-
Tell a friend
-
Topics
-
Posts
-
By பாலபத்ர ஓணாண்டி · Posted
ஒட்டவைக்க முடியாது எண்டு நினைக்கிறன்.. ஒட்டினாலும் ஒண்டுக்கு இருக்கலாம் ஆனால் முந்தினமாதிரி ஓடி ஆடி விளையாட முடியாது எண்டு நினைக்கிறன்.. உடைஞ்சு போம்..😮 -
By தமிழ் சிறி · Posted
அந்தரங்க உறுப்பை வெட்டியவர், மருத்துவர் என்பதால்.... பக்குவமாகத்தான் வெட்டியிருப்பார். 😂 🤣 -
விடைபெற்றார் தமிழினத்தின் தலைமகன் 02 JUL, 2024 | 04:23 PM ஆர்.ராம் “தமிழ் மக்கள் பாரம்பரியமாக வடக்கு, கிழக்கில் வாழ்ந்து வருகின்றார்கள். ஆகவே அவர்கள் உள்ளக சுயநிர்ணயத்துக்கு உரித்துடையவர்கள். அந்த அடிப்படையில் பிரிக்க முடியாத, பிளவுபடாத ஐக்கிய இலங்கைக்குள் சுயநிர்ணய அடிப்படையில் இணைந்த வடக்கு, கிழக்கில் சமஷ்டி அடிப்படையில் அதியுச்சமான அளவில் அதிகாரங்கள் பகிரப்பட்டு அவை மீளப்பெறப்படாத வகையில் உறுதி செய்யப்பட வேண்டும்” இந்தக் கூற்றுக்கள் 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் முடிவுக்குப் பின்னர் உள்நாட்டிலும், சர்வதேசத்திலும் எந்தவிதமான விட்டுக்கொடுப்புக்களுக்கும் இடமின்றி மிகமிக உறுதியாக வெளிப்படுத்தப்பட்டவையாக இருக்கின்றன. அந்தக் கூற்றுக்களுக்காக வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் தமது ஆணையை தொடர்ந்தும் அளித்து வந்திருக்கின்றமையையும் கண்கூடாக கணாக்கூடியதாகவும் இருக்கின்றது. இனமொன்றின் விடுதலைக்காகவுள்ள இறுதியான வாயிற்கதவான இந்தக் கூற்றுக்களுக்குச் சொந்தக்காரர் வேறு யாரும் அல்ல. ஆயதப்போராட்ட மௌனிப்பின் பின்னர் தமிழ் மக்களால் அரசியல் தலைமகனாக ஏற்றுக்கொள்ளப்பட்ட இராஜவரோதயம் சம்பந்தனுடையதுதான். கடந்த ஜுன் மாதம் 16ஆம் திகதி வீரகேசரி வார வெளியீட்டில் பிரசுரமாகிய விசேட நேர்காணலுக்காக 14ஆம் திகதி மாலை 6 மணியளவில் கொழும்பிலுள்ள இல்லத்துக்குச் சென்று நேர்காணலை ஆரம்பித்தபோது, ஜனாதிபதி ரணில், சஜித், அநுர ஆகிய மூவரும் களமிறங்கினால் யாரை ஆதரிப்பது என்ற தீர்மானத்தினை, எதனடிப்படையில் எடுப்பீர்கள்? என்று வினாவொன்று எழுப்பப்பட்டது. அந்த வினாவுக்கான பதில் மிகத்துல்லியமாக அமைந்தது. தமிழ் மக்களின் அபிலாஷைகளை வென்றெடுப்பதற்காக காணப்படுகின்ற ஒரேயொரு வழி இனப்பிரச்சினைக்கான நிரந்தரமான தீர்வு காணப்படுவதுதான் என்பது சம்பந்தனின் தளர்ந்த உடலிலிருந்து வெளியான உறுதியான குரலாக அமைந்திருந்தது. இறுதிவரையில் தன்னுடைய நிலைப்பாட்டில் மாற்றமில்லை என்ற பிரதிபலிப்பும் பட்டவர்த்தனமாகவும் இருந்தது. குறித்த நேர்காணல்தான் அவருடைய அரசியல் வாழ்க்கையில் வழங்கிய இறுதி நேர்காணலாக இருக்கிறது. ஆனால் அந்த நேர்காணலிலும் அவர் இனப்பிரச்சினைக்கான தீர்வு, தமிழர்களின் அபிலாஷைகள் உறுதி செய்யப்படுவதற்கான அவசியம் மற்றும் முகங்கொடுக்கும் சமகாலப் பிரச்சினைகள் ஆகிய விடயங்களில் தொடர்ச்சியாகக்கொண்டிருந்த உறுதியான நிலைப்பாட்டிலிருந்து பிறழ்வடையவில்லை. தமிழினத்தின் விடுதலைக்காக கிடைக்கின்ற அனைத்து வாய்ப்புக்களையும் பயன்படுத்த வேண்டும் என்பதில் சம்பந்தன் உறுதியாக இருந்தார். எவருடனான பேச்சுவார்த்தை மேசையையும் தவிர்த்துச் செல்லக்கூடாது என்பதிலும் அவர் கவனமாக இருந்தார். அதற்காக திம்பு பேச்சுவார்த்தை முதல் கிடைத்த அனைத்து சந்தர்ப்பங்களையும் அவர் பயன்படுத்தினார். தமிழ்த் தலைவர்கள் பேச்சுக்களுக்காக திறக்கப்பட்ட வாயில்கள் ஊடாக முயற்சித்துப் பார்க்கவில்லை என்ற பழிச்சொல்லுக்கு ஆளாகிவிடக்கூடாது என்பதில் இறுதிவரையில் உறுதியாக அவர் இருந்தார். அதனை அவர் தனது நேர்காணலிலும் வெளிப்படுத்தினார். “அடுத்த தேர்தலில் ரணிலோ, சஜித்தோ, அநுரவோ யாருடனும் பேசுவதற்கு தயாராகவே இருக்கின்றோம்” என்றும் “அவர்களின் விஞ்ஞாபனங்களின் அடிப்படையில்தான் தீர்மானங்கள் எடுப்போம்” என்றும் இறுதியாகக் கூறினார். கடந்த பெப்ரவரி மாதம் 5ஆம் திகதி தனது 91ஆவது வயதில் காலடி பதித்திருந்த சம்பந்தன், வயதால் மூப்படைந்திருந்தார். அதனால் உடல்நிலையில் தளர்வுகள் காணப்பட்டன. ஆனால் அவருடைய சிந்தனைகள், கருத்துக்கள் மாறவில்லை. நினைவாற்றால் குன்றவில்லை. அவரது, உரையாடல்களில் சிறுசிறு தெளிவின்மைகள் காணப்பட்டாலும், ஆண்டுகள், திகதிகள் மாறுபடாது வரலாற்று நிகழ்வுகளையும், குறிப்புக்களையும், துன்பங்கள் துயரங்களையும் வெளிப்படுத்தி இனப்பிரச்சினைக்கான தீர்வினை வலியுறுத்தும் தர்க்க ரீதியான பண்பு நிலையில் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கவில்லை. தனிநாடு கோரிய ஆயுதப்போராட்டம் முள்ளிவாய்க்காலில் முடிவுற்றபோது, திக்கற்று நின்ற தமிழினத்துக்கு தமிழ்த் தேசியக் கொள்கையில் நின்று தமிழ்த்தேசிய அரசியலை கட்டுறுதியாக வைத்திருந்ததில் விமர்சனங்களையும் தாண்டி காத்திரமான பங்கு சம்பந்தனின் உடையது. தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகளில் பெரும்பாலானவற்றை ஒன்றிணைந்து பேரம் பேசும் தமிழர் கட்டமைப்பை வழிநடத்தியதில் சம்பந்தனுக்கு பெரும் பங்குண்டு. அது பின்னாளில் சிதைவடைவதற்கு பல்வேறு காரணங்களும் இல்லாமலில்லை. உள்நாட்டு அரசியலில் ஜே.ஆர்.ஜெயவர்த்தன, பிரேமதாச போன்றவர்களுடன் ஊடாட்டங்கள் இருந்தாலும் தமிழ் மக்களின் அபிலாஷைகளுக்காக சந்திரிகா, மஹிந்த ராஜபக்ஷ, ரணில் விக்கிரமசிங்க, மைத்திரிபால சிறிசேன, கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்டவர்களுடன் பேச்சுக்களை முன்னெடுத்த தமிழ்த் தலைவராகவும் சம்பந்தன் உள்ளார். தெற்காசியப் பிராந்தியத்தில் தலைமை நாடான இந்தியாவின் பிரதமர் நரேந்திரமோடி முதல் அனைத்து நாடுகளின் தலைவர்களும், அரசியல் பிரமுகர்களும் மதிப்பளித்து செவிசாய்த்த பெருமைக்குரிய தலைவராகவும் சம்பந்தன் திகழ்கின்றார். விசேடமாக, இந்தியாவின் முன்னாள் பிரதமர்களான இந்திராகாந்தி, ராஜீவ் காந்தி, வாஜ்பாய், மன்மோகன் சிங் உள்ளிட்டவர்களுடன் சந்திப்புக்களை நடத்திய தமிழ்த் தலைவராகவும் சம்பந்தன் திகழ்வதோடு அவர்களுடன் தொடர்ச்சியான ஊடாட்டங்களையும் பேணி வந்திருந்தார். அதுமட்டுமன்றி, உலகத்தவர்கள், சர்வதேச இராஜதந்திரிகள் மத்தியிலும் அவர் நன்மதிப்புக்களைப் பெற்றிருந்ததோடு அவர்கள் ஊடாக தமிழ் மக்களுக்கான விடியலைப் பெறுவதற்கும் தீவிரமான முயற்சிகளையும் எடுத்திருக்கத் தவறவில்லை. பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் டேவிட் கமரூன், அமெரிக்காவின் முன்னாள் செயலாளர் ஜோன் கெரி, ஐ.நா.செயலாளர் பான் கீ மூன், ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் முன்னாள் உயர்ஸ்தானிகர்களான நவநீதம்பிள்ளை, செயிட் அல் ஹூசைன் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடனான அவரது சந்திப்புக்கள் மிக முக்கியமானவை. தமிழ் மக்களின் தலைமகனாக சம்பந்தன் உள்நாட்டு, வெளிநாட்டு ரீதியாக ஆளுமைமிக்கவராக மிளிர்ந்தார், செயற்பட்டார். அந்த உயரத்தை அவர் அடைவதற்கு கடந்துவந்த பாதை மிகவும் நெடியது, கரடுமுரடானது. ஆம், 1933ஆம் ஆண்டு பெப்ரவரி 5ஆம் திகதி திருகோணமலையில் இராஜவரோதயம் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்த சம்பந்தன் யாழ்ப்பாணம் சம்பத்தரிசியார் கல்லூரி, மொறட்டுவை புனித செபஸ்தியான் கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்றார். பின்னர் இலங்கை சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்று சட்டத்தரணியானதோடு லீலாதேவியை திருமணம் முடித்தார். அவரின் இல்லற வாழ்வின் பலனாக சஞ்சீவன், செந்தூரன், கிரிசாந்தினி ஆகிய மூன்று பிள்ளைகள் உள்ளனர். சட்டத்தரணியாக மிளிர்ந்த சம்பந்தன் இளவயதிலேயே தமிழினத்தின் விடுதலைக்கான செயற்பாடுகளில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ள ஆரம்பித்தார். சட்டரீதியான போராட்டங்களிலும், ஜனநாயக ரீதியான போராட்டங்களிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். இதன்பலனாக 1956ஆம் ஆண்டு இலங்கைத் தமிழரசுக்கட்சியில் சம்பந்தன் இணைந்துகொண்டார். எனினும் தேர்தல் அரசியலில் பங்கேற்குமாறு 1963இல் தமிழினத்தின் தந்தை எஸ்.ஜே.வி.செல்வநாயகம் கேட்டுக்கொண்டார். எனினும் அதனை சம்பந்தன் உடனடியாக ஏற்றுக்கொண்டிருக்கவில்லை. எனினும் இலங்கைத் தமிழரசுக்கட்சி, அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆகிய மூன்று தரப்பினரும் இணைந்து 1972இல் ஸ்தாபித்த தமிழர் விடுதலைக் கூட்டணியின் சார்பில் 1977இல் தேர்தல் அரசியலுக்குள் சம்பந்தன் பிரவேசித்தார். அதன்விளைவாக, 1977இல் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் திருகோணமலை மாவட்டத்திலிருந்து வெற்றி பெற்று முதன்முதலாக பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டார். அக்காலத்தில் இருந்த தமிழினத் தளபதி அமிர்தலிங்கம், சிவசிதம்பரம் போன்றவர்களுடன் கூட்டிணைந்து தாக்கம் செலுத்தும் அரசியல் செயற்பாடுகளில் பங்கேற்றார். 1977 முதல் 1983 வரை பாராளுமன்ற உறுப்பினராக இருந்த சம்பந்தன், 1989, 1994, 2000 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தல்களில் வெற்றி பெற்றிருக்கவில்லை. பின்னர் 2001ஆம் ஆண்டில் தமிழர் விடுதலைக்கூட்டணி, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, ரெலோ ஆகிய கட்சிகள் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப் பு என்ற புதிய கூட்டணியை தமிழீழ விடுதலைப்புலிகள் ஸ்தாபித்தனர். இக்கூட்டணிக்கு சம்பந்தன் தலைமைப் பொறுப்பை ஏற்றார். அக்கட்சி தேர்தல் சட்டத்தில் அங்கீகரிக்கப்படாதபடியால் கூட்டமைப்பு தமிழர் விடுதலைக் கூட்டணியின் பெயரில் 2001ஆம் ஆண்டுத் தேர்தலில் போட்டியிட்டது. சம்பந்தன் திருகோணமலைத் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதன் காரணமாக 18 ஆண்டுகளின் பின்னர் சம்பந்தன் பாராளுமன்றத்திற்கு மீண்டும் தெரிவு செய்யப்பட்டார. எனினும் 2004ஆம் ஆண்டு தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் பெயருடன் போட்டியிடுவதற்கு ஆனந்தசங்கரி அனுமதிக்கவில்லை. இதனால் சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் சின்னத்தில் போட்டியிட்டனர். சம்பந்தன் தமிழர் விடுதலைக்கூட்டணியின் செயலாளராக, துணைத்தலைவராக, பொருளாளராகவும் பதவி வகித்ததோடு தமிழரசுக் கட்சியின் தலைவராகவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவராகவும் செயற்பட்டுள்ளார். பின்னர் அவர் 2004, 2010, 2015, 2020 எனத் தொடர்ச்சியாக பாராளுமன்றத்திற்கு திருகோணமலை தமிழ் மக்களின் ஆணையுடன் தெரிவு செய்யப்பட்டு வந்தார். 2015 செப்டெம்பர் 3ஆம் திகதி முதல் 2018 டிசம்பர் 18 வரை இவர் இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவராகப் பதவி வகித்தார். இந்தப் பதவி நிலையே சம்பந்தன் தனது அரசியல்வாழ்வில் வகித்த அதியுச்சமான பதவிநிலை என்பது குறிப்பிடத்தக்கதாக இருப்பதோடு, தற்போதும் தமிழ் மக்களின் பெருந்தலைவர் என்ற உயரிய அந்தஸ்து சம்பந்தனுக்கே உரியதாகிறது. தனது வாழ்நாள் முழுவதையும் தமிழ் அரசியலுக்காகவும், இன விடுதலைக்காகவும் அர்ப்பணித்த தலைவராக இருக்கும் சம்பந்தனின் இழப்பு விமர்சனங்களுக்கு அப்பால் தமிழ்த் தேசிய அரசியலுக்கும், தமிழினத்துக்கும் நிரப்ப முடியாத பெருவெற்றிடம் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. https://www.virakesari.lk/article/187499
-
திருமணத்தை விடுங்கள் ........ அன்றாடக் கடமைகள் செய்வதற்கு கூட அவதிப்படப் போகிறாரே......! 😁
-
-
Our picks
-
வேதத்தில் சாதி இருக்கிறதா?
narathar posted a topic in மெய்யெனப் படுவது,
இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.
ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.-
-
- 1 reply
Picked By
மோகன், -
-
மனவலி யாத்திரை.....!
shanthy posted a topic in கதை கதையாம்,
மனவலி யாத்திரை.....!
(19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)
அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.-
- 1 reply
Picked By
மோகன், -
-
பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை
mooki posted a topic in சமூகச் சாளரம்,
பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்
Friday, 16 February 2007
காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.-
- 20 replies
Picked By
மோகன், -
-
ஒரு சித்தர் பாடல்
பண்டிதர் posted a topic in மெய்யெனப் படுவது,
எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)
நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?
பொருள்:
சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.-
- 7 replies
Picked By
மோகன், -
-
கடவுள் இருக்கிறாரா.............?
வானவில் posted a topic in மெய்யெனப் படுவது,
களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்-
- 46 replies
Picked By
மோகன், -
-
Recommended Posts