Jump to content

சம்பந்தர் காலமானார்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கொழும்பில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சம்பந்தர் காலமானார் 

Link to comment
Share on other sites

  • Replies 144
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Popular Posts

கிருபன்

தமிழர்களுக்கு அரசியல் தீர்வைப் பெற்றுக்கொள்ள சிங்களவர்களுக்கு மிகவும் விட்டுக்கொடுப்புடனும், கிழக்கு மாகாணசபையை முஸ்லிம்களுக்கு விட்டுக்கொடுத்தும், பதிலுக்கு ஒரு துரும்பைத்தன்னும் பெறாமலேயே தோல்வியடைந

வாத்தியார்

1977  இல் நடந்த இலங்கைப் பாராளுமன்றத் தேர்தலில் முதன் முதலாக போட்டியிட்டு வென்றவர் . அப்போது யாழ் மாவட்டத்தின் தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்திருந்தார். பட்டு வெட்டி பட்டு சேட்டு குங்குமப் போட்டு

island

இதுவரை தமிழருக்கு தலைமை வகித்த அனைவருமே தமிழர்களின் நம்பிக்கைக்கு துரோகம் இழைத்து பொறுப்பற்ற வகையில் நடந்து  பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களின்  உயிர் அழிவுக்கும் தமிழரின் உரிமை அரசியல் பல தலைமுறைக்கு ப

  • கருத்துக்கள உறவுகள்

91 வயது வரை அரசியலில் இருந்தும்…. தமிழ் மக்களுக்கு எதுவும் செய்யமுடியாத தோல்வியுற்ற அரசியல்வாதியாக காலமாகிவிட்டார்.

  • Like 1
Link to comment
Share on other sites

அமைதி வழி அரசியல் மூலம் இலங்கை தமிழர்களுக்கு உருப்படியாக எதையும் பெற்றுக் கொடுக்க முடியாத தோற்றுப்போன அரசியல்வாதியாக 91 வயது வரை வாழ்ந்து தன் வாழ்நாள் கனவான எம் பி யாகவே சாக வேண்டும் என்பதை மட்டுமே நிறைவேற்றிக் கொண்ட ஒருவராக விடைபெற்றார்.

 

  • Like 4
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தர் மட்டுமல்ல இதுவரை தமிழர் அரசியலுக்கு தலைமை வகித்த அனைவருமே தோல்வியடைந்தவர்களாகவே  மரணத்தை தழுவினர் என்பதே வரலாறு. அந்த வரிசையில்  இப்போது சம்பந்தர். அன்னாரிர் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். 

  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவிற்கும் எதிர்க்கட்சி தலைவராக இருந்தும்… 
தனது சொந்த ஆசையை… மட்டும், நிறைவேற்றிக் கொண்டார்.

அடுத்த தீபாவளிக்குள்  தீர்வு, அடுத்த பொங்கலுக்குள் தீர்வு என்று சொல்லிச் சொல்லி...  தமிழ் மக்களை நம்ப வைத்த அரசியல்வாதி மறைந்தார்.

Edited by தமிழ் சிறி
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த அனுதாபங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்.......... சிலருக்கு மட்டுமே மாற்றங்கள் ஏற்படுத்தக் கூடிய சந்தர்ப்பங்கள் அமையும், அதையும் பயன்படுத்தாமல் விட்டவர்கள் அவர்களில் பலர். சம்பந்தர் ஐயாவும் அப்படியான ஒருவர் என்று முடிகின்றது அவரின் பயணம்.

Edited by ரசோதரன்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களுக்கு அரசியல் தீர்வைப் பெற்றுக்கொள்ள சிங்களவர்களுக்கு மிகவும் விட்டுக்கொடுப்புடனும், கிழக்கு மாகாணசபையை முஸ்லிம்களுக்கு விட்டுக்கொடுத்தும், பதிலுக்கு ஒரு துரும்பைத்தன்னும் பெறாமலேயே தோல்வியடைந்த தமிழ்க்கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தரின் மறைவினால் கவலையில் இருக்கும் அவரை நம்பியிருந்தோருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

  • Like 6
  • Haha 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அம்பாறையில்…. பியசேன என்ற சிங்களவனை தமிழர் கட்சி சார்பில் போட்டியிட வைத்ததும் சம்பந்தர்தான்.

அந்தச் சிங்களவன் வெற்றி பெற்ற பின்… சிங்களக் கட்சிக்கு தாவிப் போன கூத்தும் இவர் கண்முன்னேதான் நடந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் இனத்தின் வரலாற்றுத்துயரங்களில் ஒன்று விடைபெற்றது.. ஆழ்ந்த அனுதாபங்கள் சார்ந்தவர்களுக்கு..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, தமிழ் சிறி said:

அம்பாறையில்…. பியசேன என்ற சிங்களவனை தமிழர் கட்சி சார்பில் போட்டியிட வைத்ததும் சம்பந்தர்தான்.

அந்தச் சிங்களவன் வெற்றி பெற்ற பின்… சிங்களக் கட்சிக்கு தாவிப் போன கூத்தும் இவர் கண்முன்னேதான் நடந்தது.

அது சரி  பலமுறை  கருத்துகள் எழுதி உள்ளீர்கள்  ஆனால்   அனுதாபம்.     அல்லது இரங்கல்  தெரிவிக்கவில்லை    என்ன  காரணம்??? 🤣🤣,......ஆழ்ந்த கண்ணீரஞ்சலிகள்  🙏ஒம் சாந்தி 🙏🙏🙏

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Former TNA Leader R. Sampanthan no more

Colombo, June 30 (Daily Mirror) - Veteran Tamil politician and parliamentarian R. Sampanthan passed away at a private hospital in Colombo today evening, aged 91. 

Sampanthan was one of the longest serving MPs with decades of experience and served as the Leader of the Tamil National Alliance for several years.

https://www.dailymirror.lk/breaking-news/Former-TNA-Leader-R-Sampanthan-no-more/108-286102

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சம்பந்தன் காலமானார் !

01 JUL, 2024 | 12:02 AM
image
 

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சிரேஷ்ட தலைவரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இராஜவரோதயம் சம்பந்தன் சற்று முன்னர் இயற்கை எய்தினார். 

 

உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக குடும்பத்தினர் உறுதிப்படுத்தினர்.

 

1933ஆம் ஆண்டு பெப்ரவரி ஐந்தாம் திகதி பிறந்த சம்பந்தன் இயற்கை எய்தும்போது  அவருகு்கு 91வயதாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Kandiah57 said:

அது சரி  பலமுறை  கருத்துகள் எழுதி உள்ளீர்கள்  ஆனால்   அனுதாபம்.     அல்லது இரங்கல்  தெரிவிக்கவில்லை    என்ன  காரணம்??? 🤣🤣,......ஆழ்ந்த கண்ணீரஞ்சலிகள்  🙏ஒம் சாந்தி 🙏🙏🙏

ஒன்றையும் தமிழருக்கு பெற்று தரவில்லை பரவாயில்லை சிங்களத்தின் குணம் அப்படி திருமலையை சிங்களமாக மாற்றும் திட்டத்துக்கு கண்டும் காணமால் இருதவர்தானே கொழும்பு வீட்டுக்கு ஆசைபட்டு இந்த வயதிலும். இப்படி சொந்த இனத்துக்கு கேடு விளைவித்த கருணா இறந்தால் ஆழ்ந்த அனுதாபம்  இரங்கல் தகுதி உடையவரா ? இல்லையே அது போலத்தான் .

லண்டனில் சம்பந்தர் இறந்த செய்தி கேட்டு வெடி கொளுத்தி கொண்டாடினார்கள் வடகிழக்கு தமிழர்கள் என்ற செய்தி வராத மட்டும் சந்தோசபடுங்க .

8 minutes ago, nedukkalapoovan said:

Sampanthan was one of the longest serving MPs with decades of experience and served as the Leader of the Tamil National Alliance for several years.

பலவருடகால அனுபவம் எல்லாம் இருந்தும் ஒன்றுமே தமிழருக்கு கிடைக்கவில்லையே ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1977  இல் நடந்த இலங்கைப் பாராளுமன்றத் தேர்தலில் முதன் முதலாக போட்டியிட்டு வென்றவர் .

அப்போது யாழ் மாவட்டத்தின் தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்திருந்தார்.
பட்டு வெட்டி பட்டு சேட்டு குங்குமப் போட்டு
மனுஷனின்  அழகோ அழகு.  அவரைப் பார்க்கவென்றே கூட்டங்களில்   பெண்கள்  குவிந்திருப்பார்கள்

கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு தமிழர்களின் அரசியலில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியவர் தந்தை செல்வாவிற்குப் பின்னர் பிரிந்திருந்த
தமிழ்க் கட்சிகளை ஒன்றிணைத்துக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டபோது ஒரு பெரும் தலைவராக உருவெடுத்தவர்.

ஈழத்து தமிழ் மக்களுக்கு தமிழ்த் தேசியக்  கூட்டமைப்பின் மூலம்
உலக அரசியலில் ஒரு மாற்றத்தை விடுதலைப் புலிகளின் காலத்தில் செய்யும் சந்தர்ப்பம் கிடைத்தும்
-----  அதை உதறித் தள்ளிவிட்டு ரணிலுடன் சேர்ந்து   சிங்கக்   கொடி அசைத்து  தன் நலமே  முன்னே என்று சுயநல அரசியலில் மூழ்கியவர் .

இன்று ஈழத்து தமிழ் மக்களிடையே தேசத்து துரோகி என்ற பட்டத்துடன் விடை பெற்றுக் கொண்டார்

  • Like 4
  • Thanks 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்க்காலில் இறந்த தன் சொந்த மக்களின் துயரைக் கூட உள்வாங்க வக்கில்லாமல் சிங்கக் கொடியை தூக்கிப் பிடிச்சுக் கொண்டு இனக்கொலைஞன் சரத் பொன்சேக்காவுக்கு வாக்குக்கேட்டது முதல் சம்பந்தனை சராசரி மனிதனாகக் கூட காண முடியவில்லை.

இன்று வரை ஒரு தடவை தானும்.. இந்த ஆள்.. முள்ளிவாய்க்காலுக்கு சென்றதும் இல்லை.. இறந்த சொந்தங்களுக்கு துக்கம் அனுஷ்டித்ததும் இல்லை.

எம் மக்களின் துயருக்கு எதுவுமே இல்லை என்றாக்கிய மிக முட்டாள் அரசியல்வாதியும் சுயநலவாதியுமான சம்பந்தனின் மறைவு.. இரங்கலுக்கு அப்பாற்பட்ட உணர்வே எழுகிறது. 

அப்படியப்பட்ட ஆளுக்கு அழவோ.. இரங்கவோ முடியவில்லை.

இயற்கை காலம் கடந்து தீர்ப்பை எழுதி இருக்கிறது. அவ்வளவும் தான். 

  • Like 3
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, வாத்தியார் said:

1977  இல் நடந்த இலங்கைப் பாராளுமன்றத் தேர்தலில் முதன் முதலாக போட்டியிட்டு வென்றவர் .

அப்போது யாழ் மாவட்டத்தின் தேர்தல் பிரச்சாரத்திற்கு வந்திருந்தார்.
பட்டு வெட்டி பட்டு சேட்டு குங்குமப் போட்டு
மனுஷனின்  அழகோ அழகு.  அவரைப் பார்க்கவென்றே கூட்டங்களில்   பெண்கள்  குவிந்திருப்பார்கள்

கிட்டத்தட்ட அரை நூற்றாண்டு தமிழர்களின் அரசியலில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியவர் தந்தை செல்வாவிற்குப் பின்னர் பிரிந்திருந்த
தமிழ்க் கட்சிகளை ஒன்றிணைத்துக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டபோது ஒரு பெரும் தலைவராக உருவெடுத்தவர்.

ஈழத்து தமிழ் மக்களுக்கு தமிழ்த் தேசியக்  கூட்டமைப்பின் மூலம்
உலக அரசியலில் ஒரு மாற்றத்தை விடுதலைப் புலிகளின் காலத்தில் செய்யும் சந்தர்ப்பம் கிடைத்தும்
-----  அதை உதறித் தள்ளிவிட்டு ரணிலுடன் சேர்ந்து   சிங்கக்   கொடி அசைத்து  தன் நலமே  முன்னே என்று சுயநல அரசியலில் மூழ்கியவர் .

இன்று ஈழத்து தமிழ் மக்களிடையே தேசத்து துரோகி என்ற பட்டத்துடன் விடை பெற்றுக் கொண்டார்

தேசத் துரோகி ??

இன்னொருவரைத் துரோகி என்று கூறுவதற்கு தாங்கள் பிடுங்கியது என்ன? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சொந்த இனத்தின் விடுதலைக்காகப் போராடி உயிர் நீத்த போராளிகளையும் அந்தப் போராட்டத்தின் விளைவாக உயிர் தந்த மக்களையும்.. இனப்படுகொலையாளர்களை மறந்து.. மன்னித்து.. ஒரே நொடியில் பயங்கரவாதமாக்கிய சம்பந்தன் கும்பல் இரங்கலுக்குரிய கும்பலே அல்ல. இதுதான் எங்கள் தனிப்பட்ட நிலைப்பாடு. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 தோல்வியை எழுதிச்செல்லும் தமிழர்களின் அடுத்த அத்தியாயம் ஆரம்பம். 

இனி இந்திய சிறீதரனுக்கும் மேற்கின் சுமந்திரனுக்குமான போட்டி தமிழர்களை முட்டாள்கள் என்று உலகுக்கு மீண்டும் பறைசாற்றும்  பயணம் தொடரும். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, Kapithan said:

தேசத் துரோகி ??

இன்னொருவரைத் துரோகி என்று கூறுவதற்கு தாங்கள் பிடுங்கியது என்ன? 

நான் மக்களிடம் உங்களுக்குத் தீர்வை வாங்கித்   தருவேன்
எனக்கு வாக்குப் போடுங்கள் என்று இலங்கையில் எந்த தேர்தலிலும் தமிழ் மக்களிடம் வாக்கு கேட்கவில்லை.

அரசியலில் இருந்தாவது இன்றுவரை விலகி இருக்கின்றேன்.
முடிந்தவர்களை.... நீங்கள் முயற்சியுங்கள் என்று அவர்களுக்கு வழி விட்டிருக்கினேறேன்.

கட்டப்பொம்மனைக் காட்டிக் கொடுத்த எட்டப்பன் துரோகி என்று சொல்லும் யோக்கியம் இன்னொரு எட்டப்பனுக்கு இருக்காது

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, வாத்தியார் said:

நான் மக்களிடம் உங்களுக்குத் தீர்வை வாங்கித்   தருவேன்
எனக்கு வாக்குப் போடுங்கள் என்று இலங்கையில் எந்த தேர்தலிலும் தமிழ் மக்களிடம் வாக்கு கேட்கவில்லை.

அரசியலில் இருந்தாவது இன்றுவரை விலகி இருக்கின்றேன்.
முடிந்தவர்களை.... நீங்கள் முயற்சியுங்கள் என்று அவர்களுக்கு வழி விட்டிருக்கினேறேன்.

கட்டப்பொம்மனைக் காட்டிக் கொடுத்த எட்டப்பன் துரோகி என்று சொல்லும் யோக்கியம் இன்னொரு எட்டப்பனுக்கு இருக்காது

ஒரு மசிரும் பிடுங்காத ஆட்கள்தான் பிறரைத் துரோகி என்று தற்போது கூறுகிறார்கள். 

துரோகி என்று பிறரைத் தூற்ருபவர்களை முச்சந்தியில்  நிற்கவைத்து பச்சை மட்டையடி போட வேண்டும். 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

துரோகம் செய்தவர்களை துரோகி என்றுதானே அழைப்பது வழமை மாறாக சந்தியில் வைத்து அடிப்பது எல்லாம் எந்த வகையில் சேர்த்தி ?

Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தங்களுக்கு இத்தனை அநியாயங்களையும் செய்த பெளத்த சமயத்திற்கோ  அல்லது முஸ்லிம் சமயத்திற்கோ எதிர்ப்பெதையும் காட்டாமல் தங்களுடன் எப்போதும் கூட நிற்கும் கிறீஸ்தவர்களை மட்டும் இவர்கள் குறிவைப்பதன் காரணம் என்ன?  😁
    • 02 JUL, 2024 | 04:12 PM சென்னை: “தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் எதிர்நோக்கும் இன்னல்களுக்கு நிரந்தரத் தீர்வு காண்பது காலத்தின் கட்டாயமாகும். தமிழக மீனவர்களின் பாரம்பரிய உரிமைகளை நிலைநாட்டும் வகையில் மீனவர்களுக்குத் தொடர்ந்து இடையூறு விளைவித்து வரும் இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணத் தேவையானஇ உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என்றுஇந்திய மத்திய வெளியுறவுத் துறை அமைச்சருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த 25 மீனவர்கள் பாக் ஜலசந்தி மற்றும் மன்னார் வளைகுடா கடல்பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த நிலையில் நேற்று (ஜூலை 1) இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திட உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மத்திய அரசை வலியுறுத்திஇ தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூலை2) கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் சமீப வாரங்களில் இலங்கைக் கடற்படையினரா தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் கைது செய்யப்படும் சம்பவங்கள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது கவலையளிக்கிறது. இரண்டு மோட்டார் பொருத்தப்பட்ட நாட்டுப் படகுகளிலும் இரண்டு பதிவு செய்யப்படாத மீன்பிடிப் படகுகளிலும் சென்ற தமிழகத்தைச் சேர்ந்த 25 மீனவர்கள் ஜூலை 1 அன்று இலங்கைக் கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். 1974 ஆம் ஆண்டிலிருந்தே அப்போதைய மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையிலான புரிந்துணர்வைத் தொடர்ந்து இந்தப் பிரச்சினை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தனது ஜூன் 27 நாளிட்ட கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதைக் கோடிட்டுக் காட்டியுள்ளதமிழக முதல்வர் திமுக தலைமையிலான மாநில அரசு கச்சத்தீவு ஒப்பந்தத்தை அப்போது முழுவீச்சில் எதிர்த்தது என்பதையும் தனது எதிர்ப்பை தமிழக சட்டமன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ளார். ஒப்பந்தம் நிறைவேற்றப்படுவதற்கு முன்பு இது சம்பந்தமாக மாநில அரசுடன் முறையாக கலந்தாலோசிக்கவில்லை என்பது அனைவரும் அறிந்த ஒன்று என்று குறிப்பிட்டுள்ள முதல்வர் இந்திய மீனவர்களின் உரிமைகளுக்கும் நலன்களுக்கும் ஆபத்தை விளைவிக்கும் வகையிலும் அவற்றைப் பறிக்கும் வகையிலும் கச்சத் தீவை முழுமையாக இலங்கைக்கு விட்டுக் கொடுத்தது அப்போதைய மத்திய அரசுதான் என்று தனது கடிதத்தில் அழுத்தந்திருத்தமாகக் குறிப்பிட்டுள்ளார். தனது தலைவரும் அப்போதைய திமுக தலைவருமான கருணாநிதி உச்சநீதிமன்றத்தில் ஒரு பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்து அதில் “மத்திய அரசு மேற்கொண்ட அனைத்து நடவடிக்கைகளும் அரசியலமைப்புக்கு முரணானதாக இருக்கும்போதுஇ கச்சத்தீவின் இறையாண்மை ஒரு தீர்க்கப்பட்ட விஷயம் என்று கூற முடியாது” என்று திட்டவட்டமாகக் கூறியிருந்ததை முதல்வர் தனது கடிதத்தில் நினைவுகூர்ந்துள்ளார். பாஜக தலைமையிலான அரசு தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியில் இருந்தாலும் இந்தப் பிரச்சினையை தேர்தல் நேர முழக்கத்துக்காக மட்டுமே பயன்படுத்தி வருவதாகவும் கச்சத்தீவை மீட்க குறிப்பிடத்தக்க அர்த்தமுள்ள எந்த முயற்சியையும் அது எடுக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ள முதல்வர்  தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் எதிர்நோக்கும் இன்னல்களுக்கு நிரந்தரத் தீர்வு காண்பது காலத்தின் கட்டாயமாகும் என முதல்வர் தெளிவுபடக் குறிப்பிட்டுள்ளார். எனவே தமிழக மீனவர்களின் பாரம்பரிய உரிமைகளை நிலைநாட்டும் வகையில் மீனவர்களுக்குத் தொடர்ந்து இடையூறு விளைவித்து வரும் இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணத் தேவையான உறுதியான நடவடிக்கைகளை எடுக்குமாறு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் ஜெய்சங்கரை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கடிதத்தில் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார். https://www.virakesari.lk/article/187506
    • இஸ்ரேலிய படையினரால் தடுத்துவைக்கப்பட்டிருந்த வேளை நாளாந்தம் சித்திரவதைகள் - விடுதலை செய்யப்பட்ட மருத்துவர் Published By: RAJEEBAN  02 JUL, 2024 | 12:18 PM அல்ஷிபா மருத்துவமனையின் இயக்குநர் இஸ்ரேலிய படையினர் தன்னை பல மாதங்களாக தடுத்து வைத்திருந்தவேளை கடுமையான சித்திரவதைகளிற்குட்படுத்தினார்கள் என தெரிவித்துள்ளார். இஸ்ரேலிய படையினரால் ஏழு மாத காலம்  தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் விடுதலை செய்யப்பட்டுள்ள முகமட் அபு சல்மியா இஸ்ரேலிய படையினர் தன்னை மிக மோசமாக சித்திரவதை செய்தனர் என குறிப்பிட்டுள்ளார். திங்கட்கிழமை முகமட் அபு சல்மியா உட்பட பல பாலஸ்தீனியர்கள் இஸ்ரேலிய சிறைகளில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர். மருத்துவமனையில் கடந்த நவம்பர் மாதம் கைதுசெய்யப்பட்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்படாமல் தடுத்துவைக்கப்பட்டிருந்த மருத்துவர் எங்களை இஸ்ரேலிய படையினர் நாளாந்தம் சித்திரவதை செய்தனர் என தெரிவித்துள்ளார். தடியால் தாக்கினார்கள் நாய்களை கடிக்கவிட்டார்கள் மருந்துகள் உணவுகளை வழங்கமறுத்தார்கள் என தெரிவித்துள்ள மருத்துவர் உளவியல் உடல்ரீதியான சித்திரவதைகளை எதிர்கொண்டதாக தெரிவித்துள்ளார். மருத்துவருடன் விடுதலை செய்யப்பட்ட ஏனைய சிறைக்கைதிகளும் தாங்கள் துஸ்பிரயோகத்தை எதிர்கொண்டதாக தெரிவித்துள்ளனர். இஸ்ரேலிய படையினரால் தடுத்துவைக்கப்பட்டுள்ள பல மருத்து பணியாளர்கள் சித்திரவதைகள் துஸ்பிரயோகங்களை எதிர்கொண்டுள்ளனர் போதிய மருத்துவகிசிச்சைகளை வழங்காததால் சிலரின் அவயங்களை துண்டிக்க வேண்டிய நிலையேற்பட்டுள்ளது என மருத்துவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/187468
    • உத்தரப் பிரதேசம்: ஹத்ராஸ் மத நிகழ்ச்சியின் கூட்ட நெரிசல் பலி 100 ஆக உயர்வு - சமீபத்திய தகவல்கள் பட மூலாதாரம்,DHARMENDRA CHAUDHARY 2 ஜூலை 2024, 13:26 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் நகரில் நடந்த மத வழிபாட்டு நிகழ்ச்சியில் (சத்சங்), கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 100-ஐத் தாண்டியுள்ளது. உத்தரபிரதேசக் காவல்துறையின் ஆக்ரா மண்டல ஏ.டி.ஜி அலுவலகம் இதை உறுதி செய்துள்ளது. முன்னதாக இச்சம்பவத்தில் 60 பேர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. ஹத்ராஸ் காவல்துறை கண்காணிப்பாளர் நிபுன் அகர்வால் பிபிசி நிருபர் தில்னாவாஸ் பாஷாவிடம், விபத்தில் 60 பேர் உயிரிழந்ததாகவும், 18 பேர் காயமடைந்ததாகவும் கூறியிருந்தார். அப்போது, எட்டா மாவட்ட எஸ்எஸ்பி ராஜேஷ் குமார் சிங் கூறுகையில் , "ஹத்ராஸ் மாவட்டத்தில் சிக்கந்தராவ் அருகே உள்ள முகல்கர்ஹி கிராமத்தில் போலே பாபாவின் (Bole Baba) நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்த போது, நெரிசலில் சிக்கி 60 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களது சடலங்கள் எட்டாவில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டன," என்றார்.   முன்னதாக, எட்டா மாவட்டத்தின் தலைமை மருத்துவ அதிகாரி உமேஷ் குமார் திரிபாதி கூறுகையில், "இதுவரை 50க்கும் மேற்பட்டோரின் சடலங்கள் பிரேதப் பரிசோதனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. அதில் 25-க்கும் மேற்பட்டோர் பெண்கள். 15க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். விசாரணைக்குப் பிறகு கூடுதல் தகவல்கள் தெரிவிக்கப்படும்," என்றார். மத நிகழ்வு ஒன்றின் போது ஏற்பட்ட அதீத கூட்ட நெரிசல் காரணமாக இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.   மக்களவையில் இரங்கல் தெரிவித்த பிரதமர் மோதி மக்களவையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது, பிரதமர் நரேந்திர மோதி ஹத்ராஸ் சம்பவம் குறித்து இரங்கல் தெரிவித்தார். “இந்த விவாதத்திற்கு இடையே எனக்கு ஒரு சோகமான செய்தி கிடைத்துள்ளது. உத்தரப்பிரதேசம் ஹத்ராஸில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கிப் பலர் பரிதாபமாக உயிரிழந்ததாக தகவல்கள் வருகின்றன. இறந்தவர்களுக்கு இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்,” என்றார். பட மூலாதாரம்,DHARMENDRA CHAUDHARY முதல்வர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கை உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் அலுவலகம் சமூக ஊடக தளமான எக்ஸ்-இல் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் ஹத்ராஸ் கூட்ட நெரிசலில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளது. அந்த அறிக்கையின்படி “காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் எனத் தெரிவித்துள்ள முதல்வர், காயமடைந்தவர்களை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று உரிய சிகிச்சை அளித்து, நிவாரணப் பணிகளை விரைந்து மேற்கொள்ள மாவட்ட நிர்வாக அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். ஆக்ரா ஏடிஜி மற்றும் காவல் ஆணையர் ஆகியோரிடம் சம்பவத்திற்கான காரணத்தை விசாரிக்க அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.” பட மூலாதாரம்,DHARMENDRA CHAUDHARY மக்களின் கோபம் காயமடைந்தவர்கள் சிக்கந்த்ராவ் அவசர சிகிச்சை மையத்துக்கு (Sikandrarao Trauma Centre) கொண்டு செல்லப்பட்டுள்ளனர். பிபிசி பத்திரிக்கையாளர் தர்மேந்திர சவுத்ரி அந்த சிகிச்சை மையத்திலிருந்து சில வீடியோக்களை அனுப்பியுள்ளார், அதில் பாதிக்கப்ப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் கோபத்தை வெளிப்படுத்துவதை தெளிவாகக் காண முடிகிறது. சிகிச்சை மையத்தில் இருந்த பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களில் ஒருவர், "இவ்வளவு பெரிய விபத்து நடந்துள்ளது, ஆனால் ஒரு மூத்த அதிகாரி கூட இங்கு இல்லை. இவ்வளவு பெரிய நிகழ்ச்சியை இங்கு நடத்த போலே பாபாவுக்கு அனுமதி வழங்கியது யார். அரசு நிர்வாகம் எங்கே போனது?" என்கிறார். காயமடைந்தவர்கள் மற்றும் இறந்தவர்கள் டிரக்குகள், டெம்போக்கள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் மூலம் சிகிச்சை மையத்திற்கு கொண்டு வரப்பட்டனர். வீடியோவில், சிகிச்சை மையத்திற்கு வெளியே தரையில் பெண்களின் சடலங்கள் கிடப்பதைக் காணலாம். சிகிச்சை மையத்திற்கு வெளியே பதற்றமான சூழல் நிலவுகிறது, மேலும் மக்கள் தங்கள் குடும்பத்தினரைத் தேடி கூச்சல் எழுப்பி வருகிறார்கள்.   பட மூலாதாரம்,GETTY IMAGES உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் என்ன சொன்னார்? உபி முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் எக்ஸ் தளத்தில், "ஹத்ராஸ் மாவட்டத்தில் ஏற்பட்ட துரதிர்ஷ்டவசமான விபத்தில் ஏற்பட்டுள்ள உயிர் இழப்புகள் மனவேதனையை கொடுக்கிறது. அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மீட்புப் பணிகளை செய்ய உத்தரவிட்டுள்ளேன். போர்க்கால அடிப்படையில் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளை மேற்கொண்டு, காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படும்,” என்று குறிப்பிட்டுள்ளார். நிகழ்ச்சிக்கு ஒப்புதல் கொடுத்தது யார்? பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு,ஹத்ராஸ் மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் குமார் இந்தச் சம்பவம் பற்றி ஹத்ராஸ் மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் குமார் கூறுகையில், "மாவட்ட நிர்வாகம் இவ்விவகாரம் குறித்து விசாரணை நடத்தி வருகிறது. காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு, மக்கள் இன்னும் மீட்கப்பட்டு வருகின்றனர். கிட்டத்தட்ட 50-60 பேர் வரை உயிரிழந்ததாக மருத்துவர்கள் என்னிடம் தெரிவித்தனர்,” என்றார். "இந்நிகழ்ச்சிக்கு அனுமதி சப்-கலெக்டரால் வழங்கப்பட்டுள்ளது. இது ஒரு தனிப்பட்ட நிகழ்ச்சி. இது குறித்து விசாரிக்க உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை வழங்குவதே நிர்வாகத்தின் முதன்மை நோக்கம். காயமடைந்தவர்களுக்கும், இறந்தவரின் உறவினர்களுக்கும் முடிந்த உதவிகள் செய்து வருகிறோம்," என்றார். https://www.bbc.com/tamil/articles/cd1d6el8d3eo
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.