Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

படிக்கும் அனுபவ பாட‌ங்கள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

என்ட வாழ்க்கையில் நான் கண்ட,கேட்ட,நடந்த மறக்க முடியாத சம்பவங்களை தொடராக எழுதப் போறேன்.நீங்களும் உங்கள் வாழ்க்கையில் நடந்த சுவாரசியமான சம்பவங்களை எங்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள்.

சம்பவம் 1:

அப்பாவின் வேலை மாற்றம் காரணமாக நாங்கள் அந்த புது ஊருக்கு குடி பெயர்ந்தோம்.அப்பா முதலே அந்த ஊருக்கு வந்து வீடு எல்லாம் இருப்பதற்கு பார்த்து வைத்து விட்டு வந்த படியால் நாங்கள் நேரே அந்த வீட்டுக்கு குடி பெயர்ந்தோம்.அந்த வீடு நகரத்தின் மையத்தில் இருந்தது.முக்கியமான பாடசாலைகள்,அரச வைத்தியசாலை எல்லாம் பக்கத்தில் இருந்தது.நாங்கள் இருந்த வீதியில் அண்ணாமார் தங்கி படிக்கும் விடுதி இருந்தது.அந்த விடுதியின் இரு வீடுகள் தள்ளி ஒரு அம்மாவும் அவர‌து வயதிற்கு வந்த மகளும் இருந்தார்கள்[அந்த அக்கா அப்போது கா.பொ.த சாதர‌ண தர‌ம் படித்துக் கொண்டு இருந்தார்]தகப்பன் அந் நேர‌ம் வெளி நாட்டில் இருந்தார்.அந்த அக்கா அழகும்,அட‌க்கமும்,அமைதியும் வாய்ந்தவர்.வீடு விட்டால் பாட‌சாலை,பாட‌சாலை விட்டால் வீடு என இருப்பார் ஆனால் அக்காவின் அம்மா மகள் பாட‌சாலைக்குப் போன பிறகு வீதியில் வந்து நின்று கொண்டு ஊரில் உள்ளவர்களை பற்றி உள்ளதையும்,இல்லாததையும்,பொல்லாததையும் கதைப்பது தான் வேலை.பொறுத்துப் பார்த்த அண்ணாமார் அந்த அம்மாவிற்கு பாட‌ம் படிப்பிக்க வெளிக்கிட்டாங்கள்...இர‌ண்டு கிழமையால் பார்த்தால் பாட‌சாலைக்கு போன அவவுடைய மகள் திரும்பி வீட்டுக்கு வர‌வில்லை அவ பதறி அடிச்சுக் கொண்டு தேட‌ வெளிக்கிட‌க்குள்ள தான் விடுதியில் இருந்த ஒரு அண்ணாவோடு அந்த அக்கா வீட்டை விட்டு ஓடி விட்டார் என்ட‌ விசயம் அவ்வுக்கு தெரிய வருகுது.அவவுக்கு பாட‌ம் படிப்பிக்கிறதிற்காக அந்த அண்ணாமார் தங்களுக்கு இருந்த ஒரு அண்ணாவை அந்த அக்கா மீது காதல் வலை வீச‌ வைத்து இழுத்து இட்டு ஓட‌வும் செய்திட்டாங்கள்.என்ன அழுது என்ன பிர‌யோச‌னம் ஓடின மகள் திரும்பி வர‌வில்லை.

பி;கு இத்தால் அறிய தருவது யாது என்டால் ஊரான் வீட்டுப் பிள்ளையைப் பற்றி எதாவது தேவையில்லாமல் கதைத்தால் எங்கட‌ வீட்டுப் பிள்ளைகளுக்கும் இது தான் நட‌க்கும் ^_^

தொட‌ரும்...

நன்றாக இருக்கின்றது . தொடர வாழ்துக்கள் . இதை ஓளவையாரும் ஆத்திசூடில சொல்லியிருக்கின்றா என நினைக்கிறன் . ஆனாலும் இந்த ஆத்திசூடி நன்றாக இருக்கின்றது :) :) :) .

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள், ரதி!

அனுபவங்களின் தொகுப்புத் தானே, வாழ்க்கை!

  • கருத்துக்கள உறவுகள்

Quote: "இர‌ண்டு கிழமையால் பார்த்தால் பாட‌சாலைக்கு போன அவவுடைய மகள் திரும்பி வீட்டுக்கு வர‌வில்லை அவ பதறி அடிச்சுக் கொண்டு தேட‌ வெளிக்கிட‌க்குள்ள தான் விடுதியில் இருந்த ஒரு அண்ணாவோடு அந்த அக்கா வீட்டை விட்டு ஓடி விட்டார் என்ட‌ விசயம் அவ்வுக்கு தெரிய வருகுது.அவவுக்கு பாட‌ம் படிப்பிக்கிறதிற்காக அந்த அண்ணாமார் தங்களுக்கு இருந்த ஒரு அண்ணாவை அந்த அக்கா மீது காதல் வலை வீச‌ வைத்து இழுத்து இட்டு ஓட‌வும் செய்திட்டாங்கள்"

இது காதல் இல்லை இருவரினதும் காமப் பசி, தொடருங்க ரதி

நல்லா நொந்து நூலாகி தான் இருக்கிறியள் போலிருக்கு ,

இன்னும் என்னவெல்லாம் வரபோகுதோ ?

ம்ம்ம்ம்ம்ம்

Edited by நேற்கொழு தாசன்

  • கருத்துக்கள உறவுகள்

ரதி ...தொடருங்கோ...நல்லாய்தான் கதை போகுது

  • கருத்துக்கள உறவுகள்

ரதி இப்பதான் பச்சை வந்திது, தொடர ஒரு பச்சை

நாம் வாழ்வில் சந்திக்கின்ற,பார்க்கின்ற சம்பவங்களிலிருந்து நிறையவே பட்டறிந்து கொள்ள வேண்டியிருக்கின்றன. அனுபவங்கள் சொல்லித் தரும் பாடங்கள்தான் வாழ்க்கையின் எதிர்காலங்களை தெளிவோடு கடப்பதற்கு வழிகாட்டுகின்றன.

மிக்க நன்றி ரதி அக்கா! தங்களின் ஆக்கங்கள் எங்களுக்கும் ஒரு பாடமாக அமையட்டும்!

வாழ்த்துக்கள்! :)

சம்பவங்கள் தொடரட்டும். பகிர்வுக்கு நன்றி ரதி.

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வு தொடரட்டும் நன்றி ..........

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எல்லோரது கருத்துப் பகிர்வுக்கும்,உற்சாக ஊட்டலுக்கும்,ஊக்கத்திற்கும் நன்றி.

தொடர்ந்து எழுதவம்,உங்கள் அனுபவங்களையும் கேட்பம்.

பிற்குறிப்புடன் எனக்கு உடன்பாடில்லை.முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பதெல்லாம் இப்போ சரிவராது .இது அனுபவம் தந்த பாடம்.

  • கருத்துக்கள உறவுகள்

ரதி பாராட்டுக்கள்

சின்னதாக ஒரு விடயம்.... அந்தத் தாயார் மற்றவர்களைப்பற்றி பொல்லாப்பு கதைப்பதை.... இன்னும் சிறிது மெருகேற்றியிருக்கலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லோரது கருத்துப் பகிர்வுக்கும்,உற்சாக ஊட்டலுக்கும்,ஊக்கத்திற்கும் நன்றி.

நானும் உங்களுக்கு உற்சாகமூட்டுகின்றேன்.tea_with_sp.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தொடர்ந்து எழுதவம்,உங்கள் அனுபவங்களையும் கேட்பம்.

பிற்குறிப்புடன் எனக்கு உடன்பாடில்லை.முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பதெல்லாம் இப்போ சரிவராது .இது அனுபவம் தந்த பாடம்.

ஏன் அண்ணா அப்படி சொல்றீங்கள் இப்ப எல்லாம் உடனே தண்டனை கிடைக்கா விட்டாலும் காலங்கள் சென்ற பிறகாவது தண்டனை கிடைத்தே தீரும் என்பது எனது நம்பிக்கை.

ரதி பாராட்டுக்கள்

சின்னதாக ஒரு விடயம்.... அந்தத் தாயார் மற்றவர்களைப்பற்றி பொல்லாப்பு கதைப்பதை.... இன்னும் சிறிது மெருகேற்றியிருக்கலாம்.

நன்றி சகாரா அக்கா உங்கள் அறிவுரைக்கு நான் எல்லாம் ஒரு கத்துக்குட்டி என்னால் முடிந்த அளவு நன்றாக எழுத முயற்சி செய்கிறேன்.

அர்ஜீன் அண்ணா,சகாரா அக்கா,கு.சா அண்ணா உங்கள் ஆதர‌வுக்கும்,வருகைக்கும் நன்றி

இது நல்ல தலைப்பு ரதி! தொடருங்கள் ரதி. எங்கே ங்கள் யாழ்கள வல்லுனர்கள் சகாரா, சாத்,கோமகன் (ஒ ... இவர் எழுத வெளிக்கிட்டால் ஒரு பந்தி எழுத ஒரு வருடம் எடுக்கும்) மற்றும் அர்ஜுன் வாங்கோ :)

இது நல்ல தலைப்பு ரதி! தொடருங்கள் ரதி. எங்கே ங்கள் யாழ்கள வல்லுனர்கள் சகாரா, சாத்,கோமகன் (ஒ ... இவர் எழுத வெளிக்கிட்டால் ஒரு பந்தி எழுத ஒரு வருடம் எடுக்கும்) மற்றும் அர்ஜுன் வாங்கோ :)

எல்லோரும் வளர இடம் கொடுக்கவேணும் எண்ட நல்ல நோக்கத்தில , கொஞ்சம் ஒதுங்கி இருக்கிறம் ஹி ஹி ஹி ஹி :D :D :D .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்கள் அனுபவம் அருமை.

  • கருத்துக்கள உறவுகள்

ரதி, உங்கள் அனுபவங்களை தொடர்ந்து எழுதுங்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு சின்ன வயசில இருந்தே பிரயாணம் பன்றது அதுவும் பேருந்தில்,புகையிரத்தில் பிரயாணம் பண்றது என்டால் ரொம்ப பிடிக்கும்[அந்த வயசில பிளேனில் பிரயாணம் செய்வதை நினைத்துப் பாத்து இருப்போமா என்ன]...நான் சின்ன வயதில் யாழில் இருக்கும் போது வாடகைக் காரிலும்[என்னைப் பள்ளிக்கு கூட்டிட்டு போன வாடகைக் காரின் சொந்தக்காரர் அத்தோடு அவரே ஓட்டுனர் அவரின் பெயரில் ஒரு முன்னால் ஜனாதிபதி இருந்தார்],யாராவது பெரியவர்களின்ட சைக்கிளிலும் தான் பள்ளிக்கூடம் போறது.

ஒரு நாள் என்னைப் பள்ளி முடிய கூட்டிப் போறதற்கு ஒருவரும் வர முடியாததால் அம்மா என்னை பேருந்தில் தனிய வரச் சொல்லி விட்டார் நானும் பேருந்து நிலையத்திற்கு வந்து சரியான பேருந்தைப் பார்த்து ஏறி விட்டேன்.பேருந்து முழுக்க பள்ளி மாணவ,மாணவிகளால் நிரம்பி வழிந்தது நானும் எப்படா வீடு வரும் என வியர்வை வழிய நெருக்குப்பட்டு கொண்டு நிற்கிறன்.நான் இறங்குமிடம் வந்ததும் மணியை அடிக்க,அடிக்க பேருந்து நிற்காமல் போய் கொண்டு இருக்குது என்னடா நடந்தது ஓட்டினருக்கு காது செவிடோ என்று யோசித்துப் போட்டு கண்டக்டருட‌ம் போய் விச‌யத்தை சொன்னால் அவர் சிரித்துப் போட்டு இந்த பேருந்து விரைவுப் பேருந்தும்மா எல்லா இட‌த்திலையும் நிற்காது நீ முன்னுக்குப் போய் ஓட்டுனருக்கு விச‌யத்தை சொல்லு அவர் பேருந்தை நிற்பாட்டுவார் என்டார்.நான் பதறி அடித்துக் கொண்டு கண்டக்டர் மாமா சொன்ன மாதிரி செய்து தான் பேருந்தை விட்டு இறங்கினேன்.இவ்வளவும் நட‌க்கும் போது பேருந்து என்ட‌ வீட்டை தாண்டி கண தூர‌ம் போய் விட்டது.கண்ட‌க்டர் மாமா நான் இறங்கும் போது சொல்லி விட்டார் இறங்கி மற்றப் பக்கம் போய் நின்று விரைவு வண்டி இல்லாத பேருந்தாகப் பார்த்து ஏறு உன்ட வீட்டுக்கு முன்னால் உள்ள நிறுத்தத்தில் நிற்பாட்டும் என்டார் ஆனால் நான் பயத்தில் பேருந்தில் ஏறாமல் நட‌ந்தே வீட்டுக்கு போய் கொண்டு இருக்கும் சித்தப்பா சைக்கிளில் வந்தவர் என்னைப் பார்த்து திகைத்துப் போய் என்னடி பள்ளிக்கூட‌ம் அங்காலப் பக்கம் இருக்குது நீ இங்காலப் பக்கமாய் வாறாய் எங்கேயடி போயிற்று வாறாய் எனக் கேட்டார் எனக்கோ வெட்கமாய்ப் போய் விட்டது அத்தோட‌ தன்மானப் பிர‌ச்ச‌னை வேற நான் என்ட சிநேகிதின்ட‌ வீட்ட போயிட்டு வாறன் என்று பொய் சொன்னேன். உந்த வயசில சிநேகிதியின்ட‌ வீட்ட தனிய போயிட்டு வாறாயோ எனப் பேசிப் போட்டு சரி வா நான் சைக்கிளிலில் கொண்டு போய் விடுறன் என சொல்ல நானோ ரோச‌க்காரியாச்சே சீச்சி வேண்டாம் நீங்கள் போங்கோ நான் நட‌ந்து போறேன் என சொல்லிப் போட்டு விடு,விடுவென நட‌ந்து வீட்டுக்கு வந்தால் அம்மா என்னைப் பார்த்துக் கொண்டு வீதியில் நிற்கிறார்.சித்தப்பா அம்மாவிட‌ம் எப்படியும் வத்தி வைச்சிருப்பார் என எனக்கு தெரியும் அதனால் நான் வீட்டுக்கு வந்தவுட‌னேயே அம்மாவிட‌ம் நட‌ந்த உண்மையினை அப்படியே சொல்லி விட்டேன்.அம்மா உடனே எல்லாம் இப்படித் தான் கொஞ்சம்,கொஞ்சமாகப் பழக வேண்டும் என்றும் அனுபவத்தில் படித்தால் அதை வாழ்க்கையில் மறக்க மாட்டாய் என புத்திமதி சொன்னார் ஆனாலும் இன்றும் கூட எவ்வளவு அனுபவமிருந்தாலும் வாழ்க்கையில் பல விசயங்களில் கோட்டை விட்டுக் கொண்டு தான் இருக்கிறேன்.

எனக்கு நினைவு தெரிந்து நான் தனிய பேருந்தில் செய்த முதல் பிர‌யாணமே மறக்க முடியாத பிர‌யாணமாகவும் போய் விட்டது...என் வாழ்க்கையை மாற்றிப் போட்ட முதலாவது முக்கிய பிர‌யாணத்தைப் பற்றி அடுத்த தொட‌ரில் எழுதுகின்றேன்.

என் அனுபவத்தை வாசிக்கும் வாச‌கப் பெருமக்களே தயவு செய்து என் எழுத்து தொட‌ர்பாக உண்மையான விமர்சனத்தை முன் வையுங்கள் அதுவே வளரும் என் போன்ற எழுத்தாளர்களை ஊக்குவிக்கும் என்பது என் தாழ்மையான வேண்டுகோள்...நன்றி

ரதி, உங்களுக்கு எதிர்காலத்தில் ஆக்கங்கள் எழுதும் எண்ணம் இருந்தால், இப்பவே எழுத்து நடையை மாற்றப் பழகிக் கொள்ளுங்கள். உங்கள் எழுத்து நடை பேச்சு வழக்கில் அமைந்திருக்கிறது. அதோடு, ஆக்கத்தை எழுதிய பின்பு பலமுறை திரும்ப வாசித்துப் பார்த்தால் சம்பவங்களை இன்னும் அழகாக மெருகூட்டலாம். அதோடு, அழகியல் வார்த்தைகளையும் பயன்படுத்த முயற்சியுங்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ரதி, உங்களுக்கு எதிர்காலத்தில் ஆக்கங்கள் எழுதும் எண்ணம் இருந்தால், இப்பவே எழுத்து நடையை மாற்றப் பழகிக் கொள்ளுங்கள். உங்கள் எழுத்து நடை பேச்சு வழக்கில் அமைந்திருக்கிறது. அதோடு, ஆக்கத்தை எழுதிய பின்பு பலமுறை திரும்ப வாசித்துப் பார்த்தால் சம்பவங்களை இன்னும் அழகாக மெருகூட்டலாம். அதோடு, அழகியல் வார்த்தைகளையும் பயன்படுத்த முயற்சியுங்கள்.

தமிழிச்சி தங்களது உண்மையான விமர்சனத்திற்கு நன்றி...நீங்கள் என்னை இனி மேல் எழுத வேண்டாம் என சொல்கிறீர்களா?...மற்றும் கருத்துக்களை பகிர்ந்து கொண்ட அலைமகள்,அஸ்வினி,நூணாவிலானுக்கும் நன்றி

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் அனுபவங்கள் அருமை, ரதி!

எங்கள் அனுபவங்கள் கொஞ்சம் வித்தியாசமானவை!

எங்களில் எத்தனை பேர் கொழும்புப் பேருந்துகளில், மிச்சக் காசு சிங்களத்தில் கேட்கத் தெரியாமல், எவ்வளவு காசைத் தொலைத்திருப்போம்!

ரதி, நான் குறிப்பிட்டது, நீங்கள் எதிர்காலத்தில் எழுத்தாளராக வரவிரும்புகிறீர்களா அல்லது யாழில் மட்டும்தான் எழுதப் போகிறீர்களா என்று. தொடர்ந்து எழுத எழுதத்தான் எழுத்துக்கள் மெருகேறும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ரதி, நான் குறிப்பிட்டது, நீங்கள் எதிர்காலத்தில் எழுத்தாளராக வரவிரும்புகிறீர்களா அல்லது யாழில் மட்டும்தான் எழுதப் போகிறீர்களா என்று. தொடர்ந்து எழுத எழுதத்தான் எழுத்துக்கள் மெருகேறும்.

நன்றி தமிழிச்சி உங்கள் பதிலுக்கு

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.