Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சேலைகட்டி திலகமிட்டுத் திருவிழாவில் தங்கச் சங்கிலி திருட்டு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
தேர் திருவிழாவில் தங்கச் சங்கிலி திருட்டு! கையும் களவுமாக பிடிபட்ட திருமலை யுவதி! யாழில் சம்பவம்
[ வியாழக்கிழமை, 02 ஏப்ரல் 2015, 08:41.49 AM GMT ]
chain-robber-0.jpg
யாழ்.வண்ணார்பண்ணை வைத்தீஸ்வரன் ஆலயத்தின் இன்று நடைபெற்ற தேர் திருவிழாவில் கலந்துகொண்டிருந்த பக்தர்களின் தங்கச் சங்கிலிகளை கொள்ளையிட்ட திருகோணமலையை சேர்ந்த இளம் யுவதி ஒருவர் பொதுமக்களால் கையும் களவுமாக பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இன்று வியாழக்கிழமை காலை குறித்த தேர் திருவிழாவின் போது வயதான பெண் ஒருவரின் கழுத்திலிருந்த சங்கிலியை யாரோ இழுப்பது போன்ற உணர்வு தென்பட்ட நிலையில் குறித்த பெண் திரும்பிப் பார்த்தபோது சங்கிலியை பிடித்தவாறு குறித்த பெண் நின்றுள்ளார்.

இதனையடுத்து வயதான பெண் சத்தமிட்டுள்ளார். இதனையடுத்து அங்கிருந்த பொதுமக்கள், குறித்த பெண்ணை மடக்கிப் பிடித்து விசாரித்த போது அவர் திருகோணமலையை சேர்ந்தவர் எனவும் தன்னுடன் சேர்த்து 3 பெண்கள் வந்ததாகவும் தாங்கள் திருட்டு நோக்கத்திற்காகவே வந்திரு ப்பதாகவும் ஒத்துக் கொண்டுள்ளார்.

இந்நிலையில் பிடிக்கப்பட்ட பெண்ணின் உள்ளாடைக்குள்ளிரு ந்து கைத்தொலைபேசி ஒன்றும் 15ஆயிரம் ரூபா பணமும் மீட்கப்பட்டுள்ளதாகவும், ஆலயத்திலிருந்த பக்தர்களிடம் அறுக்கப்பட்ட 4தங்க சங்கிலிகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளதுடன், இந்தப் பெண்ணுடன் வந்த மற்றைய இரு பெண்களை தேடும் பணியில் பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

chain-robber-02.JPG

chain-robber-03.JPG

chain-robber-04.JPG

chain-robber-01.JPG

 
லங்காசிறி
  • Replies 80
  • Views 8.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் வளர்ச்சியடைந்த ஜனநாயக விழுமியங்களுக்கும் மனிதநேயத்துக்கும் ஒரளவிலேனும் மதிப்பளிக்கும் நாடுகளில் வாழ்ந்தாலும் இன்னமும் சின்னப்புத்தி மாறவில்லை.

 

காவல்துறையால் கைதுசெய்யப்பட்டவர் தற்போதைய நிலையில் குற்றம்சாட்டப்பட்டவரே தவிர குற்றவாளியென நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்டவரல்ல. இப்படியிருக்கையில் ஒரு செய்தியை அடிப்படையாகவைத்து படங்களை வெளியிடுவது எந்தவிதத்திலும் பத்திரிகைத் தர்மமில்லை.

 

இது வக்கிரங்கள் நிறைந்த இணையவுலகின் இன்னுமொரு அசிங்கமான முகத்தை லங்கசிறி இணையத்தளம் காட்டியிருக்கு.

 

படம் வெளியிட்டது, முற்றிலும் வன்மையாகக் கண்டிக்கக்கூடிய விடையம்.

 

Edited by Elugnajiru

  • கருத்துக்கள உறவுகள்

இது மிகவும் கண்டிக்கத் தக்கவிடயம். இந்தப் பெண்ணின் படத்தைப் பிரசுரித்தது வருந்தத் தக்கது. கேவலமான பத்திரிகைக் கலாசாரம். கண்களை மறைத்துவிட்டாவது போட்டிருக்கலாம்.

Spoiler
பெண் பொலிஸாரின் கால்கள் மிகவும் அழகாக உள்ளது, இதைத் தான் நாம் எமது பெண்களிடமும் எதிர்பார்க்கிறோம்!

Elugnajiru கூறியது சரி , நிர்வாகம் இந்த படங்களை நீக்கி செய்தியை மட்டும் போடவும்.

அந்த பெண்ணே குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார்.. மேலும் 4 சங்கிலிகள் கைப்பற்றுள்ளன.

ஆகவே.. குற்றவாளிகள் பொதுமக்களுக்கு அடையாளப்படுத்தப்படுதலில் எவ்வித தவறுமே இல்லை!!  :o  :icon_idea:

Edited by sOliyAn

என் அன்புக்குரிய சகோதரி!
கடந்த சில நாட்களில் உன்னை சில ஊடகங்களிலும் முகநூல்களிலும் நீ நகை திருடிவிட்டாயாம் என்று கொந்தளித்த மகா வீரர்கள் கண்டு. மிக்க மனவேதனை அடைந்தேன்.நீ கள்ளி இருந்துவிட்டுபோகட்டும்.நீ என் சகோதரி.நீ என் இரத்தம்.நீ என் மொழி.இதை கண்ணீரோடுதான் எழுதுகின்றேன்.உன்னை கள்ளியென இந்த உலகத்துக்கு அறிவித்த சகலபேரின் மதுரைகளும் நிச்சயம் எரியும்.இவர்களின் குடும்பங்கள் ஏதோ ஒரு விதத்தில் தர்மத்தால் தண்டிக்கப்படுவார்கள்.நான் மிக்க இரக்கப்படுகின்றேன்.நீதித்துறைகளும் காவல்துறையும் தீர்ப்பளிக்க முன்பு எங்கள் சமுகத்தில் யாழ்ப்பாணத்தில் இருந்து இப்படியான மனிமாபிமானம் அற்ற ஒரு நாகரிகமற்ற ஒருவனே ஒருத்தியோ அவளை படம்பிடித்து முகநூல்களில் போட்டு பெருமை தேடிக்கொண்டதாக நினைத்தால் அது தவறு.அதை செய்தவர் மிகவும் கீழ்த்தரமான பண்பாட்டில் பிறந்தவர்களாகவே இருக்கமுடியும்.அவள் திருக்கோணமலையை சேர்ந்தவள் என்று சொல்கிறார்கள்.அவள் எந்த இடமாக இருந்தாலும் அவள் என் சோதரி.கிட்டதட்ட முள்ளிவாய்க்காலில் எங்கள் சோதரிகள் மனதாபிமானம் அற்ற வெறியர்களால் எப்படி சீரிழிக்கப்பட்டார்களோ அது போன்றதன் இன்னொரு வடிவம்தான் இது.எங்களுக்குள் இருக்கின்றார்கள் இன்னமும் துச்சாதனர்கள்.முகநூல்களை பார்த்தேன் ஆண்களை விட பெண்கள் பலரை அவளை அவமானப்படுத்தியிருந்தார்கள்.ஏழைகளும் போரால் பாதிக்கப்பட்டவர்களும் பசியிலும் படடிணியிலும் கிடக்க கொளுத்த தாலிகளோடும் நகைகளோடும் தங்கள் ஆடம்பரங்களையும் பணத்திமிரையும் காட்ட முனையும் ஒரு சமுகத்தில் அவள் கைவைத்திருக்கின்றாள்? அவள் ஒரு எழையின் சோற்றை திருடவில்லை.திருட்டு தவறுதான்.ஆனால் திருடியவளின் உரிமைகளை கையிலெடுக்க எங்களில் யாருக்கும் உரிமை இல்லை. அவள் வாழவேண்டியள்.உங்களால் வசைபாடவேண்டியவள் அல்ல.எனக்கு யேசுநாதரின் வாக்கியங்கள் ஞாபகம் வருகின்றது.உங்களில் எந்த தவறும் செய்யாதவர்கள் இருந்தால்! என்பதுதான்!ஊடகங்களாலும் முகநூல்களாலும் அவமானப்படுத்தப்படும் என் இரத்ததுக்காக இரக்கப்படுகின்றேன்.வேதனை அடைகின்றேன். 

 

முகநூல் பதிவு 

 

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Spoiler
பெண் பொலிஸாரின் கால்கள் மிகவும் அழகாக உள்ளது, இதைத் தான் நாம் எமது பெண்களிடமும் எதிர்பார்க்கிறோம்!

 

Spoiler
இருக்கிற சோலி காணாதெண்டு......இந்தாளுக்கு சில்லெடுத்த சோலி வேறை.. :lol:  :D 

என் அன்புக்குரிய சகோதரி!

கடந்த சில நாட்களில் உன்னை சில ஊடகங்களிலும் முகநூல்களிலும் நீ நகை திருடிவிட்டாயாம் என்று கொந்தளித்த மகா வீரர்கள் கண்டு. மிக்க மனவேதனை அடைந்தேன்.நீ கள்ளி இருந்துவிட்டுபோகட்டும்.நீ என் சகோதரி.நீ என் இரத்தம்.நீ என் மொழி.இதை கண்ணீரோடுதான் எழுதுகின்றேன்.உன்னை கள்ளியென இந்த உலகத்துக்கு அறிவித்த சகலபேரின் மதுரைகளும் நிச்சயம் எரியும்.இவர்களின் குடும்பங்கள் ஏதோ ஒரு விதத்தில் தர்மத்தால் தண்டிக்கப்படுவார்கள்.நான் மிக்க இரக்கப்படுகின்றேன்.நீதித்துறைகளும் காவல்துறையும் தீர்ப்பளிக்க முன்பு எங்கள் சமுகத்தில் யாழ்ப்பாணத்தில் இருந்து இப்படியான மனிமாபிமானம் அற்ற ஒரு நாகரிகமற்ற ஒருவனே ஒருத்தியோ அவளை படம்பிடித்து முகநூல்களில் போட்டு பெருமை தேடிக்கொண்டதாக நினைத்தால் அது தவறு.அதை செய்தவர் மிகவும் கீழ்த்தரமான பண்பாட்டில் பிறந்தவர்களாகவே இருக்கமுடியும்.அவள் திருக்கோணமலையை சேர்ந்தவள் என்று சொல்கிறார்கள்.அவள் எந்த இடமாக இருந்தாலும் அவள் என் சோதரி.கிட்டதட்ட முள்ளிவாய்க்காலில் எங்கள் சோதரிகள் மனதாபிமானம் அற்ற வெறியர்களால் எப்படி சீரிழிக்கப்பட்டார்களோ அது போன்றதன் இன்னொரு வடிவம்தான் இது.எங்களுக்குள் இருக்கின்றார்கள் இன்னமும் துச்சாதனர்கள்.முகநூல்களை பார்த்தேன் ஆண்களை விட பெண்கள் பலரை அவளை அவமானப்படுத்தியிருந்தார்கள்.ஏழைகளும் போரால் பாதிக்கப்பட்டவர்களும் பசியிலும் படடிணியிலும் கிடக்க கொளுத்த தாலிகளோடும் நகைகளோடும் தங்கள் ஆடம்பரங்களையும் பணத்திமிரையும் காட்ட முனையும் ஒரு சமுகத்தில் அவள் கைவைத்திருக்கின்றாள்? அவள் ஒரு எழையின் சோற்றை திருடவில்லை.திருட்டு தவறுதான்.ஆனால் திருடியவளின் உரிமைகளை கையிலெடுக்க எங்களில் யாருக்கும் உரிமை இல்லை. அவள் வாழவேண்டியள்.உங்களால் வசைபாடவேண்டியவள் அல்ல.எனக்கு யேசுநாதரின் வாக்கியங்கள் ஞாபகம் வருகின்றது.உங்களில் எந்த தவறும் செய்யாதவர்கள் இருந்தால்! என்பதுதான்!ஊடகங்களாலும் முகநூல்களாலும் அவமானப்படுத்தப்படும் என் இரத்ததுக்காக இரக்கப்படுகின்றேன்.வேதனை அடைகின்றேன். 

 

முகநூல் பதிவு 

 

களவுக்கு வக்காலத்தா வாங்குகிறீர்கள்!!

கள்ளர்களை புனிதங்களால் முலாம்போட்டாலும்... முலாம் நிரந்தரமல்ல!

களவுக்கு மனிதாபமானத்தையும் முள்ளிவாய்க்காலையும் பிரதேசவாதத்தையும் சிலப்பதிகாரத்தையும் துணைக்கழைக்கும் கேவலங்கெட்ட வேலையைச் செய்யாதீர்கள்!

  • கருத்துக்கள உறவுகள்

களவுக்கு வக்காலத்தா வாங்குகிறீர்கள்!!

கள்ளர்களை புனிதங்களால் முலாம்போட்டாலும்... முலாம் நிரந்தரமல்ல!

களவுக்கு மசனிதாபமானத்தையும் முள்ளிவாய்க்காலையும் பிரதேசவாதத்தையும் சிலப்பதிகாரத்தையும் துணைக்கழைக்கும் கேவலங்கெட்ட வேலையைச் செய்யாதீர்கள்!

 

அண்ணா

 

இதைச் சொல்ல உங்களுக்கு தகுதி இருக்கா?

 

கஷ்டப்பட்டு தயாரிப்பாளர்கள் தமிழ் சினிமா

தயாரித்து வெளியிட

அதை உங்கள் இணையத்தில் வெளியிட்டு

பார்க்கின்றவர்களிடமும் விளம்பரத்தின் மூலமும்

காசு சம்பாதித்தவர் நீங்கள்

 

நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள்

இன்னும் குற்றவாளி என்று நிரூபிக்கப்படாத

ஒரு பெண்ணை குற்றம் சாட்ட உங்களுக்கு

என்ன தகுதி இருக்கு

 

 

போலி முகம் ஒன்றின் பின்

மறைந்திருப்பதால் மட்டும்

இங்கு எவரும் சுற்றவாளிகள் அல்ல

 

 

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவர்.... அதுகும் பெண், திருட்டை செய்யும் போது...
தனக்கு வாழ வேறு வழி தெரியாத கட்டத்தில் தான்.... அதனைச் செய்ய முனைகிறார்.
இவருக்கு என்ன கஷ்டமோ... கணவர் உயிருடன் உள்ளாரா என்று கூட தெரியாது.
அவரை கண்டித்து... அனுப்பியிருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
களவு செய்து மாட்டிய பெண், முகம் கொஞ்சம் நல்லா, இருந்தால் போதும், இரங்க, அண்ணன்மார் வந்து விடுவார்கள்.  :wub:
 
அங்கே காவல் துறை அதிகாரிகள் விசாரித்தே அழைத்துப் போகின்றனர். இலங்கை போன்ற, கல்வி அறிவு ஆசியாவில் அதிகமான நாடுகளில், இது போன்ற சிறு திருட்டு விசயங்களுக்கு, தகுந்த விசாரணை இன்றி, ஒரு பெண்ணை பொலிசார் கைது செய்ய மாட்டார்கள்.
 
மேலும் ஒரு பெண் அப்பாவியாயிருந்தால், உயிரே போனாலும், தான் திருட்டுப் பின்னணி கொண்டவர் அல்ல, என்பதை நின்று நிரூபித்திருப்பார். :icon_idea:
 
எனவே சட்டம் தனது கடமை செய்ய விடுவோம். மேலும் அங்கே அவர் இருப்பது, ஆபத்தானதாக இருந்தால் (மக்கள் தாக்கக் கூடும்), பொலிசாருடன் வெளியேறுவது தான், நல்லது. :rolleyes:
 
இது தொடர்பான தமிழ் தள செய்திகள் தவறானதாக இருக்கலாம்.  :o
 
வாலி,
 
அதெல்லாம், பின்னால வார இன்சுபெட்டர் ஐயா, விவரமா கவனிச்சுக் கொள்ளுவாரு. கவலைப் படாதீங்கோ... :icon_mrgreen:
 
 

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

கோடி கோடியா கொள்ளையடிக்கிற டக்கிளஸ்.. கருணா.. என்று அரசியல்வாதிகள் இருக்கினம். அவையை ஒருத்தரும் ஒன்றும் கேட்கமாட்டினம்...?!

 

கோயிலுக்கு படம் காட்ட நகை போடுறவையிட்ட அதைப் பறிக்கத்தான் வேணும்.

 

கோயிலுக்கு எதுக்குப் போறது.. சாமி கும்பிட என்றால்.. நகை.. விலையுயர்ந்த சாறி.. பட்டு வேட்டி சால்வை.. அவசியம் இல்லை.

 

சாதாரண.. பருத்தி உடைகள்.. போதும். தூய்மையாக உடலும் உளமும் இருந்தால்.. சாமியை கும்பிடலாம்.

 

இதில் அந்தப் பெண்ணை விட.. குற்றம் எம் சமூகத்தின் நடவடிக்கைகள் சார்ந்தே உள்ளது. கோவிலுக்கு போகும் போது எதுக்கு ஆடம்பரம்..??! நகைகளை வெளிப்படுத்திக் காட்டுவான்..?!

 

மேற்கு நாடுகளில் ஒரு அறிவிப்பு இருக்கும்.. உங்கள் பொதிகளுக்கு நீங்களே பொறுப்பு. அதேபோல்.. தான் இங்கும்.

 

திருடுபவரை விட திருட சந்தர்ப்பம் அளிப்பவர்கள் தான் கூடுதலாக தண்டிக்கப்படனும். அப்படி செய்தால் திருட்டை குறைக்கலாம். :icon_idea::rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்
:D :D முனி சார் என்னுடைய கருத்து இந்தப் பெண் குற்றமற்றவர் என்பதல்ல, மாறாக இவரின் படத்தைப் பிரசுரிக்காமல் விட்டிருக்கலாம் என்பதே. மற்றும்படி பக்கத்தில் வரும் இரு பொலீசாரை விட இந்தப் பெண் பெரிய அழகி அல்ல.
  • கருத்துக்கள உறவுகள்

:D :D முனி சார் என்னுடைய கருத்து இந்தப் பெண் குற்றமற்றவர் என்பதல்ல, மாறாக இவரின் படத்தைப் பிரசுரிக்காமல் விட்டிருக்கலாம் என்பதே. மற்றும்படி பக்கத்தில் வரும் இரு பொலீசாரை விட இந்தப் பெண் பெரிய அழகி அல்ல.

 

போலிஸ் அக்கா மேல, இம்புட்டு பாசமா?
 
புடிச்சா, முட்டிக்கு, முட்டி தட்டி, உங்க காலை ஒரு வழி பண்ணி உள்ளார போட்டுருவா. 
 
அப்புறம், நீங்க உங்க காலைப் பாத்து, பாத்து, ரொம்ப.... ப .. அழகா இருக்கில்ல என்னு சொல்லப் போறீக..  :icon_mrgreen:
  • கருத்துக்கள உறவுகள்

இங்க  என்ன பெண்பிள்ளை அழைப்பா நடக்குது....

 

இந்தப்பெண் வெளியில் வந்து

இந்தப்படத்தை எடுத்து செய்தி போட்டவரை சட்டத்தின் முன் நிறுத்தி

அவர் கைது செய்யப்பட்டு கொண்டு செல்லப்படுவதை

இதேபோல் படம் எடுத்துப்போடணும்

 

 

முதலில் செய்தியாளர்கள்

இணைய முகநூல் வியாபாரிகளுக்கு 

சட்டம் என்றால் என்ன?

தனிமனித சுதந்திரம் என்றால் என்ன என்று படிப்பிக்கணும்.........

 

 

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் பிழையான விடயம். இப்படி ஒரு பெண்ணை அவமதிக்கக்கூடாது. Very poor journalism.

  • கருத்துக்கள உறவுகள்

நகை அணிவதும், பட்டு வேட்டி சீலை உடுப்பதும் அவரவர் சுதந்திரம்.

தவறு செய்தால் திருந்துவதற்கும் தங்கள் வாழ்வை சீரமைப்பதற்கும் சந்தர்ப்பம் கொடுக்க வேண்டும். அவர்களின் படங்களைப் போட்டு இப்படியான சந்தர்ப்பங்களை நிராகரிப்பது மிகத் தவறு.
 
  • கருத்துக்கள உறவுகள்

 சட்டத்தின் முன்னால் குறிப்பிட்டவரை நிறுத்தி உறுதிப்படுத்தியிருக்கவேண்டும். அடுத்து தண்டனை என்பது ஒருவர் திருந்தி வாழ கொடுக்கப்படும் சந்தர்ப்பம் ஆகும். சட்டப்படி தண்டனைக்கு உட்படுத்தப்படாதவரை ஒருவர் நிரபராதியாகவே கருதப்படுவார் அப்படி இருக்கும்போது ஊடகங்கள் செய்தியைப்போடலாமே தவிர ஒருவருடைய படத்தைப்போட்டு நீதிமன்றின் தண்டனையைக்காட்டிலும் அதீத தண்டனை கொடுத்திருக்கிறது. இந்தப்பெண் திருட்டை செய்திருந்தாலும் தண்டனை  என்பது அவருடைய எதிர்காலத்தைப்பாதிக்காவண்ணமே வழங்கப்படவேண்டும். ஆனால் ஒரு பெண்ணுடைய எதிர்காலத்தையே நாசமாக்கிய ஊடகத்திற்கு யார் தண்டனை கொடுப்பார்கள்? எவ்வளவு பெரிய நாடுகளிலும் குற்றவாளியாக சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டவரை ஊடகங்கள் குற்றவாளி எனப் படம் பிடித்துப் போட்டதில்லை. ஊடகங்களுக்கும் அடிப்படை மனிதாபிமானம் இருக்கவேண்டும்....... இப்போது இந்தப்பெண் குற்றவாளி என்பதைக்காட்டிலும் பாதிக்கப்பட்டவராகவே எடுக்கப்படவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார். ஒரு இளம்பெண் திருட்டில் ஈடுபடுகிறார் என்றால் அதன் பின்புலத்தைஆராயவேண்டும். நீதிமன்றம் ஆராயுமா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இப்படி படங்கள் பிரசுரம் செய்வது பிழை என்றால், மற்றவர்களின் அனுமதி பெறாமல் சமூக வலைத்தளங்களில் படங்கள், வீடியோவை போடுவது எந்தவகையான பத்திரிகை தர்மத்தில் வருகின்றது? பத்திரிகை தர்மம் என்று சொல்லப்படுவதே ஒரு ஏமாற்று. அப்படி ஒன்று உண்மையில் உலகத்தில் உள்ளதா?

 

இந்த பெண்ணிற்காய் இரக்கப்படுபவர்கள் ஒன்று சேர்ந்து பெண்ணின் பின்புலத்தை ஆராய்ந்து அவருக்கு பணஉதவி செய்து சிறு தொழில் தொடங்குவதற்கு உதவி செய்யலாம்.

 

படங்களை போட்டதால் இந்தப்பெண்ணின் வாழ்க்கை சீரழிந்துவிட்டதா? தனது படங்கள் பிரசுரம் செய்யப்பட்டது முதலில் அவருக்கு தெரியுமா?

 

இந்தப்படங்கள் ஒரு முக்கியமான செய்தியை கூறிச்செல்கின்றது.

 

பொருட்களை திருடுபவர்கள் எந்த ரூபத்திலும் வரலாம் என்பதே அது. வடிவாக உடை அணிந்து பார்ப்பதற்கு அழகாகவும், பவ்வியமாகவும் ஒருவர் காணப்பட்டால் கோயிலில் அவருக்கு அருகில் உரசிக்கொண்டு நின்றாலும் பரவாயில்லை என்று ஒருவரும் நினைக்கக்கூடாது. முன்பின் தெரியாதவர்கள் எவருடனும் பொது இடங்களில் அவதானத்துடன் இருக்கவேண்டும் என்பதை இந்தச்செய்தி சொல்கின்றது.

 

தாலிக்கொடி அணிவது பலருக்கு வாழ்க்கையுடன் பின்னிப்பிணைந்த கலாச்சார அம்சம். அதுவும் கோயிலுக்கு தாலிக்கொடியுடன் செல்வது பலருக்கு முக்கியமான விசயம். சாமி கும்பிடும்போது பலர் தமது தாலியை ஒற்றிக் கும்பிடுவார்கள். தனது தாலியை சாமி காப்பாற்றும் என்று அவரவருக்கு நம்பிக்கை. எனவே, இங்கு சிலர் கோயிலுக்கு தாலிக்கொடி அணிந்துகொண்டு போகக்கூடாது என்று அறிவுரை கூறுவது எவ்வகையில் நியாயம்?

  • கருத்துக்கள உறவுகள்

இன்று முள்ளிவாய்காலுக்கு முன்னதான அனந்தபுரம் வீரச்சமர் நாள், இணையத்தள வியாபாரிகள் அவ்வீரமிக்க நாளில் தமிழர் போராட்டத்தின் இருப்பையே எதிரிக்குக் காட்டிக்கொடுத்த அப்பட்டமான துரோகியது விடுதலைப்புலிகளதும் அதன் தலைவரதும் நடவடிக்கைகளை விமர்சனம் செய்யும் செய்தியைப் பிரதானப்படுத்தி வெளியிட்டுள்ளதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள்.

 

நேற்றையதினம் ஐநா விசேடதூதர் விக்னேஸ்வரனுடன் கலந்துரையாடியது என்ன எனும் தலைப்பில் அனைவரையும் கவரும்வகையில் செய்தித் தலைப்பிட்டு பின்பு உரிக்க உரிக்க வெங்காயத்தில எதுவுமே இல்லையடா அங்கையும் எதையுமே அறியமுடியவில்லை என எழுதியிருந்தது.

 

தனிநபர் ஒருவர் எதையாவது செய்துவிட்டுப்போகட்டும் இங்கு யாழ்கள உறுப்பினர்கள் கூறுவதுபோல் படங்களை ஒட்டுவது வீடியோக்களை இணப்பது அது தனிநபர்களது தனிப்பட்ட விடையம்.

 

முற்ரிலுமே புலம்பெயர் தமிழர்களது அறியாமையிலேயே கட்டியெழுப்பபட்டு தற்போது அனைத்து நாடுகளிலும் வேரோடிப்போயிருக்கும் ஒரு இணையத்தளம் சமூகப்பொறுப்புடன் நடந்துகொள்ளவேண்டும் என்பதே எனது வேண்டுகோள்.

 

 

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

லங்காசிறி இப்படி படம் போட்டு வெளியிட்ட செய்திக்கு கண்டனம் தெரிவிப்பவர்கள் இதே செய்திக்கு "புதிய தமிழர்கள்" என்ற இணையம் போட்ட தலைப்பையும் பார்க்கவேண்டும்.. செய்தி ஒன்றுதான்.. தலைப்புத்தான் வேற! வாசித்தபோது பிரக்கேறிவிட்டது!

"யாழ்ப்பாணத்தில் சங்கிலிகள் அறுத்து மர்ம உறுப்பினுள் வைத்த அழகிய கள்ளி பிடிக்கப்படப்டாள் (புகைப்படங்கள்)"

http://newtamils.com/fullview.php?id=15210

களவுக்கு வக்காலத்தா வாங்குகிறீர்கள்!!

கள்ளர்களை புனிதங்களால் முலாம்போட்டாலும்... முலாம் நிரந்தரமல்ல!

களவுக்கு மனிதாபமானத்தையும் முள்ளிவாய்க்காலையும் பிரதேசவாதத்தையும் சிலப்பதிகாரத்தையும் துணைக்கழைக்கும் கேவலங்கெட்ட வேலையைச் செய்யாதீர்கள்!

அது எனது கருத்தல்ல . முகநூலில் காணப்பட்ட ஒரு பதிவையே இங்கு பதிவிட்டேன் . 
 
அனால் என்னை பொருத்தவரை குறித்த பெண்ணின் படத்தினை இணைத்திருக்க வேண்டியதில்லை. தேச விடுதலைக்காக சேர்த்த பணத்தினை கொள்ளையடித்தவர்கள் கடனட்டை மோசடி செய்பவர்கள் போன்ற கொள்ளையர்கள் எல்லாம் கம்பீரமாக எந்தவித குற்ற உணர்ச்சியற்று வாழும்போது ஒரு பெண்ணின் பின்புலம் அறியாது அவளின் படத்தினை இணைத்து துகிலுரிவதுதான் தர்மமா ?
 
என்னை பொருத்தவரை அந்த பெண் தண்டனைக்குரியவர், முகநூல் பதிவுகளின் மூலம் அவர் குழந்தைகளின் சங்கிலிகளையும் அருத்திருக்கின்ரார். குழந்தையின் கழுத்து வெட்டுப்பட்டிருந்தால் கதி என்ன ?

அண்ணா

 

இதைச் சொல்ல உங்களுக்கு தகுதி இருக்கா?

 

கஷ்டப்பட்டு தயாரிப்பாளர்கள் தமிழ் சினிமா

தயாரித்து வெளியிட

அதை உங்கள் இணையத்தில் வெளியிட்டு

பார்க்கின்றவர்களிடமும் விளம்பரத்தின் மூலமும்

காசு சம்பாதித்தவர் நீங்கள்

 

நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள்

இன்னும் குற்றவாளி என்று நிரூபிக்கப்படாத

ஒரு பெண்ணை குற்றம் சாட்ட உங்களுக்கு

என்ன தகுதி இருக்கு

 

 

போலி முகம் ஒன்றின் பின்

மறைந்திருப்பதால் மட்டும்

இங்கு எவரும் சுற்றவாளிகள் அல்ல

 அப்பு வைரவன் ஏன் இந்த அபாண்டம்.. நான் குறிப்பிட்டகாலம் tamilamutham.net என்றொரு இணையம் மட்டுமே விளம்பரமோ சினிமா படங்களோ இன்றி, எனது கைக் காசில் மட்டும் நடாத்தினேன்.

ஆக, எவ்வித ஆதாரமும் இன்றி என்மீது குற்றம் சுமத்தும் நீங்கள்.. அடுத்த கள்ளன் என நினைக்கிறேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.