Jump to content

பனை,தென்னை மரங்களில் கள் இறக்க வருகிறது தடை


Recommended Posts

பனை,தென்னை மரங்களில் கள் இறக்க வருகிறது தடை

பனை,தென்னை மரங்களில் கள் இறக்க வருகிறது தடை

பனை, தென்னை மரங்­க­ளில் இருந்து கள் இறக்­கு­வ­தற்கு தடை விதிக்­கும் சட்­டத் திருத்­தம் ஒன்றை அறி­வித்­தி­ருக்­கி­றது அரசு.

இது தொடர்­பான வர்த்­த­மானி அறி­வித்­தல் கடந்த 20ஆம் திகதி விடுக்­கப்­பட்­டி­ருக்கி­றது.

உத்­தேச புதிய சட்­டத்­தின்­படி கித்­துள் மரம் தவிர்ந்த வேறு எந்­த­வொரு மரத்­தில் இருந்­தும் கள் சீவு­வதோ, எடுப்­பதோ, இறக்­கு­வதோ தடை செய்­யப்­ப­டு­கி­றது.

இந்­தச் சட்­டம் நடை­மு­றைக்கு வந்­தால் வடக்­கில் மட்­டும் சீவல் தொழிலை நம்­பி­யி­ருக்­கும் 12 ஆயி­ரம் குடும்­பங்­கள் பாதிக்­கப்­ப­டும் என்று பனை, தென்னை வள அபி­வி­ருத்­திக் கூட்­டு­ற­வுச் சங்­கங்­க­ளின் வலி­கா­மம் கொத்­த­ணி­யின் தலை­வர் எஸ்.செல்­வ­ராசா தெரி­வித்­தார்.

மது­வ­ரித் திருத்­தச் சட்ட வரைவு என்ற வகை­யில் இந்­தத் திருத்­தம் கொண்டு வரப்­பட்­டுள்­ளது. இதற்கு முன்­னர் கித்­துள், பனை, தென்னை தவிர்ந்த வேறு எந்த மரத்­தில் இருந்­தும் கள்ளு சீவு­வது, எடுப்­பது, இறக்­கு­வது தடை­செய்­யப்­பட்­டுள்­ளது என்று இருந்­தது.

இப்­போது பனை மற்­றும் தென்னை மரங்­க­ளின் பெயர்­கள் அதி­லி­ருந்து நீக்­கப்­பட்­டுள்­ளன.

இந்­தச் சட்­டத் திருத்­தம் நிறை­வேற்­றப்­பட்­டால் அடுத்த வரு­டம் ஜன­வரி மாதம் முதல் அது நடை­மு­றைக்­கு­வ­ரும்.

பனை, தென்னை மரங்­க­ளில் இருந்து கள்­ளுச் சீவு­வ­தற்­குத் திடீ­ரெ­னத் தடை விதிக்­கப்­பட்ட இருக்­கின்­ற­மைக்­கான கார­ணம் என்ன என்­பது அர­சால் தெளி­வு­ப­டுத்­தப்­ப­ட­வில்லை.

அர­சின் இந்த நட­வ­டிக்கை ஓர் இன­வாத நட­வ­டிக்கை என்ற விமர்­ச­னங்­க­ளும் முன்­வைக்­கப்­ப­டு­கின்­றன.

கித்­துள் மரங்­கள் வடக்கு கிழக்­குக்கு வெளியே, குறிப்­பா­கச் சிங்­கள மக்­கள் வாழும் இடங்­க­ளி­லேயே இருக்­கின்­றன.

பனை, தென்னை மரங்­கள் தமி­ழர்­கள் அதி­கம் வாழும் வடக்கு, கிழக்­குப் பகு­தி­க­ளி­லேயே அதி­கம் இருக்­கின்­றன.

இத­னால் இந்த நட­வ­டிக்கை தமி­ழர்­க­ளின் வாழ்­வா­தா­ரத்­தைப் பாதிப்­ப­தற்­கா­கத் திட்­ட­மிட்டு அரசு மேற்­கொள்­ளும் ஒரு செயல் என்று விமர்­சிப்­ப­வர்­கள் கூறு­கின்­றார்­கள்.

‘‘வடக்­கில் பனை, தென்னை மரங்­க­ளில் இருந்தே காலம் கால­மாக கள்ளு உற்­பத்தி செய்­கி­றோம். இதனை நம்பி 12 ஆயி­ரம் குடும்­பங்­கள் வாழ்­கின்­றன. சட்­டம் நடை­மு­றைக்கு வந்­தால் அது இந்­தக் குடும்­பங்­களை நடுத்­தெ­ரு­வுக்­குக் கொண்டு வந்­து­வி­டும். எனவே இது குறித்து பனை தென்னை வள கூட்­டு­ற­வுச் சங்­கங்­களை அழைத்து ஆரா­ய­வுள்­ளோம்’’ என்று உத­யன் பத்­தி­ரி­கை­யி­டம் தெரி­வித்­தார் எஸ்.செல்­வ­ராசா.

இந்­தப் பிரச்­சினை தமிழ் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளின் கவ­னத்­திற்­குக் கொண்­டு­வந்து, நாடா­ளு­மன்­றத்­தில் சட்­டத் திருத்­தத்­திற்கு எதி­ராக அவர்­க­ளைக் குரல் கொடுக்­கக் கோரப்­போ­கி­றார் என­வும் அவர் தெரி­வித்­தார்.

http://newuthayan.com/story/41681.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இயற்கை மதுபானங்களை தவிர்த்து.. எல்லாரும் வரிகொண்டு வரும்.. உள்நாட்டு.. வெளிநாட்டு.. சாராயங்களை குடித்து.. அழிந்து போகத்தான்.  அமைச்சர்களுக்கும்.. அவைட ஆக்களுக்கும் கமிசன் வந்தால் சரி.  

நல்ல அரசு.. சொறீலங்கா அரசு. :rolleyes:

இந்தத் தடையில் இருந்து வடக்குக் கிழக்கு மாகாணங்கள் விலக்குக் கோர வேண்டும். மாறாக இயற்கை அல்லாத.. செயற்கை வடிகட்டி முறை தயாரிப்பு.. சாராயத்துக்கு அவை முற்றாக தடை விதிக்க வேண்டும். புகைப்பிடிப்பதை பொது இடங்களில்.. மற்றும்.. போக்குவரத்தில் தடை செய்ய வேண்டும். tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, nedukkalapoovan said:

இயற்கை மதுபானங்களை தவிர்த்து.. எல்லாரும் வரிகொண்டு வரும்.. உள்நாட்டு.. வெளிநாட்டு.. சாராயங்களை குடித்து.. அழிந்து போகத்தான்.  அமைச்சர்களுக்கும்.. அவைட ஆக்களுக்கும் கமிசன் வந்தால் சரி.  

நல்ல அரசு.. சொறீலங்கா அரசு. :rolleyes:

இந்தத் தடையில் இருந்து வடக்குக் கிழக்கு மாகாணங்கள் விலக்குக் கோர வேண்டும். மாறாக இயற்கை அல்லாத.. செயற்கை வடிகட்டி முறை தயாரிப்பு.. சாராயத்துக்கு அவை முற்றாக தடை விதிக்க வேண்டும். புகைப்பிடிப்பதை பொது இடங்களில்.. மற்றும்.. போக்குவரத்தில் தடை செய்ய வேண்டும். tw_blush:

நடக்காத ஒன்றை நீங்கள் ஏன் சிபாரிசு செய்யுறியள் 

எங்களுக்கு அரச மதுபான நிலையங்கள் இருக்கிறது  ஆனால் கோவில் வேள்விகளுக்கு மட்டும் தடை விதித்தோம் இப்ப இதுக்கு இன்னும் பொறுங்க நாங்க சேலை கட்டாமல் வெள்ளக்காரன் ரேஞ்சில திரிவம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, தனிக்காட்டு ராஜா said:

நடக்காத ஒன்றை நீங்கள் ஏன் சிபாரிசு செய்யுறியள் 

எங்களுக்கு அரச மதுபான நிலையங்கள் இருக்கிறது  ஆனால் கோவில் வேள்விகளுக்கு மட்டும் தடை விதித்தோம் இப்ப இதுக்கு இன்னும் பொறுங்க நாங்க சேலை கட்டாமல் வெள்ளக்காரன் ரேஞ்சில திரிவம் 

பகிடி என்ன என்றால்.. எங்கட கலாசார நிகழ்வுகளில் வெள்ளை சேலை கட்டுது. எங்கட ஆக்களின் வாரிசுகள்.. சிலது.. அதைத் தவிர்க்குது. அதிலும் கொழும்பு வாழ் தமிழ் பெண்கள்.. நிலைமை கவலைக்கிடம். tw_blush::rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதை தடை செய்வதனால் வெளிநாட்டு சரக்கு குடிப்பவர்கள் அதிகரிப்பர்கள் என கூறமுடியாது.

குடிமக்கள் விதம் விதமாக குடிக்க ஆசைப்படுவார்கள். அவர்களுக்கு இயற்கையோ செயற்கையோ போதை ஏறினால் சரி.

Link to comment
Share on other sites

கள் கீழ் இறக்கத்தானே தடை. கள்ளு குடிக்க விருப்பமான ஆட்கள் மரத்திலயே ஏறி குடிக்கலாமோ? குடிச்சபிறகு கீழ கவனமாய் வந்தால் சரி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, கலைஞன் said:

கள் கீழ் இறக்கத்தானே தடை. கள்ளு குடிக்க விருப்பமான ஆட்கள் மரத்திலயே ஏறி குடிக்கலாமோ? குடிச்சபிறகு கீழ கவனமாய் வந்தால் சரி.

முன்பெல்லாம் இப்படி இல்லை, கே.கே.எஸ் சுக்கு போய் முட்டியோடு பணையைப் பார்த்ததில் இருந்து குருஜி ஒரு மார்க்கமாய்த்தான் இருக்கிறார்.....!  tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, colomban said:

இதை தடை செய்வதனால் வெளிநாட்டு சரக்கு குடிப்பவர்கள் அதிகரிப்பர்கள் என கூறமுடியாது.

குடிமக்கள் விதம் விதமாக குடிக்க ஆசைப்படுவார்கள். அவர்களுக்கு இயற்கையோ செயற்கையோ போதை ஏறினால் சரி.

கள்  இறக்க தடை என்றால்... தமிழனின் பனைக்கும், தென்னைக்கும்  தடை விதித்து விட்டு, சிங்களவனின் கித்துள் மரத்துக்கு விலக்கு  அளிப்பதில் இருந்தே, இவர்கள் யாரை குறி வைத்துள்ளார்கள் என்று தெரிகின்றது. 

தமிழ்நாட்டிலும்... கள்  இறக்க தடை விதித்து  விட்டு, 
தி.மு.க. காரன்  4 மது ஆலைகளையும் , அ. தி.மு.க.  5 மது ஆலைகளையும் நடத்தி பெரும் பணம் சம்பாதிக்கின்றார்கள்.

Link to comment
Share on other sites

தமிழர்களுக்குப் பாதிப்பு?
 

-எம்.றொசாந்த்

“கள் சீவுவதற்காக விதிக்கப்படவுள்ள தடை அமுலுக்கு வந்தால், வடக்கில் சீவல் தொழிலை தமது வாழ்வாதாரமாகக் கொண்டுள்ள 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள், தமது வாழ்வாதாரத்தை இழக்க நேரிடும்” என, பனை தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கங்களின் வலிகாமம் கொத்தணியின் தலைவர் எஸ் செல்வராசா தெரிவித்துள்ளார்.

கித்துள் மரம் தவிர்ந்த பனை மற்றும் தென்னை மரம் உள்ளிட்ட ஏனைய மரங்களில் இருந்து கள் சீவவோ, இறக்கவோ முடியாது என, புதிய மதுவரித் திருத்தச் சட்டமூலத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. அது தொடர்பிலான அறிவித்தல், கடந்த 20ஆம் திகதி வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,

“குறித்த சட்டத்திருத்தம் நிறைவேற்றப்பட்டால், எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் சட்டம், நடைமுறைக்கு வரும். அதனால், வடக்கு - கிழக்கு மக்கள், பெரும் பாதிப்புக்கு உள்ளாகுவார்கள்.

“கித்துள் மரம், சிங்கள மக்கள் வாழும் பிரதேசங்களில் மாத்திரமே உள்ளன. வடக்கு, கிழக்கில் பனை தென்னை மரங்களே உள்ளன. இந்நிலையில், பனை, தென்னை மரங்களில் கள் சீவுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டால், அது முற்றாக, தமிழ் மக்களையே பாதிக்கும். எனவே, இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கவனத்தில் எடுத்து, குறித்த சட்டத்திருத்தத்துக்கு எதிராக நாடாளுமன்றத்தில் குரல் எழுப்ப வேண்டும்” என்றார்.

http://www.tamilmirror.lk/யாழ்ப்பாணம்/தமிழர்களுக்குப்-பாதிப்பு/71-206283

Link to comment
Share on other sites

9 hours ago, நவீனன் said:

தென்னை மரங்­கள் தமி­ழர்­கள் அதி­கம் வாழும் வடக்கு, கிழக்­குப் பகு­தி­க­ளி­லேயே அதி­கம் இருக்­கின்­றன.

http://newuthayan.com/story/41681.html

சிங்கள பகுதிகளில் தென்னை மரங்கள் குறைவா? அவர்கள் தேங்காயை நம்பத்தானே கிரி பத் முதல் எல்லா உணவுகளும் சமைக்கிறார்கள்? மேலும் கொப்பரா, தேங்காய் எண்ணய்] என்று ஏற்றுமதி செய்கிறார்கள்?

கருப்பநீர் மற்றும் பனங்கட்டி ஆகியவற்றையும் சீனி தயாரிப்புக்கும் தடையா?
சாராயம் தயாரிக்க கள்ளு தானே தேவை? இலங்கை சாராயம் தயாரிப்பதையும் ஏற்றுமதி செய்வதையும் நிறுத்துமா?

இந்த செய்தியில் எதோ தவறு இருக்கிறது.

Link to comment
Share on other sites

இதை மாகாண அரசு பார்த்து கொள்ளும்.    

Link to comment
Share on other sites

1 hour ago, நேசன் said:

இதை மாகாண அரசு பார்த்து கொள்ளும்.    

மத்திய அரசு முடிவு எடுக்கும் போது மாகாண அரசு என்ன செய்ய முடியும்??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தச்செய்தி ஏதோ இடக்குமுடக்கு போலை தெரியுது. நம்பேலாமல் கிடக்கு.. :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, குமாரசாமி said:

இந்தச்செய்தி ஏதோ இடக்குமுடக்கு போலை தெரியுது. நம்பேலாமல் கிடக்கு.. :rolleyes:

எனக்கும் அப்படித்தான் தெரியுது ..
ஆனால் நடப்பது நல் ஆட்சி என்பதால்தான் 
கொஞ்சம் யோசனையா இருக்கு.
நேரா குத்த மாட்டங்கள் ....
இப்பிடி குழி பறிக்கிற வேலைதான் செய்வாங்கள் 
செய்கிறார்கள்.
எங்கட சம் சும் கோஸ்டியே அவங்களுக்கு பிளான் போட்டு கொடுக்கும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, குமாரசாமி said:

இந்தச்செய்தி ஏதோ இடக்குமுடக்கு போலை தெரியுது. நம்பேலாமல் கிடக்கு.. :rolleyes:

கள்ளை தடை செய்தால்.. பதனீர் சார்ந்த பொருட்கள் உற்பத்தியாவது தடையாகும். கித்துள் வெல்லத்துக்கும் கள்ளுக்கும் விலை கிடைக்கும். வெளிநாட்டுக்குப் போகும்.  வடிகட்டிச் சாராயம் விற்பனை அதிகமாகும்.. வரி வசூலாகும். தமிழர்கள் ஈரல் அழிஞ்சு சாவார்கள்..

இன அழிப்பை இப்படியும் தொடரலாம்... ஷெல் பொம்பர் கிபீர் கன்போர்ட் ஆட்லறி தான் அடிச்சுக் கொல்லனும் என்றில்லை. 

ஒரு காலத்தில்.. யாழ் நகர் மீது பீக்குண்டு வீசினவன் தானே சிங்களவன். அதையே இப்ப சிரியா காரன் செய்திருந்தால்.. அமெரிக்கன் ஐயோ பைலாஜி ஆயுதம் பாவிச்சிட்டாங்கள் என்று 40 ஏவுகணையை வீசித் தாக்கி விடுவான். :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களவன் சும்மா இருக்க மாட்டானே!

அவன் யாழ்ப்பாணம் வாறதே கள்ளுக்காகத் தானே!

அவங்களும் கித்துள் கள் இறக்குபவர்கள் தானே!

இந்தச் செய்தி சரியானது போல எனக்கும் தெரியவில்லை!

 

நாளைக்குக் கடலில் இறங்கி மட்டி பொறுக்கக் கூடாது என்று சொன்னால்....சனம் என்ன செய்யிறது?

12 hours ago, colomban said:

இதை தடை செய்வதனால் வெளிநாட்டு சரக்கு குடிப்பவர்கள் அதிகரிப்பர்கள் என கூறமுடியாது.

குடிமக்கள் விதம் விதமாக குடிக்க ஆசைப்படுவார்கள். அவர்களுக்கு இயற்கையோ செயற்கையோ போதை ஏறினால் சரி.

இது மிகவும் தவறான ஒரு கருத்து!

எனக்கு ஊரில் கன பேரைத் தெரியும்!

இதில் பெண்களும் அடக்கம்!

கள்ளு ஒகே..! 

ஆனால் 'வெட்டிரும்பு'.....நோ....!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, புங்கையூரன் said:

சிங்களவன் சும்மா இருக்க மாட்டானே!

அவன் யாழ்ப்பாணம் வாறதே கள்ளுக்காகத் தானே!

அவங்களும் கித்துள் கள் இறக்குபவர்கள் தானே!

இந்தச் செய்தி சரியானது போல எனக்கும் தெரியவில்லை!

 

நாளைக்குக் கடலில் இறங்கி மட்டி பொறுக்கக் கூடாது என்று சொன்னால்....சனம் என்ன செய்யிறது?

இது மிகவும் தவறான ஒரு கருத்து!

எனக்கு ஊரில் கன பேரைத் தெரியும்!

இதில் பெண்களும் அடக்கம்!

கள்ளு ஒகே..! 

ஆனால் 'வெட்டிரும்பு'.....நோ....!

தெய்வம் நேரடியாயே விசயத்துக்கு வந்துட்டுது.....tw_blush:

எனிவே போராட்டம் நடக்க வெளிக்கிட்டால் கனபேரை சந்திக்கலாம்.:grin:

Link to comment
Share on other sites

12 hours ago, suvy said:

முன்பெல்லாம் இப்படி இல்லை, கே.கே.எஸ் சுக்கு போய் முட்டியோடு பணையைப் பார்த்ததில் இருந்து குருஜி ஒரு மார்க்கமாய்த்தான் இருக்கிறார்.....!  tw_blush:

குருஜி நாங்கள் ஓலையை மட்டும்தான் தூக்கி அணைப்பது. கள்ளு நமக்கு ஆகாது. முன்பு எமது பனங்காணியில் வெட்டி வீழ்த்தப்பட்ட பச்சை ஓலைகளை நான்கு ஐந்தை ஒன்றாக கட்டி தலையில் வைத்துக்கொண்டு வீட்டுக்கு காவிச்சென்று பின்னர் அவற்றை கிழித்து மாட்டுக்கு போடும் வேலை செய்யவேண்டும். அப்போதுதான் அப்பா வெளியில் சென்று விளையாடுவதற்கு அனுமதி தருவார். அது எல்லாம் ஒரு பொற்காலம்!

wcbvk4.jpg

Link to comment
Share on other sites

கள் இறக்­கு­வ­தற்­கான   தடைக்கு கண்­ட­னம்!

சமூக வலைத் தளங்­க­ளில் இளை­ஞர்­கள் கொதிப்பு

கள் இறக்­கு­வ­தற்­கான   தடைக்கு கண்­ட­னம்!

பனை மற்­றும் தென்னை மரங்­க­ளி­லி­ருந்து கள் இறக்­கு­வ­தற்குத் தடை விதிப்­ப­தற்கு ஏற்­பாடு செய்­யும் அர­சின் முயற்­சிக்கு சமூக வலைத் தளங்­க­ளில் நேற்­றுப் பர­வ­லான எதிர்ப்­புக் கருத்­துக்­கள் முன்­வைக்­கப்­பட்­டன. இன­ரீ­தி­யான பாகு­பா­டான செயற்­பாடு என்று கடும் கண்­ட­னம் முன்­வைக்­கப் பட்­டது.

2018ஆம் ஆண்­டி­லி­ருந்து கித்­துள் மரத்­தி­லி­ருந்தே கள் இறக்கலாம் என்று மது­வ­ரிச் சட்­டத்­தில் திருத்­தம் முன்­வைத்­துள்­ளது அரசு. இதன் மூலம் இது­வ­ரை­யில் நடைமுறை யில் இருந்து வந்த பனை, தென்னை மரங்­க­ளில் இருந்து கள் இறக்­கப்­ப­டு­வ­தற்­கான அனு­ம­தியை நீக்­கி­யுள்ளது.

இது தொடர்­பான வர்த்­த­மானி கடந்த 20ஆம் திகதி வெளி­யி­டப்­பட்­டது. இந்­தச் சட்­டம் நடை­மு­றைக்கு வரு­மாக இருந்­தால் வடக்­கில் மாத்­தி­ரம் 12ஆயி­ரம் குடும்­பங்­க­ளின் வாழ்­வா­தா­ரம் கேள்­விக்­கு­றி­யா­கும் என்று பனை, தென்னை வள நிறு­வ­னங்­கள் சுட்­டிக்­காட்­டு­கின்­றன.

அர­சின் இந்­தச் செயற்­பாட்­டுக்கு இளை­யோர் பல­ரும் தமது கண்­டன, எதிர்ப்­புக் குரல்­களை சமூ­க­வ­லைத் தளங்­க­ளில் நேற்று ஆக்­ரோ­ச­மா­கப் பதி­விட்­ட­னர். தமிழ் மக்­க­ளின் வாழ்­வா­தா­ரத்­தில் அரசு திட்­ட­மிட்டு கைவைக்­கின்­றது என்­றும், வேள்­வி­யைத் தொடர்ந்து கள்­ளை­யும் அரசு தடை செய்­தமை தமிழ் மக்­க­ளின் பாரம்­ப­ரி­யத்தை மர­பைச் சிதைக்­கும் செயற்­பாடே என்­றும் பல்­வேறு கருத்­துக்­கள் பதிவு செய்­யப்­பட்­டன.

“கித்­துள் வெல்­லம் உங்­க­ளுக்கு…. பனை­வெல்­லம் எங்­க­ளுக்கு….., நீங்க வேறு நாடைய்யா… நாங்க வேறு நாடு” என்று காசி ஆனந்­தன் எழுதி தேனிசை செல்­லப்பா பாடிய பழைய பாட்­டின் வரி­கள் நினை­வுக்கு வரு­கி­றது என்­றும் ஒரு­வர் பதி­விட்­டார்.

http://newuthayan.com/story/41824.html

Link to comment
Share on other sites

மதுவரித் திருத்தச் சட்டம் தமிழின அழிப்பின் நீட்சி - அனந்தி

 

Ananthi-Sasitharan-Toddy.jpg
 
பனை, தென்னை மரங்களில் இருந்து கள் இறக்குவதற்கு தடை விதிக்கும் வகையிலான வர்த்தமானி அறிவித்தலானது தமிழின அழிப்பின் நீட்சியாகும். தமிழர்களின் வாழ்வாதாரத்தை முடக்கிப்போடும் இச்சட்டத்திருத்தத்தினை உடனடியாக திரும்பப்பெற வேண்டுமென வட மாகாண கூட்டுறவு அமைச்சர் அனந்தி சசிதரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

பனை, தென்னை மற்றும் கித்துள் தவிர்ந்த வேறு எந்த மரத்தில் இருந்தும் கள்ளுச் சீவுவது, எடுப்பது, இறக்குவதனை தடைசெய்யும் வகையில் ஏற்கனவே இருந்த சட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள திருத்தத்தின் மூலம் கித்துள் தவிர்ந்த வேறு எந்த மரத்திலும் கள்ளுச் சீவுவது, எடுப்பது, இறக்குவது தடைசெய்யப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஜனவரி 01 ஆம் திகதி (01.01.2018) முதல் நடைமுறைக்கு வரும் வகையிலான சட்டத்திருத்தம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் கடந்த 20 ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ளது.

எந்தவித முகாந்திரமும் இன்றி எதேச்சதிகாரப் போக்கின் வெளிப்பாடாக கொண்டுவரப்பட்டிருக்கும் இச்சட்டத் திருத்தமானது தமிழர்களின் முதுகெலும்பை உடைக்கும் விதத்தில் அமைந்துள்ளது என்பதை ஆணித்தரமாக சுட்டிக்காட்டுகின்றேன்.

தமிழர் தாயகத்தின் தனிப்பெரும் அடையாளமாக பன்நெடுங்காலமாக நீடித்து நிலைபெற்றிருக்கும் பனை மரமானது, தமிழர்களின் கலை, கலாச்சாரம், பண்பாடு என்பவற்றில் ஆழமாக இழையோடி தமிழர்களின் வாழ்வியலோடு இரண்டறக்கலந்த ஒன்றாகும்.

நீங்கள் வேறு நாடய்யா.. நாங்கள் வேறு நாடய்யா.. என்ற ஈழத்து பெருங்கவியின் பாடல் வரிகளில் முத்தாய்ப்பாக அமைந்திருக்கும் ‘கித்துள்வெல்லம் உங்களுக்கு பனைவெல்லம் எங்களுக்கு’ என்ற வரியின் ஊடே இந்த நாசகார சதித்திட்டத்தின் ஆழத்ததை புரிந்துகொள்ள முடியும். உலகில் எத்தனையோ நாடுகளில் பனை மரம் இருந்தாலும் ஒரு இனததின் அடையாளமாக பனை மரம் அடையாளப் படுத்தப்படுகின்றதொன்றால் அது தமிழினத்தின் சார்பாக மட்டுமே.

அந்த வகையில் தமிழர்களின் பெருமை மிகு அடையாளமாகவும் பொருன்மியத்தின் பலமாகவும் திகழ்ந்துவரும் பனை வளத்தை முற்றிலும் இல்லாதொழிக்கும் நோக்கிலேயே இச்சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.

தமிழின அழிப்பு யுத்தம் நடந்தேறிய காலகட்டத்தில் பல இலட்சம் பனை, தென்னை மரங்கள் அழித்தொழிக்கப்பட்ட நிலையில் யுத்தம் முடிவுக்கு வந்த பின்னரும் பனை, தென்னை மரங்களை இலக்கு வைத்தான செயற்பாடுகள் தமிழர் தாயகமான வடக்கு கிழக்கு பகுதிகளில் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் மரமேறி விழுந்தவனை மாடேறி மிதித்த கதையாக தற்போது பனை, தென்னைகளில் இருந்து கள் இறக்குவதை முற்றிலும் தடைசெய்வதற்கு வழியேற்படுத்தும் சட்டத்திருத்தம் அமைந்துள்ளது.

இதன் மூலம் மிச்சம் மீதியாயிருக்கும் பனை தென்னை வளங்களை முற்றிலும் அழித்தொழிப்பதுடன் தமிழர்களை பொருளாதார ரீதியில் நிரந்தரமாகவே முடக்கும் நோக்கில் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டுள்ளது.

வடக்கு கிழக்கு மாகாணங்களைப் பொறுத்த வரையில் பனை, தென்னையில் இருந்தே கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றது. இதனை நம்பியே பல்லாயிரம் தமிழ் குடும்பங்களின் வாழ்வாதாரம் கட்டியெழுப்பப்பட்டுள்ளது.

குறிப்பாக பனை மரமானது பல்வேறுபட்ட வழிகளில் பயனுள்ளதாக அமைந்துள்ளது. கருப்பட்டி, பனங்கற்கண்டு போன்ற வருமானம் ஈட்டக்கூடிய விளைபொருட்களை தருவதுடன் கள் பானமானது உடல் நலனிற்கு உகந்ததாகவும் அமைந்துள்ளது.

அவ்வாறே தென்னையும் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்காற்றி வருகின்றது.
இந்நிலையில் இச்சட்டம் நடைமுறைக்கு வருமானால் பனை, தென்னைகளில் இருந்து கள் இறக்கும் தொழில் சார்ந்திருக்கும் குடும்பங்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும்.

அத்துடன், தமிழ் நாட்டில் அரசியல் பிரமுகர்கள் மற்றும் தனியார் முதலாளிகளுக்கு சொந்தமான மதுபான சாலைகளில் உற்பத்தியாகும் சாராயத்தினை விற்பனை செய்வதற்கு ஏதுவாக கள் இறக்குவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதைப் போன்று இங்கும் தென்னிலங்கையில் உற்பத்தி செய்யப்படும் சாராய விற்பனையை முழு அளவில் ஊக்குவிக்கும் நோக்கில்  மதுவரித் திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளதாக சந்தேகிக்க வேண்டியுள்ளது.

தமிழர்களின் கூன் நிமிர்த்தும் கற்பக தருவாக விளங்கி வரும் பனை மற்றும் தென்னை வளத்தை முற்றிலும் அழித்தொழித்து அது சார்ந்து கட்டமைக்கப்பட்டிருக்கும் தமிழர்களின் பொருளாதாரத்தினை முடக்கி தென்னிலங்கையிடம் கையேந்தும் நிர்க்கதி நிலைக்கு தமிழர்களை இட்டுச்செல்லும் கட்டமைக்கப்பட்ட இன அழிப்புத் திட்டத்தின் நீட்சியாகவே இச்சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

தமிழர்களின் தொன்மத்தின் அடையாளமாக தமிழர் தாயகத்தின் நிலப்பரப்பெங்கும் நிமிர்ந்தோங்கி வளர்ந்து முரசறைந்து நிற்கும் பனை வளங்களில் இருந்து பெறும் உற்பத்திகளை பாதுகாப்பதன் மூலமே எமது இருப்பினையும் பொருன்மிய பலத்தினையும் தக்கவைக்க முடியும்.
ஆகவே, தமிழர்கள் ஒன்றுபட்ட குரலாக இச்சட்டத்தினை எதிர்க்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

இவ்வாறு வட மாகாண கூட்டுறவு அமைச்சர் அனந்தி சசிதரன் அதில் குறிப்பிட்டுள்ளார்.

Toddy-Media-Release-Ananthi-1-550x777.jp

Toddy-Media-Release-Ananthi-2-550x777.jp

http://www.thinakaran.lk/2017/10/30/உள்நாடு/20834/மதுவரித்-திருத்தச்-சட்டம்-தமிழின-அழிப்பின்-நீட்சி-அனந்தி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோரும் இறக்கமுடியாது அனுமதி பெற்ற்வர்கள்தான் இறக்க முடியும் போல தெரிகிறது முற்றா தடை இன்னும் வரலபோல்

இருந்தாலும் வடக்கு வாழ் மக்கள் இந்த ராஜாவுக்கு தெரியபடுத்தவும் 

   1yhpew.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, புங்கையூரன் said:

சிங்களவன் சும்மா இருக்க மாட்டானே!

அவன் யாழ்ப்பாணம் வாறதே கள்ளுக்காகத் தானே!

அவங்களும் கித்துள் கள் இறக்குபவர்கள் தானே!

இந்தச் செய்தி சரியானது போல எனக்கும் தெரியவில்லை!

சிங்களவன், யாழ்ப்பாண  கள்ளுக்கு  வாறது  ஒரு புறம் இருக்க....
புலம் பெயர் தேசத்தில் இருந்து... அந்தக் கள்ளை  அருந்தப் போகும்.
ஆட்களின் வரவு குறைந்தால்.... இலங்கையின் சுற்றுலாத் துறைக்கு, பாரிய வீழ்ச்சி ஏற்படப் போகுது.  :grin:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, தனிக்காட்டு ராஜா said:

எல்லோரும் இறக்கமுடியாது அனுமதி பெற்ற்வர்கள்தான் இறக்க முடியும் போல தெரிகிறது முற்றா தடை இன்னும் வரலபோல்

இருந்தாலும் வடக்கு வாழ் மக்கள் இந்த ராஜாவுக்கு தெரியபடுத்தவும் 

   

முந்தியெல்லாம் தவறணை இல்லை...ஐ மீன் கள்ளுக்கொட்டில் இல்லை...
பின்னேரப்பார் சூரியன் இறங்க...நிலம் இருட்டு கட்ட...வேலை அலுப்பாலை வந்த நாங்கள் கள்ளு சீவுறவையின்ரை பின் வீட்டுப்பக்கம் போவம்....ஆற அமர இருந்து அடிப்பம்.பொரியலும் வரும்...வறுவலும் வரும்...விடாக்கண்டன் கதையளும் வரும்.....வாரியணைத்து வஞ்சம் தீர்த்த கதையும் வரும்....
எண்டைக்கு சிறிமா வந்தாளோ அண்டைக்கு வந்ததுதான் கோப்ரேசன்.....எல்லாம் கெட்டுது....வந்து மிஞ்சினது தென்னம் குத்தியும்....பனம் குத்தியும் தான்......
பின் வீட்டு சுகமும்....வேலிக்கரை சுகமும் போனது போனதுதான்......:love:
இப்ப கள்ளு இறக்கிறதும் கள்ளர் தொழிலாய் வரப்போகுது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆட்டுக்கு தடை ,மாட்டுக்கு தடை என்று சொல்லி கடைசியில் கள்ளுக்கும் தடை போட்டிட்டாங்கள் 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • The Top 25 Safest Airlines For 2024   Air New Zealand Qantas Virgin Australia Etihad Airways Qatar Airways Emirates All Nippon Airways Finnair Cathay Pacific Airways Alaska Airlines SAS Korean Air Singapore Airlines EVA Air British Airways Turkish Airlines TAP Air Portugal Lufthansa/Swiss Group KLM Japan Airlines Hawaiian Airlines American Airlines Air France Air Canada Group United Airlines   Jetstar has been named the world's safest low-cost carrier. GETTY The 20 Safest Low-Cost Airlines For 2024   Jetstar easyJet Ryanair Wizz Norwegian Frontier Vueling Vietjet Southwest Volaris flydubai AirAsia Group Cebu Pacific Sun Country Spirit Westjet JetBlue Air Arabia Indigo Eurowings   இனியும்  ஏர் லங்காவில் பயணித்து  உங்கள் இனிய உயிர்களை பாதுகாப்பற்று ஆக்க  வேண்டாம். https://www.forbes.com/sites/laurabegleybloom/2024/01/03/ranked-the-25-safest-airlines-in-the-world-according-to-airlineratingscom/?sh=fe651ac4c03c ஸ்டார்ட் மியூசிக் .........😀   
    • பேச்சுக்களுக்கெதிராகப் போராடிய யாழ்ப்பாண மக்களும், அவர்களின் உணர்வுகளை புறக்கணித்த இந்தியாவும்   போராளிகளின் தலைவர்கள் நிபந்தனைகளின்றி பேச்சுவார்த்தைகளுக்குச் செல்லப்போகிறார்கள் என்கிற செய்தி பர‌வியபோது யாழ்ப்பாணத்தில் போராட்டங்கள் வெடித்தன. குறிப்பாக, போராளிகளை அழுத்தம் கொடுத்து, திம்புவிற்கு இழுத்துச் சென்றமைக்காக இந்தியாவின் மீது மக்களின் கோபம் திரும்பியிருந்தது. ஆர்ப்பாட்ட ஊர்வலங்கள், பொதுக்கூட்டங்கள், வீதி நாடகங்கள் என்பன இளைஞர்களால் யாழ்ப்பாணத்தில் நடத்தப்பட்டன. யாழ்ப்பாணத்தின் சுவர்களிலும், வீதிகளுக்குக் குறுக்கே தொங்கவிடப்பட்ட பதாதைகளிலும் கூறப்பட்ட செய்தி ஒன்றுதான், "எங்களுக்குத் தமிழீழமே வேண்டும்". இந்த ஒருமித்த மக்களின் மனவெழுச்சி அப்பிரதேசமெங்கிலும் பரவிக் கிடந்தது.  ஜெயவர்த்தனவின் இராணுவத்தினர் புரிந்துவரும் படுகொலைகளுக்கெதிரான கண்டனங்கள், இந்தியா தனது நலன்களைக் காத்துக்கொள்ள ஈழத்தமிழர் மீது பலவந்தமாகத் திணித்துவரும் அழுத்தங்கள் என்பனவும் இப்போராட்டங்களில் தமிழ் இளைஞர்களால் வெளிப்படுத்தப்பட்டது. பொதுக்கூட்டங்களிலும், மேடை நாடகங்களிலும் இரு முக்கிய செய்திகளை பேச்சாளர்கள் முன்வைத்தனர். முதலாவது தமிழர்கள் ஜெயவர்த்தனவை ஒருபோதும் நம்பத் தயாரில்லை என்பது. இரண்டாவது, ஜெயவர்த்தனவுடன் சமரசம் செய்ய முன்வந்திருந்த தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணியினரைத் தாம் முற்றாக நிராகரிக்கிறோம் என்பது.  யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களும், பாடசாலை மாணவர்களும் ஆர்ப்பாட்டப் பேரணிகளை ஒழுங்குசெய்வதில் முன்னின்றார்கள். போராளிகளின் தலைவர்கள் தில்லிக்கு அழைத்துச் செல்லப்பட்ட நாளான ஆடி 3 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டங்கள் ஆரம்பமாகியிருந்தன. அன்றுமட்டுமே யாழ்ப்பாணக் குடாநாட்டில் பல பேரணிகள் ஒழுங்குசெய்யப்பட்டன. தெல்லிப்பழையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் அமிர்தலிங்கத்தின் உருவ பொம்மை ஒன்றினை வீதிகளில் இழுத்துவந்தனர். ஒப்பாரி வைப்பதுபோல பாசாங்கு செய்த இன்னும் சில இளைஞர்கள் அமிர்தலிங்கத்தின் உருவப்பொம்மையினைப் பார்த்து, "ஜெயவர்த்தனவுடன் சமரசம் செய்துகொண்டதன் மூலம் அரசியல்த் தற்கொலையினை நீ செய்திருக்கிறாய், முட்டாளே, அது உனக்குத் தெரியாமல் போனதெப்படி?" என்று கேட்டார்கள்.   யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் "மாயமான்" எனும் பெயரில் மேடை நாடகம் ஒன்றினை அரங்கேற்றினார்கள். இராமாயணத்தில் வரும் காட்சியொன்றில், இராமனினதும், இலட்சுமணனினதும்  கவனத்தைத் திசைதிருப்பி, சீதையைக் கவர்ந்துசெல்ல இராவணன் மாய மானின் உருவத்தில் வந்ததற்கு ஒப்ப, தமிழர்களை தமக்குக் கீழ் நிரந்தரமாகவே அடிமைப்படுத்திவிட ஜெயார் போடும் மாயமான் வேடமே இந்தப் பேச்சுவார்த்தைகள் என்று அந்தநாடகம் கூறியது. ஜெயார் மறைத்துவைத்திருக்கும் வலையில் தமிழர்களை வீழ்த்துவதற்கு இந்தியாவே அழுத்தம் கொடுக்கிறது என்கிற குற்றச்சாட்டு இந்தியாவை நோக்கி முன்வைக்கப்பட்டது. ஜெயார் விரித்து வைத்திருக்கும் வலை நோக்கி இந்தியா முன்னாலே செல்ல, ஈழத்தேசிய முன்னணியின் நான்கு போராளித் தலைவர்களும், வெளியில் இருந்த புளொட் அமைப்பும் இந்தியாவின் சொல்கேட்டு ஜெயாரின் வலையில் தம்மையறியாமலேயே வீழ்வதற்காகப் பிந்தொடர்கின்றன என்று அவர்கள் கூறினார்கள். இந்தியா போராளிகளைப் பார்த்து  நடவுங்கள் என்று சொல்ல, நடப்பதும், நில்லுங்கள் என்று சொல்ல நிற்பதும், பாயுங்கள் என்று சொல்லப் பாய்வதும் நடக்கிறது  என்று அவர்கள் இந்தியாவை விமர்சித்தார்கள். இந்தியாவின் கட்டுப்பாட்டிலிருந்து போராளிகள் வெளியே வர எத்தனித்த ஒவ்வொரு கணமும் இந்தியா அவர்களை மிரட்டி பலவந்தமாக மீண்டும் தமது நிகழ்ச்சி நிரலுக்குள் கொண்டுவந்தது. இந்தச் சாராம்சத்தினை முன்வைத்து யாழ்ப் பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய 35 நிமிட நகைச்சுவை கலந்த மேடை நாடகம் யாழ்க்குடாநாட்டில் ஒருவாரத்தில் மட்டுமே 125 தடவைகள் மேடையேற்றப்பட்டது.  பேச்சுவார்த்தையின் முதலாவது நாளான 1985, ஆடி 8 ஆம் திகதி முழு யாழ்க்குடாநாடுமே பொது வேலை நிறுத்தத்தினால் முற்றாக ஸ்த்தம்பித்துப் போனது. பலகலைக்கழக மாணவர்களும், பாடசாலை மாணவர்களும் வகுப்புக்களைப் பகிஸ்க்கரிப்புச் செய்தனர். கடைகள் இழுத்து மூடப்பட்டதோடு, வீதிகளும் வெறிச்சோடிப்போக, மக்கள் வீடுகளுக்குள் முடங்கிப் போனார்கள். வீதிகளெங்கும் பதாதைகள் தொங்கவிடப்பட்டன. "எமக்கு ஈழமே வேண்டும்", " யுத்தநிறுத்தத்தை எதிர்க்கிறோம்", "எமக்குப் பேச்சுவார்த்தை வேண்டாம்", "இந்தியாவே, புலிகளை திம்புவிற்கு ஏன் அழைத்துச் சென்றாய், அவர்களைப் புல்லை உண்ணவைக்கவா?" என்று அவை பேசின.  யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டு வந்த மக்கள் எழுச்சிப் போராட்டங்களை தமது நிலைப்பாட்டினை இந்தியாவுக்குத் தெளிவாக உணரவைக்கும் சந்தர்ப்பமாகப் பாவிக்க நினைத்தனர் போராளிகள். "பாருங்கள், நீங்கள எங்களை ஜெயவர்த்தனவுடன் பேசவைக்க பலவந்தப்படுத்தி அழைத்து வந்திருக்கிறீர்கள். ஆனால், எமது மக்களோ அதற்கு முற்றான எதிர்ப்பினைக் காட்டி வருகிறார்கள்" என்று இந்திய அதிகாரிகளிடம் அவர்கள் கூறினார்கள். ஆனால், போராளிகளின் கருத்தினைக் கேட்கும் நிலையில் இந்திய அதிகாரிகள் இருக்கவில்லை. அவர்களைப்பொறுத்தவரை, தமிழ் மக்களின் உணர்வுகளைவிட பேச்சுக்களை எப்படியாவது நடத்திவிடவேண்டும் என்பது முக்கியமானதாகத் தெரிந்தது. இந்தியாவை இந்துசமுத்திரப் பிராந்தியத்தின் வல்லரசாகக் காட்டுவதற்கு இப்பேச்சுவார்த்தைகளை எப்படியாவது பாவித்துவிட கங்கணம் கட்டியிருந்த இந்திய அதிகாரிகள், தமிழர்களின் உணர்வுகளை முற்றாகப் புறக்கணித்திருந்தனர்.
    • நாடு முழுவதும் வேகமாக பரவி வரும் காய்ச்சல் ஒரு வைரஸ் என்பதால் மக்கள் குழுவாக கூடுவதை தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. குழுவாக இருக்கும் இடங்களில் முகக்கவசங்களை அணிந்து கொள்ளுமாறு அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவின் பிரதம வைத்திய அதிகாரி ஹேமா வீரகோன் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த வைரஸ் சுவாசக் குழாயால் ஏற்படுவதனால் இருமல், சளி, காய்ச்சல் மற்றும் உடல்வலி ஆகியவை முக்கிய அறிகுறிகள் என அவர் கூறினார். சுவாச நோய்கள் இரண்டு அல்லது மூன்று நாட்களில் வைரஸ் நிலைமை தணிந்தாலும், சில நோயாளிகளுக்கு ஓரிரு மாதங்களுக்கு இருமல் மற்றும் சளி சுவாச நோய்கள் இருப்பதாகவும் வைத்திய அதிகாரி சுட்டிக்காட்டினார்.   இந்த வைரஸும் இன்புளுவென்சாவின் மாறுபாடு என்பதால், நோயால் பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து முடிந்தவரை விலகி இருப்பதன் மூலமும், குழுவாகவும் கூடும் இடங்களில் முகக் கவசம் அணிவதும் நோய் வராமல் இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அனுராதபுரத்தில் மாத்திரமன்றி நாடு முழுவதிலும் இந்த காய்ச்சல் வைரஸ் என்பதால் வேகமாகப் பரவி வரும் நிலையில், சிகிச்சையின்றி குணமாகும் என்று நினைக்காமல் சிகிச்சை பெறுமாறும் கடுமையான சுவாசக் கோளாறுகளை ஏற்படுத்தும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மருத்துவ ஆலோசனை சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், சமூகத்தில் பரவல் அதிகரித்து வருகிறது என்று மருத்துவர் வலியுறுத்துகிறார்.   மேலும், குறிப்பாக மற்ற நோய்களுக்கு, காய்ச்சல், சளி போன்றவை ஏற்படும் என்பதால், மருத்துவ ஆலோசனைப்படி சிகிச்சை பெற வேண்டும் என மேலும் தெரிவித்துள்ளார். https://tamilwin.com/article/new-influenza-virus-in-sri-lanka-1714703659
    • ரஷ்ய - உக்ரைன் போருக்கு சென்ற இலங்கையர்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல் ரஷ்ய -  உக்ரைன்(Russia - Ukraine) போருக்கு சென்ற பல இலங்கைப் படையினர் தற்பொழுது உயிருடன் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் காமினி வெலேபொட(Gamini Waleboda ) தெரிவித்துள்ளார். நேற்றைய தினம்(2) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். ரஷ்ய வாடகை படையில் இணைந்து கொண்ட 40 இலங்கை படையினரின் அதிக எண்ணிக்கையிலானவர்கள் உயிரிழந்துள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.   ரஷ்ய - உக்ரைன் போர் இராணுவம் மற்றும் பொலிஸ் என்பனவற்றிலிருந்து ஓய்வு பெற்றுக்கொண்டவர்கள் இவ்வாறு ரஷ்ய உக்ரைன் போரில் இணைந்து கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இருபது லட்சம் ரூபா மாதச் சம்பளம் வழங்குவதாக கூறி குடிவரவு குடியகழ்வுத் திணைக்களத்திற்கு லஞ்சம் வழங்கி இவ்வாறு இலங்கைப் படையினர் ரஷ்யா, உக்ரைனுக்கு அனுப்பி வைக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.   இராணுவ பின்வரிசை சேவைக்கு என அழைத்துச் செல்லப்பட்ட படையினர் முன்னரங்கப் போரில் ஈடுபடுத்தப்படுவதாக தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் வெக்னர் கூலிப் படைக்கு விற்பனை செய்யப்பட்ட இலங்கையின் முன்னாள் படை அதிகாரி ஒருவரின் குரல் பதிவு கிடைக்கப் பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளார். அங்கிருந்து தப்பியவர்கள் ரஷ்யாவிற்கு செல்ல வேண்டாம் என கோருவதாகக் குறிப்பிட்டுள்ளார். ரஷ்யாவிற்கு வேலைக்காக அனுப்பி வைப்பதாக கூறினால் அந்த மோசடியில் சிக்க வேண்டாம் என மக்களிடம் கோருவதாக காமினி வெலேபொட தெரிவித்துள்ளார்.  https://tamilwin.com/article/sl-forces-who-joined-ukrain-war-many-died-1714640425?itm_source=parsely-api
    • கொரோனா ஊசி போட்டவர்கள் எல்லாம் வாழ்க்கை முழுக்க சாவை நிமிசத்துக்கு நிமிசம் நினைச்சு வாழவேண்டியது தான். கொரோனா ஊசி போடுங்கோ என வக்காளத்து வாங்கியவர்கள் இனி என்ன பதில் சொல்லப்போகின்றார்களோ என்பது கொரோனா ஊசியை விட பயங்கரமானதாய் இருக்கும் 🤣
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.