Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரபாகரனுக்கு நிகரான தலைவர் சம்பந்தனே – விஜயகலா மகேஸ்வரன் புகழாரம்.

Featured Replies

நல்லாட்சி அரசாங்கத்தில் நீதித்துறை விற்கப்பட்டு விட்டது என விஜயகலா மகேஸ்வரன் கவலை.

vijayakala.jpg
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

நல்லாட்சி அரசாங்கத்தில் நீதித்துறை , சட்டத்துறை மற்றும் ஊடகத்துறை ஆகியன விற்கப்பட்டு உள்ளது. என மகளீர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.  யாழில்.உள்ள அவரது இல்லத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில் ,

நீதித்துறை ,  ஊடக துறை , சட்டத்துறையும் விற்கப்படுகின்றது. இந்த ஜனநாயக நாட்டில் நல்லாட்சி நிலவும் காலத்தில் அவை விற்கப்பட்டு உள்ளது.

ஒரு சில பொறுப்பு உள்ள அதிகாரிகளால் தான் அவை விற்கப்பட்டன. அதனால் இந்த நல்லாட்சி அரசாங்கம் தலை குனிந்தது. தருமம் தலை காக்கும் என நம்புகின்றோம்.  அவ்வாறானவர்கள் தொடர்பில் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.

http://globaltamilnews.net/archives/49650

 

 

பிரபாகரனுக்கு நிகரான தலைவர் சம்பந்தனே – விஜயகலா மகேஸ்வரன் புகழாரம்.

vijayakala.jpg

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாரகனுக்கு நிகராக அனைவராலும் பேசப்படும் தலைவராக இரா.சம்பந்தன் திகழ்கின்றார். அவருடன் இணைந்து தமிழ் தேசிய கூட்டமைப்பினை உடைக்காது 2020ஆம் ஆண்டுக்குள் தீர்வினைப் பெறுவதற்கு தமிழ் மக்கள் ஒன்றிணைய வேண்டும் என மகளீர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரவித்துள்ளார்.
 
யாழில்.உள்ள அவரது இல்லத்தில் இன்று திங்கட்கிழமை காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார்.
 
மேலும் தெரிவிக்கையில் ,
 
வடகிழக்கில் தமிழீழம் கோரி, எமது இளைஞர்கள் ஆயுதப் போராட்டத்தினை முன்னெடுத்து, அந்த போராட்டம் தோற்கடிப்பட்ட இந்த சந்தர்ப்பத்தில் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் இருக்கின்றாரா இல்லையா என்ற நிலை உருவாகியுள்ளது.
 
போர் முடிவுற்றதாக கூறிக்கொண்டுள்ள கடந்த கால அரசாங்கம் பிரபாகரன் உயிருடன் இருக்கின்றாரா என்பதனை உறுதிப்படுத்த வேண்டும். அவர் இறந்துவிட்டார் என்பதற்குரிய மரணச் சான்றிதழை வழங்கும் பட்சத்தில் பிரபாகரன் இறந்துவிட்டார் என்பதனை நாமும் உறுதிப்படுத்திக்கொள்ள முடியும்.
 
யுத்தம் நிறைவடைந்த நிலையில், இன்று எமது தலைவராக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனே, எமது நாட்டிலும், புலம்பெயர் நாட்டிலும் உள்ள மக்களுக்காக எமது தலைவராக உருவாகியுள்ளார்.
 
தமிழ் மக்களின் தனித் தீர்விற்காக அரசாங்கத்துடன் விட்டுக்கொடுத்து வருகின்றார். இனியொரு தலைவரை இங்கு எதிர்பார்க்கவில்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஊடாகவே எமது தீர்வினைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
 
மீண்டும் ஒரு தலைவர் உருவாக வேண்டுமானால், இன்னுமொரு 30 வருடத்தினை எதிர்பார்க்க வேண்டும். மீண்டும் ஆயுதங்களை தந்தால், பழைய யுத்த நிலைக்கு வரமாட்டோம். எத்தனை பிறவி எடுத்தாலும், அதை மீண்டும் செய்ய முடியாது. அது பொய்யான கூற்று. சிலருக்கு சில ஆசைகள் இருக்கின்றன. அதற்காக சில கட்சிகளை உடைத்து விடுகின்றார்கள். அதற்கு இடமளிக்காது. இன்று உள்ள தலைவர்கள் இனவாதம் அற்றவர்களாக இருக்கின்றார்கள். நாளை அமையப் போகும் தலைவர்கள் எந்த கட்சியாக இருந்தாலும், இனவாதிகளாகவே இருப்பார்கள். இனவாதிகளுடன் பேச முடியாத காரணத்தினால், இங்குள்ள சிறு சிறு கட்சிகள் தமிழ் தேசிய கூட்டமைப்பினை உடைக்கவும் கூடாது.
 
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் உள்நாட்டிலும், சர்வதேசத்திலும் மதிக்கத்தக்கவராக இருக்கின்றார். ஆகையினால், சம்பந்தனின் ஊடாகவே எமது மக்களின் தீர்வுத் திட்டத்தினைக் கொண்டு வர முடியும்.
 
வடகிழக்கு இணைப்பையே தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தீர்வு திட்டத்தில் முன்வைத்துள்ளார். இன்று வடகிழக்கு இணைப்பு ஏற்படக்கூடாதென்று, நாங்கள் எங்களுக்குள் அடிபடும் நிலைமையை ஏற்படுத்திக்கொடுக்கின்றார்கள். அதற்கு இடமளிக்காது. எமது சிறு சிறு கட்சிகள் எவ்வளவு பிரச்சினைகள் இருந்தாலும், சம்பந்தன் அரசாங்கத்துடன் விட்டுக்கொடுத்து நடப்பது போன்று, சிறு சிறு கட்சிகள் விட்டுக்கொடுத்து, இவற்றின் ஊடாக தேர்தலில் வெற்றி பெற வேண்டும்.
 
சிறு சிறு கட்சிகளாக 12 உருவாகினால், வேறு கட்சிகள் இங்கு தமது கட்சிகளை நிலை நிறுத்தக்கூடும். அதற்கு இடமளிக்காது, தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் 2020 ற்குள் ஒரு தீர்வினைக் கொண்டு வருவதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென்பதுடன், பொது மக்களும் விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.

http://globaltamilnews.net/archives/49632

Edited by நவீனன்

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தன் பிரபாகரனை பயங்கரவாதி என்று சொல்லுது இவ இப்படி சொல்ல சம்பந்தனுக்கு கோபம் வரபோவுது .

1 hour ago, நவீனன் said:

விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாரகனுக்கு நிகராக அனைவராலும் பேசப்படும் தலைவராக இரா.சம்பந்தன் திகழ்கின்றார்.

சுமந்திரன் நடத்தும் "யாரும் வரலாம் யாரும் போகலாம்" ரக விடுதிக்கு விஜயகலா போய்வந்திருக்கா என்பது அவரின் அரைவேக்காட்டு அறிக்கையில் தெரிகிறது.

விஜயகலா கூனிக்கு நிகராக தாழ்ந்துவிட்டார். பாவம் மகேஸ்வரன்.  

  • கருத்துக்கள உறவுகள்

ஹாஹா 2017 ம் ஆண்டில் சிறந்த பப்படப்பரிசு இந்த அன்ரிக்கு   கொடுக்கலாம் 

  • தொடங்கியவர்

 

  • கருத்துக்கள உறவுகள்

பிரபாகரனுக்கு இணையாக சம்பந்தரை புகழும்   இவர் கூட்டமைப்புடன் சேர்ந்து இயங்கலாமே?  

  • கருத்துக்கள உறவுகள்

நரிகளைப் புலிகளோடு 
ஓநாய்கள் ஒப்பிட்டு 
நரிகளைக் காக்குமாறு 
ஓலமிடுகின்றன!
நரியின் தந்திரம்
புதியகாகங்களிடம்
எடுபடாதென்பதால்
ஓநாய்களைத் தூதனுப்பி
தாங்களே வடையைப் 
பிய்காது பாதுகாத்துத்
தருவோமென்று 
உறுதிகூறி ஓலமிடுகின்றன!
காகங்கள் தெளிவாகவே
இருப்பதை 
விளக்கேற்றும் 
முனைப்புகளில் 
தெரிகிறது!

  • கருத்துக்கள உறவுகள்

தலைவர் பிரபாகரனுக்கு நேர் எதிரான ஆள் சம்பந்தர் என்று சொல்ல நினைத்து

மாறி நிகரான ஆள் என்று சொல்லி போட்டா.

சும்மா இல்லத்தரசியாக பிள்ளைகளை பார்த்து கொண்டு இருந்தவர்  சொர்ணா அக்கா ரேஞ்சுக்கு அடிக்கிற கூத்து தாங்க முடியவில்லை !!!!! யப்பா!!!!

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, நவீனன் said:

 

சும்மா தொண தொண எண்டு கதைக்கிற இவவிட்டை கேட்ட கேள்வியென்ன? ஆருக்காவது தெரியுமோ? :cool:

அரிசிக்கடையிலை நிண்டு கதைக்கிறமாதிரி அரசியல் கதைக்கிறா.tw_angry:

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, nunavilan said:

பிரபாகரனுக்கு இணையாக சம்பந்தரை புகழும்   இவர் கூட்டமைப்புடன் சேர்ந்து இயங்கலாமே?  

அதுக்குதான் சுழி போடுறா.

 

21 hours ago, நவீனன் said:
 
தமிழ் மக்களின் தனித் தீர்விற்காக அரசாங்கத்துடன் விட்டுக்கொடுத்து வருகின்றார்.

எல்லாத்தையும் விட்டுக்கொடுத்துப்போட்டு என்ன தீர்வை பெறப்போறார் என்றும்   சொன்னால் விளங்கிக்கொள்ள இலகுவாக இருக்கும் அக்கோய் 

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தல் காலமுன்னா.. பிரபாகரன் தேசிய தலைவர்..

தேர்தல் முடிஞ்சுட்டுதுன்னா.. பிரபாகரன் பயங்கரவாதி...

அரசியல்வாதிகளின் நாக்கு தேவைக்கு ஏற்ப நல்லா வளையும்.:rolleyes:

ஆனால் தேசிய தலைவரின் நாக்கு மட்டும்.. பாவம்.. வளையத் தெரியாமல்.. கொள்கை.. இலட்சியம்.. என்று நிமிர்ந்து நின்றிட்டுது. 

கூட்டமைப்பை.. சிங்களம்.. சுமந்திரன் என்ற ஒற்றரூடாக உடைக்கும் என்பது அவரை உள்ள இழுத்த போதே சொல்லியாச்சு. அது ஒன்னும் புதிதல்ல. 

முதல்ல.. சைக்கிள் வந்திச்சு.. எனி என்னென்ன வரப்போகுதோ...??!

சம் சும் மாவை கும்பலின் சுயநலம்... எஜமான விசுவாசமும்.. தான் கூட்டமைப்பின் சிதைவுக்கான முக்கிய காரணி. 

தமிழ் மக்களின் அரசியல் பலத்தை சிதறடிக்கனும் என்பது தான் சிங்களவனின் மற்றும் சில பல உலக பிராந்திய வல்லரசுகளின் இன்றைய தேவையும். 

  • கருத்துக்கள உறவுகள்

இந்த திரியை சிரிப்போம் சிறப்போம் பகுதிக்கு தயவு கூர்ந்து நகர்த்த இயலுமா ? :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பிரபாகரன் அல்ல, இன்னும் 10 பிரபாகரன்கள்: சம்பந்தன்.-puthinamnews.com 

sampanthan.jpg

அடிமைளாக என்றாலும் ஆளும் கட்சியுடன் இணைந்தால்தான் தமிழ் மக்கள் எதனையும் பெறலாம் என்று எவராவது சிந்தித்தால் அது தவறு. எமது நிலைப்பாட்டை சிங்கள மக்கள் உணர மறுத்தால் ஒரு பிரபாகரன் அல்ல, இன்னும் 10 பிரபாகரன்கள் தோன்றுவார்கள் என்று இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

 

சம்பந்தரே பிரபாகரனாக மாறப்போகின்றார் போல் தெரிகிறது அதனால்தான்.... 

 

பிரபாகரனுக்கு நிகரான தலைவர் சம்பந்தனே என்று விஜயகலா  மகேஸ்வரன் புகழாரம் சூட்டியிருக்கலாம்.

 

15 hours ago, Dash said:

சும்மா இல்லத்தரசியாக பிள்ளைகளை பார்த்து கொண்டு இருந்தவர்  சொர்ணா அக்கா ரேஞ்சுக்கு அடிக்கிற கூத்து தாங்க முடியவில்லை !!!!! யப்பா!!!!

 

விஜயகலவை சொர்ணாவுடன் ஒப்பிடுவது சொர்ணாவுக்கு மாபெரும் இழுக்காக இருக்கப்போகுது. விஜயகலா அதையும் விட கீழான ரேஞ்ல போய்க்கொண்டிருக்கா.

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, Paanch said:

சம்பந்தரே பிரபாகரனாக மாறப்போகின்றார் போல் தெரிகிறது அதனால்தான்

சிரிப்பு சிரிப்பாய் வருகுது. தேர்தல் காலத்தில் அவர் குதிக்கிற குதியைப்பார்த்து மக்கள் அப்பிடித்தான் நினைப்பதுண்டு. அப்புறம்  அவர் யார் என்று அவருக்கே மறந்து போய்விடும். எதிரியின் பாசறைக்கைதான் அவரைத் தேடவேணும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
38 minutes ago, satan said:

சிரிப்பு சிரிப்பாய் வருகுது. தேர்தல் காலத்தில் அவர் குதிக்கிற குதியைப்பார்த்து மக்கள் அப்பிடித்தான் நினைப்பதுண்டு. அப்புறம்  அவர் யார் என்று அவருக்கே மறந்து போய்விடும். எதிரியின் பாசறைக்கைதான் அவரைத் தேடவேணும்.

இப்ப மட்டும் எங்கை நிக்கிறார்....அங்கை தானே நிக்கிறார்.:grin:

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கொடுமையையெல்லாம் சகித்துக் கொண்டு இருக்கவேண்டி இருக்கிறது ...... என்ன செய்ய இறைவா ........

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.