Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நான் கடிதம் தந்தேன்-400 பேருக்கு பிரான்ஸ், டென்மார்க், சுவிஸ் குடியுரிமை தந்தது- சீமான் திடுக் தகவல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நந்தன் said:

அருமையான உருட்டல் 😎

கொஞ்சம் பொறுங்கோ! அவர் கையில் எடுத்துக் கொண்ட கிறீஸ் (grease) போத்தல் இன்னும் முடியவில்லை! 😂

  • Replies 204
  • Views 12.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, MullaiNilavan said:

நான் உங்களுக்குச் சேறு அடிக்க வரவில்லை.

இந்த கருத்துக் களம் என்பது எல்லோராலும் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது கண்கூடு.

உதாரணத்திற்கு இந்தியாவிலிருந்து குறிப்பாக தமிழ்நாட்டில் இருந்து கட்டுரைகளை எழுதும் இந்திய ராணுவத்தின் புலனாய்வு இயக்கியவரும் ஓய்வு பெற்றவருமான ஐயா  கேனல் ஹரி.....🤪 உள்ளடங்களாக அந்தந்த வேலைகளைச் செய்யும் பல நபர்கள், உன்னிப்பாக தமிழ் வலைத்தளங்களையும் அதுவும் இந்த இணையத்தை மிக நுணுக்கமாக சொல்லுக்குச் சொல் ஆராய்ச்சி  செய்கிறார்கள் என்பது நன்கு தெரியும்.

நீங்கள் ஏன் இப்படி உளறிக் கொட்டுவது, திட்டுவது ஆரோக்கியமானதாக படவில்லை.

 நான் உங்களுக்கு ஒரு விடயத்தை மட்டும் சற்று நுணுக்கமாக தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

நீங்கள் தூக்கி குடை பிடிக்கும் தலைவனின் தம்பி  சுதன்.  பேங்காக், யுகே யில் குற்றவாளியாக சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு சிறைத்தண்டனை  குற்றவாளி. செய்த குற்றம், எங்களது கொச்சை பாஷையில் கள்ள மட்டை மொட்டை சுதன்.

இவர் இயக்கச்சியில் பிறந்து, அவருடைய உறவினர் ஒருவர் புலிகளின் தலைமைக்கு மிக அருகில் இருந்ததினால் வந்த தொடர்பாடல்களில், தனது இருப்புக்காக கள்ளத்தனமான பண பரிவர்த்தனைகளுக்கு புலிகளையே தான் தப்புவதற்காக தான் செய்த சீர்கேடுகளுக்கு தான் செய்த சீர்கேடுகளுக்கு புலிகளை சுமத்திய ஒரு.....

அது பின்னாளில் திரு சீமான் இடமிருந்து வந்த கல்யாணசுந்தரம் என்ற ஒரு என்பவருடன் தனது இருப்பை மெருகூட்டி ஏதோ தான் ஏதோ தானுறு தமிழர்களின் விடிவெள்ளி, தலைவனின் தம்பி என கோடிட்டு சீரழிக்கும் ஒரு புறம்போக்கு.இத்துடன் அவரைப்பற்றிய தகவல்களை முடிக்கின்றேன். உரியவர்கள்  கண்காணிப்பார்கள் கவனித்துக் கொள்வார்கள்.அது எங்கள் வேலை அல்ல.சட்டம் தன் கடமையை செய்யும்.

இதனைவிட உங்களை மிக நுணுக்கமாக அடையாளப்படுத்த முடியும் ஆனால் நான் இதில் விட்டுவிடுகிறேன்....

தயவுசெய்து அந்த பேய்களின் உடனான உறவுகளை துண்டித்து விடுங்கள்...

தயவுகூர்ந்து ஒன்றை கவனியுங்கள், தமிழர்களின் நலனே முக்கியம். அவர்களின் வாழ்வுரிமை உறுதிப்படுத்தப்பட வேண்டும். அவர்கள் கவனிப்பாரற்ற மாந்தர்கள் அல்ல.

 

இந்த விளையாட்டு பெரிய மைதானத்தில் இப்பொழுது நடக்கின்றது. போட்டியாளர்கள் தமிழர்கள், சிங்களவர்கள் என்ற நிலைமாறி இப்பொழுது  பல போட்டியாளர்களாக நுழைந்துள்ளார்கள்.  விளையாட்டு நடந்து கொண்டிருக்கின்றது...

காலம் கனியும்.....

 

எங்கப்பன் குதிருக்குள்ளிருந்து வெளியே வந்திட்டீங்கள். இன்னும் ஏதாவது புலனாய்வு செய்து உங்கள் கொண்டையை மறைக்கப்பாருங்கள். 

ஒளிக்க இடமில்லாமல் விதானை வீட்டில் ஒளிச்சிருக்கிறியள். 

நீங்கள் எதுவேண்டுமானாலும் எழுதுங்கள். ****உங்கள் புலனாய்வுப்பணி தொடரட்டும். ஆனால் இன்னமும் நீங்கள் வடிவேலுவின் சாயலாகவே தெரியிறீங்கள்.😇

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, shanthy said:

ஒளிக்க இடமில்லாமல் விதானை வீட்டில் ஒளிச்சிருக்கிறியள்

🤣🤣🤣  நன்றி சரி போலீஸ் வீட்டில்  ஒளிச்சி பார்ப்போம்,

 

5 minutes ago, shanthy said:

வடிவேலுவின் சாயலாகவே

ஏதோ அந்த மனுஷன்.....😂

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, shanthy said:

ஆமை அடிக்கடி குறுக்காக வந்து நின்று பொய்சொல்லுதே அதற்கு எனது கருத்தை எழுதுகிறேன். நீங்கள் ஆமை அதிபர் மீதான பக்தியை எழுதுங்கோ அது உங்கள் உரிமை. 

நீங்கள் உங்கள் புழுகு மூட்டைகளை அடித்துவிட்டுக்கொண்டே இருக்கலாம். அதை ரசிப்பதற்குத்தான் நிர்வாகம் இருக்கிறதே! ஆமைக்கரம் அடித்துவிடுவதை அப்படியே வேதவாக்கு என்றுநம்ப நாங்கள் ஒன்றும் மேல்தட்டு இல்லாதவர்களில்லை! சொல்லப்பட்டது பொய்யென்றால் அதை ஆதாரப்படுத்தவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, பெருமாள் said:

உங்களுக்கு ஒரு கதை இந்த திரியில் போய்  பாருங்க மாயா எனும் நமது ஈழத்து பாடகிக்கு சிங்களவன் செய்த கேடு கெட்ட  வேலைகள் 

சமீபத்தில் சிங்களப்பெண்ணின் பாட்டுக்கு நம்ம ஆட்கள் அடித்த பல்டி க்கு உங்களின் கருத்துக்கள் நன்றாக பொருந்துகின்றன கொப்பி ரைட்ஸ் இல்லைதானே 🤣

 

 

நான் என்ன எழுதியிருக்கன் ....நீங்கள் என்னத்தை கொண்டு வந்து இணைக்கிறீர்கள் ..அதுவும் திரியோடு சம்மந்தப்படாத ஒரு   .பதிவு ...தலையை எங்க போய் முட்டுவது ...உதே யாழில் தமிழ்த் தேசியவாதிகள் இந்த மாயாவை  கேவலமாய் கதைத்த பதிவுகள் இருக்கு 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, goshan_che said:

கேட்டு வாங்குவீர்களோ🤣

ஆம்.... நட்புடன் கேட்டேன், கருத்துக்கு நன்றி. 🙏

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 hours ago, Justin said:

விதி மீறலை/உங்கள் நிலையைச் சுட்டிக் காட்டினால் அது "மட்டம் தட்டல்" என்றால் அது அப்படியே இருந்து விட்டுப் போகட்டும்!😉

ஜஸ்டின் யாழ்களத்தில் இது வரைக்கும் கள விதிகளை மீறாதவர் என எடுத்துக்கொள்ளலாமா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
13 hours ago, goshan_che said:

 

லலிதா, பத்மினியும் கேரளாதான் 🤣

ஆனால் இவர்கள் யாரும் பிராசன்ன சில்வாவின் பிள்ளைகள் இல்லை - பொயிண்ட்😎

நான் சிங்கள இனவாதத்திற்கு எதிரானவன். சிங்கள மக்களுக்கு எதிரானவன் இல்லை.

சிங்களம் பாலச்சந்திரனுக்கு செய்ததை   நாம் சிங்கள வருங்கால சமுதாயத்திற்கு செய்யக்கூடாது.

இனவாதம் தொடர்கதையாகி விட சந்தர்ப்பங்கள் உண்டு.

  • கருத்துக்கள உறவுகள்
Just now, குமாரசாமி said:

நான் சிங்கள இனவாதத்திற்கு எதிரானவன். சிங்கள மக்களுக்கு எதிரானவன் இல்லை.

சிங்களம் பாலச்சந்திரனுக்கு செய்ததை   நாம் சிங்கள வருங்கால சமுதாயத்திற்கு செய்யக்கூடாது.

நானும் இனவாதி இல்லை.  சிங்கள மக்களுக்கு என்னாலான சிறு உதவிகளையும் இங்கேயும் நாட்டிலும் செய்துள்ளேன். இனியும் செய்வேன்.

 சிறுவன் பாலசந்திரனுக்கு செய்ததை மனிதர்கள் எவரும் எவருக்கும் செய்யமாட்டர்கள்.

ஆனால் ஒரு இராணுவ தளபதியின் மகளை,  தன் தந்தையின் “வீரப்பிராதாபத்தை” யிட்டு பெருமை கொள்ளும் ஒருவரை, நிச்சயம் பிரபல்யபடுத்த மாட்டேன், கொண்டாட மாட்டேன். 

அவர் அழியவேண்டும் என நினைக்க மாட்டேன் ஆனால் இவரில் எனது ஒரு நிமிடத்துளியையும் செலவழிக்க விரும்பமாட்டேன்.

நீங்களும் அப்படித்தான் என்பது என் அனுமானம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
12 hours ago, shanthy said:

அப்போ எதற்கு தலைவர் பிரபாகரன் பற்றி பேசுகிறீர்கள்?  அவரைப் புரிந்து கொள்ளாத உங்களால் ஈழவிடுதலைப் போராட்டம் பற்றி அறிந்து கொள்ள முடியாது.

சீமான் போன்றவர்களுக்கு கோஷம் போடத்தான் முடியும்.

தமிழ்நாட்டு அரசியலை பொறுத்தவரை ஈழத்தமிழர்கள் யாரை ஆதரிக்கவேண்டும் யாரை ஆதரிக்க கூடாது என்பதை இங்கே வெளிப்படையாக கூறி விடுங்கள். 
இதை நான் உங்களிடம் கேட்பதற்கான காரணம் நீங்கள் ஈழப்பிரச்சனை சம்பந்தமாக உலகறிந்த பிரமுகர்.

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

ஆனால் ஒரு இராணுவ தளபதியின் மகளை,  தன் தந்தையின் “வீரப்பிராதாபத்தை” யிட்டு பெருமை கொள்ளும் ஒருவரை, நிச்சயம் பிரபல்யபடுத்த மாட்டேன், கொண்டாட மாட்டேன். 

கோஷன் இதற்கான ஆதாரம் எதுவும் இருக்கிறதா? இந்த திரி குறித்தது இந்த கேள்வியை வைக்க வில்லை.
எனக்கு இது பற்றிய தகவல்கள் தேவையாய் இருக்கிறது. அவ்வளவே.
 

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, Sasi_varnam said:

கோஷன் இதற்கான ஆதாரம் எதுவும் இருக்கிறதா? இந்த திரி குறித்தது இந்த கேள்வியை வைக்க வில்லை.
எனக்கு இது பற்றிய தகவல்கள் தேவையாய் இருக்கிறது. அவ்வளவே.
 

Youtube இல் போய் රැව්වත් දෑසින් என்று தேடிப்பார்த்தால் ஆதாரம் கிடைக்கலாம் 👀

  • கருத்துக்கள உறவுகள்

தகவலுக்கு நன்றி வாலி. 
முதல் முறையாக இந்த பாடலை கேட்கிறேன்.
இதை இங்கே எழுதுவதற்கு காரணம், பல தமிழ்நாட்டு யூடூப் சானல்கள் பாரிசாலன், களஞ்சியம் போன்றவர்கள் பலவிதமாக பேசி வருகின்றார்கள். இதன் உண்மை தன்மை பற்றி அறிய விரும்பினேன்.
இந்த பாடல் ஒன்றை தான் அவர்கள் குறிப்பிடுகிறார்கள் என்றால் அவர்களின் புறிதலில் சில தவறுகள் இருக்கிறது. தமிழர், புலிகள், பயங்கரவாதிகள் என்ற எந்த சொற்தொடரும் இங்கே இல்லை.
ஆனால் அவர்கள் அப்படிதான் யோகானி பாடியிருக்கிறார் என்று அடித்து சொல்கிறார்கள்.

யுத்த களத்துக்கு சென்ற தந்தையை பிரிந்திருந்த காலங்கள், ஏக்கங்களை, பள்ளிநாட்களை 
மையமாக  வடித்து  இந்த பாடல் அமைந்து இருக்கிறது. ஒரு இடத்தில நீரே எனது சிப்பாய் / ராணுவவீரன்  என்றும் எங்கள் (குடும்பம்) தூயரில் மூழ்கியிருந்த போதிலும் நீங்கள் நாட்டை காத்தீர்கள் என்ற தொனியிலும் இரண்டு வரிகள் எழுதப்பட்டுள்ளன.

அதுதவிர இருக்கும் மீத வரிகள் எல்லாம் ஒரு மகள், தனது தந்தை இல்லாத நாட்கள், அவரை பிரிந்து இருந்த அவலம், பள்ளி நாட்கள்  பற்றியே பேசுகிறது. 

என்னை பொருத்தவரை யோகானி ஒன்னும் பெரிய இசை நட்சத்திரம் அல்ல. நேற்று பெய்த டிக்டாக்  மழையில் முளைத்த காளான், நாளைக்கு இருக்கும் இடம் தெரியாமல் போவார். இன்னும் ஒரு காளான்  முளைத்துக்கொண்டு இருக்கிறது.
அவரின் அப்பா யுத்தக்குற்றவாளி, முள்ளிவாய்க்கால் கொலைகளின் முக்கிய சாட்சியம் என்பதில் இரு கருத்துகள் கிடையாது.

 

රැව්වත් දෑසින් එක හෙලින්

දැනුනා නුඹේ ආදර වදන්

මට සිහිවේ

ඔබේ ගුණ කඳ මං ගයමි දැන්

මගේ ආලෝකය නුඹ සෑම කල්

ඔබ වන්දේ

තේරෙන් නෑ මේක පටන් ගන්න තැන

මට මගේම හීනෙක තනිවෙන්නට

වරම් නෑ මේක ඇදන් යන්න කමක් නෑ

මට විදිහක් නෑ මේක කියන්න

මේකයි මං ආස විදිහ නුඹේ ගුණ වයන්න

මගේ ආදරේ තරම කියන්න

කියන් ඔබේ සවන්

යොමන් ඔබෙ අකීකරු දෝනිගේ කතාව අහන්න

එනකන් මග බලන් හිටිය අපි වරු ගණන්

දින ගණන් ඔබ නැති මෙසේ කෑවත් නෑ බඩ පිරුණේ නෑ

ඔබ දකිනකන් ගෙට වඩිනකන්

පියතුමනි අපිට පද හැදුවා බේගල් තැනුවා

ඔබ ළඟ නැති හින්දා අපි වින්දා මව නින්දා

වින්දා මම ඒ දෙස බලන් රහසින් ඉකි බින්දා

කළුවර රෑ තනි කෙරුවට ඔබයි පිය රජින්දා

උතුරත් දකුණත් යා කල බල සෙන් නිරින්දා

අපි දුක් වින්දට දිවා රෑ නුඹ රට රැකුවා

වඳින්නේ දෑත් මුදුන් කොට නුඹයි මගේ විරුවා

තිබුන් නෑ හරි ළමා කාලයක්

තිබුනෙම ගැහෙනා නිහඬ බාවයක්

රටින් රටට පිය මනින කාලයක්

එකට කෑවෙ නෑ සැහෙන කාලයක්

එන්නෙපා පාසල් කියපු රාවයක්

ගොදුරක් වෙයි අපි උඹ නිසා

රැව් දෙයි ඒ වදන් කන් පුරවලා

වෙඩි නොවදින වවුනියාව

මතකද නංගිගේ හුරතල් හිනාව

මට තාම මතකයි ඔබ ගාව සුවඳයි

හැම රෑම හඬවයි

අම්මේ තාත්තා කෝ

ගණ කැලයක තනිවෙලා

නුඹ වදිනවා යුද දිවි පසෙකලා

ඒ බව මගේ හිත දැනං හිටි නිසා

හැම දින නුඹ හට ආදරේ කළා

රැව්වත් දෑසින්...

 

 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Sasi_varnam said:

கோஷன் இதற்கான ஆதாரம் எதுவும் இருக்கிறதா? இந்த திரி குறித்தது இந்த கேள்வியை வைக்க வில்லை.
எனக்கு இது பற்றிய தகவல்கள் தேவையாய் இருக்கிறது. அவ்வளவே.
 

நிலாந்தன் ஒரு பத்தி எழுதியிருக்கின்றார்.

 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Sasi_varnam said:

யுத்த களத்துக்கு சென்ற தந்தையை பிரிந்திருந்த காலங்கள், ஏக்கங்களை, பள்ளிநாட்களை 
மையமாக  வடித்து  இந்த பாடல் அமைந்து இருக்கிறது. ஒரு இடத்தில நீரே எனது சிப்பாய் / ராணுவவீரன்  என்றும் எங்கள் (குடும்பம்) தூயரில் மூழ்கியிருந்த போதிலும் நீங்கள் நாட்டை காத்தீர்கள் என்ற தொனியிலும் இரண்டு வரிகள் எழுதப்பட்டுள்ளன.

இது போதாத சசி இதை புறக்கணிக்க?

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Sasi_varnam said:

யுத்த களத்துக்கு சென்ற தந்தையை பிரிந்திருந்த காலங்கள், ஏக்கங்களை, பள்ளிநாட்களை 
மையமாக  வடித்து  இந்த பாடல் அமைந்து இருக்கிறது. ஒரு இடத்தில நீரே எனது சிப்பாய் / ராணுவவீரன்  என்றும் எங்கள் (குடும்பம்) தூயரில் மூழ்கியிருந்த போதிலும் நீங்கள் நாட்டை காத்தீர்கள் என்ற தொனியிலும் இரண்டு வரிகள் எழுதப்பட்டுள்ளன.

நீங்கள் சொல்வது போல தந்தையை பிரிந்திருந்திருந்த நாட்களையும் தாங்களை மற்றவர்கள் பார்த்த விதங்களையும் கூறிய பாடல்.. மேலும், அந்த பாடலில் 

උතුරත් දකුණත් යා කල බල සෙන් නිරින්දා”

வடக்கையும் கிழக்கையும் இணைத்த படைகள் அவமானப்படுத்தப்பட்டன என்ற கருத்தைத்தானே மேலுள்ள வரிகள் கூறுகிறது!!

என்னைப்பொறுத்தவரை இந்த பாடலுக்கோ இல்லை இவருக்கே எங்கள் மக்கள் இந்தளவு முக்கியத்துவம் கொடுக்கத்தேவையில்லை.. இதைவிட பொட்டு மற்றும் ஆறாம் நிலம் படத்தை தயாரித்த தமிழ்பெண் நவயுகாவின் முயற்சிகளை பாராட்டி அவரை ஊக்குவிக்கவேண்டும்.. 

இந்தப்பாடலைப்பற்றியும் பாடகியை பற்றியும் கருத்துக்கள் வந்தமையாலேயே இதை இங்கே எழுதுகிறேன்.. 

3 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

நீங்கள் சொல்வது போல தந்தையை பிரிந்திருந்திருந்த நாட்களையும் தாங்களை மற்றவர்கள் பார்த்த விதங்களையும் கூறிய பாடல்.. மேலும், அந்த பாடலில் 

උතුරත් දකුණත් යා කල බල සෙන් නිරින්දා”

வடக்கையும் கிழக்கையும் இணைத்த படைகள் அவமானப்படுத்தப்பட்டன என்ற கருத்தைத்தானே மேலுள்ள வரிகள் கூறுகிறது!!

என்னைப்பொறுத்தவரை இந்த பாடலுக்கோ இல்லை இவருக்கே எங்கள் மக்கள் இந்தளவு முக்கியத்துவம் கொடுக்கத்தேவையில்லை.. இதைவிட பொட்டு மற்றும் ஆறாம் நிலம் படத்தை தயாரித்த தமிழ்பெண் நவயுகாவின் முயற்சிகளை பாராட்டி அவரை ஊக்குவிக்கவேண்டும்.. 

இந்தப்பாடலைப்பற்றியும் பாடகியை பற்றியும் கருத்துக்கள் வந்தமையாலேயே இதை இங்கே எழுதுகிறேன்.. 

பிரபா நீங்கள் கூறிய ரொஹானியின் தந்தையை பற்றிய பாடலை தமிழர்கள் எவரும் கொண்டாடவில்லை.  அவரின் ஜனரஞ்சக பாடலான மெனிகே மகே ஹித்தே  பிடித்திருப்பதால் தமக்குள் பகிர்ந்து கொள்கிறார்கள். அதில் எந்த தவறும் இருப்பதான எனக்கு படவில்லை.  சில காலத்தின் பின்னர் பத்தோடு பதினொன்றாக அதுவும் போய்விடும். கொலைவெறி பாடலை கூட எமக்குள் பகிர்ந்து கொண்ட எமக்கு அதை விட இனிமையான இந்த பாடலை பகிர்ந்து கொண்டதுல் தவறு இல்லை. அது இயல்பானது. 

 கலைஞர்களை இனவேறுபாடு கூறி பகிரங்கமான எதிர்ப்பது ஈழத்தமிழ் மக்களுக்கு ஏதாவது பலனை தரப்போவதில்லை. பிடிக்காத பாடல்களை புறக்கணிக்கலாம். தவறில்லை.

ஈழத்தமிழ் பன்முக கலைஞர் நவயுகா நிச்சயமாக எம்மால் கொண்டாட படவேண்டியவர். அவர் ஏற்கனவே சிங்கள திரையுலகம் கூட அவருக்கான அங்கீகாரத்தை கொடுத்துள்ளது. சிங்கள குறும்படங்களிலும் அவர் நடித்துள்ளார். தமிழ் மக்களின் வலிகளை கூறிய ஆறாம் நிலம் திரைப்படம் நவயுகா  இயக்கியது அல்ல. ஐ.பி.சி நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு ஆனந்தரமணனால் இயக்கப் பட்டது. 

அத்திரைப்படத்திற்கு இசையமைதவர் சித்தாங்க ஜெயக்கொடி என்ற சிங்களவர். அத்திரைப்படத்தின் தொழில் நுட்ப கலைஞர்களாக சிங்களவர்களும் தமிழர்களும் இணைந்தே பணியாற்றியிருந்தனர். 

பொட்டு திரைப்படம் நவயுகாவின் முழு இயக்கத்தில் வெளிவந்த குறும்படம்.  அதை விட நந்தி குவேனி என்ற யாழ் மண்ணில் தயாரிக்கப்ட்ட திரைப்படத்திலும் அவர் நடித்துள்ளார். 

 

Edited by tulpen
சிறிய தகவல் சேர்ககை.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, tulpen said:

பிரபா நீங்கள் கூறிய ரொஹானியின் தந்தையை பற்றிய பாடலை தமிழர்கள் எவரும் கொண்டாடவில்லை.  அவரின் ஜனரஞ்சக பாடலான மெனிகே மகே ஹித்தே  பிடித்திருப்பதால் தமக்குள் பகிர்ந்து கொள்கிறார்கள். அதில் எந்த தவறும் இருப்பதான எனக்கு படவில்லை.  சில காலத்தின் பின்னர் பத்தோடு பதினொன்றாக அதுவும் போய்விடும். கொலைவெறி பாடலை கூட எமக்குள் பகிர்ந்து கொண்ட எமக்கு அதை விட இனிமையான இந்த பாடலை பகிர்ந்து கொண்டதுல் தவறு இல்லை. அது இயல்பானது. 

 கலைஞர்களை இனவேறுபாடு கூறி பகிரங்கமான எதிர்ப்பது ஈழத்தமிழ் மக்களுக்கு ஏதாவது பலனை தரப்போவதில்லை. பிடிக்காத பாடல்களை புறக்கணிக்கலாம். தவறில்லை.

ஈழத்தமிழ் பன்முக கலைஞர் நவயுகா நிச்சயமாக எம்மால் கொண்டாட படவேண்டியவர். அவர் ஏற்கனவே சிங்கள திரையுலகம் கூட அவருக்கான அங்கீகாரத்தை கொடுத்துள்ளது. சிங்கள குறும்படங்களிலும் அவர் நடித்துள்ளார். தமிழ் மக்களின் வலிகளை கூறிய ஆறாம் நிலம் திரைப்படம் நவயுகா  இயக்கியது அல்ல. ஐ.பி.சி நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு ஆனந்தரமணனால் இயக்கப் பட்டது. 

அத்திரைப்படத்திற்கு இசையமைதவர் சித்தாங்க ஜெயக்கொடி என்ற சிங்களவர். அத்திரைப்படத்தின் தொழில் நுட்ப கலைஞர்களாக சிங்களவர்களும் தமிழர்களும் இணைந்தே பணியாற்றியிருந்தனர். 

பொட்டு திரைப்படம் நவயுகாவின் முழு இயக்கத்தில் வெளிவந்த குறும்படம்.  அதை விட நந்தி குவேனி என்ற யாழ் மண்ணில் தயாரிக்கப்ட்ட திரைப்படத்திலும் அவர் நடித்துள்ளார். 

 

வணக்கம் துல்பன் அண்ணா, 

உண்மைதான் .. மறுக்கவில்லை.. ஆனால் அவருடைய மெனிக்கே மகே ஹித்தே பாடலை நாங்கள் விளம்பரபடுத்த முன்பு சிலவிடயங்களை யோசித்திருக்கவேண்டும் என்பது என் எண்ணம். ஏனெனில் எங்களுக்கு பிடித்த இசை, பாடல், படம், அல்லது ஒரு நாவலை பற்றி எழுதும் பொழுது அதை நாங்கள் மறைமுகமாக விளம்பரபடுத்துகிறோம் என நான் நம்புவதுண்டு..  அந்த வகையில் இதனை பலருக்கு “forward” செய்வதை தவிர்த்திருக்கலாம் என நினைப்பதுண்டு. அவ்வளவே. 

சிலர் இருக்கிறார்கள் படத்தை படமாக பார்க்கவேண்டும்.. கலைஞர்கள் அரசியலிற்கு அப்பாற்பட்டவர்கள் என்பது சரியாக இருந்தாலும் என்னால் மெனிக்கே பாடலை ரசிக்கமுடியவில்லை.. என்னுடைய நட்புவட்டத்திலும் இதையே கூறுகிறேன்.. 

இரண்டாவது, தவறாக ஆறாம் நிலம் பற்றிய தகவலை எழுதிவிட்டேன்..  அந்தப்படத்தில் நடித்தவர் இயக்கவில்லை. மேலும் උතුරත් දකුණත් යා කල බල සෙන් නිරින්දා” இதுகூட வடக்கையும் தெற்கையும்(தகுணத்) இணைத்த என்று வந்திருக்கவேண்டும்.. மன்னிக்கவும்.. 

  • கருத்துக்கள உறவுகள்

தான் கொடுத்த கடிதத்திற்கு பிரான்ஸ் டென்மார்க் சுவிஸ்லாந்து நாடுகள் குடியுரிமை கொடுக்கின்றது என்ற முழுமையான பொய்  பாடல் இசையால் திசைமாறியது சீமானுக்கு நல்ல  நிம்மதி😂

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, tulpen said:

பிரபா நீங்கள் கூறிய ரொஹானியின் தந்தையை பற்றிய பாடலை தமிழர்கள் எவரும் கொண்டாடவில்லை.  அவரின் ஜனரஞ்சக பாடலான மெனிகே மகே ஹித்தே  பிடித்திருப்பதால் தமக்குள் பகிர்ந்து கொள்கிறார்கள். அதில் எந்த தவறும் இருப்பதான எனக்கு படவில்லை.  சில காலத்தின் பின்னர் பத்தோடு பதினொன்றாக அதுவும் போய்விடும். கொலைவெறி பாடலை கூட எமக்குள் பகிர்ந்து கொண்ட எமக்கு அதை விட இனிமையான இந்த பாடலை பகிர்ந்து கொண்டதுல் தவறு இல்லை. அது இயல்பானது. 

 கலைஞர்களை இனவேறுபாடு கூறி பகிரங்கமான எதிர்ப்பது ஈழத்தமிழ் மக்களுக்கு ஏதாவது பலனை தரப்போவதில்லை. பிடிக்காத பாடல்களை புறக்கணிக்கலாம். தவறில்லை.

ஈழத்தமிழ் பன்முக கலைஞர் நவயுகா நிச்சயமாக எம்மால் கொண்டாட படவேண்டியவர். அவர் ஏற்கனவே சிங்கள திரையுலகம் கூட அவருக்கான அங்கீகாரத்தை கொடுத்துள்ளது. சிங்கள குறும்படங்களிலும் அவர் நடித்துள்ளார். தமிழ் மக்களின் வலிகளை கூறிய ஆறாம் நிலம் திரைப்படம் நவயுகா  இயக்கியது அல்ல. ஐ.பி.சி நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு ஆனந்தரமணனால் இயக்கப் பட்டது. 

அத்திரைப்படத்திற்கு இசையமைதவர் சித்தாங்க ஜெயக்கொடி என்ற சிங்களவர். அத்திரைப்படத்தின் தொழில் நுட்ப கலைஞர்களாக சிங்களவர்களும் தமிழர்களும் இணைந்தே பணியாற்றியிருந்தனர். 

பொட்டு திரைப்படம் நவயுகாவின் முழு இயக்கத்தில் வெளிவந்த குறும்படம்.  அதை விட நந்தி குவேனி என்ற யாழ் மண்ணில் தயாரிக்கப்ட்ட திரைப்படத்திலும் அவர் நடித்துள்ளார். 

 

நிச்சயமாக இல்லை துல்பன்.

உண்மையிலேயே உங்களுக்கு ஒரு சாதாரண சிங்கள பாடகியின் ஏதோ ஒரு பாட்டுக்கும், ஒரு படைதளபதியின் மகள் தன் தந்தையை, அவரின் படைகளை புகழ்ந்து glorify பண்ணி பாடிய பாட்டுக்கும் வித்தியாசம் தெரியவில்லையா?

அப்படி என்றால், வழமையாக துல்லியமாக செயல்படும் உங்கள் தார்மீக திசைகாட்டியில் (moral compass) எதோ ஒரு சறுக்கல் என்றுதான் நான் சொல்வேன்.

இதே பாடகி காதலை அல்லது வேறு ஒரு உணர்சியை பாடி இருந்தால் கூட பரவாயில்லை. அவர் வீரமாக புகழ்ந்து பாடி இருப்பது எதை? செஞ்சோலையை. 

இதை எதிர்ப்பது வீண் வேலைதான்.

ஆனால் இதன் பின்புலத்தை, பாடல் வரிகளை பற்றி எதுவுமே சொல்லாமல்,  எதோ இன்னுமொரு சிங்கள பாடல் என சிங்களம் தெரியாத எம்மக்கள் மத்தியில் பரப்பி, எம்மை கொடுமை செய்தவர்களை வீரர்களாக கொண்டாடும் பாடலை எமது வாய்களை கொண்டே முணுமுணுக்க வைத்த கயமை உங்களுக்கு உறைக்கவில்லையா?

 

15 minutes ago, goshan_che said:

நிச்சயமாக இல்லை துல்பன்.

உண்மையிலேயே உங்களுக்கு ஒரு சாதாரண சிங்கள பாடகியின் ஏதோ ஒரு பாட்டுக்கும், ஒரு படைதளபதியின் மகள் தன் தந்தையை, அவரின் படைகளை புகழ்ந்து glorify பண்ணி பாடிய பாட்டுக்கும் வித்தியாசம் தெரியவில்லையா?

அப்படி என்றால், வழமையாக துல்லியமாக செயல்படும் உங்கள் தார்மீக திசைகாட்டியில் (moral compass) எதோ ஒரு சறுக்கல் என்றுதான் நான் சொல்வேன்.

இதே பாடகி காதலை அல்லது வேறு ஒரு உணர்சியை பாடி இருந்தால் கூட பரவாயில்லை. அவர் வீரமாக புகழ்ந்து பாடி இருப்பது எதை? செஞ்சோலையை. 

இதை எதிர்ப்பது வீண் வேலைதான்.

ஆனால் இதன் பின்புலத்தை, பாடல் வரிகளை பற்றி எதுவுமே சொல்லாமல்,  எதோ இன்னுமொரு சிங்கள பாடல் என சிங்களம் தெரியாத எம்மக்கள் மத்தியில் பரப்பி, எம்மை கொடுமை செய்தவர்களை வீரர்களாக கொண்டாடும் பாடலை எமது வாய்களை கொண்டே முணுமுணுக்க வைத்த கயமை உங்களுக்கு உறைக்கவில்லையா?

 

கோஷான்,

தமிழ் ரசிகர்களால் புகழ்ந்து பாராட்டப்பட்ட  'மெனிக்கே மகே ஹித்தே...' என்ற பாடல் சிங்கள இராணுவத்தை புகழ்ந்து பாடப்பட்ட பாடல் அல்ல. அது ஒரு பெண்ணைப் பற்றிய சாதாரண பாடல்.

சிங்கள இராணுவத்தை புகழ்ந்த வரிகளைக் கொண்ட பாடல் பெரியளவில் பிரபலமாகவில்லை. மெனிக்கே பாடலின் பின் தான் அவர் முன்னர் பாடிய பாடல்களை தேடிப் பார்த்து கேட்க முனைகின்றனர்.

மெனிக்கே பாடலின் ஆங்கில மொழிபெயர்ப்பு கீழே உள்ள இணைப்பில் உள்ளது.

 

 

https://www.lyricstrip.com/manike-mage-hithe-lyrics-english-translation/

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, பெருமாள் said:

 

இந்த பாட்டுக்குத் தான் முக புத்தகத்தில் ஒரு லிங் உலாவுது என்று நினைக்கிறேன்.. சாம்பிராணி தட்டொடு ஒருவர் டான்ஸ் ஆடுவார்..😄

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, யாயினி said:

இந்த பாட்டுக்குத் தான் முக புத்தகத்தில் ஒரு லிங் உலாவுது என்று நினைக்கிறேன்.. சாம்பிராணி தட்டொடு ஒருவர் டான்ஸ் ஆடுவார்..😄

காலையில் பார்த்தேன் இப்ப தேடவேண்டி இருக்கு சாமியாரின் டான்சும் நல்லா இருக்கு 🤣

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, பெருமாள் said:

காலையில் பார்த்தேன் இப்ப தேடவேண்டி இருக்கு சாமியாரின் டான்சும் நல்லா இருக்கு 🤣

 | Facebook

இதைப் பாரத்துட்டு இரவு யாருக்காவது கெட்ட கனவு வந்தால் நாமள் பொறுப்பல்ல..🤭

Edited by யாயினி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.