Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நீங்கள் உங்கள் மனைவிக்கு எவ்வளவு சுதந்திரம் கொடுப்பவர்.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இருவருக்கும் கட்டுப்பாடு அவசியம்.இல்லாவிடில் spiral ஆகி குடும்பம் குலையலாம்.

 

 

 

Two+Intersecting+Circles+2.jpg

 

உண்மைதான் இருவருக்கும் கட்டுப்பாடும் சுதந்திரமும் அவசியம்.

 

ஆண் கணவனானால் ,பெண் மனைவியானால் இருவருக்கும் சுதந்திரம் ?  :D

 

ஆண் கணவனாய் இருந்தால் நிட்சயம் பெண்ணும் மனைவியாய்த்தான் இருப்பாள். :lol:

 

எங்களது குடும்பதில் எல்லாவற்றிலும் இருவரும் சமமாகவே இருக்கின்றோம். அவளாகவே வந்து எல்லாவற்றையும் எனக்குச் சொல்லுவாள் செய்வாள். நான் ஆண் என்ற எண்ணத்தில் என்றும் அதிகாரம் செலுத்தியது கிடையாது. அவளுக்குப் பிடிவாதம் கொஞ்சம் ஜாஸ்தியாக இருக்கும். அதனால் சமாளிக்க கொஞ்சம் அய்ஸ் வக்கவேண்டிருக்கும். இருவருக்கும் ஒரே வயது என்பதால் பலவிடயங்களில் அவளின் ஆலோசனைப்படியே நடந்துகொள்ளவேண்டிய கட்டாயம் எனக்கிருக்கிறது. :(

 

இப்ப உங்களுக்கே தெரிஞ்சிருக்கும் ஆருக்குக் கூடச் சுதந்திரம் இருக்கெண்டு! :)

 

உங்களுக்குத்தான் அதிகம் என்று தெரியுது. :lol:

 

 

இதத்தான் சொல்றது எங்களுக்கு சுதந்திரம் இல்லையென்று.
 
இது ஒரு பாரதூரமான மனித உரிமை மீறல்.

 

 

உங்கள் மனைவி உங்கள் முன் ஒரு ஆணைப் பற்றி வர்ணிப்பதை நீங்கள்; ஏற்றுக் கொள்வீர்கள் என்றால் இது மனித உரிமை மீறல் தான்

 

  • Replies 219
  • Views 16.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

மனைவிக்குரிய சுதந்திரங்கள் ஒவ்வொருவருக்கும் ஏற்றவாறு மாறுபடும் வாத்தியார். அது அவர்களின் கல்விநிலை, சமூக நிலை என்பவற்றின் அடிப்படையில் வித்தியாசப்படும்.
 

மனைவி என்பவள் எந்த நிலையிலும் ஒரே  மாதிரிப் பார்க்கப்பட வேண்டியவள்
கல்வி அறிவு மற்றும் சமூக நிலை இதற்கு அப்பாற்பட்டது.

எதைச் சமைக்க வேண்டும் என்பதிலிருந்து
அவாள் தான் தீர்மானிக்கின்றார்

ஆடைகள் வாங்குவது,
 

எனக்கும் அவர் தான் வாங்குகின்றார்
 

யார் யாருடன் குடும்ப உறவை வளர்ப்பது,
என்னை விட மனையிக்குத்தான் குடும்ப உறவுகளின் சங்கமம் அதிகம் 
 

நண்பிகளுடன் தனியே வெளியே செல்வது,
நான் தான் நண்பிகளைத் தேடிக் கொடுக்க வேண்டும்
 

திருமணமானபின்னும் ஆண் நண்பர்களுடன் பேசுவது,
சர்வ சாதாரணமாக நடக்கும்
 

பெற்றோருக்கு உதவுவது, நண்பர்களுக்கு உதவுவது,
ஆகா வேண்டாம் நொந்து நூடில்ஸ் ஆயிட்டேன் :lol:
 

பொதுத் தொண்டு ஆற்றுவது,
நேரமில்லை
 

திரைப்படத்துக்குச  செல்வது,
இங்கையெல்லாம் திரைப்படம் ஆடிக்கொரு  தடைவை ஆவணிக்கொரு தடவை தான் அதுவும் இரவு 11 மணிக்கு :)
  
விரும்பிய ஆடை அணிவது,
அணியட்டும்
 

என்ரை சாரத்தையா  கட்டச்  சொல்கின்றேன்
:lol: 

எங்கே என்று கூறாமல் எங்கேயாவது செல்வது,
அது எப்படி? பொறுப்புக் கூறுவது யார்??
 

திருமணத்தின் பின்னரும் கற்பது,
முதியோர் கல்வியா அல்லது அனுபவப் படிப்பா ? :lol:
 

வாரத்தில் ஒருநாளாவது எந்த வேலையும் செய்யாது அவர்கள் விருப்பத்துக்கு இருப்பது
வாரம் இல்லை மாதம் முழுவதும் இருக்கலாம்
 

ஆனால் எங்களையும் தொந்தரவு செய்யக்கூடாது
ஓ இது மட்டும் நடக்காதோ :D 

என் மனைவிக்கு நான் கொடுக்கும் சுதந்திரம் நான் நானாக இருப்பதற்கு நீ நீயாக இரு.................இதை விட எனக்கு எந்த சுதந்திரமும் பெரிதாக தெரியவில்லை . :)

  • கருத்துக்கள உறவுகள்

நம்ம சுதந்திரம் இம்புட்டுத் தாங்கோ! :o

 

Queen_Victoria_Railway_Waiting_Room.jpg

  • கருத்துக்கள உறவுகள்

எனக்குத் தெரிந்த பல ஆண்கள், தாம் தம் மனைவியை அடிமைபோல் நடத்தவில்லை. முழு சுதந்திரமும் கொடுக்கிறோம் என்கின்றனர். ஆனால் பல பெண்கள் ஆண்கள் கொடுக்காமல் தாமே தம் சுதந்திரத்தின் எல்லையை வரையறை செய்கின்றனர். பல ஆண்கள் சுதந்திரம் கொடுக்கிறோம் என்று கூறிக்கொண்டே அடிமைகளாய் இன்னும் நடத்துவதை நான் கண்டிருக்கிறேன்.

சில பெண்களுக்கு தனது கணவன் எவ்வளவு சம்பளம் ஈட்டுகிறார். அதை எதற்ககெல்லாம் செலவு செய்கிறார் என்றே அறியாது தாம் வேலை செய்து உழைக்கும் பணத்தையும் கணவனிடமே கொடுத்து, தன தேவைக்கே கை ஏந்தும் நிலையில் கூட புலம்பெயர் நாடுகளில் வாழ்ந்துகொண்டு இருக்கின்றனர்.

இவர்கள் பற்றிய உங்கள் கருத்துக்களை, உறவுகளே உங்களிடமிருந்து எதிர்பார்க்கும் அதே வேளை உங்கள் மனைவியரை நீங்கள் எப்படி நடத்துகிறீர்கள்.??????

அவர்களுக்கு உரிய சுதந்திரத்தை நீங்கள் அவர்களுக்கு வழங்குகிறீர்களா??????

எங்கே துணிவுடன் யார் மனம் திறக்கிறீர்கள் பார்ப்போம்.

எனக்கான உரிமையை யாரும் தர முடியாது. அது விற்பனைப் பொருளல்ல. உரிமை. இது கணவனோ யாரோ தரவோ வாங்கவோ முடியாதது. அவரவர் உரிமை.  இங்கே பெண்கள் இன்னும் தனக்கான உரிமையை இன்னும் இரந்து தா அல்லது இதோ நீ தந்த சுதந்திரமே எனது வெற்றியென தங்களைத் தாங்களே உணராத நிலமையிலேயே இத்தகைய சந்தேகங்கள் எழுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

என் மனைவிக்கு நான் முழுச்சுதந்திரமும் தந்துள்ளேன் என்றால் நீங்க நம்பவா போறீங்க! :huh: ^_^  <_<   

 

நாங்க சைக்கிள் ஏறியே வந்தாக்கா நீங்க மோட்டார்பைக்கத்தான் பாப்பீங்க. நாங்க மோட்டார்பைக்குல வந்தாக்கா நீங்க மாருதிக்கு மாறுவீங்க. நாங்க ஜீன்ஸ் பேண்டுத்தான் போட்டாக்கா நீங்க பேகி பேண்டுதான் பாப்பீங்க. நாங்க பேகி பேண்டுதான் போட்டாக்கா நீங்க வேட்டியத்தான் தேடுவீங்க. ஒண்ணுமே விவரங்கள் புரியல்ல, என்னதான் புடிக்குமோ தெரியல்ல, அம்புகள் ஆயிரம் அடிச்சாச்சு மொத்தத்தில் பைத்தியம் புடிச்சாச்சு :D  :D :D  :D  

 

நீங்க பாஞ் பாஞ் காதலன் திரைப்படப்பாடல் ஸ்ரைலில சொல்லிய சுதந்திரம் உங்களது பாஞ் நிலமையை சொல்லீட்டுது. பாவம் பாஞ்: :lol:

 

இப்ப எங்காத்தில ஜனனாயகம் கொடிகட்டி பறக்குது. கிளிய கூண்டுக்கு வெளிய விட்டு கூண்ட தூக்கி தொலைவில போட்டு ரொம்ப நாளாச்சுது சார்.

 

கிளியை கூண்டுக்கு வெளிய விட்டாச்சு ஆனால் கிளி தனது இறக்கையை விரித்து பறக்கிறதுக்கான தைரியத்தை அந்தக் கிளி பெற்றிருக்கோ எண்டதுதான் சுமேயக்காவின் கேள்வி. வணங்காமுடிக்கே சோதனையா ? :lol:

  • கருத்துக்கள உறவுகள்

நம்ம சுதந்திரம் இம்புட்டுத் தாங்கோ! :o

Queen_Victoria_Railway_Waiting_Room.jpg

படப்பொருத்தம் ஆகா ஓகோ புங்கை அண்ணா
  • கருத்துக்கள உறவுகள்

சுதந்திரம் என்றால் என்ன?

பெண்கள் அல்லது ஆண்கள், அவரவர் தாங்கள் நினைத்தது சரியோ பிழையோ மற்றவர் ஒம் என்று கேட்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது என்று நினைக்கிறன். 
 
 


சில பெண்களுக்கு தனது கணவன் எவ்வளவு சம்பளம் ஈட்டுகிறார். அதை எதற்ககெல்லாம் செலவு செய்கிறார் என்றே அறியாது தாம் வேலை செய்து உழைக்கும் பணத்தையும் கணவனிடமே கொடுத்து, தன தேவைக்கே கை ஏந்தும் நிலையில் கூட புலம்பெயர் நாடுகளில் வாழ்ந்துகொண்டு இருக்கின்றனர்.

 

 

எனது மனைவி ஒரு கம்பெனி இல் கணக்காளர் ஆக வேலை பார்க்கிறார். அனால் வீட்டு கணக்கு பார்த்து வங்கி கடன்களை கட்ட சொன்னால் , என்னை கொஞ்சம் free யாக இருக்க விடுங்கோ என்று சொல்கிறார். நான் அவவை வற்புறுத்தி இதை செய்ய சொன்னால் சுதந்திரம் இல்லை என்பார்கள். அதே நேரம் வீட்டு கணக்கு வங்கி கணக்கு மனைவிக்கு தெரியாவிட்டால், மனைவிக்கு சுதந்திரம் இல்லை என்பார்கள். உண்மையில் சுதந்திரம் இல்லாமல்  அடிபடுவது ஆண்கள் தான்.

 

சுதந்திரம் எல்லைகள் அற்றதுதான் என்றாலும் எம் சமூகத்தைப் பொறுத்தவரை எல்லைகள் வகுத்ததால் சமூகம் சீரழிந்து போகாது இன்னும் இருக்கிறது. கணவனுக்கும் மனைவிக்குமான புரிதலோடு எதையும் தீர்மானிக்கும் சுதந்திரம் எம் பெண்கள் எல்லோருக்கும் கிடைப்பதில்லை.அப்படியே ஆணுக்கும் தான். ஆனால் வெள்ளை இனத்தவர்களிலும் கூட இன்னும் சுதந்திரம் அற்ற பெண்கள் இருக்கின்றனர். எமது சமூகம் கட்டுக்கோப்பை வைத்திருப்பது ஒருவிதத்தில் நல்லதுதான் எனினும் அதுவே பெண்களுக்கு தீங்காகவும் முடிகிறது.

புலம்பெயர்ந்து வாழ்ந்தாலும் பல தமிழர்கள் இன்னும் உறவினர் நண்பர்கள் என்னும் வட்டத்திலும் பண்பாட்டு மீறலை ஏற்றுக்கொள்ள முடியாமல் தம்மைச் சுற்றி ஒரு வட்ட்டமிட்டு அதற்குள்ளேயே வாழ்கின்றனர். மற்றவரின் சுதந்திர வாழ்க்கை முறையை விமர்சித்துக் கொண்டும் உள்ளனர். ஒட்டுமொத்தமாக எம் சமூகத்தை ஒதுக்கிவிட்டு வாழ எம்மால் முடியாதுதானே.

 

 

இனம் சீரழிந்து சிதைந்துகொண்டிருப்பதுக்கு சமூகம் வகுத்த எல்லைகள் பெரும் காரணம். சமூக உறவுக்கும் சமூகத்தின் அந்நியோன்னியத்துக்கும் பாதகமானதே இந்த சமூக வழக்குகள். பெண்மீதான கட்டுப்பாடும் சுதந்திர மறுப்பும் சாதீய கலப்பை தடுப்பதில் தான் தோற்றம் பெறுகின்றது.

 

சமூகத்தில் இயங்கும் எல்லைகளில் பிரதானமானது சாதிய எல்லைகள். அதனூடாக கட்டியமைக்கப்படும் ஏற்றதாழ்வுகள். நாம் தமிழர் என்று வாய்கிழியக் கத்தினாலும் அதனுள்ளே எத்தனையோ முரண்கள் சாதியமாக பிரதேசமாக நிறைந்துகிடக்கின்றது. உள்ளகமாக ஒருவனை ஒருவன் வெறுக்கின்றோம் ஏற்றதாழ்வோடு அணுகுகின்றோம் வெளியெ இனமாக உருவகப்படுத்த முயல்கின்றோம். இதில் தொடர்தோல்வியை சந்திக்ன்றோம். உள்ளகமாக நிரம்பி வழியும் முரண்களாலும் ஏற்றதாழ்வுகளாலும் ஒருவர் கருத்தை ஒருவர் ஏற்க மறுப்பது எமக்கு இயல்பாகிவிட்டது.

 

வரதட்சணை என்பதும் சமூக இயல்பு வழக்காகவே இருக்கின்றது. கலாச்சார சமய சம்பிரதாயங்களுடன் கூடிய இந்த வழக்கு சமூகத்தில் உள்ள ஒன்றுதானே என்று ஒவ்வொருவரும் சமூகத்தை சாட்டியே அதை தக்கவைக்கின்றனர். மறுவளத்தே இந்த சமூக பழக்கம் பல்லாயிரம் முதிர்கன்னிகளை உருவாக்குகின்றது. பல லட்சம் பெண்சிசுக்கள் கருவிலேயே கொல்லப்பட மூலகாரணமாக இருக்கின்றது. பிறந்த பெண் குழந்தையை கொல்லவும் குப்பைத்தொட்டியில் வீசவும் காரணமாகின்றது.  ஒரு இடத்தில் வரதட்சணை வங்கும்போது என்னுமொரு இடத்தில் அதுவே பல கொலைகளுக்கான மூல காரணமாகின்றது. குற்றவாளிகள் சமூக வழக்குகளுக்குள் ஒளிந்துவிடுகின்றனர்.

 

சமூகம் வைத்திருக்கும் கட்டப்பாடுகள் வழக்குகள் நடைமுறைகள் எந்தவிதத்திலும் இந்தச் சமூகத்தை தக்கவைக்கவில்லை. அவைகள் ஏற்றதாழ்வுகளுக்கும் அடிமைமுறைகளுக்கும் சுரண்டலுக்கும் ஏதுவாகவே இயங்குகின்றது. அவை சமூகத்தை எவ்விதத்திலும் மேன்நிலைக்கு அழைத்துச் செல்லவில்லை மாறாக என்னுமொரு சமூகத்துக்கு அடிமையாகவோ அலல்லது இரண்டாந்தரப்பிரயையாகவோ சமூகத்தை நகர்த்துகின்றது. தாயகத்தில் உள்ளவர்கள் சிங்களவர்களுக்க அடிமை நாம் இரண்டாந்தரப்பிரஜைகள்.

 

சமூகக் கட்டுப்பாடு கட்டுக்கோப்பு என்பது ஒருவிதத்தில் நல்லதுதான் என்ற சிறு எண்ணத்தில் உடன்பாடு இருந்தாலே பெண்விடுதலை பெண்சுதந்திரம் மட்டுமல்ல இனவிடுதலையும் சாத்தியம் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

கணக்கு வழக்கு முழுவதும் பார்க்கிறது மனைவிதான்.. கையேந்தும் நிலைமைதான் எனக்கு.. :(

கடனட்டையில் பத்து டொலர் செலவழித்தாலும் விளக்கம் கொடுக்கவேண்டிய நிலை ஒன்று உள்ளது.. :blink: எனக்கு சுதந்திரம் இருக்கா என்கிறதை நீங்கள்தான் சொல்லவேணும்.. :(:D

 

அதே... நிலைமை தான் எனக்கும்.

மாதாந்தம் வருகின்ற சம்பளத் துண்டைக் கூட... என்வலப் உடைக்காமல், மனைவியிடம் கொடுத்து விடுவதால்,

வெள்ளிக்கிழமை கொஞ்ச சுத‌ந்திரம் எனக்குக் கிடைக்குது.

 அதற்காக.... என்னை நீங்கள், பெண்டாட்டி தாசன் என்று சொன்னாலும் கோவிக்க மாட்டேன். :D  :lol:

Edited by தமிழ் சிறி

 

மனைவியிடமே மற்றப் பெண்ணின் முன்பக்கப் பின்பக்கக் கதை கதைக்கும் உங்களை இன்னும் வெளியே கலைக்காமல் இருப்பதற்கு உங்கள் மனைவியைப் பாராட்டத்தான் வேண்டும்.

 

 

வெறும் கதை மாத்திரம் அல்ல அத நாங்க அக்ஷ‌னோட அபினயம் பிடிச்செல்லோ காட்டுவோம் சுமோ

 

( பின்பக்கம் முன்பக்கம் )  :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நம்ம சுதந்திரம் இம்புட்டுத் தாங்கோ! :o

 

Queen_Victoria_Railway_Waiting_Room.jpg

 

ம் ........

 

ஏம்பா, இங்க பாதிக்கப்பட்ட கணவன் அடிமைகளின் வீதம் மிக அதிகமாக இருக்கே. எனக்கே அழுகை வருகிறது.  இதுகளை வாசிச்சால், யாராவது கள பிரமச்சாரிகள் கலியாணம் கட்டுவார்களா? :D

 

உங்கள் மனைவியும் வேலை பார்க்கிறாரா தப்பிலி???

 

பகுதி நேர வேலை.

Edited by தப்பிலி

  • கருத்துக்கள உறவுகள்

சமூகக்கட்டுப்பாடுகளுக்குள்ளும்

அதன் வழி நடத்தல்களுக்குள்ளும்  கட்டுப்பட்டு

என்னைத்துலைத்து வாழும் அடிமை நான்.

என்னிடமிருந்து எப்படி நீங்கள் உரிமையை  எதிர்பார்க்கமுடியும்???

 

எனது பிள்ளைக்கே 

சில தடைகளை  என்னால் விலத்தமுடியாத போது.........

மனைவிக்கு............??? :(

Edited by விசுகு

ஆண்கள் தமது சுதந்திரத்துக்காகப் போராட வேண்டிய இக்கட்டான நிலை வராதவரைக்கும்.... சந்தோசமே! :rolleyes::lol:

இனம் சீரழிந்து சிதைந்துகொண்டிருப்பதுக்கு சமூகம் வகுத்த எல்லைகள் பெரும் காரணம். சமூக உறவுக்கும் சமூகத்தின் அந்நியோன்னியத்துக்கும் பாதகமானதே இந்த சமூக வழக்குகள். பெண்மீதான கட்டுப்பாடும் சுதந்திர மறுப்பும் சாதீய கலப்பை தடுப்பதில் தான் தோற்றம் பெறுகின்றது.

 

இந்த கருத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. சமூகம் வகுத்த எல்லைகள் எவ்வாறு சீரழிவுக்குக் காரணமாக முடியும்? இன்று புகலிடம் கோரிய தமிழர்களில் பெரும் பகுதியினர் சாதி என்ற பதம் தெரியாமலேயே மொழிரீதியாக தமது அடையாளங்களைச் சீரழித்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதுதானே உண்மை?!

 

சமூகத்தில் இயங்கும் எல்லைகளில் பிரதானமானது சாதிய எல்லைகள். அதனூடாக கட்டியமைக்கப்படும் ஏற்றதாழ்வுகள். நாம் தமிழர் என்று வாய்கிழியக் கத்தினாலும் அதனுள்ளே எத்தனையோ முரண்கள் சாதியமாக பிரதேசமாக நிறைந்துகிடக்கின்றது. உள்ளகமாக ஒருவனை ஒருவன் வெறுக்கின்றோம் ஏற்றதாழ்வோடு அணுகுகின்றோம் வெளியெ இனமாக உருவகப்படுத்த முயல்கின்றோம். இதில் தொடர்தோல்வியை சந்திக்ன்றோம். உள்ளகமாக நிரம்பி வழியும் முரண்களாலும் ஏற்றதாழ்வுகளாலும் ஒருவர் கருத்தை ஒருவர் ஏற்க மறுப்பது எமக்கு இயல்பாகிவிட்டது.

 

இதற்கு முரண்களைக் காரணமாகக் காட்டுவதிலும் பார்க்க மேதாவித்தனத்தைக் காரணமாகக் காட்டுவது பொருத்தம் என நினைக்கிறேன்.

 

வரதட்சணை என்பதும் சமூக இயல்பு வழக்காகவே இருக்கின்றது. கலாச்சார சமய சம்பிரதாயங்களுடன் கூடிய இந்த வழக்கு சமூகத்தில் உள்ள ஒன்றுதானே என்று ஒவ்வொருவரும் சமூகத்தை சாட்டியே அதை தக்கவைக்கின்றனர். மறுவளத்தே இந்த சமூக பழக்கம் பல்லாயிரம் முதிர்கன்னிகளை உருவாக்குகின்றது. பல லட்சம் பெண்சிசுக்கள் கருவிலேயே கொல்லப்பட மூலகாரணமாக இருக்கின்றது. பிறந்த பெண் குழந்தையை கொல்லவும் குப்பைத்தொட்டியில் வீசவும் காரணமாகின்றது.  ஒரு இடத்தில் வரதட்சணை வங்கும்போது என்னுமொரு இடத்தில் அதுவே பல கொலைகளுக்கான மூல காரணமாகின்றது. குற்றவாளிகள் சமூக வழக்குகளுக்குள் ஒளிந்துவிடுகின்றனர்.

 

சமூகம் வைத்திருக்கும் கட்டப்பாடுகள் வழக்குகள் நடைமுறைகள் எந்தவிதத்திலும் இந்தச் சமூகத்தை தக்கவைக்கவில்லை. அவைகள் ஏற்றதாழ்வுகளுக்கும் அடிமைமுறைகளுக்கும் சுரண்டலுக்கும் ஏதுவாகவே இயங்குகின்றது. அவை சமூகத்தை எவ்விதத்திலும் மேன்நிலைக்கு அழைத்துச் செல்லவில்லை மாறாக என்னுமொரு சமூகத்துக்கு அடிமையாகவோ அலல்லது இரண்டாந்தரப்பிரயையாகவோ சமூகத்தை நகர்த்துகின்றது. தாயகத்தில் உள்ளவர்கள் சிங்களவர்களுக்க அடிமை நாம் இரண்டாந்தரப்பிரஜைகள்.

 

சமூகக் கட்டுப்பாடு கட்டுக்கோப்பு என்பது ஒருவிதத்தில் நல்லதுதான் என்ற சிறு எண்ணத்தில் உடன்பாடு இருந்தாலே பெண்விடுதலை பெண்சுதந்திரம் மட்டுமல்ல இனவிடுதலையும் சாத்தியம் இல்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எனக்கான உரிமையை யாரும் தர முடியாது. அது விற்பனைப் பொருளல்ல. உரிமை. இது கணவனோ யாரோ தரவோ வாங்கவோ முடியாதது. அவரவர் உரிமை.  இங்கே பெண்கள் இன்னும் தனக்கான உரிமையை இன்னும் இரந்து தா அல்லது இதோ நீ தந்த சுதந்திரமே எனது வெற்றியென தங்களைத் தாங்களே உணராத நிலமையிலேயே இத்தகைய சந்தேகங்கள் எழுகிறது.

 

என்னையும் உங்களையும் வைத்துக்கொண்டு நாம் எதையும் முடிவெடுக்க முடியாயது  சாந்தி

 

 

எனது மனைவி ஒரு கம்பெனி இல் கணக்காளர் ஆக வேலை பார்க்கிறார். அனால் வீட்டு கணக்கு பார்த்து வங்கி கடன்களை கட்ட சொன்னால் , என்னை கொஞ்சம் free யாக இருக்க விடுங்கோ என்று சொல்கிறார். நான் அவவை வற்புறுத்தி இதை செய்ய சொன்னால் சுதந்திரம் இல்லை என்பார்கள். அதே நேரம் வீட்டு கணக்கு வங்கி கணக்கு மனைவிக்கு தெரியாவிட்டால், மனைவிக்கு சுதந்திரம் இல்லை என்பார்கள். உண்மையில் சுதந்திரம் இல்லாமல்  அடிபடுவது ஆண்கள் தான்.

 

கணக்காளராக இருப்பதனால் அவர்தான் வங்கிக் கணக்கைப் பார்க்க வேண்டும் என ஏன்  நீங்கள் எண்ணுகிறீர்கள்.அதை நீங்களே கட்டிவிட்டுப் போவது தானே வாசி.

 

இனம் சீரழிந்து சிதைந்துகொண்டிருப்பதுக்கு சமூகம் வகுத்த எல்லைகள் பெரும் காரணம். சமூக உறவுக்கும் சமூகத்தின் அந்நியோன்னியத்துக்கும் பாதகமானதே இந்த சமூக வழக்குகள். பெண்மீதான கட்டுப்பாடும் சுதந்திர மறுப்பும் சாதீய கலப்பை தடுப்பதில் தான் தோற்றம் பெறுகின்றது.

 

.சமூகக் கட்டுப்பாடு கட்டுக்கோப்பு என்பது ஒருவிதத்தில் நல்லதுதான் என்ற சிறு எண்ணத்தில் உடன்பாடு இருந்தாலே பெண்விடுதலை பெண்சுதந்திரம் மட்டுமல்ல இனவிடுதலையும் சாத்தியம் இல்லை.

 

பெண்மீதான சுதந்திரத்துக்கும் சாதீயத்துக்கும் என்ன தொடர்பு. நீங்கள் கூறும் எல்லாம் மற்றைய இனத்துள்ளும் இருந்தாலும் நாம் இருப்பதனால் எம் சமூகத்தில் இருப்பவை எமக்கு அதீதமாகத் தெரிகிறதே அன்றி, மற்றைய இனங்களிடமும் எம்மவரிடம் இருக்கும் போக்குகள் காணப்படுகின்றன. சிசுக்கொலைக்கும் சமய, சமூகக் கட்டுப்பாடுகளுக்கும் என்ன தொடர்பு.????எம்மினத்திடம் கட்டுப்பாடுகள் இல்லை எனில் எவ்விதத்தில் எம்மினம் உயரத்தை எட்டியிருக்கும் என்று நீங்கள் கூற முடியுமா????என் சிற்றறிவுக்குப் படாததால் கேட்கிறேன். இன்னும் கட்டுப்பாடுகள் இருப்பதனால்த்தான் குடும்பம் என்னும் கூட்டு வாழ்க்கை முறையும், ஒரு ஆணுக்கு பல மனைவியரோ பெண்களுக்குப பல கணவன்மாரோ இன்றி பிள்ளைகள் மாற்றாந்தாய் தந்தை அற்று வாழக்கூடியதாக இருக்கிறது. இதுவும் தனித்திரியில் விவாதிக்க வேண்டியதாகையால் இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.

 

அதே... நிலைமை தான் எனக்கும்.

மாதாந்தம் வருகின்ற சம்பளத் துண்டைக் கூட... என்வலப் உடைக்காமல், மனைவியிடம் கொடுத்து விடுவதால்,

வெள்ளிக்கிழமை கொஞ்ச சுத‌ந்திரம் எனக்குக் கிடைக்குது.

 அதற்காக.... என்னை நீங்கள், பெண்டாட்டி தாசன் என்று சொன்னாலும் கோவிக்க மாட்டேன். :D  :lol:

 

சம்பளத் துண்டு மனைவியின் கைக்கு நேரே போகாமல் உங்களிடம் வருகிறதே என்று சந்தோசப்படுங்கள். நீங்கள் எவ்வளவு சம்பளம் பெறுகிறீர்கள் என்பது உங்களுக்குத் தெரியும் தானே சிறி.?????

 

வெறும் கதை மாத்திரம் அல்ல அத நாங்க அக்ஷ‌னோட அபினயம் பிடிச்செல்லோ காட்டுவோம் சுமோ

 

( பின்பக்கம் முன்பக்கம் )  :D

 

அலை எங்கேயப்பா அந்தப் பழந்தும்புத்தடி. கொண்டுவாரும் ஒருக்கா. :huh:

 

ஏம்பா, இங்க பாதிக்கப்பட்ட கணவன் அடிமைகளின் வீதம் மிக அதிகமாக இருக்கே. எனக்கே அழுகை வருகிறது.  இதுகளை வாசிச்சால், யாராவது கள பிரமச்சாரிகள் கலியாணம் கட்டுவார்களா? :D

 

 

பகுதி நேர வேலை.

 

பாதிக்கப்பட்ட ஆண்கள் சங்கம் ஒன்றை ஆரம்பிக்கலாமே தப்பிலி

 

ஆண்கள் தமது சுதந்திரத்துக்காகப் போராட வேண்டிய இக்கட்டான நிலை வராதவரைக்கும்.... சந்தோசமே! :rolleyes::lol:

 

அப்ப ஆண்களுக்கு அந்த நிலை இன்னும் வரவில்லை என்கிறீர்களா????

 

சமூகக்கட்டுப்பாடுகளுக்குள்ளும்

அதன் வழி நடத்தல்களுக்குள்ளும்  கட்டுப்பட்டு

என்னைத்துலைத்து வாழும் அடிமை நான்.

என்னிடமிருந்து எப்படி நீங்கள் உரிமையை  எதிர்பார்க்கமுடியும்???

 

எனது பிள்ளைக்கே 

சில தடைகளை  என்னால் விலத்தமுடியாத போது.........

மனைவிக்கு............??? :(

 

நீங்களும் தப்பிலியின் சங்கத்தில் சேர்ந்துவிடுங்கள்

 

கருத்துக்களைப் பதிந்த தமிழ்ச் சூரியன் ,சோழியன் ஆகியோருக்கும் நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

இங்கிலாந்தில் உள்ள தமிழ்ப் பெண்களின் சுதந்திரம் என்னவென்று அறிய வெளிக்கிட்டபோது, இங்கும் பெண்களை வெளியுலகம் தெரியாதபடி வீட்டுக்குள்ளேயே வைத்திருக்கின்றார்கள் என்று கேள்விப்பட்டேன். அவர்களும் கணவனுக்கும் பிள்ளைகளுக்கும் பணிவிடை செய்வதே வாழ்வின் விதி என்று வாழ்கின்றார்களாம். சமூக அக்கறையுள்ள மெசோ ஆன்ரி போன்ற பெண்கள் இப்படியானவர்களுக்கு உதவ ஒரு அமைப்பு ஆரம்பித்தால் நல்லது. :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

கற்பனையில் உள்ள பெண்ணுக்குச் சரிதான் நெடுக்ஸ். நிஜ வாழ்வு அப்படி அல்லவே. அதனால் உங்கள் விடயத்தில் நாம் பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும். கற்பனையில் உள்ள அவா நியத்தில் எவவா மாறுவாவோ இல்லை நெடுக்ஸ்தான் மாறுமோ யாரறிவார்????

 

 

அப்ப நீங்களே ஒத்துக்கொள்ளுறீங்களா..???!  பெண்கள் தங்கள் நிலையிலும் உறுதியாக இல்லை மற்றவர்களின் சுதந்திரத்தையும் மதிக்கப் போறதில்லை என்று..???!

 

கற்பனையோ நிஜமோ.. நாங்க முன்மாதிரியா வாழேக்க.. குறைஞ்சது அதைப் புரிஞ்சு கொண்டு தங்கட சுதந்திரத்தை காப்பாற்றி மற்றவர்களின் சுதந்திரத்தை மதிச்சு ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவான சமூக.. குடும்ப.. ஒழுக்கங்களைப் பின்பற்றி நடத்தைப் பிறழ்வின்றில்.. வாழலாம் தானே. அங்கு தானே மகிழ்ச்சிகரமான அமைதியான வாழ்க்கை அமையும்..! :):icon_idea:

 

 

 

பெண்மீதான சுதந்திரத்துக்கும் சாதீயத்துக்கும் என்ன தொடர்பு. நீங்கள் கூறும் எல்லாம் மற்றைய இனத்துள்ளும் இருந்தாலும் நாம் இருப்பதனால் எம் சமூகத்தில் இருப்பவை எமக்கு அதீதமாகத் தெரிகிறதே அன்றி, மற்றைய இனங்களிடமும் எம்மவரிடம் இருக்கும் போக்குகள் காணப்படுகின்றன. சிசுக்கொலைக்கும் சமய, சமூகக் கட்டுப்பாடுகளுக்கும் என்ன தொடர்பு.????எம்மினத்திடம் கட்டுப்பாடுகள் இல்லை எனில் எவ்விதத்தில் எம்மினம் உயரத்தை எட்டியிருக்கும் என்று நீங்கள் கூற முடியுமா????என் சிற்றறிவுக்குப் படாததால் கேட்கிறேன். இன்னும் கட்டுப்பாடுகள் இருப்பதனால்த்தான் குடும்பம் என்னும் கூட்டு வாழ்க்கை முறையும், ஒரு ஆணுக்கு பல மனைவியரோ பெண்களுக்குப பல கணவன்மாரோ இன்றி பிள்ளைகள் மாற்றாந்தாய் தந்தை அற்று வாழக்கூடியதாக இருக்கிறது. இதுவும் தனித்திரியில் விவாதிக்க வேண்டியதாகையால் இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.

 

கட்டுப்பாடுகள் இல்லை எனில் எம்மினம் உயரத்தை எட்டியிருக்க முடியாது என்ற உங்கள் கருத்துக்கு முன்னால் ஏனைய கேள்விகளும் பதில்களும் அவசியமில்லை. கருத்தாடல்கள் தொடர வாழ்த்துக்கள்.

 

அலை எங்கேயப்பா அந்தப் பழந்தும்புத்தடி. கொண்டுவாரும் ஒருக்கா. :huh:

 

பெண்களுக்குச் சுதந்திரம் இல்லை இல்லை என்டு சொல்லிக்கொண்டே ஆண்களுக்கு தும்புக்கட்டையாள அடிக்கிறது..

அலை எங்கேயப்பா அந்தப் பழந்தும்புத்தடி. கொண்டுவாரும் ஒருக்கா. :huh:

 

 

 

:lol:  :lol: சுண்டு எங்கயடா அந்த தும்புக்கட்டை. கெதியாய் கொண்டு ஓடி வா!! :lol:  :lol: வெளடா உந்த ஈசனை!!. எட பாவி சிவபெருமானை ஏனடா வெளுக்கிறாய் யாழ் ஈசனை எல்லோ சொன்னனான்!!

இந்தத் திரியை உருவாக்கிய சுமேக்கு நன்றிகள் கோடி. எவ்வளவு சந்தோசமாய் இருக்கு வாசிக்க  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

இந்தத் திரியை உருவாக்கிய சுமேக்கு நன்றிகள் கோடி. எவ்வளவு சந்தோசமாய் இருக்கு வாசிக்க  :lol:

 

அலைமகள் தான்.... உண்மையான தமிழ்மகள். ஊர் விடுப்பு அறிவதில், அவ்வளவு சந்தோசம் போல இருக்கு. :D  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

மனைவியின் சுதந்திரம்பற்றிய ஆய்வுகளில் இங்கு பலரும் பலவிதமான கருத்துக்களை தங்கள் கேள்வி ஞானத்திற்கிணங்கவும், அனுபவத்திற்கு இணங்க உண்மையாகவும், நகச்சுவையாகவும் பகிர்வுகளை மேற்கொண்டிருந்தாலும், இயற்கையின் தத்துவத்தை உணர்ந்த பெரியோர்களின் வழிகாட்டுதல்கள் உணரப்படவில்லை. பெண் பாதுகாக்கப்பட வேண்டியவள். ஆண்பாதுகாக்க வேண்டியவன். இது இயற்கையின் தார்ப்பரியம் யாராலும் மீறமுடியாதது. பெண் அளவிடமுடியாத அதீத சக்தி உடையவள். அந்தச் சக்தியை எளிதில் அடக்கவே முடியாது ஆகையால்தான் பெண்ணை பூப்போல மென்மையாக்கி அடக்கமாக இயற்கை வைத்துள்ளது. பெண்ணால் அடக்கி ஆளப்படும் ஆண்கள் நிறையவே உள்ளனர். ஆனால் அவர்களைப் பெண்கள்கூட உயர்வாக மதிப்பதில்லை அதுமட்டுமல்ல ஆண்களை அடக்கிவாழும் பெண்களையும் பெண்களே உயர்வாக மதிப்பதில்லை என்பதும் அனுபவபூர்வமான உண்மை.

 

இதனை உணர்ந்துதான் திருவள்ளுவரும் பெண்ணின் மென்மைக்கு இணையான நாணத்தை தனது குறளில் இவ்வாறு கூறியுள்ளார்.

 

பெண்ணேவல் செய்தொழுகும் ஆண்மையின் நாணுடைப்
பெண்ணே பெருமை உடைத்து.

மனைவியின் ஏவலைச் செய்து நடக்கின்றவனுடைய ஆண்மையைவிட, நாணத்தை தன் இயல்பாக உடையவளின் பெண்மையே பெருமை உடையது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.