Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எந்த தமிழீழ அமைப்பிற்கு நீங்கள் ஆதரவு? - பல தெரிவுகள் செய்யலாம்.

எந்த தமிழீழ அமைப்பிற்கு நீங்கள் ஆதரவு? - பல தெரிவுகள் செய்யலாம். 69 members have voted

  1. 1. எந்த தமிழீழ அமைப்பிற்கு நீங்கள் ஆதரவு?

    • நாடு கடந்த தமிழீழ அரசின் ஜனநாயக அணி (TGTE Democrat)
    • உலகத்தமிழர் பேரவை (GTF)
    • நாடு கடந்த தமிழீழ அரசு (TGTE )
    • மக்களவை
    • கே பி யின் அமைப்பு
    • தமிழர் கூட்டமைப்பு (TNA)
    • EPDP
    • கருணாவின் மக்கள் விடுதலை புலிகள்
    • பிள்ளையானின் மக்கள் விடுதலை புலிகள்
    • பரந்தன் ராஜனின் ENDLF
    • PLOTE
    • நெடியவன் சேரமானின் அமைப்பு
    • இவை எதற்கும் நான் ஆதரவில்லை
    • நான் ஆதரிக்கும் அமைப்பு இங்கே இல்லை
    • தமிழீழ விடுதலைப்புலிகள்

Please sign in or register to vote in this poll.

Featured Replies

அதுக்குள்ள மறந்துபோட்டீர்களோ? தமிழீழ விடுதலை புலிகளின் பெயரை காணவில்லை.அப்ப இனி தலைவர் வரமாட்டாரா?

  • Replies 54
  • Views 4.4k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அதுக்குள்ள மறந்துபோட்டீர்களோ? தமிழீழ விடுதலை புலிகளின் பெயரை காணவில்லை.அப்ப இனி தலைவர் வரமாட்டாரா?

பச்சை வாங்கும் கேள்விக்கு பதிலாக தமிழீழ விடுதலை புலிகளின் பெயரும் கருத்துக்கணிப்பில் இணைக்கப்பட்டுள்ளது.

  • கருத்துக்கள உறவுகள்

மக்களே தமிழீழ விடுதலைப்புலிகளால் தான் இத்தனை அமைப்புக்களும் உருவாகின. தலைவர் அதனை 1972 இல் உருவாக்கினார். அதன் பின்னர் தான் மற்றவை. ஏன் ஈபிடிபி போன்ற துரோகக் கும்பல்கள் 1990 இல் உருவானதையே பட்டியலில் முன்னிலையில் இட்டுள்ளனர். ஈபிடிபி தமிழீழத்திற்கான அமைப்பு அல்ல. அதன் பிரதான செயற்பாடு காட்டிக் கொடுத்தல்.. போராளிகளை அழித்தல்.. மக்களை கொல்லுதல்.. கப்பம் பெறுதல். கோசம்.. மத்தியில் கூட்டாட்சி.. வடக்குக் கிழக்கு இணைந்த மாநிலத்தில் சுயாட்சி. பிரபாகரன் ஒழிக்கப்பட்டால் நாங்கள் அரசியலில் இருந்து ஒதுங்குவோம். இப்படிப்பட்ட அமைப்புக்களை எல்லாம் வரிசைக்கிரமமாக பட்டியலில் இடம் பிடிக்க செய்த... யூட்.. விடுதலைப்புலிகளை மறந்து விட்டு.. இப்போ இறுதியில் இணைத்திருக்கிறார்.

இதில் இருந்து இவரின் நோக்கத்தை விளங்கிக் கொள்ள வேண்டும். தமிழீழக் கொள்கைக்கு உரமிட்ட.. தந்தை செல்வாவின் தமிழரசுக் கட்சி இணைக்கப்படவில்லை. தமிழீழக் கோரிக்கையை தேர்தல் களத்தில் முன் மொழிந்து அதற்கு வட்டுக்கோட்டை தீர்மானம் மூலம் மக்கள் அங்கீகாரம் அளிக்க செய்த முன்னாள் தமிழர் விடுதலைக் கூட்டணி இல்லை (இன்னாளில் அதன் கொள்ளை தமிழீழம் அல்ல). ஆனால் தமிழீழத்தோடு சம்பந்தப்படாத. ஈபிடிபி சோத்துப்பாசல் புளொட்டு.. யாரென்றே தெரியாத நெடியவன் அணி.. நாடு கடந்த தமிழீழ அரசு ஜனநாயக அணி எல்லாம் இருக்குது பட்டியலில்.

அந்த வகையில்.. மக்கள் ஏலவே ஒருமுறை வாக்களித்திருந்தால்.. உங்கள் வாக்கை delete my vote மூலம் அழித்துவிட்டு.. பின்னர்.. பின்னால் சேர்க்கப்படும் தமிழீழ எண்ணக் கருவை உருவாக்கி.. அதற்கு உயிர் கொடுத்து.. இறுதிவரை போராடிய அமைப்புக்களை.. போராடும் அமைப்புக்களை தேர்வு செய்து உதவுங்கள்.

இப்போ எல்லாம் ஜனநாயகம்.. தேர்தல் என்ற போர்வையில்.. யாழ் களத்தில் நடந்த தேர்தலில்.. எமக்கு அங்கீகாரத்தை மக்கள் அளித்துள்ளனர் என்று நாளை அதுவே சில அமைப்புகளுக்கு ஜனநாயகமாகவும் தெரியலாம். எனவே அவதானமாக வாக்களியுங்கள். தெரிவுகளை செய்யுங்கள். :D:)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

மக்களே தமிழீழ விடுதலைப்புலிகளால் தான் இத்தனை அமைப்புக்களும் உருவாகின. தலைவர் அதனை 1972 இல் உருவாக்கினார். அதன் பின்னர் தான் மற்றவை. ஏன் ஈபிடிபி போன்ற துரோகக் கும்பல்கள் 1990 இல் உருவானதையே பட்டியலில் முன்னிலையில் இட்டுள்ளனர். ஈபிடிபி தமிழீழத்திற்கான அமைப்பு அல்ல. அதன் பிரதான செயற்பாடு காட்டிக் கொடுத்தல்.. போராளிகளை அழித்தல்.. மக்களை கொல்லுதல்.. கப்பம் பெறுதல். கோசம்.. மத்தியில் கூட்டாட்சி.. வடக்குக் கிழக்கு இணைந்த மாநிலத்தில் சுயாட்சி. பிரபாகரன் ஒழிக்கப்பட்டால் நாங்கள் அரசியலில் இருந்து ஒதுங்குவோம். இப்படிப்பட்ட அமைப்புக்களை எல்லாம் வரிசைக்கிரமமாக பட்டியலில் இடம் பிடிக்க செய்த... யூட்.. விடுதலைப்புலிகளை மறந்து விட்டு.. இப்போ இறுதியில் இணைத்திருக்கிறார்.

இதில் இருந்து இவரின் நோக்கத்தை விளங்கிக் கொள்ள வேண்டும். தமிழீழக் கொள்கைக்கு உரமிட்ட.. தந்தை செல்வாவின் தமிழரசுக் கட்சி இணைக்கப்படவில்லை. தமிழீழக் கோரிக்கையை தேர்தல் களத்தில் முன் மொழிந்து அதற்கு வட்டுக்கோட்டை தீர்மானம் மூலம் மக்கள் அங்கீகாரம் அளிக்க செய்த முன்னாள் தமிழர் விடுதலைக் கூட்டணி இல்லை (இன்னாளில் அதன் கொள்ளை தமிழீழம் அல்ல). ஆனால் தமிழீழத்தோடு சம்பந்தப்படாத. ஈபிடிபி சோத்துப்பாசல் புளொட்டு.. யாரென்றே தெரியாத நெடியவன் அணி.. நாடு கடந்த தமிழீழ அரசு ஜனநாயக அணி எல்லாம் இருக்குது பட்டியலில்.

அந்த வகையில்.. மக்கள் ஏலவே ஒருமுறை வாக்களித்திருந்தால்.. உங்கள் வாக்கை delete my vote மூலம் அழித்துவிட்டு.. பின்னர்.. பின்னால் சேர்க்கப்படும் தமிழீழ எண்ணக் கருவை உருவாக்கி.. அதற்கு உயிர் கொடுத்து.. இறுதிவரை போராடிய அமைப்புக்களை.. போராடும் அமைப்புக்களை தேர்வு செய்து உதவுங்கள்.

இப்போ எல்லாம் ஜனநாயகம்.. தேர்தல் என்ற போர்வையில்.. யாழ் களத்தில் நடந்த தேர்தலில்.. எமக்கு அங்கீகாரத்தை மக்கள் அளித்துள்ளனர் என்று நாளை அதுவே சில அமைப்புகளுக்கு ஜனநாயகமாகவும் தெரியலாம். எனவே அவதானமாக வாக்களியுங்கள். தெரிவுகளை செய்யுங்கள். :D:)

இவரின் இந்த பம்மாத்து நோக்கத்தால் தான் நான் வாக்களிக்கவில்லை. நல்ல பழமொழி ஒன்று உள்ளது.வெட்டு விழும் என்பதால் எழுதவில்லை. :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இப்படிப்பட்ட அமைப்புக்களை எல்லாம் வரிசைக்கிரமமாக பட்டியலில் இடம் பிடிக்க செய்த... யூட்.. விடுதலைப்புலிகளை மறந்து விட்டு.. இப்போ இறுதியில் இணைத்திருக்கிறார்.

இதில் இருந்து இவரின் நோக்கத்தை விளங்கிக் கொள்ள வேண்டும்.

நெடுக்கு,

தமிழீழ விடுதலைப்புலிகள் தவிர்க்கப்பட்டதற்கு காரணம், இவ்வாறு தவிர்க்கப்பட்டதை யார் முன்வந்து சுட்டிக்காட்டுகிறார்கள் என்று பார்ப்பதற்கும் மற்றவர்களை அதை அறியச்செய்வதற்குமேயன்றி வேறு காரணத்துக்காகவல்ல.

யார் அதை சுட்டிக்காட்டியவர் என்று நீங்களும்தான் அறிந்து கொண்டீர்கள். இன்றைக்காவது அவருக்கு ஒரு பச்சை குத்திவிடுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

நான் ஒருதருக்கும் வாக்கு அளிக்கவில்லை ஆனால் தற்போது உள்ள சூழ்நிலையில் தாயகத்து நிலைமையை மட்டும் வைத்து வாக்களிப்பது என்டால் என்ட வோட்டு டக்லசுக்கு தான். பத்துப் பேருக்கு கெடுதல் செய்தாலும் ஏதோ 3 பேருக்காவது நன்மை செய்கிறார்

  • கருத்துக்கள உறவுகள்

... யூட்.. விடுதலைப்புலிகளை மறந்து விட்டு.. இப்போ இறுதியில் இணைத்திருக்கிறார்.

இதில் இருந்து இவரின் நோக்கத்தை விளங்கிக் கொள்ள வேண்டும்.

அந்த வகையில்.. மக்கள் ஏலவே ஒருமுறை வாக்களித்திருந்தால்.. உங்கள் வாக்கை delete my vote மூலம் அழித்துவிட்டு.. பின்னர்.. பின்னால் சேர்க்கப்படும் தமிழீழ எண்ணக் கருவை உருவாக்கி.. அதற்கு உயிர் கொடுத்து.. இறுதிவரை போராடிய அமைப்புக்களை.. போராடும் அமைப்புக்களை தேர்வு செய்து உதவுங்கள்.

இப்போ எல்லாம் ஜனநாயகம்.. தேர்தல் என்ற போர்வையில்.. யாழ் களத்தில் நடந்த தேர்தலில்.. எமக்கு அங்கீகாரத்தை மக்கள் அளித்துள்ளனர் என்று நாளை அதுவே சில அமைப்புகளுக்கு ஜனநாயகமாகவும் தெரியலாம். எனவே அவதானமாக வாக்களியுங்கள். தெரிவுகளை செய்யுங்கள். :D:)

நான் அழித்து மீண்டும் வாக்களித்துள்ளேன்

நெடுக்கு,

தமிழீழ விடுதலைப்புலிகள் தவிர்க்கப்பட்டதற்கு காரணம், இவ்வாறு தவிர்க்கப்பட்டதை யார் முன்வந்து சுட்டிக்காட்டுகிறார்கள் என்று பார்ப்பதற்கும் மற்றவர்களை அதை அறியச்செய்வதற்குமேயன்றி வேறு காரணத்துக்காகவல்ல.

யார் அதை சுட்டிக்காட்டியவர் என்று நீங்களும்தான் அறிந்து கொண்டீர்கள். இன்றைக்காவது அவருக்கு ஒரு பச்சை குத்திவிடுங்கள்.

இதில் கலந்து வாக்களித்ததற்காகவும் யூட்டை நம்பியதற்காகவும் இதுவரை இவருடன் கருத்துக்களத்தில் உரையாடியதற்காகவும் வெட்கப்படுகின்றேன். வேதனைப்படுகின்றேன். :(:(:(

..

யாழ் களம் நல்ல பொழுது போக்கு (மசாலா )தளமாக உருவாகி வருவதனையிட்டு பெருமை அடைகின்றேன். :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

அதுக்குள்ள மறந்துபோட்டீர்களோ? தமிழீழ விடுதலை புலிகளின் பெயரை காணவில்லை.அப்ப இனி தலைவர் வரமாட்டாரா?

அர்ஜூன், உங்களின் பதிவுகளில் இந்த ஒன்றில் நிச்சயம் நியாயம் உள்ளது. :)

  • கருத்துக்கள உறவுகள்

அதுக்குள்ள மறந்துபோட்டீர்களோ? தமிழீழ விடுதலை புலிகளின் பெயரை காணவில்லை. அப்ப இனி தலைவர் வரமாட்டாரா?

அர்ஜூன், உங்களின் பதிவுகளில் இந்த ஒன்றில் நிச்சயம் நியாயம் உள்ளது. :)

ஐயா

அவரது கேள்வியில் சந்தோசம்

நக்கல்

நளினம்

.................

...................

........????????? தான் இருக்கிறது

நியாயமில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

ஐயா

அவரது கேள்வியில் சந்தோசம்

நக்கல்

நளினம்

.................

...................

........????????? தான் இருக்கிறது

நியாயமில்லை.

அவருக்கு உள்நோக்கம் இருக்கலாம்.. ஆனால் சற்றே மறந்தது சிறு சறுக்கல் தானே? இடங்கொடுக்கலாமோ?

  • கருத்துக்கள உறவுகள்

தானை தலைவரது உண்மையான அணி எதுவோ அதற்குத்தான் எனது ஓட்டு . உண்மையான அணியை அடையாளம் காட்டுமாறு ஈழ தோழர்களுக்கு அன்பு வேண்டுகோள் விடுக்கிறான் இந்த தோழர்.

சைலன்ஸ்... தானை தலைவரை முதலில் நான் தான் குறிப்பிட்டு இருக்கேன் .. :rolleyes:

"தமிழின விடுதலையின் அடுத்தக்கட்ட நகர்வுக்கு எந்த தாயக அமைப்பை ஆதரிக்கிறேன்?" என பார்வையிலேயே நான் வாக்களித்தேன்.

அந்த வகையில் இன்றுள்ள புலம் பெயர் சக்தி, மாறிவரும் உலகஒழுங்குகள், தாயக நிலமைகள், சிங்களத்தின் அரசியல்-பொருளாதார நிலைமைகள் இவற்றுக்கு ஊடாக நாம் நகர்ந்து விடுதலை பெறல் வேண்டும் என்பது எனது நிலைப்பாடு.

அதற்கு தேவையான எல்லாவற்றையும் எமக்கு தந்து நிற்கிறார்கள் விடுதலைப்புலிகள் என்ற சக்தி. அவர்களின் துணையோடு இன்னொரு ஆயுத போராட்டம் இல்லாமல் எமது அமைப்புக்கள் விடுதலையை வென்றெடுக்கவேண்டும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் ஒருதருக்கும் வாக்கு அளிக்கவில்லை ஆனால் தற்போது உள்ள சூழ்நிலையில் தாயகத்து நிலைமையை மட்டும் வைத்து வாக்களிப்பது என்டால் என்ட வோட்டு டக்லசுக்கு தான். பத்துப் பேருக்கு கெடுதல் செய்தாலும் ஏதோ 3 பேருக்காவது நன்மை செய்கிறார்

பத்துப்பேர் அழிஞ்சு மூண்டுபேர் வாழோணும்.

நல்லகொள்கை.

அப்ப???????????????

மூண்டு பேர் அழிஞ்சு பத்துப்பேர் வாழோணும்.

எண்டு சொல்லுற ஆக்களை என்னசெய்யலாம்??

ஒருவரது இறப்பில், அதுவும் ஒரு போராளியின் இறப்பில், அதுவும் ஒரு இயக்க தலைவனின் இறப்பில் சந்தோசப்பட நான் ஒன்றும் இழிவானவனல்ல.

இங்கு கருத்தெழுதும் பலர் போலில்லை நான்.எனக்கு புலியும்,புளொட்டும்,ஈ.பீயு,ம்,டெலோவும்,ஈரோஸும் எல்லாம் விடுதலை இயக்கங்களாகவே இருந்தது.சக போராளிகளை எப்போதும் மதித்தே வந்தேன்.எல்லோருமே நாட்டுக்காகத்தான் போராட வந்தார்கள்.தலைமையும் சூழ்நிலைகளும் அவர்களை திசை மாற்றிவிட்டத்து.

அனைத்து இயக்கங்களிலும் நல்லவர்களும் கெட்டவர்களும் இருந்தார்கள்.அனைத்து இயக்கங்களும் உடைந்ததும்,அனைத்து இயக்கங்களிலும் இருந்தும் அரசாங்கத்துடன் இணந்தார்களென்பதுதான் வரலாறு.

யாழில் எழுதவரும்போது விபூதி பூசிக்கொண்டுவரும் கள்ள சாமிமார்களை இனம்காண்பதொன்றும் கஸ்டமல்ல.

யாழ் களம் நல்ல பொழுது போக்கு (மசாலா )தளமாக உருவாகி வருவதனையிட்டு பெருமை அடைகின்றேன். :rolleyes:

ஒரு கத்தி போல இல்லை அணுத்தொழில்நுட்பத்தைபோல இந்த களத்தையும் (இந்த களத்தை அமைத்து தந்தவர்களும் மட்டுறுத்னர்களும் நன்றிகள்) நாம் ஒரு பொழுது போக்கு தளமாகவும் பாவிக்கலாம் இல்லை எமது இனத்திற்கு ஆக்கபூர்வமாக செய்யும் தளமாகவும் பாவிக்கலாம். அது எமது கைகளில் தான் உள்ளது.

யூட் ... யுத்த நிறுத்ததுக்கு முற்பட்ட என்பதிலும் 9/11 இற்கு முற்பட்ட விடுதலைப் புலிகள் என்று ஓர் இணைப்பை நீங்கள் இணைத்தால் ... என் வாக்கு அதற்கு!!!

  • கருத்துக்கள உறவுகள்

பத்துப்பேர் அழிஞ்சு மூண்டுபேர் வாழோணும்.

நல்லகொள்கை.

அப்ப???????????????

மூண்டு பேர் அழிஞ்சு பத்துப்பேர் வாழோணும்.

எண்டு சொல்லுற ஆக்களை என்னசெய்யலாம்??

அதுவும் நல்ல கொள்கை தான் அண்ணா ஆனால் இப்ப யார் அதை சொல்வது?...இங்கிருந்து கதிரைக்கு அடிபடும் அரசியல்வாதிகளையும் பார்க்க அங்கிருக்கும் மக்களுக்கு ஏதாவது சிறு உதவி செய்யும் டக்லசே மேல் என்பது என் கருத்து.

  • கருத்துக்கள உறவுகள்

டக்லசை ஆதரிக்க முடிவு செய்தவரிடம் நாலு நாற்பது நாலாயிரம் பேர் செத்தாலும் எடுபடுமா..? :(:(:(

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யூட் ... யுத்த நிறுத்ததுக்கு முற்பட்ட என்பதிலும் 9/11 இற்கு முற்பட்ட விடுதலைப் புலிகள் என்று ஓர் இணைப்பை நீங்கள் இணைத்தால் ... என் வாக்கு அதற்கு!!!

நெல்லையன்,

விடுதலைப்புலிகள் “தமிழீழ விடுதலைப்புலிகள்” என்பதில் உலகில் எவருக்குமே சந்தேகம் இருக்கவில்லை. அவர்களுக்காகவும் அவர்களுடனும் ஆயிரக்கணக்கில் மடிந்த மக்களின் ஆதரவு அவர்களுக்கு உள்ள ஆதரவை காட்ட போதுமானது. இந்த வாக்கெடுப்பின் மூலம்தான் அவர்களுக்கு உள்ள ஆதரவை அறிய வேண்டிய தேவையில்லை. முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற படுகொலைகளுக்கு பிறகு பலவிதமான விமரினங்கள் எழுந்துள்ளன.

சிறிலங்கா இந்தவிதமான படுகொலைகளை செய்யும் என்று விடுதலைப்புலிகளோ, சர்வதேச சக்திகளான இந்தியாவோ, அமெரிக்காவோ கூட எதிர்பார்த்திருக்கவில்லை. அப்படி முன்னரே தெரிந்திருந்தால் விடுதலைப்புலிகள் மக்களை ஆரம்பத்திலேயே சிறிலங்காவின் கட்டுப்பாட்டு பகுதிக்கு அனுப்பியிருப்பார்கள் என்பது எனது அபிப்பிராயம். இறுதிநேரத்தில் யுத்தநிறுத்தத்துக்காகவும், சரணடையவும் ஏற்பாடுகளை செய்ய முயற்சித்தவர்கள் மேல் இன்று பல குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகின்றன. அவர்கள் எல்லாரும் முடிந்தவரை ஒவ்வொரு உயிரையும் காப்பாற்றவே முயற்சி செய்தார்கள். அவர்களை குறைசொல்லுவது பயனற்றது. ஆனாலும் பாதிக்கப்பட்ட மக்கள் விடுதலைப்புலிகளையும், இறுதிநேர முயற்சிகளில் ஈடுபட்டவர்களையும் குறைசொல்லுவதும் அவர்கள் மேல் ஆத்திரப்படுவதும் நியாயமானது. ஏனென்றால் அவர்கள் பாதிக்கப்பட்ட மக்கள்.

இன்றைய நிலையில், மக்களின் ஆதரவு எந்த அமைப்புகளுக்கு உள்ளது என்று அறிவது பயனுள்ளதாக இருக்கும் என்பதே இந்த கருத்துக்கணிப்பின் நோக்கமாகும்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கருத்துக் கணிப்பு என்னைப் பொறுத்தளவில் செல்லுபடியாகாது.

எந்த அமைப்பையும் ஆரம்பத்திலிருந்தே இணைத்திருக்க வேண்டும் ஜூட் அண்ணா.

இடையில் இணைத்து நம் மாவீரர்களுக்கு அவமரியாதை செய்யக்கூடாது

கருத்துக்கணிப்பை மீழ் பதிவு செய்வதே நல்லது.

வாத்தியார்

*********

முள்ளிவாய்க்கால் முடிவிற்குப் பின் விடுதலைப் புலிகளைச் சார்ந்தவர்களில் தலைமையில் இன்று நடத்தப்படும் அமைப்புகளில் யாரை ஆதரிக்கிறீர்கள் எனப் பொருள் விளங்கியே இந்த திரியில் நான் வாக்களித்துள்ளேன். பின்வரும் அமைப்புக்கள் விடுதலைப் புலிகளின் தலைமையே இன்னும் உச்சரிக்கிறன. :)

நாடு கடந்த தமிழீழ அரசின் ஜனநாயக அணி (TGTE Democrat)

நாடு கடந்த தமிழீழ அரசு (TGTE )

மக்களவை

கே பி யின் அமைப்பு

நெடியவன் சேரமானின் அமைப்பு

எனது கருத்தில் தவறிருந்தால் யார் இவர்கள்? கருணா, பிள்ளையான் போல பிரிந்து வந்தவர்களா? யாரும் சற்று விளக்குவீர்களா? :blink:

  • கருத்துக்கள உறவுகள்

யூட் ........

இந்தக் கருத்துக் கணிப்பை ஆரம்பத்திலிருந்தே பார்த்துக் கொண்டிருக்கிறேன் மட்டுமல்ல பங்குபற்றியும் உள்ளேன் நீங்கள் ஒவ்வொருதடவையும் வெ வ்வேறு திருத்தங்களைச் செய்தவண்ணம் இருக்கிறீர்கள் அதனால் முன்பு நீங்கள் எடுத்துக் கொண்ட அமைப்புகளின் அடிப்படையிலேயே கருத்து பதிவு இடம்பெற்றது. இப்போது ஆரம்பத்திற்கும் முடிவுக்கும் இடையில் நினைத்தே பாரக்க முடியாத மாற்றத்தை செய்துள்ளீர்கள். அதனால் இக்கருத்துப்பதிவை மீள் பதிவாக மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

Edited by valvaizagara

.

TGTE இற்கு மட்டுமே என் வாக்கு. புலிகளை இங்கு இணைக்க வேண்டிய அவசியமில்லை.

இந்த கணிப்பு உண்மையில் TGTE இற்கா அல்லது அதைக் குழப்ப நிற்பவர்களுக்கா மக்கள் ஆதரவு கொடுக்கின்றார்கள் என்பதை ஒரு சிறிய sample மூலம் காட்டுவதாகவே நான் நினைக்கின்றேன்.

அந்த எண்ணத்தில் தான் Jude இதனை இணைத்திருப்பார் என்றும் நினைக்கிறேன்.

அர்ஜுன் புலிகளை ஏன் இணைக்கவில்லை என்று கேட்டதே இதைக் குழப்பத்தான்.

நாங்கள் தலையில் ஒரு தொப்பி போட்டுக் கொள்வது நல்லது. இல்லையென்றால் எல்லாரும் எம்முடைய தலையில் மிளகாய் அரைத்து விடுவார்கள்.

நான் ஒருதருக்கும் வாக்கு அளிக்கவில்லை ஆனால் தற்போது உள்ள சூழ்நிலையில் தாயகத்து நிலைமையை மட்டும் வைத்து வாக்களிப்பது என்டால் என்ட வோட்டு டக்லசுக்கு தான். பத்துப் பேருக்கு கெடுதல் செய்தாலும் ஏதோ 3 பேருக்காவது நன்மை செய்கிறார்

பத்துப்பேருக்கு கெடுதல் செய்து மூன்று பேருக்கு நல்லது செய்கின்றார் என்பது உண்மைக்குப் புறம்பான வாதம். புலிச்சார்புத் தேசீயவாதம் இருந்த காலத்தில் டக்ளஸ் போன்றவர்கள் துரோகியாக வரையறுக்கப்பட்டதன் தொடர்ச்சியான வசனங்கள். தமிழ்மக்களுக்கான அதிகளவு அபிவிருத்தித் திட்டங்களை செய்பவரும் செய்யக் கூடிய நிலையில் இருப்பவரும் டக்ளஸ் மட்டுமே என்பதே உண்மை.

தமிழீழ விடுதலைப்புலிகள்

நாடு கடந்த தமிழீழ அரசின் ஜனநாயக அணி (TGTE Democrat

உலகத்தமிழர் பேரவை (GTF)

நாடு கடந்த தமிழீழ அரசு (TGTE )

மக்களவை

கருணாவின் மக்கள் விடுதலை புலிகள்

கே பி யின் அமைப்பு

பிள்ளையானின் மக்கள் விடுதலை புலிகள்

நெடியவன் சேரமானின் அமைப்பு

இவைகளும் இவற்றில் இருந்து இனி உருவாகப்போகும் என்னும் பல அமைப்புகளும் ஒரு சிந்தனை முறையின் கீழ் உருவாகி கிழைவிடுபவைகள். மக்களை அவலத்துக்கு உள்ளாக்கியது. மக்கள் பணத்தை சுருட்டியது. துரோகம். பிரதேசவாதம். மத ரீதியாக தமிழர்களை சிதைத்தது என்னும் எதுவாக இருந்தாலும் ஒப்பீட்டளவில் இவைகளே 90 வீதத்துக்கும் மேல் பங்குவகிக்ன்றது.

டக்ளஸ் அணி இதிலிருந்து மாறுபட்டது. தற்போதைய நிலவரத்தில் தாயக மக்களின் பெரும் ஆதரவைப் பெற்ற அணியாக வளர்ந்து வருகின்றது. தினமும் எதோ ஒர மக்கள் நலன் சார்ந்த அபிவிருத்திகள் இந்த அணியால் முன்னெடுக்கப்படுகின்றது. கைதான மக்களின் விடுதலையில் இந்த அணியின் பங்கு கணிசமானளவேனும் இருக்கின்றது. வெற்றுவேட்டுத் தேசியம் பேசி அடயாளம் தேடிக்கொண்டிருப்பதைவிட தமிழர்களின் இருப்பை தக்கவைப்பதன் அவசியம் குறித்த முக்கிய விடயத்தை கருத்தில் கொண்டு இந்த அணியின் செயற்பாடு வரவேற்கத்தக்கதாக உள்ளது.

Edited by sukan

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.