Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழின எதிரிகளை வீழ்த்திய தமிழ் மக்களுக்கு நன்றி - யாழ் கள உறவுகள்

Featured Replies

கருணாநிதியின் தோல்விக்கு காரணமான தமிழக உறவுகளுக்கு வாழ்த்துக்கள்.

ஈழ தமிழின படுகொலைக்கு துணைபோன கருணாநிதியின் தோல்விக்காக உழைத்த அண்ணன் சீமான் ஐயா வைகோ ஐயா பழநெடுமாறன் மற்றும் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் ஈழத்தமிழர்களாகிய எங்களது வாழ்த்துக்கள்.

அடுத்து அம்மா என்ன செய்யப்போகின்றார் என்று பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

:)கருணாநிதியின் தோல்விக்கு காரணமான தமிழக உறவுகளுக்கு வாழ்த்துக்கள்.

ஈழ தமிழின படுகொலைக்கு துணைபோன கருணாநிதியின் தோல்விக்காக உழைத்த அண்ணன் சீமான் ஐயா வைகோ ஐயா பழநெடுமாறன் மற்றும் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் ஈழத்தமிழர்களாகிய எங்களது வாழ்த்துக்கள்.

அடுத்து அம்மா என்ன செய்யப்போகின்றார் என்று பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஊருக்கும் உலகத்துக்கும் நல்லது செய்தா நன்றி வாழ்த்தெல்லாம் சொல்ல வேண்டியது எங்கள் கடமை. இரண்டு ஆண்டுகள் முன்பு கருணாவை வெல்ல வைச்சதுக்காக நான் யாழில பல தடவைகள் தமிழக வாக்காளர்களைச் சாடியிருக்கிறேன். மன்னிப்புக் கேட்கிறேன் இந்த நேரத்தில்!

யாழ்கள உறவுகள் தங்கள் நன்றிகளையும் வாழ்த்துக்களையும் எமது தமிழ் நாட்டு உறவுகளுக்கு தெரிவியுங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

அமைதியாக பெரும்புரட்சி செய்த தமிழகத்து மக்களுக்கு பாராட்டுகள். உலகமெல்லாம் அமைதிப்புரட்சி வென்று கொண்டிருக்கிறது அந்த வகையில் உங்களுக்கும் வாழ்த்துக்கள். மாற்றம் செய்துவிட்டோம் என்று மறுபடியும் தூங்கிவிடாதீர்கள் எப்போதும் விழிப்பாய் இருங்கள் மற்றவர்களுக்காக இல்லாவிட்டாலும் உங்களுக்காகவாவது விழிப்பாக இருங்கள்.

தமிழ்நாட்டில் அமைதிபுரட்சி செய்து காட்டியிருக்கும் தமிழ் உணர்வால் ஒன்றியிருக்கும் அனைத்து தமிழக உறவுகளுக்கு எனது உளம் கணிந்த வாழ்த்துக்களும், நன்றிகளும்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழினத்துக்கு செய்யப்பட்ட துரோகத்துக்கான தங்களது பதிலாகவே நாம் இதைப்பார்க்கின்றோம்.

அந்தவகையிலும் பெரும் நரிவேலைகளிலும் ஊழலிலும் திளைத்த கருணாநிதியையும் அத்துடன் ஈழத்தவரை கருவறுத்த காங்கிரசையும் பொறுத்திருந்து போட்டுத்தள்ளியுள்ளீர்கள். நன்றிகள் கோடி

அதேநேரம் வருபவரிடமும் நாம் கவனமாக இருப்போம். எமக்காக போராடாவிட்டாலும் உங்கள் இனத்தை அழித்தவனை கூண்டிலேற்ற இவர் மூலம் உதவுங்கள். நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

நம்பிக்கை என்ற நுலை தவிர நாம் பற்றி பிடிக்க இப்போது ஏதும் இல்லை..............

தேர்தல் முடிவுகள் உங்கள் கைகள் எங்களை பற்றுவதாக ஒரு உணர்வை தருகின்றது! நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

தொப்புள் கொடி உறவுகள் ஒன்றுக்கொன்று நன்றியைச் சொல்லிக் காட்டிக் கொள்வதில்லை.

கருணாநிதியிநினதும் காங்கிரசின் தோல்வியையும் எங்களுக்குச் செய்து காட்டிய உங்களுக்கு, நன்றி சொல்லாமல் இருக்க மனது கேட்கவில்லை.

நன்றிகள் உறவுகளே!

இந்த ஆரம்பம் ஒரு அலையாகட்டும்!!!

தமிழக ஈழ தமிழ் உணர்வாளர்களுக்கு மனமார்ந்த நன்றிகள். ஈழத்தில் ஒரு விடிவு பிறக்க இது உதவும் என்று நம்பிகிறோம்.

ஈழத்தமிழர்கள் தனியாக இல்லை என உணர வைத்த தமிழகஉறவுகளுக்க நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி.. நன்றி.. நன்றி..

  • கருத்துக்கள உறவுகள்

இந்த அமைதிப் புரட்சியின் மூலம் தோற்றவர்களுக்கும் வென்றவர்களுக்கும் ஒரு தெளிவான செய்தியைச் சொல்லியிருக்கிறார்கள் எம் தமிழ்உறவுகள். அதாவது மக்கள் விருப்பக்கு மாறாக நடக்கும் ஆட்சியாளர்களுக்கு தக்க தண்டனை கொடுக்கப்படும். ஆகவே புதிய அரசு மக்கள் மனம் அறிந்து செயல்படாவிட்டால் இதே நிலை மீண்டும் அவர்களுக்கும் வரும் என்பதை உணர்ந்து மக்கள் எதை விரும்புகிறார்களோ அதைச் செய்ய வேண்டும். தமிழக மக்கள் தங்கள் தொப்புள் கொடி உறவுகளுக்கு ஒரு நல்ல அரசியல் தீர்வ வரவேண்டும் என்ற விரும்புகிறார்கள். அதை ஏற்படுத்தித் தருவது தமிழக அரசின் கடமை! இன்ற முஸ்லிம் நாடுகளில் நடக்கும் இரத்தப்புரட்சியுடன் ஒப்பிடும் பொழுது இரத்தம் சிந்தாமல் அமைதிப்புரட்சியை ஏற்படுத்திய தமிழ்மக்களின் விருப்பு அறிந்து இந்தியா செயல்படவேண்டும்.அன்றேல் நிலமை படுமோசமாகும்.இந்திய ஆட்சியாளர்களின் மேல் ஏற்பட்ட கோபத்தை நாகரீகமான முறையில் வெளிக்காட்டிய தமிழக உறவுகளுக்கு நன்றிகள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழக மக்களின் வாக்குகள் எம் ஈழத்து மக்கள் வாழ்வை மாற்றியமைத்திடட்டும்...!

தமிழக மக்களின் ஒற்றுமைக்காக மாற்றத்தை உருவாக்கிய சாதனைக்காக வாழ்த்தி வணங்கும் அதே வேளை.....

தாய் தமிழீழத்து மக்கள் என்று இணையப்போகின்றோம்...???

  • கருத்துக்கள உறவுகள்

ஜ.டி நிறுவனங்களில் பணிபுரிவோர் மற்றும் தொழில் நுட்பக் கல்லூரி மாணவர்கள் சட்டத்துறை மாணவர்கள் தங்கள் மடிக்கணணிகளில் ஈழத்தமிழர் படுகொலை பற்றிய படங்களை கிராமம் கிராமமாக எடுத்துச்சென்று காட்டி காங்கிரசிற்கு எதிரான பிரச்சாரங்களை மேற்கொண்டிருந்தனர்.அவர்களில் பலரை சந்தித்து உரையாடியிருந்தேன். தன்னலமற்று உழைத்த அந்த மாணவர்களிற்கும் நன்றிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

திமுக மற்றும் காங்கிரஸ் ஊடக, காடைக் கும்பல் மற்றும் பொலிஸ் அடக்குமுறைகள் மத்தியிலும் மற்றும் பல்வேறு அச்சுறுத்தல்கள் மத்தியிலும் நாம் தமிழர் என்ற இன உணர்வோடு ஈழத்தமிழரின் துயரை வேட்கையை தாய் தமிழக மக்களிடம் எடுத்துச் சென்ற அண்ணன் சீமான் தலைமையிலான நாம் தமிழர் அமைப்பினருக்கும்.. தனது சுய அரசியல் இலாபங்களுக்கு அப்பால்.. இனத் துரோகம் செய்த கலைஞரின் ஆட்சியை.. வீழ்த்த வேண்டும் என்று செயற்பட்ட அண்ணன் வை.கோ போன்ற தன்னலமற்ற தலைவர்களுக்கும்.. விஜயகாந்த் போன்ற தலைவர்களுக்கும்.. தமிழக முக்கிய ஊடகங்களான ஆனந்த விகடன்.. குமுதம்.. நக்கீரன் போன்ற ஊடகங்கள் ஈழத்தமிழரின் துயரை இன்றவரை தமது மக்களிடம் கொண்டு செல்ல உதவியதற்கும்.. பிற இலைமறை காயாக இருந்து இன உணர்வோடு செயற்பட்ட தாய் தமிழக நல்லுள்ளங்கள் மற்றும் மக்களுக்கும்.. அனைத்து தமிழக மக்களுக்கும்.. ஈழத்தமிழரின் துயரையும் ஒரு காரணியாக்கி திமுக - காங்கிரஸ் கூட்டணியை படுதோல்வி அடையச் செய்ததற்காக நன்றி தெரிவித்துக் கொள்கின்றோம்..!

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

சீமான், வைகோ, நெடுமாறன் ஐயா மற்றும் தமிழக உறவுகளுக்கு நன்றிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

காங்கிரசினை கருவருக்க உதவிய ஏனைய மாவட்ட தமிழக உறவுகளுக்கு எமது சிரம் தாழ்ந்த நன்றிகள்... :D:)

5 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணியில் 63 தொகுதிகளை காங்கிரஸ் போட்டியிட்டது. இதில் 5 தொகுதிகளில் மட்டுமே காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. விளவங்கோடு, கிள்ளியூர், குளச்சல், ஓசூர், பட்டுக்கோட்டை ஆகிய தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.

http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=53899

டிஸ்கி:

இதில் ஒசுரு கன்னடா ஒக்கலிகா கூட்டம் .. மிகுதி தோழர் வேலவன் சொன்னது போல கேரள எல்லையோர கூட்டம் .. சைடு கேப்பில் பட்டுக்கோட்டை.... எனக்கு என்னவோ நந்தி குறுக்கவந்தது போல இருக்கிறது...எலக்டார்னிக்கு வாக்கு மெசினில் ஏதோ குளறுபடி நடந்து போட்ட்டுது :(

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

இந்த வீழ்ச்சி கருநாநிதிக்கான விழ்ச்சியாக மட்டும் இருந்து விடாமல் எம் இனத்தை அழிக்க துணைநிண்ட அனைவரினதும் வீழ்ச்சியாக எண்ணி அனைவரும் ஒன்றுபட்டு தமிழினத்துக்கான விடுதலையை வென்றெடுப்போம்...

ஒன்றுபட்ட தமிழக மக்களுக்கு வாழ்த்துக்கள்...

தமிழகம் , தமிழீழம் என்றில்லாமல் தமிழகத்தமிழீழமக்களாய் நாம் அனைவரும் ஓன்றிணைவோம்...

நம்பிக்கை என்ற நுலை தவிர நாம் பற்றி பிடிக்க இப்போது ஏதும் இல்லை..............

தேர்தல் முடிவுகள் உங்கள் கைகள் எங்களை பற்றுவதாக ஒரு உணர்வை தருகின்றது! நன்றி

ஈழத் தமிழர் பிரச்னையில் திமுக - காங்கிரஸ் கட்சிகள் செய்த அப்பட்டமான துரோகத்திற்கும், தமிழக மீனவர்களை காக்கத் தவறியதற்கும், இந்தியாவின் மிகப் பெரிய ஸ்பெக்ட்ரம் ஊழலைச் செய்ததற்கும் எல்லாவற்றிற்கும் மேலாக குடும்ப ஆட்சியை நிலைநிறுத்தச் செய்யப்பட்ட முயற்சிக்கும் சரியான பாடத்தினை மக்கள் கற்பித்திருக்கிறார்கள்.சீமான், வைகோ, நெடுமாறன் ஐயா மற்றும் தமிழக உறவுகளுக்கு நன்றிகள்.

தமிழக உறவுகள் அனைவருக்கும் நன்றிகள்.

ஏதோ ஒரு சின்ன மகிழ்ச்சி.

கோடான கோடி நன்றிகள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.