Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இரு உதடுகளின் முத்தம் நீங்கிய நாட்கள்: கவிதை நிழலி

Featured Replies

நான் பகுடிக்குத் தான் எழுதினேன் அக்கா கோபிக்க வேண்டாம்[ஸ்மைலி வேலை செய்யவில்லை]

பகிடிக்காதான் எழுனாலும்....... எப்டி நீங்க பப்ளிக்கா ,, சகாரா அக்காவுக்கு சரியா சமைக்க வராது எங்கிற உண்மைய வெளில சொல்லலாம்?

மிக மிக...... நாகரிகமில்லாத கருத்து!! <_<

  • Replies 77
  • Views 18.4k
  • Created
  • Last Reply

என் மகனின் வயது 6

அவனது உணர்வுகள் ஒரு பெரும் கவிதை அல்லது மனோவியல் நாவல்

அதை அவனே பிறிதொரு காலத்தில் எழுத விரும்பினால் எழுதட்டும். தகப்பனாக நான் இருந்தாலும் நான் அவன் அல்ல. அவனது உணர்ச்சிகளை என்னால் ஓரளவுக்கு அறியத் தான் முடியும், உணர முடியாது

எனக்கான கவிதையை நான் எழுதுகின்றேன்

அவனுக்கான கவிதையை அவன் விரும்பினால் ஒரு காலத்தில் எழுதுவான்

விளக்கத்திற்கு நன்றி நிழலி!

சகாரா அக்காவுக்கு சரியா சமைக்க வராது எங்கிற உண்மைய வெளில சொல்லலாம்?

:lol: :lol: :lol:

துணை, குழந்தைகளைத் தற்காலிகமாகப் பிரிந்து ஒரு நாள் இருப்பதே மிகக் கஸ்டம் தான். ஆனால் அதையும் பழக்கிக் கொள்ளத்

தானே வேண்டும்.நல்ல கவிதை! வாழ்த்துக்கள்! 7வது பச்சை.....

இவர்களில் யார் நிழலியில் அக்கறைப் பட்டு விருந்துக்கு அழைத்தார்கள் அல்லது அன்பாக வீட்டை சாப்பாடு கொண்டு போய் கொடுத்தார்கள்................????

நிழலிக்கு சாப்பாடெல்லாம் கொண்டுபோய் கொடுப்பதற்கு பதில் எனது அட்டவணையை கொடுத்துவிடுகின்றேன்.

சனி பாபு வாழையிலை சாப்பாடு.திங்கள் எம்பசியில் நாண்,சிக்கன் டிக்கா, செவ்வாய் -கென்டக்கி அல்லது பாப்பாய் ,புதன் -சைனிஸ் வியாழன் -சுவிஸ் சாலே வெள்ளை பூரணியில் இட்டலி அல்லது அப்பம் .ஞ்யிறு ஒருநாள் வீட்டு சாப்பாடு.

Edited by arjun

நிழலிக்கு சாப்பாடெல்லாம் கொண்டுபோய் கொடுப்பதற்கு பதில் எனது அட்டவணையை கொடுத்துவிடுகின்றேன்.

சனி பாபு வாழையிலை சாப்பாடு.திங்கள் எம்பசியில் நாண்,சிக்கன் டிக்கா, செவ்வாய் -கென்டக்கி அல்லது பாப்பாய் ,புதன் -சைனிஸ் வியாழன் -சுவிஸ் சாலே வெள்ளை பூரணியில் இட்டலி அல்லது அப்பம் .ஞ்யிறு ஒருநாள் வீட்டு சாப்பாடு.

பறுவாயிலை வீட்டுச் சாப்பாட்டு நாள் (சண்டே) அழையுங்கள் :lol:

  • கருத்துக்கள உறவுகள்

பகிடிக்காதான் எழுனாலும்....... எப்டி நீங்க பப்ளிக்கா ,, சகாரா அக்காவுக்கு சரியா சமைக்க வராது எங்கிற உண்மைய வெளில சொல்லலாம்?

மிக மிக...... நாகரிகமில்லாத கருத்து!! <_<

ரதி எங்கே சொன்னார்?

அறிவிலி எனக்குச் சமைக்கத் தெரியாது என்பதை இப்படி கருத்துக்களத்திலேயா போட்டு உடைப்பது? :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல கவிதை..............

"வளர்ந்த குஞ்சுகள் பிரிந்த போதிலும் வருந்தவில்லையே தாயடா! மனித ஜாதியில் கவலை என்பது மனதினால் வந்த நோயயடா!"

என்று ஒரு கவிஞன் பறவைகளை புரியாமல் எழுதி வைத்தான். மனிதரின் அன்பு பாசம் எல்லாம் சுயநலம் சார்ந்தது.............. விலங்குகள் தமது குட்டிகளை பாதுகாக்கும் விதமே ஒரு அருமை. சுயநலமில்லாத சமூக கட்டமைப்பு. ஆரம்ப மனித கூட்டம் அப்படிதான் இருந்திருக்கும் ............ இந்த விஞ்ஞான உலகிலும் வியக்க வைக்கும் பிரமைட்டும் தஞ்சை பெரியார் கோவிலும் அப்படிதான் இருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

இதை விட என்னால் சிறப்பாக விளக்கமாக எழுதி இருக்க முடியாது விசுகு

ஆனால் என்ன துயரம் என்றால், இப்படி தெளிவாக சொல்ல, வந்த விடயத்தை மிகவும் சுலபமாக எழுத முடிகின்ற உங்களால் ஏன் அநேகமாக அப்படி எழுத முடிவதில்லை?

வெறும் குரோதமும், 'நான் இப்படித்தான் என்னை வெளி உலகுக்கு Project பண்ணுவேன்" எனும் வேண்டா பிடிவாதமும் தான் உங்களுக்குள் இருக்கும் தெளிவான கருத்தாளனை முடமாக்குகின்றது

உண்மையில் உங்கள் இந்த பதிலும் எழுதிய முறையும் ....அருமை...

உங்களிடம் நிறைய எதிர் பார்க்கின்றேன்/ எதிர் பார்க்கின்றோம்

நன்றி நிழலி

எனக்காக இவ்வளவு எழுதியதற்கு.

ஆனால் என்னால் சில விடயங்களை சகிக்கமுடியாது.

பிழை அல்லது சரி என்ற இரண்டுக்கு நடுவில் நின்று பேச எழுத எனக்கு வராது.

பூசி மெழுகி முகம் பார்த்து எல்லாம் என்னால் எழுதமுடியாது.

அது அப்படித்தான். என்னால் மாறமுடியாது.

நன்றி மீண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு நல்ல துணைவியின் பிரிவு என்பது ஒரு நாள் என்றாலும் கூட உடனே வெறுமையை உணர வைத்து விடும். அதனால் தான் உங்களால் தன் நினைவின்றி எளிமையான கவிதையைக் கொட்ட முடிந்திருக்கு,

அம்மா வின் பிரிவுக்கும் கவிதை வரும், என்ன ஒரு கணமாயினும் யோசிக்க வேண்டி இருக்கும்.

வீடு முழுதும் தன் குரலால் நிறைத்துக் கொண்டு, பார்க்கும் இடமெங்கும் வளைய வந்துகொண்டிருப்பவள்.

என் தாய் , முதலில் என் தந்தையின் நல்ல மனைவியே! :)

என் தாய் , முதலில் என் தந்தையின் நல்ல மனைவியே! :)

நல்லதொரு வார்த்தை சுவி.

என் அம்மா, அப்பாவுக்கு நல்ல மனைவி

என் அப்பா, அம்மாவுக்கு நல்ல கணவன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஏன் மச்சி...பிரியமானவர்கள் அருகில் இல்லையா

http://www.youtube.com/watch?v=ic4jPX4nK5o

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மனைவி பிள்ளை நிறைவான பயணத்தை தொடர பிராத்திக்கிறேன். வந்த பிற்பாடு நிழலியையும் ஒரு பயண கட்டுரை தர வேண்டுகிறேன்.

நான் இந்த மிடில் கிளாஸ் ஆட்களில் வாழ்வு நரகத்திர்ற்கு ஒப்பானது என்று தான் நினைத்திருந்தேன். ஆனால் அதற்கு (சற்று) மேலுள்ளவர்களினதும் நிலையும் அல்வளவு சிறப்பாக தெரியவில்லை. இங்கே நான் வேலை செய்கிற இடத்தில், ஒரு பொறுப்பான பதவியில் இருப்பவர், இந்தியாவிற்கு போகிறார், 2 கிழமை லீவில். அவரிடம் கேட்டேன், மனைவியையும் அழைத்துக்கொண்டு போகிறீர்களா என்று. அவர் சொன்னார்,இல்லை கொடுக்கிற காசுக்கு அது பிரயோசனப்படாது என்று. அவரது வயது 60 விட கூட. கட்டாயம்/ குறைந்தது 200K மேல் எடுப்பார். எனவே கவலைப்பட வேண்டாம், உந்த செக்குக்கு செக் இடையில் வாழுகிற பெரிய கூட்டம் வட அமெரிக்காவில் இருக்கு. துரதிஸ்டவசமாக, நாங்கள் (கணிப்புகளில்) மற்றவர்களை விட செல்வந்தர்களாக உள்ளோம்.

அவர்களை அனுப்பிவிட்டு

வீடு செல்கின்றேன்

வாசல் திறக்கும் போது

சூனியம் அப்பிக் கொள்கின்றது

ஆத்மார்த்தமான கூற்று . பாராட்டுக்கள்.....

பிரிவு என்பது கவிதை பிறக்கும் இடம் என்பது இங்கு நிதர்சனம். பிரிவின் வலியை நீங்கள் வெளிப்படுத்திய பாங்கு அருமை. மனைவியின் அருகாமை மகளின் அன்பு என்று இவையெல்லாம் அவர்களின் பிரிவால் தனிமையை ஏற்படுத்தும். பெற்றவர்களின் பிரிவு, சகோதரர்களின் பிரிவு, இவையும் மிகவும் வலியை தருபவை. அன்பு , காதல் இதற்கு பொருள் ஒன்று என்பது என் கருத்து.

உங்கள் வேதனையை நீங்கள் உணர்த்திய விதம் அருமை..

.... எனது அட்டவணையை கொடுத்துவிடுகின்றேன்.

சனி பாபு வாழையிலை சாப்பாடு.திங்கள் எம்பசியில் நாண்,சிக்கன் டிக்கா, செவ்வாய் -கென்டக்கி அல்லது பாப்பாய் ,புதன் -சைனிஸ் வியாழன் -சுவிஸ் சாலே வெள்ளை பூரணியில் இட்டலி அல்லது அப்பம் .ஞ்யிறு ஒருநாள் வீட்டு சாப்பாடு.

ச்சா!!! என்ன ஒரு சாப்பாடுப் பிரியன்!!!!

இஞ்ச தான் அர்ஜுன் நிமிர்ந்து நிக்கிறார்... :lol: :lol: :lol:

  • தொடங்கியவர்

பதில் எழுதிய அனைத்து உறவுகளுக்கும் நன்றி

ஆஹா...நான் எழுதிய கவிதைகளில் என்னுடைய இந்த கவிதை திரிக்குத்தான் இவ்வளவு பதில்கள்...!!

  • கருத்துக்கள உறவுகள்

பதில் எழுதிய அனைத்து உறவுகளுக்கும் நன்றி

ஆஹா...நான் எழுதிய கவிதைகளில் என்னுடைய இந்த கவிதை திரிக்குத்தான் இவ்வளவு பதில்கள்...!!

நேரப்பற்றாக்குறைவால் இப்பதான் பதில் எழுத முடிந்தது.கவிதை அருமை.அதைவிட எல்லாரும் தாங்களும் தங்கள் உணர்வுத்தளங்களில் இருந்து வாசிப்பதால் இன்னும் மெருகேற்றப்படுகிறது.பாசமலர் படத்தின் வெற்றிக்கும் இதுதான் காரனமாக இருந்திருக்கும். :)

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணை முதல் முதலா யாழில் உங்களுக்கு பச்சை இட்டுவிட்டுள்ளேன் எனது வசிப்பிடம் வந்தால் தொடர்பு கொள்ளுங்கோ முகப்பு புத்தகத்தில்!!!!!

  • கருத்துக்கள உறவுகள்

பதில் எழுதிய அனைத்து உறவுகளுக்கும் நன்றி

ஆஹா...நான் எழுதிய கவிதைகளில் என்னுடைய இந்த கவிதை திரிக்குத்தான் இவ்வளவு பதில்கள்...!!

உங்கள் திறமைகளை ஒழித்து வைத்துவிட்டு எம்மைக்குறை சொல்லல் தகுமோ?

தொடர்ந்து எடுத்துவிடுங்கள்

எமக்கு கவி கிடைக்க கொஞ்சம் ஆறுதலாகவே வரட்டும் தாயும் சேயும்.

சுணங்கும் ஒவ்வொரு நிமிடமும் எமக்கு கவிப்படையல் குவியும் :wub::icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு வார்த்தை சுவி.

என் அம்மா, அப்பாவுக்கு நல்ல மனைவி

என் அப்பா, அம்மாவுக்கு நல்ல கணவன்

இரண்டு நல்லவர்களுக்கு பிறந்த பிள்ளை மட்டும்..........???

தப்பிலி யா போச்சு என்று சொல்ல வந்தேன்.

மனைவி, மகளைப் பிரிந்த ஏக்கத்தை ஆழமாகக் கவிதையில் கூறியுள்ளீர்கள், நிழலி. உங்களைப் போன்றே அனுபவத்தில் எவ்வாறு இருக்கும் என உணர்ந்திருக்கிறேன்.

இரண்டு நல்லவர்களுக்கு பிறந்த பிள்ளை மட்டும்..........???

தப்பிலி யா போச்சு என்று சொல்ல வந்தேன்.

முற்போக்குச் சிந்தனைகள் எந்தப் பின்னணியில் இருந்தும் தோன்றலாம். :D

  • 1 month later...
  • தொடங்கியவர்

இந்தக் கவிதைதான் எனக்கு மிக வேண்டிய ஒரு படிப்பு சம்பந்தமான புத்தகத்தை வாங்க வழி சமைத்து இருக்கு

இன்று தான் உங்கள் கவிதை வாசித்தேன் நிழலி அண்ணா... நான் குத்தும் முதல் பச்சை உங்களுக்கு தான்.

உங்கள் கவிதையில் பிரிவின் வலியை அழகாக கூறியுள்ளீர்கள். இன்னும் பல கவிதைகள் நீங்கள் எழுத வேண்டும்.....

  • 8 months later...

நிழலி, அழகான கவிதை. சோகம் & பிரிவுகள் இவற்றில்தான் நல்ல ஆக்கங்கள் பிறக்கும்

  • கருத்துக்கள உறவுகள்

என் மகன் பிறந்தபோது என் அப்பாவின் அன்பு உணர்ந்தேன் . நன்றி நிழலி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.