Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எரிந்த யாழ்.நூலகத்துக்கு நூல்களை சேகரித்தவர் மரணம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

7yu.jpg
உலகத் தமிழர்களின் சொத்தாக இருந்த யாழ்ப்பாண பொது நூலகம்; 1981ஆம் ஆண்டு மே 31 ஆம் திகதி நள்ளிரவு நேரத்தில், தீ வைத்து எரிக்கப்பட்டதைதொடர்ந்து அந்த எரியூட்டப்பட்ட நூலகத்திற்காக நூல்களை திரட்டிய நாமக்கல்லைச் சேர்ந்த ப.இராமசாமி மரணமானர்.

1939 ஒக்டோபர் மாதம் 15 ஆம் திகதி பிறந்த ப.இராமசாமி 2013 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 24 ஆம் திகதி நேற்று செவ்வாய்க்கிழமை அதிகாலை ஐந்து மணிக்கு இவ்வுலகத்தை விட்டு பிரிந்துவிட்டார் என்று இந்தியச்செய்திகள் தெரிவிக்கின்றன.

அந்த செய்திகளில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

தென்கிழக்காசியாவிலேயே மிகப்பெரிய நூலகமாகத் அன்றைய கணக்குப்படி 97,000 அரிய நூல்களுடன் திகழ்ந்த அந்த நூலகம் எரிந்த போது கண்ணீர் விட்டு அழாத தமிழர்களே இல்லை. அப்படி அழுதவர்தான் இந்த நா.ப.இராமசாமியுமாவார்.

எல்லோரும் அழுததுடன் நின்று விட்டார்கள். ஆனால், நாமக்கல்லைச் சேர்ந்த ப.இராமசாமி எரிந்து போன நூலகத்தை புதுப்பிக்க புதிய நூல்களை திரட்ட துவங்கினார். கண்ணில் தென்படும் பழைய நூல்களை வாங்கத் தொடங்கினார். பழைய நூல்கள் எங்கு கிடைக்கும் என்று சொன்னாலும், உடனடியாக கிளம்பி போய்விடுவார். பகுத்தறிவு, வரலாறு, அறிவியல், புரட்சி, போராட்டம், விடுதலை, மொழி, இனம், வீரம், குழந்தைகள் கதை என்று தமிழர் சமுதாயத்துக்கு தேவையான அனைத்து நூல்களையும் வாங்கி குவிக்கத் துவங்கினார்.

இடைவிடாத பயணம், தேடல் என்று போன நா.ப.இராமசாமியிடம் இன்று 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரிய நூல்களைக் கொண்ட நூலகத்தைப் பாதுகாத்து பராமரித்து வந்தார்.

இராமலிங்க அடிகளாரின் முதல் பதிப்பு நூல்கள். மணிமேகலை, பத்துப்பாட்டு முதல்பதிப்பு, திருக்குறள் 1840-ம் ஆண்டு பதிப்பு, இராட்லர் அகராதி (1834,36,39,41), சுவிசர்லாந்து பற்றி 1836 இல் வெளிவந்த நூல்கள் என பல அறிய நூல்களை தொகுத்து வைத்துள்ளார். பல நூல்களில்  படங்கள் கையால் வரையப்பட்டுள்ளன. கால்டுவெல் திராவிடமொழிகளின் ஒப்பிலக்கணம் இரண்டாம் பதிப்பு (1875), 1803 இல் வெளியான சேக்சுபியர் நூல்கள் (ஐந்து தொகுப்புகள்), இவை தவிர ஓவியம், சிற்பம், மருத்துவம், மூலிகை, சமையல்கலை (1912) குறித்த நூல்கள் உள்ளன. ஆப்பிரிக்கா பற்றி 1858 இல் தமிழில் எழுதப்பட்ட நூல் உள்ளது. ஆப்பிரிக்கா நாடு கண்டுபிடிக்கப்பட்டது பற்றிய பல தகவல்கள் அவரிடம் உள்ளது.

2004 ஆம் ஆண்டு ஜனவரியில், யாழ்ப்பாணம் சென்ற நா.ப.இராமசாமி, விடுதலை புலிகளின் தலைவர்களையும் சந்தித்து பேசியுள்ளார். பல நாட்கள் தங்கிப் பல ஊர்களையும் முக்கியமான தலைவர்களையும் கண்டுவந்த நா.ப.இராமசாமி, ரூபாய் ஐந்து இலட்சம் மதிப்புள்ள 3800 நூல்களை  அன்பளிப்பாக வழங்கினார்.

மீதமுள்ள நூல்கள்  அனைத்தும் யாழ்பாண நூலகத்துக்கு என தன்னுடைய உயிலில் எழுதி வைத்துள்ளார் என்றும் அந்த செய்திகளில் தெரிவிக்கப்படுகின்றது.

 

மறைந்த தமிழ் ஆர்வலருக்கு அஞ்சலிகள்...  

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மறைந்த தமிழ் ஆர்வலர் நா.ப.இராமசாமி அவர்களுக்கு அஞ்சலிகள்!

1234820_10151671217372473_620915187_n.jp

மறைந்த தமிழ் ஆர்வலர் நா.ப.இராமசாமி அவர்களுக்கு அஞ்சலிகள்!

Edited by யாழ்அன்பு

  • கருத்துக்கள உறவுகள்

அன்னாரின் ஆன்மா அமைதி பெறட்டும்..! அவரை இழந்து துயருறும் உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்..!

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தமிழர்களின் கல்விக்கும் கலைக்கும் கலாச்சாரத்திற்கும் தன் பணி செய்த அன்னாருக்கு அஞ்சலிகள் . குடும்பத்தினருக்கும் உறவினருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள்

வெட்கமாக இருக்கின்றது. இப்படி எமக்காக புத்தகங்களை சேர்த்தவர் பற்றிய விபரங்களைக் கூட அவர் இறப்பின் போதுதான் அறிந்து கொள்கின்றேன் என நினைக்கும் போது என் மேல் எனக்கு கோபமும் என்னைப் பற்றிய வெட்கமும் தான் மேலிடுகின்றது.

 

கண்ணீர் அஞ்சலிகள்!

அன்னாரின் ஆன்மா அமைதி பெறட்டும்..! அவரை இழந்து துயருறும் உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்..!

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணீர் அஞ்சலிகள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆழ்ந்த இரங்கல்களை தெரிவிக்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணீர் அஞ்சலிகள்

  • கருத்துக்கள உறவுகள்

கண்ணீர் அஞ்சலிகள்.  ஆர்வலரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். :(

  • கருத்துக்கள உறவுகள்

வெட்கமாக இருக்கின்றது. இப்படி எமக்காக புத்தகங்களை சேர்த்தவர் பற்றிய விபரங்களைக் கூட அவர் இறப்பின் போதுதான் அறிந்து கொள்கின்றேன் என நினைக்கும் போது என் மேல் எனக்கு கோபமும் என்னைப் பற்றிய வெட்கமும் தான் மேலிடுகின்றது.

 

கண்ணீர் அஞ்சலிகள்!

 

உண்மை தான் நிழலி. இப்படி... இலை மறை காயாக... எத்தனை உணர்வாளர்கள் தெரியாமல் இருக்கிறார்களோ... யாரறிவர்.

தமிழ் ஆர்வலர் ராமசாமி ஐயாவுக்கு... ஆழ்ந்த இரங்கல்கள்.

இவருக்கு செய்யும் மரியாதை...இவர் சேகரித்த புத்தகங்களை யாழ் நூலகத்துக்கு எவ்வளவு சீக்கிரம் கொடுக்க முடியுமோ...அவ்வளவு சீக்கிரம் பெற்று கொடுப்பது தான்.. இந்தியாவில் இருந்தால் அந்த புத்தகங்கள் பழைய பேப்பர் கடைக்கு தான் செல்லும்....

  • கருத்துக்கள உறவுகள்

அன்னாருக்கு என் இதய அஞ்சலிகள்.

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் இவரும் ஒரு போராளியே!!!தமிழ்வாழவேண்டுமாயின் தமிழ் நூலகங்கள் வாழவேண்டும்..அதற்கு தமிழ்புத்தகங்கள் காக்கப்பட வேண்டும்.ஆழ்ந்த இரங்கல்கள்!!!!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.