Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஈழத் தமிழர்களைக் கைவிட்ட காங்கிரஸுக்கு தமிழக மக்கள் சம்மட்டி அடி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத் தமிழர்களைக் கைவிட்ட காங்கிரஸுக்கு தமிழக மக்கள் சம்மட்டி அடி

தமிழக அரசியல் வரலாற்றில் மிகப் பெரிய தோல்விக்கு காங்கிரஸ் கட்சி தள்ளப்பட்டுள்ளது. இதுவரை அதிமுக, திமுகவுடன் ஓசி சவாரி செய்தே சீட்களை அள்ளி சொகுசாக இருந்து வந்த காங்கிரஸுக்கு இந்த தேர்தலில் மக்கள் கடும் பாடம் கற்றுக் கொடுத்துள்ளனர்.

அறந்தாங்கி உள்ளிட்ட 4 தொகுதிகளில் மட்டுமே முன்னணியில் உள்ளது. திமுகவை கடுமையாக மிரட்டி, உருட்டி, ஸ்பெக்ட்ரம் ஊழலை வைத்து பாலிட்டிக்ஸ் செய்து அதிக அளவிலான தொகுதிகளைப் பெற்றுப் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி கடும் தோல்வியைச் சந்தித்துள்ளது.

அறந்தாங்கி தொகுதியில் காங்கிரஸ் ஜெயித்தாலும் கூட அது அங்கு போட்டியிடும் திருநாவுக்கரசரின் சொந்த செல்வாக்குதான் காரணமாக இருக்குமே தவிர காங்கிரஸுக்கு நிச்சயம் இதில் பங்கே இருக்காது.

மேலும் ஈழத் தமிழர் பிரச்சினையில் காங்கிரஸ் செய்த கபட நாடகங்கள், போர்க்குற்றவாளி என ராஜபக்சேவை ஐ.நா. குழு அறிவித்த பிறகும் கூட அவரைக் காப்பாற்ற காங்கிரஸ் மேலிடம் துடிப்பது என காங்கிரஸ் கட்சிக்கு எதிரான விஷயங்கள் ஒட்டுமொத்தமாக இந்த தேர்தலில் கவிழ்த்து விட்டுள்ளது.

மேலும் உட்கட்சிப் பூசல், கோஷ்டி கலவரங்கள், ஆளாளுக்கு நாட்டாமை, தங்கபாலுவின் தான்தோன்றித்தனம் ஆகியவையும் கூட காஹ்கிரஸுக்கு வேட்டு வைத்து விட்டது.

தங்கபாலு மயிலாப்பூரில் வேட்பாளராக நிற்க செய்த தகிடுதத்தனங்களும் காங்கிரஸாரையே கடுப்பாக்கி விட்டது. இத்தனையும் சேர்ந்து இன்று காங்கிரஸை காலி செய்துள்ளது.

-தட்ஸ் தமிழ்

  • கருத்துக்கள உறவுகள்

திமுக வின் தோல்வி என்பது அது தமிழகத்தை தமிழ் மக்களை ஆண்ட வகையில் இருக்கிறது.

காங்கிரஸின் தோல்வி என்பது.. அண்ணன் சீமான்.. தனது கோபத்தை சரியான வகையில் தமிழக சொந்தங்களிடம் கொண்டு சென்ற வகையில் அமைகிறது.

இதில் எல்லாப் புகழும் அண்ணன் சீமானுக்கே. தமிழ் மானம் காத்த அண்ணன் சீமானுக்கும் அவர் தம் வழியில் நின்ற தமிழக சொந்தங்களுக்கும் கோடான கோடி நன்றிகள்.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

சீமான் அவர்கட்கு எனது சார்பிலும் என்தேசம்காண தன்னுயிர்களை ஈகம்செய்த பல்லாயிரம் மாவீரர்கள் சார்பிலும் கோடி நன்றிகள். தமிழனின் வீரம்செறிந்த புகழ்கொடியுடன் வீறுநடைபோட்டு இன்னுமுள்ள பகையையும் இனிவரும் பகையையும் இல்லாதொழிக்க மாவீரர்துயிலிடம் நோக்கி வேண்டுகிறேன். இனிமேல்தான் மிகவும் சிக்கல்கள் நிறைந்த பாதையில் சீமான் அவர்கள் பயணப்படவேண்டியுள்ளது. உங்களை முறியடிக்கவோ அன்றேல் உங்கள் மூச்சை முடித்திடவோ எதிரிகள் முயல்வர் (ஜெயலலிதா உட்பட) ஆகவே கவனமாக இருங்கள் சீமானே.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களை நிர்க்கதியாக்கிய திமுக்விற்கு மாபெரும் தோல்வியைக் கொடுத்து படிப்பினையையும், தமிழர்களுக்கு நிம்மதியையும் கொடுத்தவர்களுக்கு நன்றி. ஆனாலும் காங்கிரசு இன்னும் சுத்தமாக கழுவேற்றபட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

சீமான் அண்ணா வுக்கு நன்றிகள்...

Edited by வீணா

சீமான் அண்ணா வுக்கு நன்றிகள்...

தமிழகமே நன்றி. உணர்வு செத்து விட வில்லை.

அழிக்க உதவிய கயவன் வீட்டுக்கு போகிறான்.

நம்ம்பிக்கை வீணாக வில்லை. வெல்வோம் தமிழர் நாம். உணர்வோடு இருப்போம்.

முள்ளிவாய்க்கால் நினைவுநாள் .அழிக்கப்பட்ட நாள்.

நல்ல செய்தி.

ஜெயலலிதா இனி என்ன செய்ய போகிறார் அல்லது நல்லவரா? கெட்டவரா?

அது பற்றி இல்லை.

ஆட்சியில் இருந்த அரசு செய்தது பெரும் தவறு. ஒரு ரூபா அரிசியை விட ஈழத்தமிழன் கதறிய குரல் உங்களை கவலைப்பட வைத்துள்ளது.

உங்கள் தீர்ப்பை வழங்கியுள்ளீர்கள்.

தாய்தமிழகமே நன்றி. பல கருத்தால் மாறு பட்டாலும் உணர்வால் ஒன்றாவோம்.

நாம் தமிழர்

  • கருத்துக்கள உறவுகள்

அதே மே மாதம் தண்டனை வழங்கப்பட்டுளது.சம்பந்தப்பட்ட அனைவருக்கும் நன்றிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஜெயலலிதா என்ன செய்வாரோ தெரியாது.அவரின் அரசியலில்; முன்பை விட முதிர்ச்சி தெரிகிறது.ஆனால் தமிழர்களைக் கொல்ல உதவிய காங்கிரஸ் கூட்டணிக்கு சம்மட்டி அடி கொடுத்ததின் மூலம் இன உணர்வுக்கு முன்னால் இலவசம்கள் தூசு என்று நிரூபித்துக் காட்டிய சொந்தங்களுக்கு நன்றி;.இன்னும் உணர்வுகள் செத்து விடவில்லை.காங்கிரசை தமிழ்நாட்டில் இருந்து விரட்டிய சீமானுக்கு வாழ்த்துக்கள்!தமிழர் நாம் வெல்வோம்.

Edited by புலவர்

.

நன்றி, நன்றி, நன்றி.

தாய்தமிழகமே நன்றி.

சீமான்.. நன்றிகள்.

எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே.........

இதயம் இனித்தது. கண்கள் பனித்தன.

உறவுக் கண்மணிகளுக்கு நன்றிகள்

Edited by thappili

  • கருத்துக்கள உறவுகள்

எனது வாழ்வில் நடந்த மகிழ்ச்சியான நாட்களில், இன்றைய நாளும் அடங்கும்.

தாய்த் தமிழகத்திற்கும், அண்ணன் சீமானுக்கும் நன்றி. :)

  • கருத்துக்கள உறவுகள்

எனது வாழ்வில் நடந்த மகிழ்ச்சியான நாட்களில், இன்றைய நாளும் அடங்கும்.தாய்த் தமிழகத்திற்கும், அண்ணன் சீமானுக்கும் நன்றி. :)

நன்றி நன்றி நன்றி

சொல்ல வார்த்தைகளில்லை இரத்த உறவுகளுக்கு.

எம்மை வதைத்தோரை காத்திருந்து தூக்கி எறிந்தீர்கள்.

அதற்காக நன்றி.

அதற்கு உழைத்தவர்களுக்கு நன்றி

சீமான் அண்ணா சொன்னதுபோல் காங்கிரசுடன் கூட்டுச்சேருபவன் இனி யோசிப்பான்.

முதல் முறையாக கருணாநிதி தூக்கிச்செல்லப்படுவதை நான் வரவேற்று மகிழ்வேன் .

உண்மைதான் சிறி

எனக்கும் அப்படித்தான் உள்ளது

தமிழக உறவுகளின் ஒன்று சேரல் எமக்கு மிகப்பெரும் பலமாகும்.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள் தமிழக உறவுகளே...

காங்கிரஸ் இந்தியாவின் பல இடங்களில் தனது செல்வாக்கை இழந்துவருகிறது. எது எப்படியோ ஏமாற்றியவர்களும் அதற்குத் துணைபோன சுயநலவாதிகளும் தூக்கியெறியப்பட்டுள்ளார்கள். ஈழத்தமிழனின் துன்பங்களை, அவர்கள்பட்ட பேரவலங்களை இது போக்காது. கருணாநிதி அடைந்த இத்தத் தோல்வி அவரின் இறுதி அத்தியாயம்.

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான் சிறி

எனக்கும் அப்படித்தான் உள்ளது

தமிழக உறவுகளின் ஒன்று சேரல் எமக்கு மிகப்பெரும் பலமாகும்.

விசுகு,

இப்படி ஒரு படு தோல்வியை தி. மு. க. சந்திக்கும் என்று நான் கனவிலும் எதிர் பார்க்கவில்லை.

தமிழக மக்கள் உசாராக, ஒரு மௌனப் புரட்சியை ஏற்படுத்தியுள்ளார்கள்.

கருணாநிதி தனது ஆட்சிக் காலத்தில், ஈழத்தமிழருக்காக தீக்குளித்த தியாகி முத்துக்குமாரனின் இறுதிச்சடங்கை கூட தமிழக மாணவர்களால் கொண்டாட முடியாத படி செய்த கெட்ட எண்ணம் கொண்ட மனிதருக்கு, தமிழகமக்கள் நல்ல பாடம் படிப்பித்துள்ளார்கள். :)

இனியும் எமக்குள் உள்ள பேதங்களை மறந்து நாம் தமிழர்கள் என்ற உணர்வோடு ஒன்றுபட்டோமானால் இந்த உலகின் இராயதந்திரங்களையும் வெல்லலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு,

இப்படி ஒரு படு தோல்வியை தி. மு. க. சந்திக்கும் என்று நான் கனவிலும் எதிர் பார்க்கவில்லை.

தமிழக மக்கள் உசாராக, ஒரு மௌனப் புரட்சியை ஏற்படுத்தியுள்ளார்கள்.

இனியும் எமக்குள் உள்ள பேதங்களை மறந்து நாம் தமிழர்கள் என்ற உணர்வோடு ஒன்றுபட்டோமானால் இந்த உலகின் இராயதந்திரங்களையும் வெல்லலாம்.

உண்மை உண்மை

இது மீண்டும் ஒரு பொங்கு தமிழாக எழுச்சி பெறணும்

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வெற்றியைத் தமிழீழ ஆதரவு வெற்றியாக மாற்ற வேண்டும். சட்டமன்றத்தில் தமிழீத் தீர்மானம் இயற்ற ஜெயலலிதாவை தமிழீழ ஆதரவாளர்கள் தூண்ட வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாப்புகழும் ஒருவன் ஒருவனுக்கே....நன்றி சீமான் அண்ணா!!!

இந்திய ராணுவத்தையே எதிர்த்து தீரத்துடன் ஆயுதப்போர் புரிந்தார் பெருவீரன் பிரபாகரன்.....

ராமேசுவரத்தில் இந்திய நச்சு காங்கிரசை தனிமனிதனாக எதிர்த்துஅரசியல் போரை ஆரம்பித்த அண்ணன் சீமான் இன்று கணிசமான வெற்றியும் கண்டுள்ளார்..... இருவரும் எடுத்த ஒரே ஆயுதம் துணிச்சல்......

சீமான் மற்ற அரசியல்வாதிகளைப் போலன்று, கொண்ட கொள்கையில் எக்கணத்திலும் நழுவாதவர் எனும் நம்பிக்கை மக்களுக்கு ஏற்பட்டு விட்டால் மக்கள் அடுத்த முறையே அவரை அரியாசனம் ஏற்றுவார்கள்....

கருணாநிதி நடத்தப் போகும் அடுத்த கூத்து .....என் ஈழத் தமிழினமே என் ரத்தத்தின் ரத்தமே....ஈழமில்லையேல் நானில்லை என்பார்...இனியென்ன காங்கிரசு துரோகியாகும்,, கூட்டுக்களவானி ராஜபக்ஷே எதிரியாவான்......

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி சீமான் அண்ணா!!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தாத்தாவின் ஆட்சி முடிந்து ஆத்தாவின் ஆட்சி ஆரம்பம்....

தாய்த்தமிழக தொப்புள்கொடி உறவுகள் எமது இனத்திற்கு துரோகம் செய்தவர்களுக்கு நல்ல படம் படிப்பித்துள்ளர்கள். நன்றி!!

இந்த இடத்திலிருந்து தொடர்ந்தும் நாம் விரைவாகவும் உறுதியாகவும் ஒற்றுமையாகவும் பயணிக்கவேண்டும்.

முதலில் சிங்களம் செய்தது ஒரு இன அழிப்பு என தீர்மானம் கொண்டுவந்து பின்னர் அதை புதுடெல்லி வரை கொண்டு செல்ல வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

தாய்த்தமிழக உறவுகளுக்கு நன்றிசொல்ல வார்த்தைகளில்லை..! சீமான் மேலும் பல வளர்ச்சிகள் காண்க..!!

காங்கிரஸ் கட்சிக்கு இன்னும் பெரிய அடி கிடைத்திருக்கும்.... விளவங்கோட்டிலும்,குளச்சலிலும் ,மக்கள் சாதி,மத அடிப்படையில் வாக்களித்ததால் தான் 2 இடங்கள் குமரி மாவட்டத்தில் கிடைத்தன அல்லது மரண அடி வாங்கியிருக்கும் . காங்கிரஸை அழித்தே தீருவோம்!

ஜெயலலிதா என்ன செய்வாரோ தெரியாது.அவரின் அரசியலில்; முன்பை விட முதிர்ச்சி தெரிகிறது.ஆனால் தமிழர்களைக் கொல்ல உதவிய காங்கிரஸ் கூட்டணிக்கு சம்மட்டி அடி கொடுத்ததின் மூலம் இன உணர்வுக்கு முன்னால் இலவசம்கள் தூசு என்று நிரூபித்துக் காட்டிய சொந்தங்களுக்கு நன்றி;.இன்னும் உணர்வுகள் செத்து விடவில்லை.காங்கிரசை தமிழ்நாட்டில் இருந்து விரட்டிய சீமானுக்கு வாழ்த்துக்கள்!தமிழர் நாம் வெல்வோம்.

இன்று பேட்டியில் ஜெயா ஈழத்தமிழர்கள் அன்த நாட்டு அரசால் துன்புறுத்தப்படுகின்றனர் என்றும் இதில் மாநில முதல்வராக தன்னால் பெரிய அளவில் ஒன்றும் செய்ய இயலாவிடினும் மத்திய அரசை வலியுறுத்தி போராடி சாதிப்பேன் என்று கூறியது........... பார்க்கலாம்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.