Jump to content

இன்று குயிலினம் பாடமறந்தது..


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
இன்று குயிலினம் பாடமறந்தது....எங்களின் வீதிகள் சோபை இழந்தது..  

 

 

15083_241317606019130_545762382_n.jpg

 

உன் நினைவு சுமந்து...எல்லாம் தொலைந்து... நடைப்பிணமாய் நாம்....
 
எல்லா இழப்போடும்
இதுவுமொரு பேரிழப்பே
யார் இட்ட சாபம் இது..? 
 
வீரவணக்கம் அண்ணா..

 

 

http://www.youtube.com/watch?v=hwq83qE93_w

Edited by சுபேஸ்
  • Like 3
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவுக்கு... உண்ணாவிரதம் என்றால் என்ன என்று, இருந்து காட்டிய தியாக தீபம் திலீபனுக்கு வீர வணக்கங்கள்.

  • Like 1
Link to comment
Share on other sites

644055_595763843802722_876296134_n.jpg

 

ஈழ விடுதலைப் போராட்டமானது தியாகங்களின் சிகரங்களைத் தொட்ட சந்தர்ப்பங்களில், தியாகச் செம்மல் லெப்.கேணல் திலீபனின் தியாகம் மிக முக்கியமானதாகும். தமிழர்களின் விடுதலைப் போராட்டம் பல சந்தர்ப்பங்களில் ஆயுத ரீதியிலான வன்முறை வழியைத் தவிர்த்து அகிம்சை வழியை கடைப்பிடிக்க முனைந்த போதெல்லாம், எதிர்மறையான விளைவுகளையும் ஏமாற்றங்களையுமே பரிசாகப் பெற முடிந்தது.

திலீபனின் மரணம் உணர்த்துவது ஒன்றே ஒன்றுதான் அம்ஹிசை வழி போராட்டத்தை என்றுமே சிங்கள பேரினவாதம் கண்டுகொள்ளாது மாறாக காலில் போட்டு மிதிக்கவே செய்யும். 

"I am confident that our people will, one day, achieve their freedom. It gives me great satisfaction and contentment that I am fulfilling a national responsibility to the nation." - Lt. Col. Thileepan...

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவுக்கு... உண்ணாவிரதம் என்றால் என்ன என்று, இருந்து காட்டிய தியாக தீபம் திலீபனுக்கு வீர வணக்கங்கள்.

 

 

26-ஆம் ஆண்டில் தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் மீள் நினைவுகள் ஒரு பார்வை
Link to comment
Share on other sites

வீர வணக்கங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலக  வரலாற்றில் ஆயுதப்போராட்டம் என்றாலும்

சாத்வீகம்  என்றால்  என்ன  என்றாலும்

தமிழனுக்கு  அவை அப்பழுக்கற்று தெரியும் என

தன்னை  வருத்தி  கூறிச்சென்றவன்

இவனது  வயிறு சுருங்கியபோது

சுருங்கியது உலகமும்

காந்தி  தேசம் என்று  கர்ச்சித்தவர்களும் தான்

அத்தனை முகங்களையும் காட்டிச்சென்றவன்

 

உன்  பெயர் உலக  வரலாற்றில்  நிச்சயம் பொறிக்கப்படும்

அதற்காக நாம் உழைப்போம்

 

இவன்  காலத்தில்  வாழ்ந்த பெருமை எனக்கு.

திலீபனுக்கு வீர வணக்கங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எமக்காக உடல் உருக்கி உயிர் நீத்த வீரனுக்கு வணக்கங்கள்

Link to comment
Share on other sites

எமது இனத்துக்காக உடலை உருக்கி உயிர் நீத்த திலீபன் அண்ணாவுக்கு வீரனுக்கு வணக்கங்கள் !

Link to comment
Share on other sites

1173738_531463916931702_486585196_n.jpg

 

இடிந்தகரையில் தோழர் . திலீபனுக்கு வீரவணக்கம்... 

 

Link to comment
Share on other sites

திலீபன் அண்ணாவின் நினைவு தினம் வரும் ஒவ்வொரு முறையும், அவர் உண்ணாவிரதம் இருந்ததில் இருந்து இந்திய துரோக தேசத்தின் அலட்சியத்தினால் கொல்லப்பட்ட நாட்கள் வரைக்குமான தினங்களின் நினைவுகளும் வந்து போகும்.

 

மக்களே புலிகளாகவும் போராளிகளாகவும், புலிகளே மக்களாகவும் ஒன்றுடன் ஒன்றாக கலந்து இருந்த நாட்கள். ஒவ்வொரு தினமும் திலீபன் அண்ணாவுக்காக மெய்யுருகிப் போய் போராட்ட பணி செய்யும் மாணவர்களாக இருந்த நாட்கள் அவை. துண்டுப் பிரசுரம் அடிக்க வசதி இல்லாத மாணவர் பருவம் என்பதால், கையால் எழுதி எங்கள் ஊர் முழுதும் சின்ன சின்ன சுவரொட்டிகள் செய்த காலம் அது.

 

அண்ணாவின் இறுதி மூச்சும் நின்று விட்ட அறிந்து கோபம் கொண்டு இந்திய அமைதிப் படையினைக் காணும் போதெல்லாம் காறி துப்பித் திரிந்தோம். வாழை மரங்களை ஒவ்வொரு வீதி சந்திகளிலும் தோரணங்களுடன் கட்டி சாத்தி இருந்தோம். ஊரெங்கும் மலர்களாள் அஞ்சலி செலுத்தி கண்ணீர் மல்கிக் கிடந்த காலம் அது.

 

இன்று நினைக்கும் போதும் அன்று அந்த நாட்களில் எம் நாசிக்குள் போயிருந்த சோகம் கலந்த ஒரு வாசனை/ நெடி இன்னும் மறக்காமல் மனசுக்குள் எழுகின்றது. அண்ணாவின் இறுதி மூச்சினை கலந்து வந்த நெடி அது. சாவின் பின்னும் கூட மறக்காது.

 

 

 

 

Link to comment
Share on other sites

இந்த மகாத்மா ,மாவீரர் தனது யாகத்தை முடிக்கும் போது விடுதிச்சாலையில் தங்கியிருந்து கல்வி கற்ற காலம் ....அடிக்கடி நல்லூருக்கு சென்று அவர் முன் தவம் இருந்த நாட்கள் இன்னும் இன்னும் என் கண் முன் நின்று ஊசலாடுகிறது .......அவர் வீரச்சாவை அடந்த தருணம் என்னிடம் என் நண்பன் கேட்டான் ஏண்டா தீலீபன் அண்ணா சாகனும் ...அவன் கேட்ட கேள்விக்கு அன்று விடை எனக்கு தெரியவில்லை . .
 
 
வீரவணக்கம் அண்ணா .
 
[ கள உறவுகள் யாராவது தீலிபன் அண்ணாவிற்காக வரிகளை தாருங்கள் இந்த இனிமையான களத்தினால் பாமாலையாக சமர்ப்பிப்போம் நன்றிகள் ]

 

Link to comment
Share on other sites

லெ.கேணல் தியாகி  திலீபனுக்கு வீர வணக்கங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
திலீபன் அண்ணாவின் ஆத்மா எப்பவோ சாந்தியடைந்திருக்கும்.வீர வணக்கங்கள்
 
தீலிபன் அண்ணாவின் மரணத்திற்கு இந்தியா,இலங்கை அரசுகளோடு புலிகளும்,மக்களாகிய நாங்களும் பதில் சொல்ல கடமைப்பட்டு உள்ளோம்.கடைசி நேரத்தில் தீக்சிட்டோடு,தலைவர் நடத்திய பேச்சு வார்த்தையின் பிறகு அவர்களது[இந்தியாவினது] வாய் மொழி உறுதியை ஏத்து தீலிபன் அண்ணாவை காப்பாற்றி இருக்கலாம்.இந்தியா எப்படியும் ஏமாத்தித் தான் இருக்கும் ஆனால் திலீபன் அண்ணாவைக் காப்பாற்றி இருக்கலாம் என்பது என் கருத்து  
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வீர வணக்கங்கள்.

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • யாழில் சகோதரிக்கு போதை ஊசி செலுத்தி, பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சகோதரன் கைது Published By: DIGITAL DESK 3 26 APR, 2024 | 03:41 PM   தனது சகோதரியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி வந்ததுடன், சகோதரியை வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்த குற்றச்சாட்டில் சகோதரன் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.  யாழ்ப்பாணம் நகர் பகுதியை அண்டிய கிராமத்தைச் சேர்ந்த 34 வயதுடைய பெண்ணொருவர் தனது பெற்றோர் உயிரிழந்த நிலையில், சகோதரியுடன் வடமராட்சி கிழக்கு பகுதியில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் வசித்து வந்துள்ளார்.  இந்நிலையில், கடந்த டிசம்பர் மாதம் பெண்ணின் சகோதரி உயிரிழந்துள்ளார். அதனை அடுத்து இல்லத்தில் வசித்து வந்த சகோதரியை , யாழ்.நகர் பகுதியை அண்டிய பிரதேசத்தில் வாழும் சகோதரன் தன்னுடன் அழைத்து வந்து தங்க வைத்துள்ளார்.  இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் குறித்த பெண்ணுக்கு போதைப்பொருட்களை வலுக்கட்டாயமாக நுகர வைத்தும், போதை ஊசிகளை செலுத்தியும் பாலியல் வன்புணர்வுக்கு கும்பல் ஒன்று உட்படுத்தி வந்துடன் பெண்ணை சித்திரவதைக்கு உள்ளாக்கியும் வந்துள்ளது.  பின்னர் கடந்த வாரம் மீண்டும் ஆதரவற்றோர் இல்லத்தில் பெண்ணை கொண்டு சென்று சகோதரன் சேர்த்துள்ளார். இல்லத்தில் பெண்ணின் நடவடிக்கையில் மாற்றங்கள் தென்பட்டதுடன், உடலில் காயங்கள் காணப்பட்டமையால், இல்ல நிர்வாகத்தினரால் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் பெண்ணை சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.  வைத்திய சிகிச்சையின் போதே பெண் தனக்கு நேர்ந்த கொடுமைகளை விபரித்துள்ளார். அதனை அடுத்து சட்ட வைத்திய அதிகாரியினால், முன்னெடுக்கப்பட்ட மருத்துவ பரிசோதனைகளின் போது, பெண் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளமையும், பெண்ணை அடித்து துன்புறுத்தி சித்திரவதைக்கு உள்ளாக்கியமைக்கான காயங்கள் உடலில் காணப்பட்டுள்ளமையும் உறுதிப்படுத்தப்பட்டது.  சம்பவம் தொடர்பில் ஆரம்ப விசாரணைகளை முன்னெடுத்த பருத்தித்துறை பொலிஸார், குற்றம் நடைபெற்ற பிரதேசம் யாழ்ப்பாண தலைமை பொலிஸ் நிலைய பிரிவுக்கு உட்பட்டது என்றதன் அடிப்படையில் , யாழ்ப்பாண பொலிஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டதை அடுத்து, யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.  விசாரணைகளின் அடிப்படையில் பெண்ணின் சகோதரனே, பெண்ணை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி வந்தமையும், போதைப்பொருட்களை கட்டாயப்படுத்தி நுகர வைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியமையும் தெரிய வந்துள்ளது.  அதனை அடுத்து சகோதரனை கைது செய்த பொலிஸார் விசாரணைகளின் பின்னர் யாழ்,நீதவான் நீதிமன்றில் நேற்று வியாழக்கிழமை முற்படுத்தியவேளை, சகோதரனை விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டது.  அதேவேளை, பெண்ணை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியவர்கள் என 08 பேரை அடையாளம் கண்டுள்ளதாகவும், அவர்களை கைது செய்வதற்கு நடவடிக்கைகளை முன்னெடுத்து உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.   யாழில் சகோதரிக்கு போதை ஊசி செலுத்தி, பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சகோதரன் கைது | Virakesari.lk
    • மன்னார் - நானாட்டான் கமநல சேவைகள் பிரிவில் உள்ள வஞ்சியன்குளம் கமக்காரர் அமைப்புக்கு உட்பட்ட வஞ்சியக் குளக்கண்டத்தில் இன்று வெள்ளிக்கிழமை (26) காலை பயிர்களுக்கு ட்ரோன் மூலம் திரவ உரம் விசிறும் பணிகள் இடம்பெற்றன. அந்த வகையில், MI 07 இனத்தைச் சேர்ந்த பயறு செய்கைக்கான திரவ உரம் ட்ரோன் மூலம் விசிறப்பட்டது.  ட்ரோன் மூலம் திரவ உரம் விசிறும் பணிகள் இடம்பெற்றபோது மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன், கமநல அபிவிருத்தி  உதவி ஆணையர், விவசாய மாகாண பிரதி பணிப்பாளர், கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர், கமநல மற்றும் விவசாய திணைக்கள உத்தியோகத்தர்கள், விவசாயிகள் என பலர் களத்தில் இருந்தனர். மன்னார் - நானாட்டானில் பயிர்களுக்கு ட்ரோன் மூலம் திரவ உரம் விசிறப்பட்டது!  | Virakesari.lk
    • நெடுமாறன் அய்யா எமக்காக செய்தவற்றில் சில 1982ஆம் ஆண்டு இலங்கையில் தமிழ் நூல்கள் அதிகம் இருந்த யாழ் நூலகம் தீக்கிரையாக்கப்பட்டபோது, அவ்விடம் சென்று அதனை ஆவணப்படுத்தி, அன்றைய முதலமைச்சர் எம்.ஜி.ஆரிடம் அறிக்கை சமர்ப்பித்தார். அதன்பின், எம்.ஜி.ஆர், இலங்கையில் தமிழர் போராட்டம் குறித்து அன்றைய பிரதமர் இந்திரா காந்தியிடம் பேசினார் என்பது வரலாறு. மேலும், 1985ஆம் ஆண்டு, சிங்களப் படைகளால் பாதிக்கப்பட்ட இலங்கை தமிழ்ப்பகுதிகளை, ரகசியமாக பயணம் செய்து காணொலியாகப் பதிந்து, உலகம் முழுக்க தெரியப்படுத்தினார். அதேபோல், 1991ஆம் ஆண்டு இந்திய அமைதிப்படை இலங்கையில் செய்த கொடூரங்களை, ஆவணப்படுத்தி, அன்றைய பிரதமர் வி.பி.சிங்கிடம் இதுகுறித்து பேசி,அவரை திரும்பப்பெற வலியுறுத்தினார். இப்படி தொடர்ந்து ஈழ ஆதரவுப் போராட்டங்களில் ஈடுபட்டார், பழநெடுமாறன்.  நாங்கள் என்ன செய்தோம்.  போராடமால் வெளிநாடு சென்று இணையத்தில் மட்டுமே போராடுகிறோம்.  2010 தேர்தலில் எம்மை அழித்த சரத் பொன்சேகாவுக்கு யாழில் எம்மவர்கள் வழங்கிய அதிக வாக்குகள்.  ஆனால் நாங்கள் தமிழக அரசியல்வாதிகளைப் பார்த்து துரோகிகள் என்கிறோம். இது வேடிக்கை இல்லையா?
    • இப்படி உறைக்க சொல்லுங்கோ பாஸ். அப்பதான் எனக்கும் உறைக்கும். ஏனென்றால், நானும் இப்படித்தான் நினைச்சுக் கொண்டு இருக்கின்றேன். என் மகள் உறைப்பு சாப்பிடவே மாட்டார், ஆனால் மகன் மகளுக்கு நேர் எதிர். இதனால், அவனுக்கு "எந்த சாப்பாட்டைக் கொடுத்தாலும், சாப்பிடுவான்' என்று ஒரே நற்சான்றிதழ் கொடுப்பதுடன், அவன் விரும்பிச் சாப்பிடும் சாப்பாடுகளில், உறைப்பை தூக்கலாக போட்டுத்தான் சமைப்பது. நானும் கடும் உறைப்பு சாப்பிட்டுக் கொண்டு இருந்தனார் - இந்த வருடம் பெப்ரவரி வரைக்கும். பெப் இல் வந்த நிமோனியாவுக்கு எடுத்த  நுண்ணுயிர் எதிர்ப்பியால் / Antibiotics , மிளகாய்த் தூள் கொஞ்சம் கூடப் போட்டு சமைத்தால்.... பிச்சுக் கொண்டு போகுது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.