Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்க் களத்தின் எதிர்காலம் உங்கள் கையில்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கருத்து கந்தசாமியும். அகூதாவும் என்ன சொல்ல வாறீங்கள் என்ரை மர மண்டைக்குள்ளை ஏறேல்லை.

icash எவ்வளவு நம்பிக்கைத் தன்மை வாய்ந்தது? தனக்குப் பிடித்தவருக்கு icash கொடுக்க சந்தர்ப்பம் தான் அதிகம் என நினைக்கின்றேன். :o

அல்லது உங்களது icash தவறாக விளங்கி விட்டேனோ தெரியாது. அப்படி இருந்தாலும்.... இந்த தளத்தை அல்லும், பகலும் பயங்கர மன உளைச்சலில் கொண்டு நடத்தும் மோகன் அண்ணாவிற்கு, சல்லிக் காசு கிடைக்குமா?

Edited by தமிழ் சிறி

  • Replies 53
  • Views 4.6k
  • Created
  • Last Reply

கருத்துக்கள உறவுகளுக்குப் பொறுப்புஉணர்வு வரவேண்டுமானால் சந்தா அவசியமே. யாவரும் பங்களிகளானல் மட்டுமே யாழைக் காப்பற்றமுடியும் நான் காசு கட்ட விரும்புகின்றேன்.ஆகக் குறைந்தது 10 யூரோக்கள் கட்டவேண்டய விதியை நிர்வாகம் கொண்டு வரவேண்டும் விரும்பியர்கள் அதறகு கூடிய தொகையை வருடத்தில் 4-5 தடவையாக பிரித்துக்கட்டலாம் மோகனது சுமையையும் நாங்கள் சுமப்பது அவசியம். தாயகத்து உறவுகளுக்கு சந்தா விடையத்தில் சிறிது சலுகை காட்டலாம். இது எனது கருத்து. :):):)

... நாராயணா ... செய்ய வேண்டியதை, உடனடியாக, காலம் தாழ்த்தாது செய்ய வேண்டும்! .. நான் இருப்பேனோ, இல்லையோ? என் பங்கை நிச்சயம் செய்வேன் ... இதை அன்றிலிருந்து இன்றுவரை மோகனுக்கும் சொல்லி வருகிறேன்!

... ஒருவனின் பணத்தில் ... எம் பொழுது போக்குகள், விளம்பரங்கள். சண்டை சச்சரவுகள் செய்தது போதும்! ... இனி பகிர்ந்து விட்டு செய்யலாம்!

  • கருத்துக்கள உறவுகள்

சந்தா கட்ட வேண்டும் என்டால் 2,3 ஜடி வைத்திருப்பவர் பாடு திண்டாட்டம் தான் :lol: :lol: :lol:

  • கருத்துக்கள உறவுகள்

சந்தா கட்ட வேண்டும் என்டால் 2,3 ஜடி வைத்திருப்பவர் பாடு திண்டாட்டம் தான் :lol: :lol: :lol:

நீங்கதான் சரியான ஆள், சந்தா நீங்க கட்ட போறீங்க என்று செல்லிறதைவிட, மற்றவங்க எப்படி கஷ்டப்பட போகிற என்று கவலைபடுறீங்க, நல்ல கவலைங்க இந்த நேரத்தில

எனக்கு படுறது என்னானா...............

மிஸ்டர் மோகன் வெளிப்படையாய் ,...

இன்றைய திகதியில் இந்த கருத்துக்களம் எதிர் நோக்கும் பிரச்சினைகள் என்ன?

இந்தநெருக்கடியை, சமாளிக்க இந்த களத்தோட உறுப்பினர்களிடம் இருந்து அவர் எதிர்பார்க்கும் ஒத்தாசை என்ன என்பதை அறிவிப்பதுதான்!

! அந்த ஒன்றே ஒரு கள நிர்வாகி எதிர் கொள்ளும் சிரமங்களை , கவலையோடும், அக்கறையோடும் பிறர் நோக்கவைக்கும்!!

அதை விடுத்து, ஏதோ யாழ்களத்தின் உத்தியோக பற்றற்ற பேச்சாளர்கள் மாதிரி , சக கள உறுப்பினர்களே ,ஆவேசப்படுவதும் ,ஆதங்கப்படுவதும் செயற்படுவதும்...........

என்னமோ மோகனுக்கு தாம்தான் நெருக்கமானவர்கள் ,அவர் கஸ்டம் தமக்கு மட்டுமே புரியும், எங்கிற பாணியில் காட்டிக்கொள்ள முற்படுவதும்...

பிற கருத்தாளர்களை சினமூட்டும் அதை வேளையில் , நாமென்ன அந்நியமா என்றும் எண்ணவைக்கும்!

இதன் பலாபலன்..?

உறுப்பினர்கள் தமக்குள்தாமே மோதி ...விலகிபோய் ,இந்த களம் பலவீனப்படவே வழி செய்யுமன்றி ,பலப்படுவதற்கான எத்தனங்கள்.................மிக அருகலாகவே தென்படும்!!

  • கருத்துக்கள உறவுகள்

இதன் பலாபலன்..?

உறுப்பினர்கள் தமக்குள்தாமே மோதி ...விலகிபோய் ,இந்த களம் பலவீனப்படவே வழி செய்யுமன்றி ,பலப்படுவதற்கான எத்தனங்கள்.................மிக அருகலாகவே தென்படும்!!

ஆமாம். இப்படித்தான் கடந்த 13 வருடங்களாக நடந்து களம் பலவீனமாகத் தற்போது இருக்கின்றது <_<

உறுப்பினர்கள் தமக்குள் மோதுப்படுவதும், விலகிப் போவதும் சாதாரணம். இதெல்லாம் வளர்ச்சியைக் கட்டுப்படுத்துவதில்லை.

மாற்றங்களை உள்வாங்கி காலத்திற்கேற்பதாய் புதுப்பித்துக்கொள்வதுதான் நீண்டுநிலைக்க உதவும்.

.யாழ் பிழையானவர் கைகளில் செல்லக் கூடாது என்பதற்காகவே அதனை அவர் விற்கவில்லை.

சிட்னியில் ஒரு வானொலியை கூட பிழையானவர்கள் வாங்கி போட்டினமாம் என்று கதை அடிபடுகுது....அங்கேயும் உதே காசுப்பிரச்சனையாம் உடனே பிழையானவர்கள் உதவிக்கரம் நீட்டினவயளாம்...ஒரு கொண்டிசன் .பிழையானவர்களை இடக்கிட பேட்டி எடுத்து ஒலிபரப்ப வேண்டும் என...

ஆமாம். இப்படித்தான் கடந்த 13 வருடங்களாக நடந்து களம் பலவீனமாகத் தற்போது இருக்கின்றது <_<

உறுப்பினர்கள் தமக்குள் மோதுப்படுவதும், விலகிப் போவதும் சாதாரணம். இதெல்லாம் வளர்ச்சியைக் கட்டுப்படுத்துவதில்லை.

மாற்றங்களை உள்வாங்கி காலத்திற்கேற்பதாய் புதுப்பித்துக்கொள்வதுதான் நீண்டுநிலைக்க உதவும்.

ஆக.... நானு கீழே எழுதிமுடித்த இரண்டுவரிகள்தான் தெரியுதா? மேலே என்ன எழுதி இருக்கேன்னு பார்க்கவே இல்லியா? முழுமையா கதைய படிக்காம... கிளைமாக்ஸ்ல குறை பிடிகாதீங்க ...நக்கீரரே!

நீங்கள் இரண்டு முறை சந்தா கட்ட வேண்டும் ஜில் :)

அப்ப மற்ற இரண்டும் யாராம் கட்டுறது :D:D

ஆமாம். இப்படித்தான் கடந்த 13 வருடங்களாக நடந்து களம் பலவீனமாகத் தற்போது இருக்கின்றது <_<

உறுப்பினர்கள் தமக்குள் மோதுப்படுவதும், விலகிப் போவதும் சாதாரணம். இதெல்லாம் வளர்ச்சியைக் கட்டுப்படுத்துவதில்லை.

மாற்றங்களை உள்வாங்கி காலத்திற்கேற்பதாய் புதுப்பித்துக்கொள்வதுதான் நீண்டுநிலைக்க உதவும்.

அது தானே கொஞ காலத்துக்கு முன் சுதந்திரபறவையாக பறந்தே யாழை ஒன்றும் பன்ன முடியவில்லை :D :D :D

  • கருத்துக்கள உறவுகள்

ஆக.... நானு கீழே எழுதிமுடித்த இரண்டுவரிகள்தான் தெரியுதா? மேலே என்ன எழுதி இருக்கேன்னு பார்க்கவே இல்லியா? முழுமையா கதைய படிக்காம... கிளைமாக்ஸ்ல குறை பிடிகாதீங்க ...நக்கீரரே!

இரண்டு வரிக்கு மாத்திரம்தான் பதில் எழுதினால் மற்றையவற்றில் குறைபிடிக்கவில்லை என்றும் அர்த்தம் கொள்ளலாம் ^_^

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் நண்பர்களே.... நீங்கள் குத்துமல்லுப்பட்டு ஏதாவது முடிவெடுங்க... நின்று எழுத நேரமில்லாமல் இருக்கிறது. நல்ல விடயங்களுக்கு நம்முடைய ஆதரவு உண்டு.

  • கருத்துக்கள உறவுகள்

என்னுடைய ஆதரவும் நிசிசையம் உண்டு.

அவ்வவப்போது மூடப்பட்ட திரிகளை நாங்கள் அடிக்கடி பார்த்துக்கொண்டு அதில் விட்டதவறுகளை தவிர்த்தாலே களம் நன்றாக அமையும்.

தங்களை தாமே ஏமாற்றும் பலர் வந்து தமிழனின் விடிவுபற்றி கொட்டுவதால் ஆக்கபூர்வமான விடயங்களும் அடிபட்டுப்போகின்றது.2,3 அடையாளத்தில் வருபவர்களை முதலில் துலைக்கவேண்டும்.

நிர்வாகம் என்ன நினைக்கின்றதொ அதற்கு நானும் சப்போட்.தினசரி மேயும் தளங்களில் யாழும் ஒன்று அதை மிஸ் பண்ணமுடியாது?

  • கருத்துக்கள உறவுகள்

தங்களை தாமே ஏமாற்றும் பலர் வந்து தமிழனின் விடிவுபற்றி கொட்டுவதால் ஆக்கபூர்வமான விடயங்களும் அடிபட்டுப்போகின்றது.2,3 அடையாளத்தில் வருபவர்களை முதலில் துலைக்கவேண்டும்.

நிர்வாகம் என்ன நினைக்கின்றதொ அதற்கு நானும் சப்போட்.தினசரி மேயும் தளங்களில் யாழும் ஒன்று அதை மிஸ் பண்ணமுடியாது?

உண்மைதான் இந்த ஐயாவின் ஆக்கபூர்வமான ஆக்கங்களை யாரும் பாராட்டுவதில்லை.................. இது கவனத்தில் எடுக்கபட வேண்டும்.

வணக்கம் நண்பர்களே.... நீங்கள் குத்துமல்லுப்பட்டு ஏதாவது முடிவெடுங்க... நின்று எழுத நேரமில்லாமல் இருக்கிறது. நல்ல விடயங்களுக்கு நம்முடைய ஆதரவு உண்டு.

யாழைப்பூட்டுறதை சொல்லுறீங்கள் போல? :D

என்னமோ ஒவரு நாளும் சயிட் அடிக்கிற பெட்டையை மிஸ் பன்னுறது போல சொல்லுறார் அர்ஜீன் அண்ணை. :D

சில தலைப்புகளின் கீழ் விவாதியுங்கள்.

1. யாழை தொடர்ந்து நிலைக்க செய்தல்.

2..யாழின் நோக்கை பாதுகாத்தல்.

3. யாழில் தரத்தை ஏற்படுத்தல்.

4. மோகன் அண்ணாவுக்கு பணம் கிடைக்க உதவுதல்.

5.மோகன் அண்ணாவுக்கு நி்ர்வாக உதவி அளித்தல்.

சில தலைப்புகளின் கீழ் விவாதியுங்கள்.

1. யாழை தொடர்ந்து நிலைக்க செய்தல்.

2..யாழின் நோக்கை பாதுகாத்தல்.

3. யாழில் தரத்தை ஏற்படுத்தல்.

4. மோகன் அண்ணாவுக்கு பணம் கிடைக்க உதவுதல்.

5.மோகன் அண்ணாவுக்கு நி்ர்வாக உதவி அளித்தல்.

?????????????????????????????????????????????????????????????????????????.............................................................................................................................................

  • கருத்துக்கள உறவுகள்

நிர்வாக உதவி அதெல்லாம் நான் செய்வன்.. போக இந்த உட்குழுக்கள் .. இனியபாரதி அண்டார்டிக்கா பாரதி .. எவனவென் என்ன என்ன வேலை செய்கிறான்..அதை பற்றிய டிடெல்ஸ் தேவை.. இங்க நானெல்லாம் செரைக்கிறதுக்கா 8 வது முதல் 2011 வரை இந்த துறையில் வேலை செய்கிறம்..

டிஸ்கி:

வருமானம் வரவேணுமென்றால் முகப்பை மாற்றவேணும் .. தமிழ்நாட்டில் களத்தினை பாதி கொண்டு சென்றாலே பாதி வருமானம் தேறிடும்... அண்ணா நகரில் 50 பிளாட்டு அண்டார்ட்டிகாவில் 700 பிளாட்டு என மாற்றவேணும்.. ஜெனிலியிய்ம் ஆபீஸ் நடத்தும் (தட்சு தமிழு பெங்களூர்) எப்படி முன்னேறிட்டார்.. ரைட்சைடு விளம்ப்ரம்.. லெப்ட் சைடு விளம்பரம்.. ஒரு லிங்க ஓப்பன் பண்ணும் பொதே எத்தனை பாப்பு அப்பு.. :lol: :lol: :lol:

டிஸ்கிக்கு டிஸ்கி:

இது இந்த எளியவனின் எளிய ஆலோசனை.. ctrl+c ctrl+v செய்வதை விடுத்து தங்கள் நாடுகளில் நடை பெறும் நடப்புகளை தெரியபடுத்துவதற்காக தனியாக ஒரு நிருபர் திட்டம் ஆரம்பிக்கலாம்.. எவன் எவனோ மாணவர் நிருபர் திட்டம் .. புளா சுலாக்கி திட்டம் என ஆரம்பிக்கிறான்.. போக செய்திகளின் ஒட்டுமொத்த தொகுப்பாக ஒரு நடுநிலை இதழ் ஆரம்பிக்கலாம்.. இதழ் ஆரம்பித்து நெட்டில் அப்டேட் செய்வது ஓல்டு பேசன்.. யாழ் பத்திரிக்கை என ஆரம்பிக்கலாம் (இதில் வீணை படத்தினை போட்டால் தான் தமிழ்நாட்டில் வாங்குவான்)..

இங்க கலைஞ்சருக்கு அல்லது சசிகலாவுக்கு ஒண்ணுக்கு வரலண்ணாலும் செய்தியா போடுறான்.. போராட்டம் உலகளாவிய ரீதியில் எடுத்து செல்ல பட்ட பிறகு இங்க மட்டுமே கூடி கும்மியடிப்பதில் பயனில்லை.. தென்னாப்பிரிக்கா தாய்லாந்து மற்றும் மலேசியா அனைத்து நாடுகளுக்கும் கொண்டு செல்லவேணும்..

நம்மட தமிழ் ஆசிரிய இளங்கோவன் இணையம் கற்போம் புக்கு எழுதிக்கார்.. இணையம் கற்போம் வாருங்கள் இது அவரின்ட புக்கு..

அவரிடம் கேட்டேன் ஊரில் இருக்கின்ற எல்லா தமிழ் வெப்சைட்டு அட்ரசையும் குறித்திருக்கார் அந்த புக்கில் ..

http://thatstamil.oneindia.in/art-culture/essays/2010/20-inayam-karpom-books-s-2nd-edition-released.html

ஏனயா யாழ் களத்தினை விட்டு போட்டீர்கள் என ? அவரிடம் சண்டை போட்டது பெரிய கூத்து.. லட்சணம் இந்த அளவில் இருக்கு :wub:

http://muelangovan.blogspot.com/2011/07/blog-post_31.html

இவன் ஜீவி .. நக்கீரன் .. எல்லாம் ஒரே நாளில் பூத்த அல்லகைகள் அல்ல .. தெ னோ த ஸ்டாட்க்ஸ்.. :rolleyes:

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

சாத்தியமோ இல்லையோ ஒருவரின் புதுமையான கருத்துக்களுக்கு ஊக்கம் தரல் வேண்டும். இன்னொருவிதமாக பார்ப்போம், களத்தில் 'reputation' என்று ஒன்று உண்டு. இதில் 1000 எடுப்பவர்களுக்கு ஒரு பட்டம் கொடுக்கலாம்?

அவர்களை யாழ் கருத்துக்கள நிருவாகத்தில் இணைத்துகொள்வதை மோகன் பரிசீலனை செய்யலாம்?

  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

யாழில் வரும் ஆக்கங்கள் தொடர்பில் நீங்கள் முன் வைத்திருக்கும் சில குற்றச்சாட்டுக்கள் ஏற்றுக் கொள்ளக் கூடியவை அல்ல. யாழ் ஆரம்பித்த காலம் தொட்டு எல்லா வயதினரும் உறுப்பினராக இருந்துள்ளனர். இரட்டை அர்த்தக் கதைகள் ஆண்.. பெண் இரு தரப்பாலும் கதைக்கப்பட்டுள்ளன. சினிமா பேசப்பட்டுள்ளது. கொசிப் கதைக்கப்பட்டுள்ளது. ஏன் தனிநபர் வசைபாடல்கள் நிகழ்ந்துள்ளன. ஏன் நீங்கள் யாழோடு தீவிரமாக இருந்த காலத்திலும் பக்கம் பக்கமாக அரட்டை அடித்திருக்கிறீனம்.. அதற்காக யாழ் அன்று போல் இன்றில்லை என்பது ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒன்றல்ல.

காலப் போக்கில் இளைஞர்களாக ... இளைஞிகளாக பதிந்தவர்கள்.. வாழ்க்கையில்.... செட்டிலாகி விட்டார்கள். ஒரு சிலரைத் தவிர வேறு பலர் இங்கு இப்போது இல்லை. ஆனால் அந்த நடுத்தர வயதுக்காரர்கள் அப்போதும் போல இப்போதும் இருக்கினம். அவர்களே இந்த யாழைக் கொண்டும் நடத்தினம். ஒரு சிலரைத் தவிர..!

என்னைப் பொறுத்தவரை யாழ் கருத்தியல் ரீதியாக (கள உறுப்பினர்களின் எண்ணிக்கை சார்ந்தல்ல) தொய்ந்திருப்பதாகத் தெரியவில்லை. யாழில் வெறும் காதல் கவிதைகள் குவிந்த காலம் போய் இன்று பலதரப்பட்ட விடயங்களும் பதியப்படுகின்றன. கடந்த ஆறு மாத காலத்துள்.. என்னால் மட்டும் சுயமாக பதியப்பட்ட பல ஆக்கங்களை இனங்காட்ட முடியும். என்னைப் பொறுத்த வரை யாழில் இணைந்த ஆரம்ப காலத்தில் எழுதக் கிடைக்காத சில விடயங்களை இப்போ எழுதச் சந்தர்ப்பம் கிடைத்திருப்பதாக உணர்கிறேன்.

யாழின் ஆரம்ப காலத்தில்.. ஒருவர் எழுத்துப் பிழை விட்டாலே.. அவரை கிண்டலடித்து வெளியேற்றிய நிகழ்வுகள் உண்டு. இன்று அப்படி ஒரு நிலையில்லை.

யாழின் இடைக்காலத்தில் இள வயதினரின் அரட்டை கோலோஞ்சி இருந்தது.

இன்றைய உறவுகள் முன்னைய தவறுகள் பலவற்றை திருத்தி.. அவற்றைக் கடந்து நிற்கிறார்கள். இரட்டை அர்த்தம் பொதிந்த வசனங்கள் என்ன.. முழுத் தூசணத்தோடு எழுதப்பட்ட தனிமடல்களைக் கூட.. அதுவும் யாழ் கள பெண் பெயரில் இருந்த உறுப்பினர்கள்.. எந்த நியாயமும் இன்றி எழுதி அனுப்பி இருந்த கேவலங்கள் கூட முன்னர் நடந்துள்ளன.

ஆகவே காலத்தை ஒப்பிட முடியாது. நாங்கள் எப்படி செயற்படுறம் என்பதில தான் யாழின் பயன்படு திறன் தங்கியுள்ளது.

நீங்கள் மற்றவர்கள் மீது வைக்கும் ஒரு குற்றச்சாட்டின் அடிப்படையில் வினவுகிறேன்.. நீங்கள் யாழில் இணைந்ததில் இருந்து உங்களின் சுய ஆக்கமாக யாழுக்காக பதிந்த ஒரு பதிவை கள உறவுகளுக்கு இனங்காட்ட முடியுமா..??! அதற்காக நீங்கள் திறமையற்றவர் என்று கூற முடியாது. அதேபோல் தான் மற்றவர்களுக்கும் இருக்கலாம்.

யாழில் உள்ள ஒவ்வொரு உறவிற்கும் ஒவ்வொரு தனித்தன்மை இருக்கக் கூடும். அதனை நாம் அங்கீகரிக்க வேண்டும். அவர் இவர் போல இல்லை.. என்ற ஒப்பீடு தவறானது. யாழ் அப்போது போல இப்போ இல்லை என்ற ஒப்பீடும் தவறானது. யாழ் எப்போதும் நல்லவற்றை காவ வேண்டும் என்ற எண்ணமே சிறப்பானது.

மற்றும்படி.. உங்களையோ.. அல்லது எவரையுமோ குறை சொல்ல வேண்டும் என்ற நோக்கில் இதனை பதிவிடவில்லை. எண்ணத்தில் உதித்ததை சொல்ல முற்பட்டுள்ளேன். இதற்காக என்னோட சண்டைக்கு வாறதில்லை.

நன்றி. smile.gif

இத்தலைப்பை மீள எடுத்தமைக்கு வருந்துவதோடு, இதைத் தொடர வேண்டும் என்பது என் விருப்பமும் அல்ல. ஆனாலும் நான் சொன்ன கருத்தை நீங்கள் புரிந்து கொள்ளவில்லையோ என எண்ணத் தோன்றுகின்றது.

பொதுவான கருத்துக்களத்தில் எழுதப்படுகின்ற ஆக்கங்களின் விதம் பற்றிக் கதைக்கின்றபோது ஆக்களின் அளவு மிகவும் குறைவடைந்து வெறுமனே அரட்டைகளும், கொடுந்தமிழால்(பேச்சுத் தமிழ்) நிரப்பப்படுகின்ற கருத்துக்களும் தமிழின் எதிர்காலத்திற்கு நல்லதல்ல என்பது தான் என் கருத்து. யாரையும் தனிப்பட்டரீதியில் மனதில் வைத்து நான் சொல்லவில்லை.

மேலும் நான் ஆரம்பகால உறுப்பினரும் அல்ல. நானும் இடைநிலையில் இணைந்தவனே. தவிர நான் சிறந்த கருத்தாளனோ, ஆக்கங்கள் தருவனோ கிடையாது. அதைச் சொல்வதில் எந்தவித தயக்கமும் கிடையாது. அன்றும் இருந்தேன். இன்றும் இருக்கின்றேன். நானும் ஆக்கங்கள் தர முடியாதிருப்பதால் தான் சொன்னேன். மோகன் அண்ணா முடிவு எடுத்திருப்பின் அது சரியானது என்று.

ஒரு காலத்தில் பேசாப்பொருள் என்ற அங்கம் வந்தபோது, அதற்கு நிறையவே வாதம் செய்திருந்தோம். பெண்களின் உடலை வர்ணிக்க, விவாதிக்க அத்தலைப்பில் இடம் கொடுக்கக் கூடாது என்று. எனவே அப்படியான விடயங்கள் அன்றும் இன்றும் இருந்தாலும், இன்று சிலர் எத்தலைப்பு எடுத்தாலும் அதில் பெ;ணைப் பற்றி ஏதாவது அசிங்கமான சிந்தனையோடு தான் எழுதுவது போலத் தோன்றுகின்றது.

யாழ்களம் என்பது கருத்தாளர்களால் மட்டும் நிரப்பப்படாமல் பல பார்வையாளர்களாலும் நிரப்பப்படுகின்றது. ஒவ்வொரு கருத்தாளனும் தங்களின் கருத்துக்கள் பிறரால் படிக்கப்படுகின்றதை உணர்ந்து சமூகப்பொறுப்போது எழுத வேண்டும் என ஆவல் கொள்வதில் என்ன தவறு.

மற்றும்படி இங்கே எவரையும் தனிப்பட்டவிதத்தில் கருத்தில் கொண்டு எழுதப்படவில்லை. :-)

சிறித்தம்பி! தூயவன் பாலியல் சம்பந்தமாக எதுவும் கதைக்க மாட்டார்.ஆனால் இதர சம்பவங்கள் அனைத்திலும் மகாகெட்டிக்காரர்?

அதிலும் தனிமனிதர் தாக்குதலுக்கு இவரிடம் எல்லோரும் பாடம் எடுக்கலாம்.மட்டுறுத்தினரை கேட்டால் வண்டவாளம் தண்டவாளம் எல்லாம் வரும். laugh.gif

நல்லது குமாராமி.

மேலும் எனது கெட்டித்தனத்தை கண்டு பிடித்தமைக்கும் மிக்க நன்றிகள்.

என்னுடைய வண்டவாளம், தண்டவாளத்தை மட்டுனரிடம் பரிந்துரைந்து வெளியிட ஆவன செய்யுமாறு உங்களைக் கேட்டுக் கொள்கின்றேன். எனக்கும் அறிய ஆவலாக உள்ளது.

இதில் தனிமனித தாக்குதல் இல்லை என்கின்றீரா தமிழ்சிறி.

  • கருத்துக்கள உறவுகள்

இன்று... அவர் வேறொரு பதிவில், உங்கள் மீது நடத்திய தனி மனித தாக்குதலை பார்த்தேன் குமாரசாமியண்ணை.

ஒரு பானை, சோத்துக்கு.... ஒரு சோறு பதம் என்று... சும்மாவா சொன்னார்கள்.

ரேக் இற் ஈசி அண்ணை. நம்ம பையன் தான் தூயவன். என்ன குழப்பமோ... ஆரறிவர். smile.gif

உண்மை தான். ஆரம்பகாலங்களில் இருந்தே திரு.குமாரசாமி அவர்களோடு ஒருமித்த கருத்தை நான் கொண்டிருந்தில்லை. அவரிடம் எவ்வித தலைப்பு சம்பந்தப்பட்ட வாதங்களையும் செய்யாதபோதும், அவருடைய சீண்டல்கள் , மற்றும் பாலியல் சிந்தனை கொண்டவர் போன்ற தோற்றப்பாடு பல தடவை எரிச்சலைத் தந்திருந்தன. இது என்னுடைய பிழையான எடுகோளாக இருக்கலாம். ஆனால் எதிர்காலத்தில் இவற்றை அவதானித்தால் புரியலாம் என நினைக்கின்றேன்.

மற்றும்படி அவரை நான் நேரில் பார்த்ததுமில்லை. அவருடைய தனிப்பட்ட வாழ்க்கைள், நடவடிக்கைள் பற்றி அறிந்தவனுமல்ல. பாதிக்கப்பட்டவனுமல்ல.

  • கருத்துக்கள உறவுகள்

தம்பி தூயவன் தொடர்ந்து எழுதுங்கள்.

சரிபிழைகளை புரிந்து உணர்ந்தது திருத்திக்கொள்ளலாம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.