Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
  • Popular Post

 

அன்புள்ள அம்மா அறிவது!
நான் நல்ல சுகம். அது போல் நீங்களும்  நீங்கள்  விரும்பிய இறைவனின் பாதடியில் இளைப்பாறுவீர்கள் என நம்புகின்றேன். அம்மா நீங்கள் என்னை/எங்களை பிரிந்த மாசி மக நாள் வருகின்றது. 

அம்மா நீங்கள் நான் தினசரி வணங்கும் தெய்வம்.
அம்மா நான் உங்களுக்கு கடிதம் எழுதி நீண்ட காலமாகிவிட்டது. அதனால் நிறைய எழுத வேண்டும் போல் இருக்கின்றது.
அம்மா நான் உங்கள் கடைசிப்பிள்ளை. அதனால் அதிக செல்லம் தந்து வளர்த்து விட்டீர்கள் .அந்த வாழ்க்கை இனி வராது. பொறுப்புகள் கூடி விட்டது.அக்கா அண்ணா பாசங்கள் விரிவடைந்து விட்டது.ஒரு முற்றத்தில் தவழ்ந்து விளையாடிய நாங்கள் வெவ்வேறு உலகில் இருக்கின்றோம். வெவ்வேறு கலாச்சாரத்துக்குள் கட்டுப்பட்டு விட்டோம். 

சகோதரங்களுடன் முன்னரைப்போல் கதைக்க முடியவில்லை அம்மா.அவர்களுக்கும் எனக்குமிடையில் பெரிய பாசங்கள் குறுக்கிட்டுவிட்டதுஅம்மா.பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் என்கிறார்கள். எனது  உரிமையை அவர்கள் எடுத்து விட்டார்கள் அம்மா. அன்றிருந்த ஒரு முற்றத்து பாசங்கள் இன்று இல்லையம்மா.

உலகம் நாடு ஊர் எல்லாம் இருந்த இடத்தில் இருக்கும் போது பாசங்களும் பிணைப்புகளும் மட்டும்  விரிந்து விரசல்கள் ஆகி விட்டதம்மா.

அம்மா நீங்கள் அன்று அது உனக்கு இது உனக்கு என எனக்காக சேர்த்ததெல்லாம் இன்று எனக்காகவே இல்லையம்மா. என்னிடமும் இல்லையம்மா.

என்னால் அதிகம் எழுத முடியவில்லையம்மா. பலர் வயது போய் விட்டது என்கிறார்கள் அம்மா. ஆனால் நான் உங்களுக்கு இன்றும் பாலகன் தானே அம்மா.

இன்னும் புதினம் சொல்வேன் அம்மா......

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, குமாரசாமி said:

என்னால் அதிகம் எழுத முடியவில்லையம்மா. பலர் வயது போய் விட்டது என்கிறார்கள் அம்மா. ஆனால் நான் உங்களுக்கு இன்றும் பாலகன் தானே அம்மா.

எந்த அம்மாவுக்கும் தன்பிள்ளை பாலகன் தான்.

  • கருத்துக்கள உறவுகள்

அம்மா என்ற நினைப்பு வந்தவுடன் சிறு பிள்ளை ஆகிவிடுகின்றோம், தொடருங்கள்

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

என்னால் அதிகம் எழுத முடியவில்லையம்மா. பலர் வயது போய் விட்டது என்கிறார்கள் அம்மா. ஆனால் நான் உங்களுக்கு இன்றும் பாலகன் தானே அம்மா.

இன்னும் புதினம் சொல்வேன் அம்மா......

 

மரண வயசானாலும் அம்மாவிற்கு பிள்ளைகள் குழந்தைகள் தான். 

எனது பிள்ளைகள் தாங்கள் வளர்ந்து விட்டோம் இன்னும் தங்களை குழந்தைகள் என நான் நினைக்கிறேன் என சொல்வார்கள். 

பிறந்த உடனே கையில் இருந்த ஞாபகம் தான் எனக்கு இன்னும். எல்லா அம்மாவின் நினைவும் இப்படி தானா தெரியாது. 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

சகோதரங்களுடன் முன்னரைப்போல் கதைக்க முடியவில்லை அம்மா.அவர்களுக்கும் எனக்குமிடையில் பெரிய பாசங்கள் குறுக்கிட்டுவிட்டதுஅம்மா.பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் என்கிறார்கள். எனது  உரிமையை அவர்கள் எடுத்து விட்டார்கள் அம்மா. அன்றிருந்த ஒரு முற்றத்து பாசங்கள் இன்று இல்லையம்மா.

மனதை நெருடிச் செல்லும் எழுத்துக்கள்....!

பல சந்தர்ப்பங்களில்.....என்னையே ஒறுத்துப்  பல உதவிகளைப் பல உறவுகளுக்குச் செய்திருக்கின்றேன்..!

எந்த விதமான அறுவடையையும் எதிர் பார்க்காத விதைப்புக்கள் தான் அவை..!

இருந்தாலும்..... அவர்கள் அவசியமில்லாது கிள்ளும் போது....மனதில் பெரிய வலியாக அது பதிந்து கொள்கின்றது...!

உங்கள் வரிகளில்....எனது வலிகள் பிரதி பலிக்கின்றன...!

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, குமாரசாமி said:

நான் உங்களுக்கு இன்றும் பாலகன் தானே அம்மா.

எல்லாமே மாறும் உலகில் அம்மாவின் அன்பு ஒன்று தான் மாற முடியாது.அருமை தொடருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

அம்மாவுக்கு கடிதம், ஆழமான வரிகள்......தொடருங்கள்......நாங்களும் தொடர்கின்றோம்.......!   👍

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
10 hours ago, ஈழப்பிரியன் said:

எந்த அம்மாவுக்கும் தன்பிள்ளை பாலகன் தான்.

மனைவி மீது அளவில்லாத பாசம்..
பிள்ளைகள் மீது அதை விட பாசம்...
பேரப்பிள்ளைகள் மீது நிகரில்லா பாசம்...
ஆனால் முதிர்ந்த வயதிலும் காலில் கல்லடி பட்டால் அம்மா என்றுதானே அலறுகின்றோம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
11 hours ago, உடையார் said:

அம்மா என்ற நினைப்பு வந்தவுடன் சிறு பிள்ளை ஆகிவிடுகின்றோம், தொடருங்கள்

ஆயிரம் சொந்த பந்தங்கள் இருந்தாலும் அம்மாவுக்கு நிகர் ஏதுமில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

ஆயிரம் சொந்த பந்தங்கள் இருந்தாலும் அம்மாவுக்கு நிகர் ஏதுமில்லை.

உண்மைதான் தாத்தா ,தொடருங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல பெற்றோர் ,நல்ல சகோதரங்கள்,நல்ல கணவன்/மனைவி நல்ல உறவுகள் ,உற்ற நண்பர்கள் கிடைக்க போன ஜென்மத்தில் ஏதாவது புண்ணியம் செய்திருக்க வேண்டும் 

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, ரதி said:

நல்ல பெற்றோர் ,நல்ல சகோதரங்கள்,நல்ல கணவன்/மனைவி நல்ல உறவுகள் ,உற்ற நண்பர்கள் கிடைக்க போன ஜென்மத்தில் ஏதாவது புண்ணியம் செய்திருக்க வேண்டும் 

உண்மை சகோதரி

நான் எப்பொழுதும் எங்கும் சொல்வேன்

போன ஜென்மத்தில் புண்ணியம் செய்தவன் என்று. 

எழுத வெளிக்கிட்டால் புத்தகமாகி விடும். 

50 minutes ago, ரதி said:

நல்ல பெற்றோர் ,நல்ல சகோதரங்கள்,நல்ல கணவன்/மனைவி நல்ல உறவுகள் ,உற்ற நண்பர்கள் கிடைக்க போன ஜென்மத்தில் ஏதாவது புண்ணியம் செய்திருக்க வேண்டும் 

நாங்கள் எங்கள் பாத்திரத்தை சரியாக செய்யும் போது எமக்கு கிடைப்பனவும் கிடைத்தவையும் சரியாக இருக்கும்.

நல்ல பொறுப்பான மகளாக / மகனாக, நல்ல மனைவியாக / கணவனாக, நல்ல அம்மாவாக /அப்பாவாக, நல்ல சமூக பொறுப்புள்ள பிரஜையாக நாம் இருந்தால், எம்மைச் சுற்றியுள்ள எல்லாமே நல்லாக அமையும், உறவுகள் உட்பட.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, நிழலி said:

நாங்கள் எங்கள் பாத்திரத்தை சரியாக செய்யும் போது எமக்கு கிடைப்பனவும் கிடைத்தவையும் சரியாக இருக்கும்.

நல்ல பொறுப்பான மகளாக / மகனாக, நல்ல மனைவியாக / கணவனாக, நல்ல அம்மாவாக /அப்பாவாக, நல்ல சமூக பொறுப்புள்ள பிரஜையாக நாம் இருந்தால், எம்மைச் சுற்றியுள்ள எல்லாமே நல்லாக அமையும், உறவுகள் உட்பட.

இது மேலே நான் எழுதியதற்கு பதிலாகவும் ஆதாரமாகவும் பொருந்தி வருகிறது. 

இது தான் வாழ்க்கையின் தத்துவம் 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
15 hours ago, shanthy said:

மரண வயசானாலும் அம்மாவிற்கு பிள்ளைகள் குழந்தைகள் தான். 

எனது பிள்ளைகள் தாங்கள் வளர்ந்து விட்டோம் இன்னும் தங்களை குழந்தைகள் என நான் நினைக்கிறேன் என சொல்வார்கள். 

பிறந்த உடனே கையில் இருந்த ஞாபகம் தான் எனக்கு இன்னும். எல்லா அம்மாவின் நினைவும் இப்படி தானா தெரியாது. 

தான் பெற்ற பிள்ளை பேரப்பிள்ளை கண்டாலும்...
தன் பிள்ளை தங்கம் என நினைக்குமாம் தாய்  உள்ளம்.


பெற்ற  பிள்ளை எந்த வயதாகினும்  "அம்மா" என்று கூப்பிடும் போது அம்மாவின் அடி வயிறு உணர்வுகளை  எழுத்திலும் சொல்லிலும் விபரிக்க முடியாது என  அம்மா சொல்லுவார்.

  • கருத்துக்கள உறவுகள்

அம்மாவின் கடிதம் மனதை வருடிச் செல்கிறது. அம்மா என்ற சொல்லிற்கு இணையாக உலகில் வேறு ஒரு  சொல் இருக்க முடியாது. ஒரு தாயின் அன்பிற்கு நிகர் ஏதுமில்லை. 
உண்மையிலேயே நாங்கள் ஒன்பது சகோதரர்கள். மூத்தவர்கள் பேரன் பேத்தி எடுத்து விட்டோம். ஆனாலும் இன்றுவரை மட்டுமல்ல நாம் உயிருடன் இருக்கும் வரை எங்கள் குடும்பபாசம் தொடரும். இது பெற்றவர்கள் எமக்களித்த கொடை. 
அம்மாவை நினைத்தாலே கண்கள் நிறைந்து விடுகிறதே. இதுதான் குடும்ப உறவின் ஆணிவேர். நல்லதொரு ஆக்கம் குமாரசாமி.

  • கருத்துக்கள உறவுகள்

இம்முறை கு.சா ஒரு முடிவோடதான் எழுத வெளிக்கிட்டிருக்கிறார்போல. அம்மாவுக்கு கு.சா எழுதும் கடிதம் நிச்சயமாக நம் எல்லோரும் அநுபவிக்கும் நன்மை தீமைகளை இயம்பும் என்பதை ஆரம்ப எழுத்துகள் புரிய வைக்கின்றன. வரவேற்பும் வாழ்த்தும் உரித்தாகட்டும். இப்பதான் விளங்குது ஏன் கு.சா இங்கின குழப்படியாகத் திரிகிறார் என்று எல்லாம் அம்மா செல்லந்தான் அதுவும் கடைக்குட்டி என்றால்..... அம்மா இருக்கும்வரை குட்டு கூட விழாது....

  • கருத்துக்கள உறவுகள்
On 25/2/2021 at 23:43, குமாரசாமி said:

என்னால் அதிகம் எழுத முடியவில்லையம்மா. பலர் வயது போய் விட்டது என்கிறார்கள் அம்மா. ஆனால் நான் உங்களுக்கு இன்றும் பாலகன் தானே அம்மா.

அம்மாவுக்கு சொல்ல எப்பவும் மூட்டைமூட்டையாகக் கதைகள் இருக்கும்தானே. ஒளிவுமறைவு இல்லாமல் சொல்லுங்கள்😁

பல மணித்தியாலங்கள் கதைத்தாலும் சொல்லமுடியாதவற்றை கடிதம் மூலம் சொல்லலாம்.  ஆனால் இப்போது யார் கடிதம் எழுதுகின்றார்கள்? 

  • கருத்துக்கள உறவுகள்

பாசத்துக்கு வேலி இல்லை கு, சாமியார்  வாழ்த்துக்கள் உங்கள் கடிதத்துக்கு 

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, நிழலி said:

நாங்கள் எங்கள் பாத்திரத்தை சரியாக செய்யும் போது எமக்கு கிடைப்பனவும் கிடைத்தவையும் சரியாக இருக்கும்.

நல்ல பொறுப்பான மகளாக / மகனாக, நல்ல மனைவியாக / கணவனாக, நல்ல அம்மாவாக /அப்பாவாக, நல்ல சமூக பொறுப்புள்ள பிரஜையாக நாம் இருந்தால், எம்மைச் சுற்றியுள்ள எல்லாமே நல்லாக அமையும், உறவுகள் உட்பட.

நல்ல பெற்றோர்கள் கிடைத்தால் தானே நல்ல பிள்ளை உருவாகும் 

  • கருத்துக்கள உறவுகள்

கு.சா மிகவும் அருமையான அம்மாவின் கடிதம் தொடருங்கள்....அம்மாவின் பாசம் ,அன்பு இவை எழுத்தில் வடிக்க முடியாதவை

வலி சுமந்த வரிகள்.அம்மா என்ற உறவு மட்டுமல்ல  அந்த சொல்கூட வலிமை மிக்கதுதான்.

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோரும் அம்மாமேலே பாசமாய் பொழிகிறார்கள்.....அம்மாவிடம் அடி, நுள்ளு, குத்து, கிள்ளு, திட்டு வாங்காத மாதிரி என்னமா நடிக்கிறார்கள்......தாங்க முடியல்ல.....!  👍

நான் மட்டும்தான் நிறைய வாங்கியிருக்கிறேன் போல.....!  😁

Best Sivaji GIFs | Gfycat

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, suvy said:

எல்லோரும் அம்மாமேலே பாசமாய் பொழிகிறார்கள்.....அம்மாவிடம் அடி, நுள்ளு, குத்து, கிள்ளு, திட்டு வாங்காத மாதிரி என்னமா நடிக்கிறார்கள்......தாங்க முடியல்ல.....!  👍

நான் மட்டும்தான் நிறைய வாங்கியிருக்கிறேன் போல.....!  😁

Best Sivaji GIFs | Gfycat

சுவியர்,  மிளகாய்த் தூள் லெவல் வரையும் போயிருக்கு...!😡

ஆனால்...அவையடக்த்தால்...எல்லோரும் அடக்கி வாசிக்கிறார்கள் போல கிடக்குது....!😜

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, suvy said:

எல்லோரும் அம்மாமேலே பாசமாய் பொழிகிறார்கள்.....அம்மாவிடம் அடி, நுள்ளு, குத்து, கிள்ளு, திட்டு வாங்காத மாதிரி என்னமா நடிக்கிறார்கள்......தாங்க முடியல்ல.....!  👍

நான் மட்டும்தான் நிறைய வாங்கியிருக்கிறேன் போல.....!  😁

Best Sivaji GIFs | Gfycat

அம்மாவின் அடியை குசினியில் உள்ள அகப்பைக்காம்புகள் தான் அறியும். ஆனால் அந்த நோவு எதுவும் அம்மாவின் அன்பில் மறந்து போகும். 

 

4 hours ago, புங்கையூரன் said:

சுவியர்,  மிளகாய்த் தூள் லெவல் வரையும் போயிருக்கு...!😡

ஆனால்...அவையடக்த்தால்...எல்லோரும் அடக்கி வாசிக்கிறார்கள் போல கிடக்குது....!😜

மிளகாய் தூள் பறவாயில்ல முட்கிழுவை வீர வடுவெல்லாம் கடந்த ஆக்கள் இருக்கிறம் புங்கையூரன். 🤣

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.