Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கெசொனில் மீண்டும் பறந்தது புலிக்கொடி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கெசொனில் மீண்டும் பறந்தது புலிக்கொடி

 

1990 மாசி பிறந்தது,

என் நகரை விட்டு 

நாசி படைகள் வெளியேற வழியும் திறந்தது.

 

தன்னைதானே வல்லரசுப் படை என பீற்றி கொண்ட ஒரு காட்டுக்கூட்டம்,

மூட்டை கட்டிக்கொண்டு ஓடியது.

 

கூடவே ஓடியதுகூட்டியும்காட்டியும் கொடுத்த

கொள்ளை கூட்டம்.

 

எங்கள் ஆட்டைகோழியைஎலுமிச்சையைமாம்பழத்தை ஆட்டையை போட்ட மிருகங்கள்.

 

எங்கள் மங்கையர் மானத்தை விலை பேசிய அரக்கர்கள்.

 

நாசி அரிக்கும் நாற்றத்துடன் அலைந்த வாழும்-பிணங்கள்.

 

கையில் கிடத்தைதை எல்லாம் அள்ளி கொண்டு ஓடிக்கொண்டிருந்தார்கள்.

 

எங்கள் நகரின் மத்தியில் அவர்கள் நாட்டு கொடி அலங்கோலமாய் கிழிந்து தொங்கியது.

 

கொடி மட்டும் அல்லஉலகின் பெரும் இராணுவம் என்ற மதிப்பீடும்தான் அங்கே கிழிந்து தொங்கிகொண்டிருந்தது.

 

அவர்கள் எம் நாட்டில் கைப்பற்றிய முதலாவதும் கடைசியுமான ஒரே பிராந்தியத் தலைநகர் இதுதான்

 

இங்கேதான் அசைக்கமுடியாத படை என்ற விம்பத்தையும் “வீரமும் களத்தே போட்டுவெறுங்கையோடு” ஓடினார்கள்.

 

அல்லோலகல்லோல பட்டது என் நகர்.

 

பிள்ளைகள் வருகிறார்களாம்.

 

தேனீரும் கையுமாக அவர்களை தேடி இருந்தன இலட்சம் சோடி கண்கள்.

 

கைலாகுகளும் கட்டிப்பிடித்தல்களும் கணக்கு வழக்கின்றி இடம்மாறின.

 

எங்கள் மக்களின் ஆரவாரம் கண்டு அனுமானிற்கும்அவன் சேனைக்கும் வயிற்றில் பற்றியது நெருப்பு.

 

அனுமானின் வால்பிடிகளுக்கோ - நெருப்பு குதத்திலேயே குந்தி இருந்தது.

 

கோணேஸ்வரரும்அந்தோனியாரும் இனி சுதந்திரமாக சப்பாத்தி(து)க்காரர்களின் தலையீடின்றி கொடியேறலாம்.

 

மண்மூட்டைகளுக்கு பின்னால்குருதி குடிக்கும் மூட்டை பூச்சிகள் மறைந்திருந்த எங்கள் வீடுகளில் இனி நாம்சுதந்திரமாக குடியேறலாம்.

 

காட்டுக்குள் இருந்து எங்கள் காவல் தெய்வங்கள் வந்து விட்டார்கள்.

 

எங்கள் நாயகர்கள் நகர் மீண்டு விட்டார்கள்.

 

Kherson இல் மீண்டும் கம்பீரமாய் பறந்தது புலிக்கொடி.

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, goshan_che said:

கெசொனில் மீண்டும் பறந்தது புலிக்கொடி

 

1990 மாசி பிறந்தது,

என் நகரை விட்டு 

நாசி படைகள் வெளியேற வழியும் திறந்தது.

 

தன்னைதானே வல்லரசுப் படை என பீற்றி கொண்ட ஒரு காட்டுக்கூட்டம்,

மூட்டை கட்டிக்கொண்டு ஓடியது.

 

கூடவே ஓடியதுகூட்டியும்காட்டியும் கொடுத்த

கொள்ளை கூட்டம்.

 

எங்கள் ஆட்டைகோழியைஎலுமிச்சையைமாம்பழத்தை ஆட்டையை போட்ட மிருகங்கள்.

 

எங்கள் மங்கையர் மானத்தை விலை பேசிய அரக்கர்கள்.

 

நாசி அரிக்கும் நாற்றத்துடன் அலைந்த வாழும்-பிணங்கள்.

 

கையில் கிடத்தைதை எல்லாம் அள்ளி கொண்டு ஓடிக்கொண்டிருந்தார்கள்.

 

எங்கள் நகரின் மத்தியில் அவர்கள் நாட்டு கொடி அலங்கோலமாய் கிழிந்து தொங்கியது.

 

கொடி மட்டும் அல்லஉலகின் பெரும் இராணுவம் என்ற மதிப்பீடும்தான் அங்கே கிழிந்து தொங்கிகொண்டிருந்தது.

 

அவர்கள் எம் நாட்டில் கைப்பற்றிய முதலாவதும் கடைசியுமான ஒரே பிராந்தியத் தலைநகர் இதுதான்

 

இங்கேதான் அசைக்கமுடியாத படை என்ற விம்பத்தையும் “வீரமும் களத்தே போட்டுவெறுங்கையோடு” ஓடினார்கள்.

 

அல்லோலகல்லோல பட்டது என் நகர்.

 

பிள்ளைகள் வருகிறார்களாம்.

 

தேனீரும் கையுமாக அவர்களை தேடி இருந்தன இலட்சம் சோடி கண்கள்.

 

கைலாகுகளும் கட்டிப்பிடித்தல்களும் கணக்கு வழக்கின்றி இடம்மாறின.

 

எங்கள் மக்களின் ஆரவாரம் கண்டு அனுமானிற்கும்அவன் சேனைக்கும் வயிற்றில் பற்றியது நெருப்பு.

 

அனுமானின் வால்பிடிகளுக்கோ - நெருப்பு குதத்திலேயே குந்தி இருந்தது.

 

கோணேஸ்வரரும்அந்தோனியாரும் இனி சுதந்திரமாக சப்பாத்தி(து)க்காரர்களின் தலையீடின்றி கொடியேறலாம்.

 

மண்மூட்டைகளுக்கு பின்னால்குருதி குடிக்கும் மூட்டை பூச்சிகள் மறைந்திருந்த எங்கள் வீடுகளில் இனி நாம்சுதந்திரமாக குடியேறலாம்.

 

காட்டுக்குள் இருந்து எங்கள் காவல் தெய்வங்கள் வந்து விட்டார்கள்.

 

எங்கள் நாயகர்கள் நகர் மீண்டு விட்டார்கள்.

 

Kherson இல் மீண்டும் கம்பீரமாய் பறந்தது புலிக்கொடி.

நான் கிளிநொச்சியில்  பறந்தது புலிகொடி  என்று வாசித்து விட்டேன்.......வருக. வருக   கோசான்.        உங்கள்.   பொன்னான கருத்துகளை   இருபத்திநாலு   மணி நேரமும்   பதியுங்கள்.  😄

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, goshan_che said:

கெசொனில் மீண்டும் பறந்தது புலிக்கொடி

கெசொனில் வெற்றிக் களிப்பில் உள்ள உக்ரேனிய மக்கள் பார்க்கவே தெரிகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்

எதனை எதனுடன் ஒப்பிடுவது என்பதில்  பொறுப்பின்மை தெரிகிறது. 

☹️

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

கெசொனில் மீண்டும் பறந்தது புலிக்கொடி

 

1990 மாசி பிறந்தது,

என் நகரை விட்டு 

நாசி படைகள் வெளியேற வழியும் திறந்தது.

 

தன்னைதானே வல்லரசுப் படை என பீற்றி கொண்ட ஒரு காட்டுக்கூட்டம்,

மூட்டை கட்டிக்கொண்டு ஓடியது.

 

கூடவே ஓடியதுகூட்டியும்காட்டியும் கொடுத்த

கொள்ளை கூட்டம்.

 

எங்கள் ஆட்டைகோழியைஎலுமிச்சையைமாம்பழத்தை ஆட்டையை போட்ட மிருகங்கள்.

 

எங்கள் மங்கையர் மானத்தை விலை பேசிய அரக்கர்கள்.

 

நாசி அரிக்கும் நாற்றத்துடன் அலைந்த வாழும்-பிணங்கள்.

 

கையில் கிடத்தைதை எல்லாம் அள்ளி கொண்டு ஓடிக்கொண்டிருந்தார்கள்.

 

எங்கள் நகரின் மத்தியில் அவர்கள் நாட்டு கொடி அலங்கோலமாய் கிழிந்து தொங்கியது.

 

கொடி மட்டும் அல்லஉலகின் பெரும் இராணுவம் என்ற மதிப்பீடும்தான் அங்கே கிழிந்து தொங்கிகொண்டிருந்தது.

 

அவர்கள் எம் நாட்டில் கைப்பற்றிய முதலாவதும் கடைசியுமான ஒரே பிராந்தியத் தலைநகர் இதுதான்

 

இங்கேதான் அசைக்கமுடியாத படை என்ற விம்பத்தையும் “வீரமும் களத்தே போட்டுவெறுங்கையோடு” ஓடினார்கள்.

 

அல்லோலகல்லோல பட்டது என் நகர்.

 

பிள்ளைகள் வருகிறார்களாம்.

 

தேனீரும் கையுமாக அவர்களை தேடி இருந்தன இலட்சம் சோடி கண்கள்.

 

கைலாகுகளும் கட்டிப்பிடித்தல்களும் கணக்கு வழக்கின்றி இடம்மாறின.

 

எங்கள் மக்களின் ஆரவாரம் கண்டு அனுமானிற்கும்அவன் சேனைக்கும் வயிற்றில் பற்றியது நெருப்பு.

 

அனுமானின் வால்பிடிகளுக்கோ - நெருப்பு குதத்திலேயே குந்தி இருந்தது.

 

கோணேஸ்வரரும்அந்தோனியாரும் இனி சுதந்திரமாக சப்பாத்தி(து)க்காரர்களின் தலையீடின்றி கொடியேறலாம்.

 

மண்மூட்டைகளுக்கு பின்னால்குருதி குடிக்கும் மூட்டை பூச்சிகள் மறைந்திருந்த எங்கள் வீடுகளில் இனி நாம்சுதந்திரமாக குடியேறலாம்.

 

காட்டுக்குள் இருந்து எங்கள் காவல் தெய்வங்கள் வந்து விட்டார்கள்.

 

எங்கள் நாயகர்கள் நகர் மீண்டு விட்டார்கள்.

 

Kherson இல் மீண்டும் கம்பீரமாய் பறந்தது புலிக்கொடி.

1990 இல் இந்தியக் காட்டேறிகளும், கூடவே இருந்து காட்டிக் கொடுத்தர வானரத் துரோகிகளும் மூட்டை கட்டி அவசர அவசரமாய் ஓட, எமது காவல் தெய்வங்கள் எங்கள் ஊர்களுக்குள் வந்த அந்த உணர்வுபூர்வ நிகழ்வை கெசொனுக்கான உக்ரேனிய விடுதலை வீரர்களின் மீள்வரவுடன் ஒப்பீட்டு எழுதியமை கண்களில் நீரை வரவழைத்துவிட்டது. அம்மக்களுடன் சேர்ந்து இந்த வெற்றி நிகழ்வை நானும் அனுபவிக்கிறேன். வாழ்க உக்ரேனிய மக்களின் ஆக்கிரமிப்பிற்கெதிரான போராட்டம் !

2000 இல் சிங்கள மிருகங்களிடமிருந்து ஆனையிறவு கைப்பற்றப்பட்டு எமது தேசியக் கொடி ஏற்றப்படும் நிகழ்வு!Elephant pass victory day 2000 | EelamView

Edited by ரஞ்சித்

  • கருத்துக்கள உறவுகள்

கோசான் வாழ்த்துக்கள். அருமையான ஒப்பீடு!👍

கோசான்,

நான் இன்னொரு பதிவில் இந்திய படை வெளியேற்றத்தையும், கிளிநொச்சியை புலிகள் கைப்பற்றியதையும் பற்றி குறிப்பிட்டு பதில் எழுதிய பின் தான் உங்களின் இந்தப் பதிவை பார்த்தேன். நீங்களும் அவற்றை குறிப்பிட்டு கவிதையே எழுதி உள்ளீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கொண்டாட்டங்கள் எல்லாம் தற்காலிகமானவை. யுத்தம் முழுமையாக முடிவுக்கு வரும்போது மட்டுமே மக்களிடம் உண்மையான மகிழ்ச்சி ஏற்படுவதுடன் அந்த மகிழ்ச்சி நிலைத்து நிற்கும். 

அல்லாது போனால், மாவிலாற்றில் சண்டை தொடங்கும்போது எழுந்த ஆரவாரம், இறுதியில் கோவணமும் கழன்றுபோய், நாம் அழுது வடிந்துகொண்டிருக்கும் நிலையில் நிற்பதுபோல உக்ரேனியர்களின் நிலையும்  பரிதாபத்திற்குரியதாக மாறிவிடும். 

(எமது போராட்டத்தை வேறு எதனுடனும் ஒப்பிட நான் விரும்பியதில்லை. ஆனால் இங்கே எல்லோரும் எங்கள் போராட்டத்தை இங்கே வலிந்து இழுத்து, ஒப்பிட்டு, கொச்சைப்படுத்துவதால், ஒரு எச்சரிக்கைக்காக இதனை இங்கே குறிப்பிடுகிறேன்)

☹️

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

 

இந்தக் கொண்டாட்டங்கள் எல்லாம் தற்காலிகமானவை. யுத்தம் முழுமையாக முடிவுக்கு வரும்போது மட்டுமே மக்களிடம் உண்மையான மகிழ்ச்சி ஏற்படுவதுடன் அந்த மகிழ்ச்சி நிலைத்து நிற்கும். 

 

உண்மைதான். யுத்தம் நிரந்தரமாக முடிவுக்கு வருவது ஆக்கிரமிப்பில் ஈடுபட்ட ரஷ்யாவின் கையில்தான் உள்ளது. வல்வளைப்பில் பிடித்த உக்கிரேனின் பகுதிகளில் இருந்து விலகினால் யுத்தம் தானாக நின்றுவிடும். ஆனால் சர்வாதிகாரி பூட்டின் தனது தோல்வியை விரும்பமாட்டார் என்பதால் யுத்தமும் உக்கிரேன் ரஷ்யாவால் அழிக்கப்படுவதும் தொடரும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

இந்தக் கொண்டாட்டங்கள் எல்லாம் தற்காலிகமானவை. யுத்தம் முழுமையாக முடிவுக்கு வரும்போது மட்டுமே மக்களிடம் உண்மையான மகிழ்ச்சி ஏற்படுவதுடன் அந்த மகிழ்ச்சி நிலைத்து நிற்கும். 

அல்லாது போனால், மாவிலாற்றில் சண்டை தொடங்கும்போது எழுந்த ஆரவாரம், இறுதியில் கோவணமும் கழன்றுபோய், நாம் அழுது வடிந்துகொண்டிருக்கும் நிலையில் நிற்பதுபோல உக்ரேனியர்களின் நிலையும்  பரிதாபத்திற்குரியதாக மாறிவிடும். 

(எமது போராட்டத்தை வேறு எதனுடனும் ஒப்பிட நான் விரும்பியதில்லை. ஆனால் இங்கே எல்லோரும் எங்கள் போராட்டத்தை இங்கே வலிந்து இழுத்து, ஒப்பிட்டு, கொச்சைப்படுத்துவதால், ஒரு எச்சரிக்கைக்காக இதனை இங்கே குறிப்பிடுகிறேன்)

☹️

சரியாக சொன்னீர்கள் கபிதன். 👍🏽
கோவணமும் கழரும் போது… ஒரு ✏️ கவிதையையோ, 🖋 கட்டுரையையோ ✍️  எழதி..? 
விசில் அடித்து விட்டு போனால் போச்சு. 😁

அதி உத்தமர், மாண்பு மிகு புட்டின் அவர்களின்… இந்த தந்திரோதயமான
காய் நகர்த்தலின் பின் உள்ள சூட்சுமத்தை அறியும் போது…
கண்ணீர் விட ரெடியாய் இருக்கவும் வேணும். 😎

இந்தப் போரை திணித்த அமெரிக்கா… கொடுப்புக்குள் சிரித்தபடி, லாபம் பார்த்துக் கொண்டிருக்க  💰💵
ஐரோப்பாவும் மற்றைய உலக நாடுகளும்தான்  அதன் வலியை சுமந்து கொண்டு இருக்கின்றார்கள் என்பதை அறியாமல்  😵💫இருப்பவர்களை எண்ணி அனுதாபப் படத்தான் முடியும். 🙂🙇‍♂️

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, தமிழ் சிறி said:

அதி உத்தமர், மாண்பு மிகு புட்டின் அவர்களின்

கோத்தபாய ஓடியதால் இப்படியான அடைமொழிகளை பூட்டினுக்குத்தான் பாவிக்கலாம். இன்னமும் “மேதகு” என்ற அடைமொழியை பாவிக்கவில்லை. அதையும் பாவிக்கலாம். எல்லாம் இலவசம்தானே.

  • கருத்துக்கள உறவுகள்

கவிதைக்கும் வரவுக்கும் நன்றி கோஷான் !   😁

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 hours ago, Kapithan said:

எதனை எதனுடன் ஒப்பிடுவது என்பதில்  பொறுப்பின்மை தெரிகிறது. 

☹️

ஒரு கேவலம் கெட்ட உக்ரேன் யுத்தத்தை எமது விடுதலைப்போராட்டத்துடன் ஒப்பிட்டு அதன் புனிதத்தை கெடுக்கின்றனர்....

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, Kapithan said:

எதனை எதனுடன் ஒப்பிடுவது என்பதில்  பொறுப்பின்மை தெரிகிறது. 

☹️

 

8 hours ago, குமாரசாமி said:

ஒரு கேவலம் கெட்ட உக்ரேன் யுத்தத்தை எமது விடுதலைப்போராட்டத்துடன் ஒப்பிட்டு அதன் புனிதத்தை கெடுக்கின்றனர்....

அந்த அளவுக்கு… வெள்ளைத் தோல் மோகம், கண்ணை மறைக்குது. 

  • கருத்துக்கள உறவுகள்

இது வெறுமனவே சீண்டுமுடியும் தொனியில் அமைந்த பதிவு.

எமது போராட்ட சக்தியான புலிகளுக்கு.. நேட்டோ ஆயுதம் கொடுக்கவில்லை. ஐரோப்பா உதவி செய்யவில்லை... ஏன் ஹிந்தியா கூட கொடுத்த ஆயுதங்களை பறிச்சது தான் அதிகம். சொந்த மக்களின் பங்களிப்போடு தமது சொந்த தியாகங்களின் மூலம் தொடர்ந்தியங்கியதே எமது போராட்டம்.

இதில் உக்ரைனின் தூண்டு சக்தியா இருக்கும் அமெரிக்கா.. எமது போராட்டத்தை பயங்கரவாதம் என்றே சொல்லி அழித்தது. அது இன்று உக்ரைனில்.. நேட்டோ விரிவாக்கத்திற்காக.. டான்பஸ் பிராந்திய இனப்படுகொலையை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறது. 

ஆக உக்ரைன் - ரஷ்சிய யுத்தம் என்பது ரஷ்சியாவின் முன்னாள் பிராந்தியத்திற்குள் அண்டைய கண்டம் ஒன்றில் இருந்து கொண்டு உலகை ஆதிக்கம் செய்ய விரும்பும் அமெரிக்காவின் நோக்கத்தை எதிர்த்து நிகழும் யுத்தம். அதற்கு பலியிடப்படும் ரஷ்சிய மொழி பேசும் மக்களின் வாழ்வுரிமையை பாதுகாக்க நிகழும் யுத்தம். 

நேட்டோ விரிவாக்கம் என்பதும்.. அமெரிக்க ஆதிக்க வலுவாக்கம் என்பதும் அமெரிக்க சார்பற்ற..  உலக அமைதிக்கும்.. உலகில் நீதியான மக்களின் போராட்டங்களுக்கும் ஆபத்தாகும் என்பதை உணர்ந்திருந்தும்.. அதற்கு புலிக்கொடி ஏத்தி வாழ்த்துப் பாடுபவர்களின் அறியாமையை நினைத்தால்..??!

எமது போராட்டம் அழிக்கப்பட்டும் கூட இன்றும்.. புலிகளை பயங்கரவாதப் பட்டியலில் வைத்திருப்பவர்கள் தான் உக்ரைனை ஆயுதமும் நிதியும் கொடுத்து இயக்கிக் கொண்டிருப்பவர்கள். இதை அறிந்தா இவர்கள் கெசொனில் புலிக்கொடி ஏற்றி பார்க்கினம். 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nedukkalapoovan said:

இது வெறுமனவே சீண்டுமுடியும் தொனியில் அமைந்த பதிவு.

எமது போராட்ட சக்தியான புலிகளுக்கு.. நேட்டோ ஆயுதம் கொடுக்கவில்லை. ஐரோப்பா உதவி செய்யவில்லை... ஏன் ஹிந்தியா கூட கொடுத்த ஆயுதங்களை பறிச்சது தான் அதிகம். சொந்த மக்களின் பங்களிப்போடு தமது சொந்த தியாகங்களின் மூலம் தொடர்ந்தியங்கியதே எமது போராட்டம்.

இதில் உக்ரைனின் தூண்டு சக்தியா இருக்கும் அமெரிக்கா.. எமது போராட்டத்தை பயங்கரவாதம் என்றே சொல்லி அழித்தது. அது இன்று உக்ரைனில்.. நேட்டோ விரிவாக்கத்திற்காக.. டான்பஸ் பிராந்திய இனப்படுகொலையை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறது. 

ஆக உக்ரைன் - ரஷ்சிய யுத்தம் என்பது ரஷ்சியாவின் முன்னாள் பிராந்தியத்திற்குள் அண்டைய கண்டம் ஒன்றில் இருந்து கொண்டு உலகை ஆதிக்கம் செய்ய விரும்பும் அமெரிக்காவின் நோக்கத்தை எதிர்த்து நிகழும் யுத்தம். அதற்கு பலியிடப்படும் ரஷ்சிய மொழி பேசும் மக்களின் வாழ்வுரிமையை பாதுகாக்க நிகழும் யுத்தம். 

நேட்டோ விரிவாக்கம் என்பதும்.. அமெரிக்க ஆதிக்க வலுவாக்கம் என்பதும் அமெரிக்க சார்பற்ற..  உலக அமைதிக்கும்.. உலகில் நீதியான மக்களின் போராட்டங்களுக்கும் ஆபத்தாகும் என்பதை உணர்ந்திருந்தும்.. அதற்கு புலிக்கொடி ஏத்தி வாழ்த்துப் பாடுபவர்களின் அறியாமையை நினைத்தால்..??!

எமது போராட்டம் அழிக்கப்பட்டும் கூட இன்றும்.. புலிகளை பயங்கரவாதப் பட்டியலில் வைத்திருப்பவர்கள் தான் உக்ரைனை ஆயுதமும் நிதியும் கொடுத்து இயக்கிக் கொண்டிருப்பவர்கள். இதை அறிந்தா இவர்கள் கெசொனில் புலிக்கொடி ஏற்றி பார்க்கினம். 

தரம் குறைந்த ரசனையால் எழுதப்பட்டதுதான், கோசானில் பறந்தது புலிக்கொடி எனும் ஒப்பீட்டு ஆக்கம். 

☹️

  • கருத்துக்கள உறவுகள்

கோசான் தொடர்ந்து எழுதுங்கள், சில திரிகளில் ஒரு பக்க கருத்தாக தனியாவர்த்தனமாக செல்லாமல் தனியாளாக மற்றுமொரு கோணத்தில் கருத்தினை கொண்டு செல்ல்பவது, சுவாரசியமான கருத்து பரிமாற்றங்களை எப்போதும் கொண்டிருந்த திரிகள் உங்கள் வருகையின்மையால் சில நாளாக சோபையிழந்திருந்தது, மீண்டும் கண்டதில் சந்தோசம்.

இந்தியா இலங்கையினை, இந்திய இராணுவத்தினை கொண்டு ஆக்கிரமித்து தோற்ற பின், தற்போது தமிழ் மக்களது உரிமைகளை பகடைகாயாக பயன்படுத்தி இலங்கை அரசியலில் உட்பிரவேசித்து ஒரு ஆலமரம் போன்று வேரூன்றி தனது ஆக்கிரமிப்பினை அரசியல் ரீதியான ஆக்கிரமிபாக தொடர்ந்து  ஆக்கிரமிப்பினை இலங்கை மீது செலுத்துகிறது.

உக்கிரேனின் நிலமை தற்போதுள்ள இலங்கையின் நிலமைதான், மேற்கு ஆக்கிரமிப்பிற்குள் உக்கிரேன் தானாக போய் மாட்டி கொண்டுள்ளது, இதில் இரஸ்சிய ஆக்கிரமிப்பு நல்லதா? மேற்கு ஆக்கிரமிப்பு நல்லதா? தெரியவில்லை.

1987 வடமராட்சியில் தங்கியிருந்த விடுதலை புலிகளின் தலைவரை குறிவைத்து விடுதலை நடவடிக்கை என ஒரு இராணுவ நடவடிக்கையினை இலங்கை இராணுவம் மேற்கொள்ள இருந்தது, இந்திய உளவு துறை விடுதலை புலிகளுக்கு யாழ்நகரினை கைப்பற்ற இலங்கை இராணுவம் வலிகாமாத்தின் மீது தாக்குதல் மேற்கொள்ள உள்ளதாக தகவல் கூறியது, இது இலங்கை சாதுரியமாக இந்திய உளவுத்துறையின ஏமாற்றியுமிருக்கலாம், ஆனால் புலிகள் இந்திய உளவுத்துறை தமக்கு தவறான தகவலை திட்டமிட்டு கூறியதாக நம்மப தலைப்பட்டனர்.

இந்த நிலையில் அமெரிக்க உளவுத்துறை ஒரு மிக சொற்ப ஆயுதங்களையும் (3 கனன் இரக துப்பாக்கிகளை என்பதாக நினைவில் உள்ளது) அதற்கான பயிற்சியினை யாழ்பாணத்தில் உள்ள மணியந்தோட்டம் எனும் இடத்தில் வழங்கியிருந்தாக கேள்விபட்டேன்.

அதனை தொடர்ந்து அமெரிக்க உளவுத்துறை விடுதலை புலிகளின் தலைவரை நேரில் சந்திக்கவேண்டும் என கோரியதாம், ஆனால் விடுதலை புலிகளின் தலைவர் அந்த கோரிக்கையினை நிராகரித்து விட்டாராம், விடுதலை புலிகளின் போராளிகளிடம் நான் அவங்களை சந்தித்தால் என்ன நடக்கும் தெரியும்தானே என்றாராம்.

உக்கிரேனின் எதிர்காலம் கொதிக்கும் சட்டியிலிருந்து நெருப்பிற்குள் விழுந்த நிலைக்கு வராது என நம்புகிறேன், புதிய காலனித்துவவாதிகளான மேற்கினை ஆக்கிரமிப்பிலிருந்து காக்கும் தேவதைகளாக நான் கருதவில்லை, ஆனால் இரஸ்சியாவின் அடக்குமுறைக்கு எதிரான உக்கிரேன் இந்த வெற்றியினை தாராளமாக எல்லோரும் கொண்டாடலாம்.

உக்கிரேனிற்கு இரஸ்சியா தற்போது எதிரி, மேற்கு நண்பன், ஆனால் இந்த நவீன உலகில் ஆக்கிரமிப்பிற்குள்ளாகும் அப்பாவி மக்களுக்காக தனது வலங்களை எல்லாம் கொடுத்து உதவுவதற்கு மேற்கு ஒரு வள்ளல் அல்ல அவர்கள் வியாபாரிகள் போரின் முடிவின் பின்னர் உக்கிரேனிற்கு மேற்கு தனது உண்மையான முகத்தினை காட்டும் அப்போது உக்கிரேனால் அதனை வெளியில் கூட சொல்லமுடியாத உள்குத்தாக இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, vasee said:

 

உக்கிரேனின் நிலமை தற்போதுள்ள இலங்கையின் நிலமைதான், மேற்கு ஆக்கிரமிப்பிற்குள் உக்கிரேன் தானாக போய் மாட்டி கொண்டுள்ளது, இதில் இரஸ்சிய ஆக்கிரமிப்பு நல்லதா? மேற்கு ஆக்கிரமிப்பு நல்லதா? தெரியவில்லை.

உக்கிரேனிற்கு இரஸ்சியா தற்போது எதிரி, மேற்கு நண்பன், ஆனால் இந்த நவீன உலகில் ஆக்கிரமிப்பிற்குள்ளாகும் அப்பாவி மக்களுக்காக தனது வலங்களை எல்லாம் கொடுத்து உதவுவதற்கு மேற்கு ஒரு வள்ளல் அல்ல அவர்கள் வியாபாரிகள் போரின் முடிவின் பின்னர் உக்கிரேனிற்கு மேற்கு தனது உண்மையான முகத்தினை காட்டும் அப்போது உக்கிரேனால் அதனை வெளியில் கூட சொல்லமுடியாத உள்குத்தாக இருக்கும்.

நிதர்சனம். 

நன்றி வசீ. 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, vasee said:

அதனை தொடர்ந்து அமெரிக்க உளவுத்துறை விடுதலை புலிகளின் தலைவரை நேரில் சந்திக்கவேண்டும் என கோரியதாம், ஆனால் விடுதலை புலிகளின் தலைவர் அந்த கோரிக்கையினை நிராகரித்து விட்டாராம், விடுதலை புலிகளின் போராளிகளிடம் நான் அவங்களை சந்தித்தால் என்ன நடக்கும் தெரியும்தானே என்றாராம்.

கனபேர் உங்களை தேட துவங்க போறாங்கள் .😀

  • கருத்துக்கள உறவுகள்

 

அமெரிக்கா வென்றுவிட்டது

அமெரிக்கா வென்றுவிட்டது

அமெரிக்கா வென்றுவிட்டது.

  • கருத்துக்கள உறவுகள்

உக்கிரையின் மக்களுக்கும்  ஈழத்து தமிழருக்கும் உள்ள ஒரே ஒரு ஒற்றுமை இருக்கும் வரை போராடும் குணம்  தான்
ஆயுதம் எங்கிருந்து கிடைத்தாலும்  அதை நாங்கள் தான் பிரயோகிக்க வேண்டும் மக்காள்😧

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, தமிழ் சிறி said:

 

அந்த அளவுக்கு… வெள்ளைத் தோல் மோகம், கண்ணை மறைக்குது. 

போராடி தம்  இடத்தை கைப்பற்றிய பின் கொண்டாடி குதுகாலித்த  எம் இனம் எங்கே?

அரசியல் காரணங்களுக்காக படைகள் தாமாக விலகிச்சென்ற பின் தம் நிலத்தை கைப்பற்றி விட்டோம் என குதுகாலிக்கும் மக்கள் எங்கே?

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, vasee said:

கோசான் தொடர்ந்து எழுதுங்கள், சில திரிகளில் ஒரு பக்க கருத்தாக தனியாவர்த்தனமாக செல்லாமல் தனியாளாக மற்றுமொரு கோணத்தில் கருத்தினை கொண்டு செல்ல்பவது, சுவாரசியமான கருத்து பரிமாற்றங்களை எப்போதும் கொண்டிருந்த திரிகள் உங்கள் வருகையின்மையால் சில நாளாக சோபையிழந்திருந்தது, மீண்டும் கண்டதில் சந்தோசம்.

இந்தியா இலங்கையினை, இந்திய இராணுவத்தினை கொண்டு ஆக்கிரமித்து தோற்ற பின், தற்போது தமிழ் மக்களது உரிமைகளை பகடைகாயாக பயன்படுத்தி இலங்கை அரசியலில் உட்பிரவேசித்து ஒரு ஆலமரம் போன்று வேரூன்றி தனது ஆக்கிரமிப்பினை அரசியல் ரீதியான ஆக்கிரமிபாக தொடர்ந்து  ஆக்கிரமிப்பினை இலங்கை மீது செலுத்துகிறது.

உக்கிரேனின் நிலமை தற்போதுள்ள இலங்கையின் நிலமைதான், மேற்கு ஆக்கிரமிப்பிற்குள் உக்கிரேன் தானாக போய் மாட்டி கொண்டுள்ளது, இதில் இரஸ்சிய ஆக்கிரமிப்பு நல்லதா? மேற்கு ஆக்கிரமிப்பு நல்லதா? தெரியவில்லை.

1987 வடமராட்சியில் தங்கியிருந்த விடுதலை புலிகளின் தலைவரை குறிவைத்து விடுதலை நடவடிக்கை என ஒரு இராணுவ நடவடிக்கையினை இலங்கை இராணுவம் மேற்கொள்ள இருந்தது, இந்திய உளவு துறை விடுதலை புலிகளுக்கு யாழ்நகரினை கைப்பற்ற இலங்கை இராணுவம் வலிகாமாத்தின் மீது தாக்குதல் மேற்கொள்ள உள்ளதாக தகவல் கூறியது, இது இலங்கை சாதுரியமாக இந்திய உளவுத்துறையின ஏமாற்றியுமிருக்கலாம், ஆனால் புலிகள் இந்திய உளவுத்துறை தமக்கு தவறான தகவலை திட்டமிட்டு கூறியதாக நம்மப தலைப்பட்டனர்.

இந்த நிலையில் அமெரிக்க உளவுத்துறை ஒரு மிக சொற்ப ஆயுதங்களையும் (3 கனன் இரக துப்பாக்கிகளை என்பதாக நினைவில் உள்ளது) அதற்கான பயிற்சியினை யாழ்பாணத்தில் உள்ள மணியந்தோட்டம் எனும் இடத்தில் வழங்கியிருந்தாக கேள்விபட்டேன்.

அதனை தொடர்ந்து அமெரிக்க உளவுத்துறை விடுதலை புலிகளின் தலைவரை நேரில் சந்திக்கவேண்டும் என கோரியதாம், ஆனால் விடுதலை புலிகளின் தலைவர் அந்த கோரிக்கையினை நிராகரித்து விட்டாராம், விடுதலை புலிகளின் போராளிகளிடம் நான் அவங்களை சந்தித்தால் என்ன நடக்கும் தெரியும்தானே என்றாராம்.

உக்கிரேனின் எதிர்காலம் கொதிக்கும் சட்டியிலிருந்து நெருப்பிற்குள் விழுந்த நிலைக்கு வராது என நம்புகிறேன், புதிய காலனித்துவவாதிகளான மேற்கினை ஆக்கிரமிப்பிலிருந்து காக்கும் தேவதைகளாக நான் கருதவில்லை, ஆனால் இரஸ்சியாவின் அடக்குமுறைக்கு எதிரான உக்கிரேன் இந்த வெற்றியினை தாராளமாக எல்லோரும் கொண்டாடலாம்.

உக்கிரேனிற்கு இரஸ்சியா தற்போது எதிரி, மேற்கு நண்பன், ஆனால் இந்த நவீன உலகில் ஆக்கிரமிப்பிற்குள்ளாகும் அப்பாவி மக்களுக்காக தனது வலங்களை எல்லாம் கொடுத்து உதவுவதற்கு மேற்கு ஒரு வள்ளல் அல்ல அவர்கள் வியாபாரிகள் போரின் முடிவின் பின்னர் உக்கிரேனிற்கு மேற்கு தனது உண்மையான முகத்தினை காட்டும் அப்போது உக்கிரேனால் அதனை வெளியில் கூட சொல்லமுடியாத உள்குத்தாக இருக்கும்.

மன்னிக்கவும் பயிற்சி வழங்கப்பட்ட இடம் மணியந்தோட்டம் அல்ல வேறு ஒரு இடம் பெயர் சரியாக நினைவில் இல்லை, சுப்பிரமணியம் பூங்கா ? (அப்படி யாழ் நகரில் ஒரு இடம் இருக்கா என்பது தெரியவில்லை) முன்பு பல வருடங்களுக்கு முன்பு கேள்விப்பட்டது.

57 minutes ago, பெருமாள் said:

கனபேர் உங்களை தேட துவங்க போறாங்கள் .😀

நான் கேள்விப்பட்டதன் அடிப்படையிலேயே பதிவிட்டிருந்தேன், எனக்கு வேறு எதுவும் தெரியாது.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, vasee said:

மேற்கு ஆக்கிரமிப்பிற்குள் உக்கிரேன் தானாக போய் மாட்டி கொண்டுள்ளது, இதில் இரஸ்சிய ஆக்கிரமிப்பு நல்லதா? மேற்கு ஆக்கிரமிப்பு நல்லதா? தெரியவில்லை.

நான் தெரிந்து கொண்டவரை உக்கிரேன் மக்கள் ஐரோப்பாவில் உள்ள ஒரு மேற்குலக நாடாகவே தங்களை அடையாளபடுத்த விரும்புகின்றனர்.ரஷ்யாவை வெறுக்கிறார்கள். இலங்கை தமிழர்கள் இந்தியாவை வெறுப்பது போன்று . நீங்கள் சொல்கின்ற படி அவர்கள்  மேற்குலகிடம் தான் மாட்டி கொள்ளவே  விரும்புகிறார்கள் என்றே வைத்து கொள்வோம். உக்கிரேன் மக்களுக்கு முழுமையான உரிமை உள்ளது தாங்கள் யாரிடம் மாட்டி கொள்ள வேண்டும் என்பது. ரஷ்ய சர்வாதிகாரி வெள்ளைத் தோல் புதினை தங்களுடைய தலைவாராக ஏற்று ரஷ்யாவுக்காக பிரசாரம் செய்கின்ற இலங்கை தமிழர்களே ரஷ்யாவுக்கு செல்ல விரும்பாமல் மேற்குலநாடுகளிலேயே மாட்டி கொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து ரஷ்யாவுக்காக பிரசாரம் செய்து திரிகின்ற போது  உக்கிரேன் மக்களும் மேற்குலகிடம் தானே மாட்டி கொள்ள  விரும்புவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, விளங்க நினைப்பவன் said:

நான் தெரிந்து கொண்டவரை உக்கிரேன் மக்கள் ஐரோப்பாவில் உள்ள ஒரு மேற்குலக நாடாகவே தங்களை அடையாளபடுத்த விரும்புகின்றனர்.ரஷ்யாவை வெறுக்கிறார்கள். இலங்கை தமிழர்கள் இந்தியாவை வெறுப்பது போன்று . நீங்கள் சொல்கின்ற படி அவர்கள்  மேற்குலகிடம் தான் மாட்டி கொள்ளவே  விரும்புகிறார்கள் என்றே வைத்து கொள்வோம். உக்கிரேன் மக்களுக்கு முழுமையான உரிமை உள்ளது தாங்கள் யாரிடம் மாட்டி கொள்ள வேண்டும் என்பது. ரஷ்ய சர்வாதிகாரி வெள்ளைத் தோல் புதினை தங்களுடைய தலைவாராக ஏற்று ரஷ்யாவுக்காக பிரசாரம் செய்கின்ற இலங்கை தமிழர்களே ரஷ்யாவுக்கு செல்ல விரும்பாமல் மேற்குலநாடுகளிலேயே மாட்டி கொண்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து ரஷ்யாவுக்காக பிரசாரம் செய்து திரிகின்ற போது  உக்கிரேன் மக்களும் மேற்குலகிடம் தானே மாட்டி கொள்ள  விரும்புவார்கள்.

உங்கள் கருத்து தவறானதல்ல,

ஒரு நாடு தானாக தனது இறமையின இழக்கவிரும்பாது, உக்கிரேனை பொறுத்தவரை இரஸ்சிய ஆக்கிரமிப்பினை எதிர்க்க எந்த நிலைக்கு செல்லாம் என்ற நிலைக்கு போனால் ஒரு காலத்தில் சிங்கப்பூர் என பேசிக்கொண்டிருந்த இலங்கை இப்போது சிம்பாவே என பேசும் நிலைக்கு கொண்டுவந்து விட்டுள்ளது நிலமை.

அதே போல் உக்கிரேனுக்கும் ஏற்படும் உக்கிரேன் உதவி வழ்ங்கும் மேற்கு ஏன் உக்கிரேனை ஐரோப்பிய ஒன்றியத்தில் இன்னமும் இணைக்கவில்லை, நேட்டோவில் இணைக்கவில்லை?

உக்கிரேனை பொறுத்தவரை மேற்கிடம் ஒரு திட்டம் உள்ளது போல உள்ளது, தற்போதுள்ள ஈராக், லிபியா போல. 

பாவம் உக்கிரேனியர்கள் அவர்களுக்கு இரண்டு பக்கமும் அடிதான், இனி அவர்களது எதிர்காலம் இப்படிதான் இருக்கும் என கருதுகிறேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.