. இவ்வாறான மூட நம்பிக்கைகளில் மக்கள் மூழ்கிப்போய் விடுவதை..ஓரளவுக்குப் புரிந்து கொள்ள முடியுமாயினும்...புலத்திலும் இந்த அட்டகாசங்கள் எந்த விதத் தடங்களும் இல்லாமல் தொடர்வது தான்...மிகவும் வருத்தத்துக்குரியது!

எழுத்து நடை.....அற்புதம்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாஞ்சு 
இப்படியான பிரச்சனைகள் எமது சமூகத்தில் மட்டுமல்ல பல தரப்பட்ட மக்களும் இப்படியான லீலைகளுக்கு பலியாகிறார்கள்.

மிக கவனமாகவும் நன்றாகவும் எழுதியுள்ளீரகள்.

யார் குத்தியும் அரிசியாச்சே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தவர்கள் இப்படி சாமியார்,பூசை என்று போகின்றவர்களா?....சும்மா கோயிலுக்குப் போய் ஜயரைக் கொண்டு நூல் கட்டுறது தான் எனக்குத் தெரியும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றாக இருக்கு பாஞ்ச்

 

Link to comment
Share on other sites

சென்ற வெள்ளிக்கிழமை மாலை, சோமபானம் தம்பி தமிழ் சிறியை  உசார்படுத்த, அந்த உற்சாகத்தில் அவர் "பாஞ்சண்ணை...! ஏன் இன்னமும் சுய ஆக்கத்துக்கு வரவில்லை..!!" என்று உரிமையோடு பாஞ்சண்ணைமீது பாய்ந்த பின்புதான், சுய ஆக்கங்கள் கோரப்பட்டுள்ளதைக் கவனித்தேன். கவனித்து இந்தப் பதிவையும் பதிந்து, உறவுகளின் பாராட்டுகளையும் பெற்றேன். ஆகவே முதலில் சோம பானத்திற்கு என் நன்றிகளைத் தெரிவித்து.:100_pray: என் பதிவுக்குக் கருத்துக்களும் எழுதிப் பச்சைகளும் வழங்கிய
நிலாமதி
ராசவன்னியன்
தமிழ் சிறி
சுவி
புங்கையூரன்
ஈழப்பிரியன்
ரதி தமிழினி
மெசொபொத்தேமியா சுமேரியர்
ராசம்மா
இணையவன்
அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.:100_pray::100_pray:
 
Link to comment
Share on other sites

16 hours ago, ரதி said:

ஈழத்தவர்கள் இப்படி சாமியார்,பூசை என்று போகின்றவர்களா?....சும்மா கோயிலுக்குப் போய் ஜயரைக் கொண்டு நூல் கட்டுறது தான் எனக்குத் தெரியும்

ஈழத்தில், தமிழர் உயிர்களையும் உடமைகளையும் சிங்களம் சூறையாட முதல்காரணமாக விளங்கும் புத்த பிக்குகளின் தாரக மந்திரம், "புத்தம் சரணம் கச்சாமி" என்று சாமியில் முடிவதால்.....! பிக்குகளை வெறுக்கும் ஈழத்தமிழர்களிடம் சாமிகளுக்கு வரவேற்புக் கிடைப்பதில்லை என்பது உண்மைதான். :shocked: :shocked:
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 3/19/2017 at 8:20 PM, நிலாமதி said:

இன்றைய காலத்தில் கள்ளச் சாமிகள் அதிகரித்துள்ள நிலையில், நிதர்சனத்தை உணராமல் பவானியம்மாள் போன்ற அப்பாவிகளின் பழைய நம்பிக்கையின் பிடிவாதத்தால்…. அவர்களும் ஏமாறி, எத்தனைபேர் ஏமாந்து சீரழிந்தார்களோ....! சீரழிவார்களோ....!நந்தினியின் கண்கள் பனித்தது

 

 நவீன  உலகின் இன்னும் இப்படி வாழ்கிறார்கள்   என் நினைக்க வேதனையாக   உள்ளது 

கனடா வரும்போதெல்லாம் .................
சாத்திர காரர்களின் விளம்பரங்களை அடிக்கடி காண்கிறேன்.

அப்போதெல்லாம் ..
இங்கு வந்தும் திருந்தாத கூடடத்திடம் 
அவங்கள் புடுங்குவதில் என்ன தப்பு?
 என்றுதான் எண்ணி கொள்வேன் ! 

உங்களுக்கு அடிக்கடி பார்ப்பதால் 
ஒரு வழமையான விடயமாக ஆகியிருக்கும். 

எனக்கு பெருத்த ஆச்சரியமாக இருக்கும். 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

ஏமாறுபவர்கள் இருக்குமட்டும் ஏமாற்றுபவர்களும் இருப்பார்கள். போலிச்சாமியார்கள், போலியான மதங்கள் எல்லாம் இன்னும் பெருகிக்கொண்டுதான் இருக்கின்றன.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாஞ்ச் பச்சை நகி ....இரவுக்கு அல்லது நாளை போடுகிறேன்.....எதற்கும் சாத்திரியிடம் கேட்டு பாருங்கோ என்னிடம் எத்தனை பச்சை இருக்கு என்று....சாமிமார் தொல்லை தாங்கமுடியவில்லை ...உங்கள் கதையை வாசித்த பின்பு எனக்கும் பார்ட் டைம் சாமியாக போகலாமோ என்று எண்ணம் வருகின்றது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாஞ்ச் இப்படியான நிறைய விடயங்கள் எங்கள சமூகத்திற்குள் இன்றுவரைக்கும் இடம்பெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன. மக்களின் அறியாமையையும் மூடநம்பிக்கைகளையும் பயன்படுத்தி கில்லாடித்தனம் பண்ணுபவர்களைத்தான் சனங்களும் நம்புகிறார்கள். தெளிவாக அவர்களின் நடவடிக்கைபற்றி எடுத்துரைத்தாலும் ஏற்றுக் கொள்ளாத ஒரு நிலையை நம்மவர்களிடம் காணக்கூடியதாக இருக்கிறது. வாழ்க்கையில் ஏற்படும் போராட்டங்களை எதிர்கொள்ளும் தைரியம் அற்றவர்கள் இப்படியான கபடச்சாமியார்களிடம் அகப்பட்டு பொருள்களை தன்னம்பிக்கையை இழந்து பிடிவாதக்கோழைகளாக மாறுவதைத் தவிர்க்கமுடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எப்பவும் பொய் பிரட்டு சொல்லும் ஆக்களுக்கு தான் மச்சமும் கூட (நான் சாமியாரை சொன்னன்)

Link to comment
Share on other sites

  • 11 months later...
  • கருத்துக்கள உறவுகள்

இன்று வேலைக்கு வரும்போது இந்தியர் இருவர்கள் (ஆண், பெண்) ஒரு விளம்பர அட்டையை வினியோகித்துக் கொண்டிருந்தார்.  இலங்கை, இந்தியர்கள், சீனர்களுக்கு மட்டுமே விநியோகிக்கப்பட்டிருந்தது. அதில் பிரபல பண்டீட் விஸ்வநாதன் , பென்டில்கில்லில் சோதிட சேவை வழங்குவதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. அதில் " குழந்தை இல்லாதவர்களுக்கும் ஆலோசனை வழங்குவார்" என்றும் இருந்தது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கருத்தை பார்த்து விட்டு அவரின் அடிப்பொடிகள் பிரஷர் குளுசையை போட்டு விட்டு படிக்க தொடங்குவது நல்லது 😀  ஸ்டாரட்  மியூசிக் .....   இவர் தமிழ்  அரசியலுக்கு வந்து தமிழர்களுக்கு ஒன்றுமே செய்யவில்லை மாறாக சிங்களத்தையும் சிங்கள போர்க்குற்ற படைகளையும் விசாரணையில் இருந்து விடுவித்து அதில் வேறை பெருமை கொண்டாடியவர் . தமிழர்களின் அரசியலை சின்னாபின்னமாக்கி தள்ளியவர் இனி இவர் லண்டன் பக்கம் வெள்ளை கொடியுடன் தான் வரணும் .
    • Published By: DIGITAL DESK 3 26 APR, 2024 | 10:28 AM   குரங்குகளின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த வளையம் வடிவிலான புதிய கருப்பை கருவியை பேராதனை பல்கலைக்கழகத்தில் உள்ள கால்நடை மருத்துவ பீடம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கருவி பெண் குரங்களின் கருப்பையில் கருவுறுவதை தடுக்கும் என தெரிவித்துள்ளது. கருவியை ஒருமுறை குட்டி ஈன்ற ஒன்றரை வயது பெண் குரங்கிற்கு சோதனைக்காக பயன்படுத்தப்பட்டது. சோதனையின் பின்னர் மேற்கொள்ளப்பட்ட கதிரியக்க பரிசோதனையில், கருப்பையில் பொருத்தப்பட்ட கருவி வெற்றிகரமாக செயல்பட்டுள்ளதை அவதானித்ததாக பேராதனை பல்கலைக்கழகத்தின் கால்நடை மருத்துவ பீடத்தைச் சேர்ந்த சிரேஷ்ட பேராசிரியர் அசோக தங்கொல்ல தெரிவித்தார். பெண்களுக்கு கர்ப்பம் தரிப்பதை தடுக்கும் நடைமுறையிலுள்ள சாதாரண அளவிலான கருவியை பயன்படுத்திய போது அது தோல்லி அடைந்தது. அதனால் சிறிய அளவிலான வளையத்தை உருவாக்க முடிவு செய்தோம் என தெரிவித்துள்ளார்.  பேராதனை போதனா வைத்தியசாலையின் மகப்பேறு மற்றும் நரம்பியல் திணைக்களத்தின் வைத்தியர்களும் பேராதனையிலுள்ள பல் வைத்திய பீடத்தினரும் இந்த முயற்சிக்கு தமது ஒத்துழைப்பை வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். “இந்த கருவியை பொறுத்த விலங்கை அமைதிப்படுத்த அரை மணி நேரம் எடுக்கும், அதைத் தொடர்ந்து அறுவை சிகிச்சைக்கு மற்றொரு அரை மணி நேரம் எடுக்கும். இந்த முறை நாட்டில் குரங்குகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளைக் கொண்டுள்ளது." என தெரிவித்துள்ளார். இந்த வளையம் வடிவிலான புதிய கருப்பை கருவியை உற்பத்தி செய்ய 2000 ரூபாய் செலவாகும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181987
    • 25 APR, 2024 | 07:33 PM   (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) சிரேஷ்ட பிரஜைகளுக்கான வட்டியை 15 வீதமாக வழங்க வேண்டுமானால் அரசாங்கம் மேலும்  40 பில்லியன் ரூபாவை அதற்காகச் செலுத்த நேரிடும். அரசாங்கத்தின் தற்போதைய நிதி நிலைமையைக் கவனத்தில் கொண்டு அது தொடர்பில் உரியக் கவனம் செலுத்தப்படும்  என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய  தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (25) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் தமது கேள்வியின் போது வங்கி வட்டி வீதங்கள் குறைக்கப்பட்டுள்ள நிலையில் சிரேஷ்ட பிரஜைகளுக்கான வங்கி வைப்புக்கான வட்டி வீதமும் குறைக்கப்பட்டுள்ளது. அதனை நம்பி வாழும் அவர்களின் வட்டி வீதத்தை அதிகரித்து வழங்க அரசாங்கம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். அது தொடர்பில்  இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், இக் காலங்களில் வங்கி வட்டி வீதம் தொடர்பில் பிரச்சினைகள் எழுந்துள்ளன. கடனுக்கான வட்டி அதிகரிக்கப்பட்டு வங்கி வைப்புக்கான வட்டியை 16 வீதத்திலிருந்து தற்போது தனி இலக்கத்திற்குக் கொண்டு வந்துள்ளோம். வைப்புக்களுக்கான வட்டியைக் குறைப்பது இயல்பாக இடம்பெறுகின்ற ஒன்று. அது தொடர்பில் சிரேஷ்ட பிரஜைகளும் சில பாதிப்புகளை எதிர்கொள்ள நேர்ந்துள்ளது. அதேவேளை, சிரேஷ்ட பிரஜைகள் முகம் கொடுக்கும் மற்றுமொரு பிரச்சினை ஒரு லட்சம் ரூபாவுக்கு குறைவாகப் பணத்தை வைப்புச் செய்வது. அவ்வாறான பிரச்சினைகளுக்கு நாம் நடவடிக்கை ஒன்றை எடுத்தோம். எனினும் அது சாத்தியப்படவில்லை. சிரேஷ்ட பிரஜைகளின் வங்கி வைப்புகளுக்கு வட்டி அதிகரிக்க வேண்டியது அவசியம். எனினும் அதற்கான நிதியை அரசாங்கமே ஒதுக்க வேண்டியுள்ளது. இவ்வாறான விடயங்களுக்காக ஏற்கனவே வங்கிக்கு அரசாங்கம் வழங்க வேண்டிய நிலுவை இன்னும் தொடர்கிறது.  நீண்ட காலமாக இவ்வாறு சிரேஷ்ட பிரஜைகளுக்கு அதிக வட்டியை வழங்குவதற்கு அரசாங்கமே வங்கிகளுக்கு நிதி வழங்கி வந்துள்ளது.  நூற்றுக்கு 15 வீதமாக அதனை வழங்க வேண்டுமானால் சுமார் 40 பில்லியன் ரூபாவை அரசாங்கம் அதற்காக ஒதுக்க வேண்டியுள்ளது. முன்னரை விட அதிகமான நிதியை இப்போது ஒதுக்க நேர்ந்துள்ளது. அந்த வகையில்  நாட்டின் தற்போதைய நிலையையும் கவனத்திற் கொண்டு எவ்வாறு இந்த நிலைமையைச் சரி செய்வது என்பது தொடர்பில் அரசாங்கம் அதிக கவனம் செலுத்தி வருகிறது என்றார். https://www.virakesari.lk/article/181967
    • அரைச்சதம் அடித்து வென்றபோதும் விமர்சிக்கப்படும் கோலி; ஆர்சிபி கேப்டன் கூறியது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES 26 ஏப்ரல் 2024, 03:06 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் கடந்த 6 போட்டிகள் முடிந்தபோதெல்லாம் ஆர்சிபி வீரர்கள் முகத்தில் சோகம், விரக்தி, நம்பிக்கையின்மை, டக்அவுட்டுக்கும் கவலையோடு சென்றனர், ஆர்சிபி ரசிகர்களும் சோகத்தோடு வீட்டுக்குப் புறப்பட்டனர். ஆனால், நிலைமை நேற்று தலைகீழாக மாறியது. ஆர்சிபி வீரர்கள், ரசிகர்கள் முகம் நிறைய மகிழ்ச்சி, புன்னகை மிதந்தது, வீரர்கள் ஒவ்வொருவரும் கட்டிஅணைத்து மிகழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர். காரணம், ஒரு மாதத்துக்குப்பின் கிடைத்த வெற்றி. ஒவ்வொரு ஆட்டத்தின் முடிவிலும் ஆர்சிபி அணியின் கேப்டன் டூப்பிளசிஸ் போட்டி முடிந்தபின் பேட்டியளிப்பது வழக்கம். ஆனால், ஒரு மாதத்துக்குப்பின் கிடைத்த வெற்றியால், கொண்டாட்டமனநிலையில் கேப்டன் டூப்பிளசிஸ் பேட்டியளிக்கவே மறந்துவிட்டார். சக வீரர்களுடன் வெற்றிக் கொண்டாட்டத்தை முடித்தபின்புதான் டூப்பிளசிஸ் சேனல்களைச் சந்தித்தார். ஹைதராபாத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 41-ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 35 ரன்களில் வீழ்த்தி ஒரு மாதத்துக்குப்பின் ஆர்சிபி அணி வெற்றியை ருசித்தது. முதலில் பேட் செய்த ஆர்சிபி அணி 7 விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் சேர்த்தது. 207 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் சேர்த்து 35 ரன்களில் தோல்வி அடைந்தது.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஆர்சிபிக்கு ப்ளே ஆஃப் வாய்ப்பு இன்னும் இருக்கிறதா? ஆர்சிபி அணி தொடர்ந்து 6 தோல்விகளைச் சந்தித்த நிலையில் இந்த வெற்றி அந்த அணிக்கு பெரிய ஊக்கமாகவும், நம்பிக்கையையும் அளித்துள்ளது. இந்த வெற்றியால் புள்ளிப்பட்டியலில் பெரிதாக மாற்றத்தை ஆர்சிபி ஏற்படுத்தவில்லை என்றபோதிலும், வீரர்களின் அணுகுமுறை, நம்பிக்கை, உற்சாகம் ஆகியவை அதிகரிக்கும். ஆர்சிபி அணி 9 போட்டிகளில் 2 வெற்றி, 7 தோல்விகள் என 4 புள்ளிகளுடன் 10-வது இடத்திலேயே நீடிக்கிறது. நிகர ரன்ரேட்டில் மைனஸ் 0.721 என்ற ரீதியில் இருக்கிறது. இந்த வெற்றியால் ஆர்சிபி அணி ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்கவைத்துள்ளது. அடுத்துவரும் 5 போட்டிகளிலும் ஆர்சிபி அணி தொடர் வெற்றிகள் பெறும்பட்சத்தில் , பிற அணிகளின் தோல்விகளும் சாதகமாக இருந்தால் ஆர்சிபி அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்ல முடியும். அதேசமயம், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இதுவரை 8 போட்டிகளில் 5 வெற்றி, 3 தோல்விகள் என 10 புள்ளிகளுடன் 3 - ஆவது இடத்திலேயே நீடிக்கிறது, நிகர ரன்ரேட்டில் 0.577 என்ற நிலையில் இருக்கிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES ஆர்சிபியின் வெற்றிக்குக் காரணம் என்ன? ஆர்சிபி அணிக்கு நேற்று கிடைத்த வெற்றி ஒரு தனிநபர் உழைப்பால் கிடைத்ததாகக் கூறமுடியாது. தொடக்கத்தில் ஆர்சிபி அணிக்கு கிடைத்த வாய்ப்பை நழுவவிடாமல் கடைசிவரை சன்ரைசர்ஸ் அணிக்கு கொடுத்த நெருக்கடியால் வெற்றி வசமானது. இதில் ஏதேனும் ஒரு கட்டத்தில் கேப்டன்ஷிப்பில் சுணக்கம் ஏற்பட்டிருந்தாலோ அல்லது, வீரர்களிடையே உற்சாகக் குறைவு ஏற்பட்டிருந்தாலோ ஆட்டம் கைமாறி இருக்கும். ஆர்சிபி அணி தங்களுக்கு கிடைத்த தருணத்தை தவறவிடாமல் கடைசிவரை எடுத்துச் சென்றதே வெற்றிக்கு முக்கியக் காரணம், பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங்கில் ஒவ்வொரு வீரர்களும் தங்களின் அதிகபட்ச பங்களிப்பை அளித்தனர். அதில் குறிப்பாக மெதுவான விக்கெட்டைக் கொண்ட மைதானத்தில் 19 பந்துகளில் அரைசதம் அடித்து ஆட்டமிழந்த ரஜத் பட்டிதார் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரின் கணக்கில் 2 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் அடங்கும். அதிலும் மயங்க் மார்க்கண்டே வீசிய 11வது ஓவரில் தொடர்ந்து 4 சிக்ஸர்களை பட்டிதார் பறக்கவிட்டு அரைசத்ததை நிறைவு செய்தார். பட்டிதாரின் ஸ்ட்ரைக் ரேட் 250 ஆக இருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES பொறுமையாக ஆடிய கோலி விராட் கோலியும் அரைசதம் அடித்தார். ஆனாலும் அவர் மீது சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்தன. கோலி ஆட்டமிழந்தபோது 43 பந்துகளில் 51 ரன்கள் சேர்த்திருந்தார். இதில் ஒரு சிக்ஸர், 4 பவுண்டரி, ஸ்ட்ரைக் ரேட் 118.60 ஆக இருந்தது. விராட் கோலி தனது இருப்பை ஆட்டம்முழுவதும் வைத்திருக்கும் நோக்கில் டி20 போட்டி என்பதையே மறந்துவிட்டு பேட் செய்கிறாரா என்று ரசிகர்கள் விமர்சித்தனர். விராட் கோலி பவுண்டரி, சிக்ஸர் அடிக்க வேண்டிய பந்துகளில் கூட ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்கிறேன் எனக் கூறிக்கொண்டு ஒரு ரன், 2 ரன்கள் எடுத்தார் என ரசிகர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. அது மட்டுமல்லாமல் விராட் கோலி வீணாக்கிய பந்துகளால் ஆர்சிபி அணியின் ஸ்கோர் 20 முதல் 30 ரன்கள் குறைந்துவிட்டது என்றும் விமர்சிக்கப்படுகிறது. இந்த ஆட்டத்தில் ஆர்சிபி அணியில் அரைசதம் அடித்திருந்தபோதிலும் ஸ்ட்ரைக் ரேட் குறைவாக வைத்திருந்த ஒரே பேட்டர் கோலி மட்டும்தான். கேப்டன் டூப்பிளசிஸ் தொடக்கத்தில் சிறிய கேமியோ ஆடி 12 பந்துகளில் 25 ரன்கள் சேர்த்து 250 ஸ்ட்ரைக் ரேட்டில் பேட் செய்து ஆட்டமிழந்தார். கேமரூன் க்ரீன் 20 பந்துகளில் 37 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இவரின் ஸ்ட்ரைக் ரேட் 185 ஆக இருந்தது. கடைசி வரிசையில் களமிறங்கிய மகிபால் லாம்ரோர், தினேஷ் கார்த்திக், ஸ்வப்னில் சிங் ஆகிய 3 பேரின் ஸ்ட்ரைக் ரேட்டும் 175க்கு அதிகமாகவே இருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES பந்துவீச்சில் பொறுப்புணர்வு ஆர்சிபி அணி பந்துவீச்சாளர்கள் நேற்றைய ஆட்டத்தில் கட்டுக்கோப்பாகப் பந்துவீசினர். முகமது சிராஜ் வழக்கமாக ரன்களை வாரி வழங்கும் நிலையில் 4 ஓவர்கள் வீசி 20 ரன்கள்தான் கொடுத்தார். யாஷ் தயால் 3 ஓவர்கள் வீசி 18 ரன்கள் ஒருவிக்கெட், கரன் ஷர்மா 4 ஓவர்கள் வீசி 29 ரன்கள் கொடுத்து 2 விக்கெட், கேமரூன் க்ரீன் 2 ஓவர்கள் வீசி 12 ரன்களுடன் 2 விக்கெட் என 6 ரன்ரேட்டுக்குள் கட்டுக்கோப்பாக பந்துவீசினர். ஸ்வப்னில் சிங், பெர்குஷன், ஜேக்ஸ் மட்டுமே இரட்டை இலக்க ரன்ரேட் வைத்திருந்தனர். மற்ற பந்துவீச்சாளர்கள் கட்டுக்கோப்புடன் பந்துவீசியது வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தது. வெற்றி கிடைக்காவிட்டால் என்ன நடந்திருக்கும்? ஆர்சிபி அணியின் கேப்டன் டூப்பிளசிஸ் கூறுகையில் “ ஒவ்வொரு போட்டி முடிந்தபின்பும் பேட்டியளிப்பேன் ஆனால் இன்று மறந்துவிட்டேன். காரணம் 6 போட்டிகள் தோல்விக்குப்பின் கிடைத்த வெற்றிதான். கடந்த போட்டிகளில் எல்லாம் நாங்கள் வெற்றிக்கு அருகே வந்துதான் அதை அடையமுடியாமல் தோற்றோம். கொல்கத்தா அணியுடன் ஒரு ரன்னில் வெற்றியை இழந்தோம். எங்களால் வெற்றி பெற முடியும் கடைசி நேரத்தில் ஏதோ தவறு நடக்கிறது என்பதை புரிந்துகொண்டோம். இதுபோன்ற நெருக்கடியான நேரத்தில் கிடைக்கும் வெற்றிதான் வீரர்களுக்கு நம்பிக்கையளிக்கும். இந்த வெற்றி எங்களுக்கு மகத்தானது.” “இந்தவெற்றி கிடைக்காவிட்டால் வீரர்கள் மனதளவில் பாதிக்கப்பட்டிருப்பார்கள், நம்பிக்கையை ஒட்டுமொத்தமாக குலைத்திருக்கும். நம்பிக்கையை பற்றி ஓய்வறைக்குள் பேசவே முடியாது, போலியான நம்பிக்கையை வீரர்களிடம் செலுத்த முடியாது. களத்தில் நமது செயல்பாடுதான் நம்பிக்கையை ஏற்படுத்தும். போட்டித்தொடரின் முதல்பாதியில் நம்முடைய முழுதிறமைக்கும் விளையாடவில்லை என்று நினைத்தோம். 50சதவீதம் முதல் 60 சதவீதத்தை வெளிப்படுத்தனால், உங்களால் நம்பிக்கையைப் பெற முடியாது. கடந்த வாரம் முழுவதும் நாங்கள் அனைவரும் கடினமாக பயிற்சி செய்தோம், உழைத்தோம், சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த திட்டமிட்டோம்.” “ரஜத் பட்டிதார் தொடர்ந்து இரு அரைசதங்களை விளாசியுள்ளார். கிரீன் தேவையான கேமியோ ஆடினார். சின்னசாமி அரங்கு எங்களுக்கு மிகப்பெரிய மனவேதனையை அளித்தது. அதுபோன்ற சிறிய மைதானத்தில் பந்துவீசுவது பந்துவீச்சாளர்களுக்கு கடினமான பணி. கரன் சர்மா அவரின் திறமையை வெளிப்படுத்த ஒரு தளம் தேவைப்பட்டது, அதற்கு இந்தப் போட்டி உதவியது. எங்களிடம் தற்போது லெக் ஸ்பின்னரும் இருக்கிறார்” எனத் தெரிவித்தார் பட மூலாதாரம்,GETTY IMAGES சன்ரைசர்ஸ் பலவீனத்தை அம்பலமாக்கிய ஆர்சிபி சன்ரைசர்ஸ் அணி இந்த சீசனில் இதற்கு முன் பெற்ற வெற்றிகள் அனைத்தும் முதலில் பேட் செய்து மிகப்பெரிய ஸ்கோரை எட்டி, எதிரணியை திக்குமுக்காடச் செய்து பெற்றவையாகும். சேஸிங் செய்து சன்ரைசர்ஸ் அணி வெற்றி பெற்றது குறைவுதான். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் 207 ரன்கள் இலக்கு வைத்து சன்ரைசர்ஸ் அணியை சேஸிங் செய்ய அழைத்தபோது அந்த அணியின் பலவீனத்தை ஆர்சிபி அணி வெளிப்படுத்திவிட்டது. அதாவது மிகப்பெரிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டால், சன்ரைசர்ஸ் பேட்டர்களும் பதற்றத்தில் சொதப்புகிறார்கள் என்பதை வெளிப்படுத்திவிட்டது. ஹைதராபாத் ஆடுகளம் சன்ரைசர்ஸ் அணிக்கு சொந்த மைதானம். பேட்டிங்கிற்கு சொர்க்கபுரியான இந்த மைதானத்தில்தான் சன்ரைசர்ஸ் அணி மிகப்பெரிய ஸ்கோரையும் எட்டியுள்ளது. அப்படி இருந்தும் நேற்றைய ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் அணி தோற்றதற்கு சேஸிங்கை கையில் எடுத்ததுதான் என்று ஆர்சிபி வெளிப்படுத்தியுள்ளது. அடுத்துவரும் ஆட்டங்களில் சன்ரைசர்ஸ் அணி ஒருவேளை டாஸில் தோற்றால், எதிரணிகள் பேட்டிங் செய்து, சன்ரைசர்ஸ் அணியை சேஸிங் செய்யவைத்து நெருக்கடி கொடுக்கும் வியூகத்தை கையில் எடுக்கலாம். பட மூலாதாரம்,GETTY IMAGES சன்ரைசர்ஸ் பேட்டர்களை எவ்வாறு சுருட்டுவது என கேப்டன் டூப்பிளசிஸ் பல உத்திகளைப் பயன்படுத்தினார். முதல் ஓவரிலேயே ஜேக்ஸை பந்துவீசச் செய்து டிராவிஸ் ஹெட் விக்கெட் வீழ்த்தப்பட்டது, அடுத்து ஸ்வப்னில் சிங் மூலம் ஒரே ஓவரில் கிளாசன், மார்க்ரம் என இரு ஆபத்தான பேட்டர்கள் பெவிலியனுக்கு அனுப்பப்பட்டனர். கிளாசன் இமாலய சிக்ஸர் அடித்த நிலையில் அடுத்த பந்தில் விக்கெட்டை இழந்தார். மார்க்ரம் ஃபுல்டாஸ் பந்தில் கால்காப்பில் வாங்கி வெளியேறினார். அபிஷேக் சர்மா விக்கெட்டை யாஷ் தயாலும், நிதிஷ் ரெட்டி விக்கெட்டை கரண் சர்மாவும் எடுக்கவே சன்ரைசர்ஸ் பேட்டிங் வரிசை ஆட்டம் கண்டது. பவர்ப்ளே ஓவருக்குள் சன்ரைசர்ஸ் அணி 4 விக்கெட்டுகளை இழந்தது, 10 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை சன்ரைசர்ஸ் இழந்து தடுமாறியது. பாட்கம்மின்ஸ் கேமியோ ஆடி 31 ரன்கள் சேர்த்து க்ரீன் பந்துவீச்சிலும், புவனேஷ்வர் குமார் 13 ரன்னில் க்ரீன் பந்துவீச்சிலும் ஆட்டமிழந்தனர். ஷாபாஸ் அகமது மட்டும் 40 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அடுத்தடுத்து விக்கெட் சரிவு, பெரிய இலக்கு ஆகியவை சன்ரைசர்ஸ் அணியை மேலும் நெருக்கடிக்குள் தள்ளி, தோல்வியடையச் செய்தது.   பட மூலாதாரம்,GETTY IMAGES பட்டிதார் அளித்த உத்வேகம் ஆர்சிபி அணி பெரிய ஸ்கோரை எட்டுவோம் என்ற நோக்கத்தில் ஆட்டத்தைத் தொடங்கியது, புவனேஷ்வர், கம்மின்ஸ் வீசிய ஓவர்களை அதிரடியாக அடித்த கேப்டன் டூப்பிளசிஸ் பவுண்டரி, சிக்ஸர் விளாசினார். 3ஓவர்களில் 43 ரன்கள் என பெரிய ஸ்கோர் சென்றது. ஆனால், நடராஜன் பந்துவீச்சில் டூப்பிளசிஸ் 25 ரன்களில் ஆட்டமிழந்தவுடன் ரன்ரேட் குறையத் தொடங்கியது. ஷாபாஸ் சுழற்பந்துவீச்சில் கோலி வழக்கம்போல் மெதுவாக ஆடத் தொடங்கினார். பவர்ப்ளே ஓவர்கள் முடிவில் ஆர்சிபி ஒரு விக்கெட் இழப்புக்கு 61 ரன்கள் சேர்த்தது. தொடக்கத்தில் வேகமாக பேட்டை சுழற்றிய கோலி 11 பந்துகளில் 23 ரன்கள் சேர்த்தார், அதன்பின், 32 பந்துகளில் கோலி 28 ரன்கள் மட்டுமே சேர்த்தார். ஜேக்ஸ் 6 ரன்னில் மார்க்கண்டே பந்துவீச்சில் ஆட்டமிழந்தபின் பட்டிதார் களமிறங்கினார். பட்டிதார் களத்துக்கு வந்தபின்புதான் ஆர்சிபியின் ஸ்கோர் எகிறத் தொடங்கியது. வேகப்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக 125 ஸ்ட்ரைக்ரேட்டிலும், சுழற்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக 197 ஸ்ட்ரைக் ரேட்டிலும் பட்டிதார் ஆடி ரன்களைச் சேர்த்தார். அதிலும் மார்க்கண்டே வீசிய 11-வது ஓவரில் தொடர்ந்து 4 சிக்ஸர்களை விளாசிய பட்டிதார் 19 பந்துகளில் அரைசதம் அடித்தார். கேமரூன் நடுவரிசையில் களமிறங்கி தேவையான ஒரு கேமியோ ஆடி ஸ்கோரை உயர்த்தினார். குறிப்பாக கேப்டன் கம்மின்ஸ் பந்துவீச்சில் கேமரூன் 4 பவுண்டரிகளை விளாசி 20 பந்துகளில் 37ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த சீசனில் சிறப்பாக பேட் செய்து வரும் டிகே 11 ரன்னில் ஆட்டமிழந்தார். ஸ்வப்னில் சிங் 12 ரன்னில் விக்கெட்டை இழந்தார். https://www.bbc.com/tamil/articles/c80z102przro
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.