Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரபல திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் கவலைக்கிடம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

  • Replies 84
  • Views 9.6k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

பிரபல திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் கவலைக்கிடம் - மருத்துவமனை நிர்வாகம் தகவல்

பிரபல திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் கவலைக்கிடம் - மருத்துவமனை நிர்வாகம் தகவல்

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல திரைப்பட பின்னணி பாடகர்எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
 
 
மேலும் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் செயற்கை சுவாசம் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
 
  • கருத்துக்கள உறவுகள்

நலம் பெற வேண்டுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

நலம் பெற வேண்டுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

பாலா நலம் பெற வேண்டுகின்றேன் .....!

  • கருத்துக்கள உறவுகள்

பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் ...

சமகளம் பாடகர் எஸ்.பி ...

நெட்டிசன் நோட்ஸ்: எஸ்.பி ...

உலகத் தமிழர்களின், அபிமானப் பாடகர்... பாலசுப்பிரமணியம் அவர்கள், 
விரைவில் நலம் பெற  வேண்டும் என,  நல்லூர் முருகனை பிரார்த்திக்கின்றேன்.  🙏

Edited by தமிழ் சிறி

விரைவில் சுகம் பெற இறைவனை வேண்டுகின்றேன்

  • கருத்துக்கள உறவுகள்

மீண்டு வந்து உங்கள் குரலொலிக்க வேண்டுதல்கள்.    

  • கருத்துக்கள உறவுகள்

கொரோனா: பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கவலைக்கிடம்!

spacer.png

 

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கவலைக்கிடமாக இருப்பதாக அவர் சிகிச்சை பெறும் எம்ஜிஎம் மருத்துவமனை தெரிவித்துள்ளது.

உலகத்தை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசால், முன்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் பாதிக்கப்பட்டார். கடந்த ஆகஸ்ட் 5ஆம் தேதி எஸ்.பி.பி தனது முகநூல் பக்கத்தில் வீடியோ ஒன்று வெளியிட்டிருந்தார். அதில், கடந்த இரண்டு, மூன்று நாட்களாக எனக்கு லேசான அசௌகரியம் இருந்தது. சளி மற்றும் மூக்கடைப்பு பிரச்சினை ஏற்பட்டது. விட்டுவிட்டுக் காய்ச்சலும் இருந்தது. எனவே மருத்துவமனை சென்று பரிசோதித்ததில் லேசான கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. வீட்டிலேயே மருந்து மாத்திரை எடுத்துக் கொண்டு, தனிமைப்படுத்திக் கொண்டால் சரியாகி விடும் என்று மருத்துவர்கள் தெரிவித்தார்கள். ஆனால் வீட்டில் அனைவரும் இருக்கும் நிலையில், அவர்கள் என்னைத் தனிமையில் விட்டுவிட மாட்டார்கள். அதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். எனது உடல் நிலை சீராக இருக்கிறது. இரண்டு மூன்று தினங்களில் டிஸ்சார்ஜ் ஆகிவிடுவேன். யாரும் கவலைப்பட வேண்டாம், யாரும் என்னைத் தொடர்பு கொண்டு நலம் விசாரிக்க வேண்டாம் என்று தெரிவித்திருந்தார்.

spacer.png

இந்நிலையில், அவரது உடல்நிலை குறித்து மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டு வரும் நிலையில், இன்று (ஆகஸ்ட் 14) வெளியிட்டுள்ள அறிக்கையில், பாடகர் பாலசுப்ரமணியம் உடல்நிலையில் நேற்று இரவு முதல் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ஐசியுவிற்கு மாற்றப்பட்டு தீவிர சிகிச்சையிலிருந்து வருகிறார். செயற்கை சுவாச உதவியுடன் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அவருக்கு மருத்துவ நிபுணர்கள் குழு சிகிச்சை அளித்து, அவரது உடல் உறுப்புகள் மற்றும் ரத்த ஓட்டம் ஆகியவற்றை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் மற்றும் அவரது மகன் அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் , நடிகர் விஷார், ஆகியோரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

https://minnambalam.com/entertainment/2020/08/14/35/sp-balasubramaniyam-Serious-condition-covid-19-positive-test

 

  • கருத்துக்கள உறவுகள்

விரைவில் கொரோனாவிலிருந்து மீண்டுவர எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் 🙏🙏🙏

  • கருத்துக்கள உறவுகள்

உலக வாழ்க்கை நடனம் 
நீ ஒப்புக்கொண்ட பயணம் 
அது முடியும் போது தொடங்கும்
நீ தொடங்கும் போது முடியும்
.... பகல் தோறும் அழுது என் இரண்டு கண்ணும் பழுது. 😢

நிலா நீ ....நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள்....🙏

  • கருத்துக்கள உறவுகள்

நலம் பெற வேண்டுகிறேன்

  • கருத்துக்கள உறவுகள்

பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு மருத்துவ உதவி - தமிழக அரசு அறிவிப்பு

பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு மருத்துவ உதவி - தமிழக அரசு அறிவிப்பு

பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டநிலையில், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தற்போது சிகிச்சை பெற்று வரும் எஸ்.பி.பியின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், அச்சப்படும் நிலை இல்லை என்றும் அவரது மகன் எஸ்.பி.பி. சரண் தெரிவித்துள்ளார்.


 
இதற்கிடையே, எஸ்.பி.பி உடல்நிலை பூரண நலம்பெற பிரார்த்தனை செய்வதாக இளையராஜா உள்ளிட்ட பிரபலங்கள் கருத்து பதிவிட்டு வருகிறார்கள். 

இந்நிலையில், பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு மருத்துவ உதவி வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கர் தனது டுவிட்டர் செய்தியில், எஸ்.பி. பாலசுப்பிரமணியத்துக்கு தேவையான மருத்துவ உதவிகளை செய்ய அரசு தயாராக உள்ளது. எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை குறித்து அவரது மகன் எஸ்.பி.பி சரண் மற்றும் எம்.ஜி.எம் மருத்துவமனையின் எம்.டி.யிடம் விசாரித்தேன். அவர் விரைவாக குணமடைய வாழ்த்துகிறேன் என பதிவிட்டுள்ளார். 

 

https://www.maalaimalar.com/news/topnews/2020/08/15044659/1790326/TN-Govt-announce-medical-assistance-to-singer-SPB.vpf

  • கருத்துக்கள உறவுகள்

எஸ்.பி.பியின் உடல்நிலை குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம்!

FB_IMG_1597419932394.jpg?189db0&189db0

 

பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் அவரது உடல்நிலை தொடர்பாக சமூக வலைத்தளங்களில் தவறான செய்திகள் இந்தியாவின் தமிழக ஊடகத்தின் பெயரில் வலம் வந்தன.

இந்த மாதிரியான பொய்ச் செய்திகளை நம்ப வேண்டாம் என குறித்த ஊடகம் மக்களுக்கு தெளிவு படுத்தியுள்ளது.

FB_IMG_1597419932394.jpg?189db0&189db0

எஸ்.பி.பி சிகிச்சை பெறும் புகைப்பட்டம்

IMG_20200814_205048-576x1024.jpg?189db0&

 

https://newuthayan.com/எஸ்-பி-பியின்-உடல்நிலை-கு/

  • கருத்துக்கள உறவுகள்

பாடகர் எஸ்பிபிக்கு எக்மோ சிகிச்சை!

 

spacer.png

கொரோனாவால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு எக்மோ கருவி மூலம் சிகிச்சை அளிக்கப்படுவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள பாடகர் எஸ்.பி.பி சென்னை எம்.ஜி.எம் ஹெல்த்கேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆகஸ்ட் 13 இரவு முதல் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் நேற்று அறிக்கை வெளியிடப்பட்டது. இது திரைத்துறையினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அனைவரும் எஸ்பிபி மீண்டு வர வேண்டும் என்று கூறி வருகின்றனர். அவரது உடல்நிலை குறித்த மருத்துவமனையின் அறிவிக்கையை எதிர்நோக்கித் திரை உலகமே காத்திருக்கிறது.

இந்நிலையில் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு எக்மோ கருவி மூலம் சிகிச்சை அளிப்பது தெரியவந்துள்ளது. Extracorporeal Membrane Oxygenation எனப்படும் இந்த கருவி, உடல்நிலை மோசமாக இருக்கும் நோயாளிகளுக்கு மூன்றாம் கட்டத்தில் சிகிச்சை அளிக்க உதவுவதாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

தீவிர மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்டவர்களின் நுரையீரல் மற்றும் இதயம் செயல்படாதபோது, எக்மோ கருவி பயன்படுத்தப்படுகிறது. இது, பாதிக்கப்பட்டவரின் ரத்தம் சுத்திகரிக்கப்பட்டு, ஆக்ஸிஜன் நிரப்பப்பட்ட ரத்தத்தை மீண்டும் உடலுக்கு அனுப்புகிறது. இதயம் மற்றும் நுரையீரலுக்கு உரிய ரத்தம் செல்வதை இந்த கருவி உறுதிப்படுத்துகிறது.

தற்போது இந்த கருவி மூலம் எஸ்பிபிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முன்னதாக, மறைந்த முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது அவருக்கு எக்மோ கருவி மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதனிடையே எஸ்.பி.பி மகன் சரண், தனது தந்தையின் உடல் நிலை குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். தந்தையின் உடல்நிலை சீராக உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
 

 

https://minnambalam.com/public/2020/08/15/30/spb-health condition-ecmo-treatment

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, கிருபன் said:

பாடகர் எஸ்பிபிக்கு எக்மோ சிகிச்சை!

 

spacer.png

 

 

தீவிர மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்டவர்களின் நுரையீரல் மற்றும் இதயம் செயல்படாதபோது, எக்மோ கருவி பயன்படுத்தப்படுகிறது. இது, பாதிக்கப்பட்டவரின் ரத்தம் சுத்திகரிக்கப்பட்டு, ஆக்ஸிஜன் நிரப்பப்பட்ட ரத்தத்தை மீண்டும் உடலுக்கு அனுப்புகிறது. இதயம் மற்றும் நுரையீரலுக்கு உரிய ரத்தம் செல்வதை இந்த கருவி உறுதிப்படுத்துகிறது.

தற்போது இந்த கருவி மூலம் எஸ்பிபிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முன்னதாக, மறைந்த முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது அவருக்கு எக்மோ கருவி மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதனிடையே எஸ்.பி.பி மகன் சரண், தனது தந்தையின் உடல் நிலை குறித்த வதந்திகளை நம்ப வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். தந்தையின் உடல்நிலை சீராக உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
 

 

https://minnambalam.com/public/2020/08/15/30/spb-health condition-ecmo-treatment

நினைவு தெரிந்த காலத்திலிருந்து இப்போவரை,

ஒருநாளும் இந்த குரலை கேட்காமல் இருந்ததில்லை.

எங்களைவிட்டு போய் விடாதீர்கள் பாட்டு தலைவனே.

நீங்கள் பாடினால் மட்டுமே அதுக்கு பெயர் பாட்டு

  • கருத்துக்கள உறவுகள்

பிரபல திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் உடல்நிலை சீராக உள்ளது" - மருத்துவமனை நிர்வாகம் தகவல்

பிரபல திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் உடல்நிலை சீராக உள்ளது" - மருத்துவமனை நிர்வாகம் தகவல்

சென்னை,

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல திரைப்பட பின்னணி பாடகர்எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.

மேலும் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் செயற்கை சுவாசம் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் நேற்று தெரிவித்தது. இதையடுத்து எஸ்.பி. பாலசுப்ரமணியம் விரைவில் குணமடைய வேண்டும் என்று அனைவரும் பிராத்தனை செய்து வந்தனர்.

இந்நிலையில் பிரபல திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் உடல்நிலை சீராக உள்ளது என்று மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும்  செயற்கை சுவாசம் உதவியுடன் தீவிர சிகிச்சை பிரிவில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவ குழுவினர் கண்காணித்து வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

https://www.dailythanthi.com/News/TopNews/2020/08/15155545/Famous-movie-playback-singer-SB-Balasubramaniams-health.vpf

 

  • கருத்துக்கள உறவுகள்

எஸ்.பி.பி. பூரண நலம் பெற்று மீண்டுவர வேண்டும்; நடிகர் விவேக், இயக்குனர் சந்திரசேகர் பிரார்த்தனை

எஸ்.பி.பி. பூரண நலம் பெற்று மீண்டுவர வேண்டும்; நடிகர் விவேக், இயக்குனர் சந்திரசேகர் பிரார்த்தனை

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணிம் (வயது 74) தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட 16 மொழிகளில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.
 
கடந்த 5ந்தேதி அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு, சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  இதனையடுத்து தான் முழு உடல் நலத்துடன் இருப்பதாக அவரே வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
 
 
இந்த நிலையில், கடந்த 13ந்தேதி எஸ்.பி.பி. உடல்நிலை கலைக்கிடமாக உள்ளது என  மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. இது ரசிகர்கள் மத்தியிலும், திரை உலகினர் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  
 
எஸ்.பி.பி.யின் உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து, தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டு, அவருக்கு செயற்கை சுவாசம் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்ட நோயாளிகளுக்கு அளிக்கப்படும் எக்மோ கருவி மூலம் தொடர் சிகிச்சை அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இதனிடையே, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம், படுக்கையில் இருந்தபடி கையை உயர்த்தி காட்டும் புகைப்படம் இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
 
அவர் உடல்நலம் பெற்று திரும்பி வரவேண்டும் என திரையுலகினர் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.  இதுபற்றி நடிகர் விவேக் வெளியிட்டுள்ள செய்தியில், இந்தியர் அனைவராலும் நம் தேசம் நேசிக்கப்படுவது போல இன்னொருவரும் நேசிக்கப்படுகிறார்.  அவர் நம்முடைய எஸ்.பி.பி. அவர்கள்.  இந்தியாவின் பல மொழிகளிலும் இனிமையான பாடல்களை அவர் கொடுத்துள்ளார்.
 
உடல்நலம் குன்றி தீவிர கண்காணிப்பில் அவர் இருக்கிறார்.  அவருக்காக இந்த தேசமே இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறது.  பல்லாயிரக்கணக்கான பாடல்களை பாடிய அவர் சீக்கிரம் நலம் பெற்று மீண்டும் வரவேண்டும்.
 
அதற்காக இந்த தேசம் பிரார்த்தனை செய்வது போன்று நாமும் செய்வோம்.  அவர் பூரண உடல்நலத்துடன் திரும்பி வரவேண்டும்.  அவருக்காக நான் இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொள்கிறேன் என கூறியுள்ளார்.
 
இதேபோன்று தமிழ் திரைப்பட இயக்குனர் சந்திரசேகர் வெளியிட்டுள்ள செய்தியில், இசைக்கு என்றுமே முடிவு கிடையாது.  இசை கலைஞனான அவர் நிச்சயம் மீண்டு வருவார்.  மீண்டு வந்து பாடுவார்.  மேடையில் எஸ்.பி.பி. மீண்டும் பாட, அதனை நான் பார்க்க வேண்டும்.  அவர் மீண்டுவர பிரார்த்தனை செய்து கொள்கிறேன் என கூறியுள்ளார்
 
 
  • கருத்துக்கள உறவுகள்

 

 

  • கருத்துக்கள உறவுகள்

அந்தாள் பாடிக் கொண்டு திரிந்த போது பங்கு கேட்டு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார்.
இப்போ முக்கி முனகிறார்.

23 minutes ago, nunavilan said:

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ஈழப்பிரியன் said:

அந்தாள் பாடிக் கொண்டு திரிந்த போது பங்கு கேட்டு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார்.
இப்போ முக்கி முனகிறார்.

 

ம்ம் உண்மை.

  • கருத்துக்கள உறவுகள்

பாடும் நிலா மீண்டு வர பிரார்த்தனைகள்  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.