Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Editorial   / 2025 டிசெம்பர் 15 , பி.ப. 06:00 - 0     - 32

messenger sharing button

facebook sharing button

linkedin sharing button

email sharing button

கனகராசா சரவணன் காலை உணவாக புட்டு  தயாரித்து தருமாறு கோரிய கணவனை கத்தியால் கழுத்தை வெட்டியும் கோடாரியால் மண்டையை பிளந்து கொலை செய்துவிட்டு பொலிஸ் நிலையத்தில் கத்தியுடன் சென்று  சரணடைந்த  மனைவி கைது செய்துள்ள சம்பவம் மட்டக்களப்பு வாகனேரியில் திங்கட்கிழமை (15) இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

வாகனேரி விஷ்ணு கோவில் வீதியைச் சோந்த 46 வயதுடைய விவசாயியான 4 பிள்ளைகளின் தந்தையான வைரமுத்து நவராசா என்பவரே இவ்வாறு உயிரிழந்தார்.

இது பற்றி தெரியவருவதாவது குறித்த சம்பவத்தில் உயிரிழந்தவர் வழமைபோல வேளாண்மை காவலுக்காக ஞாயிற்றுக்கிழமை (14)இரவு வீட்டை விட்டு வெளியேறி வயலுக்கு திங்கட்கிழமை (15) காலையில் வீடு திரும்பியுள்ளார். இந்த நிலையில் மனைவியிடம் காலை உணவாக புட்டு தயாரித்து தருமாறு கோரியுள்ளார் இதனை தொடர்ந்து கணவன் மனைவிக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் அது சண்டையாக மாறிவிட்டது. இந்நிலையில் பகல் 11.30 மணி அளவில் கத்தியால் கணவரின் கழுத்தில் தாக்கியதுடன் கோடாரியால் மண்டையை பிளந்துள்ளார். இதையடுத்து அவர் சம்பவ இடத்தில் உயிரிழந்தார் இதையடுத்து தாக்குதலை மேற்கொண்ட பெண் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் கத்தியுடன் சென்று சரணடைந்து தான் கணவனை வெட்டிக் கொலை செய்துள்ளதாக குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில் அவரை கைது செய்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து சம்பவ இடத்தில்  தடயவியல் பிரிவு பொலிஸார் வரவழைக்கப்பட்டு சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்க நீதிமன்ற அனுமதி பெறும் நடவடிக்கை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்தனர் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Tamilmirror Online || புட்டு கேட்ட கணவனை போட்டு தள்ளிய மனைவி கத்தியுடன் சரண்

இன்றிலிருந்து நிழலி புட்டு சாப்பிடுவதையே அறவோடு கைவிடுகின்றான்.

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, நிழலி said:

இன்றிலிருந்து நிழலி புட்டு சாப்பிடுவதையே அறவோடு கைவிடுகின்றான்.

நல்ல விசயம்! நீரிழிவு வருவதைத் தள்ளிப் போடலாம் அல்லது முற்றாகத் தவிர்க்கலாம்!

4 minutes ago, Justin said:

நல்ல விசயம்! நீரிழிவு வருவதைத் தள்ளிப் போடலாம் அல்லது முற்றாகத் தவிர்க்கலாம்!

அவித்த மாவை மறுபடி அவிப்பதால் சூழலுக்கும் உகந்ததல்ல.

புட்டினால் உலகிற்கே கேடு 😁

23 minutes ago, Justin said:

நல்ல விசயம்! நீரிழிவு வருவதைத் தள்ளிப் போடலாம் அல்லது முற்றாகத் தவிர்க்கலாம்!

புட்டைக் கைவிடுவதும் உடலின் ஒரு பாகத்தை இழப்பதும் சமம் எனக்கு. 365 நாளும் புட்டு சாப்பிட ஆசைப்படும் ஜென்மம் நான்.

15 minutes ago, இணையவன் said:

அவித்த மாவை மறுபடி அவிப்பதால் சூழலுக்கும் உகந்ததல்ல.

எல்லாம் சிவபெருமானால் வந்தது. அந்தாள் புட்டுக்கு மண் சுமந்ததால் வந்த வினை இது

18 minutes ago, இணையவன் said:

புட்டினால் உலகிற்கே கேடு 😁

ஐரோப்பியர்களும் புட்டினும் (புட்டும்) ஒன்றுதான்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.