Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இடைவெளி..........................

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இடைவெளி..........................

நன்றாகத்தான் போய்க்கொண்டிருக்குது வாழ்க்கை. 25 வயதில் திருமணம். 2 வருடங்கள் சந்தோசமான திருமணவாழ்க்கை. அதைத்தொடர்ந்து 2 பிள்ளைகள் ஒருவருட இடைவெளியில். பின்னர் 4 வருடத்தால் இன்னொரு ஆண் பிள்ளை. இப்படியே நன்றாகத்தான் போகுது வாழ்க்கை. மூத்த பெண் பிள்ளை கேட்டாள் அவர்கள் இருவரும் ஆண் பிள்ளைகள் சேர்ந்து விளையாடுகிறார்கள் நான் தனியே ஒன்றும் செய்ய முடியவில்லை. எனக்கு துணையாக ஒரு தங்கச்சி வேண்டும். ஒருவாறு பெத்தாச்சு. அதுவும் பெண்ணாக. சரி பிரச்சினை முடிந்தது.

அந்த பிள்ளைக்கு 3 வருடமாகும் வரை நிம்மதியாக இருந்தது. அதன் பின் தான் சிக்கல் வரத்தொடங்கியது. தங்கச்சி தங்கச்சி என தோழிலும் மார்பிலும் போட்டு தாலாட்டியவர்களுக்கு கேள்வி கேட்பது பிடிக்காமல் போனது. நுள்ளியும் கிள்ளியும் அதை ஒரு பொம்மைபோல் விளையாடியவர்களுக்கு அது வளர்ந்து கிள்ளியது எரிச்சலைத்தந்தது.

மெல்ல மெல்ல பிள்ளை வளர வளர ..........

படிக்கும் கதைப்புத்தகத்திலிருந்து........

பார்க்கும் சினிமா..........

பாவிக்கும் இணையங்கள்.........

விரும்பும் நட்சத்திரங்கள்

பேசும் விடயங்கள்.......

பாவிக்கும் பொருட்கள்....... வரை இடைவெளி வளரத்தொடங்கியது.

அந்த குஞ்சுவின் ஆசைகள் ஒரு அளவுக்குள் நிற்க மறுத்தன. ஆயிரம் கேள்விகள் மனதில். பதில் சொல்ல ஆளில்லை. சொன்னாலும் அவர்களது போக்கில், அவர்களது வயதுக்கு ஏற்றாற்போல், அவர்களது படிப்புக்கு ஏற்றாப்போல்,,,,,, பதில்கள். கேட்கவும் முடியவில்லை. கேட்காமல் இருக்கவும்முடியவில்லை. பரிதாபநிலையைப்பெற்றோர் புரிந்து கொண்டனர். மூத்தவர்களுக்கு கட்டளைகள் பறந்தன. இருந்தாலும் பெரிதாக மாற்றமில்லை. தங்கைமேல் மிகவும் பாசமாக இருந்தும் கூட இந்த இடைவைளியைக்குறைக்கமுடியவில்லை. அவர்களுக்கும் நேரமில்லை. அவர்களைப்பொறுத்தவரை மிகச்சிறிய கேள்விகள் மிகச்சிறிய ஆசைகள்...........?????? அத்துடன் அவர்களது உலகம் வேறு. ஒருபக்கம் முகநூல் மறுபக்கம் பாடப்புத்தகம் இதற்கிடையில் கைத்தொலைபேசி நண்பர்கள்..............??? இதற்குள் இவளது இடையூறு.

இடைவெளி குறைய வழியில்லை.

இறுதியாக பெற்றோர் சொன்னது. இந்த இடைவைளியை நாம் விட்டிருக்கக்கூடாது

யாவும் கற்பனை அல்ல

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

இடைவெளி .............சுருக்கமான, உணர்ந்த உண்மையை பகிரும் கதை . பாராட்டுக்கள்.

சிரிக்க மட்டும் இது .............மகளின் கலியாணம் முடிந்த பின் தந்தை சொன்னது ..அந்த நேரம் இன்னோமொரு பெண்

குழந்தையை,பெற்று இருக்கலாம் என்று ( மகள் இல்லாத வெறுமை)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இடைவெளி .............சுருக்கமான, உணர்ந்த உண்மையை பகிரும் கதை . பாராட்டுக்கள்.

நன்றி ரீச்சர்

கனகாலமாக நெஞ்சுக்குள் இருந்த ஒரு விடயம்

பதிந்துள்ளேன். பார்க்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு அவர்களே,

புலம்பெயர் சூழலில் பலரது நிலை இதுதான். அதனை அப்படியே கதைவடிவில் படைத்துள்ளீர்கள். பாராட்டுகள்.

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

கதையின்படி பார்த்தால் இது முழுக்க பெற்றோரின் தவறே. முதலில் ஒரு ஆண் வேண்டும், பின் பெண் வேண்டும்..பின்னர் அவர்களுக்கு ஒவ்வொருவருக்கும் இணை வேண்டும். ம்..இது தேவையா..? விரலுக்கேற்ற வீக்கம் வேண்டாமா?

ஏம்பா ரெண்டு குருமான்களை கரை சேர்க்கவே இப்பொழுது தாவு தீர்ந்துவிடுகிறது. அவர்கள் கேட்கும் பொருட்கள், அவர்களின் பிற்காலத்திற்கான கல்வி, நவீன வசதிகளின் எதிர்பார்ப்பு..ம்..இதில் நான்கு செல்வங்களா?

தாங்காதுடா சாமி! :lol:

ஆணொன்று..பெண்ணொன்று..அதுவே என்றென்றும் தோழமைக்கு நன்று!

Edited by ராஜவன்னியன்

  • கருத்துக்கள உறவுகள்

கதையின்படி பார்த்தால் இது முழுக்க பெற்றோரின் தவறே. முதலில் ஒரு ஆண் வேண்டும், பின் பெண் வேண்டும்..பின்னர் அவர்களுக்கு ஒவ்வொருவருக்கும் இணை வேண்டும். ம்..இது தேவையா..? விரலுக்கேற்ற வீக்கம் வேண்டாமா?

ஏம்பா ரெண்டு குருமான்களை கரை சேர்க்கவே இப்பொழுது தாவு தீர்ந்துவிடுகிறது. அவர்கள் கேட்கும் பொருட்கள், அவர்களின் பிற்காலத்திற்கான கல்வி, நவீன வசதிகளின் எதிர்பார்ப்பு..ம்..இதில் நான்கு செல்வங்களா?

தாங்காதுடா சாமி! :lol:

ஆணொன்று..பெண்ணொன்று..அதுவே என்றென்றும் தோழமைக்கு நன்று!

எனது கருத்தும் இதுவே :wub:

  • கருத்துக்கள உறவுகள்

சகோதரர்களுக்குள் ஏற்பட்ட இடைவெளி தற்காலிக இடைவெளியே....

மூத்த சகோதரர்களுக்கு தற்போது 18- 24 வயதுக்குள் இருந்தால்.... அவர்கள் தங்கள் வாழ்க்கையில் (படிப்பு,வேலை) நல்ல இடத்தை பிடிப்பதற்கு அவர்களின் மனம் போராடிக் கொண்டிருக்கும், இந்த நிலையில் அவர்களுக்கு இளைய சகோதரியில் பாசம் இருந்தாலும் அதனை வெளிக்காட்ட சந்தர்ப்பம் இல்லை. அவர்கள் தங்கள் குறிக்கோளை அடைந்து, திடமாக காலூன்றிய பின் முன்பிருந்த பாசம் மீண்டும் சகோதரி மேல் திரும்பும்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் சிறி சொன்னது போல அது ஒரு தற்காலிய இடை வெளிதான்....

நீண்ட இடைவெளி விட்டு பிழை பெறுவதால் சாதகமும் உண்டு. பாதகமும் உண்டு. எனக்கும் சகோதரர்களுக்கும் இடையில் நீண்ட இடைவெளி. சிறிய வயதிலேயே மூத்த சகோதரர்களைப் பார்த்து பல நல்ல விடயங்களை கற்றுக்கொண்டேன். அதே போல பிஞ்சிலே பழுப்பதற்கும் காரணமாக இருந்தது.

அதே போல எனது பிள்ளைகளுக்கும் எனது சகோதரங்களின் பிள்ளைகளுக்கும் நீண்ட இடைவெளி உள்ளதால் அவர்கள் நண்பர்களாக பழகும் வாய்ப்பு இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

ஐயோ ஐயோ.. இதை எங்க சொல்லி அழுகிறது.

விளையாட ஒரு தங்கச்சி பாப்பா கேக்க.. அப்பாவும் அம்மாவும் ஆக்கிக் கொடுத்திச்சினமாம். இப்ப அந்த தங்கச்சி பாப்பு வளர்ந்து அதற்கு ஒரு தம்பி பாப்பா கேட்க.. அப்பாவும் அம்மாவும் ஆக்கப் போகினமாம். பிறகு அந்த தப்பி பாப்பா ஒரு தங்கச்சி.. பாப்பா.. கேக்க... கடவுளே.. வளர்ந்ததுகள் செய்யுற திருக்கூத்துகளுக்கு குழந்தைகள் ஒரு சாட்டு. எல்லாம் கொண்டோம் பாவிக்காததன் விளைவு. தரமான கொண்டோம் பாவித்தால் ஒரு பிரச்சனையும் வராது. சும்மா பிள்ளைகளை சாட்டி குழந்தைகளை பெத்துப் போடுறது கூட ஒரு வகை மூடத்தனம். ஆனால் புலம்பெயர் தேசங்களில் அது வருமானம்.குடும்ப அறிவற்று தமிழர்கள் மற்றும் முஸ்லீம்கள் பலர் வருமானத்துக்காக தங்களின் சுய பாலியல் தேவைகளால் குழந்தைகளை பெற்றுக் கொண்டு மற்றக் குழந்தைகள் மீது பழியையும் சுமத்தி விடுகிறார்கள். இது மன்னிக்க முடியாத இடைவெளி. பெற்றோரா திருந்தினால் அன்றி இதை தடுத்து நிறுத்த கொண்டோம் பாவனையை கட்டாயமாக்குவதே சிறந்தது. :D:)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐயோ ஐயோ.. இதை எங்க சொல்லி அழுகிறது.

விளையாட ஒரு தங்கச்சி பாப்பா கேக்க.. அப்பாவும் அம்மாவும் ஆக்கிக் கொடுத்திச்சினமாம். இப்ப அந்த தங்கச்சி பாப்பு வளர்ந்து அதற்கு ஒரு தம்பி பாப்பா கேட்க.. அப்பாவும் அம்மாவும் ஆக்கப் போகினமாம். பிறகு அந்த தப்பி பாப்பா ஒரு தங்கச்சி.. பாப்பா.. கேக்க... கடவுளே.. வளர்ந்ததுகள் செய்யுற திருக்கூத்துகளுக்கு குழந்தைகள் ஒரு சாட்டு. எல்லாம் கொண்டோம் பாவிக்காததன் விளைவு. தரமான கொண்டோம் பாவித்தால் ஒரு பிரச்சனையும் வராது. சும்மா பிள்ளைகளை சாட்டி குழந்தைகளை பெத்துப் போடுறது கூட ஒரு வகை மூடத்தனம். ஆனால் புலம்பெயர் தேசங்களில் அது வருமானம்.குடும்ப அறிவற்று தமிழர்கள் மற்றும் முஸ்லீம்கள் பலர் வருமானத்துக்காக தங்களின் சுய பாலியல் தேவைகளால் குழந்தைகளை பெற்றுக் கொண்டு மற்றக் குழந்தைகள் மீது பழியையும் சுமத்தி விடுகிறார்கள். இது மன்னிக்க முடியாத இடைவெளி. பெற்றோரா திருந்தினால் அன்றி இதை தடுத்து நிறுத்த கொண்டோம் பாவனையை கட்டாயமாக்குவதே சிறந்தது. :D:)

எனது கருத்தும் இதுவே :rolleyes:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தக்கதையின் நோக்கம் இதே தப்பை மற்றவர்களும் விடக்கூடாது என்பதுதான்.

அதேநேரம் தமிழன் அதிக பிள்ளைகளைப்பெறணும். அழிவை ஈடு செய்யணும். இது என் கருத்து.

  • கருத்துக்கள உறவுகள்

இன்றைய சூழலில் தமிழர் நிறைய பிள்ளைகள் பெற வேண்டும். பிள்ளைகளின் இடைவெளிகள் சிறி கூறியது போல் அவர்கள் வளர சரியாகி விடும்.சிறுவயதில் சண்டை போடத்தான் சகோதரங்கள் தேவை. பிள்ளைகள் சண்டை போடாவிட்டால் பெற்றோர்களுக்கு போர் அடித்து விடும். :D

எல்லாம் கொண்டோம் பாவிக்காததன் விளைவு. தரமான கொண்டோம் பாவித்தால் ஒரு பிரச்சனையும் வராது.

எனது இரண்டாவது நான் தரமான 'கொண்டோம்' பாவித்தும் வந்தவர்தான்.

இப்படி தடைகளை உடைத்தெறிந்து வந்தவர்கள் பலர். :wub:

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எனது மகன் ஒருவனும் லூப்பைத்தாண்டித்தான் உருவானான். :wub:

நெடுக்ஸ் புத்தகத்தில் இருந்து சொல்லுது. நாம் களத்திருந்து சொல்கின்றோம். :lol::D:D

மூன்று ஆண் பிள்ளைகள் பெற்றவர்கள் தமக்கு ஒரு பெண் குழந்தை இல்லையே என்று வருத்தப்பட்டு, ஒரு வருடத்திற்குள் நாலாவதும் ஆண் குழந்தை பிறந்தது. அந்த நேரம் மூத்த மகனின் வயது 21 மூத்தவன் மேல்படிப்பிற்கு வீட்டை விட்டு வெளியே தங்கி இருந்து படித்தான். பெற்றோருக்கு அறிவு வேண்டாம்... நாதாரிப் பயல்கள் இரண்டுமா சேர்ந்து ஐந்தாவது (பெண்குழந்தை) பெற்று இருக்கிறார்கள். மூத்த பிள்ளைகளில் பெற்றோருக்கு அக்கறை குறைந்தது போகவே ஒருவன் ஒரு வருடத்திற்கு மேல் அவன் வீட்டிற்கே வரவில்லை. அவனே தனக்கு வேற்று இனத்தில் ஒரு girl friend தேடி அந்தக் குடும்பத்துடனே இருக்கிறான். 'கடைசி பொம்பிளைப் பிள்ளை பிறந்து தான் குடும்பம் பிரிஞ்சது' என்று கமெண்ட்ஸ் வேற... :rolleyes:

சில சனம் விவஸ்தை இல்லாமல் ஆசைப் படுங்கள், அதன் பின்விளைவுகளை அறியவேண்டும் என்று யோசிப்பதே இல்லை. <_<

  • கருத்துக்கள உறவுகள்

ஐயோ ஐயோ.. இதை எங்க சொல்லி அழுகிறது.

விளையாட ஒரு தங்கச்சி பாப்பா கேக்க.. அப்பாவும் அம்மாவும் ஆக்கிக் கொடுத்திச்சினமாம். இப்ப அந்த தங்கச்சி பாப்பு வளர்ந்து அதற்கு ஒரு தம்பி பாப்பா கேட்க.. அப்பாவும் அம்மாவும் ஆக்கப் போகினமாம். பிறகு அந்த தப்பி பாப்பா ஒரு தங்கச்சி.. பாப்பா.. கேக்க... கடவுளே.. வளர்ந்ததுகள் செய்யுற திருக்கூத்துகளுக்கு குழந்தைகள் ஒரு சாட்டு. எல்லாம் கொண்டோம் பாவிக்காததன் விளைவு. தரமான கொண்டோம் பாவித்தால் ஒரு பிரச்சனையும் வராது. சும்மா பிள்ளைகளை சாட்டி குழந்தைகளை பெத்துப் போடுறது கூட ஒரு வகை மூடத்தனம். ஆனால் புலம்பெயர் தேசங்களில் அது வருமானம்.குடும்ப அறிவற்று தமிழர்கள் மற்றும் முஸ்லீம்கள் பலர் வருமானத்துக்காக தங்களின் சுய பாலியல் தேவைகளால் குழந்தைகளை பெற்றுக் கொண்டு மற்றக் குழந்தைகள் மீது பழியையும் சுமத்தி விடுகிறார்கள். இது மன்னிக்க முடியாத இடைவெளி. பெற்றோரா திருந்தினால் அன்றி இதை தடுத்து நிறுத்த கொண்டோம் பாவனையை கட்டாயமாக்குவதே சிறந்தது. :D:)

ஓய்.... நெடுக்ஸ், கலியாணம் கட்டிப் போட்டு..... கொண்டோம் பாவிக்கச் சொல்ல கூச்சமாய் இல்லையா?

பிறகு, என்ன இழவுக்கு கலியாணம் கட்டுவான். கொண்டோம் பாவித்து உடலுறவில் ஈடுபட்டால் 100% திருப்தி கிடைக்காது என்பது அனுபவசாலிகளின் முடிவு.

நீங்கள் சாதாரணமாக குளிப்பதற்கும், உடம்பு முழுக்க பொலித்தீன் துணியாலை மூடிக்கொண்டு குளிப்பதற்கும் உள்ள வித்தியாசமே.... கொண்டோம் போட்டு உடலுறவில் ஈடுபடுவது ஆகும். தேவையான பிள்ளைகளை ஆசைக்கு ஒன்று, ஆஸ்திக்கு ஒன்று, நாட்டுக்கு ஒன்று என்று பெற்ற பின் ஆணோ... பெண்ணோ...

வைத்தியரிடம் சென்று கருத்தடை செய்து கொண்டால்.... கட்டையிலை போகும் மட்டும், சந்தோசமாக இல்வாழ்வில் ஈடுபடலாம்.

அத்துடன் கொண்டோம், கருத்தடை மாத்திரைகள் வீட்டில் இருக்குதா... இல்லையா... என்ற பயமும் இல்லை.

கொண்டோம், கருத்தடை மாத்திரைகளின் விலையும் கையை கடிக்கும் விலைகளிலேயே உள்ளது.

ஒரு முறை ஒப்பரேசன், வாழ்நாள் முழுக்க இன்பம் என்னும் கொள்கையை கடைப் பிடிங்கப்பா..... :)

Edited by தமிழ் சிறி

ஒரு முறை ஒப்பரேசன், வாழ்நாள் முழுக்க இன்பம் என்னும் கொள்கையை கடைப் பிடிங்கப்பா..... :)

யாருக்கு அறுவைச்சிகிச்சை செய்வது நல்லது. ஆணுக்கா? பெண்ணுக்கா? :blink:

  • கருத்துக்கள உறவுகள்

யாருக்கு அறுவைச்சிகிச்சை செய்வது நல்லது. ஆணுக்கா? பெண்ணுக்கா? :blink:

ஆணுக்கு அறுவைச் சிகிச்சை செய்வது இலகுவானது. அந்த இடத்தில கட்டெறும்பு கடிச்ச மாதிரி..... கொஞ்ச நேரம் இருக்கும்.

அடுத்த நாள் நெஞ்சை நிமித்திக் கொண்டு வேலைக்குப் போகலாம் தப்பிலி.

எல்லா இயக்கமும் முன்பிருந்தது போலவே இருக்கும். :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

print0006.th.jpg

http://img5.imageshack.us/f/print0006.jpg/

இது சம்பந்தமாக நேற்று பிரான்ஸ் பத்திரிகையில் வந்த செய்தி

இணையவன் நிற்கின்றார் மொழி பெயர்ப்புக்கு.

நன்றி

Edited by விசுகு

http://img5.imageshack.us/f/print0006.jpg/

இது சம்பந்தமாக நேற்று பிரான்ஸ் பத்திரிகையில் வந்த செய்தி

இணையவன் நிற்கின்றார் மொழி பெயர்ப்புக்கு.

நன்றி

இக் கட்டுரை தற்கொலை செய்துகொள்ளும் கியூபெக் (கனடா) சிறார்களைப் பற்றியது. இறப்பது என்பது என்னவெண்ரு தெரியாது சிறுவர்கள் தற்கொலை முயற்சியில் ஈடுபடுகின்றனர்.

வீடியோ விளையாட்டுகளில் வருவது போன்று இறந்தால் மீண்டும் உயிருடன் தோன்றுவது போன்ற கற்பனையுடனும் தற்கொலைக்கு முயற்சி செய்கின்றனர். இறந்துபோன அன்பான உறவினரிடம் போய்ச் சேர முயற்சித்தல், வீட்டிலுள்ள பிரச்சனைகளினால் ஏற்படும் வெறுப்பு என்று பல காரணங்களும் உண்டு.

இது தொடர்பான விரிவான விளக்கம் தலைப்பைத் திசைதிருப்பலாம் என்பதால் சுருக்கமாக எழுதியுள்ளேன்.

  • கருத்துக்கள உறவுகள்

என்னைப் பொறுத்த வரை அதிக குழந்தைகள் பெறக் கூடாது...பெத்தால் ஒழுங்காக வளர்க்க வேண்டும்...இரண்டு குழந்தைகள் போதும் ஆனால் இரு குழந்தைகளுக்குமிடையில் அதிக இடைவெளி கூடாது அதிக பட்சம் இரு குழந்தைகளுக்கும் இடையில் இரண்டு வருட இடைவெளி போதும்.

  • கருத்துக்கள உறவுகள்

இடைவெளி அழகான தலைப்பை தொட்டுச் சென்று இருக்கிறிர்கள்.

இடைவெளி பற்றி நிறையவே பேசலாம்.

நிறைய எதிர்பார்த்தேன்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மூன்று ஆண் பிள்ளைகள் பெற்றவர்கள் தமக்கு ஒரு பெண் குழந்தை இல்லையே என்று வருத்தப்பட்டு, ஒரு வருடத்திற்குள் நாலாவதும் ஆண் குழந்தை பிறந்தது. அந்த நேரம் மூத்த மகனின் வயது 21 மூத்தவன் மேல்படிப்பிற்கு வீட்டை விட்டு வெளியே தங்கி இருந்து படித்தான். பெற்றோருக்கு அறிவு வேண்டாம்... நாதாரிப் பயல்கள் இரண்டுமா சேர்ந்து ஐந்தாவது (பெண்குழந்தை) பெற்று இருக்கிறார்கள். மூத்த பிள்ளைகளில் பெற்றோருக்கு அக்கறை குறைந்தது போகவே ஒருவன் ஒரு வருடத்திற்கு மேல் அவன் வீட்டிற்கே வரவில்லை. அவனே தனக்கு வேற்று இனத்தில் ஒரு girl friend தேடி அந்தக் குடும்பத்துடனே இருக்கிறான். 'கடைசி பொம்பிளைப் பிள்ளை பிறந்து தான் குடும்பம் பிரிஞ்சது' என்று கமெண்ட்ஸ் வேற... :rolleyes:

சில சனம் விவஸ்தை இல்லாமல் ஆசைப் படுங்கள், அதன் பின்விளைவுகளை அறியவேண்டும் என்று யோசிப்பதே இல்லை. <_<

எனக்கு தெரிந்து முள்ளிவாய்க்காலுக்கு பின்..........

பிள்ளை வேண்டாம் என்று நிறுத்தியிருந்த பலர் பிள்ளை பெற்றுக்கொண்டுள்ளனர்.

அதை நானே பல இடங்களில் ஊக்கப்படுத்தியுள்ளேன்.

எனக்கு எப்பவும் குறி கொக்கின் தலை மீதுதான் குட்டி. என்ன செய்ய......?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.