Jump to content

நாம் தமிழர் - தேர்தல் 2019


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Nathamuni said:

இல்லையே,

கடந்த முறை ஜெயலலிதா வென்ற 37, அணைத்துமே அதிமுகவினது.

இம்முறை கூட்டணி சேர்ந்த வெற்றி. தனியானதல்ல.

ஸ்ராலின் வெற்றி முதல்வராவதில் தானே உள்ளது. அதில் கோட்டை விட்டார் அல்லவா?

கடந்த முறை வெற்றியின் போதே மோடிக்கு ஜெயலலிதா தேவைப்படவில்லை. இந்த முறை அசுரவெற்றியால், ஸ்ராலின் தேவையே இல்லை.

ஆக.... வெற்றியாளர் ஸ்ராலின் அல்ல, எடப்பாடி.

ஸ்டாலின் கூட இந்த 22 இடைத் தேர்தலில் வென்று ஆட்சியை பிடிக்க முடியும் என்று நம்பியிருக்க மாட்டார், எந்த பேச்சிலும் அப்படிச் சொல்லவும் இல்லை.

ஆட்சியை கலைத்துவிட்டு அல்லது கலையவைத்து தேர்தலுக்கு போவதே ஸ்டாலினின் வியூகம்.

எனக்கு தெரிய தமிழ்நாட்டில், இடைத்தேர்தலில் வென்று ஆட்சி மாற்றம் ஏற்பட்டதாக நியாபகம் இல்லை.

ஆனால் ஆட்சியை கலைப்பதில் ஸ்டாலின் ரொம்ப பிந்தங்குகிறார் என்பது உண்மையே.

இதுவே கிழவனாக இருந்தால் இப்போ எடப்பாடி அரசு கவிழ்ந்து 1 வருடம் ஆகி இருக்கும்.

ஆனால் அதிமுக வாக்கு வங்கிக்கு இந்த முறை செம அடி. நானறிய இரு பெரும் கட்சிகள் 25% க்கு கீழே போனதே இல்லை.

1991 கருணாநிதி மட்டுமே வென்ற போதே 30 வீததுக்கு மேல்தான் திமுக எடுத்தது.

19% சதவீதம் எல்லாம் எவ்வளோ அவமானம் தெரியுமா😂

Link to comment
Share on other sites

  • Replies 161
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
21 minutes ago, ரஞ்சித் said:

அப்படி ஏன் நினைக்கிறீர்கள். இங்கே பல விடயங்கள் தெரிந்த பலரும் இருக்கிறார்கள். நீங்கள் இங்கும் பேசலாம்.😊

அப்படி இல்லை, இங்கே பல விண்ணர்கள் உள்ளனர் என்பது உண்மையே, ஆனால் இங்கே அப்படிப் பட்ட விசயங்களை அலசுவது அரிதே. அதைத்தான் சொன்னேன்.

மற்றும்படி யாழ் தளம் மாமேதைகள் வந்துலாவும் இடம் என்பதில் எனக்கு கிஞ்சித்தும் மாற்றுக் கருத்தில்லை.

தவிர இஸ்ரேலை பற்றி கதைச்சா கோசான் மொசாட்காரன் என்று கிளப்பி விட்டுவாங்களோ என்ற பயமுமிருக்கு 😂.

நாதம்ஸ் கவனிக்க: கிஞ்சித்து இன்னொரு யாழ்பாணச் பேச்சு நடை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nedukkalapoovan said:

சினிமாப் பிரபல்யம் உலக நாயகன்.. காசு நாயகன்கள் எல்லாம்... தங்கள் சில பல செல்வாக்குகளை இந்தத் தேர்தலில் காட்டியும்.. தி மு க.. அதிமுக என்பன வலுவான கூட்டணிகளோடு நின்றும்..

   கமலகாசனின் திரைப்படங்களை பார்த்து வீணீர் வடிக்கும் கூட்டம் அவருக்குத்தானே வாக்களிக்கும். கமலுக்கு ஒரு கூட்டம் ரஜனிக்கு ஒரு கூட்டம் விஜய் அஜித் என்று கட்டவுட்டுக்கு பால் ஊத்தும் கூட்டதை பல வலைத்தளங்களில் அதிகமாக பார்த்திருப்பீர்கள் தானே.....அதில் கொஞ்சமாவது இங்கும் இருக்கத்தானே செய்யும்.......🤣

2 hours ago, கிருபன் said:

 ஆனால் வாலுகளுக்கு எதுவும் ஏறாது! திமுக, அதிமுக போன்ற கட்சிகள் சிக்கலுக்குள் இருந்த இந்த காலகட்டத்திலேயே  ஐந்து வீதம் என்றால் அவர்கள் பலமாக மீண்டு வரும்போது  சீமான் மீண்டும் ஒரு வீதத்திற்கு போய்ச் சேருவார்🤣😂

 

இது ஓர் வாட்ஸப் பதிவு..

எமது இனத்தையும் தலைமையையும் வைத்து பிழைப்பு நடாத்திய சீமானிற்கு பலத்த அடி. வெறும் உணர்ச்சிப் பேச்சுக்களால் தமிழ்த்தேசியத்தை வைத்து ஊழிக்கூத்தாடிய சீமான் நிராகரிக்கப்பட்டமையானது எமது புலம் பெயர் தமிழ்த் தேசிய வாதிகளும் தங்களை மீளாய்வுக்குட்படுத்த வேண்டும். புலம்யெர் ஈழ  மக்களின் பணமும் இம் முறை சீமானின் தேர்தல் நிதிக்காக  அனுப்பப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.அவர் உயிரோடைஇருக்கிறார்...நம்புங்கள் நாளை நமக்கு ஒரு நாடு பிறக்கும் என்பதே சீமானின் இலட்சிய வாசகங்கள்...இனிமேல் தன்னும் எங்கள் தேசிய உணர்வை தலைமையை சீமான் கொச்சைப்படுத்த அனுமதிக்கக் கூடாது.அதனை வைத்து அரசியல் வியாபாரம் புரிய துணைபோகக் கூடாது.

சீமான் கூடாது....வரவே கூடாது.........ஆனால் அந்தநாள்   தொடக்கம்  மூக்கு முட்ட கொள்ளையடிச்சு....கொள்ளையடிச்சு...ஜெயிலுக்கு போய் வந்தும் உத்தமர்களாக தெரிவது உங்களைப்போன்ற கண்களுக்குத்தான்.
வாழ்க ஊழல் கொள்ளை.

13 minutes ago, goshan_che said:

அப்படி இல்லை, இங்கே பல விண்ணர்கள் உள்ளனர் என்பது உண்மையே, ஆனால் இங்கே அப்படிப் பட்ட விசயங்களை அலசுவது அரிதே. அதைத்தான் சொன்னேன்.

மற்றும்படி யாழ் தளம் மாமேதைகள் வந்துலாவும் இடம் என்பதில் எனக்கு கிஞ்சித்தும் மாற்றுக் கருத்தில்லை.

தவிர இஸ்ரேலை பற்றி கதைச்சா கோசான் மொசாட்காரன் என்று கிளப்பி விட்டுவாங்களோ என்ற பயமுமிருக்கு 😂.

நாதம்ஸ் கவனிக்க: கிஞ்சித்து இன்னொரு யாழ்பாணச் பேச்சு நடை.

மாமேதைகள் உலாவும் தளத்தில் பட்டிக்காட்டானுக்கு என்ன வேலை??????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, goshan_che said:

ஸ்டாலின் கூட இந்த 22 இடைத் தேர்தலில் வென்று ஆட்சியை பிடிக்க முடியும் என்று நம்பியிருக்க மாட்டார், எந்த பேச்சிலும் அப்படிச் சொல்லவும் இல்லை.

ஆட்சியை கலைத்துவிட்டு அல்லது கலையவைத்து தேர்தலுக்கு போவதே ஸ்டாலினின் வியூகம்.

எனக்கு தெரிய தமிழ்நாட்டில், இடைத்தேர்தலில் வென்று ஆட்சி மாற்றம் ஏற்பட்டதாக நியாபகம் இல்லை.

ஆனால் ஆட்சியை கலைப்பதில் ஸ்டாலின் ரொம்ப பிந்தங்குகிறார் என்பது உண்மையே.

இதுவே கிழவனாக இருந்தால் இப்போ எடப்பாடி அரசு கவிழ்ந்து 1 வருடம் ஆகி இருக்கும்.

ஆனால் அதிமுக வாக்கு வங்கிக்கு இந்த முறை செம அடி. நானறிய இரு பெரும் கட்சிகள் 25% க்கு கீழே போனதே இல்லை.

1991 கருணாநிதி மட்டுமே வென்ற போதே 30 வீததுக்கு மேல்தான் திமுக எடுத்தது.

19% சதவீதம் எல்லாம் எவ்வளோ அவமானம் தெரியுமா😂

அவர், மோடி கவிழ்வார், காங்கிரஸ் மேலே வரும் எடப்பாடி அரசு டிஸ்மிஸ், அப்புறம் தேர்தல் என்று கணக்கு போட்டிருந்தார்.

ஆகவே இடைத்தேர்தலை விட, பாராளுமன்ற தேர்தலை நம்பினார். 

அரசனை நம்பி புரிசனை விட்ட கதை.

மாறாக, மிக துல்லியமாக, எவ்வளவு பணமும் இறைத்தாவது, இவ்வளவு சீட் வெல்ல வேணும் என திட்டம் போட்டு, சரியான தொகுதிகளை தெரிவு செய்து வென்றார் எடப்பாடி.

அவரை அசைக்முடியாது, அதேவேளை தனது வெற்றி வெறுமையானது என ஸ்ராலின் விரைவில் உணர்வார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அரசியலில் வெற்றி வெறுமையானதா இல்லையா என்பதை வெற்றிக்கு பின்னான வெற்றியாளரினதும், தோல்வியாளரினதும் அணுகுமுறையே தீர்மானிக்கும்.

மத்தியில், காங், சமாஜ்வாடி, பிஜேடி, பகுஜன்சமாஜ், மதச்சார்பற்ற ஜேடி, திரினாமூல், தெலுங்குதேசம் இப்படி பல கட்சிகளை இணைத்து தொகுதி உடன்பாடு கண்டு போட்டியிட வேண்டும் என்பதே ஸ்டாலின் போன்றோரின் நிலையாக இருந்தது. இதற்காக ராகுலே பிரதமர் என்ற அளவுக்கு விட்டுக் கொடுக்க தயாராய் இருந்தார் ஸ்டாலின். ஆனால் உபியில் காங்கிரசுக்கு 2 சீட் ஒதுக்கியது, மம்தாவின் பிரதமர் கனவு,என சில விடயங்களால் இந்த முயற்சி பலிக்கவில்லை.

கனிமொழி, திருமா, தமிழச்சி தங்க பாண்டியன், ஜோதிமணி, ராஜ்யசபாவுக்கு வைகோ(?) என ஒரு பெரும் ஆற்றல் உள்ள படையே டெல்லிக்குப் போகிறது. கிட்டத்தட்ட மத்தியில் பிஜேபி எதிர் அரசியலின் இணைத்தலைமைய திமுக ஏற்கும் நிலை.

தமிழ்நாட்டில் பிஜேபிக்கு இருக்கும் மவுசு (!),  பிஜேபி சொல்லும் சொல்லுக்கு எடப்பாடி அரசு ஒத்தூதும் போக்கு, அத்தனையும் தமிழகத்தை அடுத்த 2 ஆண்டில் ஸ்டாலின் பக்கம் திருப்பவே வாய்ப்பு அதிகம்.

அதை ஸ்டாலின் லாவகமாக கையாள்வாரா என்பதே கேள்வி.

Link to comment
Share on other sites

பலரும் நினைப்பது போல் தமிழக களம் கிடையாது. இந்த தேர்தலில் வென்று பிரதமர் ஆகும் எண்ணம் நாம் தமிழருக்கு இருக்கவில்லை. அவ்வளவு ஏன். வாக்கு எண்ணப்படும் முன்னரே 5% என நாம் தமிழர் கட்சிக்காரர்களே கணித்துவிட்டார்கள். யாருக்கும் ஏமாற்றம் இல்லை. இது ஒரு நீண்டதூர ஓட்டம். பலனை அறுவடை செய்யும் காலத்தில் ஒட்டுமொத்த தமிழருக்கும் அது நன்மை பயப்பதாக அது அமையும்.

Link to comment
Share on other sites

சென்ற ஆண்டு ஆர்கே நகர் இடைத்தேர்தலில் தினகரன் வெற்றிபெற்றார். அந்த தேர்தலில் நாம் தமிழர் பெற்ற வாக்குகள் 3864.

அதே தொகுதியில் இந்த தேர்தலில் 13,687 வாக்குகள் நாம் தமிழருக்கு விழுந்து இருக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

கனிமொழி, திருமா, தமிழச்சி தங்க பாண்டியன், ஜோதிமணி, ராஜ்யசபாவுக்கு வைகோ(?) என ஒரு பெரும் ஆற்றல் உள்ள படையே டெல்லிக்குப் போகிறது. கிட்டத்தட்ட மத்தியில் பிஜேபி எதிர் அரசியலின் இணைத்தலைமைய திமுக ஏற்கும் நிலை.

ஆஆஆஆஆஆஆஆ.ராசா கூட போகலியா??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, இசைக்கலைஞன் said:

பலரும் நினைப்பது போல் தமிழக களம் கிடையாது. இந்த தேர்தலில் வென்று பிரதமர் ஆகும் எண்ணம் நாம் தமிழருக்கு இருக்கவில்லை. அவ்வளவு ஏன். வாக்கு எண்ணப்படும் முன்னரே 5% என நாம் தமிழர் கட்சிக்காரர்களே கணித்துவிட்டார்கள். யாருக்கும் ஏமாற்றம் இல்லை. இது ஒரு நீண்டதூர ஓட்டம். பலனை அறுவடை செய்யும் காலத்தில் ஒட்டுமொத்த தமிழருக்கும் அது நன்மை பயப்பதாக அது அமையும்.

 

25 minutes ago, இசைக்கலைஞன் said:

சென்ற ஆண்டு ஆர்கே நகர் இடைத்தேர்தலில் தினகரன் வெற்றிபெற்றார். அந்த தேர்தலில் நாம் தமிழர் பெற்ற வாக்குகள் 3864.

அதே தொகுதியில் இந்த தேர்தலில் 13,687 வாக்குகள் நாம் தமிழருக்கு விழுந்து இருக்கு.

 

உங்கள் வரவிற்கு நன்றி.
இனி இங்கும் முகநூலிலும் விஷ ஜந்துக்கள் அண்டாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, goshan_che said:

தவிர இஸ்ரேலை பற்றி கதைச்சா கோசான் மொசாட்காரன் என்று கிளப்பி விட்டுவாங்களோ என்ற பயமுமிருக்கு 😂.

நான் நம்பீட்டன் !!!😄

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, குமாரசாமி said:

ஆஆஆஆஆஆஆஆ.ராசா கூட போகலியா??

போறாரே...அவர் இல்லாமலா?

 

1 hour ago, இசைக்கலைஞன் said:

பலரும் நினைப்பது போல் தமிழக களம் கிடையாது. இந்த தேர்தலில் வென்று பிரதமர் ஆகும் எண்ணம் நாம் தமிழருக்கு இருக்கவில்லை. அவ்வளவு ஏன். வாக்கு எண்ணப்படும் முன்னரே 5% என நாம் தமிழர் கட்சிக்காரர்களே கணித்துவிட்டார்கள். யாருக்கும் ஏமாற்றம் இல்லை. இது ஒரு நீண்டதூர ஓட்டம். பலனை அறுவடை செய்யும் காலத்தில் ஒட்டுமொத்த தமிழருக்கும் அது நன்மை பயப்பதாக அது அமையும்.

பிரதமர் ஆகும் எண்ணம் ராகுல் காந்திக்கே இருக்கவில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, goshan_che said:

பிரதமர் ஆகும் எண்ணம் ராகுல் காந்திக்கே இருக்கவில்லை. 

அட்ரா..........அட்ரா.........அட்ரா.........அடி சக்கை அம்மன் கோயில் புக்கை எண்டானாம்.....:cool:

Link to comment
Share on other sites

6 hours ago, கிருபன் said:

 

 

இது ஓர் வாட்ஸப் பதிவு..

எமது இனத்தையும் தலைமையையும் வைத்து பிழைப்பு நடாத்திய சீமானிற்கு பலத்த அடி. வெறும் உணர்ச்சிப் பேச்சுக்களால் தமிழ்த்தேசியத்தை வைத்து ஊழிக்கூத்தாடிய சீமான் நிராகரிக்கப்பட்டமையானது எமது புலம் பெயர் தமிழ்த் தேசிய வாதிகளும் தங்களை மீளாய்வுக்குட்படுத்த வேண்டும். புலம்யெர் ஈழ  மக்களின் பணமும் இம் முறை சீமானின் தேர்தல் நிதிக்காக  அனுப்பப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.அவர் உயிரோடைஇருக்கிறார்...நம்புங்கள் நாளை நமக்கு ஒரு நாடு பிறக்கும் என்பதே சீமானின் இலட்சிய வாசகங்கள்...இனிமேல் தன்னும் எங்கள் தேசிய உணர்வை தலைமையை சீமான் கொச்சைப்படுத்த அனுமதிக்கக் கூடாது.அதனை வைத்து அரசியல் வியாபாரம் புரிய துணைபோகக் கூடாது.

அட இந்த கூட்டம் இன்னும் இருக்கா? முன்பு சிலர் சில உண்மைத்தன்மையற்ற செய்திகைளை சொல்லி அதை உண்மை என்று வாதிட்டுக் கொண்டு இருப்பார்கள் .எப்படி இதை உண்மை என்று சொல்கிறாய் என கேட்டால் அவர்கள் சொல்வது இன்ரர் நெற்றில் பார்த்தது என்று அதுவும் எந்த இணையத்தளதில் இருந்து என்றும் தெரியாது ஆக அவர்களுக்கு இன்ரர் நெற்றில் இருக்கிறதெல்லாம் உண்மை என்று நம்பினார்கள். அதே மாதிரி இப்போ வாட்சப்பில் வருகிறது எல்லாம் உண்மை என்று நம்பவும் ஒரு கூட்டம் இருக்கிறது.

Link to comment
Share on other sites

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தி மு க இப்படி வெல்லும் என்றும் நான் எதிர்பார்க்கவில்லை 

வாக்குகளை களவாடி என்றாலும் 3 பா ஜா க கார்கள் தமிழகத்தில் 
வெல்லுவார்கள் என்றும் எதிர்பார்த்தேன்.

நாம் தமிழர் கட்சி முடிவு இந்தளவுக்கு நான் எதிர்பார்க்கவே இல்லை 
இது பெருத்த வெற்றியாக நான் பார்க்கிறேன்.

ராகுல் காந்தி ... இந்த நேரு குடும்பம் தோத்து தோத்து 
அரசியலை விட்டே ஓட வேண்டும் என்று எதிர்பார்த்தேன் 
கொஞ்சம் என்றாலும் நடந்தது மகிழ்ச்சி.
பிரியங்கா என்பவர் கொழுத்த அடாவடி காரி சாதாரண 
மனிதர்களை மதிக்க கூட தெரியாதவர் இந்த தேர்தலுக்கு போட்ட 
நாடங்களை பார்த்து பார்த்து வயிறு எரிந்துகொண்டு இருந்தேன்.
நேரு குடும்பத்தை புறம் தள்ளிய காங்கிரஸ் உருவாக வேண்டும் என்பதே எனது ஆசை. 

Link to comment
Share on other sites

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, இசைக்கலைஞன் said:

நாம் தமிழர் கட்சியினர்  4.34 வீதமான வாக்குகளை பெற்றுக் கொண்டமையே..  வெற்றி தான்.
சீமான் முன்பு குறிப்பிட்டது போல்... தனது வாக்காளர்கள், பாடசாலையில் படித்துக் கொண்டு இருக்கின்றார்கள். அவர்களுக்கு வாக்குப் போடும் வயது வரும் போது... தமது கட்சி ஆட் சியை பிடிக்கும் என்றார்.  அது உண்மையாகி வருகின்றது போலுள்ளது.

Link to comment
Share on other sites

இங்கு இருக்கும் சிலர் நாம் தமிழர் மீது திமுக காரர் அளவுக்கான காழ்ப்புணர்வை கொண்டிருக்கிறார்கள் என கருத்துக்களை பார்க்கும் போது தெரிகிறது.. நான் கூட சீமானை  நண்பர்களிடத்தில் ஓட்டோ ஓட்டென ஓட்டுவேன்..அதற்காக கண்முன் தெரியும்  அவரின் கட்சியின் வளர்ச்சியினை மறுதலிப்பது நேர்மையற்ற அணுகுமுறை ..சீமான் கட்சி வெற்றி பெறவில்லை வளர்ச்சி இருக்கிறது ..இது அவர்களின் இரண்டாவது தேர்தல் ..கமலின் ஜனவசியத்துடன் சீமானை ஒப்பிட முடியாது இருந்தும் கமலின் கட்சி வாங்கிய மொத்த ஓட்டுகளை விட சீமானின் கட்சியினர் கிட்டத்தட்ட 1 லட்சம. வாக்குகள் அதிகம் 

சீமான் கட்சியில் நின்றோர் எவரும் 10ஆயிரத்திற்கு குறைவான வாக்குகள் இல்லை கமல்கட்சியில்  ஆக்க்குறைந்த வாக்கு எண்ணிக்கை இருக்கு..

சீமானிற்கு முட்டும் கொடுக்க வேண்டாம் அவர்மேல் காழ்ப்பணர்வும் வேண்டாம் நாங்கள் பார்வையாளர்கள் தானே அவர்களின் அரசியலில் பங்காளர்கள் இல்லையே.. ஆரம்பத்தில் எல்லோரும் பிழை விடுவது உண்டு காலம்செல்ல செல்ல அவர்களாகவே திருந்தவும் சந்தர்ப்பம் உண்டு தானே..

சீமானையோ அவரின் கட்சியினையோ தவிர்த்து அல்லது தோற்கடித்து விட்டு தமிழக மக்கள் என்ன ஆபிரகாம் லிங்கனையோ அல்லது லீ குவான் யூ வையா கொண்டுவரப்போறார்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாம் தமிழர் கட்சி தீவிர வலதுசாரிக் கட்சி. Mainstream கட்சியாக வரவேண்டுமென்றால் நடுவுக்கு வரவேண்டும். பலரை அனுசரித்துப்போகவேண்டும். அப்படி சீமான் ஒரு நிலை எடுப்பாரா தெரியாது. தீவிர வலதுசாரிகளுக்கு ஆதரவு கொடுக்கும் கூட்டம் ஒருபோதும் ஐந்து வீதத்தைத் தேறாது!

விகிதாசார வாக்குமுறை இருக்குமட்டும் அதிமுக, திமுக போன்ற கட்சிகளுடன் கூட்டுச் சேராமல் நாம் தமிழர் கட்சி MP களையோ MLA களையோ கொண்டுவரமுடியாது.

முள்ளிவாய்க்கால் அவலம் நடந்த 2009இல் இலண்டனில் மாவீரர் நாள் நடந்தபோது, சீமான் வானலையூடாக உரையாற்ற வர நம்ம வாலுகள் அப்ப இருந்த சோகத்திலும் அடித்த விசில் இருக்கே. அது என்னால் மறக்கமுடியாது. இந்த விசிலடிச்சான் கூட்டங்கள் மக்களின் அவலங்களைத் தீர்க்க கடந்த பத்து வருடங்களில் உருப்படியாக எதுவும் செய்யவில்லை. ஆனால் இந்தமுறை முள்ளிவாய்க்கால் இனவழிப்பு நினைவுக்குப் போனபோதும், அங்கு கோஷம் வைத்த ஒரு சிலர் சீமானுக்குப் பின்னால் ஒன்றுதிரளவேண்டும் என்றனர். அப்படியானவர்கள் யாழ் களத்திலும் இருக்கத்தானே வேண்டும்.😃

 

Link to comment
Share on other sites

9 hours ago, கிருபன் said:

 புலம்யெர் ஈழ  மக்களின் பணமும் இம் முறை சீமானின் தேர்தல் நிதிக்காக  அனுப்பப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

இவ்வாறான வாட்சப் பதிவை நீங்கள் இங்கு இணைத்து மேற்கோள் காட்டுவதுதான் நம்ப முடியாமல் உள்ளது. புலம்பெயர் தமிழர் வாழ்வாதராத்துக்காக பிச்சை எடுக்கும் முன்னாள் போராளிகளுக்கு கூட  பணம் அனுப்ப மறுக்கும் நிலையில் சீமானுக்கு அனுப்பினார்கள் என்று ஒரு துத்தேறி வாட்சப்பில் எழுதினால் அதை நம்புறதுக்கும் ஒரு கூட்டம் இருக்கு என்றால் இதை எல்லம் எப்படி புரிந்துகொள்வதென்றே தெரியவில்லை. 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, சண்டமாருதன் said:

என்றுரு துத்தேறி வாட்சப்பில் எழுதினால்

அவர் என்னுடன் படித்தவார்தான்😀

ஆதாரம் இருக்கு என்று வேறு சொல்லியுள்ளார். கேட்டிருக்கின்றேன்.

Link to comment
Share on other sites

8 hours ago, ரஞ்சித் said:

ஈழத்தமிழராகிய நாம், உள்நாட்டுத் தேர்தல்களைக் காட்டிலும், இந்திய - தமிழகத் தேர்தல்களில் அதிக கவனம் செலுத்துவது ஏன் என்று நினைக்கிறீர்கள்?

உள்நாட்டுத் தேர்தல் முடிவுகள் எமது வாழ்வில் செலுத்தும் ஆதிக்கத்தை விட, இந்தியத் தேர்தல் எமது வாழ்வில் அதிக ஆதிக்கத்தையும், பாதிப்பையும் ஏற்படுத்தும் ஒரு சக்தியாக கடந்த 40 வருடங்களாக இருக்கிறது என்று எடுத்துக்கொள்ளலாமா? இது உண்மையாகவே ஒரு சாபமாகத் தோன்றவில்லையா? எமது தலைவிதியை அந்நிய நாட்டு .... தீர்மானிப்பதற்கு நாம் செய்த தவறுதான் என்ன?

 

ஈழத்தமிழரின் வலிமை என்பது தமிழகத்திலேயே உள்ளது. தனியே ஈழத்தமிழர் என்பது எங்கும் எடுபடாது குறிப்பாக புலிகளின் முடிவுக்குப் பின்னர் எடுபடாது. புலிகளின் முடிவு ஒரு அமைப்பின் முடிவு மட்டுமல்ல ஈழத் தமிழர்களின் அசியலின் முடிவும் அதுவே.  ஒரு வலுவான அரசியல் இயங்குதளத்திற்குரிய நிலப்பரப்போ இல்லை மக்கள் தொகையோ அற்றவர்கள். இருக்கும் மக்கள் தொகைக்குள்ளும் சாதி மத பிரதேசவாதங்களால் பிளவுபட்டு இனத் தேசியத்தை இரண்டாம் மூன்றாம் நிலையில் வைதிருப்பவர்கள் ஈழத் தமிழர்கள்.. பாதுகாப்பு பொருளாதரா நலன்கள் சார்ந்து  பாரம்பரிய நிலத்தை விட்டு குடிபெயர்வதில் ஈடுபடுபவர்கள். நாம் ஏற்கனவே குடிபெயர்ந:து தான் இதையும் எழுதுகின்றோம். அதிகமான நிலப்பரப்பும் அதிகமான மக்கள் தொகையும் கொண்ட தமிழகமே ஈழத்தமிழருக்கு தெரியும் நம்பிக்கை. தமிழகமும் இந்தியத்துக்குள் சிக்குப்பட்டிருப்பதால் அங்குள்ள அரசியலில் ஆர்வம் ஏற்படுகின்றது. நாம் ஈழத் தமிழர் என்பது ஒரு ஒப்பனைப் பேச்சு தவிர அதில் எந்த தனித்துவமும் கிடையாது. சற்று தனித்துவத்தை சுரண்டினால் யாழ்பாணி மட்டக்கிளப்பான் அந்த சாதி இந்த சாதி அந்த மதத்தவன் இந்த மதத்தவன் அல்லது அந்த இயக்கம் இந்ந இயக்கம் என்று வேறு எல்லைகளுக்குள் தனித்துவம் சென்றுவிடும். அதனால் இனத்துக்கென்று பொது அரசியல் கிடையாது.  ஈழத்துக்கான அரசியல் என்பது ஆட்சியாளர்களை அண்டிப்பிழைத்தல் என்பது மட்டும் தான். அது ஒல்லாந்தரை அண்டிப் பிழத்தாலும் சரி பின்னர் ஆங்கிலேயர்  இன்று சிங்களவர்களளை அண்டிப்பிழைத்தாலும் சரி இதுவே பாரம்பரிய அரசியல். புலிகள் இதற்கு விதி விலக்கு. அதனால் தான் புலிகளின் முடிவு இனத்துக்கான அரசியலின் முடிவாகின்றது. புலிகளின் முடிவுக்கு பின்னர் தமிழகத்தில் நாம் தமிழர் கட்சி இனத்துக்கான அரசியலையும்  நில வளங்களை பாதுகாக்கும் பரப்புரைகளையும் முடிந்தளவு செய்வதால் அதன் மீது ஆர்வம் ஏற்படுகின்றது. 

சோ கால் புத்திஜீவிகள் , தேசீயத்தை குத்தகைக்கு எடுத்துவர்கள் தேசீயத் தலைவரை குத்தகைக்கு எடுத்தவர்கள் சொட்டை  நொட்டை  நையாண்டிகள் செய்துகொண்டே இருப்பார்கள் தவிர யார் சரியானவர் அல்லது எது சரியான திசை என்பதை சுட்டிக்காட்ட மாட்டார்கள் ஏனெனில் சுட்டிக் காட்ட முடியாது. அவ்வாறு எதுவும் இல்லை.

(இது உங்களுக்கான பதில் இல்லை, எனது கருத்துக்கு உங்கள் கருத்து வலிந்து மேற்கோள் காட்டப்பட்டுள்ளது)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, சண்டமாருதன் said:

 

ஈழத்தமிழரின் வலிமை என்பது தமிழகத்திலேயே உள்ளது. தனியே ஈழத்தமிழர் என்பது எங்கும் எடுபடாது குறிப்பாக புலிகளின் முடிவுக்குப் பின்னர் எடுபடாது. புலிகளின் முடிவு ஒரு அமைப்பின் முடிவு மட்டுமல்ல ஈழத் தமிழர்களின் அசியலின் முடிவும் அதுவே.  ஒரு வலுவான அரசியல் இயங்குதளத்திற்குரிய நிலப்பரப்போ இல்லை மக்கள் தொகையோ அற்றவர்கள். இருக்கும் மக்கள் தொகைக்குள்ளும் சாதி மத பிரதேசவாதங்களால் பிளவுபட்டு இனத் தேசியத்தை இரண்டாம் மூன்றாம் நிலையில் வைதிருப்பவர்கள் ஈழத் தமிழர்கள்.. பாதுகாப்பு பொருளாதரா நலன்கள் சார்ந்து  பாரம்பரிய நிலத்தை விட்டு குடிபெயர்வதில் ஈடுபடுபவர்கள். நாம் ஏற்கனவே குடிபெயர்ந:து தான் இதையும் எழுதுகின்றோம். அதிகமான நிலப்பரப்பும் அதிகமான மக்கள் தொகையும் கொண்ட தமிழகமே ஈழத்தமிழருக்கு தெரியும் நம்பிக்கை. தமிழகமும் இந்தியத்துக்குள் சிக்குப்பட்டிருப்பதால் அங்குள்ள அரசியலில் ஆர்வம் ஏற்படுகின்றது. நாம் ஈழத் தமிழர் என்பது ஒரு ஒப்பனைப் பேச்சு தவிர அதில் எந்த தனித்துவமும் கிடையாது. சற்று தனித்துவத்தை சுரண்டினால் யாழ்பாணி மட்டக்கிளப்பான் அந்த சாதி இந்த சாதி அந்த மதத்தவன் இந்த மதத்தவன் அல்லது அந்த இயக்கம் இந்ந இயக்கம் என்று வேறு எல்லைகளுக்குள் தனித்துவம் சென்றுவிடும். அதனால் இனத்துக்கென்று பொது அரசியல் கிடையாது.  ஈழத்துக்கான அரசியல் என்பது ஆட்சியாளர்களை அண்டிப்பிழைத்தல் என்பது மட்டும் தான். அது ஒல்லாந்தரை அண்டிப் பிழத்தாலும் சரி பின்னர் ஆங்கிலேயர்  இன்று சிங்களவர்களளை அண்டிப்பிழைத்தாலும் சரி இதுவே பாரம்பரிய அரசியல். புலிகள் இதற்கு விதி விலக்கு. அதனால் தான் புலிகளின் முடிவு இனத்துக்கான அரசியலின் முடிவாகின்றது. புலிகளின் முடிவுக்கு பின்னர் தமிழகத்தில் நாம் தமிழர் கட்சி இனத்துக்கான அரசியலையும்  நில வளங்களை பாதுகாக்கும் பரப்புரைகளையும் முடிந்தளவு செய்வதால் அதன் மீது ஆர்வம் ஏற்படுகின்றது. 

சோ கால் புத்திஜீவிகள் , தேசீயத்தை குத்தகைக்கு எடுத்துவர்கள் தேசீயத் தலைவரை குத்தகைக்கு எடுத்தவர்கள் சொட்டை  நொட்டை  நையாண்டிகள் செய்துகொண்டே இருப்பார்கள் தவிர யார் சரியானவர் அல்லது எது சரியான திசை என்பதை சுட்டிக்காட்ட மாட்டார்கள் ஏனெனில் சுட்டிக் காட்ட முடியாது. அவ்வாறு எதுவும் இல்லை.

(இது உங்களுக்கான பதில் இல்லை, எனது கருத்துக்கு உங்கள் கருத்து வலிந்து மேற்கோள் காட்டப்பட்டுள்ளது)

சண்டமாருதன்,

வெகு எதார்த்தமான பார்வை உங்களது । 

இந்திரா காந்தி ரேபரேலியில் தோற்ற சமயம் - முடிவு வந்தது பின்னிரவில் - நான் சிறு வயது - நன்கு தூங்கிக் கொண்டிருந்த மூத்த தமயனாரை எழுப்பி இந்த விடயத்தை பகிர்ந்து கொண்டேன் । அந்தளவு இந்திய அரசியல் இரத்தத்தில்  ஊறிக் கிடக்கு.

ஆம் இலங்கை அரசியலை போல இந்திய அரசியலும்   இலங்கைத்   தமிழருக்கு முக்கியமானது  தான் । எமது அடிப்படைப் பிரச்சனையின் தோற்றப்பாடே  இந்த அம்சத்திலிருந்து தானே எழுந்தது !.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, கிருபன் said:

ம்க்கும்😁 சீமான் படமெடுத்து அது ஓடி தயாரிப்பாளர்களும் அவரும் கோடீஸ்வரர்களாகி விடுவார்களாக்கும்🤣😂

தமிழ்நாட்டில் தேர்தல்களில் தொடர்ந்தும் சீமானின் நாம் தமிழர் நிற்கவேண்டும். 5 வீதம் வாக்கு வாங்கி கிச்சுகிச்சு மூட்டவேண்டும். வாலுகள் அதை பெருமையாகக் கொண்டாடவேண்டும் என்று எல்லாம் வல்ல இயற்கையையும், ஆதி மூலர்களையும், எங்கபாட்டன் முருகப்பெருமானையும் வேண்டிக்கொள்கின்றேன்😆

 

சிலருக்கு  ஒருவரை பிடிக்காவிட்டால் அவர் எது செய்தாலும் தவறுதான் என்று முட்டையில் மயிர் புடுங்குவதே வேலையாகி விட்டது. பாகிஸ்தானில் இம்ரான்கான் பிரதமராகவர 22 வருடங்கள் எடுத்தது. அதுவரை அவர் மிக பொறுமையாகவே தனது அரசியலை மிகவும் அடிமட்டத்தில் இருந்து வளர்த்தெடுத்தார் . அது சிலருக்கு புரியவில்லை போல. சிலருக்கு தாங்கள் மட்டும்தான் பெரிய அரசியல் விற்பன்னர்கள் மற்றவர்கள் எல்லாம் மடையர்கள் என்றநினைப்பு. சீமான் செய்வது எல்லாம் சரியென்று இங்கு நான் சொல்ல வரவில்லை. ஆனால் அவருக்கிருக்கும் அரசியல் அறிவு (சுத்தமான) இங்கு குத்திமுறியும் பலருக்கு 1% கூட இல்லை. அதில் நக்கல் வேறை.

அதுசரி தமிழனை ஒரு தமிழன்தான் ஆள வேண்டும் என நினைப்பதில் என்ன தவறு இருக்கிறது. இந்தியாவில் வேறெந்த மாநிலத்திலாவது வேற்று மாநிலத்தவர் முதலமைச்சராக வரமுடிந்ததா அல்லது முடியுமா? தமிழன்தான் இளிச்சவாய் கூட்டம் அவன் தலையில்தான் எல்லோரும் மிளகாய் அரைக்க வெளிக்கிடுகிறார்கள். இங்கும் சில கள உறவுகள் உட்பட.

தமிழகத்தில் பிரச்சனை சீமானின் பேச்சுக்களால் மட்டும் மாறிவிடப்போவதில்லை என்பது எல்லோருக்கும் தெரியும். எப்போது ஒவ்வொரு தமிழனும் கிடைக்கும் இலவசங்களும் திறக்கப்படும் டாஸ்மார்க்குகளும் தங்கள் இனத்தை ஒரு உறங்கு நிலையில் வைத்திருக்க திராவிடக் காட்சிகள் செய்யும் மாயாஜாலமே என்று புரிந்து கொண்டு விழித்தெழுகிறார்களோ அன்றுவரை  தமிழக தமிழனை  அந்த ஆண்டவனே வந்தாலும் காப்பாற்ற முடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, goshan_che said:

நாதம்ஸ்,

எனக்கென்னவோ நீங்கள் பிரண்ட பக்கத்துக்கு குறி சுடுறாப்ப்போல படுது.

நீங்கள் சொல்லியதை விட ஸ்டாலின் அசுர பலத்தோடு எழுந்துள்ளார் என்பதே உண்மை.

உடனே என்னை ஸ்டாலின்னின் கூஜா எண்டு சொல்ல வேண்டாம். திமுக வை நானும் வெறுக்கிறேன் ஆனால் அரசியல் அனுமானம் என்பது எமது விருப்பு வெறுப்புக்கு அப்பாற்பட்டதே.

ரத்தான கதிர் ஆனந்த் தொகுதி தவிர திமுக போட்டியிட்ட 19 இலும் 19/19 வெற்றி.

தமிழ்நாட்டில் இடைத்தேர்தலில் ஆளும் கட்சி வெல்லுவதே வழமை. அதிலும் 13/22 என்பது இடைத்தேர்தல் என்று பார்க்கும் போது கணிசமான வெற்றியே.

 

 

கோசான் மக்களவை தேர்தலில் ஸ்டாலின் வென்றது BJP க்கு  எதிரான தமிழக மக்களின் உணர்வலையே ஒழிய DMK யின் பெரும் வளர்ச்சியல்ல. சட்டமன்ற தேர்தலில் அவர்களால் அந்தளவு வெற்றியை பெறமுடியவில்லையே. 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கூகா என என் கிளை கூடி அழப் போகா வகை, மெய்ப்பொருள் பேசியவா நாகாசல வேலவ நாலு கவித் தியாகா சுரலோக சிகாமணியே.    
    • அதெல்லாம் இருக்கட்டும், குஜாரத்தில் தானே தீவைத்த இந்துக்களின் ரயிலுக்குப் பழிவாங்க ஆயிரமாயிரம் முஸ்லீம்களைப் படுகொலை செய்ததற்காக அமெரிக்காவே இவருக்கு தடை விதித்திருந்தது. இந்த லட்சணத்தில் இந்தியஅ மனிதநேயத்திற்குப் பாதுகாப்பான நாடாம். 
    • தமிழ்ப் பொதுவேட்பாளரை இறக்கி ரணில் ஐய்யாவுக்கு விழப்போற வாக்குகளைத் தடுத்துப்போடுவாங்கள் என்கிற கவலையில இருக்கிறம் உங்களுக்கு நக்கலாக் கிடக்கு என்ன?  ரணில் மாத்தையாட்ட, ஜயவேவா!
    • நீங்கள் அரசாங்கத்துடன் திம்புவில் பேசலாம், நான் இராணுவத்துடன் கிரிக்கெட் விளையாடினால் தவறோ? ‍- பரி யோவானின் ஆனந்தராஜனும், இந்தியர்களை அலைக்கழித்த இலங்கையும்   மறுநாளான ஆடி 24 ஆம் திகதி டிக் ஷிட் அவர்கள் நீலன் திருச்செல்வத்தைச் சந்தித்தார். தமிழர்களின் பிரச்சினையின் சிக்கல்களை பண்டாரி சரியாக உணர்ந்துகொள்ளத் தவறிவிட்டதாக டிக் ஷிட்டிடம் தெரிவித்தார் நீலன். மேலும் பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வொன்றினைக் கண்டுபிடிக்குமாறு பண்டாரி  அழுத்தம்கொடுத்து வந்தமை, ஜெயாரிற்கு தமிழர்களுடன், தீர்வெதனையும் தராத, வெற்றுப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும் வாய்ப்பினையும் ஏற்படுத்திக் கொடுத்திருப்பதாகவும் நீலன் கூறினார். சந்திரிக்காவின் ஆட்சியின்போது பிரபல சிங்கள இனவாதியான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸுடன் இணைந்து தீர்வுப்பொதியொன்றினைத் தயாரித்த நீலன் திருச்செல்வம் மேலும், டிக்ஷிட்டிடன் பேசும்போது தமிழரின் தாயகம் தொடர்பாகவும், அதனை திட்டமிட்ட அரச ஆதரவிலான சிங்களக் குடியேற்றங்கள் மூலம் இரு துண்டுகளாக உடைக்க சிங்களவர்கள் முயன்றுவருவது குறித்தும் விளக்கியதோடு, தமிழர்கள் தமது தாயகத்தில் சுயநிர்ணய உரிமைகொண்டவர்களாக வாழ்தலே எந்தவொரு தீர்விற்கும் அடிப்படையாக அமைதல் வேண்டுமென்றும் அழுத்தமாகக் கூறினார்.  இதற்குக் குறைவான எந்தத் தீர்வினையும் தமிழர்கள் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்பதனையும் அவர் டிக்ஷிட்டிடம் தெரிவித்தார். நீலனுக்குப் பதிலளித்த டிக்ஷிட், இவ்விடயங்கள் குறித்து தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் ரஜீவிடமும், பண்டாரியிடமும் தெளிவாகப் பேசவேண்டும் என்று கூறினார். "இனப்பிரச்சினையின் தீர்விற்கான அடிப்படை குறித்த ஆவணம் ஒன்றைத் தயாரித்து ஜெயாருக்கு அனுப்பிவைப்பதற்காக என்னை தில்லிக்கு அழைத்திருக்கிறார்கள். நான் நாளை பயணமாகிறேன். நீங்கள் என்னிடம் தற்போது கூறிய விடயங்களை தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினர் ஒரு ஆவணமாகத் தயாரித்து அனுப்பினால், நாம் ஜெயாருக்கு அனுப்பவிருக்கும் ஆவணத்தை அதன் அடிப்படியில் உருவாக்கிக்கொள்ளலாம்" என்று நீலனை நோக்கிக் கூறினார் டிக்ஷிட்.    அப்போது சென்னையில் தங்கியிருந்த அமிர்தலிங்கத்திடம் இவ்விடயங்கள் குறித்து நீலன் தெரிவித்தார். அதன் பின்னர் ஆடி 26 ஆம் திகதி தமது பேரம்பேசலின் நிலைப்பாடு குறித்த விளக்கமான கடிதம் ஒன்றினை அமிர்தலிங்கமும், சிவசிதம்பரமும் ரஜீவ் காந்திக்கு அனுப்பி வைத்தனர். அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த சில முக்கிய விடயங்கள் கீழே, "தமிழர் பிரச்சினைக்கான எந்தவொரு தீர்வின் அடிப்படையும் தமிழர்கள் தமது தாயகத்தில் தம்மைத்தாமே ஆளும் உரிமையினை உறுதிப்படுத்துவதாக இருக்க வேண்டும். பலஸ்த்தீனத்தில் இஸ்ரேல் செய்துவருகின்ற திட்டமிட்ட ஆக்கிரமிப்பிற்கு நிகரான ஆக்கிரமிப்பினை இலங்கையில் தொடர்ச்சியாக ஆட்சிக்கு வரும் சிங்கள அரசுகள் செய்துவருவதுடன்,  தமிழர் தாயகத்தின் ஒருமைப்பாட்டினைச் சிதைக்கும் நோக்குடன், தமிழர்களின் ஆட்சேபணைக்கு மத்தியிலும், அரச ஆதரவிலான திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை சுதந்திரக் காலத்திலிருந்து செய்து வருகின்றன". "தமிழர் தாயகத்தை இரண்டாகத் துண்டாக்குவதன் மூலம் கிழக்கு மாகாணத்தில் தமிழர்களை முற்றாக அழித்துவிட சிங்கள அரசுகள் முயன்று வருகின்றன. கிழக்கில் தமிழர்களை அப்புறப்படுத்துவதனூடாக தமிழர்களின் பிரச்சினைக்கான தீர்வை வழங்கமுடியும் என்று ஜெயவர்த்தன கருதிவருகின்ற போதிலும், நீங்கள் அதனை ஒரு தீர்வாக ஏற்றுக்கொள்ள மாட்டீர்கள் என்று நம்புகிறோம். தமது தாயகம் துண்டாடப்படுவதை தமிழர்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை" என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.  புலிகளின் எச்சரிக்கைகளுக்கு மத்தியிலும் இலங்கை இராணுவத்துடன் துடுப்பாட்டப் போட்டியொன்றினை ஒழுங்குசெய்த பரி யோவான் கல்லூரி அதிபர் ஆனந்தராஜன்  ஆடி 27 ஆம் திகதி மாலை டிக்ஷிட் தில்லியை வந்தடைந்தார். அந்நாள் காலையிலேயே யாழ்ப்பாணம் புனித யோவான் கல்லூரியின் அதிபர் ஆனந்தராஜா கொல்லப்பட்டிருந்தார். பரி யோவான் கல்லூரியின் துடுப்பாட்ட அணிக்கும், இலங்கை இராணுவத்தின் துடுப்பாட்ட அணிக்கும் இடையிலான சிநேகபூர்வ கிரிக்கெட் போட்டியொன்றினை பரி யோவான் கல்லூரி மைதானத்தில் நடத்த முயன்றதனால் அவர் சுடப்பட்டார். போட்டியினை நடத்துவதற்கான முயற்சிகளில் அவர் இறங்கியபோது புலிகளால் பலதடவைகள் அவருக்கு அதனைச் செய்யவேண்டாம் என்று எச்சரிக்கைகள் விடப்பட்டு வந்தன. ஆனால், அவ்வெச்சரிக்கைகளை உதாசீனம் செய்த ஆனந்தராஜா, "நீங்கள் அரசாங்கத்துடன் திம்புவில் பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்றால், இராணுவத்துடன் கிரிக்கெட் ஆட்டம் ஒன்றினை நான் ஒழுங்குசெய்வதில் என்ன தவறு இருக்க முடியும்?" என்று அவர் பதிலுக்கு தனது செயலை நியாயப்படுத்தி வந்தார்.  யாழ்ப்பாண மக்களின் மனங்களையும், இதயங்களையும் வென்று, அவர்களின் ஆதரவினைப் பெற்றுக்கொள்ளும் நோக்குடன் யாழில் இயங்கிவந்த சில பிரபல பாடசாலைகளுடன் சிநேகபூர்வமான துடுப்பாட்டம் மற்றும் கால்பந்தாட்டப் போட்டிகளை இலங்கை இராணுவம் ஒழுங்குசெய்யத் திட்டமிட்டு வந்தது. இலங்கை அரசாங்கத்திற்கெதிராக மக்களை அணிதிரட்டும் தமது முயற்சியை இராணுவத்தினரின் "யாழ் மக்களின் மனங்களையும், இதயங்களையும் வெல்லுதல்" முயற்சி பாதிக்கக் கூடும் என்று கருதிய போராளிகள், இராணுவத்தின் இந்த முயற்சிக்கு எவரும் ஆதரவளிக்கக் கூடாது என்று கூறி வந்தனர். இன்று மேற்கு நாடொன்றில் வசிக்கும் புலிகளின் முன்னாள்ப் போராளியொருவரே ஆனந்தராஜாவைச் சுட்டுக் கொன்றிருந்தார். ஆனந்தராஜாவைத் தாமே கொன்றதாக புலிகள் உரிமைகோரும் துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டனர். தாம் பலமுறை வழங்கிய எச்சரிக்கைகளையும் மீறி இராணுவத்துடன் துடுப்பாட்டப் போட்டியை நடத்துவதில் உறுதியாக நின்றமைக்காகவே அவருக்குத் தண்டனை வழங்கப்பட்டதாக புலிகளின் அறிவித்தல் கூறியது. ஆனந்தராஜா மீதான தாக்குதல் சொல்லவேண்டியவர்களுக்குத் தெளிவான செய்தியைச் சொல்லியது. இராணுவத்தினருடனான சகலவிதமான சிநேகபூர்வப் போட்டிகளும் யாழ்ப் பாடசாலைகளால்  கைவிடப்பட்டன. யாழ் மக்களின் மனங்களையும், இதயங்களையும் வெல்லும் இராணுவத்தின் முயற்சி பிசுபிசுத்துப் போனது. ஆனந்தராஜா மீதான தாக்குதலை அரசாங்கம் தனது பிரச்சாரத் தேவைக்காகப் பயன்படுத்திக்கொண்டது. இதனை கடுமையான யுத்தநிறுத்த மீறலாகக் காட்டிய அரசாங்கம், ஆனந்தராஜாவின் கொலையோடு சம்பந்தப்பட்டவர்கள் தொடர்பாகத் தகவல் வழங்குவோரு சன்மானமாக ஐந்து லட்சம் ரூபாய்களைத் தருவதாக அறிவித்தது. ஆனால், அரசால் தாக்குதலில் ஈடுபட்டவர்களை இறுதிவரை கண்டுபிடிக்க முடியவில்லை. தில்லியில் தான் தங்கியிருந்த நான்கு நாட்களில் டிக்ஷிட், ரஜீவ் காந்தி, ரஜீவால் பிந்தள்ளப்பட்டிருந்த பார்த்தசாரதி, ரோவின் சக்சேனா மற்றும் சில வெளியுறவுத்துறை அதிகாரிகள் ஆகியோரைச் சந்தித்தார். இச்சந்திப்புக்களின்போது, இலங்கையின் ஒற்றுமையினையும், பிராந்திய ஒருமைப்பாட்டினையும் பாதிக்காத வகையில், தமிழர்கள் முன்வைத்த கோரிக்கைகளுக்குச் சாதகமான வகையில் ஜெயார் முன்வைக்கக் கூடிய ஆலோசனைகளை அவர்கள் தயாரித்தனர். இந்தியாவினால் தயாரிக்கப்பட்ட, கடப்பாடுகள் எதுவும் அற்ற இந்த ஆவணத்தில் இலங்கையினால் முன்வைக்கப்பட்ட அதிகபட்ச அதிகாரப் பரவலாக்கல் அலகான மாவட்ட அபிவிருத்திச் சபையின் அதிகாரங்களை மேம்படுத்துவது தொடர்பாகவே பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டன. தமிழரின் கோரிக்கையான பூர்வீகத் தாயகத்திற்குப் பதிலாக மாகாண அலகினை இலங்கையரசு வழங்க முடியும் என்றும், வடக்கு மாகாணமும், கிழக்கு மாகாணமும் கருத்து ரீதியாக இணைக்கப்படலாம் என்றும் இந்தியா பரிந்துரை செய்திருந்தது. இவ்வாறு அமைக்கப்படும் மாகாணங்களுக்கான அதிகாரங்கள் குறித்துப் பேசும்போது, நிதி , காணியதிகாரம், சட்டம் ‍ ஒழுங்கினை நிலைநாட்டும் அதிகாரம் ஆகியவை மத்திய அரசினால் பகிர்ந்தளிக்கப்படலாம் என்றும் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. மேலும், இந்த இணைந்த மாகாணங்களில் தமிழ் உத்தியோகபூர்வ மொழியாகப் பாவிக்கப்படலாம் என்றும் பரிந்துரை செய்யப்பட்டது. ஜெயாருடன் பார்த்தசாரதி   இரண்டாம் சுற்றுப் பேச்சுக்கள் நடப்பதற்கு சற்று முன்னதாக இந்தியாவின் "கடப்பாடு அற்ற" பரிந்துரைகளின் நகல் ஒன்றினை நீலனிடம் கொடுத்த டிக்ஷிட், "இவை அனைத்தும்  பார்த்தசாரதியின் யோசனைகள் தான்" என்று கூறினார். "பண்டாரிக்கோ, சக்சேனாவுக்கோ இவைகுறித்த எந்தவிதமான அறிவும் இருக்கவில்லை" என்று நீலன் கூறினார்.  தாம் தயாரித்த "கடப்பாடற்ற" பரிந்துரைகளை ஜெயாரிடம் வழங்கி, அவற்றின் அடிப்படையில் தனது தீர்வினை ஜெயார் வரைந்துகொள்ளலாம் என்றும், பண்டாரியின் இரண்டாவது விஜயம் தொடர்பாக அவரை ஆயத்தமாக இருக்கும்படி  கூறுமாறும் டிக்ஷிட்டைப் பணித்தார் ரஜீவ் காந்தி. ஆவணி 2 ஆம் திகதி கொழும்பு வந்திறங்கிய பண்டாரி, அன்று மாலையே ஜெயாரை அவரது உத்தியோகபூர்வ வாசஸ்த்தலத்தில் சந்தித்தார். இச்சந்திப்பில் லலித் அதுலத் முதலியும் உடனிருந்தார். ஜெயாருடனான தனது சந்திப்புப் பற்றி கொழும்பு அசைன்மென்ட்டில் எழுதும் டிக்ஷிட், திம்புப் பேச்சுக்களின் தோல்வி குறித்த இந்தியாவின் அதிருப்தியை ஜெயாரிடம் தெரிவித்ததுடன், இந்தியாவினால் தயாரிக்கப்பட்ட பரிந்துரைகளை அவரிடம் தான் வழங்கியதாகவும் கூறுகிறார். இச்சந்திப்புக் குறித்து நீலனிடம் பேசும்போது, "நான் கொடுத்த பரிந்துரைகளை வாங்கிப் படித்துவிட்டு, சிறிய புன்னகையுடன் அதனை அருகில் நின்ற லலித்திடம் கையளித்தார் ஜெயார்" என்று கூறியிருக்கிறார்.   மேலும், ஜெயாருடன் பேசிய டிக்ஷிட், இலங்கை அரசால் முதலாம் கட்டப் பேச்சுக்களில் முன்வைக்கப்பட்ட ஆலோசனைகள், தமிழ்ப் போராளிகள் தமது ஆயுதங்களைக் கைவிட்டு சமாதானப் பேச்சுக்களுக்குத் திரும்புவதற்குப் போதுமான சலுகைகளைக் கொண்டிருக்கவில்லை என்றும் கூறினார். இடையில் குறுக்கிட்ட லலித் அதுலது முதலி, மிகவும் காட்டமான முறையில் இதற்குப் பதிலளித்தார். "இந்தியா தம்மை ஆதரிக்கிறது என்பதற்காக, தமிழர்கள் தாந்தோன்றித்தனமான முறையில் முன்வைக்கும் நிபந்தனைகள் எல்லாவற்றையும் நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்கிற கட்டாயம் எமக்கு இல்லை" என்று கூறியதுடன், "நீங்கள் தமிழ்ப் பயங்கரவாதிகளுக்கு எவ்வாறான உதவிகளைச் செய்துவருகிறீர்கள் என்பது குறித்தும் நாம் அறிவோம்" என்று நீண்ட விளக்கம் றினையும்  வழ‌ங்கினார். பின்னர் பேசிய ஜெயார், "இலங்கை அரசின் சார்பாக இரண்டாம் கட்டப் பேச்சுக்களை ஹெக்டர் ஜெயவர்த்தனவே நடத்துவார் என்பதனால், அவரிடமே இந்தியாவின் பரிந்துரைகளைக் கையளிக்கிறேன்" என்று டிக்ஷிட்டிடம் கூறினார். மேலும், பண்டாரியின் வருகையினை நாம் வரவேற்கிறோம், அவர் கூறப்போவதைச் செவிமடுக்கவும் ஆயத்தமாக இருக்கிறோம் என்று ரஜீவிடம் கூறுங்கள் என்று கூறினார்.   ஆவணி 8 ஆம் திகதி கொழும்பு வந்தடைந்த பண்டாரி, ஜனாதிபதி ஜெயவர்த்தன, பிரதமர் பிரேமதாச, வெளியுறவு அமைச்சர் ஹமீது, பாதுகாப்பமைச்சர் லலித் அதுலத் முதலி, எதிர்க்கட்சித் தலைவர் சிறிமா ஆகியோரைச் சந்தித்தார்.   ஆனால், பண்டாரியின் ஜெயாருடனான சந்திப்பு பலனற்றுப் போயிற்று. தமிழர்களின் பிரச்சினைக்கு அரசியல்த் தீர்வொன்றினைக் காண்பதற்கு இந்தியாவினால் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளின் அடிப்படையிலான தீர்வொன்றினை இலங்கை முன்வைக்க வேண்டும் என்று பண்டாரி ஜெயாரிடம் கூறினார். இரண்டாம் கட்டப் பேச்சுக்கள் மிகவும் முக்கியமானவை என்று இந்தியா கருதுவதாகவும் அவர் ஜெயாரிடம் தெரிவித்தார். இப்பேச்சுக்களும் தோல்வியடையும் பட்சத்தில் இலங்கை கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரும் என்று  அவர் ஜெயாரை எச்சரித்தார். ஆனால் பண்டாரியின் அழுத்தங்களினால் ஜெயாரைப் பணியவைக்க முடியவில்லை. பண்டாரியுடன் தீர்க்கமான பேச்சுக்களில் ஈடுபடுவதையே ஜெயார் தவிர்த்தார். பண்டாரியைக் கையாளும் பணியினை தனது சகோதரர் ஹெக்டர் ஜெயவர்த்தனவிடமும், லலித் அதுலத் முதலியிடமும் கையளித்தார் ஜெயார். "எனது சகோதரரே இரண்டாம் கட்டப் பேச்சுக்களையும் எமசார்பில் நடத்தவிருப்பதால், நீங்கள் அவரிடமே உங்களின் விளக்கங்களைக் கூறுங்கள்" என்று பண்டாரியை நோக்கிக் கூறினார் ஜெயார். மேலும், "லலித் இதுகுறித்து உங்களுடன் விளக்கமாகப் பேசுவார்" என்றும் அவரிடம் கூறினார்.  பிரேமதாசவுடனான பண்டாரியின் பேச்சுக்கள் பொதுவானவையாக இருந்தன. வழ‌க்கம்போல் "மகாத்மா காந்தியில் நான் மதிப்பு வைத்திருக்கிறேன், இந்தியாவை நேசிக்கிறேன்" என்று பிரேமதாச பண்டாரியிடம் பேசத் தொடங்கினார். பின்னர், பயங்கரவாதத்தினை முற்றாக அழித்துவிட இந்தியா இலங்கைக்கு உதவேண்டும் என்றும் அவர் கோரினார். "தமிழ்ப் பயங்கரவாதம் இருக்கும்வரை, அரசியல்த் தீர்விற்கான சாத்தியங்கள் மிகவும் குறைவானவை. சிங்கள மக்களின் பெருமையும், கெளரவமும் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறன. இந்த நிலையில் அவர்கள் எந்த விட்டுக் கொடுப்பிற்கும் முன்வரப்போவதில்லை. இலங்கையில் சமாதானமும், உறுதிப்பாடும் நிலைநாட்டப்படுவதில் இந்தியாவிற்கு இருக்கும் அக்கறையினை சிங்கள மக்கள் அறிவார்கள், ஆனால் பேச்சுக்களில் மத்தியஸ்த்தம் வகிக்க இந்தியா எடுத்துவரும் முயற்சிகளை சிங்கள மக்கள் சந்தேகக் கண்ணோட்டத்துடன் பார்க்கிறார்கள். நீங்கள் தமிழர்கள் சார்பாகவே செயற்படுவதாக அவர்கள் முற்றாக நம்புகிறார்கள்" என்று அவர் பண்டாரியிடம் தெரிவித்தார். சிறிமாவுடனான சந்திப்பின்போது, "நான் திம்புப் பேச்சுக்கள் தோல்வியிலேயே முடிவடையும் என்று எதிர்பார்த்திருந்தேன். அப்படியே நடந்தது. ஏனென்றால், ஜெயவர்த்தன இப்பேச்சுக்களில் இதய சுத்தியுடன் ஈடுபடவில்லை. இரண்டாம் கட்டப் பேச்சுக்களுக்கும் இதே நிலைதான் ஏற்படும்" என்று பண்டாரியிடம் தெரிவித்தார் சிறிமா.    இலங்கையின் பேச்சுவார்த்தைக் குழுவின் தலைவரான ஹெக்டர் ஜெயவர்த்தனவுடன் பேசும்போது, "பழைய விடயங்களைத் திரும்பத் திரும்ப பேச்சுவார்த்தை மேசையில் பேசுவதைத் தவிருங்கள், எதிர்காலம் குறித்து மட்டுமே நாம் பேசலாம்" என்று கெஞ்சுவது போலக் கோரினார் பண்டாரி. இலங்கை தனது தீர்வினை எந்தெந்த இடங்களில் மேம்படுத்த முடியும் என்பது குறித்த பரிந்துரைகளை இந்தியாவின் "கடப்பாடு அற்ற" ஆவணம் கொண்டிருப்பதாக அவர் சுட்டிக் காட்டினார். இதற்குப் பதிலளித்த ஹெக்டர், "1978 ஆம் ஆண்டு யாப்பின் வரையறைகளை நான் சரியாக ஆராய்ந்து, எனது ஆலோசனைகளை அவற்றின் அடிப்படையில்  முன்வைக்கிறேன்" என்று கூறினார். லலித்துடனான பண்டாரியின் சந்திப்பு வித்தியாசகாம இருந்தது. "கடப்பாடு அற்ற" என்கிற தொனியில் இந்தியா முன்வைத்த அனைத்து பரிந்துரைகளையும் லலித் திட்டவட்டமாக நிராகரித்தார். வடக்கையும் கிழக்கையும் இணைக்கும் இந்தியாவின் யோசனையினை இலங்கை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என்று பண்டாரியிடம் கூறினார் லலித். கிழக்கு மாகாணத்தில் சிங்களவர்களும் முஸ்லீம்களும் இணைந்து பெரும்பான்மையினராக மாறியிருப்பதாகவும், தமிழர்கள் அங்கு சிறுபான்மையினர் என்றும் அவர் கூறினார். மேலும், 1977 ஆம் ஆண்டுத் தேர்தலில் தனிநாட்டிற்கான ஆணையினை கிழக்கு மாகாண மக்கள் தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணிக்கு வழங்கவில்லை என்றும் அவர் வாதிட்டார். 1982 ஆம் ஆண்டின் ஜனாதிபதித் தேர்தலும், சர்வஜன வாக்கெடுப்பும் கிழக்கு மாகாணம் அரசாங்கத்திற்கு ஆதரவாக நிற்பதையே நிரூபித்திருக்கின்றன என்று தனது வாதத்திற்கு மேலும் வலுச் சேர்த்தார் லலித்.  அடுத்ததாக, மாகாண சபைகளுக்கு வழங்கப்படும் அதிகாரங்களை மேம்படுத்தலாம் என்கிற இந்தியாவின் ஆலோசனைகளையும் லலித் புறக்கணித்தார். மாகாண சபைகளுக்கு நிதியதிகாரம், காணியதிகாரம், சட்டம் ஒழுங்கு ஆதிகாரம் ஆகியவற்றை வழங்குவதை சிங்கள மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று அவர் கூறினார். தனிச் சிங்களச் சட்டத்தில் மாற்றங்களைச் செய்யும் அதிகாரமோ, அல்லது 1972 மற்றும் 1978 ஆம் ஆண்டு யாப்புகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கும் நாட்டின் ஒருமைப்பாடு, ஒற்றையாட்சி ஆகியவற்றில் மாற்றங்களைக் கொண்டுவரும் அதிகாரமோ இலங்கையில் எந்த அரசிற்கும் கிடையாது என்றும் அவர் கூறினார். "இந்த விடயங்களில் இலங்கையின் அரசானாலும், எதிர்க்கட்சியானாலும் அவர்கள் அனைவரினதும் நிலைப்பாடு ஒன்றுதான்" என்று மிகுந்த நம்பிக்கையுடன் பண்டாரியைப் பார்த்துக் கூறினார் லலித். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.