Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புதுடெல்லி மாநாட்டில் விக்னேஸ்வரனுக்கு முக்கியத்துவம்! – தலாய்லாமாவுடன் இணைந்து ஆரம்பித்து வைத்தார்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
delhi-hindu-congress-300-news.jpg

இலங்கையில் இந்துக்கள் கடுமையான நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்து வருவதாக, புதுடெல்லியில் நடைபெறும், அனைத்துலக இந்து மாநாட்டில் தெரிவித்துள்ளார். உலக இந்து காங்கிரசின், மூன்று நாள் அனைத்துலக இந்து மாநாடு நேற்றுமுன்தினம் புதுடெல்லியில் ஆரம்பமானது. இந்த மாநாட்டை திபெத் ஆன்மீகத் தலைவர் தலாய்லாமா, விஸ்வ இந்து பரிசத் தலைவர் அசோக் சிங்கல், ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பக்வத்,வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோர் இணைந்து, மங்கள விளக்கேற்றி ஆரம்பித்து வைத்தனர்.

   

இந்தியாவை ஆளும் பாரதீய ஜனதா கட்சியின் மீது செல்வாக்குச் செலுத்தும், ஆர்எஸ்எஸ், விஸ்வ இந்து பரிசத் உள்ளிட்ட அமைப்புகளின் தலைவர்கள் பங்குபற்றும் இந்த மாநாட்டில், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் ஆகியோர் உரையாற்றினர். நேற்றுமுன்தினம் நடந்த அரசியல் அமர்வு ஒன்றுக்குத் தலைமையேற்று உரையாற்றிய வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், இலங்கையில் 2009ம் ஆண்டு போர் முடிவுக்கு வந்த பின்னரும் கூட, அங்குள்ள இந்துக்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் முடிவுக்கு வரவில்லை என்று தெரிவித்துள்ளார்.

இந்த மாநாட்டில் திபெத்திய ஆன்மீகத் தலைவர் தலாய்லாமா, விஸ்வ இந்து பரிசத் தலைவர் அசோக் சிங்கல், ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பக்வத் ஆகியோரும் உரையாற்றினர். இந்த மாநாட்டில் உலகின் 40 நாடுகளைச் சேர்ந்த 1800 பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளதாக, அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 

delhi-hindu-congress-231114-seithy%20(1)

 

 

delhi-hindu-congress-231114-seithy%20(2)

 

 

delhi-hindu-congress-231114-seithy%20(3)

 

http://seithy.com/breifNews.php?newsID=121326&category=TamilNews&language=tamil

ஆடுறமாட்டை ஆடி கறக்க வேண்டும், பாடுற மாட்டை பாடி கறக்க வேண்டும். 

நெறிகளுக்கு அப்பால் சுயநலமே இருக்கு அதையே நாங்களும் பாவிச்சால் என்ன?

  • கருத்துக்கள உறவுகள்

உந்த முக்கியத்துவங்களில என்ன முக்கியத்துவமிருக்கு.  நமக்கு முக்கியத்துவம் நம்ம சாதிசனம்.

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் 2009ம் ஆண்டு போர் முடிவுக்கு வந்த பின்னரும் கூட, அங்குள்ள இந்துக்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகள் முடிவுக்கு வரவில்லை என்று தெரிவித்துள்ளார்.

இவர் இந்துக்களுக்கான முதலமைச்சரா?

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்

இவர் இந்துக்களுக்கான முதலமைச்சரா?

 

போப் பாண்டவர் வரும் போது கிறீஸ்தவரகளுக்கான முதலமைச்சராக இருப்பார் என் நம்புவோம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இதில் என்ன முக்கியத்துவம் இருக்கின்றது தலாய்லாமா ஒரு செல்லாக்காசு அவருடன் சேர்ந்த விக்னேஸ்வரனும் கிட்டத்தட்ட அப்படித்தான் வருகிறார். 

நாம் இன விடுதலை அரசியல் செய்யாது எல்லா இயக்கங்களும் போல மத அரசியல் செய்து இருந்தால் ஒருவேளை சில நாட்டு ஆதரவு கிடைச்சிருக்கும் போல .

  • கருத்துக்கள உறவுகள்

இதில் என்ன முக்கியத்துவம் இருக்கின்றது தலாய்லாமா ஒரு செல்லாக்காசு அவருடன் சேர்ந்த விக்னேஸ்வரனும் கிட்டத்தட்ட அப்படித்தான் வருகிறார்.

இவர் இந்துக்களுக்கான முதலமைச்சரா?

உந்த முக்கியத்துவங்களில என்ன முக்கியத்துவமிருக்கு. நமக்கு முக்கியத்துவம் நம்ம சாதிசனம்.

இவ்வாறான சிந்தனையும் ஈழத்தமிழரின் அழிவுக்கு ஒரு காரணம்.

சாதி சனம் முக்கியம் என்று சொல்லிக்கொண்டு சாதி சனத்துடன் நின்று அழிந்து போனவர்கள் ஏராளம். சாதி சனத்துக்காக உலகம் அறிந்தவர்களுடன் இணைந்து அரசியல் சாணக்கியத்துடன் செயற்படும் முதலமைச்சரின் அணுகுமுறை தமிழர்களுக்கு புதிது, ஆனால் காலம் கடந்தாவது கிடைத்த அபூர்வமான தலைமைத்துவம்.

Edited by Jude

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வாறான சிந்தனையும் ஈழத்தமிழரின் அழிவுக்கு ஒரு காரணம்.

சாதி சனம் முக்கியம் என்று சொல்லிக்கொண்டு சாதி சனத்துடன் நின்று அழிந்து போனவர்கள் ஏராளம். சாதி சனத்துக்காக உலகம் அறிந்தவர்களுடன் இணைந்து அரசியல் சாணக்கியத்துடன் செயற்படும் முதலமைச்சரின் அணுகுமுறை தமிழர்களுக்கு புதிது, ஆனால் காலம் கடந்தாவது கிடைத்த அபூர்வமான தலைமைத்துவம்.

இந்தமாதிரி நடவடிக்கைகள் முக்கியம்.. ஆனால் வார்த்தைகளை சரியாகப் பாவிக்க வேண்டும்.. (All statements must be politically correct.).

ஈழத் தமிழ் தலைவர் ஒருவருக்கு அபூர்வமாகக் கிடைத்த ஆதரவையும் எள்ளி நகையாடும் கூட்டத்துக்கு விடுதலை ஒரு சாபக்கேடு.

இவர் இந்துக்களுக்கான முதலமைச்சரா?

வெகுவிரைவில் கனடா வர உள்ளார் ,உங்கள் சந்தேகத்தை நேரடியாக கேட்கலாம் .இப்பவே ஒரு மேசை இசையின் பெயரில் reservation செய்வமா ? :D

இந்து மகாநாட்டில் அவர் இந்துக்களைப்பற்றி சரியாகவே குறிப்பிட்டுள்ளார்..
ஏனெனில் தற்போதைய நிலமையில்.. இலங்கையில் இந்துக்கள் என்றால் அது தமிழர்களையே குறிக்கிறது!!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஈழத் தமிழ் தலைவர் ஒருவருக்கு அபூர்வமாகக் கிடைத்த ஆதரவையும் எள்ளி நகையாடும் கூட்டத்துக்கு விடுதலை ஒரு சாபக்கேடு.

எனக்கு தெரிந்தளவில் ஈழ தமிழர்களுக்கு கிடைத்த அபூர்பமான அற்புதமான தலைவன் தேசியத்தலைவர் ஒருவர்தான். அவரையே இந்த களத்தில் எள்ளி நகையாடி இருக்கின்றார்கள் அப்படி இருக்கையில் விக்னேஸ்வரன் என்ன விதிவிலக்க இணையவன் 

  • கருத்துக்கள உறவுகள்

இந்து மகாநாட்டில் அவர் இந்துக்களைப்பற்றி சரியாகவே குறிப்பிட்டுள்ளார்..

ஏனெனில் தற்போதைய நிலமையில்.. இலங்கையில் இந்துக்கள் என்றால் அது தமிழர்களையே குறிக்கிறது!!

இது கிறீஸ்துவ தமிழர்களை கைவிட்டதுபோல் இல்லையா??

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சீனாவுக்கு முதல் எதிரி தலாய்லாமா...... மேற்குலகின் விசுவாசி தலாய்லாமா...தீபெத் பயங்கரவாதி தலாய்லாமா....இந்தியாவின் அபிமானி தலாய்லாமா...ஹொலிவூட் நட்த்திரங்களின் நண்பன் தலாய்லாமா.....இப்பிடியானவரோடை விக்கியருக்கு என்ன வேலை? என்னகூட்டு? :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

இந்து மகாநாட்டில் அவர் இந்துக்களைப்பற்றி சரியாகவே குறிப்பிட்டுள்ளார்..

ஏனெனில் தற்போதைய நிலமையில்.. இலங்கையில் இந்துக்கள் என்றால் அது தமிழர்களையே குறிக்கிறது!!

முதலில் தமிழர்கள் எல்லோரும் இந்துக்கள்தான் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும். நான் முதலில் தமிழன் பின்னர்தான் மற்றவையெல்லாம். நான் இன்று பின்பற்றும் கத்தோலிக்கம் கூட இந்துவாக இருந்த எனது மூதாதையர்களுக்கு பலாத்காரமாக ஊட்டப்பட்டதுதான். ஆகவே அடிப்படையில் நானும் இந்துதான். ஏனென்றால் தமிழையும் சைவத்தையும் பிரிக்கமுடியாது என்று நம்புபவன் நான்.

 

ஆகவே, விக்னேஸ்வரன் இந்துவாக அந்த மாநாட்டில் பங்குபற்றியதில் தவறிருப்பதாகத் தெரியவில்லை. பாப்பாண்டவர் கத்தோலிக்கர்தான், அதை விட்டால் தமிழ்க் கத்தோலிக்கருக்கும் அவருக்கும் என்ன தொடர்பு இருக்கிறது ? எம்மை யாரென்றாவது தெரியுமா அவருக்கு? நாம் படும் அல்லல்களைத் தடுக்க முடிந்ததா அவரால் ?

 

இன்று மக்களுக்காகக் குரல் கொடுக்கும் மன்னார் ஆயர்கூட எனக்குக் கத்தோலிக்கராகத் தெரியவில்லை. அவர் தமிழராகத்தான் குரல்கொடுப்பதாக எண்ணுகிறேன்.

எனக்கு தெரிந்தளவில் ஈழ தமிழர்களுக்கு கிடைத்த அபூர்பமான அற்புதமான தலைவன் தேசியத்தலைவர் ஒருவர்தான். அவரையே இந்த களத்தில் எள்ளி நகையாடி இருக்கின்றார்கள் அப்படி இருக்கையில் விக்னேஸ்வரன் என்ன விதிவிலக்க இணையவன் 

எனக்கு தெரிந்தளவில்  ? அது சரி .

  • கருத்துக்கள உறவுகள்

சைவமாகட்டும் அல்லது கிறிஸ்துவமாகட்டும் அல்லது வடக்காகட்டும் அல்லது கிழக்காகட்டும் எல்லாமே தமிழனைப் பல விதத்திலும் கூறு போடவே பயன் படுகின்றன!

 

சைவத்தின் பெயரால் தான் சாதிகள் மேம்படுத்தப் பட்டன! அதுவே தமிழர்களிடையே காலத்தால் அழிக்க முடியாத பிளவுகளை ஏற்படுத்தியுள்ளது!

 

மதங்கள், மனிதர்களை நெறிப்படுத்தும் உன்னத நோக்கங்களுக்காகவே ஆரம்பிக்கப்பட்டன!

 

ஆயினும்.. அவை எதுவுமே.. ஈழத் தமிழனுக்கு..அவனது காயங்களுக்கு ஒத்தடம் கொடுப்பதற்கு.. உபயோகப்படவில்லை என்பதே எனது கருத்தாகும்!

 

இவ்விடத்திலும் சில மதப் பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் உதவி புரிந்தார்கள் என்பதை ஏற்றுக்கொள்கின்ற போதிலும்.. அந்த உதவிகளும்.. 'நிபந்தனையுடன் கூடிய'  அல்லது 'தங்கள் மதத்தை ஏற்க வேண்டும்' என்னும் எதிர் பார்ப்புடனேயே செய்யப்பட்டன! எந்த உதவியும் 'பிரதிபலன்' பாராத உதவியால் அமைந்திருக்கவில்லை என்பதே, உண்மையாகும்!

 

அத்துடன் தமிழும் சைவமும் இணைந்தது என்னும் ரகுவின் கருத்துடன் உடன்படுகின்ற போதிலும்... அது வளரும் இளம் தலைமுறையினருக்கு ' ஊட்டப்படவேண்டிய' கருத்தல்ல என்பது எனது தனிப்பட்ட அபிப்பிராயம் ஆகும்!

 

தமிழர்களில் சைவர்களும் உண்டு! கிறிஸ்தவர்களும் உண்டு ! இஸ்லாமியர்களும் உண்டு ! என்பதை நாம் ஏற்றுக்கொள்ளும் பக்குவநிலைக்கு வரவேண்டும்!

 

முதலில் தமிழன்.. பின்னர் சைவன் என்பது தான் எனது நிலைப்பாடு! :lol:  

  • கருத்துக்கள உறவுகள்

மிக அருமையான நகர்வு. மோடியின் ரிமோட் ஆர்எஸ் எஸ் கையில். வைகோ, சீமான் போன்ற திராவிடப் பண்டாரங்களை நம்பி ஒரு பயனும் இல்லை. இந்துக்கள் தாக்கப்படுகிறார்கள் இந்து கோவில்கள் அழிக்கப்படுகிறது எனும் பிரச்சாரம் நிச்சயம் கைமேல் பலன்தரும்.

இதை இட்டு எந்த தமிழ் கிற்ரிஸ்தவரும் அச்சமடைய தேவையில்லை. போப்பாண்டவர் வரும் போது தமிழ் கிறிஸ்தவர்களின் இன்னலை எடுத்துரைப்போம்.

இதற்குப் பெயர்தான் ராஜதந்திரம்.

மிக அருமையான நகர்வு. மோடியின் ரிமோட் ஆர்எஸ் எஸ் கையில். வைகோ, சீமான் போன்ற திராவிடப் பண்டாரங்களை நம்பி ஒரு பயனும் இல்லை. இந்துக்கள் தாக்கப்படுகிறார்கள் இந்து கோவில்கள் அழிக்கப்படுகிறது எனும் பிரச்சாரம் நிச்சயம் கைமேல் பலன்தரும்.

இதை இட்டு எந்த தமிழ் கிற்ரிஸ்தவரும் அச்சமடைய தேவையில்லை. போப்பாண்டவர் வரும் போது தமிழ் கிறிஸ்தவர்களின் இன்னலை எடுத்துரைப்போம்.

இதற்குப் பெயர்தான் ராஜதந்திரம்.

 

இதெல்லாம் சரிப்பட்டு வராது. காதுக்குள்ள நாலு பேருக்கு வெடி வைக்க மற்றதெல்லாம் தன்னால நடக்கும். எங்களுக்கும் இங்கிருந்து விசிலடிக்க வசதியா இருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்

சைவமாகட்டும் அல்லது கிறிஸ்துவமாகட்டும் அல்லது வடக்காகட்டும் அல்லது கிழக்காகட்டும் எல்லாமே தமிழனைப் பல விதத்திலும் கூறு போடவே பயன் படுகின்றன!

 

சைவத்தின் பெயரால் தான் சாதிகள் மேம்படுத்தப் பட்டன! அதுவே தமிழர்களிடையே காலத்தால் அழிக்க முடியாத பிளவுகளை ஏற்படுத்தியுள்ளது!

 

மதங்கள், மனிதர்களை நெறிப்படுத்தும் உன்னத நோக்கங்களுக்காகவே ஆரம்பிக்கப்பட்டன!

 

ஆயினும்.. அவை எதுவுமே.. ஈழத் தமிழனுக்கு..அவனது காயங்களுக்கு ஒத்தடம் கொடுப்பதற்கு.. உபயோகப்படவில்லை என்பதே எனது கருத்தாகும்!

 

இவ்விடத்திலும் சில மதப் பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் உதவி புரிந்தார்கள் என்பதை ஏற்றுக்கொள்கின்ற போதிலும்.. அந்த உதவிகளும்.. 'நிபந்தனையுடன் கூடிய'  அல்லது 'தங்கள் மதத்தை ஏற்க வேண்டும்' என்னும் எதிர் பார்ப்புடனேயே செய்யப்பட்டன! எந்த உதவியும் 'பிரதிபலன்' பாராத உதவியால் அமைந்திருக்கவில்லை என்பதே, உண்மையாகும்!

 

அத்துடன் தமிழும் சைவமும் இணைந்தது என்னும் ரகுவின் கருத்துடன் உடன்படுகின்ற போதிலும்... அது வளரும் இளம் தலைமுறையினருக்கு ' ஊட்டப்படவேண்டிய' கருத்தல்ல என்பது எனது தனிப்பட்ட அபிப்பிராயம் ஆகும்!

 

தமிழர்களில் சைவர்களும் உண்டு! கிறிஸ்தவர்களும் உண்டு ! இஸ்லாமியர்களும் உண்டு ! என்பதை நாம் ஏற்றுக்கொள்ளும் பக்குவநிலைக்கு வரவேண்டும்!

 

முதலில் தமிழன்.. பின்னர் சைவன் என்பது தான் எனது நிலைப்பாடு! :lol:  

பாப்பாண்டவரின் மதம் முன்னைய காலங்களில் எப்படியோ எனக்குத் தெரியாது . ஆனால் நான் அறிந்த வரையில் இலங்கையில் வட கிழக்கில் மனிதாபிமானப் பணிகளையே செய்கிறது.
அடக்கப்பட்டவா்களுக்காக, ஒடுக்கப்பட்டவா்களுக்காக தனது குரலை ஓங்கி ஒலிக்கிறது. அதனாற்தான் மன்னாா் ஆயரை பயங்கரவாதியாக சித்திரிக்கின்றது சிங்களம். அந்த மதத்துக்குப் பல நெருக்கடிகளையும் காெடுத்து வருகின்றது.
 
வன்னிப்பாேரில் மக்களாேடு எத்தனையாே குருக்களையும் பலி காெடுத்திருக்கிறது, காணாமற் பாேகவும் செய்திருக்கிறது. யாரும் அவா்களுக்காக குரல் காெடுக்கவில்லை அதற்காக வேறு எதுவும் கேட்கப்படவுமில்லை. ஒரு சிலா் இதில் விதிவிலக்காக இருக்கலாம், அதற்காக எல்லாேரையம் குறைகூறுவது சரியல்ல.
மதம் மனிதனுக்கேயன்றி மதத்திற்கு மனிதனல்ல.
இது எனது தனிப்பட்ட தாழ்மையான கருத்து.
  • கருத்துக்கள உறவுகள்

விக்னேஸ்வரன் ஐயா அரசியலுக்கு வரமுன்னே , இணுவிலில் அஞ்சநேயருக்கு மாபெரும் சிலை எழுப்பி இந்து அரசியலுக்கு வித்திட்டவர்கள் எம்மவர்கள்.அதுமட்டுமல்ல கம்பன் கழகம் அமைத்து அரசியல் செய்ததும் நாமே......இந்தியாவின் தெற்கில் ஒர் கஷ்மீர் உருவாகாமல் இருந்தால் சரி........எமது பிரச்சனை இனி ஐ.நா சபை செல்லாது என்பதுமட்டும் உறுதி......

இந்தியா எதை விரும்பியதோ அது நல்லாவே நடக்கின்றது ,எது நடக்க இருக்கின்றதோ அதுவும் இனி இந்தியாவுக்கு நல்லாவே நடக்கும்...எல்லாம் ஒரு மையவாதமும் பக்கவாதமும் தான்...

  • கருத்துக்கள உறவுகள்

விக்னேஸ்வரன் ஐயா அரசியலுக்கு வரமுன்னே , இணுவிலில் அஞ்சநேயருக்கு மாபெரும் சிலை எழுப்பி இந்து அரசியலுக்கு வித்திட்டவர்கள் எம்மவர்கள்.அதுமட்டுமல்ல கம்பன் கழகம் அமைத்து அரசியல் செய்ததும் நாமே......இந்தியாவின் தெற்கில் ஒர் கஷ்மீர் உருவாகாமல் இருந்தால் சரி........எமது பிரச்சனை இனி ஐ.நா சபை செல்லாது என்பதுமட்டும் உறுதி......

இந்தியா எதை விரும்பியதோ அது நல்லாவே நடக்கின்றது ,எது நடக்க இருக்கின்றதோ அதுவும் இனி இந்தியாவுக்கு நல்லாவே நடக்கும்...எல்லாம் ஒரு மையவாதமும் பக்கவாதமும் தான்...

 

புத்தன் அண்ணா,

 

இந்தியாவின் தெற்கில் ஒரு காஷ்மீர் உருவாகும் என்று கூறியிருந்தீர்கள். அதன் அர்த்தம் என்ன ?? தமிழ்நாடு பிரிந்துவிடும் என்பதா?? நான் நினைக்கவில்லை. ஏனென்றால் இந்தியத் தமிழர்கள் எல்லோரும் போலியான ஹிந்தித்துவ தேசியவாதத்திற்குள் மூழ்கிப் போய் கிடக்கிறார்கள்.

 

அடுத்தது, இந்தியா விரும்பியது நடக்கிறதென்பதன் பொருள் என்னவோ ?? இந்தியா கனவுலகில் சஞ்சரித்துக்கொண்டிருக்க சீனன் தண்ணீருக்குக் கீழாக வந்து மோப்பம் பிடிக்கிறான். இந்தியா விரும்பியது நடந்தது என்பதை ஏற்றுக்கொள்கிறேன், அதாவது புலிகள் அழிக்கப்பட்டது. அத்துடன் அதன் விருப்பமெல்லாவற்றையும் மூட்டை கட்டி வைத்துவிடவேண்டியதுதான். வைத்திருக்கும் பழைய துருப்பிடித்த கப்பல்களைக் கூடப் பராமரிக்க முடியாமல் அங்கொன்றும், இங்கொன்றுமாக மூழ்கியபடி இருக்கிறது ஹிந்தியக் கடற்படை. இதற்குள் ஆசைமட்டும் விண்வெளியளவு (அண்மையில் ஹிந்தியா விட்ட விண்வெளி வெடியைத்தான் கூறுகிறேன்).

 

அமெரிக்காவின் புதிய தாக்குதல் விமானமான F 22 ற்கு நிகரான தாக்குதல் விமானமொன்றை J 31 அண்மையில் சீனா வெள்ளோட்டாம் விட்டிருக்கிறது. தனது விமானத்தாங்கிக் கப்பல்களின் தாக்கும் திறனை அதிகரித்திருக்கிறது.

 

இனி சிறிலங்காவில் நடக்கப்போவதெல்லாம் சீனாவின் விருப்பம்தான். ஹிந்தியா வேண்டுமென்றால் பாக்கிஸ்த்தானுடன் எல்லையில் குருவி சுட்டு விளையாடலாம் அல்லது ஹிந்தியை ஹிந்தியாவெங்கும் எப்படிக் கொண்டாடலாம் என்று பட்டிமன்றம் நடத்தலாம்..

Edited by ragunathan

  • கருத்துக்கள உறவுகள்

ரகுநாதன்.. நீங்கள் சொல்வது உண்மைதான்..

அன்று பனிப்போரின்போது அமெரிக்காவின் தலையீட்டை தடுக்க இயக்கங்கள் தேவையாக இருந்தது இந்தியாவுக்கு. இன்று சீனாவை எதிர்க்க யாராவது தேவைப்படுகிறார்கள்.. சிந்திக்காமல் செயற்பட்டால் மீண்டும் அடி விழப்போவது நிச்சயம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.